புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_m10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_m10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_m10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_m10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_m10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10 
19 Posts - 3%
prajai
அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_m10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_m10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_m10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_m10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_m10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 6:14 am

கொங்கு வளநாடு தொன்மை வரலாறும், பக்திச் சிறப்பும் உடையது. கொங்கு நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் ஏழு. வைப்புத் தலங்கள் பதினான்கு. மாணிக்கவாசகர், கருவூர்த் தேவர், அருணகிரிநாதர் முதலியோர் பாடிய திருத்தலங்களும் பல உள்ளன. கொங்கு நாட்டுப் பாடல் பெற்ற தலங்களுள் திருநணா ஒன்றாகும். தற்போது இத்தலம், "பவானி' என்ற பெயரால் வழங்கப்படுகிறது.

சங்ககாலச் சேரர் புகழ்பாடும் நூல் பதிற்றுப் பத்தாகும். செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் ஏழாம் பத்தில் பாடியுள்ளார். ""சிறுபுறமென நூறாயிரம் காணம் கொடுத்து நன்றா என்னும் குன்றேறி நின்று தன் கண்ணில் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ''என அரசன் தந்த பரிசினைப் பதிற்றுப் பத்து கூறுகிறது.

இந்நன்றா என்னும் குன்று கி.பி. 7ஆம் நூற்றாண்டில் "நணா' என மருவியது. திருஞான சம்பந்தர் திருப்பதிகம் நணாவைக் குன்றெனக் கூறுகிறது. நன்றாவின் மேலிருந்து காட்டிய நாடு கொல்லிக் கூற்றமாகும். அங்குள்ள ஊர்களில் ஒன்று, "கபிலக்குறிச்சி' எனப் பெயர் கொண்டு நிலவுவது இதற்குச் சான்று பகர்கின்றது.

நணா இன்று பவானி என வழங்கப் பெறுகிறது என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். வானி ஆறும், காவிரி ஆறும் கூடுகின்ற கூடுதுறையில் பவானி அமைந்துள்ளது. நிலத்துக்கு அடியில் வந்து சேர்கின்ற அமுத ஆறு ஒன்றும் சேர்ந்து முக்கூடலாய் உள்ளது.

""காவிரி அன்றியும் பூவிரி புனலொரு, மூன்றுடன் கூடிய கூடலனையை'' எனச் செங்குட்டுவனை கபிலர் பதிற்றுப் பத்தில் பாராட்டியுள்ளார். இவ்வூரைச் சோழன் பூர்வ பட்டயம், "வானிகூடல்' என்று குறிப்பிடுகிறது.

"பவானி நீர் தெளிந்தது. சுவை மிகுந்தது. பவானி ஆற்றில் மகளிர் நீராடினர். காதில் அணிந்திருந்த குழை கழன்று விழுந்தது. அது தெளிந்த நீரில் மேலே தெரிந்தது. இத்தகு நீரினும் இனியவன் சேர அரசனாகிய இளஞ்சேரல் இரும்பொறை' எனப் பெருங்குன்றூர்க்கிழார் ஆற்றையும் அரசனையும் ஒருங்கே போற்றியுள்ளமை அறியத்தக்கதாகும். இதனை""புனல்பாய் மகளிர் ஆட ஒழிந்த, பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும் சாந்து வரு வானி நீரினும், தீம் தண் சாயலன்'' எனப் பதிற்றுப் பத்து கூறியுள்ளது.

நாயன்மார் பெயர்களைக் கொங்கு நாட்டில் மக்கள் மிகுதியாக வைத்திருந்தனர். கொங்கு நாட்டுக் கல்வெட்டில், "அறத்தைப் பாதுகாப்பவர்கள் அறுபத்து மூவர் பெற்ற பேறு பெறுவர்' என்ற செய்தி வருகிறது. நாயன்மார்கள் தமிழகத்தில் வழிபாட்டில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியவர்கள். அவர்கள் செய்யும் தொழில் எதுவாக இருப்பினும் வழிபாட்டுக்கும் அடியார்க்கும் உதவுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர்.

சமயக்குரவர் நால்வருள் தலைமகனாகி நின்ற தமிழ் ஞானசம்பந்தர், திருக்கொடிமாடச் செங்குன்றூரில் (திருச்செங்கோடு) வழிபட்டுப் பதிகம் பாடிய பின் திருநணாவுக்கு எழுந்தருளினார்.

""அப்பாலைக் குடபுலத்தில் ஆறணிந்தார் அமர் கோயில் எப்பாலும்சென்றேத்தித் திருநணாவினை இறைஞ்சி'' எனச்சேக்கிழார் பெருமான் பாடியுள்ளார்.

திருநணாவில் திருஞானசம்பந்தர், ""பந்தார் விரல் மடவாள் பாகமா'' என்னும் திருப்பதிகம் பாடினார்.

""சொல் வித்தகத்தால் இறைவன் திருநணா ஏத்து பாடல்

வல்வித்தகத்தான் மொழிவார் பழியிலரிம் மண்ணின் மேலே'' எனப் பதிகப் பயன் பாடியுள்ளார்.

16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த அருணகிரிநாதர்,""சிலைவேட சேவற் கொடியோனே! திருவானி கூடற் பெருமாளே'' எனப் பவானித் திருப்புகழில் பாடியுள்ளார். பல புலவர்கள் இத்தலத்திற்குப் புராணம், சிற்றிலக்கியம் பாடியுள்ளனர்.

புலவர் பாடும் புகழ்மிக்க பவானி பண்ணார் மொழியம்மை உடனுறை திருநண்ணாவுடையார் திருக்கோயில் பல சிறப்புகள் உடையது. இக்கோயிலுக்கென்று திருவருளும், குருவருளும் கூட்ட நாயன்மார்களுக்கும், சமயச் சான்றோர்களுக்கும் புதிதாக நூறு செப்புத் திருமேனிகளைத் தக்கோர் உதவியுடன் அடியார் திருக்கூட்டம் உருவாக்கியுள்ளமை, உலகத்தோர் உணர்ந்து மகிழத் தக்க செய்தியாகும்.

கைத்திருத் தொண்டு செய்யும் கடப்பாட்டினர், கேடும் ஆக்கமும் கெட்ட திருவினராகிய அறுபான்மும்மை நாயன்மார்கள், திருமுறை ஆசிரியர்கள், திருமுறை கண்ட சோழர் மாமன்னர் ராசராச சோழ தேவர், பெரிய புராணம் பாட முன்னின்ற அநபாயச் சோழர், தெய்வப் புலவர் திருவள்ளுவத் தேவ நாயனார், சந்தானக் குரவர்கள், மாதவச் சிவஞானமுனிவர் ஆகியோர்க்கும் புதிய செப்புத் திருமேனிகள் செய்யப் பெற்றுள்ளன. அடியார்களின் உள்ளத்தில் அழகொழுக எழுதிப் பார்க்கும் உயிர் ஓவியங்களாக அந்த அற்புதத் திருமேனிகள் எழிலுறத் திகழ்கின்றன.

இந்தச் செப்புத் திருமேனிகளுக்கான சிறப்பு ஆராதனை, பவானியில், நாளது 16.5.2010 அன்று சிறப்புற நடைபெற உள்ளது. பின்னர் அத்திருமேனிகளை கொங்கு நாட்டில் உள்ள ஏனைய பாடல் பெற்ற சிவத்தலங்களுக்கு பல்லக்குகளில் சுமந்து சென்று பதிகம்பாடி மகிழவும் திட்டம் உள்ளது. பிறகு உரியதொரு திருநாளில் அனைத்து அடியார் திருவுருவச் சிலைகளும் பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் முறைப்படி ஒப்படைக்கப்படும்.

ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், சிறுத் தொண்டர், திருநீலநக்கர் ஆகியோர் முருக நாயனார் திருமடத்தில் ஒன்று கூடியிருந்தபோது,

"திருப்பதிகச் செந்தமிழின் திறம் போற்றி, மகிழ்வுற்றுப்

பொருப்பரையன் மடப்பாவை இடப்பாகர் பொற்றாளில்

விருப்புடைய திருத்தொண்டர் பெருமையினை

விரித்துரைத்து அங்கு ஒருப்படு சிந்தையினார்கள் உடனுறைவின் பயன்பெற்றார்' என்று தெய்வச் சேக்கிழார் பாடியுள்ளார். அவர்தம் திருவாக்கினை 21ஆம் நூற்றாண்டில் உள்ள அடியார்கள் உணர்ந்து, உடனுறைவின் பயன் பெறுவதற்கு, இவ்விழாவிற்கு எழுந்தருளிச் சிறப்பிக்குமாறு மனம், மொழி, மெய்களால் வணங்கி வேண்டுகிறோம்.


சிவனடியார் திருக்கூட்டம்



அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக