புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Poll_c10கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Poll_m10கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Poll_c10கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Poll_m10கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Poll_c10கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Poll_m10கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Poll_c10கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Poll_m10கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Poll_c10கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Poll_m10கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Poll_c10கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Poll_m10கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Poll_c10கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Poll_m10கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Poll_c10கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Poll_m10கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி!


   
   
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon May 03, 2010 10:58 pm

கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி!
- பரமசிவன்

கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Paripoorani


பஞ்ச பூதங்களின் காரணனும் திரிபுரங் களை எரித்தவனுமான சிவபெருமான் சுயம்புவாய் முகிழ்த்துக் கோவில் கொண்ட ருளும் அற்புதத் தலங்களுள் ஒன்று தென் மலை திரிபுரநாதர் ஆலயம். அதிலும் மேற்கு நோக்கி அமைந்திருக்கும் மிகச் சில ஆலயங்களில் ஒன்றாகத் திகழ்வதும் கூடுதல் சிறப்பு.

கருவறையில் ஈசன் திரிபுரநாதர் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி அருள்புரிகிறார். காற்று நுழையாத சிவன் கருவறைக்குள் பஞ்சமுக தீபங்கள் எரிந்து கொண்டிருக் கின்றன. அதில் நான்கு தீபங்கள் அசைந்து கொண்டிருக்க, சிவனை நோக்கியிருக்கும் ஒருமுக தீபம் மட்டும் அசையாமல் இருப்பது அதிசயம்.

பொதுவாக அனைத்து சிவாலயங்களிலும் அம்மன் தெற்கு நோக்கி அருள் புரிவதைக் காணலாம். ஆனால் இங்குள்ள சிவபரிபூரணி அம்மன் தனிச் சந்நிதியில் மேற்கு நோக்கி இருப்பதும் சிறப்பு.

பொதுவாக மேற்கு பார்த்த ஆலயங்கள் அமைந்திருப்பதற்கு இரண்டு காரணங்களைக் கூறுவர். மக்களுக்கும் தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் கொடுமைகள் புரிந்த வலிமை வாய்ந்த அசுரர்களை அழிக்கும் பொருட்டு ஈசன் திருவருள் புரிந்த தலங்களில் அமைந்த ஆலயங்கள் மேற்கு நோக்கி இருக்கும் என்பது புராண காரணம்.

மாற்றார்மீது போர் தொடுத்து வென்ற அரசர்கள் தான் பெற்ற வெற்றியைக் கொண்டாடுவதற்காக ஆலயங்களை அமைப்பது மரபு. போர் புரியும்போது பலரைக் கொல்ல வேண்டிய கட்டாயம் மன்னர்களுக்கு அமையும். அதனால் ஏற்படும் பாவத்தைப் போக்கிக் கொள்வதற் காக மன்னர்கள் மேற்கு நோக்கிய ஆலயங் களை அமைத்து வழி பட்டார்கள் என்பது வரலாற்றுக் காரணம். இவ்வாலயத்தைச் சுற்றி வரும்போது அங்குள்ள கல் வெட்டுகளில் இருந்து இந்த விவரத்தை அறிந்து கொள்ள முடிகிறது.

கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Paripoorani1கி.பி. 12, 13-ஆம் நூற்றாண்டுகளில் இப்பகுதி பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டி ருந்தது. அப்போது அப்பகுதியை ஆண்டு வந்த சுந்தரபாண்டிய மன்னன் போரில் தான் பெற்ற வெற்றியைக் கொண்டாடவும் போர்க் களத்தில் எதிரிகளைக் கொன்ற பாவம் நீங்கவும் இவ் வாலயத்தை எழுப்பி குடமுழுக்கு செய்வித்தான் என்பதை அறிய முடிகிறது.

இவையன்றி, கடும் தவம் செய்து தன்னை வழிபட்ட முனிவர்களுக்காகவும் ஈசன் மேற்கு நோக்கி அருள்புரிந்தார் என்றும் கூறுகின்றனர்.

இவ்வாலயத்தின்முன் மிகப் பெரிய குளம் அமைந்துள்ளது. இப்பகுதியைச் சுற்றியுள்ள பல ஏக்கர் நெல் வயல்களுக்கு செழிப்பு தரும் நீர்வளம் கொண்டது இந்தத் திருக்குளம்.

இவ்வாலயத்தில் ராமரும் அனுமனும் சிவனை வழிபடுவது போன்ற புடைப்புச் சிற்பம் அற்புத மாக அமைக்கப்பட்டுள்ளது. பாண்டிய மன்னர் களின் சின்னமான இரட்டை மீன்களும் விதானத்தில் அழகுற வடிக்கப்பட்டுள்ளன.

சிவாலயங்களில் காணப்படும் பரிவார தேவதைகள் அனைத்தும் இங்கேயும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் குறிப்பிட வேண்டிய ஒன்று.

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த ஆலயம் பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்குப் பிறகு தென்மலை ஜமீன்தார்களின் பொறுப்பில் இருந்து வந்தது. தற்போது சிவகிரி ஜமீன் வாரிசுகளின் பொறுப்பில் இருக்கிறது.

""முற்காலத்தில் பல்வேறு அற்புதங்களை பக்தர்களுக்கு உணர்த்திக் காட்டியதைப்போல தற்போதைய தலைமுறைகளுக்கும் தன்னுடைய அருளாற்றலை உணர்த்தி வருகிறார்'' என்று மெய்யுருகச் சொல்கிறார்- இவ்வாலயத்தில் இருபது ஆண்டுகளாக சிவத் தொண்டு புரிந்து வரும் பால்சாமி சுவாமிகள்.

""இங்கே சிவன் சந்நிதிக்குத் தெற்கில்- ஈசனுக்கு இடப்புறம் மேற்கு நோக்கிய வண்ணம் அம்மன் அருள்வதால் கிரியா சக்தியாகப் போற்றப் படுகிறாள்.

சுமார் முப்பது ஆண்டுகளுக்குமுன் இவ்வாலயம் சரியான பராமரிப்பின்றி- பூஜையுமின்றி இருந் தது. கோவிலுக்கு இரண்டு காவலர்கள் மட்டும் இருந்தனர். அதில் ஒருவர் கிறிஸ்துவர். அப்போது ஒரு நாள் அதிகாலை நேரத்தில் ஒரு ஐந்து வயது சிறுமி அங்கு வந்து கிறிஸ்துவ காவலாளியைத் தட்டி எழுப்பியது. தூக்கக் கலக்கத்தோடு கண் விழித்த காவலாளியிடம், "ஐயா, எனக்கு ரொம்ப பசியா இருக்கு. சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகுது. நாளைக்கு நீங்க வரும்போது எனக்கு கொஞ்சம் சாப்பாடு கொண்டு வாங்களேன்' என்றது.

சிறுமியைப் பரிதாபத்தோடு பார்த்த காவலாளி, "கலங்காதேம்மா. நாளைக்கு நான் நிச்சயம் சாப்பாடு கொண்டு வாரேன்' என்றார். காவ லாளியின் பதிலில் மகிழ்ந்த சிறுமி அங்கிருந்து கோவிலுக்குள் போவதை அவர் பார்த்தார். உள்ளே ஏன் போகிறது என்று அவர் பார்த்துக் கொண்டிருந்தபோதே அம்மன் கருவறைக்குள் சென்ற அச்சிறுமி மாயமாய் மறைந்து விட்டாள். அதைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனார் அந்தக் காவலாளி. "ஆகா! நம்மிடம் வந்து பசிக்கு உணவு வேண்டும் என்று கேட்டது அம்மன் அல்லவா!' என்று உணர்ச்சிவசப்பட்டவர் உடனே ஊருக்குள் ஓடோடிச் சென்று நடந்த அதிசயத்தைச் சொன்னார்.

"நான் மதத்தால் கிறிஸ்துவன்தான். ஆனாலும் அந்த அதிசயத்தைக் கண்கூடாகப் பார்த்தேன். இத்தனை நாட்கள் அம்மனுக்குப் பூஜையில்லா மல் பட்டினி போட்டுவிட்டீர்களே! இனி அது கூடாது. இந்த ஊருக்கு அம்மனே காவலாக இருக்கும்போது தனியாக நான் எதற்கு கோவிலைக் காவல் காக்க வேண்டும்?' என்றார். அன்று முதல் இன்று வரை மக்களே பொறுப்பேற்றுக் கொண்டு மிகச் சிறப்பாக பூஜைகளைச் செய்து வருகிறார்கள். காவலாளி கள் தேவையில்லாத ஆலயத்திற்கு அம்மனே காவலாக நிற்கிறாள்.

இந்தக் கோவிலில் கிரிவலமும் நடைபெறுகிறது. தேய்பிறை அஷ்டமி யில் கிரிவலப் பூஜை செய்து வேண்டிக் கொண்டார் ராஜபாளையத்தைச் சேர்ந்த சிவானந்தன் என்னும் அன்பர். குழந்தை பாக்கியம் கிட்டாது என்று மருத்துவர்களே கைவிரித்து விட்ட நிலையில், அந்த அன்பரின் வேண்டுதல் இத்தல இறைவன் அருளால் நிறைவேறியது.

விவாகரத்துக்காக நீதிமன்றத் துக்குப் போய்விட்டார் ஒரு கணவன். மனைவியோ இந்த அம்மனிடம் வந்து கண்ணீர் சிந்தி, "தாயே எங்களைச் சேர்த்து வை' என்று முறையிட்டாள். சிவபரிபூரணி அம்மையின் அருளால் அத்தம்பதி மீண்டும் ஒன்று சேர்ந்து இணைபிரியாமல் வாழ்ந்து வருகிறார்கள். இவ்வாறு வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பூஜைகளையும் அன்னதானத் தையும் செய்கின்றனர். ஒவ்வொரு கிரிவல நாளிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து வழிபடுகிறார்கள்'' என்றார்.

""நான் பணமில்லாதவன்தான். ஆனால் நிறைய பணக்கார நண்பர்களின் ஆதரவைப் பெற்றவன். இந்தக் கோவிலைப் பற்றி அந்த நண்பர்களிடம் கூறினேன். அவர்கள் தங்களாலான திருப்பணிகளை மனமுவந்து செய்கிறார்கள். பௌர்ணமி நாட்களில் இங்கு வந்து வழிபட்டுச் செல்லும் எனக்கு இரவில் படுத்தால் நிம்மதியான தூக்கம் வருகிறது. அதுவே போதும்!'' என்கிறார் புத்தூர் உலகநாதன்.

இவ்வாறு தங்களை நாடி வரும் பக்தர்களுக்கு நிறைவையும் நிம்மதி யையும் தருகிறார்கள் திரிபுரநாதரும் சிவபரிபூரணி அம்மனும்!

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 03, 2010 11:13 pm

புதுமையான தகவல்கள், நன்றி!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon May 03, 2010 11:15 pm

பிச்ச wrote:புதுமையான தகவல்கள், நன்றி!!!


நன்றி நண்பா கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! 678642 கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! 678642

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 04, 2010 12:24 am

அருமையான தகவல் ... கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! 677196




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 04, 2010 9:10 am

அறியாத தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி சத்யன்!



கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு உணவு கேட்ட பரிபூரணி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக