ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம்

5 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் - Page 3 Empty திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம்

Post by இளவரசன் Thu Jun 25, 2009 6:19 pm

First topic message reminder :

திருச்செந்தூர் முருக‌ன் கோயி‌லி‌ல் ஜூலை 2ம் தேதி கு‌‌ம்பா‌பிஷேக‌ம் நட‌க்க‌விரு‌க்‌கிறது. இதையொட்டி யாகசாலைகளுக்கு கால்கோள் விழா நேற்று நடந்தது.






முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ‌திரு‌ப்ப‌ணிக‌ள் நட‌ந்து முடி‌ந்து‌ள்ள ‌நிலை‌யி‌ல் ஜூலை 2ஆ‌ம் தே‌தி கோ‌யி‌ல் கும்பாபிஷேகம், நடக்கிறது.

சுமா‌ர் ரூ.1.23 கோடி செலவில் கோ‌யி‌ல் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கு‌ம்பா‌பிஷேக ‌நிக‌ழ்‌ச்‌சி‌க்கு ம‌ட்டு‌ம் ரூ.1.21 கோடி செலவாகு‌ம் எ‌ன்று கண‌க்‌கிட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மூலவருக்கு தங்க கொடிமரம் அருகேயும், சண்முகருக்கு ராஜகோபுரத்தின் கீழ்ப்பகுதியிலும் யாகசாலை அமைக்கப்படுகிறது. சண்முகருக்கு 49 ஹோம குண்டங்களும், பரிவார மூர்த்திகளுக்கு 21 குண்டங்களும், பெருமாளுக்கு 5 குண்டங்களும் அமைக்கப்படுகிறது.

நே‌ற்று காலை 8 மணிக்கு மேலவாசல் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மேளதாளம் முழங்க கால்கோள் எடுத்து வரப்பட்டு கிரிபிரகாரத்தில் ராஜகோபுரத்தின் கீழ்ப்பகுதியில் கன்னிமூலையில் கோயில் சிவாச்சாரியாரால் கால்கோள் நடப்பட்டது.

இ‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் ‌ஏராளமான ப‌க்த‌ர்க‌ள் கல‌ந்து கொ‌ண்டனர‌். கு‌ம்பா‌பிஷேக ‌நி‌‌க‌ழ்‌ச்‌சி‌யி‌ல் ஆ‌யிர‌க்கண‌க்கான ப‌க்த‌ர்க‌ள் கல‌ந்து கொ‌ள்வா‌ர்க‌ள் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது



From Webdunia
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down


திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் - Page 3 Empty Re: திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம்

Post by Guest Wed Jul 01, 2009 8:54 pm

தீர்த்தங்கள் (புனித நீர்நிலைகள்)

முருகப்பெருமான் சூரபத்மனை சம்காரித்தபின் அவனைக் கொன்ற பாவம் தீர திருச்செந்தூரில் சிவவழிபாடு செய்தார். இத்தலத்தில் அன்பர்களின் பாவங்களையும் நோய்களையும் தீர்க்கும் 24 தீர்த்தங்கள் உள்ளன. இவற்றின் பெயர்கள் யாவும், கடற்கரையில் உள்ள தூண் ஒன்றில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்த்தங்களில் வதனாரம்ப தீர்த்தம், நாழிக்கிணறு முதலியவை சிறப்புடையவையாகும்.

நாழிக் கிணறு

சண்முக விலாச மண்டபத்திலிருந்து நாழிக் கிணற்றுக்குச் செல்ல நீண்ட நடைபாதை உள்ளது. நாழிக் கிணற்றில் நீராட, கட்டணம் செலுத்தவேண்டும். 24 அடி ஆழமுள்ள இடத்தில் ஒரு அடி சதுரப்பரப்புள்ள தொட்டி போன்ற அமைப்பில், நீர் ஊறிக் கொண்டே இருக்கிறது. இதில் எடுக்க எடுக்கக் குறையாது தண்ணீர் சுரந்து கொண்டே இருக்கிறது. தனது படைவீரர்களின் தாகத்தைத் தணிக்க முருகப்பெருமான் தன் வேலை ஊன்றி இந்தத் தீர்த்தத்தை உண்டாக்கினார் என்று கூறப்படுகிறது. இதனருகில் உள்ள கிணற்றுநீர் கந்தக மணம் கொண்டது. வடமொழியில் இதை கந்த புஷ்கரணி என்று அழைக்கின்றனர். கந்தன் கைவேல்பட்டதால் இப்பெயர் வரலாயிற்று.

இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் முருகனை வழிபடுவதற்கு முன்பாக கடலிலும், நாழிக் கிணற்றிலும் நீராடுவதை புண்ணியம் என்று கருதுகின்றனர். உப்புக்கரிக்கும் நெடிய கடற்கரையில் தூயநீர் ஊற்றாகப் பெருகி வருவது இயற்கையின் சிறப்பு மிக்க அதிசயமாகும்.


வதனாரம்ப தீர்த்தம்

இது மூலவரை நோக்கியுள்ள கடலில் உள்ளதாகக் கூறுவர். பிரம்மன் இதில் மூழ்கித் தனது இழந்த தலையைப் பெற்றான். கலிங்க தேசத்து மன்னனின் மகள் கனக சுந்தரி ஒரு சாபத்தால் குதிரை முகத்தோடு பிறந்தாள். மன்னன், அவள் முகம் மனித முகமாவதற்கு பல தலங்களுக்குச் சென்றான். இங்கு வந்து நீராடியபோது அவள் பெண்முகம் பெற்றாள். அதையொட்டி வதனாரம்ப தீர்த்தம் எனப்படுகிறது. இதை நினைவூட்டும் வகையில் திருச்செந்தூரில் உள்ள வெயிலுகந்த அம்மன் ஆலயத்தில் குதிரை முகத்தோடு கூடிய சிலை வைக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் பாறைகள் நிறைந்த இடத்தில் இருப்பதால் பக்தர்கள் இதில் நீராட முடியாது.

வள்ளிக்குகை

வடக்கு வெளிப்பிரகாரத்திற்கு அருகில் வள்ளிக்குகை என்னுமிடம் உள்ளது. அங்குள்ள குகையில் வள்ளியம்மை திருவுருவம் உள்ளது. முருகன் துரத்தி வந்தபோது வள்ளியம்மை இங்கே வந்து ஒளிந்து கொண்டாள் என்கின்றனர். இப்போது இந்தக் குகைக்கு அருகே தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.


சரவணப் பொய்கை

இக்கோயிலின் அருகில் உள்ள பெரிய குளத்திற்கு சரவணப் பொய்கை என்பது பெயர். இதில் பக்தர்கள் நீராடுகின்றனர். தாமரை மலரில் ஆறு குழந்தைகளின் திருவுருவங்கள் கார்த்திகைப் பெண்டிர் அறுவரால் தாலாட்டப்படுகிறது.


மூவர் சமாதி

இக்கோயில் திருப்பணியில் தமது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட மெளனசாமி, காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி ஆகிய மூவரின் சமாதிகள் நாழிக் கிணற்றின் தெற்கே உள்ளன. இரண்டாம் பிரகாரத்தில் காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி, மெளனசாமி மூவரின் திருவுருவங்கள் தூண் சிற்பங்களாக இடம் பெற்றுள்ளன

நடைபாதை கொட்டகை

ஆலயத்தில் இருந்து ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் தொலைவில் நாழிக் கிணறு அமைந்துள்ளது. இந்தக் கிணற்றுக்குச் செல்ல நீண்ட பாதை உள்ளது. இதில் சிமெண்ட தூண்களை நிறுத்தி ‘கல்நார் ஓடு’களால் கூரை வேய்ந்துள்ளனர். இதை நடைபாதைக் கொட்டகை என்கின்றனர்
avatar
Guest
Guest


Back to top Go down

திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் - Page 3 Empty Re: திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம்

Post by Guest Thu Jul 02, 2009 1:49 pm

மு௫கனடிமை wrote:
Kraja29 wrote:அருமையான படங்கள் .

இளவரசன் , முருகன் அவர்களுக்கு நன்றிகள் . கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை அப்டேட் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நானும்தான் கேட்டுக்கொள்கிறேன்

ஒன்னும் புரியல
avatar
Guest
Guest


Back to top Go down

திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் - Page 3 Empty Re: திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» திருநாரையூர் ஸ்ரீபொல்லாப்பிள்ளையார் கோயிலில் ஜூலை 5-ல் பிரமாண்ட குருபெயர்ச்சி யாகம்
» திருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்!
» சுறவம் (தை) திருநாள்: திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பத்தர்கள்!
» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா
» கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) – மஹாபிஷேகம் – மண்டலாபிஷேகம் –

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum