ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம்

3 posters

Go down

அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Empty அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம்

Post by சிவா Thu Jun 25, 2009 4:10 pm

டாக்டர் எட்வர்டு ஜென்னரின் பக்கத்து வீட்டுத் தாழ்வாரத்தில் கவனிப்பார் இல்லாமல் படுத்துக்கிடந்த ஒரு நோயாளியின் உடல் முழுவதும் முத்து முத்தாய்க் கொப்புளங்கள். சில முத்துக்கள் வெடித்துச் சீழ் வடிந்து கொண்டிருந்தது. வைசூரி எனப்படும். பெரிய அம்மை கண்ட அந்த நோயாளி வலி தாங்க முடியாமல் கதறினார். இதனை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த டாக்டர் எட்வர்டு ஜென்னரின் மனத்திரையில் மாணவப் பருவத்தில் நடந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. செயின்ட் ஜார்ஜ் மருத்துவ மனையில் ஓர் ஒதுக்குப்புறமாக அம்மை கண்ட நோயாளி ஒருவர் படுத்திருந்தான். இந்த மர்ம வியாதியை எப்படி குணப்படுத்துவது என்று டாக்டர்களுக்குத் தெரியவில்லை. அத்துடன் நோயாளியின் அருகில் செல்வதற்குக்கூட பயந்து நடுங்கினார்கள். இது கடவுள் கொடுத்த சாபம் என்று ஆதங்கத்துடன் முணுமுணுத்த உறவினர்கள்கூட நோயாளியிடமிருந்து ஒதுங்கியே நின்றார்கள். இதையெல்லாம் கவனித்த ஜென்னர் இந்த பயங்கர வியாதியில் இருந்து மனித குலத்தைக் காப்பாற்றியே தீருவேன் என்று அன்றே சபதம் செய்தார்.

அனுபவ டாக்டர்

இங்கிலாந்தில் 1749-ல் ஜென்னர் பிறந்தார். அந்தக்காலத்தில் டாக்டர் ஆவதற்கு இரு வழிகள் இருந்தன. முறையாகப் படித்தும் டாக்டராகலாம். அல்லது ஆரம்பக்கல்வியை முடித்த பின் பிரபல டாக்டர் ஒருவரிடம் உதவியாளராகச் சேர்ந்து அனுபவம் பெற்றும் டாக்டர் ஆகலாம். இரண்டாவது வழியில் டாக்டர் ஆனவர் ஜென்னர்.

ஜென்னரை சிந்திக்க வைத்தது

அவரது கிளினிக்கில் அம்மை நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். மற்ற டாக்டர்கள் நெருங்கவே பயப்படும் அந்த நோயாளிகளைத் தொட்டுப்பார்த்துப் பரிசோதனை செய்தார் ஜென்னர். அம்மைக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் தீவிரம் காட்டினார். ஆனால் வெற்றி கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில், ஆராய்ச்சியைக் கைவிட்டு விட வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தார். அந்தச்சமயத்தில் லண்டனில் அம்மை பரவியிருந்தது. ஒரு நாள் ஜென்னரின் வீட்டுக்குப்பால்காரன் வரவில்லை. மறுநாளும் இது தொடர்ந்தது. பால்காரன் ஏன் வரவில்லை? அவன் வீட்டுக்குப்போய் விசாரித்து வாருங்கள் என்று மனைவி நச்சரித்தாள். ஜென்னரும் பால்காரன் வீட்டுக்குச்சென்றார். லண்டன் மாநகரை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த அம்மை நோயின் அறிகுறி சிறிதும்கூட அந்தக்காலனியில் தென்படவில்லை. ஜென்னர் வீட்டுப்பால்காரன் உடல் நலம் குன்றிப் படுத்துக்கிடந்தான். இந்தப்பால்காரன் காலனியில் மட்டும் யாருக்குமே அம்மை வரவில்லையே என்று வியப்பு தெரிவித்தார் ஜென்னர். பால்காரன் சொன்னான் நீங்கள் சொல்வது சரிதான். கோவசூரி என்ற நோய் எங்களுக்கு வருகிறது. இப்போது எனக்கு வந்திருப்பதும் அந்த நோய்தான் என்றான் பால்காரன் கோவசூரி என்பது அம்மை போல அவ்வளவு கொடியது அல்ல. நகரமெங்கும் பலருக்கு அம்மை கண்டிருக்க, பால்காரன் காலனியில் மட்டும் ஒருவருக்குக்கூட அந்த நோய் வராதது ஜென்னரைச் சிந்திக்க வைத்தது.

பரிசோதனையில் வெற்றி

கோவசூரி கண்டவர்களுக்கு அம்மை வராது என்று முடிவு கட்டினார். இதனை உறுதிப்படுத்த பரிசோதனைகளை மேற் கொண்டார். அம்மை நோயால் பாதிக்கப்படாத ஆரோக்கியமான ஒரு சிறுவனின் உடலில் சில வெட்டுக்காயங்களை ஏற்படுத்தினார். கோவசூரி கண்டவரின் புண்களில் இருந்து சேகரித்த சீழை அந்தக்காயங்களில் நிரப்பினார். இரண்டே நாளில் அந்தச் சிறுவனைக் கோவசூரி நோய் பிடித்தது. அம்மைக் கொப்புளங்களில் இருந்து சேகரித்த சீழை சிறுவனின் உடலில் ஊசி மூலம் ஏற்றினார். இதேபோல கோவசூரி கண்டிராத இன்னொரு இளைஞனின் உடலிலும் இந்தச்சீழை செலுத்தினார்.

இளைஞனுக்கு அம்மை வந்தது, சிறுவனுக்கு வரவில்லை. கோவசூரி சீழைக்கொண்டு ஒருவருக்கு அம்மை குத்தினால் அவருக்கு எந்தக் காலத்திலும் அம்மை வராது என்பது உறுதியாயிற்று. ஐரோப்பாவில் 18-ம் நூற்றாண்டில் மட்டும் ஆறு கோடிபேரை பலி வாங்கிய அம்மை நோய்க்கு, ஒரு வழியாக 1796-ல் மருந்து கண்டு பிடிக்கப்பட்டது. அந்தக்காலத்தில் ஜென்னர் செய்த முரட்டு வைத்தியம் இப்போது அம்மைத் தடுப்பு ஊசி போடுதல் என்று அனைவரும் எளிதில் ஏற்கத்தக்க விதத்தில் மாறியிருக்கிறது. ஜென்னரின் இந்த அரிய கண்டுபிடிப்புதான் மனித குலத்தை அழிவில் இருந்து காப்பாற்றியிருக்கிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Empty Re: அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம்

Post by mathu18 Thu Jun 25, 2009 4:14 pm

நல்ல தகவல்...நாம் தான் கண்டுபிடுசாலும்...மனிதனாலா மரணத்த வெல்ல முடியாது.....
சிக்குன் குனியா..மட்டன் குனியா...பன்றி காய்ச்சல்....புதுசு புதுசா நோய் உருவாகிட்டே இருக்கும்....அப்டி இல்லாட்டி ராஜ பக்சே மாதிரி கிருமிய மனுஷ ரூபத்துலஉலாவ விட்டுடும்
avatar
mathu18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 380
இணைந்தது : 19/06/2009

Back to top Go down

அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Empty Re: அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம்

Post by sudhakaran Thu Jun 25, 2009 4:55 pm

நல்ல தகவல்......
sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Back to top Go down

அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Empty Re: அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum