ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி ஒரு மாதிரி...!

4 posters

Go down

மனைவி ஒரு மாதிரி...! Empty மனைவி ஒரு மாதிரி...!

Post by சிவா Tue Apr 27, 2010 9:26 am

ஏண்டா ராமு... உனக்கே நல்லாயிருக்கா...! அவ எங்கே போறா? என்ன பண்றா...! ஏன் லேட்டா வரா... ஏன்னு ஒரு வார்த்தை கேட்க மாட்டியா? அவ இந்த வீட்டு மருமகளா இல்லையா...? ஏதோ... உன்னைவிட பெரிய வேலையில் இருக்காளேன்னு பொறுத்து பொறுத்து பார்த்தாச்சு... இப்ப எல்லை மீறிப்போச்சு...! உலை வாயை மூடலாம்... ஊர் வாயை மூடமுடியுமா...? ஆரம்பத்திலேயே கிள்ளி எரியணும்... வனர விடக் கூடாது... இல்லைன்னா பின்னாலே பிரச்சினையாகி விடும்... மகனிடம் பொரிந்து தள்ளினாள் அம்மா... மருமகள் மாலா பற்றி.

"கவனிச்சிட்டு தான் வரேன்...! எல்லாம் சமயம் பார்த்து சரி பண்ணிடலாம்... கொஞ்சம் பொறு...!''

-ராமு பதில் சொன்னான்.

"அண்ணா...! பொறுமைக்கும் எல்லையுண்டு. நான் லேட்டா வந்தா... யார் கூடவாவது செல்போன்ல அதிகமா பேசினா... எப்படி சந்தேகப்படறே...! அண்ணி கிட்ட ஒரு வார்த்தை கேக்கறியா?'' தன் பங்குக்கு உசுப்பி விட்டாள் தங்கை நளினி.

``சமயம் வரட்டும்...! கேட்காமலா விட்டுடுவேன்... கொஞ்சம் பொறு...!

-அவளுக்கும் பொறுமையாக பதில் சொன்னான் ராமு.

இப்போது அப்பா எகிறினார்.

"மணி எட்டாகப் போகுது... ஆளைக்காணோம். இவ்வளவு நேரம் ஆபீஸிலே என்ன வேலை...? திடீர்னு கோயில்ல தாலிகட்டி, மாலையும், கழுத்துமா வந்து நின்னீங்க...! எல்லா எதிர்ப்பையும் மீறி உன்னை நம்பி வந்திருக்கிறதா சொல்லி கால்லே விழுந்தே! ஆனது ஆகட்டும்னு ஏத்துக்கிட்டோம். ஊரே ஒரு மாதிரி பேசிச்சு! பொறுத்துக்கிட்டோம். இப்ப என்னடான்னா... ஏதோ தப்பு நடக்குதோன்னு சந்தேகப்படறோம்...! நீ என்னடான்னா இடிச்ச புளி மாதிரி சமயம் வரட்டும்னு காலத்தை ஓட்டறே?''

அப்பாவுக்கு பதில் சொல்ல அவகாசமில்லாமல் செல்போன் ஒலித்தது. எடுத்து பேசிய ராமு, "அப்படியா? எல்லாரும் புறப்பட்டு வர்றோம்...!'' பேச்சில் பரபரப்பு காட்டிக் கொண்டே உள்ளே வந்தவனை கவலையாகப் பார்த்தார் அப்பா. ஆனால் ராமுவிடம் அந்தப் பரபரப்பு நேரத்திலும் ஒரு பக்குவம் காணப்பட்டது. "அப்பா! நாமெல் லாம் உடனே புறப்படறோம்... சமயம் வந்தாச்சு! போய் உண்டு இல்லைன்னு பண்ணிடலாம்... புறப்படுங்க!''

"நாங்க எதுக்குடா...! விபரீதமாயிடப் போகுது! நீயே போய் எல்லாத்தையும் ஒரு வழி பண்ணு!''

-மகனின் ஆவேசத்துக்குப் பின் இருந்த வேகம் அப்பாவை பயமுறுத்தியது.

"அதெல்லாம் முடியாது...! நீங்களெல்லாம் வந்து தான் ஆகணும்! ஆளுக்கொரு கம்பிளைண்ட் கொடுத்தீங்க...! இப்ப ஏன் பின் வாங்கறீங்க? வண்டி வந்துடுச்சி! புறப்படுங்க. வாங்கம்மா...! போய் என்னான்னு பார்த்துடலாம்...!

ராமுவின் குடும்பமே காரில் புறப்பட்டது. அரைமணி நேர பயணத்திற்கு பிறகு ஒரு பெரிய வீட்டின் முன் நின்றது கார். வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. உள்ளே வந்த இவர்களை முதியோர் திரண்டு நின்று வரவேற்றனர். `முதலாம் ஆண்டு முதியோர்-அனாதை இல்ல நிறைவு விழா' என்று போர்டு போட்டிருந்தது.

சற்று வயதில் முதியவர் நரசிம்மன் என்பவர் முன்னிலை வகித்து பேசினார். மாலாவைப் போன்ற மகத்தான பொதுநல சேவகியை எங்களுக்கு தந்துள்ள பெரிய மனசுள்ள, தயாள குணமுள்ள உங்கள் குடும்பத்தை வரவேற்க கடமைப்பட்டுள்ளோம். வயதான உங்களுக்கும், அன்புக்கணவருக்கும், ஆசை மைத்துனிக்கும் சேவை செய்யவேண்டிய உங்கள் மருமகளை, எங்கள் நலன் காக்க அனுமதித்துள்ள உங்களுக்குத்தான் எத்தனை பெரிய மனசு! நேரம் காலம் பார்க்காமல் எங்களுக்காக உழைத்து, நிறைய இடங்களுக்கு சென்று, பொருள், பணம் திரட்டி, எங்களை தங்கள் குடும்பமாக நினைத்து உடல் நலம் குன்றி விட்டால் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று, திரும்ப அழைத்து வந்து சேர்ப்பது... ஆபீஸ் விட்டதும் இங்கே ஓடி வந்து பெற்ற தாய், தந்தை போல் பாவித்து அக்கறையுடன் கவனிப்பது... நேரமாகி விட்டதே என்று நாங்கள் சொன்னால்... `அவர்கள் எல்லாம் தங்கம்... நான் கொடுத்து வைத்தவள்.அந்த வீட்டில் வாழ்க்கைப்பட...' என்று மன நிறைவுடன் கூறும் மாலா உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் சொந்தம் என்ற எண்ணமே வலுக்கிறது. நிறைந்த மனதுடன் மனதார சொல்கிறோம்... நீங்கள் மகத்தானவர்கள்... நிறைகுடம். சொந்த பந்தத்தை இழந்த எங்களுக்கு தயாள குணம் நிறைந்த உங்கள் வீட்டு பெண்தெய்வம் மாலா ஆற்றும் தொண்டிற்கு ஈடு இணையே இல்லை...! என்றார் நா தழுதழுக்க கண்ணீருடன்.

அவர் சொன்னதை ஆமோதித்து மொத்தஅரங்கிலும் மூன்று நிமிடங்களுக்கு குறையாமல் முதியவர்களிடம் இருந்து அரங்கு அதிர கரகோஷம்.

வெலவெலத்துப் போனது ராமுவின் குடும்பம். சந்தேகப்பட்ட தங்கள்வீட்டு மாலாவுக்கு இப்போது கிடைத்த பெருமை அவர்களை கொஞ்சம் வெட்கப்படுத்தி வைத்திருந்தது.

சந்தேகம் என்ற பெயரில் அவர்கள் மனதில் படிந்திருந்த பாசியை அந்த வெட்கம் அடித்துச் சென்று சுத்தப்படுத்தியது. ராமு மனதிற்குள் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தான். தன் மனைவியின் இதுமாதிரியான ஈடுபாடுகள் தெரிந்து அவளை ஊக்கப்படுத்தியவனே இவன் தான்.

நிகழ்ச்சி முடிந்து அவர்கள் காரில் வீடு திரும்பியபோது கணவனை அவன் குடும்பம் அறியாமல் நன்றிப்பார்வை பார்த்தாள் மாலா.

***
என்.வி.சுப்பிரமணியன்


மனைவி ஒரு மாதிரி...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனைவி ஒரு மாதிரி...! Empty Re: மனைவி ஒரு மாதிரி...!

Post by கலைவேந்தன் Tue Apr 27, 2010 10:14 am

நல்ல கதை... நல்ல கணவன்... நல்ல மனைவி...

நல்ல சிவாவுக்கும் நன்றி..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மனைவி ஒரு மாதிரி...! Empty Re: மனைவி ஒரு மாதிரி...!

Post by ARR Sat May 08, 2010 8:39 pm

செய்யும் சேவையை வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் தெரிவித்துவிட்டு செய்திருக்கலாமே என்ற எண்ணம் எழாமலில்லை..

எனினும் சஸ்பென்சை சீராக கடைசிவரை கொண்டு சென்றமைக்குப் பாராட்டுகள்..!
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

மனைவி ஒரு மாதிரி...! Empty Re: மனைவி ஒரு மாதிரி...!

Post by தண்டாயுதபாணி Sat May 08, 2010 9:10 pm

மனைவி ஒரு மாதிரி...! 677196 மனைவி ஒரு மாதிரி...! 677196 மனைவி ஒரு மாதிரி...! 678642


மனைவி ஒரு மாதிரி...! Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

மனைவி ஒரு மாதிரி...! Empty Re: மனைவி ஒரு மாதிரி...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மனைவி - டி.வி.மாதிரி....
» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
» இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி
» "நான் ராணுவ வீரரின் மனைவி, சந்தோஷமாக வழியனுப்புகிறேன் " - பிரிகேடியர் லிட்டெர் மனைவி கீத்திகா உருக்கம்
» வலிக்காத மாதிரி அடிக்கணும்... வலிக்காத மாதிரி நடிக்கணும்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum