ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Page 9 of 14 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14  Next

Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 9 Empty கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Mon Apr 26, 2010 10:31 pm

First topic message reminder :

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு வைரமுத்து


'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்கள் எழுதிய 'கருவாச்சி காவியம்' என்ற நூல் வெளியீட்டு விழா 2006 டிசம்பர் 16 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

கலைஞர் கருணாநிதி நூலை வெளியிட, முதல் நூலை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் பெற்றுக் கொண்டார்.


[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 9 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Tue Nov 09, 2010 3:07 am

"விழுந்த கடையை நிமித்திக் குடுத்திருங்க ஒரு வைர மோதிரம் போட்ருங்க கண் கலங்காம வச்சுக் கிறேன் கனகாம்பரத்த... பொண்ணு வீடு பாக்க வந்தப்ப அவன் கேட்டது இந்த ரெண்டே ரெண்டுதான். நியாயமாத் தான் தெரியுதுனு சரி சொல்லிட்டாரு சுப்பஞ் செட்டியாரு.

"மாப்ள! குருவி மாதிரி சேத்த காச வச்சுப் போட்டுக் குடுத்திடறேன் பொட்டிக் கடையை. தங்கச் சங்கிலி ஒண்ணு எரவல் தாரேங்கிறா பெரிய மூக்கி. பொண்ணு கழுத்துல போட்டு அனுப்புறேன் வைர மோதிரம் குடுத்துட்டு வாங்கிக்கிறேன்."

முடிஞ்சுபோச்சு கல்யாணம் முடியல பிரச்னை. நாலு வருசமா அவளுக்குப் பிள்ளையுமில்ல வைர மோதிரமும் வரல. முள்ளங்கி மாதிரி சிக்குன்னு இருந்த கனகம், ஒரே எடத்துல ஒக்காந்து ஒக்காந்து, ரெண்டே வருசத்துல சொரைக்கா மாதிரி பெருத்துப்போனா. ஒடம்பு சொகம் கொறையக் கொறைய குத்தங் கொறைக பெருசாத் தெரியுமா இல்லையா? புதுசாப் போட்ட பொட்டிக் கடையில ஏவாரமும் கம்மி. ரெண்டு காதுலயும் பூரான் புகுந்த மாதிரி "வைரமோதிரம் வைரமோதிரம்"னு அவளக் குத்திக் கொடஞ்சுக்கிட்டேயிருக்கான்.

"எங்கப்பன் வச்சுக்கிட்டு ஒண்ணும் வஞ்சகம் பண்ணலேனு இவளும் சொல்லிச் சொல்லிப் பாத்தா. கொடுக்கும் காம்பும் உள்ள பிராணினு அவனச் சொன்னமா இல்லையா... இப்ப காம்பக் கழத்தி வச்சுட்டுக் கொடுக்கு மட்டும் வச்சு அவளக் கொட்டிக் கிட்டேயிருக்கு அந்தப் பிராணி.

பழனிசெட்டிப்பட்டிக்கு அவ அப்பனும் வாரதில்ல சொக்கத்தேவன் பட்டிக்கு இவளும் போறதில்ல. வைர மோதிரத்துக்கு என்னடா வழினு யோசிச்சுக் கணக்குப் போட்டுக் காய் நகத்துறான் பய. அவ சோறு போட்டு வச்சுட்டு அந்தப் பக்கம் திரும்பி ரசத்துல கரண்டி போடுறதுக்குள்ள, ஒரு கை உப்ப அள்ளிக் குழம்புல போட்டுட்டு "கைக்கிது கைக் கிது"னு கத்திக் கெடுக்கிறான். அவன் பண்ணின இந்த மொதக் கூத்துலயே மூச்சுப் பேச்சில்லாமப் போனா அவ. அது தெளியுமுன்ன ரெண்டாவது கூத்த ஆரம்பிச்சுட்டான். ஆடு உரிக்க உரிக்கக் கடையிலயே கால்கடுக்க நின்னு கறியும் ஈரலுமா வாங்கிட்டு வந்தான். அரைவேக்காட்டுல கொழம்பு மொதக் கொதி கொதிக்க அகப்பைய விட்டு ஈரல மட்டும் எடுத்து வாயில போட்டுத் தின்டுபுட்டு "ஈரலக் காணம்... ஈரலக் காணம்"னு கத்திக் கெடுத்து ஊரக் கூட்டி அவளக் கிறுக்குப்புடிக்க வச்சுப்புட்டான்.

இத்தன எடக்குமடக்குப் பண்ணி எடஞ்சல் பண்ணியும் அழுகுறாளே தவிர, அவ அசையிறா இல்ல. கடைசியா அவளச் சண்டபோட்டு வெளியேத்த சாமியத் தொணைக்கிழுத்துக்கிட்டான். பண்ணக் கூடாத ஒரு காரியம் பண்ணினான் பாவி. வீட்டுக்குள்ள அவன் வேட்டிசட்டை போட்டு வக்கிற கொடியில, அவ மூலையில சுருட்டிவச்சிருந்த முட்டுச்சீலையக் கலந்து தொங்க விட்டுட்டான்.

"அய்யோ அநியாயமே! இந்த அசிங்கத்தப் பாத்தீகளா? கட்ற வேட்டியோட சேத்து முட்டுச்சீலையக் கொண்டாந்து முட்ட விட்ருக்காளே முண்டச்சி மக. இப்படித் தீட்டுப்பட்ட வீட்ல தெய்வமிருக்குமா? தெய்வம் இல்லாத வீட்ல பிள்ள இருக்குமா?" அது இதச் சொல்லி, அவள நொக்கு நொக்குன்னு நொக்கி நிம்மதியில்லாமப் பண்ணிப்புட்டான்.

நாலு வருசம் வாழ்ந்ததுக்குள்ளயே நடு முதுகுல ஏறி மிதிக்கிறவன்... இவன்கூட காலமெல்லாம் எப்பிடிக் காலந் தள்றது? அவன் நெனச்ச மாதிரியே "நான் போறேன் எங்க அப்பன் வீட்டுக்கு"னு புறப்பட்டுட்டா.

"போடீ போ. நான் இல்லாத நேரத்துல தங்கச் சங்கிலியையும் அவுத்திட்டுப் போயிட்டான் ஒங்கப்பன். வந்தா வைர மோதிரத்தோட வா இல்ல வளவிக்காரன் வீட்லயே விழுந்து சா." அன்னைக்கி வந்தவதான் அவ ஒரு மாசம் கழிச்சு இன்னைக்குத்தான் வந்திருக்கான் இவன். கறி கெடைக்கலேன்னா நாக்கக் கடிச்சுத் திங்கிற மாப்பிள்ளைக்கு எலும் பாச்சும் போடணும்னு அம்மாபட்டிக் கறிக் கடையில கடன் சொல்லி, ஆட்டுத் தலையும் எலும்புக் கறியும் வாங்கி ரத்தம் சொட்டச்சொட்ட மஞ்சப் பையில புடிச்சுட்டு வந்தாரு சுப்பஞ் செட்டியாரு.

தலைக் கறி வறுத்து, எலும்புக் கொழம்பு வச்சுக் குடுக்கவும், சட்டியிலருந்த மொத்தச் சோத்தையும் தட்டுல கவுத்து சோறு தெரியாமக் கொழம்பு ஊத்தி ஒரு முங்கு முங்குறான் முத்துக்காமு. அந்த வீட்ல இன்னம் ரெண்டு எள உசுரும் ஒரு கெழட்டு உசுரும் கெடக்கேன்னு நெஞ்சுல ஒரு ஓரத்துலகூட நெனைக்காம எலும்புக்குள்ள இருக்கிற வெந்த ரத்தம் வெளிய வரட்டுமேனு அத வாயில வச்சு உறியோ உறின்னு உறியிறான், உஸ்ஸு உஸ்ஸுன்னு. இருந்தாத்தானே... அது சுப்பஞ் செட்டியாருகிட்டயிருந்து வைர மோதிரம் மாதிரி வரவே மாட்டேங்குது.

ரெண்டு கன்னமும் உப்ப உப்ப சோத்த அள்ளி வாயில அடைச்சுக்கிட்டுக் கேக்குறான்: "நல்ல சாப்பாடு சாப்பிட்டு நாளாச்சு. சொல்லுங்க மாமு... எப்ப அனுப்பப்போறீங்க எங்கூட எம் பொண்டாட்டிய?"

"வந்தா இப்பக்கூட கூட்டிட்டுப் போங்க மாப்ள."

"அது கழுதை வந்திரும் தரையில தவ்வுற மீனு தண்ணிக்கு வான்னா வராமலா போகும்? வர வேண்டியது வருதாங்கிறேன்" சாப்பாட்டுக்குள்ள இருந்த எச்சிக் கைய வெளியில எடுத்து மோதிர வெரல மட்டும் ஒரு ஆட்டு ஆட்டுறான்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 9 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Tue Nov 09, 2010 3:07 am

"மாப்ள... ஒங்களுக்கு நான் கடன்பட்ருக்கேன் இல்லேங்கல. வளவி ஏவாரம் படுத்திருச்சு வளஞ்சும் போச்சு முதுகு. வாழ்ந்த பொண்ணு வாழா வெட்டியா இருக்கா. வளந்த பொண்ணு வீட்ல இருக்கா. நான் வைர மோதிரம் போடுவேனா? வளந்தவளக் கரை சேப்பனா?"

"ரெண்டும் ஒரே வேலையாப் போச்சுன்னா?"

"என்ன சொல்றீக மாப்ள?"

"எளையவளயும் கட்டிக்கிட்டு மூத்தவளயும் கூட்டிட்டுப் போயிடறேங்கிறேன். வைர மோதிரம் மட்டும் போட்டு விட்டுருங்க. மூத்தவளக் கர சேத்ததாவும் இருக்கும். எளையவ எனக்கொரு பிள்ள பெத்துக் குடுத்ததாவும் இருக்கும். என்ன நான் சொல்றது?"

மூணு பேருக்கும் நெஞ்சுக்கூட்டுச் சத்தம் நின்னுபோச்சு மூச்சுப் பேச்சும் நின்னுபோச்சு. கத்துற காக்கா உறுமுற நாயி ஒலக்கைச் சத்தம் சகலமும் நின்னுபோச்சு. அவன் எலும்பு கடிக்கிற சத்தம் மட்டும் கேட்டுக்கிட்டேயிருக்கு.

நகச்சுத்தி வந்தாலும் வீக்கம் வெரலுக்குத்தான..?

கனகாம்பரமும் பவளமும் நெஞ்சுக்கூடு ஒடஞ்சு வந்து அடைமழையா அழுகவும் கண்ணுமுழி கலங்கிப்போனா கருவாச்சி. ஒடைஞ்ச மனச ஒண்ணு சேத்துக்கிட்டு, அக்காதங்கச்சிக ரெண்டு பேருக்கும் நல்ல வார்த்தையா நாலு வார்த்த சொல்றா:

"மூத்தவளுக்குப் பிள்ளையில்ல இளையவள கட்டிக்குடுனு கேக்குறாரு அந்த ஆளு. பொண்ணு கேக்குற ஆள ரெண்டு மூணு கேள்வி கேளுங்கடி. வருசம் நாலுதான் ஆச்சு அதுக்குள்ள மலடின்னா எப்படி? கல்யாணமாகிப் பத்து வருசம் கழிச்சும் பிள்ளையெடுக்கிறவ இருக்காளா, இல்லையா? இன்னொண்ணும் கேக்கணும், பிள்ளை யில்லாததுக்குக் காரணம் மலடியா? மலடனா? அதை எதை வச்சு அளக்குறது?

சரி. ஒன் புருசன் வீரியக்காரன்னே வச்சுக்க... கட்டிட்டுப்போன ஓந் தங்கச்சிக்கும் பிள்ளையில்லாமப் போச்சுனா அதுக்கு மேல கட்டிக்குடுக்க ஒனக்குத் தங்கச்சியில்ல. மூணாவது பொண்டாட்டி கட்ட வேற யாரு தங்கச்சியத் தேடுவான்?

இருக்கட்டும் பொண்டாட்டி ரெண்டுனு ஆன பெறகு, பொட்டைப்பய அவன்தான்னு முடிவாகிப் போச்சுனு வச்சுக்க... ஒரு மலட்டுப் பயலுக்கு ரெண்டு பொண்டாட்டினு ஆகிப் போகுமே, நியாயமா?

மூக்குல குத்துற மாதிரி இன்னொரு கேள்வியும் கேளுங்கடி:

தண்டியும் தரமும் கொப்பும் குலையுமா அக்கா இருக்க ஏன் கேட்டு வாரான் எளையவள? வாரிசுக்கா? அவ வயசுக்கா? இல்ல, வைர மோதிரத்துக்கா?" கருவாச்சி பேசப் பேச அவ வாயையே பாத்து வாயடைச்சு நிக்கிறாக கனகாம்பரமும் பவளமும்.

"ஏண்டி கருவாச்சி, எங்கிட்டிருந்துடி வந்துச்சு இத்தந்தண்டி அறிவு? பல்லாங்குழியில புளிய வெதைய எண்ணிப் போடக்கூட புத்தியில்லாம இருந்தவ சொட்டாங்கல் வெளையாடறப்ப ஒத்தைக் கல்ல ஒழுங்கா எடுத்துட்டு ரெட்டைக் கல் எடுக்கக் குட்டிக்கரணம் போடுறவ அயிரை மீனப் புடிக்கப் போறேனு போயி அரட்டாவளைய அள்ளிட்டு வந்து ஆத்தாகிட்ட பெத்தவ, என்னைக்கிடி வந்துச்சு ஒனக்கு இம்புட்டுப் புத்தி?"

ஒரு பக்க உதட்டுல ஓரமாச் சிரிச்சுக் கிட்டா கருவாச்சி: ஒண்ணும் பேசல. பால் குடிக்கிற பிள்ளைக்கு ஒரு பக்க முந்தானைய ஒதுக்கிக் குடுத்துட்டு, பிள்ள முண்டிமுண்டி முட்டுற சொகத்தக் கண்ணு மூடி அனுபவிச்சுக் கிட்டே சீ கடிக்குது பாரு கழுதைனு பிள்ள தலையில ஒரு செல்லத் தட்டுத் தட்டிட்டுக் கருவாச்சி சொல்றா:

"புத்தி யாருக்கு இல்ல? எல்லாருக்கும் இருக்குடி. என்னா ஒண்ணு... எல்லா புத்தியும் அடைச்சுக் கெடக்கு. கையில ஒரு சுத்தி வச்சு அலைசுக் கிட்டேயிருக்கு காலம். அப்பப்ப புத்தியில பொட்டு பொட்டுனு போட்டுப் போயிக் கிட்டேயிருக்கு. போடுற போட்டுல சில புத்தி தெறந்திருது இதுக்கெல்லாம் அசந்திருவனானு சிலது அடைச்சே கெடக்கு. இருக்கட்டும் பெருசு என்ன சொல்றாரு?"

"புத்தி மாறி உக்காந்திருக்காரு எங்கப்பன். மானம் மரியாதிக்கு அஞ்சி இஞ்சிக் கெடக்கறோம் நாங்க."

"ஒரு ஆறு மாசம் ஆறவிடுங்கடி. மனுசன் கேக்குற கேள்விக்கு மாசம் பதில் சொல்லுமடி. ஆள் செய்யாததை நாள் செய்யும்னு சும்மாவா சொன்னாக?"

யோசிக்கிறா கருவாச்சி. அவளுக்கு அவளே பேசிக்கிறா.

காடு இருக்கு உழுக மாடு இல்ல.
வீடு இருக்கு ஆள் இல்ல.
பிள்ள இருக்கு புருசன் இல்ல.
கை காலு இருக்கு காசில்ல.
மண்ட வலி காய்ச்சல்னு விழுந்தாலும் ஒரு சுக்குத் தண்ணி வச்சுக் குடுக்கச் சொந்தபந்தம் இல்ல.

"செயிக்கிறனோ இல்லையோ தோத்துப் போக மாட்டேன் மாமா" பஞ்சாயத்துல சொன்ன சொல்லு மட்டுந்தான் நெஞ்சாங்குலையப் புடிச்சு நிமிண்டிக்கிட்டேயிருக்கு. பொழைச்சுக் காமிக்கணும்.பொழைக்கிறது முக்கியமில்ல மானத் தோட பொழைக்கணும். நெல்ல வெதைக்கிறோம்... உள்ள அரிசியிருக்கு, வெளிய உமி இருக்கு. அரிசிதான் மொளைக்கிது. ஆனா, உமி இல்லாம அரிசியை மட்டும் வெதைச்சா மொளைக்குமா? மொளைக்காது. அரிசிதான் பொழப்பு உமிதான் மானம். உமியில்லாத அரிசி மொளைக்காது மானமில்லாத பொழைப்புக்கு மதிப்பேது?

சொல்லிக் குடுக்கல யாரும் அவ புத்திக்குள்ள புதுசு புதுசா முட்டுது என்னென்னமோ! ஒடம்பு நோக ஒழைக்கணும். பாடுபட்ட மேனி பவுனு படாத மேனி புண்ணு. ஒரே வேல செஞ்சு ஒண்ணுக்கும் ஆகாது சகல வேலையும் பழகணும். தண்ணியில விட்டாலும் இருக்குமாம் தரையில விட்டாலும் பொழைக்குமாம் தவள மாதிரி இருக்கணும். அண்ணந் தம்பி ஒறவுனாலும் தள்ளி நின்னே பழகணும் சொலவம் சொல்லுதா இல்லையா?


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 9 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Tue Nov 09, 2010 3:08 am

"மெத்தப் பழகுனாப் பித்தாளையும் பீ நாறும்."

என் வாய் உண்டது வகுறு கொண்டது போக மிச்சத்தக் கஞ்சியில்லாமக் கெடக்குற உசுருகளுக்கும் கைகால் வெளங்காத கெழடு கெட்டைகளுக்கும் ஆடு மாட்டுக்கும் காக்கா குருவிக்கும் குடுக்கணும் அள்ளிக் குடுக்கலேனாலும் கிள்ளிக் குடுக்கணும். பிள்ள பெத்த மேனி ஆம்பள சொகம் என்னான்னு அறிஞ்ச ஒடம்பு மூடி மூடி வச்சாலும் உள்ளுக்குள்ள என்னமோ முணு முணுங்கிற பருவம். ஆசைகள எரிச்சு அந்தச் சாம்பல அள்ளிப் பூசாட்டி அந்த ஆசை என்னிய எரிச்சுப்புடும். பிள்ளையப் பெத்த குடிசைக்குள்ள மாசு பொதைச்ச பள்ளத்தி லயே என் ஆசையையும் பொதைச்சுப் புட்டேன். பொதைச்ச ஆச மொளைக்காமப் பாத்துக்க ஆத்தா ஒன்னியக் கையெடுத்துக் கும்புடறேன் காளியாத்தா. நரி நாட்டாம பண்ற ஊர்ல தாய்க் கோழி இல்லாத குஞ்சாத் தனிச்சு நிக்கிறேன். நரி அடிக்க வந்தா, திருப்பி அடிக்கத் திராணி வேணாம் சாமி தப்பிச்சு ஓடி ஒளிய சந்து பொந்து காமி. மானத்துக்குப் பங்கமில்லாத எந்த வேலையும் செய்யலாம்னு முடிவெடித்துட்டா கருவாச்சி.

பூமி வானம் பாத்த பூமி. மனுசங்க பூமி பாத்த மனுசங்க. வேறென்ன தொழில் இருக்கு, விவசாயத்த விட்டா? களையெடுத்தா கருதறுத்தா குழை யறுக்கப் போனா கரட்டுக்குப் போயி வெறகெடுத்து வித்தா.

ஒரு நாள் மலையடிய ஒட்டியிருக்கிற கம்பங்காட்டுக்கு மறுகு கருது பெறக்கப் போனா. மறுகு கருதுங்கிறது வேறொண்ணு மில்ல. கம்பங்காட்ல தலக் கருது வெளைய விலாச் சிம்புகள்ல வெடிச்சு வெளியேறும் இன்னொரு கருது. தலக் கருது அறுத்து முடிச்ச இருபதாம் நாளு அதையும் அறுக்கலாம். பொதுவா அந்தக் கருதுக சக்கை யாத்தான் இருக்கும் சாவியாத்தான் கெடக்கும். அதனால் காட்டுக்காரக அத அறுக்கறதில்ல. வந்த சனம் போற சனம் அறுத்திட்டுப் போகட்டும்னு விட்ருவாக.

தோள்ல தொட்டி கட்டிப் பிள்ளையப் போட்டுக்கிட்டு, அதுக்கொரு சீனி முட்டாயி வாங்கிக் குடுத்து அழுகைய அமத்திட்டு, மசங்கற வரைக்கும் மறுகு கருது அறுத்துப் பாத்தும் குட்டிச் சாக்குல முக்காச் சாக்கு நெறையல. பிள்ளைய இடுப்புல சொமந்து கருதுச் சாக்கத் தலையில சொமந்து மொட்டக் கெணத்துப் பொலி வழியா நடந்து வாரப்ப எதுக்க வந்து நில்லுனு நிறுத்துனான் பன்னியான் பேரன்.

"எங்கருந்து கருதறுத்து வாரவ?"

"நாயக்கர் வீட்டுக் காட்ல."

"அது அப்ப எங்கண்ணன் கட்டையன் குத்த கைக்கு எடுத்த காடு."

"அறுக்கிறப்ப யாரும் தடுக்கல அறுத்த பெறகு ஏம்ப்பா மறிக்கிற?"

"தீத்துட்டுப் போன சிறுக்கிக்குப் பேச்சென்ன பேச்சு?"

அவ தலையிலிருந்த கருதுச் சாக்க விசுக்குனு புடுங்கி வீசியெறிஞ்சான் மொட்டக் கெணத்துல. கருதுச் சாக்கு கெணத்துக்குள்ள விழுந்த சத்தம் அடங்கு முன்ன அவன் கம்பங்காட்ல ஓடிக் காணாமப் போனான்.

"இருங்கடா... தெய்வம் கேக்குமடா ஒங்கள..." ஆத்தாளுக்கு என்னமோ ஆகிப்போச்சுனு பிள்ள வீல்னு கத்துன கத்துல கெணத்துக்குள்ளிருந்து ஆகாயத் துல- யாரோ அம்பு தொடுத்த மாதிரி சிவ்வுனு பயந்து பறந்து வருதுக, அப்பத்தான் போய் அடைஞ்ச நெய்க் குருவிக.

ஒரு வாய்க் கூழ்கூட இல்லாம ஏறு வெயில்ல கருதறுத்து அதையும் பறிகுடுத் திட்டு, கண்ணெல்லாம் பஞ்சடைஞ்சு கைப் பிள்ள சொமந்து போறா கருமாயப் பட்ட கருவாச்சி. கொண்ணவாயன நெனச்சாத் தான் கும்பி எரிஞ்சுபோகுது கருவாச்சிக்கு. யாரு பெத்த பிள்ளையோ? கஞ்சியில்லாத வீட்டுக்கு நீதாண்டா ராசானு ஈசன் இவன் தலையில எழுதிருச்சோ? கட்டை வேகிற காலம் வரைக்கும் காலடி நிழல்லயே கெடக்கப் போற ஒரே சொந்தம் இந்தக் கிறுக்குப் பயலாத்தான் இருப்பான் போலிருக்கு. தான் கொலபட்டினியாக் கெடந்தாலும் அவன் கும்பாவப் பழைய கஞ்சி ஊத்தியாச்சும் நெப்பிவிட்றணும். இப்படியெல்லாம் நெனச்சுக் கெடந்தவ நெஞ்சிலயும் நெருப்பு விழுகுது லேசுலேசா. அவன் முன்ன மாதிரி இல்ல. விடிஞ்சும் ஒறங்குறான் வெறிச்சு விட்டம் பாக்கிறான் கூடையில அள்ள வேண்டிய சாணியச் சட்டியில அள்ளுறான். அழகு சிங்கத்தத் திண்ணையில விட்டுட்டுத் தெருவுக்கு ஓடிப் போறான். ஒண்ணும் புடிபடல அவன் போற போக்கு. சடையத்தேவர் வீட்டு ஆளுக செய்வினை செஞ்சிருப்பாகளோ? பாப்பம்.

பொழைக்க ஒரு புது வழி பாக்கணுமே!

கருவாச்சி பெரிய மனுசியான அணுசுல ஆத்தா பெரியமூக்கி அவளுக்குப் பருத்திப் பால் பாயாசம் வச்சுக் கொடுத்திருக்கா. அந்த மாதிரி ஆயுசுல குடிச்சதில்லனு சொல்லியிருக்காக அத ருசி கண்டவுக. பருத்திப் பால் பாயாசம் செய்யிற கம்பசூத்திரம் தெரியும் கருவாச்சிக்கு. பாயாசம் போட்டு ஊருக்குள்ள வித்தா என்னன்னு யோசிச்சா மறுநாள் செஞ்சேபுட்டா. அன்னக்கி ராத்திரி அரை வீச பருத்தி வெதையத் துண்டா ஊறப் போட்டா. அரைப்படி பச்சரிசி கொஞ்சம் உளுந்து இத்துனூண்டு வெந்தயம் மூணும் கலந்து மொத்தமா ஊறவச்சா. அரைக்காப்படி பாசிப் பயறைப் போட்டு இன்னொரு ஏனத் துல தண்ணி ஊத்திவச்சா. ஊறவச்ச பருத்தி வெதையோட இஞ்சியும் ஏலக்காயும் கலந்து ஒரல்ல போட்டு, கோழி கூப்பிடக் கொண்ணவாயன எழுப்பி "ஆட்றா மகனே ஆட்றா"ன்னா. அவன் ஒறங்கி விழுந்துக்கிட்டே ஒரல ஆட்றான். சக்கைப் பதம் வரவும் அதுல தண்ணி ஊத்திப் பருத்திப் பாலப் புழிஞ்சா பாத்திரத்துல. அப்படி மூணு ஆட்டி ஆட்டி மூணு புழி புழிஞ்சா. ஊறப் போட்ட பச்சரிசியக் குருணப் பதத்துக்கு ஆட்டி அள்ளிவச்சுக்கிட்டா. ரெண்டு வீச கருப்பட்டிய நுணுக்கிவச்சுக் கிட்டா அரைத் தேங்காயத் துருவிவச்சுக் கிட்டா.

இப்பப் பத்துப் படி தண்ணிய ஒரு அடுப்புக் கூட்டிக் கொதிகொதினு கொதிக்கவிட்டா. ஊத்துனா அதுல பருத்திப் பால. கிண்டிக்கிட்டே முழுப் பாசிப் பயற உள்ள அள்ளிக் கொட்னா. அது முக்காப் பதம் வேக்காடு கண்டதும் பச்சரிசி மாவ உள்ள கொட்டிக் கலக்கோ கலக்குனு கலக்குனா. கொதி பதம் வந்ததும் கருபட்டித் தூளை வெதச்சு தேங்காத் துருவலைத் தெளிச்சு எறக்கிவச்சா. நான் இங்கே இருக்கேன்னு தெருவுல போற ஆளுக்கெல்லாம் தகவல் சொல்லுது பாயாசம். ஒரு போணி ஓரணானு அவ விக்க ஆரம்பிச்சதும் கஞ்சிப் பொழுதுக்குள்ள காணாமப்போயிருச்சு பாயாசம்.

பத்தே நாள்ல கருவாச்சி பாயாசத்துக்குக் கிறுக்குப் புடிச்சுப் போயிருச்சு ஊரு. விடிய்ய பல்லு வெளக்காமப் பாயாசம் குடிச்சுப் பழகிருச்சு சொக்கத்தேவன் பட்டி. செலவெல்லாம் போக அவ கையில நித்தம் நிக்கிது ஒண்ணே முக்கா.

கட்டையன் பதறிப் போனான். "ஏய்! இப்படியே விட்டா ஈரு பேனாகிப் போகும் பேனு பெருமாளாகிப் போகும். அவ பாயாசச் சட்டியில பல்லியடிச்சுப் போடுங்கடா."


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 9 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Tue Nov 09, 2010 3:08 am

"நீ சும்மா இருண்ணே... அவ பொழப்புல ஆப்படிக்கிறதுக்கு இன்னொரு வழி வச்சிருக்கேன்." மறுநாள் பாயாசப் பானையத் தலையில சொமந்து கோழி கூப்புட கருவாச்சி தெருவுல எறங்கி நடக்க... அதுக்கு முன்ன பாயாசம் வாங்கிக் குடிச்சுக்கிட்டிருக்கு ஒரு கூட்டம். அதே மாதிரி ஈயக்குண்டா, அதே மாதிரி போணி வச்சு ஓரணாவுக்கு ரெண்டு போணின்னு ஊருக்கே ஊத்திக்கிட்டிருக்கா கன்னியம்மா. ஊர்ல ஒரு மாதிரியான பொம்பள அவ. முப்பது முப்பத்தஞ்சு வயசிருந்தாலும் சும்மா செவ்வாழத்தாரு மாதிரி சிலுப்பி நிக்கிறவ. அவளுக்கும் வேற பொம்பளைகளுக்கும் தெருவுல சண்டகிண்ட வந்து "தெரியாதா ஒன்னிய... அவனத்தான நீ வச்சிருக்க"னு கேட் டுட்டா... "ஒனக்குத் தெரிஞ்சு அவன் ஒருத்தன்தாண்டி... எனக்குத்தான தெரியும் என்னிய வச்சிருக்கிற நாலு பேர்ல ஒம் புருசனும் ஒரு ஆளுனு"இப்படிப் பதில் சொல்ற ஏடாகூடமான பொம்பள.

அவளுக்குக் கட்டையன் ஆளுக துட்டக் குடுத்துத் தட்டேத்திவிடவும் ஓரணாவுக்கு ஒரு போணினு விக்கிற பாயாசத்த இவ ஓரணாவுக்கு ரெண்டு போணினு வித்து கருவாச்சி பொழப்பக் காலி பண்ணிப்புட்டா.

ஏவாரம் அத்துப்போச்சு, கைக் காசு கொறஞ்சுபோச்சு, சென மாடு தீவனமில்லாமக் கெடக்கு, சதசதசதனு ஈரமிருந்தும் உழாமக் கெடக்கு காடு. காய்ச்ச(ல்) தடுமன்னு பத்துப் போட்டுக் கெடக்கு பெத்த புள்ள.

இந்த வருசச் சம்பளம் வேற குடுக்கல கொண்ணவாயனுக்கு. கொட்டத்துல சாணியள்ளி, தூக்குச் சட்டியில கூழ் ஊத்தி வச்சுக்கிட்டு "மேய்ச்சலுக்கு ஓட்டிட்டுப் போடா மகனே பசுமாட்ட"னு கொண்ணவாயனக் கூப்பிட்டா, அவன் சாட்டக் கம்பத் திண்ணையில போட்டுட்டு ஒடிஞ்ச ஒடம்பு வளைஞ்சு நின்னு சொல்றான்: "சி... சி... சின்னத்தா... நான் ஊர்ல போயிக் க...க...க... கல்யாணம் பண்ணிக் கு...கு...கு... குடும்பம் நடத்தப் போறேன். ச...ச...ச... சம்பளத்தக் குடுத்திட்டா... நான் வே...வே... வே... வேலைய விட்டு நின்னுக்கிறேன்."

அவன்கிட்ட எதிர்பாக்கல அவ அந்த வார்த்தைய...

காதுக்குள்ள பாஞ்ச முள்ளு கண்ணுக்குள்ள எட்டிப்பாக்குற மாதிரி அவ கண்ணவிட்டுத் தவ்விருச்சு கண்ணீர்த் துளி ரெண்டு.

செத்தவடம் நெஞ்சப் புடிச்சு ஒக்காந்துபோனவ நொட்டாங்கையில ரெண்டு கண்ணையும் தொடச்சுக்கிட்டா.

"போடா! ஏலே போடா. எல்லாம் அந்து போயி என் இத்த வேருக்குக் கீழ ஒட்டிக்கிட்டிருந்த ஒத்த வேரு நீயும் அத்துக்கிட்டுப் போறயா? போ! ஒத்தையில பிள்ள பெத்தவளுக்கு ஒத்தையில சாகத் தெரியாதா? போங்கடா, போறவனெல்லாம் போங்கடா!"

அழுகை நிக்கல பாவம் அழுகப் பெறந்தவளுக்கு!

சொக்கத்தேவன் பட்டியைக் கடக்கிற வரைக்கும் மாருல கல்லக் கட்டி நடந்த மாதிரி, மனசு கனத்துத்தான் கெடந்துச்சு கொண்ணவாயனுக்கு. கஞ்சி ஊத்துன வீட்ட விட்டுப் போறமே, காத்தா அலஞ்சு திரிஞ்ச காட்ட விட்டுப் போறமே, தீனிக்கு ஏங்குற சென மாட்ட விட்டுட்டுப் போறமேங்குற வருத்தம் ஒரு பக்கமிருக்க, நாம போனா ஊடும் பாடும் ஒத்தாச பண்றதுக்குச் சின்னத்தாவுக்கு நாதி இல்லையே, அழகு சிங்கத்தத் தூக்க ஆளில்லையேங்கிற கவல தான் குறுக்குல குத்துது கொண்ணவாயன.

ஊரு கடந்து ஒத்தையடிப் பாதையில வந்து சேர, நெஞ்சில இருந்த பாரம் கொஞ்சமா எறங்கி பையில இருந்த பாரம் கனக்குது லேசா. பையத் தாண்டி எண்ணெயப் பையக் கசியவிட்டு, நான் இங்கே இருக்கேங்குது உள்ளுக் கிருக்கிற அதிரசம். முறுக்கும், சீடையும் ஒண்ணுக்கொண்ணு முட்டி, குட்டிக் கலாட்டாப் பண்ணி வருதுக.

என்னியக் கட்டப் போறவ பேரென்ன... பேரென்ன?னு பையிக்கு வெளிய பிதுங்கி நாக்கத் தொங்கப்போட்டுக் கேக்குது, தேனிச் சந்தையில வாங்கித் திணிச்ச மஞ்சச் சீல. அவ பேரு அய்யக்கா அவ பேரு அய்யக்கானு க்ளிங் மொழி பேசுதுக காயிதத்துல சுத்திவச்ச கண்ணாடி வளவிக.

அவுந்த வேட்டியக் கட்ட அவன் கையத் தூக்கவும், எதேச்சையா மேல வந்த பையி மூக்குல ஒரு முட்டி முட்டிப் போனதுல, அடிக்குது பைக்குள்ள அய்யக்கா வாசம். இன்னைக்கு நேத்துப் பழக்கமா அவனுக்கும் அய்யக்காவுக்கும். பத்துப் பதினோரு வயசுல ஊர் மாடு மேய்க்கப் போனவன் இவன். ஊர் மாட்டுக்குப் பின்னாலயே சாணி பெறக்க வந்தவ அவ. சாட்டைக்கம்புக்குக் கால் சட்டை போட்டுவிட்ட மாதிரி இவன். முருங்கக் காய்க்கு முந்தான சுத்துன மாதிரி அவ. இவனவிட மூணு மாசம் அவ பெரியவ தான் ஆனா, பெரிய வித்தியாசமில்ல உருவத்துல. கொண்ணவாயன் அப்பன் ஒரு குடிகாரன் அய்யக்கா அவுக ஆத்தா ஒரு ஓடுகாலி. பொழச்சாப் பொழைங்க செத்தா சாங்கனு ரெண்டு பேரையும் தெருவுல விட்டுட்டாக அவன் அப்பனும் இவ ஆத்தாளும்.

மாடுதான் சொந்த பந்தம்னு ஆகிப்போச்சு இவனுக்கு சாணிதான் கஞ்சினு ஆகிப்போச்சு அவளுக்கு. கஞ்சிப் பொழுதுக்கு ஊர் மாடு ஓட்டிக் கெளம்பிடுவான் கொண்ண வாயன். நாப்பது அம்பது மாடுகள முன்னுக்குவிட்டு இவன் பின்னுக்குப் போக கூடையத் தூக்கிக்கிட்டு கூடவே வருவாக சாணி பெறக்கிற அஞ்சாறு பொம்பளைக. அந்தப் பொம்பளைக போடுவாளுகய்யா ஒரு சண்ட, சும்மா பானிப்பட்டு யுத்தம் மாதிரி ஒரு சாணிப்பட்டு யுத்தம். எந்த ஒரு மாடும் சாணி போடுற துக்கு முன்ன மொதல்ல வாலத் தூக்கும்.

தூண்டிக்காரன் தக்கையிலயே கண்ணு வச்சிருக்கிற மாதிரி வால்லயே கண்ணு வச்சிருப்பாளுக சாணி பெறக்கிற பொம்பளைக. எந்த மாடு வாலத் தூக்குதுனு கண்டுபுடிச்சு ஏஞ்சாணி... ஏஞ்சாணினு எவ மொதல்ல கத்துறாளோ, அவளுக்குதான் சட்டப்படி பாத்தியப்படும் சாணி.

அய்யக்காவுக்கு ஒரு காலு இழுவை வெரசா நடக்க மாட்டா. சாணியப் பாத்தாக் கூடைய விட்டுருவா கூடையப் பாத்தா சாணிய விட்ருவா. எத்தனையோ நாள் ஏமாந்து போயி வெறுங்கூடையோட வீடு சேந்திருக்கா. அவளப் பாக்கப் பாக்கக் கொண்ணவாயன் மனசு ஓரமா உருகுது. எப்பிடியும் அவ கூடைய நெப்பி அனுப்பணுங்கற ஒரு நெனப்பு நெஞ்சுக்குழியப் பிறாண்டுது.

இவனே ஒரு ஏற்பாடு பண்ணுனான் எந்த மாடு வயிறு நெறையக் குழை தின்டுச்சோ, எந்த மாட்டுக்குச் சாணிச் சத்து அதிகமோ, அந்த மாடுகள எடது பக்கமா நிறுத்தி ஓட்டி, அய்யக்காவ அதே பக்கம் முன்னுக்கவிட்டு இவன் பின்னுக்கப் போறான். மாடு வாலத் தூக்க ஒரு எம்பு எம்ப, இவன் அய்யக்கா தோளத் தடவுவான். அதுக்குள்ள அவ "ஏஞ்சாணி... ஏஞ்சாணி"னு கத்திருவா. இப்பவெல்லாம் நித்தம் நித்தம் நெறஞ்சுபோகுது கூடை.

இப்படியே அஞ்சாறு மாசம் அவுக காலம் நடக்குது. வரவர கூடையில சாணியும் மனசுல காதலும் பெரும்கனம் கனக்குது.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 9 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Tue Nov 09, 2010 3:09 am

நித்தம் கூடைய நெப்பிக் குடுக்கிற சாணீஸ்வரனுக்கு அச்சுவெல்லம், பணியாரம், அவிச்ச மொச்சையெல்லாம் கொண்டு வந்து குடுக்க ஆரம்பிச்சுட்டா. இப்படிச் சேந்த கூட்டுக் கிளிக ரெண்டும் கூட்டு ஏவாரம் பண்ணப் பழகிருச்சுக. அதாவது சாணி தட்டி விக்கிதுக. சாணியில மாட்டுச் சாணி கொஞ்சம் கெட்டி எருமச் சாணி கொஞ்சம் கூழு. ரெண்டையும் சேத்துப் போட்டு கொழச் சாத்தான் கெடைக்கும் எருத்தட்ட ஏத்த பதம். அய்யக்காவுக்கு நல்லாப் புடி பட்டிருக்கு சாணிய எருவாக்குற சங்கதி. உமிக்கருக்கு, புளியஞ்சருகு, நெல்லுச்சண்டு மூணையும் போட்டு ரெண்டு சாணியிலயும் கலப்பா. என்னமோ மண்டவெல்லம் புடிக்கிற மாதிரி ஆசைஆசையா உருண்ட புடிப்பா. உருண்டைய எடுத்துத் திரும்பவும் உமியில வச்சு ஓங்கித் தட்ட... அது சப்பட்டையாப் போகும். அத அப்படியே எடுத்துப் புளியமரத்துலயோ சுவத்திலயோ அடிச்சு ஒரு வாரம் காயவிடுவா எருவாயிரும்.

உற்பத்தி அய்யக்கா ஏவாரம் கொண்ணவாயன். ஆப்பக்கடை ராசம்மாவுக்கும் தோட்டி துடியாண்டிக்கும் எருவ வித்து வடையும் கெழங்கும் வாங்கித் தின்ட காலம் கரையாத அச்சுவெல்லக்கட்டியா இனிச்சுக் கெடக்கு மனசுக்குள்ள இன்னும். அய்யக்காவ நெஞ்சுல சொமந்து வெயில்ல நடந்து வேர்த்து வந்தவன் எருத் தட்டுற புளியமரத்து நெழல்ல ஒதுங்குனான். புல்லரிக்குது தேகம் பூரா. அய்யக்கா அய்யக்கானு கத்துது புளியமரத்துல ஒரு காக்கா. புளியமரத்து அடித்தண்டுல எருத் தட்டுன பழைய தடத்துல போயிப் படுத்துக்கிட்டு இன்னிக்கி எந்திரிக்கிறாப்பில இல்லேங்குது இருதயக்கூடு.

வெவரம் தெரியாத வயசுல மனசுல பச்ச குத்துது பாருங்க ஒரு பழைய நெனப்பு... அழியிறதில்ல அது ஆயுசு பரியந்தம்.

புளியமரம் கடந்து கிளியாம்பாறை எறங்குனா வந்திரும் பாம்பாறு. பாம் பாத்துல எறங்கி நின்னானோ இல்லையோ ஒடம்பெல்லாம் அவனுக்குப் பாயாசம் பாயுது. உள்ளங்கால் நனைக்கிற தண்ணியில நின்னு ஓடவிடுறான் மனச பழைய காலத்துமேல. அன்னக்கி ஓடுன தண்ணி இன்னக்கி இல்ல அந்தப் பழைய மணலுமில்ல ஆத்துல. அன்னக்கி இச்சி மரத்துல நின்னு எங்கள வேடிக்க பாத்த கொக்கும் குருவியும் செத்தேபோயிருக்கும் இந்நேரம்.

அவளையும் என்னையும் அல்லாட விட்டு அழகு பாத்த அந்த நாளு, கால சமுத்திரத்துல விழுந்த ஒத்த மழைத் துளியா உருவழிஞ்சு போயிருக்கும். ஆனா ஞாபகம் சாகுமா? சாகாது. அந்தா! அந்த எடந்தான் அவ விடுகதை போட்டது. இந்தா! இந்த எடந்தான் நான் மீன் சுட்டுக் குடுத்தது.

உச்சிப் பொழுது.

கம்முனு இருக்கு காடு. இல தழை ஆடல. காசு குடுங்க, இல்லாட்டிக் காயிதம் போடுங்க... அப்பத்தான் வருவேங்குது காத்து. எல்லாக் கைகளையும் தூக்கி ஆகாயத்தக் கும்பிட்டு ஆடாம அசையாம மழை வரம் கேக்குதுக மரங்க. வடை சட்டியில போட்டு ஈரல வறுத்தெடுக்கிற மாதிரி, வெயில் சட்டியில போட்டு பூமிய வறுத் தெடுக்குது சித்திரை மாசம். தரிசுக் காடு மேஞ்சு வந்த மாடுக தாகத்துக்கு எறங்குதுக ஆத்துக்குள்ள, ஆத்துக்குத் தேமல் விழுந்த மாதிரி அங்கங்க திட்டுத்திட்டாக் கெடக்கு தண்ணி. மூங்கி மரத்து நெழல்ல சரிஞ்சு சாஞ்சாக கொண்ணவாயனும் அய்யக்காவும்.

எருவு வாங்குனதுக்குத் துட்டுக்குப் பதிலா சுடுகாட்டுப் பொரியும் தேங்காச் சில்லும் குடுத்திருந்தான் தோட்டி துடியாண்டி. ஒரு வாய் பொரி, ஒரு கடி தேங்கா யுமா மாத்திமாத்தித் தின்டுக்கிட்டுக் கத பேசுதுக ரெண்டும்.

"எ... எ... எ... எங்க வீட்டுக்கு வா... வா... வா... வாக்கப்பட்டு வாரப்ப... எ... எ... எ... என்ன கொண்டு வருவ?"

"மொறையா வந்து பெண்ணு கேளு மொற செய்யிறத அப்புறம் பாக்கலாம்."

"எங்கப்பன் சொ... சொ... சொ...சொல்லிருச்சில்ல. எங்க வீட்டுக்கு நீ மொ... மொ... மொ... மொறப் பொண்ணாம். மூ... மூ... மூணு முடிச்சில மூக்கணாங்கயிறு போ... போ... போட்டுற மாட்டேன்."

"மூணு முடிச்சு அப்புறம் மொதல்ல மூணு கதை சொல்றேன் அத விடுவி பாப்பம்."

"சொ... சொ... சொ... சொல்லு. கே... கே... கேப்பம்."

வாயில கெடந்த பொரிய ஒரு கடவாப் பல்லுலயிருந்து மறு கடவாப் பல்லுக்குத் தள்ளி மென்னு அரைச்சு ஒரே முழுங்கா முழுங்கி உள்ள தள்ளிட்டுச் சொல்றா அய்யக்கா.

"பொட்டு வைக்காத சாமி ஒரு சாமி
காலு கழுவாத சாமி ஒரு சாமி
ஒட்டுத்துணி கட்டாத சாமி ஒரு சாமி
மொத்தம் மூணு சாமி என்ன சாமி?"


"சொ... சொ... சொல்லிப்பிட்டா?"

அவளுக்குத் தெரியாதா? அவன் தலையைத் தரையில ஊன்டி மருத வரைக்கும் போனாலும் இந்த மூணு சாமியும் சொல்றதுக்கு அவனுக்கு மூளை இல்லைனு... அந்த தைரியத்துல
சொல்றா."கோழியடிச்சுக் கொழம்புவச்சு உள்ளங்கையில சோறாக்கிப் போடுறேன் ஒனக்கு. சொல்லாட்டி?"

"சொ... சொ... சொ... சொல்லாட்டி... இ... இ... இ... இங்கேயே மீன் சுட்டுத் தாரேன்."

"அதையும் பாப்பம்."

அவன் முக்குறான், மொனகுறான் உருமால அவுக்குறான் உள்ள முடியிலயும் ஒண்ணு ரெண்டு கொட்டிப் போக தலையச் சொறியிறான். என்னமோ ரெண்டு கைகளுக்கு மத்தியில தேங்காய வச்சு ஒரே அமுக்குல அமுக்கி ஒடைக்கிறவன் மாதிரி, ஒண்ணுமில்லாத உள்ளங்கைய நசநசனு நசுக்கிறான். வாய்க்கு வந்த வார்த்தையெல்லாம் கொண்ணிக் கொண்ணிச் சொல்லிப் பாக்குறான் ஒண்ணும் கதையாகல.

"நீ... நீ... நீ... நீயே சொல்லு?"


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 9 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Tue Nov 09, 2010 3:09 am

ஒண்ணுஞ் சொல்ல முடியாமத் தோத்துப்போன தொத்தப்பய, அவ குதிகால எடுத்து உள்ளங்கையில போட்டு உருவோ உருவுனு உருவவும், மண்ணாங்கட்டி மேல மழை பேஞ்ச மாதிரி அவ கரைஞ்சுபோனா கரைஞ்சு. கேட்டுக்க கேணனு வாய்க்குள்ளயே மொனகிக்கிட்டு, அவ போட்ட கதைய அவளே விடுவிக்கிறா.

"வருணபகவான்னு கும்புடுறமா இல்லையா தண்ணிய... அதுல பொட்டு வச்சா நிக்குமா? அதான் பொட்டு வைக்காத சாமி. கோமாதானு கும்புடறமா இல்லையா பசுவ... அது சாணி போட்டாக் கால் கழுவுதா? அதான் காலு கழுவாத சாமி. அக்கினி பகவான்னு கும்புடறமா இல்லையா தீய... அது துணி கட்டுமா? அதான் ஒட்டுத்துணி கட்டாத சாமி."

அவ சொல்லச் சொல்ல... அவன் கண்ணும் வாயும் விரிஞ்சது பாருங்க... "ஒனக்கு ரொம்பப் பெ... பெ... பெ... பெருசுடியாத்தா மூ... மூ... மூ.... மூள."

அவ சொன்ன கதைக்கு அவளே பதிலைச் சொல்லிட்டா. அவன் சொன்ன வேலைய அவன் செய்யணுமா இல்லையா? செஞ்சான்.

ஆத்தோரமா இருந்த கோரைக்குள்ள கையவிட்டு ரெண்டு மூணு குரவ மீனப் புடிச்சான். சொறிக் கல்லுல ஒரசி, கொதிக்கிற ஓடை மணலுக்குள்ள குழி தோண்டிப் புதைச்சான். அந்த வேக்காட்ல வெந்து தணிஞ்சிருச்சு மீனு. எடுத்தான் முள்ளிருக்கக் கறிய மட்டும் உருவி உருவி ஊட்டிவிட்டான். ஓடி முடிஞ்சுபோச்சு காலம் ஆனா ஆத்துக்குள்ள சுத்திக்கிட்டேயிருக்கே மீன் வாசம்.

அதுக்குப் பெறகு குடிகாரத் தகப்பன் துட்டுக்கு ஆசப்பட்டு அவன சொக்கத் தேவன்பட்டியில பண்ணைக்கிருக்க வச்சதும் திருவிழா தீபாவளிக்கு வாரப்பெல்லாம் வளவியும் பலகாரமும் வாங்கியாந்து குடுத்து ஓடையில ஒளிச்சுத் தின்னதும் ஆடு மாடுகளோட அய்யக்கா நெனப்பையும் சேத்து மேச்சதும் ஈசானிய மூலையிலருந்து மழை எறங்கி வந்தா, அ... அ... அய்யக்கா எருவ ந... ந... நனச்சிராதனு ஆகாயத்தச் சாட்டக்கம்ப வச்சு அடிக்கப்போனதும் அவளுக்குத் தாலித் தங்கம் வாங்க எச்சியக் குடிச்சுக்கிட்டே காச மிச்சம் பண்ணுனதும் இந்தா இப்ப மஞ்சச் சீலையோட, கருவாச்சி குடுத்த காசோட, புது மாப்ள முறுக்கோட ஊர் திரும்புறதும் நெனச்சா, கனாக் கண்ட மாதிரியிருக்கு கிள்ளிப் பாத்தா வலிக்குது நெசந்தான்.

ஆறு தாண்டி, மேடு ஏறி இறங்கி, ஒத்த ஆலமரம் கடந்தா ஊரு வந்திரும். அந்தி மசங்க இந்த ஆகாயம் என்னென்னா கூத்துக் கட்டி ஆடுது? புதுசா மருதாணி போடுது புளிச் புளிச்சுனு வெத்தல போட்டுத் துப்புது மார்லயும் மூஞ்சியிலயும் மஞ்சப் பூசிக் குளிக்குது எத்தன நிறமடா சாமினு ஒண்ணு ரெண்டு மூணு எண்ணி முடிக்குமுன்ன கரேர்னு கருப்புத் தார் பூசி அத்தன நெறத்தையும் அழிச்சிட்டுப் போயிருது.

வந்திருச்சு ஊரு. எருக்குழி தாண்டி எடப்பக்கம் திரும்புனா அவன் தெருவு. அடுத்த சந்து அய்யக்கா வீடு. கோழி கூப்பிட சாணியக் கரச்சுச் சட்டியில எடுத்துக்கிட்டு வாசத் தொளிக்க வந்த கருவாச்சி பலகைக் கல்லுல படுத்திருந்த உருவத்தக் கண்டதும் பயந்து போனா. கதவு தொறந்த சத்தம் கேட்டதும் பளிச்சுனு முழிச்சு, கருவாச்சி கால்ல மளார்னு விழுந்து உருண்டு உருண்டு அழுகிறான் கொண்ணவாயன் புடிச்ச கால விடாமப் பெரண்டு பெரண்டு அழுகிறான்.

"ஏய்! என்னடா இது..? எந்திர்றா..." அவ சாணி சட்டியக் கீழ போட்டுட்டுப் பதறிப்போனா.

நல்ல நாள்லயே சொல்லு சொந்த மில்ல அவனுக்கு. நெஞ்சில முள்ளுத் தச்சு நெல கொலஞ்சு அழுகிறவன் என்னத்தச் சொல்லப்போறான் பாவம்.

"ஏலே! கால விடுறா கண்ணத் தொடச்சுக்கடா எந்திர்றா என்னாச்சுனு சொல்றா?"

மண்ணுல மூஞ்சியத் தேச்சுக் கிட்டே அழுது சொல்லுது அந்த அரைப் பெறவி.

"அவுக ஆ... ஆ... ஆத்தா பட்ட கடனுக்கு அய்யக்காவக் க... க... க... கல்யாணம் பண்ணிக்கிட்டான் எ... எ... எ... எங்கப்பன். எனக்கு சா... சா... சாகத் தைரியம் இல்ல ஆத்தா. ஓ... ஓ... ஓடியாந்துட்டேன். என் கட்ட வேகுமட்டும் ஒங் காலடியவிட்டுப் போ... போ... போ... போகமாட்டனத்தா! இ... இ... இருந்தாச் சோறு. செ... செ... செத்தா வாய்க்கரிசி போடுவியா?"

ஆத்தா செத்தன்னக்கிக்கூட அழுகாத கருவாச்சி அன்னக்கி அழுதா. கொட்டிக் கெடந்தவனக் குனிஞ்சு அள்ளுனா. "நீதாண்டா எம் மூத்த மகன். காலமெல்லாம் ஒனக்குக் கஞ்சி ஊத்துறண்டா! நான் செத்தா நீ தூக்கிப் போடு நீ செத்தா நான் தூக்கிப் போடுறேன் அழுகாதடா."

அவன் கொண்டு வந்த பை மேல கோழி ஒண்ணு தவ்விப்போனதுல க்ளிங்... க்ளிங்னு சத்தம் போட்டுது ஒடைஞ்சுபோன ஒரு வளவி. என்னிய எடுத்துக் கண்ணத் தொடச்சுக்கனு எட்டிப்பாக்குது பைக்கு வெளிய மூஞ்சியத் தொங்கப்போட்ட மஞ்சச் சீல. வாசத் தொளிக்கிற வரைக்கும் காத்திருக்குமா? விடிஞ்சிருச்சு பொழுது!

"சீ...சீ...சீ... சின்னத்தா... கெ...கெ...கெ... கெடையவிட்டு ஒ...ஒ...ஒ... ஒதுங்கி வந்துருச்சு ஒரு கெ...கெ...கெ... கெடாக்குட்டி. வீ...வீ...வீ... வீட்டுக்கு எடுத்துட்டு வந்துட்டேன்." பிள்ளையத் தூக்கி வச்சிருக்கிற தாய் மாதிரி நெஞ்சுல சொமந்து கொண்டாந்த செம்பிலி ஆட்டங்குட்டியக் கொண்ணவாயன் தாங்கித் தரையில எறக்கிவிடவும் புது எடத்தச் செத்தவடம் வெறிச்சு வெறிச்சுப் பாத்த குட்டி, மளார்னு ஒரு தவ்வுத் தவ்வி மான் குட்டி மாதிரி ஓடுது.

பிள்ளைக்கு ஒரு பக்க மார ஒதுக்கிப் பால் குடுத்துக்கிட்டிருந்த கருவாச்சி, பிள்ளையப் பிரிச்சு மாரை ஒழுங்குபண்ணிக்கிட்டே புடி புடி புடினு ஓடி வாரா பிள்ளையத் தூக்கிக்கிட்டே. தவ்வி ஓடி காடிக்குள்ள விழுந்துபோன கெடாக் குட்டியக் கொண்ணவாயன் புடிச்சுத் தூக்கி வரவும், புடிக்கி அடங்காம அவன் கைய விட்டு ஒழுகுது கழுத. கைத்தாங்கலா கருவாச்சிகிட்ட எறக்கிவிட்டுட்டுப் பின்னங்கால் ரெண்டையும் புடிச்சு உக்கார்றான் கொண்ணவாயன்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 9 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Tue Nov 09, 2010 3:09 am

குட்டியத் தொட்டுத் தொட்டுப் பாக்குறா கருவாச்சி. தலையத் தடவுறா தாடைய உருவுறா எளங் காது ரெண்டையும் வருடி வருடிப் பாக்குறா. வெள்ள வெளேர்னு இருக்கு தோலு. பளிங்காங் குண்டுக மாதிரி மினுக்மினுக்குனு மின்னுதுக கண்ணுக ரெண்டும். ரெண்டு நாளோ மூணு நாளோதான் இருக்கும் குட்டி பெறந்து. பெறந்த பிள்ளையக் கழுவித் தொடச்சு வெயில்ல காயவச்ச மாதிரியே இருக்கு குட்டி.

நீங்க வேணும்னா பாருங்க... எல்லா மனுசங்களையும் உத்துப் பாத்தா ஒரு மிருக மூஞ்சி தெரியும் எல்லா மிருகங்களையும் உத்துப் பாத்தா ஒரு மனுச மூஞ்சி தெரியும். கருவாச்சி குட்டிய நேராப் பாத்தா ஆடாத் தெரியுது அட்டத்துல பாத்தா ஒரு ஆளாத் தெரியுது. உத்துப் பாத்தா உள்...ளுக்கத் தெரியுது ஒரு சொந்தக்கார மூஞ்சி.

"புடிடா பிள்ளைய"னு அழகுசிங்கத்த அவன் கையில குடுத்துட்டு, ஆட்டுக் குட்டியத் தூக்கி மடியில போட்டு மாரோட அழுத்திக் கிட்டா. அவ அழுத்துன அழுத்தத்துல பிதுக்குனுப் பிதுங்கிப் பீச்சியடிச்சு முந்தானைய நனைச்சுட்டுப் போகுது ரெண்டு மூணு சொட்டுத் தாய்ப்பாலு.

கெடாக் குட்டிக்கு முத்தங்குடுத்து மோந்து பாத்துக்கிட்டே சொல்றா... "இது காட்ல வந்த பொருள் இல்லடா கொண்ணவாயா, கடவுளாப் பாத்துக் குடுத்தது. ஒத்தையில பிள்ளப் பெத்தன்னக்கே, தாயும் பிள்ளையும் தனித்தனியா ஆக்கிட்டா ஒனக்குக் கெடா வெட்டுறேன் தாயினு காளி யாத்தாவுக்கு நேந்துக்கிட்டேன். என்னைக்கி வெட்டுறது? பொழைச்சுக் கெடந்தன்னிக்கி வெட்டிக்கிரலாம்னு புத்தி சொல்லிச்சு. நீ என்னக்கிப் பொழைக்கிறது... என்னைக்கி எனக்கு வெட்டுறது... இந்தா வளத்து வெட்டிக்கனு கெடாக் குட்டியக் குடுத்துருக்கா காளியாத்தா... தெய்வம் தந்த பொருள் தெய்வத்துக்கே சேக்கணுமடா."

"ஆட்டுக்குட்டிக்கு ஒரு பே...பே...பே... பேருவைக்கணும் சின்னத்தா."

"இது செம்பிலி ஆடு இல்லடா, செம்புலிடா. பூலித்தேவன்னு வைடா."

"பூ...பூ...பூ... பூலித்தேவா! ஒ...ஒ...ஒ... ஒனக்குப் புல்லு வைக்கிறேன் வா." வச்சு முடிச்சவுடனயே ஒரு திக்கு வாய் மூலமாப் பேரு தொலங்க ஆரம்பிச்சுருச்சு. பிள்ள பெத்த வீடு தானியம் அடிச்ச வீடு வயசுப் பொண்ணு கொலுசு மாட்டி அங்கிட்டும் இங்கிட்டும் அலையற வீடு கல்யாணம் நிச்சயமான வீடு மாடு கன்டு போட்ட வீடு... இதெல்லாம் எப்பவும் கலகலப்பாயிருக்கும் பாத்துக்குங்க. இதுல கெடையில கெடாக் குட்டி கெடச்ச வீட்டையும் சேத்துக்கிரலாம் இப்ப. அழுத பிள்ளைக்கு பால் குடுத்தமாங்கிறதும் ஆட்டுக் குட்டிக்குத் தண்ணி வச்சமாங்கிறதும் ஒண்ணாகிப்போச்சு கருவாச்சிக்கு.

அருகம்புல்லுல எளம்புல்லாப் புடுங்கிக் கூடையில போட்டுவச்சா குட்டி கடிக்க. அகத்திக் கீரையில எளந்தழையா வாங்கி, கடிக்க ஏதுவான எடத்துல கட்டிவிட்டா. குட்டியக் கயிறுபோட்டுக் கட்டிவச்சா இழுக்கிற இழுப்புல கழுத்து புண்ணாகிப்போகுமா இல்லையா... அதுக்காக கொண்ணவாயனவிட்டுக் கொட்டத்துல குச்சி கட்டச் சொல்லி ஒரு படலும் போட்டுவிட்டு, இந்த எல்லைக்குள்ள நீ தவ்விக்க... வெளை யாடிக்க... செல்லச்சேட்டை பண்ணிக்கனு விட்டுட்டா குட்டிய.

மிருகங்க, மரங்களப் பொறுத்துப் பொதுவா ஒரு விதி வச்சிருக்கு இயற்கை. பூமியில நெடுங்காலம் இருந்து வாழப்போறதெல்லாம் நின்னு நிதானமா வளரும். ஆயுசு அற்பமானதெல்லாம் பட்டுனு வளந்து பொட்டுனு போயிரும். விறுவிறுனு வளந்து பூத்துக் காஞ்சு ஓஞ்சுபோகுது முருங்கமரம். நூறு வருசம்... எரநூறு வருசம் நிக்கிற புளியமரம் நான் வாரபோதுதான் வருவேனு பையத்தான் வருது. பதினஞ்சு பதினாறு வருசந்தான் ஒரு கெடாய்க்கு ஆயுசு. ஆனா, அது வளர்ற வேகம் ஒங்க வீட்டு வேகம் எங்க வீட்டு வேகம் இல்ல. கையில புடிச்சுப் பாத்துக்கிட்டேயிருந்தாலே கண்ணுக்குத் தெரியும் அது வளர்றது. ரெண்டே மாசத்துல ஒரு கெடாய்க் கான லட்சணத்தோட நின்னு நிமிந்துபோச்சு குட்டி.

"ஏலே கொண்ணவாயா! அழகுசிங்கம் நான் பெத்த பிள்ளடா. பூலித்தேவன் என் தத்துப் பிள்ளைடா"சொல்லிச் சொல்லிக் குளுந்துபோனா கருவாச்சி. சொன்னது மட்டுமில்லாம செய்யிறா.

அழகுசிங்கத்துக்குப் பாலு பூலித்தேவனுக்குப் புளிச்ச தண்ணி.
அழகுசிங்கத்துக்குப் பருப்புச் சோறு பூலித்தேவனுக்குப் பழைய கஞ்சி.
அழகுசிங்கத்துக்கு முட்டாயி பூலித்தேவனுக்கு ஆமணக்கங் கொழ.
அழகுசிங்கத்துக்குத் தொட்டிலு பூலித்தேவனுக்கு திண்ணை.
அழகுசிங்கம் வயித்துக்கு வேப்பெண் ணெய் பூலித்தேவன் வயித்துக்கு உப்பு.

பிள்ளைக வயித்துல புழுவுக பூச்சிக இருந்தாப் பசி குடுக்காது தவிரவும் குடுக்கிற பால புழுப் பூச்சிக குடிச்சுட்டுப் போயிரும். அதுக்குத்தான் வேப்பெண் ணெயச் சுடவச்சு எளஞ்சூட்ல
புகட்டி விட்டா பிள்ளைக்கு. அகத்திக் கொழ அந்தக் கொழ இந்தக் கொழனு திங்கிறதுல பூலித்தேவன் வகுத்துக்குள்ளயும் புழு பூச்சிக வருமா இல்லையா... அதுக்கொரு வைத்தியம் பண்ணுனா கருவாச்சி. கையில அஞ்சாறு உப்புக்கல்ல எடுத்தா பூலித்தேவன் வாயத் தெறந்து உப்புக்கல்ல உள்ள போட்டு அலசோ அலசுனு அலசிவிட்டா. நாக்குல ஒரு சொரசொரப்புத் தட்டுப்படற வரைக்கும் தேய்தேய்னு தேய்ச்சுவிட்டுத் தூக்கியெறிஞ்சா கொளத்துல நடுத் தண்ணிக்குள்ள. உப்புத் தின்னவன் தண்ணி குடிச்சாகணுமா இல்லையா? தண்ணியக் குடிச்சுக் குடிச்சு வாயில இருந்த உப்ப உள்ள முழுங்கிட்டு, ஒரே நீச்சுல கரைக்கு நீந்தி வந்து கருவாச்சி காலடியில எந்திரிச்சு ஒரு சிலுப்புச் சிலுப்புது பாருங்க... என்னமோ அங்க மட்டும் மழை பெய்யற மாதிரி சிலுசிலுசிலுனு தெறிக்குது தண்ணி.

நீச்சுத் தண்ணி மொச்சத் தோலு துவரம் பொட்டு புண்ணாக்குத் தண்ணி அகத்திக் கீர, ஆமணக்கு எல வேப்பங் கொழ கம்பங் கூழு பாலாட்டாங் கொழ எல்லாம் மாத்தி மாத்திக் குடுக்க... ஆறே மாசத்துல பூசுனாப்புல வடிவம் குடுத்து நிக்கிது பூலித் தேவன். பின்பக்கத் தொடையில வயித்த ஒட்டி அழுத்துனா கொழ கொழனு பிடிபடுது கொழுப்பு. காட்டுல அடிச்ச மின்னல்ல காளான் முட்டுற மாதிரி லேசா முட்டி மொளைச்சு வருது கொம்பு ரெண்டும். காவக்காரச் சக்கணன் ஆடு வளக்குறதுல ஒரு வல்லாளகண்டன். ஆடு இருமுனா என்னா அர்த்தம், செருமுனா என்ன அர்த்தம், செனையாடு எத்தன குட்டிபோடும். அதுல எத்தன கெடா, எத்தன மருக்க... எல்லாம் சொல்வாரு. அவரு ஆட்டுக்குன்னே பெறந்தவரா இல்ல, ஆட்டுக்கே பெறந்தவராங்கிற கொழப்பம் ரொம்ப நாளா இருக்கு ஊருக்குள்ள தீந்த பாடு இல்ல. அவருதான் சொல்லிக்குடுத்தாரு: கெடாய்க்கு மட்டும் அப்படியே விட்டுரக் கூடாதாம் மொதல்ல மொளைக்கிற கொம்ப வெரசா வளராதாம் வளந்தாலும் பலமிருக்காதாம். நாளப் பின்ன முட்டுக்கெடா எதாச்சம் முட்டவந்தா அடி தாங்காம முறிஞ்சு போயிருமாம். கொம்பு ஒடிஞ்சா ஒடிஞ்ச எடம் புண்ணுவச்சிருமாம் புண்ணுவச்ச எடம் புழுவு வச்சிருமாம். அதனால புடுங்கி எறிஞ்சிரணுமாம் மொதல்ல மொளைக்கிற கொம்ப. சக்கணன் சொன்னாச் சரியாயிருக்கும்.

கெடாய்க்குக் கொம்பு புடுங்குறா கருவாச்சி. பிள்ளையத் தூக்கிப் போடுற மாதிரி கெடாயத் தூக்கி மடியில போட்டுக்கிட்டா. செல்லமா கொஞ்சித் தாடையத் தடவிக் கொடுத்துக் கொம்ப இழுத்துப் பாத்தா வரல. ஆனமட்டும் திருகிப் பாத்தா அசையல. கல்லெடுத்து ரெண்டு போடு போடலாமானு யோசிச்சா. மொளைச்ச கொம்பு வாரதுக்குப் பதிலா மூள வெளிய வந்துட்டா? வேணாஞ் சாமினு விட்டுட்டா படக்குனு குனிஞ்சு வாயில கவ்விக் கடவாப் பல்லுல அணைச்சுக் கடக்குனு ஒரு கடி கடிச்சா கொம்ப. களக்குனு கழண்டு துண்டா வந்திருச்சு கொம்போட கூடு. கூடு கழண்டோடி விழுந்ததுல குருத்துலயிருந்து கொப்புளிக்குது ரத்தம். கசியிற ரத்தத்து மேல அடுப்புச் சாம்பல அள்ளிச் சப்புனு அடிக்கவும் சட்டுனு நின்னுபோச்சு ரத்தம். அதுக்குப் பெறகு ஆறே மாசத்துல சும்மா திருகி வளந்து திமிறி நிக்குது கொம்பு. கருவாச்சி கெடாக் கொம்பு, வருசநாட்டு யானையக்கூட வகுந்துபுடும் வகுந்துனு பேசுது ஊரு.

பூலித்தேவன்னு என்ன நேரத்துல பேருவச்சாளோ, வேங்கப்புலி மாதிரி படந்து நிக்கிது பதினெட்டு மாசத்துல. ஊருக்கெல்லாம் புலியாத் தெரியிற கெடா அவகிட்ட மட்டும் குட்டிபோட்ட பூனையா, காலுக்குள்ளயே சுத்தி வருது. ஆட்டு மொழி அவளுக்குப் புரியுது. அவ மொழி ஆட்டுக்குப் புரியுது. அவ ஒரு வார்த்தையும் சொல்லாம உதட்டுல பிர்ருனு ஒலியெழுப்புனா, எக்கால் போட்டு அது எம்புட்டு ஒசரத்துல மேஞ்சுக்கிட்டிருந்தாலும் இந்தா வாரேன்னு ஓடி வந்துருது. கெச் கெச் கெச்னு பல்லி கத்துன மாதிரி கத்துனா, தப்பான பாதையவிட்டுச் சரியான பாதையில கூடிருது. பூலித்தேவன முன்னுக்கவிட்டு இவ முள்ளு கிள்ளு தச்சு உக்காந்து போனா... கருவாச்சி வாசனையக் காணமேனு முன்னுக்கப் போன கெடா ஓடிவந்து இவ மூஞ்சிய மோந்து பாத்துக் கூட்டிக்கிட்டுப் போகுது.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 9 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Tue Nov 09, 2010 3:10 am

ஒரு நாள் பூலித்தேவனக் கையில புடிச்சுக் கொளத்தங்கரை மேல வந்துக் கிட்டிருக்கா ஒத்தையில. அலத் தண்ணி அடிச்சு அடிச்சு கரையில ஒரு கல்லு கழண்டு இருந்திருக்கு. கல்லு மேல காலு வச்சவ யாத்தேனு அலறிக் கல்லோட கொளத்துல விழுந்துபோனா. திரும்பிப் பாத்துச்சோ இல்லையோ பூலித்தேவன் மளார்னு தவ்விருச்சு தண்ணியில. கருவாச்சிய முதுகுல ஏத்திக்கிட்டுக் கசக்கு புசுக்குனு நீச்சலடிச்சுக் கரைய யேறிருச்சு. அவளும் கொம்பு ரெண்டையும் கெட்டியாப் புடிச்சுக்கிட்டு, புலி மேல ஏறி வர்ற அய்யப்பன் மாதிரி பூலித்தேவன் மேல ஏறிக் கரை சேர்ந்துட்டா. கரை சேந்தவ பூலித் தேவனக் கட்டிப்புடிச்சு அழுதிருக்கா பாருங்க ஆத்தா ஞாபகம் வந்திருச்சு. ஆத்தோட போகத் தெரிஞ்சவளக் காப்பாத்துனா ஆத்தா கொளத்துல விழுந்தவளக் காப்பாத்துச்சு ஏம் பிள்ள. பெத்தவ என்னியக் காப்பாத்துனது பெரிசில்ல வளத்தவளக் காப்பாத்திடுச்சே நான் வளத்த புள்ள இதான் பெருசு. அன்னிக்கிருந்து பூலித்தேவன நெனச்சா கண்ணு கலங்குது கருவாச்சிக்கு. பிள்ளைக்குப் பால் குடுத்துக்கிட்டே கும்பாவுல சோறு போட்டுத் திம்பா அப்பவெல்லாம் ஒரு வாய் தான் தின்னுக்கிட்டு ஒரு வாய் ஊட்டிவிடுவா பூலித்தேவனுக்கு.

முன் திண்ணையில பாய் போட்டு, பாயில பிள்ளையப் போட்டு படுத்திருப்பா ஒரு ஓரத்துல அதே திண்ணையில பூலித்தேவனும் படுத்திருக்கும் கொஞ்ச தூரத்துல. அந்த இடைவெளிய நெரப்புமய்யா பூலித்தேவன்கிட்டயிருந்து வர்ற கோமிய வாசம். அந்த வாசன தூக்கத்தத் தூக்கியாந்து அவ கண்ல உக்கார வச்சிட்டு ஓடிப்போயிரும். எல்லாருக்கும் புடிச்சிராது அந்த வாசம். சில பேருக்கு அந்த வாசன கொடலப் புடுங்கிக் கூடையில போட்டுட்டுப் போயிரும். மத்தவகளுக்கு அது நாத்தம் அவளுக்கு அது வாசம்.
ஒரு கதையிருக்கா இல்லையா, மீன்காரிக அஞ்சாறு பேரு சேந்து மீன் விக்கப் போயிருக்காக பக்கத்து ஊருக்கு. வித்துட்டு வெறுங் கூடையத் தலையில கவுத்து வீடு வாரப்ப மழை புடிச்சிருச்சு. அனாதிக் காடு ஒதுங்க எடமில்ல. சுத்திமுத்தியும் பாத்தா ஒரே ஒரு ஓல வீடு தெரியுது. ஓடிப்போயி ஒதுங்குறாக.

அது ஒரு பூக்காரி வீடு.

"விடிய விடிய விடாது மழை, உள்ள வந்து படுங்க"னா பூக்காரி. மீன் கூடைய வெளிய கவுத்து வச்சிட்டு உள்ள போயிப் படுத்தாக ஒருத்திக்கும் ஒறக்கம் வரல. மீன் வாசத்துலயே பழகிப்போன பொம்பளைகளுக்குப் பூவாசம் பொறுக்க முடியல. பெரண்டு படுக்கிறாக மூக்கப் பொத்திப் படுக்கிறாக கவுந்து படுக்கிறாக கதைக்கு ஆகலை கண்ணு மூடல. பூ வாசத்துல மூச்சுப் போகுது பொம்பளை களுக்கு. கடைசியா என்ன பண்ணாக தெரியும்ல... வெளிய வச்சிருந்த மீன் கூடைய எடுத்து வந்து தலைக்கு வச்சுப் படுத்தாக. பூ நாத்தம் போயி மீன் வாசம் வந்துருச்சா, ஊர் சுத்தப் போயிருந்த ஒறக்கம் ஓடிவந்திருச்சு ஓடி. வாசமா... நாத்தமாங்கிறது யாருக்குத் தெரியும்? அந்தந்த மூக்குதான அறியும்! அப்படித்தான் பூலித்தேவனோட சாணி வாசம் சந்தன வாசம் ஆகிப்போச்சு கருவாச்சிக்கு. பொடிய எடுத்து மூக்குக்குள்ள இழுக்கிற ஆளுகளுக்கு ஒரு கிறுக்குப் புடிக்கிற சொகம் இருக்கிற மாதிரி, பூலித்தேவன் தோல்ல அடிக்கிற கவிச்சி வாசத்துல ஒரு பித்தேறிப் போச்சு கருவாச்சிக்கு.

பாசத்தக் குடுத்து வாங்க ஆளில்லாமப் போற மனசு, ஏதாவது ஒரு பிராணி கெடச்சாலும் ஓடிப் போயி ஒட்டிக்கிருது. பூலித்தேவன் மேல பாசமாகிப்போன கருவாச்சி, அது நேந்துவிட்ட கெடாங்கிற நெனப்பழிஞ்சு போனா.

"யம்மா கருவாச்சி! காளியாத் தாளுக்கு நேந்துவிட்ட கெடாங்கிற. காலா காலத்துல வெட்னாத்தானத்தா காளியாத்தாளுக்கும் சந்தோசம் கறி திங்கிற ஆளுக்கும் சந்தோசம். ஒன்றரையிலேந்து ரெண்டரை வயசுதான் கெடா வெட்டுற பதம். கறி தீங்கறியாயிருக்கும். என்னப் போல பல்லுப்போன ஆளுகளும் தின்னுக் கிறலாம் ரெண்டு துண்டு. ரெண்டரை வயசுக்கு மேல போச்சுனு வச்சுக்க வெளங்காது கறி. சவசவனு ஆகிப் போகும். பல்லில்லாதவன் ரப்பர் செருப்ப வேகவச்சுத் திங்கிற மாதிரி ஆகிப்போகும், கறி திங்கிறவன் கதை. கெடா பெருங்கெடா, முத்திப்போறதுக் குள்ள வெட்டிப்புடு தாயி பங்குனிப் பொங்கலுக்கு."

உருமாப் பெருமாத்தேவரு சொல்லிட்டுப்போன சொல்லக் கேட்டதும் ஒறக்கம் வரல கருவாச்சிக்கு. ஊத்தெடுத்து ஒழுகுது கண்ணீரு. நெசந்தான் இத நான் ஆடா வளந்திருந்தா பலி குடுத்திருப்பேன். பிள்ளையாவில்ல வளத்திருக்கேன். எப்படிப் பலிகுடுக்க?

விடிய்ய... அழகுசிங்கத்த இடுப்புல வச்சு பூலித்தேவனக் கையில புடிச்சுக் கருவாச்சி நடந்துட்டா காளியம்மன் கோயிலுக்கு, சாமிகூடச் சண்டை புடிக்க!

