Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
Page 10 of 14
Page 10 of 14 • 1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
First topic message reminder :
'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்கள் எழுதிய 'கருவாச்சி காவியம்' என்ற நூல் வெளியீட்டு விழா 2006 டிசம்பர் 16 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
கலைஞர் கருணாநிதி நூலை வெளியிட, முதல் நூலை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் பெற்றுக் கொண்டார்.
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு வைரமுத்து
'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்கள் எழுதிய 'கருவாச்சி காவியம்' என்ற நூல் வெளியீட்டு விழா 2006 டிசம்பர் 16 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
கலைஞர் கருணாநிதி நூலை வெளியிட, முதல் நூலை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் பெற்றுக் கொண்டார்.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
காளியாத்தா கோயிலுக்கு வந்து கண்ணு ரெண்டுலயும் அடைமழை கட்டி அழுகுறா கருவாச்சி. "நேர்த்திக்கடன முறிச்சிட்டேன்னா என் நெத்தியில அடிச்சுட்ட ஆத்தா? கோவம் எம் மேலன்னா என் ரெண்டு கண்ணுல ஒரு கண்ண எடுத்திருக்கலாம். ஆனா, என் ரெண்டு பிள்ளையில ஒரு பிள்ளையத் தண்டம் வாங்கிட்டியே! அது சரி, நேர்த்திக்கடன் கட்டாதவள நெஞ்சுல ஏறி மிதிச்சுட்டியே. ஒன் பொருள ஒச்சம் பண்ணுன ஆளுகள இன்னம் மிச்சம் வச்சிருக்கியே. எப்பத் தண்டம் வாங்கப்போற?" ஆத்தாகிட்ட ஒப்பிச்சுட்டு அவ அழுதுபோறா. கஞ்சி ஊத்துறவ பின்னாலயே ஒரு நொண்டி நாய்க்குட்டி அண்டிப்போற மாதிரி, வீரம் கொறஞ்சு வீரியம் கொறஞ்சு அவ கொசுவம் பாத்துக் கூடவே போகுது பூலித்தேவன்.
ஊரே வையுது கட்டையன.
"கருவாச்சி மேல இருக்கிற கோவத்துல கெடாயப் பொட்டையாக்கி விட்டுட்டானே பொண்டுகப் பய", "எதுத்துக் கேக்க ஆளு இல்ல. மொள்ளமாறிப் பயலுகளை எல்லாம் கஞ்சா வாங்கிக் குடுத்துக் கையில போட்டுக்கிட்டான். இப்படியேவா போயிரும் இவன் காலம்? எளைச்சவன வலுத்தவன் அடிச்சா வலுத்தவன வல்லூறு அடிக்காதா?" காத்து வழி வருது எல்லாம் கட்டையன் காதுக்கு. சிரிச்சுக்கிர்றான் அவன் சிரிச்சா நல்லால்ல, நரி சிரிச்சா நல்லாவா இருக்கும்?
கொளத்தங்கரையில அன்னைக்கி அப்படி ஒரு சம்பவமாகிப் போகும்னு கட்டையனும் நெனைக்கல ஆடுகளும் நெனைக்கல. களையெடுத்து முடிச்ச சோளக்காட்டப் பாத்துட்டு ஒத்தையில கரை வழியா வாரான் கட்டையன். வந்தவன் கரையிலயே ஒரு கிளுவம் புதரோரம் உக்காந்துட்டான் ஒண்ணுக்கிருக்க. கரை வழியா வந்த செம்பிலி மந்தைகள அவன் கவனிக்கல பாவம். உக்காந்தவன் தன்ன மறந்து தன் நாமம் கெட்டு அந்த இளம் சோகத்துல கரைஞ்சு கண்ண மூடி இருக்க, செம்பிலி ஆடுக ஒண்ணொண்ணாக் கடந்துபோகுதுக அவன் முதுக ஒரசிக்கிட்டு அவன் எந்திரிக்கல. அவனுக்கு என்னா நம்பிக்கைன்னா சொக்கத்தேவன்பட்டி சுத்துவட்டாரத்துல தன்ன முன்னுக்கப் பாத்தாலும் பின்னுக்கப் பாத்தாலும் ஆடு மாடு முதற்கொண்டு அத்தன சீவராசிகளுக்கும் அடையாளம் தெரியும். தான் ஒண்ணுக்கிருக்கிறதப் பாத்தா ஆனையே ஒதுங்கிப் போகுமே, ஆடா ஒதுங்கிப் போகாது? கட்டையன் நம்பிக்கை வீண் போகல. அவனக் கண்டு ஏதோ ஒரு கெட்ட ஆவி உக்காந்திருக் குன்னு எல்லா ஆடுகளும் ஒதுக்கித்தான் போச்சுக ஒரு ஓரமா. மந்தையில மையத்துல வருது பூலித்தேவன். அது கொம்பு நீளம் உடம்பு பெருசு கரை வேற சிறுசு. அது கொஞ்சம் ஒதுங்கிப்போனாலும் கொளத்துல விழுந்திரும். அதனால சித்தம் போக்கு சிவம் போக்குன்னு தன்போக்குல போகுது. அப்பத்தான் அந்தக் கதையாகிப்போச்சு.
கட்டையன அது கடக்க... அந்த நேரம் பாத்து அது மூக்கு மேல ஒரு முள்ளு ஒரச... அந்த அதிர்ச்சியில அது கொம்ப அங்கிட்டும் இங்கிட்டும் ஒரு ஆட்டு ஆட்ட... அது அவன் முதுகுல குத்திச் சட்டையக் கிழிக்க... அவன் என்னமோ ஏதோன்னு எந்திரிச்சுத் திரும்ப... அப்பக் கடந்து போன கனத்த வகுறு அவன எம்பி ஒரு தள்ளுத் தள்ள... நெல குலஞ்சு பள்ளத்துல சரிஞ்சு உருண்டு கத்தாழம் பொதர் ஓரமா காயாத நரகல் மேல விழுந்து போனான் கட்டையன்.
சீ! வேட்டியெல்லாம் ஆகிப்போச்சே வெளிக் கிருந்த பொருள்னு அருவருப்பாகி, உருண்டு பெரண்டு தடால்னு எந்திரிக்க இடுப்புல குத்தி இழுக்குது இண்டம் புதரு. முள்ளப்புடுங்கி எறிஞ்சிட்டு மூக்கு வெடைக்கிற கோபத்துல கரை மேல கண்ணச் செலுத்திப் பாக்குறான் கட்டையன். இந்தச் சம்பவத்துக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல சாமின்னு போயிக்கிட்டேயிருக்கு பூலித்தேவன்.
அஞ்சாறு நாளாவே சொகமில்ல பிள்ளைக்கு. அழுதுக்கிட்டே யிருக்கான் அழகுசிங்கம். ரவ்வும் பகலும் ஒறங்கல சோறுதண்ணி செல்லல இருட்டப் பாத்தா அலறி எந்திரிக்குது பிள்ள. வெளிச்சத்தப் பாத்தாலும் வீல்னு கத்துது. சுட்டுக் கெடக்கு நெத்தி குளுந்து கெடக்கு வகுறு. ஊர்ப்பட்ட மருந்து குடுத்துப் பாத்தா வைத்தியச்சி ஒண்ணும் ஆகல. "இருளடிச்சிருக்கு பிள்ள பயந்துபோயிருக்கு. இனிமே மருந்து மாயம் கேக்காது ஆத்தா மந்திரிச் சாத்தான் கேக்கும்." வைத்தியச்சியே இப்படிச் சொன்னதுக்கு அப்பறம் மறுபேச்சு இருக்கா? பிள்ளையத் தூக்கி நடந்துட்டா வடவீர நாயக்கன்பட்டிக்கு.
வடவீர நாயக்கன்பட்டி நாயக்கரு மந்திரிக்கிறதுல மன்னன். வேப்பங்கொழ நாயக்கருன்னுதான் சொல்றது அவர. சொந்தப் பேரு மறந்துபோற அளவுக்குத் தொழில் பெருத்த கையி. வத்திப் போனாலும் கரையெல்லாம் பச்சை கட்டி நிக்கிற ஆத்தாங்கர மாதிரி வயசானாலும் லட்சணம் மாறாத ஆளு. பச்ச உருமா செவப்புக் கடுக்கன் கரும்புச் சக்கை மாதிரி கனத்த மீசை. கழண்டு விழுந்திர்ற மாதிரி ரெண்டு கண்ணு ஈரக்கொலைய இழுத்து இறுக்கிப் புடிக்கிற பார்வை. கனத்த கம்பளிய விரிச்சு உட்காந்தாரு தாய் மடியில பிள்ளைய உட்காரவச்சாரு. பொங்கப் பானையில புதுத் தண்ணி ஊத்தி ஒடிச்ச வேப்பங்கொழைய ஊறப்போட்டாரு. கண்ண மூடி முணுமுணுமுணுன்னு எதோ மந்திரம் சொன்னாரு. வேப்பங்கொழையச் சட்டுன்னு எடுத்து, பிள்ள மூஞ்சியில தண்ணி தெறிக்க அடிச்சு மந்திரிச்சாரு. வேப்பங்கொழத் தண்ணிய நீ குடி மொதல்லன்னு தாய் குடிக்க வச்சாரு பிள்ளைக்கும் குடுன்னு குடுத்தாரு.
அழுகை அடங்கிப்போச்சு அழகுசிங்கத்துக்கு.
நாயக்கரு மந்திரிச்சதும் குணக் குறி தெரியுதேன்னு குளுந்துபோனா கருவாச்சி மந்திரம் போட்டு மந்திரிச்சதுல புடிச்ச பீடை விட்டுப்போச்சுங்கறது அவ கணக்கு. ஆனா அது இல்ல காரணம். குண்டாச்சட்டியத் தலையில கவுத்த மாதிரி நாயக்கரு கட்டியிருந்த உருமா, சிவீர்ன்னு கண்ணுல அடிக்கிற கடுக்கன், வாய மூடித் தாடையத் தடவுற மீச, அழுதேன்னா கொன்னேபுடு வேன்னு கண்டிப்பாச் சொல்ற கண்ணு... இதுகளை யெல்லாம் பாத்துப் பாத்து இந்தப் புது பயத்துல பழைய பயத்த மறந்துபோனான் பய.
இந்த நெசம் நாயக்கருக்கும் சின்னப்பயலுக்கும் மட்டும்தான் தெரியும். இது தெரியாததனால கண்ணீர் முட்டுது கருவாச்சிக்கு. இன்னதுதான் காணிக்கைங்கிறது இல்ல குடுத்தத வாங்கிக்கிட்டுக் கும்பிட்டு அனுப்பிருவாரு நாயக்கரு.
ஊரே வையுது கட்டையன.
"கருவாச்சி மேல இருக்கிற கோவத்துல கெடாயப் பொட்டையாக்கி விட்டுட்டானே பொண்டுகப் பய", "எதுத்துக் கேக்க ஆளு இல்ல. மொள்ளமாறிப் பயலுகளை எல்லாம் கஞ்சா வாங்கிக் குடுத்துக் கையில போட்டுக்கிட்டான். இப்படியேவா போயிரும் இவன் காலம்? எளைச்சவன வலுத்தவன் அடிச்சா வலுத்தவன வல்லூறு அடிக்காதா?" காத்து வழி வருது எல்லாம் கட்டையன் காதுக்கு. சிரிச்சுக்கிர்றான் அவன் சிரிச்சா நல்லால்ல, நரி சிரிச்சா நல்லாவா இருக்கும்?
கொளத்தங்கரையில அன்னைக்கி அப்படி ஒரு சம்பவமாகிப் போகும்னு கட்டையனும் நெனைக்கல ஆடுகளும் நெனைக்கல. களையெடுத்து முடிச்ச சோளக்காட்டப் பாத்துட்டு ஒத்தையில கரை வழியா வாரான் கட்டையன். வந்தவன் கரையிலயே ஒரு கிளுவம் புதரோரம் உக்காந்துட்டான் ஒண்ணுக்கிருக்க. கரை வழியா வந்த செம்பிலி மந்தைகள அவன் கவனிக்கல பாவம். உக்காந்தவன் தன்ன மறந்து தன் நாமம் கெட்டு அந்த இளம் சோகத்துல கரைஞ்சு கண்ண மூடி இருக்க, செம்பிலி ஆடுக ஒண்ணொண்ணாக் கடந்துபோகுதுக அவன் முதுக ஒரசிக்கிட்டு அவன் எந்திரிக்கல. அவனுக்கு என்னா நம்பிக்கைன்னா சொக்கத்தேவன்பட்டி சுத்துவட்டாரத்துல தன்ன முன்னுக்கப் பாத்தாலும் பின்னுக்கப் பாத்தாலும் ஆடு மாடு முதற்கொண்டு அத்தன சீவராசிகளுக்கும் அடையாளம் தெரியும். தான் ஒண்ணுக்கிருக்கிறதப் பாத்தா ஆனையே ஒதுங்கிப் போகுமே, ஆடா ஒதுங்கிப் போகாது? கட்டையன் நம்பிக்கை வீண் போகல. அவனக் கண்டு ஏதோ ஒரு கெட்ட ஆவி உக்காந்திருக் குன்னு எல்லா ஆடுகளும் ஒதுக்கித்தான் போச்சுக ஒரு ஓரமா. மந்தையில மையத்துல வருது பூலித்தேவன். அது கொம்பு நீளம் உடம்பு பெருசு கரை வேற சிறுசு. அது கொஞ்சம் ஒதுங்கிப்போனாலும் கொளத்துல விழுந்திரும். அதனால சித்தம் போக்கு சிவம் போக்குன்னு தன்போக்குல போகுது. அப்பத்தான் அந்தக் கதையாகிப்போச்சு.
கட்டையன அது கடக்க... அந்த நேரம் பாத்து அது மூக்கு மேல ஒரு முள்ளு ஒரச... அந்த அதிர்ச்சியில அது கொம்ப அங்கிட்டும் இங்கிட்டும் ஒரு ஆட்டு ஆட்ட... அது அவன் முதுகுல குத்திச் சட்டையக் கிழிக்க... அவன் என்னமோ ஏதோன்னு எந்திரிச்சுத் திரும்ப... அப்பக் கடந்து போன கனத்த வகுறு அவன எம்பி ஒரு தள்ளுத் தள்ள... நெல குலஞ்சு பள்ளத்துல சரிஞ்சு உருண்டு கத்தாழம் பொதர் ஓரமா காயாத நரகல் மேல விழுந்து போனான் கட்டையன்.
சீ! வேட்டியெல்லாம் ஆகிப்போச்சே வெளிக் கிருந்த பொருள்னு அருவருப்பாகி, உருண்டு பெரண்டு தடால்னு எந்திரிக்க இடுப்புல குத்தி இழுக்குது இண்டம் புதரு. முள்ளப்புடுங்கி எறிஞ்சிட்டு மூக்கு வெடைக்கிற கோபத்துல கரை மேல கண்ணச் செலுத்திப் பாக்குறான் கட்டையன். இந்தச் சம்பவத்துக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல சாமின்னு போயிக்கிட்டேயிருக்கு பூலித்தேவன்.
அஞ்சாறு நாளாவே சொகமில்ல பிள்ளைக்கு. அழுதுக்கிட்டே யிருக்கான் அழகுசிங்கம். ரவ்வும் பகலும் ஒறங்கல சோறுதண்ணி செல்லல இருட்டப் பாத்தா அலறி எந்திரிக்குது பிள்ள. வெளிச்சத்தப் பாத்தாலும் வீல்னு கத்துது. சுட்டுக் கெடக்கு நெத்தி குளுந்து கெடக்கு வகுறு. ஊர்ப்பட்ட மருந்து குடுத்துப் பாத்தா வைத்தியச்சி ஒண்ணும் ஆகல. "இருளடிச்சிருக்கு பிள்ள பயந்துபோயிருக்கு. இனிமே மருந்து மாயம் கேக்காது ஆத்தா மந்திரிச் சாத்தான் கேக்கும்." வைத்தியச்சியே இப்படிச் சொன்னதுக்கு அப்பறம் மறுபேச்சு இருக்கா? பிள்ளையத் தூக்கி நடந்துட்டா வடவீர நாயக்கன்பட்டிக்கு.
வடவீர நாயக்கன்பட்டி நாயக்கரு மந்திரிக்கிறதுல மன்னன். வேப்பங்கொழ நாயக்கருன்னுதான் சொல்றது அவர. சொந்தப் பேரு மறந்துபோற அளவுக்குத் தொழில் பெருத்த கையி. வத்திப் போனாலும் கரையெல்லாம் பச்சை கட்டி நிக்கிற ஆத்தாங்கர மாதிரி வயசானாலும் லட்சணம் மாறாத ஆளு. பச்ச உருமா செவப்புக் கடுக்கன் கரும்புச் சக்கை மாதிரி கனத்த மீசை. கழண்டு விழுந்திர்ற மாதிரி ரெண்டு கண்ணு ஈரக்கொலைய இழுத்து இறுக்கிப் புடிக்கிற பார்வை. கனத்த கம்பளிய விரிச்சு உட்காந்தாரு தாய் மடியில பிள்ளைய உட்காரவச்சாரு. பொங்கப் பானையில புதுத் தண்ணி ஊத்தி ஒடிச்ச வேப்பங்கொழைய ஊறப்போட்டாரு. கண்ண மூடி முணுமுணுமுணுன்னு எதோ மந்திரம் சொன்னாரு. வேப்பங்கொழையச் சட்டுன்னு எடுத்து, பிள்ள மூஞ்சியில தண்ணி தெறிக்க அடிச்சு மந்திரிச்சாரு. வேப்பங்கொழத் தண்ணிய நீ குடி மொதல்லன்னு தாய் குடிக்க வச்சாரு பிள்ளைக்கும் குடுன்னு குடுத்தாரு.
அழுகை அடங்கிப்போச்சு அழகுசிங்கத்துக்கு.
நாயக்கரு மந்திரிச்சதும் குணக் குறி தெரியுதேன்னு குளுந்துபோனா கருவாச்சி மந்திரம் போட்டு மந்திரிச்சதுல புடிச்ச பீடை விட்டுப்போச்சுங்கறது அவ கணக்கு. ஆனா அது இல்ல காரணம். குண்டாச்சட்டியத் தலையில கவுத்த மாதிரி நாயக்கரு கட்டியிருந்த உருமா, சிவீர்ன்னு கண்ணுல அடிக்கிற கடுக்கன், வாய மூடித் தாடையத் தடவுற மீச, அழுதேன்னா கொன்னேபுடு வேன்னு கண்டிப்பாச் சொல்ற கண்ணு... இதுகளை யெல்லாம் பாத்துப் பாத்து இந்தப் புது பயத்துல பழைய பயத்த மறந்துபோனான் பய.
இந்த நெசம் நாயக்கருக்கும் சின்னப்பயலுக்கும் மட்டும்தான் தெரியும். இது தெரியாததனால கண்ணீர் முட்டுது கருவாச்சிக்கு. இன்னதுதான் காணிக்கைங்கிறது இல்ல குடுத்தத வாங்கிக்கிட்டுக் கும்பிட்டு அனுப்பிருவாரு நாயக்கரு.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
"ஏதோ என்னால ஆனது"ன்னு காலே அரைக்கா ரூவா காணிக்கை வச்சா பிள்ளையத் தூக்கிட்டுப் புறப்பட்டு வந்துட்டா
.
வெள்ளையாங்கரட்டுல வெயில் தாந்திருச்சு. கரடுகள்ல ஆடு மாடு மேய்க்க வந்த ஆணும் பொண்ணும் நக்கிலிச்சாம் பாறையில மொது மொதுன்னு வந்து குமுஞ்சுபோச்சுக.
"பாறைக் கறி போடுறாகளாம்...
பாறைக் கறி போடுறாகளாம்..."
ரொம்ப நாளாக் கவுச்சி காணாத நாக்குல எல்லாம் எச்சி ஊறி ஒழுகுது. தின்டுபாத்த ஆளுகளுக்குத்தான் தெரியும் பாறைக் கறி மாதிரி ருசியான கறி அம்பத்தாறு தேசத்துலயும் இருக்க முடியாதுன்னு. அடுப்புங் கெடையாது சட்டியுங் கெடையாது ஆனாலுங் கறி திங்கலாம்.
என்ன பண்ணுவாக தெரியுமா?
ஒரு பாறையில தண்ணி ஊத்திக் கசகசன்னு கழுவி விடுவாக சுத்தமாயிடும் பாறை. பாறையக் காய விட்டு அது மேல கட்டையப் போடுவாக. கட்டையில தீ மூட்டி எரியவிடுவாக. கட்டை எரிய எரியச் சுட்டுப்போகும் பாறை. கட்டை எரியும்போதே, உப்பும் மொளகாத்தூளும் போட்டுப் பச்சைக் கறியப் பெரட்டு பெரட்டுன்னு பெரட்டி வச்சுக்கிரணும். கட்டை எரிஞ்சு ஓஞ்சதும் சாக்க எடுத்து ரெண்டு வீசு வீசுனா சாம்பல் பறந்திரும். கொதிச்சுக் கெடக்குமய்யா பாறை வெரல் தொட்டா நகம் வெந்துபோகும். பெரட்டி வச்ச கறிய அதுல அள்ளி எறியணும். சும்மா சொய்ங் சொய்ங்கிற சத்தத்தோட சுருங்கி வேகும் கறி. எண்ணெயெல்லாம் எதுக்கு? எல்லாக் கறித் துண்டுகள்லயும் உருகுற கொழுப்பு ஓடி ஓடிச் சேரும். வெந்ததும் உள்ளங்கையில எடுத்து ஊதி ஊதி வாயில போட்டா தேவாமிர்தம் தேவாமிர்தம்ங்கிறாகளே அதுகூட இம்புட்டுச் சூடா இருக்கு மான்னு தகவல் இல்ல இது இருக்கும்.
அன்னைக்குப் பாறைக் கறி போட ஆள் சேத்தான் கட்டையன். சுட்டுக்கிட்டிருக்கு பாறை உரிக்கப் போறாங்க ஆட்டை.
"ஏ பக்கிகளா! ஓடிப் போறீகளா இல்ல ஒங்களயும் பாறைக் கறி போட்டுப் பங்கு போடவா?" ஒரு அமட்டு அமட்ட வும், ஆடு மாடு மேய்க்கிற கூட்டம் ஒரே ஓட்டமா ஓடி எட்டி நின்னு வேடிக்கை பாக்குது.
பாறைக் கறி போடக் கொண்டாந்த ஆட்ட சடார்னு சாய்க்குறாக தரையில. அது மிசுங்காம இருக்க, பின்னங் கால் ரெண்டையும் பின்னிக் கொளம்போட கொளம்பு மூட்டி மாட்டிட்டாக. முன்னங்கால் ரெண்டுல ஒரு கால ஒதறவிட்டு, ஒரு கால மட்டும் அமுக்கிக் கிட்டு, பெருவிரல வச்சுக் கழுத்துல ஒரு அழுத்து அழுத்திச் சங்க லேசா ஒதுக்கிட்டு சங்குக்குக் கீழே கத்திவச்சான் சலம்பல் பாண்டி. ஆடு அறுக்கவே பெறந்தவன் அவன். ஆத்தா தொப்பூழ்க் கொடியக்கூட அவ அறுக்குமுன்ன இவன் அறுத்துட்டு வந்தவன்னு பேசுவாக ஊர்ல. அழுத்துன கத்தி அறுத்ததுமே பீச்சியடிக்குது ரத்தம். அமுக்குன ஆளுகளத் தூக்கித் தூக்கிப்போட்டுத் துடிக்குது ஆவி போற ஆடு.
பரம்பரையா ஆடு அறுக்கிறவன் மொத்த ரத்தத்தையும் கத்தி முனையிலேயே வடியவிடுவான் அப்படித்தான் வடியவிட்டான் அவனும். நெம்பிப்போச்சு சருவச்சட்டி. பீச்சியடிச்ச ரத்தவரத்து கம்மியானதும் அறுத்த சங்க மடக்குன்னு ஒடிக்க அது படக்குங்கிற சத்தத்தோட மிச்சமிருந்த ரத்தத்தையும் துப்பிருச்சு துப்பி. அறுபடுற எல்லா ஆட்டுக்கும் மொதல்ல ரத்தம் போயிரும் அப்புறம் சிறுநீர் பிரியும் சிறுநீர் பிரிய உயிரும் போயிரும்.
"உசுர் போயிருச்சு... உசுர் போயிருச்சு..."
எட்டி நின்னு கத்திக் கைதட்டுது ஆடு மாடு மேய்க்கிற கூட்டம்.
"அந்தா பாரு தோல உரிக்கிறாக..." பின்னங்கால் சப்பையில ஆரம்பிச்சுத் தொடை வழி புகுந்து சும்மா ஆகாயத்துல அம்பு போற மாதிரி பரபரபரன்னு பரவுது கத்தி. அதே மாதிரி மறு தொடையிலயும் கத்திவச்சுக் கீறிக் கிழிச்சு, கருவேலங்கிளையில தலைகீழாத் தொங்கவிட்டு என்னமோ வாழப்பழத்த உரிக்கிற மாதிரி மேலயிருந்து உரிச்சு வாரான் தோல. பெருவிரலச் சதையில பதிச்சு அழுத்தி அழுத்தி இழுத்தா சரசரன்னு வந்திரும் தோலு. ஆனா ரெண்டே ரெண்டு எடத்துல மட்டும் வர மாட்டேன்னு வம்பு பண்ணும். ஒண்ணு காயைக் கடக்கும்போது ரெண்டு நெஞ்சத் தாண்டும்போது. அந்த ரெண்டு எடத்துல மட்டும் லேசாக் கத்தி போட்டு ஓட்டை விழுகாம உரிக்கணும். ரெண்டு எடத்துலயும் முத்தம் வைக்கிற மாதிரி கத்தி வச்சு லேசா உருவணும். வெடலப்புள்ள மொதல்மொதல்ல கட்டின சீல அள்ளையில குத்துனா அவுந்திரும் பாருங்க... அப்படிக் கழண்டு துண்டா வந்து விழுந்துபோகும் தோலு. பெருங்கனம் கனக்குது தோலு தோல் மட்டும் பத்து வீச இருக்கும் போலருக்கு.
சும்மா வெண்ணெயப் பூசிவச்ச மாதிரி வெண் சவ்வும் செங்கறியுமாத் தொங்குற ஆட்ட உயிர்த்தலத்துல இருந்து நெஞ்சு வரைக்கும் ஒரு கீறுக் கீறி, அட்டத்துல ரெண்டு பக்கமும் ரெண்டு கீறு கீறவும் குபுக்குன்னு வெளிய வந்திருச்சு கொடலு. பெருங்கொடலச் சுத்திக் கொழுப்போ கொழுப்பு! கொழுப்புல ஒரு கீத்த அறுத்து வாயில போட்டுத் தேங்காச் சில்லு மாதிரி நறுச் நறுச்னு தின்னும் பாத்துக்கிட்டான் சலம்பல் பாண்டி.
கொடலு, ஈரலு, நுரையீரலு மூணையும் எடுத்துத் தனிச் சட்டியில துண்டாப் போட்டுட்டு, கழுத்துக் கறி, முன் சப்பைக் கறி நெஞ்சுக் கறி மூணையும் அறுத்தறுத்துச் சுடுபாறை யில எறியிறான் சலம்பல் பாண்டி. சதை சதையா வந்து விழுகவும் சங்கீதம் படிக்குது பாறை. கறிகறிப்ரியா ராகமோ என்னமோ?
"அண்ணனுக்கு மொதல்ல ஈரலச் சுட்டுக் குடுங்கடா..."
.
வெள்ளையாங்கரட்டுல வெயில் தாந்திருச்சு. கரடுகள்ல ஆடு மாடு மேய்க்க வந்த ஆணும் பொண்ணும் நக்கிலிச்சாம் பாறையில மொது மொதுன்னு வந்து குமுஞ்சுபோச்சுக.
"பாறைக் கறி போடுறாகளாம்...
பாறைக் கறி போடுறாகளாம்..."
ரொம்ப நாளாக் கவுச்சி காணாத நாக்குல எல்லாம் எச்சி ஊறி ஒழுகுது. தின்டுபாத்த ஆளுகளுக்குத்தான் தெரியும் பாறைக் கறி மாதிரி ருசியான கறி அம்பத்தாறு தேசத்துலயும் இருக்க முடியாதுன்னு. அடுப்புங் கெடையாது சட்டியுங் கெடையாது ஆனாலுங் கறி திங்கலாம்.
என்ன பண்ணுவாக தெரியுமா?
ஒரு பாறையில தண்ணி ஊத்திக் கசகசன்னு கழுவி விடுவாக சுத்தமாயிடும் பாறை. பாறையக் காய விட்டு அது மேல கட்டையப் போடுவாக. கட்டையில தீ மூட்டி எரியவிடுவாக. கட்டை எரிய எரியச் சுட்டுப்போகும் பாறை. கட்டை எரியும்போதே, உப்பும் மொளகாத்தூளும் போட்டுப் பச்சைக் கறியப் பெரட்டு பெரட்டுன்னு பெரட்டி வச்சுக்கிரணும். கட்டை எரிஞ்சு ஓஞ்சதும் சாக்க எடுத்து ரெண்டு வீசு வீசுனா சாம்பல் பறந்திரும். கொதிச்சுக் கெடக்குமய்யா பாறை வெரல் தொட்டா நகம் வெந்துபோகும். பெரட்டி வச்ச கறிய அதுல அள்ளி எறியணும். சும்மா சொய்ங் சொய்ங்கிற சத்தத்தோட சுருங்கி வேகும் கறி. எண்ணெயெல்லாம் எதுக்கு? எல்லாக் கறித் துண்டுகள்லயும் உருகுற கொழுப்பு ஓடி ஓடிச் சேரும். வெந்ததும் உள்ளங்கையில எடுத்து ஊதி ஊதி வாயில போட்டா தேவாமிர்தம் தேவாமிர்தம்ங்கிறாகளே அதுகூட இம்புட்டுச் சூடா இருக்கு மான்னு தகவல் இல்ல இது இருக்கும்.
அன்னைக்குப் பாறைக் கறி போட ஆள் சேத்தான் கட்டையன். சுட்டுக்கிட்டிருக்கு பாறை உரிக்கப் போறாங்க ஆட்டை.
"ஏ பக்கிகளா! ஓடிப் போறீகளா இல்ல ஒங்களயும் பாறைக் கறி போட்டுப் பங்கு போடவா?" ஒரு அமட்டு அமட்ட வும், ஆடு மாடு மேய்க்கிற கூட்டம் ஒரே ஓட்டமா ஓடி எட்டி நின்னு வேடிக்கை பாக்குது.
பாறைக் கறி போடக் கொண்டாந்த ஆட்ட சடார்னு சாய்க்குறாக தரையில. அது மிசுங்காம இருக்க, பின்னங் கால் ரெண்டையும் பின்னிக் கொளம்போட கொளம்பு மூட்டி மாட்டிட்டாக. முன்னங்கால் ரெண்டுல ஒரு கால ஒதறவிட்டு, ஒரு கால மட்டும் அமுக்கிக் கிட்டு, பெருவிரல வச்சுக் கழுத்துல ஒரு அழுத்து அழுத்திச் சங்க லேசா ஒதுக்கிட்டு சங்குக்குக் கீழே கத்திவச்சான் சலம்பல் பாண்டி. ஆடு அறுக்கவே பெறந்தவன் அவன். ஆத்தா தொப்பூழ்க் கொடியக்கூட அவ அறுக்குமுன்ன இவன் அறுத்துட்டு வந்தவன்னு பேசுவாக ஊர்ல. அழுத்துன கத்தி அறுத்ததுமே பீச்சியடிக்குது ரத்தம். அமுக்குன ஆளுகளத் தூக்கித் தூக்கிப்போட்டுத் துடிக்குது ஆவி போற ஆடு.
பரம்பரையா ஆடு அறுக்கிறவன் மொத்த ரத்தத்தையும் கத்தி முனையிலேயே வடியவிடுவான் அப்படித்தான் வடியவிட்டான் அவனும். நெம்பிப்போச்சு சருவச்சட்டி. பீச்சியடிச்ச ரத்தவரத்து கம்மியானதும் அறுத்த சங்க மடக்குன்னு ஒடிக்க அது படக்குங்கிற சத்தத்தோட மிச்சமிருந்த ரத்தத்தையும் துப்பிருச்சு துப்பி. அறுபடுற எல்லா ஆட்டுக்கும் மொதல்ல ரத்தம் போயிரும் அப்புறம் சிறுநீர் பிரியும் சிறுநீர் பிரிய உயிரும் போயிரும்.
"உசுர் போயிருச்சு... உசுர் போயிருச்சு..."
எட்டி நின்னு கத்திக் கைதட்டுது ஆடு மாடு மேய்க்கிற கூட்டம்.
"அந்தா பாரு தோல உரிக்கிறாக..." பின்னங்கால் சப்பையில ஆரம்பிச்சுத் தொடை வழி புகுந்து சும்மா ஆகாயத்துல அம்பு போற மாதிரி பரபரபரன்னு பரவுது கத்தி. அதே மாதிரி மறு தொடையிலயும் கத்திவச்சுக் கீறிக் கிழிச்சு, கருவேலங்கிளையில தலைகீழாத் தொங்கவிட்டு என்னமோ வாழப்பழத்த உரிக்கிற மாதிரி மேலயிருந்து உரிச்சு வாரான் தோல. பெருவிரலச் சதையில பதிச்சு அழுத்தி அழுத்தி இழுத்தா சரசரன்னு வந்திரும் தோலு. ஆனா ரெண்டே ரெண்டு எடத்துல மட்டும் வர மாட்டேன்னு வம்பு பண்ணும். ஒண்ணு காயைக் கடக்கும்போது ரெண்டு நெஞ்சத் தாண்டும்போது. அந்த ரெண்டு எடத்துல மட்டும் லேசாக் கத்தி போட்டு ஓட்டை விழுகாம உரிக்கணும். ரெண்டு எடத்துலயும் முத்தம் வைக்கிற மாதிரி கத்தி வச்சு லேசா உருவணும். வெடலப்புள்ள மொதல்மொதல்ல கட்டின சீல அள்ளையில குத்துனா அவுந்திரும் பாருங்க... அப்படிக் கழண்டு துண்டா வந்து விழுந்துபோகும் தோலு. பெருங்கனம் கனக்குது தோலு தோல் மட்டும் பத்து வீச இருக்கும் போலருக்கு.
சும்மா வெண்ணெயப் பூசிவச்ச மாதிரி வெண் சவ்வும் செங்கறியுமாத் தொங்குற ஆட்ட உயிர்த்தலத்துல இருந்து நெஞ்சு வரைக்கும் ஒரு கீறுக் கீறி, அட்டத்துல ரெண்டு பக்கமும் ரெண்டு கீறு கீறவும் குபுக்குன்னு வெளிய வந்திருச்சு கொடலு. பெருங்கொடலச் சுத்திக் கொழுப்போ கொழுப்பு! கொழுப்புல ஒரு கீத்த அறுத்து வாயில போட்டுத் தேங்காச் சில்லு மாதிரி நறுச் நறுச்னு தின்னும் பாத்துக்கிட்டான் சலம்பல் பாண்டி.
கொடலு, ஈரலு, நுரையீரலு மூணையும் எடுத்துத் தனிச் சட்டியில துண்டாப் போட்டுட்டு, கழுத்துக் கறி, முன் சப்பைக் கறி நெஞ்சுக் கறி மூணையும் அறுத்தறுத்துச் சுடுபாறை யில எறியிறான் சலம்பல் பாண்டி. சதை சதையா வந்து விழுகவும் சங்கீதம் படிக்குது பாறை. கறிகறிப்ரியா ராகமோ என்னமோ?
"அண்ணனுக்கு மொதல்ல ஈரலச் சுட்டுக் குடுங்கடா..."
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
"தின்னும்போதே ரத்தம் ஊறுதடா"ன்னு வெறியேறிப் பேசுறான் கட்டையன்.
அப்புறம் என்ன சொல்ல! காடே கறி மணக்குது சாராயத்த ஊத்தித் தாளிச்சுப்பிட்டாங்க தாளிச்சு. வடவீர நாயக்கன் பட்டியில மந்திரிச்சு, பொடி நடையாப் பொழுசாய வீடு வந்து சேந்தகருவாச்சி பிள்ளையப் படுக்கப் போட்டுட்டு அடுப்புக் கூட்ட ஆரம்பிச்சா. நெய் மாதிரி லேசாச் சீமத்தண்ணி தெளிச்சுப் பருத்திமாரப் பத்தவச்சா. மேயப்போன தொழுமாடுகளும் மந்தையாடுகளும் ஊருக்குள்ள வந்திருச்சுக. மாட்டு மணிச் சத்தத்துல அந்தச் சாயங்காலமே நெம்பி வழியுது. இவ வீட்டு மாடு கன்டு மட்டும் காங்கல பூலித்தேவனும் வரல கொண்ண வாயனும் வந்து சேரல. புல்லுகில்லு சேத்துப் பொழுது போயி வருவான்னு இருந்தவளுக்கும் நேரம் ஆக ஆக நெஞ்சு பதறுது.
வாசலப் பாக்குறா வாசலத் தாண்டித் தெருவுக்கு ஓடி வாரா. தெருவுக்கு வந்து வந்து திரும்பித் திரும்பிப் போறா. வரல வர்ற அறிகுறியும் தெரியல. நல்லா இருட்டிருச்சு.தண்ணியக்கூட பத்தவச்சிரலாம், என்னியப் பத்தவைக்க முடியாதுன்னு முரண்டுபண்ற காடா வெளக்கத் திரியத் திரிச்சுவிட்டு, அடுப்புல கெடந்த நெருப்பெடுத்து அவ பத்தவைக்க... தெறந்த வாசல்ல தொப்புட்டீர்னு விழுந்துச்சு என்னமோ. என்னாது அது? நனஞ்ச சீலமாதிரி என்னமோ விழுந்துகெடக்கே. கையில புடிச்ச வெளக்கோட ஓடிவந்து பாத்தா. நெளிநெளிநெளின்னு கெடக்கு ஒரு பொருள் தரையில.
தொட்டுப் பாத்தா தோலு. எடுத்துப் பாத்தா ஆட்டுத் தோலு மோந்து பாத்தா "பூலித்தேவா!"
உசுர் கிழியக் கத்துனவ தோல் மேல மயக்கம் போட்டு விழுந்துட்டா மல்லாக்கா. விளக்கவிட்டு வெளிய குதிச்சு வாயிலயும் வயித்துலயும் அடிச்சுத் துடிச்சுத் துடிச்சு எரியுது திரியில இருந்த தீபக்கொழுந்து!
குய்யோ முறையோன்னு ஊரே கூடி நிக்குது கட்டையன் வீட்டு வாசல்ல. தகவல் தெரிஞ்சு மொதலக்கம்பட்டி ஆளுக வேற சாமியாடி வந்துட்டாக சண்ட புடிக்க.
"பொறுமையா இருங்கப்பா"ன்னு சொல்லிப்பாக்குதுக உள்ளூர்ப் பெருசுக.
"பொறுமை என்னய்யா பொறுமை. இன்னைக்கி ஆட்டக் கடிச்சான் நாளைக்கி மாட்டக் கடிச்சு மனு சனக் கடிப்பான்.பாத்துக்கிட்டே பல்லாங் குழி ஆடச் சொல்றீகளா?"
"பதறாதீகப்பா. பஞ்சாயத்துல பேசிக் கிருவோம்."
"பஞ்சாயத்தென் னய்யா பஞ்சாயத்து? ஒலக்கையக் கள வாண்டு புட்டான்னு பிராது குடுத்தா, துரும்பு அபராதம்னு தீர்ப்புச் சொல்ற பஞ்சாயத்து. விடுங்கய்யா, தகப்பனையும் மகனையும் சேத்துப் பாறைக்கறி போட்டு, காக்கா நீ தின்னு, கழுகு நீ தின்னுன்னு பரசி விட்டுப் போயிர்றோம் பரசி."
இம்புட்டுச் சலம்பல் நடக்குது. தகப்பனும் மகனும் வீட்டுக்குள்ள இருக்காங்களே தவிர வெளியே வந்தபாடக் காணம்.
"ஏ கூப்பிடுங்கடா அவன, இல்ல உள்ள வந்து கொல்லுவோம்."
"ஏம்ப்பா இந்தத் தவ்வுத் தவ்வுறீகளே, கொலக்குத்தமா ஆகிப்போச்சு?"
"ஒன் வீட்டு ஆட்ட நீ வெட்டிக்கிட்டா அது கொலை இல்ல என் வீட்டு ஆட்ட நீ வெட்னா அது கொலதான்."
கிறீச்னு தொறக்குது தலவாசக் கதவு. என்னமோ விருந்துக்கு வந்தவுகள விசாரிக்க வந்த மாதிரி சத்தமில்லாம நடந்து வாராரு சடையத்தேவரு. அவர் வழக்கமா வெத்தல இடிக்கிற கல்லுமேல தன்ன இடுப்புக்குக் கீழ கொஞ்சங் கொஞ்சமா எறக்கிவச்சு உக்காந்துட்டாரு. பையில இருந்த பாக்க எடுத்து வெத்தல ஒரல்ல போட்டு டொக்கு டொக்குனு தட்டிக்கிட்டே கேக்குறாரு: "ஆடு சுட்டுத் தின்டவன் என் மகன் தான்னு சாட்சி இருக்கா?"
"சாட்சி வேணுமா சாட்சி... வரச் சொல்லு ஒன் மகன வகுத்த வகுந்து உள்ளயிருக்குற ஈரல எடுத்து இந்தான்னு காமிக்கிறோம்."
"இருக்கலாம்... ஈரல்கூட இருக்கலாம். அது ஒங்க வீட்டு ஆடுன்னு எழுதியிருக்குமா ஈரல் மேல."
"யப்பா சடையத்தேவா! நீ வாய் பெருத்த ஆளு வக்கீல் மாதிரி பேசுவ. சாட்சி இல்லாம நியாயம் கேக்க வர மாட்டமப்பா" உருமாப் பெருமாத் தேவரு பொறுப்பா பதில் சொல்ல,
"என்ன சாட்சி?"னு சாணியில விழுந்த மறு மாத்தத்த எடுக்கிற மாதிரி சடையத்தேவரு அலட்சியமாக் கேட்கவும் கடுப்பாகிப் போனாரு காவக்கார சக்கணன்.
"கொண்ணவாயன அடிச்சு உப்பந்தரிசு ஓடையில போட்டது, மாடுகளப் புடிச்சு ஒடசாலி மரத்துல கட்டி வச்சது, கருவாச்சி கெடாய நக்கிலிச்சான் பாறையில வெட்டிப் பாறைக்கறி போட்டது எல்லாத்துக்கும் கண்ல பாத்த சாட்சி இருக்கு. என்னமோ நாங்கள்லாம் கேணப் பயக மாதிரி கிறுக்குக் குத்தாத பெருசு".
"இப்ப எல்லாரும் கூடி எதுக்கு வந்திருக்கீக?"
"தண்டம் வாங்க வந்திருக்கோம்" உள்ளூர்ப் பெருசு நிதானமாகச் சொல்ல, "தண்டத்த நீங்க வாங்கிக்கங்க, அவன் தலைய நாங்க வாங்கிக்கிறோம்"னு மொதலக்கம்பட்டி ஆளுகள்ல ஒருத்தன் எருமைத் தொண்டையில கரகரன்னு பேச, "எவன் தலையடா வாங்குவீக?"ன்னு வீச்சரிவாளோட வெளிய தவ்வி வந்துட்டான் கட்டையன்.
அதுக்குள்ள அவன் கைத்தடி களுக்குத் தகவல் போயி வேல்கம்பு வெட்டரிவாளோட வந்து குமுஞ்சு போனாக. அவன் ஒண்ணு சொல்ல, இவுக ஒண்ணு சொல்ல, அவன் அரிவாள் எடுக்க, இவுக சூரிய எடுக்க "வேணாம்டா வெட்டுப்பலி குத்துப்பலி ஆகிப்போச்சுன்னா ஏழு தலமொறைக் கும் எந்திரிக்க முடியாதடா"ன்னு பெருசுக சத்தம் போட்டு அமத்த, கடைசியில பதிமூணே கால் ரூவா தண்டத்தோட முடிஞ்சுபோச்சு பஞ்சாயத்து.
காளியம்மன் கோயில் வாசல்ல மொனையில்லாத மம்பட்டி, மூக்கில்லாத கடப்பாரைய வச்சுக் கண்ணீரு ஒழுக ஒழுகக் குழி தோண்டிக்கிட்டிருக்கா கருவாச்சி. கால்சட்ட வழியா ஒண்ணுக்குப் போயிக்கிட்டு மூக்கு ஒழுக அழுது நிக்கிறான் சின்னப் பய அழகுசிங்கம். பொணங் கெடக்குற மாதிரி அட்டத்துலேயே கெடக்கு பூலித்தேவன் தோலு.
அப்புறம் என்ன சொல்ல! காடே கறி மணக்குது சாராயத்த ஊத்தித் தாளிச்சுப்பிட்டாங்க தாளிச்சு. வடவீர நாயக்கன் பட்டியில மந்திரிச்சு, பொடி நடையாப் பொழுசாய வீடு வந்து சேந்தகருவாச்சி பிள்ளையப் படுக்கப் போட்டுட்டு அடுப்புக் கூட்ட ஆரம்பிச்சா. நெய் மாதிரி லேசாச் சீமத்தண்ணி தெளிச்சுப் பருத்திமாரப் பத்தவச்சா. மேயப்போன தொழுமாடுகளும் மந்தையாடுகளும் ஊருக்குள்ள வந்திருச்சுக. மாட்டு மணிச் சத்தத்துல அந்தச் சாயங்காலமே நெம்பி வழியுது. இவ வீட்டு மாடு கன்டு மட்டும் காங்கல பூலித்தேவனும் வரல கொண்ண வாயனும் வந்து சேரல. புல்லுகில்லு சேத்துப் பொழுது போயி வருவான்னு இருந்தவளுக்கும் நேரம் ஆக ஆக நெஞ்சு பதறுது.
வாசலப் பாக்குறா வாசலத் தாண்டித் தெருவுக்கு ஓடி வாரா. தெருவுக்கு வந்து வந்து திரும்பித் திரும்பிப் போறா. வரல வர்ற அறிகுறியும் தெரியல. நல்லா இருட்டிருச்சு.தண்ணியக்கூட பத்தவச்சிரலாம், என்னியப் பத்தவைக்க முடியாதுன்னு முரண்டுபண்ற காடா வெளக்கத் திரியத் திரிச்சுவிட்டு, அடுப்புல கெடந்த நெருப்பெடுத்து அவ பத்தவைக்க... தெறந்த வாசல்ல தொப்புட்டீர்னு விழுந்துச்சு என்னமோ. என்னாது அது? நனஞ்ச சீலமாதிரி என்னமோ விழுந்துகெடக்கே. கையில புடிச்ச வெளக்கோட ஓடிவந்து பாத்தா. நெளிநெளிநெளின்னு கெடக்கு ஒரு பொருள் தரையில.
தொட்டுப் பாத்தா தோலு. எடுத்துப் பாத்தா ஆட்டுத் தோலு மோந்து பாத்தா "பூலித்தேவா!"
உசுர் கிழியக் கத்துனவ தோல் மேல மயக்கம் போட்டு விழுந்துட்டா மல்லாக்கா. விளக்கவிட்டு வெளிய குதிச்சு வாயிலயும் வயித்துலயும் அடிச்சுத் துடிச்சுத் துடிச்சு எரியுது திரியில இருந்த தீபக்கொழுந்து!
குய்யோ முறையோன்னு ஊரே கூடி நிக்குது கட்டையன் வீட்டு வாசல்ல. தகவல் தெரிஞ்சு மொதலக்கம்பட்டி ஆளுக வேற சாமியாடி வந்துட்டாக சண்ட புடிக்க.
"பொறுமையா இருங்கப்பா"ன்னு சொல்லிப்பாக்குதுக உள்ளூர்ப் பெருசுக.
"பொறுமை என்னய்யா பொறுமை. இன்னைக்கி ஆட்டக் கடிச்சான் நாளைக்கி மாட்டக் கடிச்சு மனு சனக் கடிப்பான்.பாத்துக்கிட்டே பல்லாங் குழி ஆடச் சொல்றீகளா?"
"பதறாதீகப்பா. பஞ்சாயத்துல பேசிக் கிருவோம்."
"பஞ்சாயத்தென் னய்யா பஞ்சாயத்து? ஒலக்கையக் கள வாண்டு புட்டான்னு பிராது குடுத்தா, துரும்பு அபராதம்னு தீர்ப்புச் சொல்ற பஞ்சாயத்து. விடுங்கய்யா, தகப்பனையும் மகனையும் சேத்துப் பாறைக்கறி போட்டு, காக்கா நீ தின்னு, கழுகு நீ தின்னுன்னு பரசி விட்டுப் போயிர்றோம் பரசி."
இம்புட்டுச் சலம்பல் நடக்குது. தகப்பனும் மகனும் வீட்டுக்குள்ள இருக்காங்களே தவிர வெளியே வந்தபாடக் காணம்.
"ஏ கூப்பிடுங்கடா அவன, இல்ல உள்ள வந்து கொல்லுவோம்."
"ஏம்ப்பா இந்தத் தவ்வுத் தவ்வுறீகளே, கொலக்குத்தமா ஆகிப்போச்சு?"
"ஒன் வீட்டு ஆட்ட நீ வெட்டிக்கிட்டா அது கொலை இல்ல என் வீட்டு ஆட்ட நீ வெட்னா அது கொலதான்."
கிறீச்னு தொறக்குது தலவாசக் கதவு. என்னமோ விருந்துக்கு வந்தவுகள விசாரிக்க வந்த மாதிரி சத்தமில்லாம நடந்து வாராரு சடையத்தேவரு. அவர் வழக்கமா வெத்தல இடிக்கிற கல்லுமேல தன்ன இடுப்புக்குக் கீழ கொஞ்சங் கொஞ்சமா எறக்கிவச்சு உக்காந்துட்டாரு. பையில இருந்த பாக்க எடுத்து வெத்தல ஒரல்ல போட்டு டொக்கு டொக்குனு தட்டிக்கிட்டே கேக்குறாரு: "ஆடு சுட்டுத் தின்டவன் என் மகன் தான்னு சாட்சி இருக்கா?"
"சாட்சி வேணுமா சாட்சி... வரச் சொல்லு ஒன் மகன வகுத்த வகுந்து உள்ளயிருக்குற ஈரல எடுத்து இந்தான்னு காமிக்கிறோம்."
"இருக்கலாம்... ஈரல்கூட இருக்கலாம். அது ஒங்க வீட்டு ஆடுன்னு எழுதியிருக்குமா ஈரல் மேல."
"யப்பா சடையத்தேவா! நீ வாய் பெருத்த ஆளு வக்கீல் மாதிரி பேசுவ. சாட்சி இல்லாம நியாயம் கேக்க வர மாட்டமப்பா" உருமாப் பெருமாத் தேவரு பொறுப்பா பதில் சொல்ல,
"என்ன சாட்சி?"னு சாணியில விழுந்த மறு மாத்தத்த எடுக்கிற மாதிரி சடையத்தேவரு அலட்சியமாக் கேட்கவும் கடுப்பாகிப் போனாரு காவக்கார சக்கணன்.
"கொண்ணவாயன அடிச்சு உப்பந்தரிசு ஓடையில போட்டது, மாடுகளப் புடிச்சு ஒடசாலி மரத்துல கட்டி வச்சது, கருவாச்சி கெடாய நக்கிலிச்சான் பாறையில வெட்டிப் பாறைக்கறி போட்டது எல்லாத்துக்கும் கண்ல பாத்த சாட்சி இருக்கு. என்னமோ நாங்கள்லாம் கேணப் பயக மாதிரி கிறுக்குக் குத்தாத பெருசு".
"இப்ப எல்லாரும் கூடி எதுக்கு வந்திருக்கீக?"
"தண்டம் வாங்க வந்திருக்கோம்" உள்ளூர்ப் பெருசு நிதானமாகச் சொல்ல, "தண்டத்த நீங்க வாங்கிக்கங்க, அவன் தலைய நாங்க வாங்கிக்கிறோம்"னு மொதலக்கம்பட்டி ஆளுகள்ல ஒருத்தன் எருமைத் தொண்டையில கரகரன்னு பேச, "எவன் தலையடா வாங்குவீக?"ன்னு வீச்சரிவாளோட வெளிய தவ்வி வந்துட்டான் கட்டையன்.
அதுக்குள்ள அவன் கைத்தடி களுக்குத் தகவல் போயி வேல்கம்பு வெட்டரிவாளோட வந்து குமுஞ்சு போனாக. அவன் ஒண்ணு சொல்ல, இவுக ஒண்ணு சொல்ல, அவன் அரிவாள் எடுக்க, இவுக சூரிய எடுக்க "வேணாம்டா வெட்டுப்பலி குத்துப்பலி ஆகிப்போச்சுன்னா ஏழு தலமொறைக் கும் எந்திரிக்க முடியாதடா"ன்னு பெருசுக சத்தம் போட்டு அமத்த, கடைசியில பதிமூணே கால் ரூவா தண்டத்தோட முடிஞ்சுபோச்சு பஞ்சாயத்து.
காளியம்மன் கோயில் வாசல்ல மொனையில்லாத மம்பட்டி, மூக்கில்லாத கடப்பாரைய வச்சுக் கண்ணீரு ஒழுக ஒழுகக் குழி தோண்டிக்கிட்டிருக்கா கருவாச்சி. கால்சட்ட வழியா ஒண்ணுக்குப் போயிக்கிட்டு மூக்கு ஒழுக அழுது நிக்கிறான் சின்னப் பய அழகுசிங்கம். பொணங் கெடக்குற மாதிரி அட்டத்துலேயே கெடக்கு பூலித்தேவன் தோலு.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
"நான் ஒன்னிய ஏய்க்க நெனைக்கல நீ என்னிய ஏச்சுப்பிட்டியே ஆத்தா. வளத்த பாசத்துல புத்தி மாறிட்டேன் வெட்ட மாட்டேன், விட்ருன்னேன். வெட்டவச்சுட்டியே. ஒன் வாசல்ல வந்து கெடா அறுத்திருந்தா ரத்தம் ஒனக்கு கறி எங்களுக்கு. இப்ப ஒனக்குக் காணிக்கை செலுத்த நான் புடிச்சு வளத்த பூலித்தேவன் தோல்தானாத்தா இருக்கு இந்தா ஏத்துக்க."தோலத் தூக்கிக் கடைசியா ஒரு தடவ மோந்து பாத்துட்டு அதுல மஞ்சத் தண்ணி தெளிச்சுக் கும்புட்டுப் போட்டா குழியில அழுதா. "வாடா மகனே"னு அவன இழுத்துப் பெறங்கையில மண்ணுத் தள்ளவச்சா. மிச்ச மண்ண மம்பட்டிவச்சு இழுத்தா குழிய மூடுனா. மம்பட்டிய எறிஞ்சிட்டு தலைப்பிள்ளையப் புதைச்சவ மாதிரி தலையில அடிச்சு அடிச்சு ஒப்புச் சொல்லிஅழுதா.
"பெத்தெடுத்து நான் வளத்த
பெரியமகன் மண்ணுத் தள்ள
தத்தெடுத்து நான் வளத்த
தங்கமகன் காங்கலையே!
புல்லு மணம் மாறலையே!
புழுக்கை இன்னும் காயலையே!
காயடிச்ச பிள்ளையப் போய்
நாயடிச்சுத் தின்னுருச்சே!
பெறவின்னு ஒண்ணிருந்தா
பிள்ளையாக நீ வாடா!
ஆடாகப் பெறந்தாலும்
அடிவயித்தில் சுமப்பனடா!"
குழி மேல விழுந்து அழுது கெடந்தவளப் பதறிப்போயித் தூக்குனாக பஞ்சாயத்துக்குப் போயி வந்த ஆளுக. "ஆத்தா செத்தே பொழச்சுக் காமிக்கிறவ ஆடு செத்தாப் பொழைக்க மாட்டியா? எந்திரி தாயி எந்திரி."
அவ கையில குடுத்த தண்டப் பணம் பதிமூணே கால் ரூவாயையும் காளியம்மன் கோயில் உண்டியல்ல போட்டுக் கண்ணத் தொடைச்சுக் கிட்டா கருவாச்சி. "பிள்ளைக்கும் சொகமில்ல ஒன் ஒடம்பும் சுடுது. வா எங்க வீட்டுல வந்து ரெண்டு நா இரு வா."
கனகாம்பரமும் பவளமும் கருவாச்சியக் கூட்டிட்டுப் போறாக கையோட.
"அழுகாதடா மகனே!"அழுகுசிங்கத்தத் தூக்கித் தோள்ல வச்சுக்கிட்டான் மொதலக்கம்பட்டி அன்னக்கொடி கருவாச்சியக் கட்டிக்கிற வேண்டிய மொறமாமன். மொதலக்கம்பட்டி அன்னக்கொடி நல்ல வளத்தி. ஆள் கறுப்புன்னாலும் அம்சமான அழகன். சின்ன வயசுல ஊளமூக்கு ஒழுக கருவாச்சிய மொதலக்கம்பட்டிக் குத் தூக்கிட்டுப் போறப்பவெல்லாம் "அந்தா பணியாரம் கேட்டு ஆத்தாகிட்ட அழுதுக்கிட்டிருக் கான் பாரு. அவன் தான்டி ஒம் புருசன்"னு அன்னக்கொடியக் காமிப்பா பெரியமூக்கி. குடும்பம் இடையில நொந்து நொடிச்சுப் போச்சு பஞ்சம் பொழைக்க, வடக்க கண்காணாத தேசத்துக்குப் போயித் தகவல் அத்துப் போச்சு. உண்மையா ஒழச்சு, நேர்மையாப் பொழைச்சு முறுக்குச் சுட்டு வித்து நிமிந்திருச்சு குடும்பம். காலுக்குச் செருப்பு, கைக்குக் கடிகாரம்னு ஏகத் தடபுடலாகி சொந்த ஊருக்குத் திரும்பி நெலபுலம் வாங்கி வட்டிவாசிக்கெல்லாம் குடுத்து, வாழ்வு பெருத்துப்போனாலும், பழைய பந்தம் பாசம் உறவு மட்டும் கரையாத கல்லா நெஞ்சுக்குழியிலயே கெடக்கு.
சுப்பஞ் செட்டியார் வீட்டு உள் திண்ணையில உக்காந்து அழகுசிங்கத்தை இழுத்து மடியில உக்காரவச்சுக்கிட்டு "முட்டாயி வாங்கிக்கடா மகனே முட்டாயி"ன்னு உள் பையில கைய விட்டு எட்டணாவ எடுத்து நீட்னான் அன்னக்கொடி. வாங்கக் கைய நீட்டிட்டு அன்னக் கொடிய ஒரு பார்வை, ஆத்தாள ஒரு பார்வை மாத்திமாத்திப் பாத்தான் அழகுசிங்கம்.
"நாங்க அசலாள் இல்லப்பா, ஒன் சித்தப்பன்தான் வாங்கிக்கடா ராசா வாங்கிக்க."
காசை அவன் சட்டைப் பையில போட்டுவிட்டுக் கண்ணையும் தொடச்சு விட்டான்.
"அழுகப் பெறந்த வம்ச மாடா, நீயும் ஒங்க ஆத்தாளும்? ஆம்பள இல்லாத வீடுன்னுதானடாஆட்டப் புலி அடிச்சுப் புடுச்சு. ஒன் சித்தப்பன் ஒன்கூடவே இருக்கேன்னு வச்சுக்க... இது நடந்திருக்குமா? ஒங்க வீட்டுச் சாணியிலயாச்சும் ஈ ஒட்டியிருக்குமா?"
கதவுல முதுகு சாச்சுக் கால்நீட்டி உள்வீட்டுல ஒக்காந்திருந்த கருவாச்சிக்குத் துணுக்குன்னுச்சு.
அவன் இன்னும் சத்தம் கூட்டிப் பேசுறான்... காது கேக்கட்டும் கருவாச்சிக் குன்னு. "எச்சிபட்டுப் பண்டம் பழுதாகிப் போச்சுன்னு நான் நெனைக்கலப்பா பொதைச்சு வச்சு எடுத்தாலும் தங்கம் தங்கந்தானடா மகனே. ஏங்கூடவே இருந்திர்றியா?"
பையில போட்ட துட்ட எடுத்துத் தொட்டுத் தொட்டுப் பாத்துக்கிட்டு ஆகட்டும்னு தலையாட்டினான் அழகுசிங்கம்.
உள்ளயிருந்து கத்திச் சொன்னா கருவாச்சி, "துட்டத் திருப்பிச் சித்தப்பன் பையிலயே போட்டுர்றா செல்லம்."
அவன் போடல கையில வச்சுக்கிட்டுக் கனாக் கண்டுக்கிட்டே யிருக்கான்.
"நீ வெவரமாயிருக்க. ஆத்தாளுக்குத் தான் பத்தாது... சின்ன வயசுலயே மனசுல முடிச்சுப் போட்டு விட்டாகளா... அவுத்தாலும் அவுக்க முடியல அத்தாலும் அக்க முடியல. மனசு மறுகுதடா மகனே. வசதி இருக்குடா சித்தப்பனுக்கு வந்திரு. அப்பன் நானிருக்க நீங்க அனாதை ஆகலா மாடா? நாளப்பின்னப் பள்ளிக்கூடத்துல போயிச் சேரப் போறன்னு வச்சுக்க ஒம் பேரு என்னான்னு கேட்டா என்ன சொல்லுவ?"
எழுத்துக்கூட்டி எழுத்துக்கூட்டி அந்தச் சின்னப்பய சொன்னான், "அ...ல...கு... சி...ங்...க...ம்..."
"சரி... என்னா அழுகுசிங்கம்னா என்ன சொல்லுவ?" பய மேலயும் கீழயும் முழிச்சான். உள்ளயிருந்து ஆத்தாகாரி கத்துனா "க.அழகுசிங்கம்!"
இதெல்லாம் கேட்டுக்கிட்டேயிருந்த பவளம் இப்ப உள்ள புகுந்தா. "இன்னும் பழச மறக்கல போலருக்கு. க... கட்டையன் தானே.?"
"இல்ல கருவாச்சி."
கொஞ்சநேரம் அது ஆளில்லாத வீடா அமைதியாகிப்போச்சு.
"குடுத்த துட்ட சித்தப்பன் பையில போடுறா"ன்னு போடச் சொல்லிட்டு, அவன அடிச்சு இழுத்துத் தூக்கி உள்ள ஓடிப்போனா கருவாச்சி.
சொக்கத்தேவன் பட்டியக் கடக்கிற வரைக் கும் அன்னக்கொடி குனிஞ்ச தல நிமிரல. கண்ணுல விழுந்த தூசியத் தொடைக்கிறவன் மாதிரி கண்ணீரையும் தொடைச் சுக்கிட்டான், தலையில கட்டுன துண்ட அவுத்து. அவ பொழப்புக்குள்ள வந்த ஒரு நல்ல ஆத்மாவும் வேட்டிய மடிச்சுக் கட்டிக் கிட்டுப் பொடி நடையாப் போயிருச்சு.
ரெண்டாம் நாளு கருவாச்சி லேசாப் பேச்சு குடுத்தா: "ஒம் புருசன் இங்க வாரதே இல்லையா கனகம்?"
"பெத்தெடுத்து நான் வளத்த
பெரியமகன் மண்ணுத் தள்ள
தத்தெடுத்து நான் வளத்த
தங்கமகன் காங்கலையே!
புல்லு மணம் மாறலையே!
புழுக்கை இன்னும் காயலையே!
காயடிச்ச பிள்ளையப் போய்
நாயடிச்சுத் தின்னுருச்சே!
பெறவின்னு ஒண்ணிருந்தா
பிள்ளையாக நீ வாடா!
ஆடாகப் பெறந்தாலும்
அடிவயித்தில் சுமப்பனடா!"
குழி மேல விழுந்து அழுது கெடந்தவளப் பதறிப்போயித் தூக்குனாக பஞ்சாயத்துக்குப் போயி வந்த ஆளுக. "ஆத்தா செத்தே பொழச்சுக் காமிக்கிறவ ஆடு செத்தாப் பொழைக்க மாட்டியா? எந்திரி தாயி எந்திரி."
அவ கையில குடுத்த தண்டப் பணம் பதிமூணே கால் ரூவாயையும் காளியம்மன் கோயில் உண்டியல்ல போட்டுக் கண்ணத் தொடைச்சுக் கிட்டா கருவாச்சி. "பிள்ளைக்கும் சொகமில்ல ஒன் ஒடம்பும் சுடுது. வா எங்க வீட்டுல வந்து ரெண்டு நா இரு வா."
கனகாம்பரமும் பவளமும் கருவாச்சியக் கூட்டிட்டுப் போறாக கையோட.
"அழுகாதடா மகனே!"அழுகுசிங்கத்தத் தூக்கித் தோள்ல வச்சுக்கிட்டான் மொதலக்கம்பட்டி அன்னக்கொடி கருவாச்சியக் கட்டிக்கிற வேண்டிய மொறமாமன். மொதலக்கம்பட்டி அன்னக்கொடி நல்ல வளத்தி. ஆள் கறுப்புன்னாலும் அம்சமான அழகன். சின்ன வயசுல ஊளமூக்கு ஒழுக கருவாச்சிய மொதலக்கம்பட்டிக் குத் தூக்கிட்டுப் போறப்பவெல்லாம் "அந்தா பணியாரம் கேட்டு ஆத்தாகிட்ட அழுதுக்கிட்டிருக் கான் பாரு. அவன் தான்டி ஒம் புருசன்"னு அன்னக்கொடியக் காமிப்பா பெரியமூக்கி. குடும்பம் இடையில நொந்து நொடிச்சுப் போச்சு பஞ்சம் பொழைக்க, வடக்க கண்காணாத தேசத்துக்குப் போயித் தகவல் அத்துப் போச்சு. உண்மையா ஒழச்சு, நேர்மையாப் பொழைச்சு முறுக்குச் சுட்டு வித்து நிமிந்திருச்சு குடும்பம். காலுக்குச் செருப்பு, கைக்குக் கடிகாரம்னு ஏகத் தடபுடலாகி சொந்த ஊருக்குத் திரும்பி நெலபுலம் வாங்கி வட்டிவாசிக்கெல்லாம் குடுத்து, வாழ்வு பெருத்துப்போனாலும், பழைய பந்தம் பாசம் உறவு மட்டும் கரையாத கல்லா நெஞ்சுக்குழியிலயே கெடக்கு.
சுப்பஞ் செட்டியார் வீட்டு உள் திண்ணையில உக்காந்து அழகுசிங்கத்தை இழுத்து மடியில உக்காரவச்சுக்கிட்டு "முட்டாயி வாங்கிக்கடா மகனே முட்டாயி"ன்னு உள் பையில கைய விட்டு எட்டணாவ எடுத்து நீட்னான் அன்னக்கொடி. வாங்கக் கைய நீட்டிட்டு அன்னக் கொடிய ஒரு பார்வை, ஆத்தாள ஒரு பார்வை மாத்திமாத்திப் பாத்தான் அழகுசிங்கம்.
"நாங்க அசலாள் இல்லப்பா, ஒன் சித்தப்பன்தான் வாங்கிக்கடா ராசா வாங்கிக்க."
காசை அவன் சட்டைப் பையில போட்டுவிட்டுக் கண்ணையும் தொடச்சு விட்டான்.
"அழுகப் பெறந்த வம்ச மாடா, நீயும் ஒங்க ஆத்தாளும்? ஆம்பள இல்லாத வீடுன்னுதானடாஆட்டப் புலி அடிச்சுப் புடுச்சு. ஒன் சித்தப்பன் ஒன்கூடவே இருக்கேன்னு வச்சுக்க... இது நடந்திருக்குமா? ஒங்க வீட்டுச் சாணியிலயாச்சும் ஈ ஒட்டியிருக்குமா?"
கதவுல முதுகு சாச்சுக் கால்நீட்டி உள்வீட்டுல ஒக்காந்திருந்த கருவாச்சிக்குத் துணுக்குன்னுச்சு.
அவன் இன்னும் சத்தம் கூட்டிப் பேசுறான்... காது கேக்கட்டும் கருவாச்சிக் குன்னு. "எச்சிபட்டுப் பண்டம் பழுதாகிப் போச்சுன்னு நான் நெனைக்கலப்பா பொதைச்சு வச்சு எடுத்தாலும் தங்கம் தங்கந்தானடா மகனே. ஏங்கூடவே இருந்திர்றியா?"
பையில போட்ட துட்ட எடுத்துத் தொட்டுத் தொட்டுப் பாத்துக்கிட்டு ஆகட்டும்னு தலையாட்டினான் அழகுசிங்கம்.
உள்ளயிருந்து கத்திச் சொன்னா கருவாச்சி, "துட்டத் திருப்பிச் சித்தப்பன் பையிலயே போட்டுர்றா செல்லம்."
அவன் போடல கையில வச்சுக்கிட்டுக் கனாக் கண்டுக்கிட்டே யிருக்கான்.
"நீ வெவரமாயிருக்க. ஆத்தாளுக்குத் தான் பத்தாது... சின்ன வயசுலயே மனசுல முடிச்சுப் போட்டு விட்டாகளா... அவுத்தாலும் அவுக்க முடியல அத்தாலும் அக்க முடியல. மனசு மறுகுதடா மகனே. வசதி இருக்குடா சித்தப்பனுக்கு வந்திரு. அப்பன் நானிருக்க நீங்க அனாதை ஆகலா மாடா? நாளப்பின்னப் பள்ளிக்கூடத்துல போயிச் சேரப் போறன்னு வச்சுக்க ஒம் பேரு என்னான்னு கேட்டா என்ன சொல்லுவ?"
எழுத்துக்கூட்டி எழுத்துக்கூட்டி அந்தச் சின்னப்பய சொன்னான், "அ...ல...கு... சி...ங்...க...ம்..."
"சரி... என்னா அழுகுசிங்கம்னா என்ன சொல்லுவ?" பய மேலயும் கீழயும் முழிச்சான். உள்ளயிருந்து ஆத்தாகாரி கத்துனா "க.அழகுசிங்கம்!"
இதெல்லாம் கேட்டுக்கிட்டேயிருந்த பவளம் இப்ப உள்ள புகுந்தா. "இன்னும் பழச மறக்கல போலருக்கு. க... கட்டையன் தானே.?"
"இல்ல கருவாச்சி."
கொஞ்சநேரம் அது ஆளில்லாத வீடா அமைதியாகிப்போச்சு.
"குடுத்த துட்ட சித்தப்பன் பையில போடுறா"ன்னு போடச் சொல்லிட்டு, அவன அடிச்சு இழுத்துத் தூக்கி உள்ள ஓடிப்போனா கருவாச்சி.
சொக்கத்தேவன் பட்டியக் கடக்கிற வரைக் கும் அன்னக்கொடி குனிஞ்ச தல நிமிரல. கண்ணுல விழுந்த தூசியத் தொடைக்கிறவன் மாதிரி கண்ணீரையும் தொடைச் சுக்கிட்டான், தலையில கட்டுன துண்ட அவுத்து. அவ பொழப்புக்குள்ள வந்த ஒரு நல்ல ஆத்மாவும் வேட்டிய மடிச்சுக் கட்டிக் கிட்டுப் பொடி நடையாப் போயிருச்சு.
ரெண்டாம் நாளு கருவாச்சி லேசாப் பேச்சு குடுத்தா: "ஒம் புருசன் இங்க வாரதே இல்லையா கனகம்?"
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
"வருவாக. வாழப்பழச் சீப்பு ஒண்ணத் தோள்ல போட்டு, முறுக்கு மிச்சரு சிலேபின்னு வாங்கி ஒண்ணாச் சரடு சுத்தி ஒரே பையில போட்டு எப்பவுமே சாயங்காலம் வருவாக. என் பொண்டாட்டிய விடிஞ்சு கூட்டிட்டுப் போறேன்னு ராத் தங்கல் தங்குவாக. சோலி முடிஞ்சதும் சொல்லாமப் போயிருவாக."
"இது என்னாடி பொழப்பு..? வாழவும் வாழாம தீக்கவும் தீக்காம..? எதுக்கும் ஒரு முடிவு இருக்கு. இதுக்கு இருக்கா இல்லையா?"
"நான் ஒரு முடிவுக்கு வந்துட்டனக்கா. காஞ்ச கத்தாழ நாராப் போயிட்டாரு எங்கப்பன். ஒரு மகளக் கட்டிக் கொடுத்தும் வாழல ஒரு மகளக் கட்டிக் குடுக்கவே முடியல. நான் மண்டையக் கிண்டயப் போட்டுட்டாப் பொம்பளப் பிள்ளைக ரெண்டும் அனாதிக்காட்ல அலைஞ்சிருமேன்னு பொலம்பிப் பொலம்பி இத்துப் போனாரு. பொழப்பு தான் நல்ல பொழப்பா இல்லாமப் போச்சு அவருக்கு. சாவாவது நல்ல சாவு சாகட்டுமேன்னு அக்கா தங்கச்சிக கூடி ஒரு முடிவு பண்ணிட்டோம்."
"என்னா முடிவு பண்ணீக?"
என் புருசனுக்குக் கழுத்து நீட்ட என் தங்கச்சியச் சம்மதிக்கவச்சுப் புட்டேன்."
கருவாச்சி ஒரு பேச்சும் பேசல.
"ஒனக்கு அது புடிக்காத முடிவா இருக்கலாம். ஒம் பொழப்புலயும் எம் பொழப்புலயும் நம்மளுக்குப் புடிச்சதா நடந்துக்கிட்டிருக்கு?"
"இது ஒங்க அப்பனுக்குத் தெரியுமா?"
"தெரியும்."
"என்ன சொன்னாரு?"
"ஓட்டச் சட்டின்னாலும் கொழுக்கட்ட வெந்தாப் போதும்"னு பெருசா இழுத்துப் பெருமூச்சுவிட்டுச்சு பெருசு."
பொம்பளைக ரெண்டு பேரும் போயிட்டா, இந்தக் கெழவன் கதி என்னான்னு யோசிச்சு யோசிச்சு மண்ட காஞ்சுபோனா கருவாச்சி. மறுநாள் பொழுசாய வந்துட்டானய்யா முத்துக் காமு, காடுமேடு மேஞ்ச ஆடு மாடு வீடு சேர. இந்த மொற வாழப்பழச் சீப்பையும் முறுக்கையும் காணோம். செக்குல தலையக் குடுத்தவன் மாதிரி தலையில எண்ணெய் ஒழுக வந்தவன், கையில மஞ்ச மஞ்சேர்னு ஒரு மஞ்சப் பைய வச்சிருக்கான். பிரிச்சுப் பாத்தா அர வீசை ஆட்டுக் கறி எலும்பு கிலும்பு இல்லாம. "குழம்பு வை பாதிய வறுத்திரு பாதிய"ன்னு சொல்லிப்புட்டு வாசம் புடிக்க உக்காந்துட்டான் வாசல்லயே.
"யண்ணே! எப்பக் கூட்டிட்டுப் போகப் போற எங்க கனகத்த?"கருவாச்சி லேசா அவன அசைச்சுப் பாக்குறா.
"நானா மாட்டேங்குறன்...? ஒருத்திக்கு ரெண்டு பேரையும் வச்சுப் பொழைக்கிறேங்கறேன். மாமனுக்கும் மனசு இல்ல மச்சினிச்சிக்கும் மனசில்ல."
சுவர்ல பூச்சி புடிக்கிற பல்லிய வேடிக்கை பாத்துக்கிட்டிருந்த சுப்பஞ் செட்டியாரு, பல்லியப் பூச்சி முழுங்கினதும் பார்வையத் திருப்பினாரு. "மனசக் கல்லாக்கிக்கிட்டுச் சொல்றேன் தாயி. கல்யாணம் பண்ணி அவளயும் கூட்டிட்டுப் போகச் சொல்லு"இத்துப்போன போர்வையை இழுத்துப் பொத்தி இருமிக்கிட்டே சொன்னாரு சுப்பஞ் செட்டி.
"பழைய பாக்கியக் கழிச்சிவிட்ருங்க. பவளத்தையும் கூட்டிட்டுப் போயிடறேன்."
"பழைய பாக்கின்னா?" "வளவியிலேயே பொழங்கிப் பொழங்கி மாமனுக்கு வைர மோதிரம்ங்கிறது மறந்தே போச்சே."
"ஒரு ஈயச் சொம்பு வாங்கக்கூட வக்கில் லாமக் கெடக்கேன். வைரமோதிரத்துக்கு எங்க போவேன் மாப்பிள்ள?"
செத்தவடம் அங்க சத்தம் செத்துப்போச்சு யாரும் பேசல. தட்டுல வச்ச சோளக்களியில ஈ ஒண்ணு மாட்டிக்கிட்டு முழிக்கிறதப் பாத்துக் கிட்டே கழுத்துல கெடந்த தங்கச் சங்கிலியச் சப்பிக்கிட்டு நிக்கிறான் அழகுசிங்கம். அவன உத்து உத்துப் பாத்தா கருவாச்சி. அந்த மூணு பவுன் சங்கலிய படக்குன்னு கழத்துனா. அழுத பிள்ளைய அணச்சு வாயப் பொத்துனா. "இந்தாங்க இத வைங்க. நான் நகை போடப்போறதில்ல. நகை போட்டு அழகு பாக்க எனக்குப் பொம்பளப் பிள்ளையும் இல்ல. இத உருக்கி ஒரு மோதிரம் செஞ்சு குடுத்திருங்க. என் தங்கச்சிக பொழப்பு கரையேறிடும், இவளுக போனாப் போறாளுக. ஒங்களுக்கு என்னைக்கும் கூட இருக்கப்போற மக நாந்தான்."
படுத்துக்கெடந்த மனுசன் படார்னு எந்திரிச்சு அவ கையப் புடிச்சு மூஞ்சியில வச்சுக்கிட்டு மாடுமாதிரி அழுதாரு.
அக்கா தங்கச்சிக ரெண்டு பேரும் நெஞ்சுல கைவச்சு நின்னு போனாக.
"எங்களுக்குக் குடுத் துட்டு நீ என்ன செய்வ தாயி? என்ன செய்வ?" பொத்தல் விழுந்த போர்வைய எடுத்துக் கண்ணத் தொடச்சுக் கிட்டே கதர்றாரு சுப்பஞ் செட்டியாரு.
"எனக்கு என்னய்யா இருக்கு? ஒரு முழக் குச்சுன்னாலும் ஒழுகாத குச்சு கால் வயித்துக் கஞ்சின்னாலும் கடனில்லாத கஞ்சி."
இந்தக் குழப்பத்துல இன்னும் கறித்தண்ணி வைக்கலையேங்கிற கவலையில காதுல இருந்த அரைப்பீடி பத்தவச்சு, புண்பட்ட நெஞ்சப் புகையவிட்டு ஆத்துன்னு ஆத்திக்கிட்டி ருக்கான் முத்துக்காமு.
"கேட்டுக்க மாமு..." ஆரம்பிச்சான் முத்துக்காமு. "ஆனி இருவத்தேழு நாளு நல்லாயிருக்கு. அதுதான் கடைசி முகூர்த்தம். அதவிட்டா ஆடி வந்துரும். நாளைக்கு ஒரே நாள்தான் ஊட இருக்கு. ஒன்னிய நானு கொட்டுக்காரனக் கூப்பிடச் சொல்லல கூத்துக் காமிக்கச் சொல்லல பந்தல் போடச் சொல்லல பந்தி வைக்கச் சொல்லல மோதிரம் போட்டு ஓட்டிவிட்ரு கழுதைகள எங்கூடங்கறேன். ஆனி இருவத்தேழு போயிருச்சுன்னு வச்சுக்க, நான் போயிருவேன். அப்பொறம் ஒன் விக்காத வளவிக மாதிரி அவளுகள வீட்லயே வச்சுக்க நான் எவளையோ வச்சுக்கிர்றேன்." வீடே கேக்க வீர வசனம் பேசிட்டு, "வார வழியில பாத்தேன். அன்னஞ்சி யில ஆடு உரிக்கிறாக இன்னக்கி"ன்னு தணிஞ்ச குரல்ல சொன்னான்.
விடியுது.
"இது என்னாடி பொழப்பு..? வாழவும் வாழாம தீக்கவும் தீக்காம..? எதுக்கும் ஒரு முடிவு இருக்கு. இதுக்கு இருக்கா இல்லையா?"
"நான் ஒரு முடிவுக்கு வந்துட்டனக்கா. காஞ்ச கத்தாழ நாராப் போயிட்டாரு எங்கப்பன். ஒரு மகளக் கட்டிக் கொடுத்தும் வாழல ஒரு மகளக் கட்டிக் குடுக்கவே முடியல. நான் மண்டையக் கிண்டயப் போட்டுட்டாப் பொம்பளப் பிள்ளைக ரெண்டும் அனாதிக்காட்ல அலைஞ்சிருமேன்னு பொலம்பிப் பொலம்பி இத்துப் போனாரு. பொழப்பு தான் நல்ல பொழப்பா இல்லாமப் போச்சு அவருக்கு. சாவாவது நல்ல சாவு சாகட்டுமேன்னு அக்கா தங்கச்சிக கூடி ஒரு முடிவு பண்ணிட்டோம்."
"என்னா முடிவு பண்ணீக?"
என் புருசனுக்குக் கழுத்து நீட்ட என் தங்கச்சியச் சம்மதிக்கவச்சுப் புட்டேன்."
கருவாச்சி ஒரு பேச்சும் பேசல.
"ஒனக்கு அது புடிக்காத முடிவா இருக்கலாம். ஒம் பொழப்புலயும் எம் பொழப்புலயும் நம்மளுக்குப் புடிச்சதா நடந்துக்கிட்டிருக்கு?"
"இது ஒங்க அப்பனுக்குத் தெரியுமா?"
"தெரியும்."
"என்ன சொன்னாரு?"
"ஓட்டச் சட்டின்னாலும் கொழுக்கட்ட வெந்தாப் போதும்"னு பெருசா இழுத்துப் பெருமூச்சுவிட்டுச்சு பெருசு."
பொம்பளைக ரெண்டு பேரும் போயிட்டா, இந்தக் கெழவன் கதி என்னான்னு யோசிச்சு யோசிச்சு மண்ட காஞ்சுபோனா கருவாச்சி. மறுநாள் பொழுசாய வந்துட்டானய்யா முத்துக் காமு, காடுமேடு மேஞ்ச ஆடு மாடு வீடு சேர. இந்த மொற வாழப்பழச் சீப்பையும் முறுக்கையும் காணோம். செக்குல தலையக் குடுத்தவன் மாதிரி தலையில எண்ணெய் ஒழுக வந்தவன், கையில மஞ்ச மஞ்சேர்னு ஒரு மஞ்சப் பைய வச்சிருக்கான். பிரிச்சுப் பாத்தா அர வீசை ஆட்டுக் கறி எலும்பு கிலும்பு இல்லாம. "குழம்பு வை பாதிய வறுத்திரு பாதிய"ன்னு சொல்லிப்புட்டு வாசம் புடிக்க உக்காந்துட்டான் வாசல்லயே.
"யண்ணே! எப்பக் கூட்டிட்டுப் போகப் போற எங்க கனகத்த?"கருவாச்சி லேசா அவன அசைச்சுப் பாக்குறா.
"நானா மாட்டேங்குறன்...? ஒருத்திக்கு ரெண்டு பேரையும் வச்சுப் பொழைக்கிறேங்கறேன். மாமனுக்கும் மனசு இல்ல மச்சினிச்சிக்கும் மனசில்ல."
சுவர்ல பூச்சி புடிக்கிற பல்லிய வேடிக்கை பாத்துக்கிட்டிருந்த சுப்பஞ் செட்டியாரு, பல்லியப் பூச்சி முழுங்கினதும் பார்வையத் திருப்பினாரு. "மனசக் கல்லாக்கிக்கிட்டுச் சொல்றேன் தாயி. கல்யாணம் பண்ணி அவளயும் கூட்டிட்டுப் போகச் சொல்லு"இத்துப்போன போர்வையை இழுத்துப் பொத்தி இருமிக்கிட்டே சொன்னாரு சுப்பஞ் செட்டி.
"பழைய பாக்கியக் கழிச்சிவிட்ருங்க. பவளத்தையும் கூட்டிட்டுப் போயிடறேன்."
"பழைய பாக்கின்னா?" "வளவியிலேயே பொழங்கிப் பொழங்கி மாமனுக்கு வைர மோதிரம்ங்கிறது மறந்தே போச்சே."
"ஒரு ஈயச் சொம்பு வாங்கக்கூட வக்கில் லாமக் கெடக்கேன். வைரமோதிரத்துக்கு எங்க போவேன் மாப்பிள்ள?"
செத்தவடம் அங்க சத்தம் செத்துப்போச்சு யாரும் பேசல. தட்டுல வச்ச சோளக்களியில ஈ ஒண்ணு மாட்டிக்கிட்டு முழிக்கிறதப் பாத்துக் கிட்டே கழுத்துல கெடந்த தங்கச் சங்கிலியச் சப்பிக்கிட்டு நிக்கிறான் அழகுசிங்கம். அவன உத்து உத்துப் பாத்தா கருவாச்சி. அந்த மூணு பவுன் சங்கலிய படக்குன்னு கழத்துனா. அழுத பிள்ளைய அணச்சு வாயப் பொத்துனா. "இந்தாங்க இத வைங்க. நான் நகை போடப்போறதில்ல. நகை போட்டு அழகு பாக்க எனக்குப் பொம்பளப் பிள்ளையும் இல்ல. இத உருக்கி ஒரு மோதிரம் செஞ்சு குடுத்திருங்க. என் தங்கச்சிக பொழப்பு கரையேறிடும், இவளுக போனாப் போறாளுக. ஒங்களுக்கு என்னைக்கும் கூட இருக்கப்போற மக நாந்தான்."
படுத்துக்கெடந்த மனுசன் படார்னு எந்திரிச்சு அவ கையப் புடிச்சு மூஞ்சியில வச்சுக்கிட்டு மாடுமாதிரி அழுதாரு.
அக்கா தங்கச்சிக ரெண்டு பேரும் நெஞ்சுல கைவச்சு நின்னு போனாக.
"எங்களுக்குக் குடுத் துட்டு நீ என்ன செய்வ தாயி? என்ன செய்வ?" பொத்தல் விழுந்த போர்வைய எடுத்துக் கண்ணத் தொடச்சுக் கிட்டே கதர்றாரு சுப்பஞ் செட்டியாரு.
"எனக்கு என்னய்யா இருக்கு? ஒரு முழக் குச்சுன்னாலும் ஒழுகாத குச்சு கால் வயித்துக் கஞ்சின்னாலும் கடனில்லாத கஞ்சி."
இந்தக் குழப்பத்துல இன்னும் கறித்தண்ணி வைக்கலையேங்கிற கவலையில காதுல இருந்த அரைப்பீடி பத்தவச்சு, புண்பட்ட நெஞ்சப் புகையவிட்டு ஆத்துன்னு ஆத்திக்கிட்டி ருக்கான் முத்துக்காமு.
"கேட்டுக்க மாமு..." ஆரம்பிச்சான் முத்துக்காமு. "ஆனி இருவத்தேழு நாளு நல்லாயிருக்கு. அதுதான் கடைசி முகூர்த்தம். அதவிட்டா ஆடி வந்துரும். நாளைக்கு ஒரே நாள்தான் ஊட இருக்கு. ஒன்னிய நானு கொட்டுக்காரனக் கூப்பிடச் சொல்லல கூத்துக் காமிக்கச் சொல்லல பந்தல் போடச் சொல்லல பந்தி வைக்கச் சொல்லல மோதிரம் போட்டு ஓட்டிவிட்ரு கழுதைகள எங்கூடங்கறேன். ஆனி இருவத்தேழு போயிருச்சுன்னு வச்சுக்க, நான் போயிருவேன். அப்பொறம் ஒன் விக்காத வளவிக மாதிரி அவளுகள வீட்லயே வச்சுக்க நான் எவளையோ வச்சுக்கிர்றேன்." வீடே கேக்க வீர வசனம் பேசிட்டு, "வார வழியில பாத்தேன். அன்னஞ்சி யில ஆடு உரிக்கிறாக இன்னக்கி"ன்னு தணிஞ்ச குரல்ல சொன்னான்.
விடியுது.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
சுப்பஞ் செட்டியார் ஆணியில தொங்குன சட்டைய எடுத்தாரு உள்ள கைய விட்டுப் புரட்டி தலை வழியாப் போட்டாரு. கழுத்தத் தாண்டி எறங்குறப்ப ஒரு இழு இழுத்தாரு பாருங்க... தோள்பட்டத் தையல் மூட்டு பிரிஞ்சு "இதுக்குமேல எங்களக் கொல்லாத சாமி"ன்னு சர்ருபுர்ருன்னு சத்தம் போட்டுருச்சு. தொத்தக் கொடையக் கையில எடுத்தாரு இத்த செருப்ப மாட்டிக்கிட்டாரு. சில வருசமாவே சீக்காக் கெடக்குற செருப்புக ஊசி குத்தாத எடம் ஒரு எடம் பாக்கியில்ல. "காதறுந்தும் ஒங்க பேச்சக் கேக்கறது நாங்க மட்டுந்தான்" இளிச்சுக்கிட்டே சோகமாச் சொல்லுதுக செருப்புக.
"போயிட்டு வாரேன் கண்ணுகளா... பொழுதிருக்க வந்திடறேன். உருமாப் பெருமாத் தேவருகிட்டச் சொல்லிருக்கேன். நாளைக்கி வீட்டளவுல விசேசம் வச்சுக்கிரலாம். கவுண்டர் வீட்டுல ஒரு கோழிக்குஞ்சு கடன் கேட்ருக்கேன் புடிச்ச மாதிரி செஞ்சு குடுங்க புதுமாப்ளைக்கு. நாளைக்கி ஒரு பொழுது மட்டும் பொறுத்துக்கச் சொல்லுங்க கல்யாண வீட்டுல கவிச்சி ஆகாது." பொடிநடையாப் புறப்பட்டாரு சுப்பஞ் செட்டியாரு.
பொன்னாசாரிக பெருத்த ஊரு நிலக்கோட்டை. முப்பது மைல் சுத்தளவுக்கு அங்கதான் எல்லாரும் நகை செய்ய வருவாக. அந்த ஊர் ஆசாரிககிட்ட தொழில் சுத்தமும் இருக்கும் நேர்மையும் இருக்கும். உமி ஓட்டுல ஊதி ஊதிக் கரியக் கங்காக்கிக்கிட்டிருந்த அங்காசாரி, சுப்பஞ் செட்டியாரப் பாத்ததும் "வாய்யா, வாய்யா, வாய்யா"ன்னாரு வாய் நெறைய.
"கடவுளா நெனச்சு வந்திருக்கேன் கைவிட்ராதய்யா." பையில கையவிட்டு எடுத்து நீட்டினாரு கருவாச்சி குடுத்த தங்கச் சங்கிலிய.
"என்ன பண்ணுவீகளோ, ஏது பண்ணுவீகளோ தெரியாது. இன்னைக்கிப் பொழுதுக்குள்ள ஒரு வைர மோதிரம் வேணும். கூலி குடுக்கச் சத்தில்ல குறுக்கொடிஞ்சு நிக்கறேன். செய்கூலி சேதாரம் இதுலயே கழிச்சிக்கிட்டு உள்ளதுக்குச் செஞ்சு குடுங்க ஒரு ஒத்தக் கல்லு மோதிரம்."
உள்ளங்கையில விழுந்த சங்கிலிய ஒரு புடிச்சபுடி புடிச்சுப் பாத்தாரு அங்காசாரி உள்ளங்கைய மூடிக்கிட்டுக் கண்ணையும் தெறக்காமச் சொல்றாரு "செட்டியாரய்யா ஒங்க சங்கிலி மூணு பவுன நெருங்கும் உருக்குனாச் சுருங்கும்." பொன்னாசாரிக அப்பப்ப தமிழ்லயும் கொஞ்சம் விளையாடிக்கிருவாக. அரிசியில சிற்பம் செய்யிற மாதிரி பொன்னத் தட்டிப் பூ வேல செய்யிற மனசா இல்லையா?
"ஏனய்யா நகை சுருங்குது?"ன்னு எதார்த்தமாக் கேட்டாரு சுப்பஞ் செட்டியாரு.
"அம்பில்லாத வில்லும் செம்பில்லாத பொன்னும் வேலைக்காகாது செட்டியாரய்யா. உருக்க உருக்கச் செம்பு ஒதுங்கிருமா இல்லையா..? சொக்கத் தங்கம் மட்டும் இதுல ரெண்டரை தேறும் இப்பப் பாருங்க." நான் பத்திக்கிட்டேன்னு செவப்பு முழி முழிச்சுக் காமிக்குது கரிக் கங்கு. ஆசாரி ஒரு மங்கொகைய எடுத்தாரு. சங்கிலிய அதுல போட்டாரு. ஒரு ஒல கொறடு எடுத்து மங்கொகையப் புடிச்சு நடு அடுப்புல வச்சாரு. ஊதுறாரு. உயிர் மூச்ச உள்ள ஊதுறாரு. குடுத்தா மட்டும் சிரிக்கிற மனுசப் பயக மாதிரி காத்து வந்தா மட்டும் கண்ணச் சிமிட்டுது கங்கு. முதுகத் தூக்கிச் சுவத்தில போட்டுட்டு மனசத் தூக்கி உமி ஓட்டுல போட்டுட்டு தங்க வேடிக்க பாக்கத் தயாராயிட்டாரு செட்டியாரு.
கால் மணி நேரத் துல உருகி உருகித் தண்ணியா ஓடுதய்யா தங்கம். தங்கம் தண்ணியாப் போனதும் பதறிப் போனாரு சுப்பஞ்செட்டியார். நெருப்புல போட்டாத் தங்கமே உருவழிஞ்சு தண்ணியா ஓடிப்போயிருது. இந்தச் சொத்த எலும்பும், சுருங்குன தசையும் என்னத்துக்காகும்? சுப்பஞ் செட்டியாரு சொல்லிப்பாத்துக்கிட்டாரு மனசுக்குள்ள சொல்லல வெளியில.
உருகுன தங்கத் தண்ணியில நவச்சாரத் தூள அள்ளி எறிஞ்சாரு ஆசாரி. பொண்ணு மாப்ளைய ஒண்ணு சேத்துவச்சுட்டு, கதவுக்கு வெளிய காணாமப் போற தாய்க் கெழவி மாதிரி, உருகுன தங்கத்த ஒண்ணு சேத்துவிட்டுட்டு போயிருச்சு நவச்சாரம். மங் கொகையில உருகுன தங்கத்த மாத்தி ஊத்த ஏனம் வேணுமா இல்லையா? உள்ளங்கை அகலத்துல இருந்த இரும்புப் பாளம் எடுத்தாரு. அதுல ஊத்துனவுடன் எட்டுத் தெசையும் எந் தெசைதான்னு அங்கிட்டும் இங்கிட்டுமா ஓடுது கழுத. ஓடுன தங்கத் தண்ணிய ஒரு பக்கமா அண கட்டி நிறுத்த அதுல உமியக் கொட்னாரு. இதப் பாத்ததும் சுளீர்னு யாரோ சவுக்க எடுத்து அடிச்ச மாதிரியிருந்துச்சு சுப்பஞ் செட்டியாருக்கு. ஒன்னியத் தங்கத்துக்கு வாங்குனாக என்னிய மட்டும் தவிட்டுக்கு வாங்குனாகளான்னு கேக்குறானே மனுசன், என்னமோ தங்கம் பெருசு தவிடு சிறுசுன்னு. இங்க வந்து பாருங்கடா, ஏலேய்! இங்க தவிடுதானடா தங்கத்துக்கே அண கட்டுது. ஏத்தமும் இறக்கமும் இடம் பொறுத்துத்தான்டா."
தங்கத்துல தத்துவார்த்தம் பாத்ததுல தன்னத்தானே மெச்சிக்கிட்டு உக்காந்திருக்காரு சுப்பஞ் செட்டியாரு.
சூடு ஆறவும் இரும்புப் பாளத்துல ஊத்திவச்ச தங்கத் தண்ணி செத்தவடத்துல கெட்டியாகிப்போச்சு அப்பறம் கெட்டி கட்டியாகிப் போச்சு.
இப்பத் தொழில் ரகசியம் சொல்றாரு ஆசாரி. "அய்யா செட்டியாரய்யா! நகையா இருக்கறபோது தங்கம் ஒவ்வொரு அங்குலத்துலயும் வேற வேற தரத்துல இருக்கும். உருக்கி ஒண்ணுசேத்தா ஒரே தரத்துக்கு வந்திருது."
"நெசந்தானய்யா. ?"
"போயிட்டு வாரேன் கண்ணுகளா... பொழுதிருக்க வந்திடறேன். உருமாப் பெருமாத் தேவருகிட்டச் சொல்லிருக்கேன். நாளைக்கி வீட்டளவுல விசேசம் வச்சுக்கிரலாம். கவுண்டர் வீட்டுல ஒரு கோழிக்குஞ்சு கடன் கேட்ருக்கேன் புடிச்ச மாதிரி செஞ்சு குடுங்க புதுமாப்ளைக்கு. நாளைக்கி ஒரு பொழுது மட்டும் பொறுத்துக்கச் சொல்லுங்க கல்யாண வீட்டுல கவிச்சி ஆகாது." பொடிநடையாப் புறப்பட்டாரு சுப்பஞ் செட்டியாரு.
பொன்னாசாரிக பெருத்த ஊரு நிலக்கோட்டை. முப்பது மைல் சுத்தளவுக்கு அங்கதான் எல்லாரும் நகை செய்ய வருவாக. அந்த ஊர் ஆசாரிககிட்ட தொழில் சுத்தமும் இருக்கும் நேர்மையும் இருக்கும். உமி ஓட்டுல ஊதி ஊதிக் கரியக் கங்காக்கிக்கிட்டிருந்த அங்காசாரி, சுப்பஞ் செட்டியாரப் பாத்ததும் "வாய்யா, வாய்யா, வாய்யா"ன்னாரு வாய் நெறைய.
"கடவுளா நெனச்சு வந்திருக்கேன் கைவிட்ராதய்யா." பையில கையவிட்டு எடுத்து நீட்டினாரு கருவாச்சி குடுத்த தங்கச் சங்கிலிய.
"என்ன பண்ணுவீகளோ, ஏது பண்ணுவீகளோ தெரியாது. இன்னைக்கிப் பொழுதுக்குள்ள ஒரு வைர மோதிரம் வேணும். கூலி குடுக்கச் சத்தில்ல குறுக்கொடிஞ்சு நிக்கறேன். செய்கூலி சேதாரம் இதுலயே கழிச்சிக்கிட்டு உள்ளதுக்குச் செஞ்சு குடுங்க ஒரு ஒத்தக் கல்லு மோதிரம்."
உள்ளங்கையில விழுந்த சங்கிலிய ஒரு புடிச்சபுடி புடிச்சுப் பாத்தாரு அங்காசாரி உள்ளங்கைய மூடிக்கிட்டுக் கண்ணையும் தெறக்காமச் சொல்றாரு "செட்டியாரய்யா ஒங்க சங்கிலி மூணு பவுன நெருங்கும் உருக்குனாச் சுருங்கும்." பொன்னாசாரிக அப்பப்ப தமிழ்லயும் கொஞ்சம் விளையாடிக்கிருவாக. அரிசியில சிற்பம் செய்யிற மாதிரி பொன்னத் தட்டிப் பூ வேல செய்யிற மனசா இல்லையா?
"ஏனய்யா நகை சுருங்குது?"ன்னு எதார்த்தமாக் கேட்டாரு சுப்பஞ் செட்டியாரு.
"அம்பில்லாத வில்லும் செம்பில்லாத பொன்னும் வேலைக்காகாது செட்டியாரய்யா. உருக்க உருக்கச் செம்பு ஒதுங்கிருமா இல்லையா..? சொக்கத் தங்கம் மட்டும் இதுல ரெண்டரை தேறும் இப்பப் பாருங்க." நான் பத்திக்கிட்டேன்னு செவப்பு முழி முழிச்சுக் காமிக்குது கரிக் கங்கு. ஆசாரி ஒரு மங்கொகைய எடுத்தாரு. சங்கிலிய அதுல போட்டாரு. ஒரு ஒல கொறடு எடுத்து மங்கொகையப் புடிச்சு நடு அடுப்புல வச்சாரு. ஊதுறாரு. உயிர் மூச்ச உள்ள ஊதுறாரு. குடுத்தா மட்டும் சிரிக்கிற மனுசப் பயக மாதிரி காத்து வந்தா மட்டும் கண்ணச் சிமிட்டுது கங்கு. முதுகத் தூக்கிச் சுவத்தில போட்டுட்டு மனசத் தூக்கி உமி ஓட்டுல போட்டுட்டு தங்க வேடிக்க பாக்கத் தயாராயிட்டாரு செட்டியாரு.
கால் மணி நேரத் துல உருகி உருகித் தண்ணியா ஓடுதய்யா தங்கம். தங்கம் தண்ணியாப் போனதும் பதறிப் போனாரு சுப்பஞ்செட்டியார். நெருப்புல போட்டாத் தங்கமே உருவழிஞ்சு தண்ணியா ஓடிப்போயிருது. இந்தச் சொத்த எலும்பும், சுருங்குன தசையும் என்னத்துக்காகும்? சுப்பஞ் செட்டியாரு சொல்லிப்பாத்துக்கிட்டாரு மனசுக்குள்ள சொல்லல வெளியில.
உருகுன தங்கத் தண்ணியில நவச்சாரத் தூள அள்ளி எறிஞ்சாரு ஆசாரி. பொண்ணு மாப்ளைய ஒண்ணு சேத்துவச்சுட்டு, கதவுக்கு வெளிய காணாமப் போற தாய்க் கெழவி மாதிரி, உருகுன தங்கத்த ஒண்ணு சேத்துவிட்டுட்டு போயிருச்சு நவச்சாரம். மங் கொகையில உருகுன தங்கத்த மாத்தி ஊத்த ஏனம் வேணுமா இல்லையா? உள்ளங்கை அகலத்துல இருந்த இரும்புப் பாளம் எடுத்தாரு. அதுல ஊத்துனவுடன் எட்டுத் தெசையும் எந் தெசைதான்னு அங்கிட்டும் இங்கிட்டுமா ஓடுது கழுத. ஓடுன தங்கத் தண்ணிய ஒரு பக்கமா அண கட்டி நிறுத்த அதுல உமியக் கொட்னாரு. இதப் பாத்ததும் சுளீர்னு யாரோ சவுக்க எடுத்து அடிச்ச மாதிரியிருந்துச்சு சுப்பஞ் செட்டியாருக்கு. ஒன்னியத் தங்கத்துக்கு வாங்குனாக என்னிய மட்டும் தவிட்டுக்கு வாங்குனாகளான்னு கேக்குறானே மனுசன், என்னமோ தங்கம் பெருசு தவிடு சிறுசுன்னு. இங்க வந்து பாருங்கடா, ஏலேய்! இங்க தவிடுதானடா தங்கத்துக்கே அண கட்டுது. ஏத்தமும் இறக்கமும் இடம் பொறுத்துத்தான்டா."
தங்கத்துல தத்துவார்த்தம் பாத்ததுல தன்னத்தானே மெச்சிக்கிட்டு உக்காந்திருக்காரு சுப்பஞ் செட்டியாரு.
சூடு ஆறவும் இரும்புப் பாளத்துல ஊத்திவச்ச தங்கத் தண்ணி செத்தவடத்துல கெட்டியாகிப்போச்சு அப்பறம் கெட்டி கட்டியாகிப் போச்சு.
இப்பத் தொழில் ரகசியம் சொல்றாரு ஆசாரி. "அய்யா செட்டியாரய்யா! நகையா இருக்கறபோது தங்கம் ஒவ்வொரு அங்குலத்துலயும் வேற வேற தரத்துல இருக்கும். உருக்கி ஒண்ணுசேத்தா ஒரே தரத்துக்கு வந்திருது."
"நெசந்தானய்யா. ?"
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
"இல்லய்யா. இதுல மாசு மருவு கலந்திருக்கு. இதச் சொக்கத் தங்கமாக்க இன்னும் ரெண்டு வேல பாக்கியிருக்கு. இந்தாங்க. காப்பித்தண்ணி குடிங்க. பாத்துக்கிட்டேயிருங்க." திரும்பவும் தங்கக் கட்டியச் சுட்டுப் பட்டறையில வச்சாரு. எடுத்தாரு சுத்தியல. அடிச்சாரு தங்கத்த. அது எங்க எளக்கம் குடுக்குது எங்க இறுக் கம் குடுக்குதுன்னு விரல் வழியா மூளைக்குச் சொல்லிக்கிட்டேயிருக்கு சுத்தியலு. இறுக்கம் குடுத்த தங்கத்த எடுத்தாரு இளஞ் சூடு காமிச்சாரு பொறிகாரத்துல போட்டுப் பெரட்டி எடுத்தாரு உலையில தூக்கிவச்சாரு உருகும் பதம் கண்டதும் உமியடிச்சாரு தண்ணிக்குள்ள முக்கினாரு சூடு அமத்திட்டாரு ஆறிப் போன தங்கத்த அடிச்சு அடிச்சு, தங்கக் கட்டியத் தகடா மாத்திப்பிட்டாரு. என்னமோ அருவாமணையில வெண்டக்காயக் குடுத்து வெட்டி எடுக்கிற மாதிரி நீண்டுபோன தங்கத்த அங்குல அங்குலமா வெட்னாரு அடுக்கியும் வச்சுக்கிட்டாரு. இப்பத்தான் புடம் போடப்போறாரு. சலிச்செடுத்தாரு செம் மண்ணை அதுல கரைச்சு ஊத்துனாரு புளிய உள்ள போட்டாரு உப்ப. மூணையும் கொழகொழன்னு கொழச்சாரு. களிப்பதம் வந்ததும் தங்கத் துண்டுகள்ல தடவிட்டாரு.
காப்பித் தண்ணியக் குடிச்சுக்கிட்டே கடைவாய்க்குள்ள சிரிச்சுக்கிட்டாரு சுப்பஞ் செட்டியாரு.
"ஏ பவுனு! நாந்தான் தங்கம்னு மேனாமினுக்கியா அலஞ்சியே! ஒங் கதியப் பாத்தியா? எங்க மனுசப் பொம்பளையெல்லாம் மஞ்சப்பூசிக் குளிக்கிறாக. நீ பாவம்! மண்ணப் பூசித்தானக் குளிக்கிற. ஒன் வகிசி தெரிஞ்சு போச்சடி பிள்ளா இனி வாயத் தெறக்காத." என்னமோ காலங்காலமாத் தங்கம் இவருகூட குடுமிப்பிடிச் சண்ட போட்டதாகவும் இன்னக்கி அது கொட்டத்த இவரு அடக்கிட்டதாகவும் ஏழக் கெழவனுக்கு ஒரு ராச சந்தோசம்.
மண் கொழச்சு அப்புன தங்கத் தகடுகள ஓட்டுல போட்டு ஒல மூடி வச்சு மூடி, அடியில எருக்கூட்டி எரிக்க ஆரம்பிச்சாரு ஆசாரி. சோறு வெந்துருச்சா கொழஞ்சுருச்சாங்கிறத குழவியில தொவையல் அரைச்சுக்கிட்டே சொல்ற கெழவிக மாதிரி, புடம் போட்ட தங்கம் வேக்காடு குடுத்துருச்சா இல்லயாங்கிறத அனுபவம் சொல்லுது ஆசாரிக்கு. ஒல மூடி தொறந்து பாத்தா தடவுன உப்பு, புளி, மண்ணு ஒண்ணையுங் காணோம். அத்தனையும் பஸ்மமாகி ஆவியாப் போக, சொதசொதன்னு கெடக்கு சொக்கத் தங்கம். ஆறவச்சு எடை போடுறாரு ஆசாரி.
"கை அளக்காததையா தராசு அளக்கப்போகுது? சொன்னது சொன்னதுதானய்யா. ரெண்டரைப் பவுனு."
"ஒங்க செய்கூலிக்குச் சேர வேண்டியத எடுத்துக்கிட்டு மிச்சத்துக்கு ஒரு வைர மோதிரம் செஞ்சா கணக்கு என்ன வரும்னு சொல்லுங்க, காதாரக் கேட்டுக்கிர்றேன்."
கண்ண மூடி வாய்க்குள்ளயே முணுமுணுத்து அவரா ஒரு கணக்குப் போட்டாரு ஆசாரி. "அய்யா, காப் பவுனு செய்கூலி முக்காப் பவுன் மதிப்புக்கு ஒரு வைரக் கல்லு... போக ஒன்றரைப் பவுன்ல மோதிரம் செய்யலாம்."
"செய்யுங்கய்யா. பொழுதிருக்கக் குடுத்திட்டாப் புண்ணியமாப் போகுமய்யா."
ரெண்டு மூணு வைரக் கல்ல எடுத்து கரும் புள்ளி இருக்கான்னு நீரோட்டம் பாத்து ஒரு கல்ல ஆசாரி ஒதுக்கிவைக்க, பட்டிவீரன் பட்டியிலிருந்து வந்துட்டான் ஒருத்தன் எழவு சொல்ல. அவுந்த வேட்டியக்கூட ஒழுங்காக் கட்டாம அலறிப்பதறி எந்திரிச்சிட்டாரு ஆசாரி.
"அய்யா! பட்டிவீரன்பட்டி மருதாசாரி அடியாகிப் போனாரு. அவரு எனக்குச் சித்தப்பன் மட்டுமில்ல. கொறடு புடிக்கச் சொல்லிக்குடுத்த குரு. ஒரு நாள் பொறுத்துக்குங்க. காரியம் முடியட்டும். வைர மோதிரத்தக் கையில குடுத்துடறேன்."
கனிஞ்சு எரிஞ்சுக்கிட்டிருந்த உமி ஓட்டுல விழுந்து எந்திருச்சு வந்துச்சு சுப்பஞ்செட்டியாரு உசுரு.
"அய்யா ஆசாரி அய்யா, கைவிட்றாதீக. விடிஞ்சாக் கல்யாணம். வைர மோதிரத்தோட நான் போகல எங்க வீட்லயும் ஏதாகிலும் ஒண்ணு ஆகிப்போகும். பெரிய மனசு பண்ணுங்கய்யா."
ஆசாரி யோசிச்சாரு. அங்கிட்டும் இங்கிட்டும் தலையாட்டுனாரு. ஆழமா ஒரு மூச்சு இழுத்து நீளமா வெளியவிட்டாரு. வீடும் பட்டறையும் ஒண்ணு அவருக்கு. பின்பக்கக் கதவு வழியா உள்ள போயி மேல் சட்ட போடாத பட்டு வேட்டி மட்டும் கட்ன ஒரு வாலிபப் பயலக் கையோட கூட்டியாந்தாரு.
"அய்யா செட்டியாரய்யா. இந்தப் பையன் என் புது மாப்ள. பரம்பரையாப் பொன்னாசாரிக இவுக குடும்பம். திருமல நாயக்கருக்கு செவப்புக் கடுக்கன் செஞ்சுக்குடுத்த வகையறா. மோதிரம் செய்யுறதுல மன்னன். எல்லா வெவரமும் சொல்லிருக்கேன். இருந்து வாங்கிட்டுப் போயிருங்க."
சுப்பஞ் செட்டியார் கையெடுத்துக் கும்பிடறதக்கூடக் கவனிக்காம வைரக் கல்ல மாப்பிள்ள கையில வச்சுட்டு அவசரமாப் போயிட்டாரு ஆசாரி.
வேட்டிய மடிச்சுக் கட்டி ஒழுங்காத் தான் உக்காந்தான் மாப்ள உலை முன்னுக்க. தக்காளிக்குத் தங்க முலாம் பூசுன மாதிரி தளதளன்னு இருந்தான் ஆளு.
ஒரு செப்புக் கம்பிய எடுத்தான் வளைச்சான். மோதிரத்துக்கு மாதிரி அளவெடுத்தான். தங்கக் கட்டி ரெண்டரையில ஒன்றரைய மட்டும் சதுரிச்சு எடுத்து ஒரு பவுனுக்கு ஒரு குண்டுமுத்து மேனிக்கு ஒன்றரைக் குண்டுமுத்து செம்பு கலந்தான். தங்கத்தத் தட்டித்தட்டி வளைச்சு வளைச்சு அடிச்சு அளவுக்குத் தக்கன வளையம் பண்ணுனான். மோதிர வளையம் இருபத்திரண்டு கேரட்டோ முன்னபின்னவோ இருக்கலாம். ஆனா வைரத்த உக்காரவைக்கிற மேல்தட்டு இருபத்துநாலு கேரட்டாத்தான் இருக்கணும். அந்தச் சொக்கத் தங்கத்துல சுத்துளி செலுத்தி, வைரம் ஒக்கார ஒரு தங்கப் பள்ளம் இழைக்க ஆரம்பிச்சானோ இல்லையோ வீட்டுக்குள்ளருந்து ஜல்ஜல்... ஜல்ஜல்னு சாடை பேசுது ஒரு சங்கீதச் சத்தம். குழியெடுக்க ஒக்காந்தவனக் கூப்பிடுது கொலுசுச் சத்தம். செதறுது கவனம் பயலுக்கு. தங்கத்து மேல தப்பாட்டம் ஆடுது சித்துளி. வேட்டி மனசு ரெண்டையும் இறுக்கிப்புடிச்சு ஒக்காந்தான். ஜல்ஜல்... ஜல்ஜல்... திரும்பவும் கூப்பிடுதய்யா கொல்லப் பெறந்த கொலுசு. இத்து விழுந்து நொறுங்குது இறுக்கிப் புடிச்ச மனசு. போட்டது போட்டபடி கெடக்க பொண்டாட்டிகிட்ட ஓடிப்போனான் புதுமாப்பிள.
காப்பித் தண்ணியக் குடிச்சுக்கிட்டே கடைவாய்க்குள்ள சிரிச்சுக்கிட்டாரு சுப்பஞ் செட்டியாரு.
"ஏ பவுனு! நாந்தான் தங்கம்னு மேனாமினுக்கியா அலஞ்சியே! ஒங் கதியப் பாத்தியா? எங்க மனுசப் பொம்பளையெல்லாம் மஞ்சப்பூசிக் குளிக்கிறாக. நீ பாவம்! மண்ணப் பூசித்தானக் குளிக்கிற. ஒன் வகிசி தெரிஞ்சு போச்சடி பிள்ளா இனி வாயத் தெறக்காத." என்னமோ காலங்காலமாத் தங்கம் இவருகூட குடுமிப்பிடிச் சண்ட போட்டதாகவும் இன்னக்கி அது கொட்டத்த இவரு அடக்கிட்டதாகவும் ஏழக் கெழவனுக்கு ஒரு ராச சந்தோசம்.
மண் கொழச்சு அப்புன தங்கத் தகடுகள ஓட்டுல போட்டு ஒல மூடி வச்சு மூடி, அடியில எருக்கூட்டி எரிக்க ஆரம்பிச்சாரு ஆசாரி. சோறு வெந்துருச்சா கொழஞ்சுருச்சாங்கிறத குழவியில தொவையல் அரைச்சுக்கிட்டே சொல்ற கெழவிக மாதிரி, புடம் போட்ட தங்கம் வேக்காடு குடுத்துருச்சா இல்லயாங்கிறத அனுபவம் சொல்லுது ஆசாரிக்கு. ஒல மூடி தொறந்து பாத்தா தடவுன உப்பு, புளி, மண்ணு ஒண்ணையுங் காணோம். அத்தனையும் பஸ்மமாகி ஆவியாப் போக, சொதசொதன்னு கெடக்கு சொக்கத் தங்கம். ஆறவச்சு எடை போடுறாரு ஆசாரி.
"கை அளக்காததையா தராசு அளக்கப்போகுது? சொன்னது சொன்னதுதானய்யா. ரெண்டரைப் பவுனு."
"ஒங்க செய்கூலிக்குச் சேர வேண்டியத எடுத்துக்கிட்டு மிச்சத்துக்கு ஒரு வைர மோதிரம் செஞ்சா கணக்கு என்ன வரும்னு சொல்லுங்க, காதாரக் கேட்டுக்கிர்றேன்."
கண்ண மூடி வாய்க்குள்ளயே முணுமுணுத்து அவரா ஒரு கணக்குப் போட்டாரு ஆசாரி. "அய்யா, காப் பவுனு செய்கூலி முக்காப் பவுன் மதிப்புக்கு ஒரு வைரக் கல்லு... போக ஒன்றரைப் பவுன்ல மோதிரம் செய்யலாம்."
"செய்யுங்கய்யா. பொழுதிருக்கக் குடுத்திட்டாப் புண்ணியமாப் போகுமய்யா."
ரெண்டு மூணு வைரக் கல்ல எடுத்து கரும் புள்ளி இருக்கான்னு நீரோட்டம் பாத்து ஒரு கல்ல ஆசாரி ஒதுக்கிவைக்க, பட்டிவீரன் பட்டியிலிருந்து வந்துட்டான் ஒருத்தன் எழவு சொல்ல. அவுந்த வேட்டியக்கூட ஒழுங்காக் கட்டாம அலறிப்பதறி எந்திரிச்சிட்டாரு ஆசாரி.
"அய்யா! பட்டிவீரன்பட்டி மருதாசாரி அடியாகிப் போனாரு. அவரு எனக்குச் சித்தப்பன் மட்டுமில்ல. கொறடு புடிக்கச் சொல்லிக்குடுத்த குரு. ஒரு நாள் பொறுத்துக்குங்க. காரியம் முடியட்டும். வைர மோதிரத்தக் கையில குடுத்துடறேன்."
கனிஞ்சு எரிஞ்சுக்கிட்டிருந்த உமி ஓட்டுல விழுந்து எந்திருச்சு வந்துச்சு சுப்பஞ்செட்டியாரு உசுரு.
"அய்யா ஆசாரி அய்யா, கைவிட்றாதீக. விடிஞ்சாக் கல்யாணம். வைர மோதிரத்தோட நான் போகல எங்க வீட்லயும் ஏதாகிலும் ஒண்ணு ஆகிப்போகும். பெரிய மனசு பண்ணுங்கய்யா."
ஆசாரி யோசிச்சாரு. அங்கிட்டும் இங்கிட்டும் தலையாட்டுனாரு. ஆழமா ஒரு மூச்சு இழுத்து நீளமா வெளியவிட்டாரு. வீடும் பட்டறையும் ஒண்ணு அவருக்கு. பின்பக்கக் கதவு வழியா உள்ள போயி மேல் சட்ட போடாத பட்டு வேட்டி மட்டும் கட்ன ஒரு வாலிபப் பயலக் கையோட கூட்டியாந்தாரு.
"அய்யா செட்டியாரய்யா. இந்தப் பையன் என் புது மாப்ள. பரம்பரையாப் பொன்னாசாரிக இவுக குடும்பம். திருமல நாயக்கருக்கு செவப்புக் கடுக்கன் செஞ்சுக்குடுத்த வகையறா. மோதிரம் செய்யுறதுல மன்னன். எல்லா வெவரமும் சொல்லிருக்கேன். இருந்து வாங்கிட்டுப் போயிருங்க."
சுப்பஞ் செட்டியார் கையெடுத்துக் கும்பிடறதக்கூடக் கவனிக்காம வைரக் கல்ல மாப்பிள்ள கையில வச்சுட்டு அவசரமாப் போயிட்டாரு ஆசாரி.
வேட்டிய மடிச்சுக் கட்டி ஒழுங்காத் தான் உக்காந்தான் மாப்ள உலை முன்னுக்க. தக்காளிக்குத் தங்க முலாம் பூசுன மாதிரி தளதளன்னு இருந்தான் ஆளு.
ஒரு செப்புக் கம்பிய எடுத்தான் வளைச்சான். மோதிரத்துக்கு மாதிரி அளவெடுத்தான். தங்கக் கட்டி ரெண்டரையில ஒன்றரைய மட்டும் சதுரிச்சு எடுத்து ஒரு பவுனுக்கு ஒரு குண்டுமுத்து மேனிக்கு ஒன்றரைக் குண்டுமுத்து செம்பு கலந்தான். தங்கத்தத் தட்டித்தட்டி வளைச்சு வளைச்சு அடிச்சு அளவுக்குத் தக்கன வளையம் பண்ணுனான். மோதிர வளையம் இருபத்திரண்டு கேரட்டோ முன்னபின்னவோ இருக்கலாம். ஆனா வைரத்த உக்காரவைக்கிற மேல்தட்டு இருபத்துநாலு கேரட்டாத்தான் இருக்கணும். அந்தச் சொக்கத் தங்கத்துல சுத்துளி செலுத்தி, வைரம் ஒக்கார ஒரு தங்கப் பள்ளம் இழைக்க ஆரம்பிச்சானோ இல்லையோ வீட்டுக்குள்ளருந்து ஜல்ஜல்... ஜல்ஜல்னு சாடை பேசுது ஒரு சங்கீதச் சத்தம். குழியெடுக்க ஒக்காந்தவனக் கூப்பிடுது கொலுசுச் சத்தம். செதறுது கவனம் பயலுக்கு. தங்கத்து மேல தப்பாட்டம் ஆடுது சித்துளி. வேட்டி மனசு ரெண்டையும் இறுக்கிப்புடிச்சு ஒக்காந்தான். ஜல்ஜல்... ஜல்ஜல்... திரும்பவும் கூப்பிடுதய்யா கொல்லப் பெறந்த கொலுசு. இத்து விழுந்து நொறுங்குது இறுக்கிப் புடிச்ச மனசு. போட்டது போட்டபடி கெடக்க பொண்டாட்டிகிட்ட ஓடிப்போனான் புதுமாப்பிள.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
மத்தியானச் சாப்பாடும் இல்லாத சுப்பஞ் செட்டியாரு பகவானக் கும்புட்டுப் பலியாக்கெடக்காரு. புதுமாப்ள இல்லையா...போனவன், போனவன்தான். உலை ஓட்டுல சிவப்பா எரிஞ்ச கங்கு வெள்ளை பூத்துப்போன பெறகு வெளிய வாரான் பய. நெருப்புக்கு முன்னால உக்காந்தும் வேர்க்காதவன் உள்ளபோயி வேர்த்து வாரான். அவன் ஏற்கெனவே உக்காந்தபோது உள்கால் சட்டை பாத்ததா செட்டியாருக்கு ஞாபகம் இப்ப அது இல்ல. தங்கத் தகட்டுல உருண்ட அரம் போட்டுக் கொஞ்சமாக் குழியெடுத்துட்டுப் போன பய இப்ப ஆழந் தேடிப் போயி அரக்கிறான். வைரக் கல்லோட கனபரிமாணத்துக்குத் தக்கன குழியளவு சரியான்னு வச்சு வச்சு எடுக்கிறான் வைரத்த. கல்லுப் பதிச்ச பள்ளத்துக்கும் கல்லுக்கும் மத்தியில ஒரு சன்னமான நூலு ஊடாட முடிஞ்ச அளவுக்குத்தான் சந்து இருக்கணும். இப்ப எடுத்த குழியில சந்து பெருஞ் சந்தாகிப்போச்சு. அதனால போவரை உளியெடுத்துத் தங்கத்தச் செல்லமாச் செதுக்கி எளசா ஒரு இழையெடுத்துக் கல்லுக்கு ஆதரவா அணவு பண்ணணும்னு முடிவு பண்ணுனான். சித்துளி எடுத்து வைரக் கல்லச் சுத்தித் தங்கத்துல அடிச்சுக்கிட்டே வந்தா, தங்கம் ஒரு இத்துனூண்டு தகடா எந்திருக்கும். சித்துளி எடுத்து அவன் மொதத் தட்டு தட்டவும் க்ளிங் க்ளிங் க்ளிங் க்ளிங் வந்துட்டுப் போ ராசானு வளவி கூப்பிடுது. காலால கூப்பிட்ட சத்தத்துக்கே கரைஞ்சுபோயிப் போன பய, கை கூப்பிட்ட சத்தத்துக்குப் போகாம இருப்பானா? போயிட்டான்.
"யாத்தே! திரும்பவும் போயிட்டானே" உருமால அவுத்து மடியில போட்டுப் பெருமாளக் கும்பிட்டுக் கண்ண மூடிக்கிட்டாரு சுப்பஞ் செட்டியார்.
நேரஞ் சென்டு திரும்பி வந்தப்ப வேட்டியப் பெரட்டிக் கட்டியிருந்தான் பய. மேல் சட்டையில்லாத மேனி வேறயா, அவன் தொப்பூழ்ப் பள்ளத்துக்குள்ள தலயக் குடுத்துப் பச்சக் காம்ப மட்டும் வெளிய நீட்டிக்கிட்டிருக்கு மல்லியப்பூவு ஒண்ணு.
"பொழுதிருக்கப் போகணுமப்பா. தயவு பண்ணு ராசா."
"இருங்க பெருசு இப்பக் குடுத்திடறேன்."
கல் பதிக்கிறதுல முக்கியமான வேல மசை அடிக்கிறது. கல்லச் சுத்தி இருக்கிற தங்கத்த இழைச்சு எழுப்பி, மெருகு வலை வச்சு உருட்டி ஒரு துளித் தண்ணியும் உள்ள எறங்காத அளவுக்கு நெருக்கி அணைச்சுவிடுறதுதான் மசையடிக்கிறது. புதுப் பொண்டாட்டி சோங்கு... போயிட்டுப் போயிட்டு வந்த சொகம்... கண்ணு தங்கத்துல இருந்தாலும் கவனம் அவ மடியில இருந்த மயக்கம்... எல்லாம் சேந்து சரியா மசையடிக்காம மோதிரத்தத் தூக்கிக் கையில குடுத்துட்டான் பாவிப் பய.
அவன்குடுத்த மோதிரத்தக் கும்பிட்டு வாங்கி மடியில கட்டிப் புறப்பட்டாரு சுப்பஞ் செட்டியாரு.
அந்த வைரக் கல்லு, அணவு பத்தாம லொடக்கு லொடக்கு லொடக்கு லொடக்குன்னு சன்னமாச் சத்தம் போட்டுக்கிட்டே போகுது. இது சத்தமில்ல சாமி. ரெண்டு உசுருக்கு அடிக்கிற சங்குன்னு வழியெல்லாம் சொல்லிக் கிட்டே போகுது அந்த லொடக்கு, லொடக்கு.
கெட்டி ராத்திரி. நிலா இன்னும் எழும்பல. அழுகுணி வெளிச்சம் அடிச்சிட்டிருக்குக அங்கங்க மொளைச்ச வெள்ளிக. இடைகாட்டுப் பாதை வழி விழுந்து போறாரு சுப்பஞ் செட்டியாரு.
"கடவுளே! என்னியப் பொழுதோட சேத்திரு எம் பொருளோட சேத்திரு" ஆகாயம் பாத்துப் பெருமாளுக்குப் போட்டாரு ஒரு பெருங் கும்பிடு. "அந்து கிந்து என்னிய அநாதிக் காட்ல விட்றாத"கீழ குனிஞ்சு செருப்புக்கும் போட்டாரு ஒரு சின்னக் கும்பிடு. நிலக்கோட்டையிலயிருந்து கோட்டப் பட்டி மார்க்கமா குள்ளப்புரம் புடிச்சு, மெட்டூரு சாவடிப்பட்டி வழியா சொக்கத் தேவன்பட்டி எல்லைய மிதிக்க, தலைக்கோழி கூவிருச்சு.
அக்கா தங்கச்சிக ரெண்டு பேருக்கும் ஒரு சொட்டு ஒறக்கமில்ல. சாகப்போற நாளையில அப்பன் படுற பாட்ட நெனச்சு அழுது கண்ணு வீங்கிப்போனதுல முன் ஜாம ஒறக்கமில்ல. உள் திண்ணையில வெலகுன வேட்டி தெரியாம, கால் ரெண்டையும் அகட்டிப் படுத்துக்கெடக்குற முத்துக்காமு விட்டான் பாருங்க கூரையைப் பிரிக்கிற ஒரு கொறட்ட அந்தப் பெருங்கொண்ட ஓசையில பின் ஜாமத்துல ஒறக்கமில்ல.
சுப்பஞ் செட்டியாரு செருப்புச் சத்தம் கேட்டு எந்திருச்சு உக்காந்திருச்சு மொத்த வீடும்.
"வைர மோதிரம் வந்திருச்சா?" மூஞ்சி கழுவாத முத்துக்காமு கண்ணுல ஏறித் துடிக்குது இருதயம்.
உள் பையில கையவிட்டு உசுரையே வெளியே எடுக்கிற மாதிரி, பொத்துனாப்புல எடுக்கிறாரு செட்டியாரு பொத்திக் கொண்டுவந்த மோதிரத்த.
லாந்தர் வெளக்கு வெளிச் சத்துல மோதிரம் சுத்திவச்ச கருஞ்செவப்புக் காகிதத்த அவரு லேசா உரிச்சுக் காமிக்கவும், அவர் குடுக்கிற வரைக்கும் பொறுமையில்லாத பய வெடுக்குன்னு புடிங்கிப்புட்டான் மோதிரத்த. தொட்டுத்தொட்டுப் பாக்குறான் தடவித்தடவிப் பாக்குறான் கிட்ட வச்சுப் பாக்குறான் எட்டவச்சுப் பாக்குறான். மூக்குக்கிட்டக் கொண்டாந்து மோந்து மோந்தும் பாக்குறான். மோதிர விரல்ல போட்டுப் பாத்து மூஞ்சி மலந்துபோனவன் ஒவ்வொரு விரலாப் போட்டு உருவி உருவி எடுக்கிறான்.
ஒத்த வாழப் பழத்தக் கைப்பத் துன கொரங்கு, கூட்டத்துல சேட்ட பண்ணிக் கும்மாளமடிக்குமா இல்லையா... அப்படியிருக்கு அவன் கூத்து.
"இந்த முத்துக்காமு சொன்ன சொல்லு மாற மாட்டேன் மாமா கட்றேன் தாலிய."
"குடு மாப்ள எங்கையால நானே மாட்டிவிடுறேன் மோதிரத்த." அத வாங்கி அவன் இடது கை மோதிர வெரல்ல அவரு மாட்டவும், மூக்கு மேல கோவம் தவ்விருச்சு முத்துக்காமுக்கு.
"எங்க வம்சத்துல யாரும் போட்டதில்ல வைர மோதிரம். கடைசியில குண்டி கழுவுற கையில மாட்டிக் குடியக் கெடுத்துப்புட்டியே..?" அவர மடார்னு தள்ளி மோதிரத்தப் படார்னு உருவி வலது கை மோதிர வெரல்ல அவனா மாட்டிக்கிட்டு அழகு பாக்குறான் முத்துக்காமு.
கிறுக்குப்புடிச்ச புள்ள கிலுகிலுப்பை வச்சு வெளையாடுறத நீங்க பாத்திருக்கீங் களா..? அதப் பாக்கலேன்னா நீங்க இதப் பாக்கலாம்.
இது ரெண்டாம் கல்யாணம். ஊரே வா நாடே வான்னு ஓல விட முடியுமா? பழைய சோத்த உலையில கொதிக்கவச்சுப் பந்திவச்ச கதையாப் போயிரும். அளந்து அஞ்சு பேரக் கூப்பிட்டாரு சுப்பஞ் செட்டியாரு. உருமாப் பெருமாத் தேவரு, காவக்காரச் சக்கணன், சடையத் தேவரு, அம்மைய நாயக்கரு, கடப்பாரக் கவுண்டரு அஞ்சு பேரும் மொத்தமா வந்துட்டாக கெழக்கு வெளுக்க. மத்த நாலு பேரும் மனசால பெரிய மனுசக் கணக்குல வந்து சேந்துர்றாக வயசால பெரிய மனுசக் கணக்குல சேந்துர்றாரு சடையத் தேவரு.
"யாத்தே! திரும்பவும் போயிட்டானே" உருமால அவுத்து மடியில போட்டுப் பெருமாளக் கும்பிட்டுக் கண்ண மூடிக்கிட்டாரு சுப்பஞ் செட்டியார்.
நேரஞ் சென்டு திரும்பி வந்தப்ப வேட்டியப் பெரட்டிக் கட்டியிருந்தான் பய. மேல் சட்டையில்லாத மேனி வேறயா, அவன் தொப்பூழ்ப் பள்ளத்துக்குள்ள தலயக் குடுத்துப் பச்சக் காம்ப மட்டும் வெளிய நீட்டிக்கிட்டிருக்கு மல்லியப்பூவு ஒண்ணு.
"பொழுதிருக்கப் போகணுமப்பா. தயவு பண்ணு ராசா."
"இருங்க பெருசு இப்பக் குடுத்திடறேன்."
கல் பதிக்கிறதுல முக்கியமான வேல மசை அடிக்கிறது. கல்லச் சுத்தி இருக்கிற தங்கத்த இழைச்சு எழுப்பி, மெருகு வலை வச்சு உருட்டி ஒரு துளித் தண்ணியும் உள்ள எறங்காத அளவுக்கு நெருக்கி அணைச்சுவிடுறதுதான் மசையடிக்கிறது. புதுப் பொண்டாட்டி சோங்கு... போயிட்டுப் போயிட்டு வந்த சொகம்... கண்ணு தங்கத்துல இருந்தாலும் கவனம் அவ மடியில இருந்த மயக்கம்... எல்லாம் சேந்து சரியா மசையடிக்காம மோதிரத்தத் தூக்கிக் கையில குடுத்துட்டான் பாவிப் பய.
அவன்குடுத்த மோதிரத்தக் கும்பிட்டு வாங்கி மடியில கட்டிப் புறப்பட்டாரு சுப்பஞ் செட்டியாரு.
அந்த வைரக் கல்லு, அணவு பத்தாம லொடக்கு லொடக்கு லொடக்கு லொடக்குன்னு சன்னமாச் சத்தம் போட்டுக்கிட்டே போகுது. இது சத்தமில்ல சாமி. ரெண்டு உசுருக்கு அடிக்கிற சங்குன்னு வழியெல்லாம் சொல்லிக் கிட்டே போகுது அந்த லொடக்கு, லொடக்கு.
கெட்டி ராத்திரி. நிலா இன்னும் எழும்பல. அழுகுணி வெளிச்சம் அடிச்சிட்டிருக்குக அங்கங்க மொளைச்ச வெள்ளிக. இடைகாட்டுப் பாதை வழி விழுந்து போறாரு சுப்பஞ் செட்டியாரு.
"கடவுளே! என்னியப் பொழுதோட சேத்திரு எம் பொருளோட சேத்திரு" ஆகாயம் பாத்துப் பெருமாளுக்குப் போட்டாரு ஒரு பெருங் கும்பிடு. "அந்து கிந்து என்னிய அநாதிக் காட்ல விட்றாத"கீழ குனிஞ்சு செருப்புக்கும் போட்டாரு ஒரு சின்னக் கும்பிடு. நிலக்கோட்டையிலயிருந்து கோட்டப் பட்டி மார்க்கமா குள்ளப்புரம் புடிச்சு, மெட்டூரு சாவடிப்பட்டி வழியா சொக்கத் தேவன்பட்டி எல்லைய மிதிக்க, தலைக்கோழி கூவிருச்சு.
அக்கா தங்கச்சிக ரெண்டு பேருக்கும் ஒரு சொட்டு ஒறக்கமில்ல. சாகப்போற நாளையில அப்பன் படுற பாட்ட நெனச்சு அழுது கண்ணு வீங்கிப்போனதுல முன் ஜாம ஒறக்கமில்ல. உள் திண்ணையில வெலகுன வேட்டி தெரியாம, கால் ரெண்டையும் அகட்டிப் படுத்துக்கெடக்குற முத்துக்காமு விட்டான் பாருங்க கூரையைப் பிரிக்கிற ஒரு கொறட்ட அந்தப் பெருங்கொண்ட ஓசையில பின் ஜாமத்துல ஒறக்கமில்ல.
சுப்பஞ் செட்டியாரு செருப்புச் சத்தம் கேட்டு எந்திருச்சு உக்காந்திருச்சு மொத்த வீடும்.
"வைர மோதிரம் வந்திருச்சா?" மூஞ்சி கழுவாத முத்துக்காமு கண்ணுல ஏறித் துடிக்குது இருதயம்.
உள் பையில கையவிட்டு உசுரையே வெளியே எடுக்கிற மாதிரி, பொத்துனாப்புல எடுக்கிறாரு செட்டியாரு பொத்திக் கொண்டுவந்த மோதிரத்த.
லாந்தர் வெளக்கு வெளிச் சத்துல மோதிரம் சுத்திவச்ச கருஞ்செவப்புக் காகிதத்த அவரு லேசா உரிச்சுக் காமிக்கவும், அவர் குடுக்கிற வரைக்கும் பொறுமையில்லாத பய வெடுக்குன்னு புடிங்கிப்புட்டான் மோதிரத்த. தொட்டுத்தொட்டுப் பாக்குறான் தடவித்தடவிப் பாக்குறான் கிட்ட வச்சுப் பாக்குறான் எட்டவச்சுப் பாக்குறான். மூக்குக்கிட்டக் கொண்டாந்து மோந்து மோந்தும் பாக்குறான். மோதிர விரல்ல போட்டுப் பாத்து மூஞ்சி மலந்துபோனவன் ஒவ்வொரு விரலாப் போட்டு உருவி உருவி எடுக்கிறான்.
ஒத்த வாழப் பழத்தக் கைப்பத் துன கொரங்கு, கூட்டத்துல சேட்ட பண்ணிக் கும்மாளமடிக்குமா இல்லையா... அப்படியிருக்கு அவன் கூத்து.
"இந்த முத்துக்காமு சொன்ன சொல்லு மாற மாட்டேன் மாமா கட்றேன் தாலிய."
"குடு மாப்ள எங்கையால நானே மாட்டிவிடுறேன் மோதிரத்த." அத வாங்கி அவன் இடது கை மோதிர வெரல்ல அவரு மாட்டவும், மூக்கு மேல கோவம் தவ்விருச்சு முத்துக்காமுக்கு.
"எங்க வம்சத்துல யாரும் போட்டதில்ல வைர மோதிரம். கடைசியில குண்டி கழுவுற கையில மாட்டிக் குடியக் கெடுத்துப்புட்டியே..?" அவர மடார்னு தள்ளி மோதிரத்தப் படார்னு உருவி வலது கை மோதிர வெரல்ல அவனா மாட்டிக்கிட்டு அழகு பாக்குறான் முத்துக்காமு.
கிறுக்குப்புடிச்ச புள்ள கிலுகிலுப்பை வச்சு வெளையாடுறத நீங்க பாத்திருக்கீங் களா..? அதப் பாக்கலேன்னா நீங்க இதப் பாக்கலாம்.
இது ரெண்டாம் கல்யாணம். ஊரே வா நாடே வான்னு ஓல விட முடியுமா? பழைய சோத்த உலையில கொதிக்கவச்சுப் பந்திவச்ச கதையாப் போயிரும். அளந்து அஞ்சு பேரக் கூப்பிட்டாரு சுப்பஞ் செட்டியாரு. உருமாப் பெருமாத் தேவரு, காவக்காரச் சக்கணன், சடையத் தேவரு, அம்மைய நாயக்கரு, கடப்பாரக் கவுண்டரு அஞ்சு பேரும் மொத்தமா வந்துட்டாக கெழக்கு வெளுக்க. மத்த நாலு பேரும் மனசால பெரிய மனுசக் கணக்குல வந்து சேந்துர்றாக வயசால பெரிய மனுசக் கணக்குல சேந்துர்றாரு சடையத் தேவரு.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
மரிக்கொழுந்துக் குஞ்சம்வச்ச ரெண்டு மல்லியப்பூ மால மஞ்சக் கெழங்கு முடிஞ்ச ஒரு மஞ்சக் கயித்துத் தாலி ஓலக் கொட்டான் ஒண்ணு உப்பு ரெண்டு படி இதானய்யா கல்யாணத்துக்கு அன்னைக்கித் தேதிக்கு உண்டானது.
குறுணிக் கேப்ப மாவு அரைப் படிப் பச்சரிசிக் குறுண மூஞ்சி செத்த கத்திரிக்கா ஒரு வீச முத்திப்போன முருங்கக்கா ஆறு அரைப் படித் துவரம் பருப்பு அரைக்காப் படி பசுமாட்டு நெய்யி பந்தியில விரிக்க இருளப்பக் கோடாங்கி இணுங்கிக் கொண்டாந்த ஆமணக்கு எல பதினாறு. இதான் கல்யாணப் பந்திக்கு உண்டான கணக்கு.
கருவாச்சி, ரங்கம்மா, முக்குறுணி, மூணு பேரும் மொடாவுல தண்ணி காயவச்சுக் கேப்ப மாவ உள்ள போட்டுக் கிண்டோகிண்டுன்னு கிண்டுறாக.
"பொழுது ஏறுபொழுதாயிட்டி ருக்கப்பா எடுங்க மாலைய கட்டுங்க தாலிய."
புதுச் சேல சுத்திப் பூவும் பொட்டும் வச்சுத் தங்கச்சியக் கூட்டிட்டு வாரா அக்காகாரி. தோழிப் பொண்ணுக்குத் தொணப் பொண்ணா வாரா கருவாச்சி.
"மாத்திக்குங்க மாலைய."
மாத்திக்கிட்டாக.
"ஓலக்கொட்டான்ல இருக்கிற உப்புல வலது காலவச்சுக் கட்டப்பா தாலிய."
கட்டிட்டான் தாலிய.
ஒரு முடிச்ச அவன் போட்டான் மிச்ச ரெண்டு முடிச்ச மூத்த பொண்டாட்டி வந்து முடிஞ்சு விட்டா.
கருவாச்சிக்கு மட்டும் தெரியிற மாதிரி அவளக் கையெடுத்துக் கும்புட்டாரு சுப்பஞ் செட்டியாரு. ஒடஞ்ச கண்ணுல ஒழுகுது தண்ணி. வந்திருக்கிற ஆளுகளுக்கெல்லாம் வைர மோதிரம் தெரியட் டும்னு அரிக்காத மூக்க அடிக்கடி சொறிஞ்சு நிக்கிறான் முத்துக்காமு.
"பெரிய மனுசங்க வாங்கப்பா. வாழப் போற வாழக்குருத்துகளுக்கு விபூதி வச்சு விடுங்கப்பா." அழுக்குத் துண்டெடுத்து அழுத கண்ணத் தொடச்சுக்கிட்டே கூப்பிட்டாரு சுப்பஞ் செட்டியாரு.
உருமாப் பெருமாத் தேவரும் சக்கணனும் அம்மைய நாயக்கரும் கடப்பாரக் கவுண்டரும் விபூதி வச்சுவிட்டு, கால்ல விழுந்தவுக கையில ரெண்டு, ஒண்ணே கால், ஒண்ணுன்னு செய்மொறை செய்ய, நல்லா இருங்கன்னு உக்காந்த எடத்துலயே சொல்லிட்டு ஒதுங்கி ஓரமாகி, செருப்பு மாட்டிக் கெளம்பிட்டாரு சடையத் தேவரு.
விரிச்ச ஆமணக்கு எலையில கேப்பக் களிய அகப்பையில அள்ளி மொத்தமொத்தமா மோந்துபோடவும் அவுகவுக பருப்புச் சாம்பாருக்குப் பள்ளம் பறிச்சுக்கிட்டாக நடுவுல. கேப்பக் களிச் சூட்டுல உருகி ஓடுது உள்ள போட்ட நெய்யி. யார் யாருக்கு ஜாதகத்துல அந்த வருசம் சுக்கிர தெசைன்னு போட்ருக்கோ அவுகளுக்கு மட்டும் விழுகுது முருங்கக்காத் துண்டும், கத்திரிக்காக் கீத்தும்.
இதப் பாத்ததும் கெட்ட கிறுக்கு வந்திருச்சு முத்துக்காமுக்கு.
"கல்யாணத்துக்கே நெல்லுக் கஞ்சி ஊத்த வக்கில்லாத மாமன், பொண்ணு எதுக்குப் பெத்த பொண்ணு?" பித்துப்புடிச்ச கொரங்கு மாதிரி பிச்சு எறிஞ்சான் மாலைய. அது ஓடி விழுந்துபோச்சு களிக்கிண்டிவச்ச அடுப்புல.
"எந்திரிங்கடி போகலாம். எங்கூருக்குப் போயாச்சும் நெல்லுச் சோறு திம்போம்."
ஒத்தப் பொண்ணக் கொடுத்தன்னைக்கே மனசுக்கு ஒத்தத் தாப்பாப் போட்டுக்கிட்டேன் இப்ப ரெட்டப் பொண்ணும் குடுத்ததனால ரெட்டத் தாப்பாப் போட்டுக்கிர வேண்டியது தான். நெனச்சாரு சொல்லல. இருதயத்துக்குள்ள உடைஞ்சுபோன சில்லுகளுக்கு மத்தியில சொல்லுகளும் மாட்டிக்கிருச்சு சுப்பஞ் செட்டியாருக்கு. மால மாத்துன பொம்பளையச் சீல மாத்தவிடல. அழுத்தித் தல வாரவிடல அழுது சொகங் காணவிடல பொருந்தி உக்காந்து பொண்டாட்டிக ரெண்டு பேரையும் களி திங்கவிடல. பட்டியில மாடுகளக் கெளப்புற மாதிரி பொண்டாட்டிக ரெண்டு பேரையும் முத்துக்காமு பத்திட்டான் பத்தி.
நெத்தி நெலப்படியில இடிக்க சாமி வீட்டுக்குள்ள புகுந்த சுப்பஞ் செட்டியாரு இத்துப்போன பழைய தகரப் பொட்டியத் தெறந்தாரு. அந்தப் பொட்டியப் பாத்தாக் களவாணிப் பயலுக்கும் கண்ணீர் வந்திரும். வந்தவன் கையில ஒண்ணு ரெண்டு இருந்தா அவன் போட்டுட்டுப் போயிரு வான். அந்தப் பொட்டி அடியில கெடந்த பழைய காகிதப் பொட்டலம் ஒண்ண எடுத்துப் பிரிச்சுக்கிட்டே, "இந்தா மகளே! இதுல காதோலையும் முருகுத் தட்டுமிருக்கு. ஆத்தா செத்தன்னைக்கி ஒம் பங்குக்குன்னு அப்பன் எடுத்துவச்சது." பசுமாடு செத்த வீட்ல கன்னுக்குட்டி கதர்ற மாதிரி ஓன்னு கதறி அழுது உசுர் வத்திப்போனா பவளம் அப்பன் சீதனம் தரச் சேத்துவச்சிருந்த பழைய குடத்தையும் வாங்கிக்கிட்டா.
குறுணிக் கேப்ப மாவு அரைப் படிப் பச்சரிசிக் குறுண மூஞ்சி செத்த கத்திரிக்கா ஒரு வீச முத்திப்போன முருங்கக்கா ஆறு அரைப் படித் துவரம் பருப்பு அரைக்காப் படி பசுமாட்டு நெய்யி பந்தியில விரிக்க இருளப்பக் கோடாங்கி இணுங்கிக் கொண்டாந்த ஆமணக்கு எல பதினாறு. இதான் கல்யாணப் பந்திக்கு உண்டான கணக்கு.
கருவாச்சி, ரங்கம்மா, முக்குறுணி, மூணு பேரும் மொடாவுல தண்ணி காயவச்சுக் கேப்ப மாவ உள்ள போட்டுக் கிண்டோகிண்டுன்னு கிண்டுறாக.
"பொழுது ஏறுபொழுதாயிட்டி ருக்கப்பா எடுங்க மாலைய கட்டுங்க தாலிய."
புதுச் சேல சுத்திப் பூவும் பொட்டும் வச்சுத் தங்கச்சியக் கூட்டிட்டு வாரா அக்காகாரி. தோழிப் பொண்ணுக்குத் தொணப் பொண்ணா வாரா கருவாச்சி.
"மாத்திக்குங்க மாலைய."
மாத்திக்கிட்டாக.
"ஓலக்கொட்டான்ல இருக்கிற உப்புல வலது காலவச்சுக் கட்டப்பா தாலிய."
கட்டிட்டான் தாலிய.
ஒரு முடிச்ச அவன் போட்டான் மிச்ச ரெண்டு முடிச்ச மூத்த பொண்டாட்டி வந்து முடிஞ்சு விட்டா.
கருவாச்சிக்கு மட்டும் தெரியிற மாதிரி அவளக் கையெடுத்துக் கும்புட்டாரு சுப்பஞ் செட்டியாரு. ஒடஞ்ச கண்ணுல ஒழுகுது தண்ணி. வந்திருக்கிற ஆளுகளுக்கெல்லாம் வைர மோதிரம் தெரியட் டும்னு அரிக்காத மூக்க அடிக்கடி சொறிஞ்சு நிக்கிறான் முத்துக்காமு.
"பெரிய மனுசங்க வாங்கப்பா. வாழப் போற வாழக்குருத்துகளுக்கு விபூதி வச்சு விடுங்கப்பா." அழுக்குத் துண்டெடுத்து அழுத கண்ணத் தொடச்சுக்கிட்டே கூப்பிட்டாரு சுப்பஞ் செட்டியாரு.
உருமாப் பெருமாத் தேவரும் சக்கணனும் அம்மைய நாயக்கரும் கடப்பாரக் கவுண்டரும் விபூதி வச்சுவிட்டு, கால்ல விழுந்தவுக கையில ரெண்டு, ஒண்ணே கால், ஒண்ணுன்னு செய்மொறை செய்ய, நல்லா இருங்கன்னு உக்காந்த எடத்துலயே சொல்லிட்டு ஒதுங்கி ஓரமாகி, செருப்பு மாட்டிக் கெளம்பிட்டாரு சடையத் தேவரு.
விரிச்ச ஆமணக்கு எலையில கேப்பக் களிய அகப்பையில அள்ளி மொத்தமொத்தமா மோந்துபோடவும் அவுகவுக பருப்புச் சாம்பாருக்குப் பள்ளம் பறிச்சுக்கிட்டாக நடுவுல. கேப்பக் களிச் சூட்டுல உருகி ஓடுது உள்ள போட்ட நெய்யி. யார் யாருக்கு ஜாதகத்துல அந்த வருசம் சுக்கிர தெசைன்னு போட்ருக்கோ அவுகளுக்கு மட்டும் விழுகுது முருங்கக்காத் துண்டும், கத்திரிக்காக் கீத்தும்.
இதப் பாத்ததும் கெட்ட கிறுக்கு வந்திருச்சு முத்துக்காமுக்கு.
"கல்யாணத்துக்கே நெல்லுக் கஞ்சி ஊத்த வக்கில்லாத மாமன், பொண்ணு எதுக்குப் பெத்த பொண்ணு?" பித்துப்புடிச்ச கொரங்கு மாதிரி பிச்சு எறிஞ்சான் மாலைய. அது ஓடி விழுந்துபோச்சு களிக்கிண்டிவச்ச அடுப்புல.
"எந்திரிங்கடி போகலாம். எங்கூருக்குப் போயாச்சும் நெல்லுச் சோறு திம்போம்."
ஒத்தப் பொண்ணக் கொடுத்தன்னைக்கே மனசுக்கு ஒத்தத் தாப்பாப் போட்டுக்கிட்டேன் இப்ப ரெட்டப் பொண்ணும் குடுத்ததனால ரெட்டத் தாப்பாப் போட்டுக்கிர வேண்டியது தான். நெனச்சாரு சொல்லல. இருதயத்துக்குள்ள உடைஞ்சுபோன சில்லுகளுக்கு மத்தியில சொல்லுகளும் மாட்டிக்கிருச்சு சுப்பஞ் செட்டியாருக்கு. மால மாத்துன பொம்பளையச் சீல மாத்தவிடல. அழுத்தித் தல வாரவிடல அழுது சொகங் காணவிடல பொருந்தி உக்காந்து பொண்டாட்டிக ரெண்டு பேரையும் களி திங்கவிடல. பட்டியில மாடுகளக் கெளப்புற மாதிரி பொண்டாட்டிக ரெண்டு பேரையும் முத்துக்காமு பத்திட்டான் பத்தி.
நெத்தி நெலப்படியில இடிக்க சாமி வீட்டுக்குள்ள புகுந்த சுப்பஞ் செட்டியாரு இத்துப்போன பழைய தகரப் பொட்டியத் தெறந்தாரு. அந்தப் பொட்டியப் பாத்தாக் களவாணிப் பயலுக்கும் கண்ணீர் வந்திரும். வந்தவன் கையில ஒண்ணு ரெண்டு இருந்தா அவன் போட்டுட்டுப் போயிரு வான். அந்தப் பொட்டி அடியில கெடந்த பழைய காகிதப் பொட்டலம் ஒண்ண எடுத்துப் பிரிச்சுக்கிட்டே, "இந்தா மகளே! இதுல காதோலையும் முருகுத் தட்டுமிருக்கு. ஆத்தா செத்தன்னைக்கி ஒம் பங்குக்குன்னு அப்பன் எடுத்துவச்சது." பசுமாடு செத்த வீட்ல கன்னுக்குட்டி கதர்ற மாதிரி ஓன்னு கதறி அழுது உசுர் வத்திப்போனா பவளம் அப்பன் சீதனம் தரச் சேத்துவச்சிருந்த பழைய குடத்தையும் வாங்கிக்கிட்டா.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
ஏறு வெயில்ல கொட புடிச்சு முத்துக் காமு முன்னப் போக, பொண்டாட்டிக ரெண்டு பேரும் ஆளுக்கொரு சுமை சொமந்து அவன் பின்னால போக, ஊர் எல்லையில ஓடக்கரைக் கருவேல மரத்தடியில கருவாச்சி கட்டிப்புடிச்சு அழுகுறா அக்கா தங்கச்சிக ரெண்டு பேரையும் அணச்சு. "ஒரு ஊர்ல பெறந்தோம் ஒண்ணாவே வளந்தோம். எந் துன்பம் கேட்டழுக நீங்க இருந்தீக ஒங்க துன்பம் கேட்டழுக நான் இருந்தேன் இன்னைக்கித்தாண்டி நான் நாதியில்லாம நிக்கிறேன் நடுத்தெருவுல. என்னிய மறந்துராதீங்கடீ. அப்பன் இல்லாத காலத்துலயும் நம்பி வாங்கடி நம்மூருக்கு கருவாச்சி இருக்கேன் கஞ்சி ஊத்த." மூணு பொம்பளைகளுக்கும் ஒண்ணு சொன்னாப்புல ஊத்துது கண்ணீரு. அதுக்கு மேல ஒரு பேச்சும் பேச முடியல உள்கூடு வேகுது.
"என்னமோ ராச்சியத்த எழந்து வார ராணிக மாதிரி இந்த ஏங்கு ஏங்குறீக. வாங்கடி ஏலா... வாங்கடி..."
புருசன் சத்தம் விடவும் கடைசியாக் கண்ணத் தொடச்சுப் பொறப்புடப்போன பொம்பளைக, ஒத்தக் கையில அவுந்த வேட்டியப் புடிச்சுக்கிட்டே அப்பன் ஓடி வாரதப் பாத்து, நின்ட எடத்துல நின்டு போனாளுக.
"மாப்ள! கேப்பக் களி போட்டுட்டான் மாமன்னு கேவலமா நெனச்சிராதீக. வீடு போய்ச் சேந்ததும் மொத வேலையா இத அடிச்சுக் கொழம்புவச்சு ஆசையாக் குடிங்க... இந்தாங்க." கெக்கக் கெக்க கெக்கன்னு கத்துற சேவலக் கால்ல சரடு கட்டிக் கொண்டாந்து நீட்டி மாப்பிள்ளைக்குச் சீர் செய்யிறாரு மாமனாரு.
சேவலப் பாத்ததும் கல்லு சிரிக்கிற மாதிரி சிரிக்குது இறுகிப்போன முத்துக்காமு மூஞ்சி. வலது கையில புடிச்ச குடைய மாத்தாம எடது கையில சேவல வாங்கி எடை போட்ட பய, ஒரு வீசைக்கு மேல ஒண்ணே காலுக்குள்ளன்னு முணுமுணுத்துக்கிட்டான் எச்சி ஊறுற வாயில. திடீர்னு அவன் மூஞ்சி மாறுது மேலுதட்டுல பெறந்த சிரிப்பு கீழுதட்டுல செத்துப்போகுது. "சேவல் இருக்கட்டும் மாமு. செய்முறைக் காச எவகிட்டக் குடுத்த? மூத்தவகிட்டயா? இளையவகிட்டயா?"
"மூத்தவகிட்டத்தான்."
செத்துப்போன ராமர் படை சஞ்சீவி மலை வந்தவுடன எந்திரிச்ச மாதிரி, அவன் உதட்டுல செத்துக்கெடந்த சிரிப்புக்கு உசுர் வந்திருச்சு திரும்பி.
பழனிசெட்டிபட்டி வந்து சேந்தப்ப கெடை மாடுக வீடு வார நேரமாகிப் போச்சு. வீடு தெறந்து உள்ள போனவுடன தங்கச்சிய வெளக்கேத்தச் சொன்னா அக்கா. திரியில கற்பூரம் வச்சுத் திரிச்சும்விட்டா.
"இந்தாங்கடி பசி உசுர்போகுது. பச்ச நெல்லக் குத்திக் கஞ்சி காச்சுங்க. நான் சேவல அடிச்சுப் பறிச்சு உரிச்சுக் குடுக்குறேன்." சொன்ன வேகத்துல முத்துக்காமு அருவாமணையில வச்சுக் கரகரகரன்னு கழுத்தறுத்தான் சேவல. ஒழுகுன ரத்தத்தைக் கரண்டியில புடிச்சு அதுல ரெண்டு மூணு உப்புக்கல்லும் போட்டு ஓரமாவச்சான். சேவலப் பறிச்சு வாட்டி அறுத்துக் குடுத்திட்டு கரண்டியில இருந்த கோழி ரத்தத்த அவனாப் பொரிச்சு அவனாத் தின்டுபுட்டான்.
"ஒங்க அப்பன் மாதிரியே சேவலும் கொஞ்சம் முத்தலாயிருக்கு தடியம்மா. ஒரு அடுப்பு சேத்தே எரிங்க"ன்னு சொல்லிப்பிட்டு வைர மோதிரத்தப் பட்டிதொட்டி யெல்லாம் காட்டிப் பகுமானம் பண்ண மந்தைக்குக் கெளம்பிட்டான் முத்துக்காமு.
பச்ச நெல்ல ஒரல்ல கொட்டி, மாத்திமாத்தி ஒலக்க போடுறாக அக்கா தங்கச்சிக ரெண்டு பேரும், புழுங்க நெல்லா இருந்தாப் போடுபோடுன்னு போடலாம் இது பச்ச நெல்லு. ஓங்கி ஒலக்க போட்டாக் குறுணையாப் போகும்னு தாங்கி ஒலக்க போடுறாக. ஒரல்ல குத்துனத அள்ளிப் பொடச்சதுல ஒன்றரைப் படி அரிசி தேறுது. அக்கா வச்ச ஒலையில சோறு கொதிக்க... தங்கச்சி வச்ச அடுப்புல கொழம்பு கொதிக்க... வந்துட்டா னய்யா மகராசன். முக்காக் கும்பாவுக்குச் சோத்த அமுக்கி, முழுக் கும்பாவுக்கும் கொழம்ப ஊத்தி, கறியையும் சோத்தையும் பெணைஞ்சு பெணைஞ்சு சாப்பாடுகூடச் சண்ட புடிக்கிறானய்யா முத்துக்காமு. சுடு சோத்துக்கு ஒடம்பெல்லாம் வேர்த்து ஊத்துது. ஒறச்ச கொழம்புக்குக் கண்ணெல்லாம் தண்ணி வடியுது மூக்கெல்லாம் நீர் ஒழுகுது.
கால் சப்பைக் கறிய ஒரே கடியில கடைவாய்ப் பல்லுல கடிச்சு இழுத்து, சொரசொர சொரன்னு சோத்த மெல்லவும் கடுக்குன்னு கடிபட்டுச்சு பல்லுல ஒரு கல்லு.
கடிக்கிறத நிறுத்திட்டுக் கண்ண மூடிக்கிட்டு யோசிச்சான். கல்லத் துப்புனாக் கறியும் சேந்து விழுந்திரும். கறியோட சேத்துக் கடிச்ச கல்லையும் முழுங்கிப்புட்டான்.
"அடியே பொண்டுகளா! நீங்க அரிசியில கல்லக் கொட்டிச் சோறாக்கிப் போட்டாலுஞ் சரி இல்ல கல்லையே கொட்டிச் சோறாக்கிப் போட்டாலுஞ் சரி முழுசாச் செமிக்காம விடமாட்டான் இந்த முத்துக்காமு." கையக் கழுவி வாய் கொப்புளிச்சுட்டுப் பவளத்தைப் பாத்துக் கண்ணடிச்சு உத்தரவு போட்டுட்டு, உள்ள படுக்கப் போயிட்டான் முத்துக்காமு.
தன் சோத்தையும் தன் பங்குக் கறியையும் தங்கச்சியச் சாப்பிடவச்சு, சுடவச்ச பாலச் சொம்புல குடுத்துத் தாராளமாப் போயிட்டு வாடீன்னா தங்கச்சிய அக்கா. பாயப் பகிர்ந்து கொடுத்தவ பாய் இல்லாமத் தலகாணி மட்டும் போட்டுப் படுத்துக்கிட்டா வெளியில.
மனசிலயும் ஒடம்புலயும் அலுப்பு கன்னத்துல ஒழுகின கண்ணீர்ல உப்பு ஒறையுமுன்ன ஒறங்கிப்போனா.
"யக்கா! மோசம் போயிட்டோம் யக்கா!"
விடிஞ்சும் விடியுமுன்ன பழனிசெட்டி பட்டியவே பொரட்டிப்போட்ட சத்தம் கேட்டுக் கலைஞ்ச சீலையையும் ஒடைஞ்ச உசுரையும் ஒண்ணு சேத்து எந்திரிச்சு உக்காந்தா கனகம்.
"என்னாடி? அடியே என்னாடி?"
உள்ள ஓடிப்போயிப் பாத்தா யானை செத்துக்கெடக்கிற மாதிரி பாயில பொணமாக் கெடக்கான் முத்துக்காமு.
"அய்யோ அய்யோ"ன்னு சுவர்ல முட்டி முட்டி அழுகுறா பவளம். "மாமா"ன்னு பொணத்தோட மார்ல விழுந்து கதர்றா கனகம். அவன் நெத்தி தடவி, மூஞ்சி தடவி, மாரத் தழுவி, தோளத் தடவி, கையத் தடவிக் கடைசியில பாத்தா அவன் வலது கையில மோதிர மிருக்கு வைரக் கல்லக் காணோம். சோத்துல கெடந்த கல்லுன்னு நெனச்சு வைர மோதிரத்திலிருந்து உதிந்து விழுந்த வைரக் கல்லக் கடிச்சும் கடிக்காம முழுங்கிருக் கான் பாவிப்பய. அது கொடல அறுத்துக் கொன்டுபுடிச்சு.
இந்த இழவுச் சேதி போச்சோ இல்லையோ, கிழிஞ்ச சட்டைக்கு ஊசிநூல் தச்சுக்கிட்டிருந்த சுப்பஞ் செட்டியாரு "எம் மக்கா"ன்னு கத்துனாரு வளவிப் பொதி மேல சுருண்டு விழுந்து செத்தேபோனாரு.
பெறந்துவாரது மட்டும் தானய்யா ஒரே வழி சாவுக்குப் பல வழி!
"என்னமோ ராச்சியத்த எழந்து வார ராணிக மாதிரி இந்த ஏங்கு ஏங்குறீக. வாங்கடி ஏலா... வாங்கடி..."
புருசன் சத்தம் விடவும் கடைசியாக் கண்ணத் தொடச்சுப் பொறப்புடப்போன பொம்பளைக, ஒத்தக் கையில அவுந்த வேட்டியப் புடிச்சுக்கிட்டே அப்பன் ஓடி வாரதப் பாத்து, நின்ட எடத்துல நின்டு போனாளுக.
"மாப்ள! கேப்பக் களி போட்டுட்டான் மாமன்னு கேவலமா நெனச்சிராதீக. வீடு போய்ச் சேந்ததும் மொத வேலையா இத அடிச்சுக் கொழம்புவச்சு ஆசையாக் குடிங்க... இந்தாங்க." கெக்கக் கெக்க கெக்கன்னு கத்துற சேவலக் கால்ல சரடு கட்டிக் கொண்டாந்து நீட்டி மாப்பிள்ளைக்குச் சீர் செய்யிறாரு மாமனாரு.
சேவலப் பாத்ததும் கல்லு சிரிக்கிற மாதிரி சிரிக்குது இறுகிப்போன முத்துக்காமு மூஞ்சி. வலது கையில புடிச்ச குடைய மாத்தாம எடது கையில சேவல வாங்கி எடை போட்ட பய, ஒரு வீசைக்கு மேல ஒண்ணே காலுக்குள்ளன்னு முணுமுணுத்துக்கிட்டான் எச்சி ஊறுற வாயில. திடீர்னு அவன் மூஞ்சி மாறுது மேலுதட்டுல பெறந்த சிரிப்பு கீழுதட்டுல செத்துப்போகுது. "சேவல் இருக்கட்டும் மாமு. செய்முறைக் காச எவகிட்டக் குடுத்த? மூத்தவகிட்டயா? இளையவகிட்டயா?"
"மூத்தவகிட்டத்தான்."
செத்துப்போன ராமர் படை சஞ்சீவி மலை வந்தவுடன எந்திரிச்ச மாதிரி, அவன் உதட்டுல செத்துக்கெடந்த சிரிப்புக்கு உசுர் வந்திருச்சு திரும்பி.
பழனிசெட்டிபட்டி வந்து சேந்தப்ப கெடை மாடுக வீடு வார நேரமாகிப் போச்சு. வீடு தெறந்து உள்ள போனவுடன தங்கச்சிய வெளக்கேத்தச் சொன்னா அக்கா. திரியில கற்பூரம் வச்சுத் திரிச்சும்விட்டா.
"இந்தாங்கடி பசி உசுர்போகுது. பச்ச நெல்லக் குத்திக் கஞ்சி காச்சுங்க. நான் சேவல அடிச்சுப் பறிச்சு உரிச்சுக் குடுக்குறேன்." சொன்ன வேகத்துல முத்துக்காமு அருவாமணையில வச்சுக் கரகரகரன்னு கழுத்தறுத்தான் சேவல. ஒழுகுன ரத்தத்தைக் கரண்டியில புடிச்சு அதுல ரெண்டு மூணு உப்புக்கல்லும் போட்டு ஓரமாவச்சான். சேவலப் பறிச்சு வாட்டி அறுத்துக் குடுத்திட்டு கரண்டியில இருந்த கோழி ரத்தத்த அவனாப் பொரிச்சு அவனாத் தின்டுபுட்டான்.
"ஒங்க அப்பன் மாதிரியே சேவலும் கொஞ்சம் முத்தலாயிருக்கு தடியம்மா. ஒரு அடுப்பு சேத்தே எரிங்க"ன்னு சொல்லிப்பிட்டு வைர மோதிரத்தப் பட்டிதொட்டி யெல்லாம் காட்டிப் பகுமானம் பண்ண மந்தைக்குக் கெளம்பிட்டான் முத்துக்காமு.
பச்ச நெல்ல ஒரல்ல கொட்டி, மாத்திமாத்தி ஒலக்க போடுறாக அக்கா தங்கச்சிக ரெண்டு பேரும், புழுங்க நெல்லா இருந்தாப் போடுபோடுன்னு போடலாம் இது பச்ச நெல்லு. ஓங்கி ஒலக்க போட்டாக் குறுணையாப் போகும்னு தாங்கி ஒலக்க போடுறாக. ஒரல்ல குத்துனத அள்ளிப் பொடச்சதுல ஒன்றரைப் படி அரிசி தேறுது. அக்கா வச்ச ஒலையில சோறு கொதிக்க... தங்கச்சி வச்ச அடுப்புல கொழம்பு கொதிக்க... வந்துட்டா னய்யா மகராசன். முக்காக் கும்பாவுக்குச் சோத்த அமுக்கி, முழுக் கும்பாவுக்கும் கொழம்ப ஊத்தி, கறியையும் சோத்தையும் பெணைஞ்சு பெணைஞ்சு சாப்பாடுகூடச் சண்ட புடிக்கிறானய்யா முத்துக்காமு. சுடு சோத்துக்கு ஒடம்பெல்லாம் வேர்த்து ஊத்துது. ஒறச்ச கொழம்புக்குக் கண்ணெல்லாம் தண்ணி வடியுது மூக்கெல்லாம் நீர் ஒழுகுது.
கால் சப்பைக் கறிய ஒரே கடியில கடைவாய்ப் பல்லுல கடிச்சு இழுத்து, சொரசொர சொரன்னு சோத்த மெல்லவும் கடுக்குன்னு கடிபட்டுச்சு பல்லுல ஒரு கல்லு.
கடிக்கிறத நிறுத்திட்டுக் கண்ண மூடிக்கிட்டு யோசிச்சான். கல்லத் துப்புனாக் கறியும் சேந்து விழுந்திரும். கறியோட சேத்துக் கடிச்ச கல்லையும் முழுங்கிப்புட்டான்.
"அடியே பொண்டுகளா! நீங்க அரிசியில கல்லக் கொட்டிச் சோறாக்கிப் போட்டாலுஞ் சரி இல்ல கல்லையே கொட்டிச் சோறாக்கிப் போட்டாலுஞ் சரி முழுசாச் செமிக்காம விடமாட்டான் இந்த முத்துக்காமு." கையக் கழுவி வாய் கொப்புளிச்சுட்டுப் பவளத்தைப் பாத்துக் கண்ணடிச்சு உத்தரவு போட்டுட்டு, உள்ள படுக்கப் போயிட்டான் முத்துக்காமு.
தன் சோத்தையும் தன் பங்குக் கறியையும் தங்கச்சியச் சாப்பிடவச்சு, சுடவச்ச பாலச் சொம்புல குடுத்துத் தாராளமாப் போயிட்டு வாடீன்னா தங்கச்சிய அக்கா. பாயப் பகிர்ந்து கொடுத்தவ பாய் இல்லாமத் தலகாணி மட்டும் போட்டுப் படுத்துக்கிட்டா வெளியில.
மனசிலயும் ஒடம்புலயும் அலுப்பு கன்னத்துல ஒழுகின கண்ணீர்ல உப்பு ஒறையுமுன்ன ஒறங்கிப்போனா.
"யக்கா! மோசம் போயிட்டோம் யக்கா!"
விடிஞ்சும் விடியுமுன்ன பழனிசெட்டி பட்டியவே பொரட்டிப்போட்ட சத்தம் கேட்டுக் கலைஞ்ச சீலையையும் ஒடைஞ்ச உசுரையும் ஒண்ணு சேத்து எந்திரிச்சு உக்காந்தா கனகம்.
"என்னாடி? அடியே என்னாடி?"
உள்ள ஓடிப்போயிப் பாத்தா யானை செத்துக்கெடக்கிற மாதிரி பாயில பொணமாக் கெடக்கான் முத்துக்காமு.
"அய்யோ அய்யோ"ன்னு சுவர்ல முட்டி முட்டி அழுகுறா பவளம். "மாமா"ன்னு பொணத்தோட மார்ல விழுந்து கதர்றா கனகம். அவன் நெத்தி தடவி, மூஞ்சி தடவி, மாரத் தழுவி, தோளத் தடவி, கையத் தடவிக் கடைசியில பாத்தா அவன் வலது கையில மோதிர மிருக்கு வைரக் கல்லக் காணோம். சோத்துல கெடந்த கல்லுன்னு நெனச்சு வைர மோதிரத்திலிருந்து உதிந்து விழுந்த வைரக் கல்லக் கடிச்சும் கடிக்காம முழுங்கிருக் கான் பாவிப்பய. அது கொடல அறுத்துக் கொன்டுபுடிச்சு.
இந்த இழவுச் சேதி போச்சோ இல்லையோ, கிழிஞ்ச சட்டைக்கு ஊசிநூல் தச்சுக்கிட்டிருந்த சுப்பஞ் செட்டியாரு "எம் மக்கா"ன்னு கத்துனாரு வளவிப் பொதி மேல சுருண்டு விழுந்து செத்தேபோனாரு.
பெறந்துவாரது மட்டும் தானய்யா ஒரே வழி சாவுக்குப் பல வழி!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Page 10 of 14 • 1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14
Similar topics
» கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கருவாச்சி காவியம்
» வைரமுத்துவின் கருவாச்சி காவியம் மென்நூல் .
» இலை - கவிப்பேரரசு வைரமுத்து
» ஊழி - கவிப்பேரரசு வைரமுத்து
» இசை - கவிப்பேரரசு வைரமுத்து
» வைரமுத்துவின் கருவாச்சி காவியம் மென்நூல் .
» இலை - கவிப்பேரரசு வைரமுத்து
» ஊழி - கவிப்பேரரசு வைரமுத்து
» இசை - கவிப்பேரரசு வைரமுத்து
Page 10 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|