"ஆத்தா! காளியாத்தா! நெஞ்சில வஞ்சகமில்ல கண்ணுல கபடமில்ல ஒங்கிட்ட ஒப்பிக்க வந்திருக்கேன் கேட்டுக்க. ஒனக்குக் கெடா வெட்டுறேனு நான் நேந்துக் கிட்டது நெசந்தான். இந்தாடியாத்தா வளத்து வெட்டிக்கனு கெடாக்குட்டி குடுத்தவளும் நீதான். ஒம் மேல சத்தியமாச் சொல்றேன் கெடாவ ஒனக்குனுதான் வளத்தேன். அதுக்குப் புல்லு வச்சதும் ஒனக்காகத்தான் புளிச்சத் தண்ணி வச்சதும் ஒனக்காகத்தான். போகப் போக எனக்குப் புத்தி மாறிப்போச்சு. புல்லு திங்க வந்தது புள்ளையாப்போச்சு. ஆடா வந்தது ஆளாப்போச்சு. கைவளப்பு வளத்தேன் காலுக்குள்ளேயே கிடக்கு. ஏங்கூட அது பேசுது அதுகூட நான் பேசுறேன். என் சிணுக்குப்புடிச்ச சீல வாசன அதுக்குப் புடிச்சுப்போச்சு. அந்த மேல் குளியாத தோல் வாசம் எனக்குப் புடிச்சுப்போச்சு. இப்ப எப்படி வெட்றது? இந்தா... முழிச்சு முழிச்சு மூக்கொழுகி நிக்கிறானே நான் பெத்த பிள்ள... இவன் பெறப்புக்குத்தான் ஆடு வெட்டறதா நேந்துக்கிட்டேன். பெத்த பிள்ளைக்காகத் தத்துப் பிள்ள தலய வெட்டலாமா? நீயே சொல்லு நியாயமா? ஆத்தா ஒன் நேத்திக்கடன நான் இல்லேங்கல. தெரிஞ்சதப் பாருனு சொல்லிட்டுத் திரும்பிப் போக வரல. எம் பொழப்புதழப்பு நல்லாருந்தா சந்தையில ஒரு கெடாய வெலைக்கு வாங்கி வெட்றேன். அதுக்கும் எனக்கும் விதியில்லையா... நான் வளத்த பூலித்தேவன் தன் சாவு வந்து செத்தா ஒன் வாசல்ல குழியெடுத்துப் பொதைச்சுக் கும்புட்டுப் போயிடறேன். என்ன நான் சொல்றது?"!

சொல்றதச் சொல்லிப்பிட்டேன் செய்யிறதச் செஞ்சுக்கனு நெனச்சுக் கிட்டு, பூலித்தேவன ஒரு கையிலேயும் பிள்ளைய ஒரு கையிலேயும் புடிச்சு விறுவிறுனு கருவாச்சி வெளி யேறிட்டா கோயிலவிட்டு.

சுத்துவட்டாரமெல்லாம் பூலித்தேவன்... பூலித்தேவன்னு பெரும் பேராகிப்போச்சு. அது வீட்டவிட்டு வெளியேறி வீதிக்கு வந்து, கடகடகடனு தலையாட்டிக் கொம்ப ஒரு சிலுப்புச் சிலுப்பி, ரெண்டு பக்கமும் அண்ணாந்து பாக்கிற அழகப் பாக்கவே வேலவெட்டியப் போட்டுட்டு வெளியே நிக்கிது ஊரு சனம். "புலிக்கும் பூலித்தேவனுக்கும் சண்ட வந்தா, புலியப் போட்டுத் தள்ளிருமப்பா பூலித்தேவன்"னு பேசுது ஊரு. அஞ்சாறு ஊருக்குப் பொலிகடா அதுதான். அப்பப்பப் போயி வம்சவிருத்தி வேற பண்ணிட்டு வருது.

"பூலித்தேவன் கொம்பத் தொட்டுப்புட்டா ஒரு ரூவா"பல பேரு பந்தயம் போட்டுத் தொடப்போயி, துண்டக் காணோம் துணியக் காணோம்னு ஓடி விழுந்து ஒளிஞ்சிருக்காக. மந்தையில இருந்த ஒரு செந்நாயி எப்பவும் இதப் பாத்து உர்றுஉர்றுனு உறுமிக்கிட்டேயிருந்துச்சு. பூலித்தேவன் தலையெடுத்த பெறகு தன் பதவி போச்சேனு காமாரம் அதுக்கு. பூலித்தேவன் பதவிய அது பறிக்க முடியலைனாக்கூட நானும் இருக்கேன்னு அப்பப்ப உறுமி அறிக்கை விட்டுக்கிட்டேயிருந்துச்சு. அந்தப் பல்லுச் செத்த நாயி தன்னப் பாத்துப் பம்மிப் பம்மிக் குலைக்கிறத, கொஞ்ச நாளாவே அட்டஞ் சாச்சுப் பார்த்துக்கிட்டேயிருந்துச்சு பூலித்தேவன். ஒரு நாள் வள்ளுனு அது வாயத் தெறக்கவும், தலையத் தரையில சாச்சுக் கொம்புக்கு மத்தியில கோத்து எடுத்து, ஓங்கி ஒரு சுத்துச் சுத்தி வீசியெறிஞ்சதுல வேலியோரத்துல போயி விழுந்துபோச்சு நாயி. முள்ளு மேல விழுந்த வாழப்பழத் தோலு மாதிரி மூஞ்சி தொங்கிக் கெடக்கு பாவம். ஒடிஞ்ச ஒரு காலத் தூக்கிக்கிட்டு, இனி ஒன் வம்புக்கே வரல சாமினு மூணு கால்ல நடந்து போனதுதான். அப்புறம் கண்ணுள்ளவுக யாரும் அந்த நாய ஊருக்குள்ள பாத்ததா ஒரு தகவலும் இல்ல.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 9 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Tue Nov 09, 2010 3:10 am

"கருவாச்சி ஒரு கெடா வளக்குறா ளாமப்பா காளமாடு மாதிரி"முத்தணம் பட்டி, மொதலக்கம்பட்டி, கரட்டுப் பட்டி, பிராதுக்காரன்பட்டி இங்க யெல்லாம் இதே பேச்சாகிப்போச்சு.

பொறுக்குமா கட்டையன் வகையறாவுக்கு? கட்டையன் ஏற்கெனவே கொம்பு கூரான ஆளு. இதுல கொம்பு சீவி விடவும் ஒரு கூட்டம் கூடவேயிருக்கு. நான் சும்மாயிருக்கேன்... சும்மாயிருக்கேன்னு மரம் சொன்னாலும் காத்து ஒறங்கவிடுதா?

"யண்ணே! கட்டையண்ணே! ஒனக்குத் தொழுவெல்லாம் மாடு இருக்கு. என்னா புண்ணியம்? மந்தை மந்தையா ஆடு இருக்கு. எவனும் எட்டியாச்சும் பார்த்ததுண்டா? ஒத்த ஆட்ட வச்சுக்கிட்டு ஊரே பாரு... நாடே பாருனு கண்காட்சி காட்டிக் கிட்டிருக்காளே கருவாச்சி."

"அவளே ஆம்பளையில்லாத வீட்டுக்கு அவசரத்துக்கு ஆகும்னு ஆட்டுக்கெடா வளத்துக்கிட்டிருக்கா. விடுங்கடா, ஏலே விடுங்கடா."

"அதுக்கில்லண்ணே அவ என்ன சொல்லி அலையிறா தெரியுமா? என் கெடாய ஒரு கெடா முட்ட வந்துச்சு என் கெடா அடிச்ச அடியில அது தோல் கிழிஞ்சு தொங்கிப்போச்சு. என் கெடாக் கொம்புல ஒரு நாய் சிக்குச்சு. இது ஒரே தூக்காத் தூக்கி எறிஞ்சதுல அது ஊரவிட்டே ஓடிப்போச்சு. என் கெடாக் கொம்புல கட்டையன் மட்டும் மாட்டட்டும். பெறகு, பொதைக்கப் பொணம் கெடைக்காதுனு சொல்றாளாமில்ல."

"அப்படியா சொன்னா?"

"அதான் கேள்வி."

"தீர மாட்டேங்குதே திமிரு, அத்து விட்டும் பெத்து அலையிற கழுதைக்கு. ஏலே, அவள வழிமறிச்சு வம்புக்கு இழுங்கடா."

"வேணாம்ணே நல்லால்ல..." உலகத்துல இன்னம் மிச்சமிருக்கிற நல்லவங்கள்ல ஒருத்தன் சொடக்கெடுக்கிற மாதிரி சொல்லிப் பாத்தான். அவன ஆளுக்கொரு சாத்துச் சாத்திக் கும்மி நொறுக்கிக் கூடையில அள்ளிட்டானுங்க. அவன ஆச தீர அடிச்சுக்கிட்டான் பொண்டாட்டி கிட்ட நித்தம் மிதி வாங்குற ஒருத்தன்.

"போறோம்... ஆடு மாட்டுதா அவ மாட்றாளானு பாக்குறம்ணே..."

அடுப்பெரிக்க ஆகுமேனு கவுண்டர் வீட்டு அழிவு காட்ல பருத்திமாரு புடிங்கிச் சொமந்து வாராக கருவாச்சியும் கனகாம்பரமும். சிறுத்த பொம்பளையாயிருந்தாலும் கனத்த கட்டு கருவாச்சி கட்டு. கனத்த பொம்பளையாயிருந்தாலும் கட்டு சின்னக் கட்டு கனகாம்பரத்துக்கு. காடு மேடு ஓடி வம்பாடுபடாத பொம்பளைங்கிறதால கனத்த கட்டுச் சொமந்தா கழுத்து செத்துப்போகும்னு சிறு கட்டு சொமந்து வாரா கனகாம்பரம். முன்னுக்க போறா கனகாம்பரம் பின்னுக்க வாரா கருவாச்சி. மூஞ்சிக்கு முன்னால பறக்கிற ஈயோட மல்லுக் கட்டித் தலையத் தலைய ஆட்டிக்கிட்டு இவங்க ரெண்டு பேரையும் தொடுத்து வருது பூலித்தேவன். பாதையில கெடந்த கருவேல முள்ளு ஒண்ணு, போயிக்கிட்டிருந்த கருவாச்சியப் போட்டுப் பாத்துருச்சு. முள்ளுத் தச்ச கால மேல தூக்கி, கட்டு மேல இருந்த கையக் கீழ எறக்கி, தச்ச முள்ள அவ எடுக்கவும், வாரேன்னு ஒரு பாதி முள்ளு வெளிய வந்திருச்சு போறேன்னு ஒரு பாதி உள்ள போயிருச்சு.

அதுக்கே கலங்கிப்போனா கனகாம் பரம் "அய்யய்யோ முள்ளா?"

"பொழப்பே முள்ளுக்குள்ள கெடக்கு. இதுல உள்ளங்கால்ல முள்ளுத் தச்சா உசுரா போயிரும்?"முறிஞ்ச முள்ளத் தூக்கி எறிஞ்சா கருவாச்சி.

"நீயாச்சும் முள்ளுக்கு வாக்கப்பட்டு முறிச்சுப் போட்டுட்ட. முள்ளோடதான என் பொழப்பே போய்க்கிட்டிருக்கு."

"இப்ப என்ன சொல்றான் ஒம் புருசன்?"

"கட்னா மச்சினிச்சியக் கட்டுவேன்... இல்லாட்டிக் காவி கட்டுவேங்கிறாரு."

"மச்சினிச்சிக்கும் பிள்ள பெறக்க லேனு வச்சுக்க... காவிதான் கட்டி யாகணும் கடைசியில. மூணு வருசமா ஒன்னிய வாழாவெட்டியாவே விட்டுட்டான் பாரு, பாறாங்கல்லுக்குப் பெறந்த பய. அவன் ஒன்னையும் நெனைக்கல சாகப்போற நாளையில ஒங்கப்பனையும் நெனைக்கலையே."

"அந்த ஆளுக்கு எங்க மூணு பேரு மேலயும் ஆசை இல்ல கருவாச்சி ஒரே நோக்கம் மோதிரத்து மேலதான்."

"இதென்னடி கூத்தா இருக்கு. மோதிரமா பிள்ள பெறப்போகுது முழுகாம இருந்து? எனக்கு எங்க ஆத்தாள நெனச்சாலும் கண்ணீர் வருது. ஒங்கப்பன நெனச்சாலும் கண்ணீர் வருது. ஒங்களக் கரை சேப்பாரோ... இல்ல கரை சேர்ந்துருவாரோ தெரியலையே. ஒண்ணாமண்ணாக் கெடந்து ஒண்ணா மண்ணா வளர்ந்து நம்ம ரெண்டு பேரு பொழப்பும் இப்படி ஆகிப்போச்சே!

எனக்கு அப்பப்ப ஒரு ஏக்கம் வரும் கனகு."

"என்னா ஏக்கம்?"

"பொம்பளப் பிள்ளைக வயசு பத்துப் பன்னண்டோட நின்டுபோகக் கூடாதா? அந்த ஓடை மண்ணு, நெலா வெளிச்சம், கிளித்தட்டு வெளையாட்டு, அவிச்ச மொச்ச, அச்சுவெல்லம், ஆத்தாகிட்ட ஒரு அடி, அப்பன்கிட்ட ஒரு வசவு, தாத்தன்பாட்டி மடியில பொதைஞ்சு ஆத்தா அடிச்சுப்புட்டானு அழுகுற சொகம், வெவரமில்லாத மனசு வெள்ளந்தி வயசு, அது அப்படியே இருந்திருக்கப்படாதா? பெரிய மனுசியாகாமலே கெழவியாகி, போதும் பொழப்புங்கிறப்ப போய்ச் சேந்திரக் கூடாதா?"

பொழப்பு சலிச்சுப்போறபோதோ, சிக்கலுக்குச் சிக்கெடுக்க முடியாமப் போறபோதோ, இதுக்கு மேல என்னாலானது எதுமில்லேனு நடை செத்துப் போகும்போதோ மனுசக் கூட்டம் இயற்கைக்கு விரோதமா கற்பன செஞ்சு பாத்துக்கிருது. அந்தக் கற்பன இந்தா இந்தா இந்தானு இழுத்துக் கடவுள்கிட்டப் போய் முடிஞ்சிருது. இதுக்கு மேல ஈசன் தலையெழுத்து என்னானு பாப்போம்ங்கிற முடிவோட பருத்திமாரு சொமந்து போகுதுக பாவப்பட்டதுக ரெண்டும்.

பொழுதுபோற நேரம்.

ஊர் எல்லையில அரச மரத்தடிக் கல் திட்டு மேல சீட்டு வெளையாடிக் கிட்டிருக்காக அஞ்சாறு வெடலப் பயக. மொளகாப் பழமாயிருக்கு கண்ணுல செவப்பு முழுச் சாராய மப்பு. அரச மரத்த ஒரு ஒரசு ஒரசித்தான் போகுது ஒத்தையடிப் பாதை. கனகாம்பரம், கருவாச்சி, பூலித்தேவன் மூணு உருப்படிகளும் அவுகளக் கடந்து தான் போகணும்னு தெரிஞ்சுபோச்சு சீட்டு வெளையாட்டு ஆளுகளுக்கு.

கட்டையன் வீட்ல கஞ்சாவும் கஞ்சியும் குடிக்கிற மூணு பயக வம்பிழுக்க முடிவு பண்ணிட்டானுக. பத்தடி தூரத்துல வந்துக்கிட்டிருக்காக பருத்திமாருக்காரிக. கையில் இருந்த சீட்டக் கவுத்துப் போட்டுட்டு, தகரத் தொண்டையில பேச ஆரம்பிச்சான் ஒருத்தன்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 9 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Tue Nov 09, 2010 3:11 am

"ஏய்! அங்க பாருங்கடா! ரெண்டு மாருல எந்த மாரு பெருசு..? முன் மாரா? பின் மாரா?"

"பின்னுக்க வாரது கட்டு நல்லாருக்கு மாரு சிறுசா இருக்கு. முன்னுக்க வாரது கட்டு நல்லால்ல மாரு பெருசா இருக்கு."

பருத்திமாரப் பேசற மாதிரி சாடை பேசுறாக சண்டாளப் பயகனு தெரிஞ்சு போச்சு கருவாச்சிக்கு. நின்னா. நான் பாத்தா நீங்க எரிஞ்சுபோயிடுவீங்கடானு ஒரு மொற மொறச்சா நடந்துட்டா.

போயிட்டாளே! வம்பு இழுத்தாலும் வராது போலிருக்கே. வம்புக்கு அடுத்த அம்பு போட்டான் அக்கா தங்கச்சி கூடப் பெறக்காத அயோக்கியப் பய.

"மாரு... வீட்டுக்குப் போறதா? வெலைக்குத் தாரதா?"

மூணு எட்டு முன்ன போனவ படார்னு திரும்பி, அந்தத் தறுதலப் பய தலையில தூக்கி எறிஞ்சா பருத்திமார. மப்புல கெடந்த பயக குப்புனு எந்திரிச்சானுக. ஆத்தாளுக்கு என்னமோ ஆகப் போகுதுனு புரிஞ்சுபோச்சு பூலித் தேவனுக்கு தலைய மடக்கிக் கொம்ப முன்னால நீட்டிக்கிட்டே ஒரே தவ்வாத் தவ்வி ஏறுச்சு கல் திட்டு மேல. நாப்பது நாப்பத்தஞ்சு வீசை எடையுள்ள கெடா மொத்தமா ஆளுக மேல முழுசா வந்து விழுந்ததுல இன்னதுதான் நடக்குதுங்கிற சேதி முதுகுத்தண்டு வழியா மூளைக்குப் போகல ஒருத்தனுக்கும். காலுக்குக் கீழ ரெண்டு பேரப் போட்டு மிசுங்கவிடாம மிதிச்சுக்கிட்டுக் குத்தி எறியுது கொம்புல சிக்குன ஒருத்தன. அவன் யாத்தேனு அலறி, தாடை கிழிஞ்சு தனியாப் போயி விழுகிறான். கெடா நடத்துற வெறிக் கூத்தப் பாத்து ஓடி ஒளிஞ்சுபோனானுங்க ரெண்டு மூணு பேரு. காலுக்குக் கீழ கெடந்தவன்கள்ல ஒருத்தன் இடுப்புல இருக்கிற சூரிய எடுக்க எக்கி எக்கிப் பாத்தான். அதைக் கண்டுபுடுச்ச பூலித்தேவன், ஒரு அடி பின் எட்டு வச்சு, உழுகுற கலப்பை மாதிரி தலைய பூமியில சாச்சு, அவன் வகுத்துல ஆரம்பிச்சுத் தொண்டக் குழி வரைக்கும் நூல் புடிச்ச மாதிரி கொம்புலயே ஒரு கோடு கிழிச்சிருச்சு. இன்னும் வெறியடங்காமத் தவ்வித் தாண்டி ஓடுது கட்டையனுக்குச் சாயங்காலச் சாராயம் வாங்கப் போனவன முட்டிச் சாய்ச்சதில, அவன் தள்ளி ஓடி விழுந்துபோனான் சாணிக்குழியில. பூலித்தேவன் தானாத்தான் அடங்கணும். இனி தனக்கு அடங்காதுனு ஒரு ஓரமா ஒதுங்கிட்டா கருவாச்சி.

"கொம்புல குத்துப்பட்டவனுக்கு ஒண்ணும் ஆயிரப்படாது. பொழைக்க வச்சிரு சாமி." சேதி போயிருச்சு கடலக் காட்டுல உடும்புக்கறி உரிச்சுக்கிட்டிருந்த கட்டையனுக்கு. அடுத்த நாள் அந்தக் கூத்து நடக்கும்னு ஈ, காக்கா, குருவிகூட நெனச்சிருக்காது. உச்சிவெயில்ல வெள்ளக்கரட்டுல புல்லுக் கடிச்சுக்கிட்டிருந்த பூலித் தேவனை அஞ்சாறு கெடாப்பயலுக சேந்து உச்சுனாப்புல தூக்கிக் கொண்டு வந்துட்டானுக பளிங்கான் பாறைக்கு.

"ஒன்னியக் காயடிக்காம வளத்துட்டாளா கருவாச்சி? அதான் கொம்புல குத்திக் கொல்லப் பாக்குறியா? ஆளத் தேடிவந்து அள்ளையில குத்துறியா? இன்னிக்கு ஓயப் போகுதுடி ஓங் கதை"பூலித்தேவனுக்குக் காயடிக்கத் தயாராகிவிட்டான் கட்டையன்.

முரட்டாளுக நாலு பேரு வேணும் ஒரு கெடாயக் காயடிக்க. கொம்பு ரெண்டையும் அழுத்தி அமுக்கிக்கிட்டான் ஒருத்தன், மிசுங்க விடாம முன்னங்கால் ரெண்டையும் உக்காந்து புடிச்சுக்கிட்டான் ஒருத்தன். பூலித்தேவனோட பின்னங்கால் ரெண்டையும் அகட்டி வசதிபண்ணி அசங்காமப் புடிச்சுக்கிட்டான் ஒருத்தன். கல்லு மேல சாக்கப்போட்டு, பூலித் தேவனை ஒரு தினுசா உக்கார வச்சு அதோட கனத்த காயில துணியச் சுத்தினான் கட்டையன். காயின்னா பெருங் காயி கைக்கடங் காத காயி. உள்ளங்கை ரெண்டும் ஒண்ணு சேந்து மூடுனாலும் மூட முடியாத பெரும் பொருளு. புலித்தேவன் காயை இறுக்கிப் புடிச்சான் கட்டையன் தொங்கு சவ்வுல சரடு கட்டி இறுக்கி ஒரு முடி போட்டான். காய ஒரு கையில புடிச்சிக்கிட்டு மறு கையில நெரிநெரினு நெரிச்சான் கும்முகும்முனு கும்முனான். ஒரு சின்னக் கல் ஒலக்கையை எடுத்து ஒரு பக்கமா நச்சு நச்சுனு குத்தினான். பை இருக்க, படக்படக்குனு ஒடையுது உட்சவ்வு. உசுரு போற வலியில கத்திக் கதறுது பாவம் வாயில்லாத சீவாத்தி. மறு காயும் அடிச்சான் உட் சவ்வு ஒடைச்சான். கல் ஒலக்கையை வச்சுக் காயில பொய்க் குத்தாக் குத்திக் கெட்டியா இருந்த காயப் பிதுக்கிப் பிதுக்கி நசுக்கி நசுக்கிக் குறுண குறுணையா ஆக்கிக் கூழாக்கிட்டான். கூழ் தண்ணி தண்ணியா ஆகுற வரைக்கும் கசகசனு கசக்குறான்.

"என்னிய விட்டுருங்க... என்னிய விட்ருங்க"னு ஆட்டு மொழியில கத்துது ஆவி துடிக்கிற சீவன். கட்டியாயிருந்த காயி தண்ணிப் பையாத் தொங்க ஆரம்பிச்சதும் அடிப்பாகத்துல தேங்குன தண்ணிய மேல் ஏத்தி முடிச்சுப்போட்டுவிட்டுட்டு தண்ணிய அள்ளி, சப்புச் சப்புச் சப்புனு அடிச்சான் குத்திக் குத்திக் கூழாப் போன காய் மேல.

"இப்ப விட்ருங்கடா..."

எல்லாரும் விட்டு விலகிட்டாங்க.

"புலியாமில்ல புலி... காயடிச்சு விட்டுட்டேண்டி இன்னைக்கிருந்து நீ பூன."

எந்திரிக்கத் தெம்பில்லாம விழுந்து கெடக்குற பூலித்தேவன், அவன வெறிச்சு ஒரு பார்வ பாக்குது. அந்தக் கண்ணுலருந்து கண்ணீரும் ஆண்மையும் ஒண்ணு சேந்து வடிஞ்சு ஒழுகிற மாதிரியே இருக்கு. மசுங்குன இருட்டுல ஒடியாந்த கொண்ணவாயன், தலையிலயும் நெஞ்சுலயும் அடிச்சுக்கிட்டுக் கட்டிப்புடிச்சு அழுகிறான் காயடிச்ச கெடாய! மூணு நாளைக்கு எரையெடுக்காது காயடிச்ச கெடா. புல்ல மோந்தும் பாக்காது புளிச்ச தண்ணியில வாயும் வைக்காது. பூலித்தேவன் கொம்புல தலையச் சாச்சு, தாடையத் தடவிக்கிட்டே அது அழுகிறதப் பாத்து அழுகிறா கருவாச்சி. "மானங்கெட்ட பயலுகளாச் சேந்து ஒன்னிய ஊனப்படுத்திட்டாங்களே பூலித்தேவா"அவ அழுக, ஆடு அழுக, என்னமோ ஏதோன்னு பிள்ளையும் சேந்தழுக, கொண்ணவாயனும்கூடவே அழுக, பாதி எழவு வீடாகிப்போச்சு கருவாச்சி வீடு.

காயடிக்கிறது ஒண்ணும் புதுசில்ல ஊர்நாட்ல உள்ளதுதான். கெடா வர்க்கத்துக்கு மனுசன்வழி வழியாச் செஞ்சு வந்த துரோகந்தான். ஆனா, அதுக்குமொரு கணக்கு இருக்கு. ஆறே மாசத்துல வயசுக்கு வந்திருது கெடா. காலும் தலையும் மத்ததும் நீண்டு நிமிந்திருது. பொலிச்சல் நெனப்பு வந்துட்டா அப்புறம் அதப் புடிக்க முடியாது கையில. திமிரும் தெனவெடுத்து அலையும் முத்தங் குடுக்க வந்தாலும் முட்டவரும் பொலிச்சல் போடக் கிறுக்குப் புடிச்சு அலையும். பொட்டைய நோங்கிட்டாப் புல்லு கடிக்காது. அதே நோக்கமா அலைபாயும். மேய்ச்சல மறந்து மேய அலையிறதுனால நீத்துப் போகும் ஒடம்பு. எலும்புல கறி சேராது கறியில கொழுப்புச் சேராது. கறி திங்க ஆடு வளக்கிறவன் சும்மா இருப்பானா? கனத்த வெதைய நசுக்கிக் காயடிச்சு விட்டுர்றான். காயடிச்ச பெறகுதான் மேல பாத்த கெடா கீழ பாக்கும். ஒழுங்காப் புல்லு கடிக்கும் தவிச்ச நேரம் தண்ணி குடிக்கும் ஆட்டம் பாட்டம் அடங்கிரும். வீரமெல்லாம் வத்திப்போகும். ஒருகைப்பிள்ள கூப்பிட்டாலும் வாரேஞ்சாமின்னு வந்திரும். பொட்டை வர்க்கம்னு ஒண்ணு இருக்கிறதே அதுக்கு மறந்துபோகும். காயடிச்ச மூணே மாசத்துல அது புதுச் சதை போடும் பாருங்க... சும்மா காஞ்சுகெடந்த கம்மா கார்த்திக மாசம் பெருகுற மாதிரி கடகடகடன்னு கறிகட்டும். ஆனா, நேந்துவிட்ட கெடாய யாரும் காயடிக்கிறதில்ல. "ஆத்தா கெடாயாவது... அப்பன் கெடாயாவது..." காயடிச்சு விட்டுட்டான் கட்டையன்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 9 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 14 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum