ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 8 Empty கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Mon Apr 26, 2010 10:31 pm

First topic message reminder :

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு வைரமுத்து


'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்கள் எழுதிய 'கருவாச்சி காவியம்' என்ற நூல் வெளியீட்டு விழா 2006 டிசம்பர் 16 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

கலைஞர் கருணாநிதி நூலை வெளியிட, முதல் நூலை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் பெற்றுக் கொண்டார்.


[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 8 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Fri Aug 06, 2010 6:40 am

பொணந்தூக்க வந்த இரண்டு எளந்தாரிப் பயல்களத் தூக்கித் துண்டா எறிஞ்சுட்டு, ஆத்தா காலடியில மண்டிபோட்டு உக்காந்து அவ திரேகத்தையே வச்ச கண்ணு வாங்காமப் பாக்குறா கருவாச்சி.

நரம்பு தெரியப் பிரம்பு மாதிரி சுருங்கிக் கெடக்கு எனக்குக் கைகால் புடிச்சுவிட்ட கையி... நட்டுவச்ச குச்சியா வெறைச்சுப்போய் நிக்கிது காடுவெளி யெல்லாம் கல்லுக்குத்தி முள்ளுத்தச்ச காலு... ஈ உக்காந்து உக்காந்து ஈரப்பசையில்லாமக் கெடக்கு எனக்கு முத்தங் கொடுத்த வாயி... புழிஞ்சு காயப் போட்ட தோல் மாதிரி தொங்கிக் கெடக்கு நான் முட்டி முட்டிப் பால்குடிச்ச மொல... ஆனா, எங்கடி ஆத்தா ஓடி ஒளிஞ்சு போச்சு கருவாச்சின்னு என்னிய வாய் நெறையக் கூப்பிட்ட சொல்லு?

ரெண்டு கையாலயும் தன் மூஞ்சியில தானே சப்புச்சப்புன்னு அறஞ்சு அறஞ்சு அழுகிறா கருமாயப்பட்ட கருவாச்சி.

அவ அழுது ஓயட்டும்னு கொஞ்சம் ஒதுங்கி நிக்கிறாக, பொணம் தூக்க வந்த ஆளுக.

"போகாத ஆத்தா போகாத. புத்தியில்லாதவ நானு பொழைக்கத் தெரியாத சிறுக்கி. ஒன் சுண்டு வெரலப் புடிச்சே சுத்திவந்தவ. இப்பப் பொழச்சுப் பாருடின்னு சொல்லி, என்னிய ஒத்தையில விட்டுட்டுப் போறியே... ஒனக்கே இது நல்லாருக்கா? அப்பன் இல்லாமப் பொழைக்கிறது எப்படின்னு சொல்லிக் குடுத்தியே... ஆத்தா இல்லாமப் பொழைக்கிறது எப்படின்னு சொல்லிக் குடுத்தியா? நீ போயிட்டா எனக்கு நாதியிருக்கா? ஒன்னியத் தூக்கவிடமாட்டேன் தூக்கவிட மாட்டேன்."

"ஏலே! பொட்டச்சி அப்படித்தான் பொலம்புவா, ஆத்தாங்கிறதுக்காக உள்ளயே வச்சுப் பொணத்த ஊறுகாயா போட முடியும்? தூக்கிட்டு வாங்கடா."

வெளியயிருந்து பெருசுக வெரசு காட்டவும், நாற்காலியோட பொணத்த உச்சுனாப்புல தூக்கிட்டு ஓடிவந்தாங்க ரெண்டு எளந்தாரிப்பயக.

தரையை விட்டு ஆத்தாளத் தலைக்கு மேல தூக்கினவுடனே "யாத்தே"ன்னு அலறித் தரையில விழுந்து தம்பாயமிழந்து போனா கருவாச்சி.

[You must be registered and logged in to see this image.]

கொள்ளிக்கொடம் ஒடைக்க ஊர் மந்தை வரைக்கும் வந்தாகணும் அவ. மூஞ்சியில தண்ணி தெளிச்சு, "புள்ளத்தாச்சிடி... பாத்து"ன்னு பொத்துனாப்புல எழுப்பித் தாங்கிப் புடிச்சுக் கூடவே போறாக பொம்பளைக.

அன்னைக்குச் சனிக் கெழமை. சனிப் பொணம் தனியாப் போகாதாம். ஒரு கோழிக் குஞ்ச அடிச்சுப் பாடையில கட்டித் தொங்கவிட்டாக. தகரம் கொன்டுபுடுச்சு பெரியமூக்கிய சாஸ்திரம் கொன்டுபுடிச்சு கோழிக்குஞ்ச.

பெருங்கொண்ட கூட்டம் பின்னாலயே போகுது. முச்சந்தியில நிறுத்துனாக பாடைய. இடவலமா மூணு சுத்துச் சுத்துனாக எறக்கி வச்சாக.

"கொடம் ஒடைக்கிற பிள்ளையக் கூப்பிடுங்கப்பா."

தலைய விரிச்சுப்போட்டு அழுதுக் கிட்டே எடது தோள்ல கொடம் சுமந்து இடவலமாப் பொணம் சுத்தி வர்றா கருவாச்சி. ஒவ்வொரு சுத்து முடிய அருவாமூக்குல தோட்டி ஒரு தொளபோட, தன்பங்குக்குப் பெருங்கண்ணீர் வடிக்குது மண்கொடம். மூணாவது சுத்து முடிய "போடு... போடு...போட்ரு"ன்னு அஞ்சாரு பேரு கத்த, ஆத்தா கால்மாட்ல அவ கொடம் ஒடைக்க, அவ பொழைப்பு மாதிரியே மண்கொடமும் செதறிச் செதறிச் சில்லுசில்லாக "திரும்பிப் பாக்காம வந்திரு"ன்னு சொல்லிக்கிட்டே அவ தலையில ஒரு கோடிச் சேலயப் போட்டுக் கோழிய அமுக்குற மாதிரி அமுக்கிக் கூட்டிக்கிட்டே போயிட்டாக கூடவந்த பொம்பளையாளுக.

பாடையத் தூக்கி அதேமாதிரி மூணுசுத்து எதிர்த்திசையில சுத்தி, மந்தையிலருந்து சுடுகாட்டுப் பாதையில கூடிட்டாக எல்லாரும்.

கொட்டுக்காரன் முன்னுக்கக் கொட்டடிச்சுப் போக, மாட்டுச் செவந்தியையும் அரளிப்பூவையும் பூக்காரன் ரெண்டு பக்கம் பிச்சு ஒதறி வர கடுகும் பொரியும் அள்ளித் தெளிச்சுக்கிட்டே தோட்டி பின்னுக்கத் தொடர்ந்துவர போகுது பெரியமூக்கி பொணம் கடைசிக்காடு தேடி. கூட்டத்துல கட்டையன், வாத்து மாயி ரெண்டு பேரும் ஒரு எடத்துலயும் வெலகல ஒண்ணாவே போறாக. அவன் பேச இவன் தலையாட்ட... பின்னால கொண்ணவாயன் கூடவே வாராங்கிற கூருபாடு கூட இல்லாமக் குசுகுசுன்னு பேசுறாக.

"ஒனக்கு வாழ்வு வந்திருச்சுடா வாத்துமாயி. குண்டக்க மண்டக்க எதையாவது பண்ணிக் குடியக் கெடுத்திராத. துரைச்சாமித்தேவர் வகையறாவுக்கே நீ ஒருத்தன்தான் ஆம்பளை வாரிசு. மொட்ட போட்டுப் பெரியமூக்கிக்கு நீ கொள்ளிமட்டும் வச்சிரு. மிச்சத்த நாங்க பாத்துக்கிர்றோம். கொள்ளிவச்ச ஆளுக்குத்தான் சொத்து சொந்தம். அப்புறம் பெரியமூக்கி வீடு கருவாச்சிக்கில்ல ஒனக்கு. இன்னிக்கு ஆத்தா ஊருக்கு வடக்க வந்துட்டா. நாளைக்கு மக தெக்கபோக வேண்டியது தான் மொதலக்கம் பட்டிக்கு. என்னடா ஒழுங்கா மொட்டை யடிப்பியா?"

"வீடு வருதில்ல மாமா மசுரு போனாப் போயிட்டுப்போகுது. மொளைக்க மொளைக்க அடிக்கச் சொன்னாலும் அடிக்கிறேன்."

இதக் கேட்டதும் புத்தியில பாம்பு கொத்திருச்சு கொண்ணவாயனுக்கு. பொணத்த முன்னுக்க விட்டுட்டு அவன் பின்னுக்கு வந்துட்டான். சுடுகாட்டுக்கு நடக்கமாட்டாம இழவு வீட்லயே உக்காந்திருந்த உருமாப் பெருமாத்தேவரு கிட்டப் போயி ஒப்பிக்கவும், அவர் பதறிப்போனாரு. ஆத்தாளுக்கு மோட்ச வெளக்குப் போட்டு அழுதுக்கிட்டிருந்த கருவாச்சிய எழுப்பி, அவ காதுல ரெண்டு கோளாறு சொல்லி, "போ தாயி போ!"ன்னு அஞ்சாரு பொம்பளை களையும் சேத்து அனுப்பிவிட்டாரு. சுடுகாட்டுல வெறகு பரப்பி அதுமேல எருவடுக்கி எருமேல பொணந்தூக்கி வச்சு வாய்க்கரிசியும் போட்டு முடிச்சு வைக்கோலப் போட்டு மூடி சாந்து கொழைச்சு மூடுறதுக்கு முன்னால தோட்டி கேக்குறான்... "அய்யா! கொள்ளி வைக்கப் போறது யாரு?"

சாவுன்னு வந்துட்டா அய்யோ பாவமே குய்யோ முறையே!ன்னு அழுக ஆரம்பிச்சிருது ஊரு. ஊரு ஒலகம் பாக்குறது சாவோட ஒரு மூஞ்சிய மட்டும்தான் ஆனா அஞ்சாறு மூஞ்சி இருக்கு சாவுக்கு.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 8 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Fri Aug 06, 2010 6:50 am

[You must be registered and logged in to see this image.]



சில சாவுகள்ல குடும்பமே ஓஞ்சு உக்காந்துபோகும் சில சாவுகள்ல உக்காந்த குடும்பம் எந்திரிச்சிரும். சில வீடுகள்ல சாவுங்கிறது பிரச்னைய உண்டுபண்ணிட்டு ஓடிப்போயிரும் சில வீடுகள்ல சாவு பிரச்னைகளை யெல்லாம் ஓச்சிட்டு சுபம்னு சொல்லிட்டுப் போயிரும். சில வீடுகள்ல சாவுங்கிறது நிர்க்கதி சில வீடுகள்ல சாவுங்கிறது நிம்மதி. சில வீடுகள்ல சாவுங்கிறது செலவு சில வீடுகள்ல வரவு. வாழ்க்கையில் திருப்பம்கிற சக்கரங்களச் சுத்திவிட்டுட்டுப் போறது சாவுதான்.

பெரியமூக்கி சாவு, கருவாச்சியோட பொழப்பு மனசு ரெண்டையும் பொரட்டிப் போட்டுட்டுப் போயிருச்சு. ஆத்தாளோட சேந்து செத்துப்போனா என்னன்னு மருகினது மொத நாளு ஆத்தா இம்புட்டுச் சீக்கிரம் செத்திருக்க வேணா மின்னு உருகுனது ரெண்டாம் நாளு ஆத்தாளுக்கும் சேத்துப் பொழைக்கணு மேன்னு வைராக்கியப் பட்டது மூணாம் நாளு.

கண்ணீரு வருத்தமா ஒறைஞ்சு, வருத்தம் வைராக்கியமா முத்துனாத்தான இத்துப்போன மனசு எந்திரிச்சு உக்காரும்?

எந்திரிச்சு உக்காந்துட்டா கருவாச்சி. மாசம் அஞ்சு. அரைப்பிள்ள இருக்கு வகுத்துல முழு வாழ்க்கை இருக்கு முன்னுக்க. முதுகச் சுவத்துல போட்டு, ஒரு காலத் தரையில நீட்டி, ஒரு கால ஊன்டி மடக்கி உக்காந்திருக்கா கருவாச்சி. ஊர்ப் பெருசுக... மொதலக்கம்பட்டிச் சொந்தங்களெல்லாம் கோழிக்கு அள்ளி எறிஞ்ச சோளம் மாதிரி அங்கங்க உக்காந் திருக்காக.

வெத்தல எச்சியத் துப்பிட்டு, துண்ட எடுத்து வாயத் தொடச்சுக்கிட்டு உருமாப் பெருமாத் தேவரு ஆரம்பிக்கிறாரு தொண்டையச் செருமிக்கிட்டு, "யம்மா கருவாச்சி! நீயும் என் மகதான் தாயி. கண்ணுக்கு எட்ன மட்டுக்கும் ஆதரவு இல்லையேன்னு அலபாஞ்சு நிக்காத. என் வீட்ல வந்து இரு. என் கண்ணுள்ள காலம் வரைக்கும் கஞ்சி ஊத்துறேன். ஒரு காலத்துல ஒங்கப்பன் ஓடி வந்து செஞ்ச உதவிக்கு நான் கடமைப்பட்டிருக்கேன். கன மழை பேஞ்சுபோச்சு ஒரு ஆடி மாசத்துல. பொட்டப் பிள்ளைகளாய் பெத்துக் குடுத்த எம் பொம்பளையாளு வேற செத்துப்போனா. ஊரே ஓடி ஓடி உழுது வெதைக்குது நான் கால்ல கட்டி வந்து காய்ச்சலோட படுத்திருக்கேன். அன்னைக்கித் தன் காட்டை விட்டுட்டு என் காட்டை உழுது குடுத்தவனம்மா ஓந் தகப்பன். வீண்போகுமா தகப்பன் செஞ்ச தர்மம்? வா... வந்து என் வீட்ல இரு". அவ ஒண்ணும் பேசல. கண்ணத் தொடச்ச முந்தானைய வாயில சுருட்டிவச்சுத் தணிஞ்சு தரை பாத்திருந்தா.

இப்ப சுப்பஞ்செட்டியார் பேசுறாரு: "எனக்குப் பொட்டப் புள்ளைக ரெண்டு இல்ல, மூணுன்னு நெனச்சுக்கிறேன் தாயி. இது ஒனக்குத் தாய் வீடு என் வீடு தகப்பன் வீடுன்னு நெனச்சுக்க. இப்பச் சொல்றேன்... எல்லாரும் கேட்டுக்குங்க, என் மூத்த மக கழுத்துல கெடக்கே மூணு பவுன் சங்கிலி... அது என் தங்கச்சி பெரியமூக்கி மொறக்கடனாக் குடுத்தது. அந்தச் சங்கிலி கழுத்துல ஏறலன்னா எம் மக கழுத்துல தாலி ஏறியிருக்காது. கருவாச்சி கல்யாணத்துக்கு வந்து பெரியமூக்கி சங்கிலியத் திருப்பிக் கேட்டா. சங்கிலி எறங்கினா அவ கழுத்துல தாலியும் எறங்கிரும் தாயின்னு கையெடுத்துக் கும்புட்டேன். பொழைச்சுக் கெடந்தா குடுங்கன்னு போயிட்டா. அந்தத் தர்மசீலி பெத்த மகள நாங்க தவிக்கவிட்ருவோமா. என் நெஞ்சுக்கூட்ல உசுரு இருக்கவரைக்கும் நெல்லுச் சோறாப் போடறேன்... வாம்மா."

இதுக்கும் அவ ஒண்ணும் பேசல. ஆத்தா பெருமை சொல்லவும் கடகடகடன்னு கொட்டுது கண்ணீரு.

அதுக்கு மேல பொறுக்க முடியல மொதலக்கம்பட்டி ஆளுகளுக்கு. "ஆளாளுக்கு ஒண்ணு சொன்னா எப்பிடி? நடக்கற கதையைப் பேசுங்கப்பா. தாய் வழிச் சொந்தம்னு நாங்க குத்துக்கல்லு மாதிரி குத்தவச்சிருக்க, அவ ஒங்க வீட்ல வந்து இருந்தா ஊர் ஒப்புமா? ஒண்ணு அவ இதே வீட்ல இருந்து பொழைக்கணும். இல்ல எங்க வீட்ல வந்து இருக்கணும். அதான் மொற" மொதலக்கம்பட்டி ஆளுக கோபமாச் சொன்னாலும் நியாயமா இருந்துச்சு.

முந்தானையில ஒரு முடிச்சுப் போடறது அவுக்கிறது. இன்னொரு முடிச்சுப் போடறது அவுக்கிறது. இப்படி முடிச்சுப் போடுறதும் அவுக்கிறதுமா இருந்த கருவாச்சி, ஒரு முடிவுக்கு
வந்துட்டா.

"ஒரு தகப்பனும் ஒரு தாயும் செத்துப்போனதுக்கு நீங்க இத்தன தகப்பனும் தாயுமா எனக்கு இருக்கீக. நீங்க தெம்புதெறம் சொல்லச் சொல்ல எனக்கு அழுகையா வருது. ஆத்தா சொல்லுவா... பறக்கப் பல காடு இருக்க ஒரு கூடுன்னு. இந்த வீடுதான் அந்தக் கூடு. இந்த வீட்டவிட்டு எப்பிடி நான் வெளி யேற முடியும்? ஆத்தா வாசன இந்த வீடெல்லாம் நெறைஞ்சு நிக்கிது. எங்க தொட்டாலும் அவ சத்தமா வருது. இந்த வீடு இருக்கிற வரைக்கும் ஆத்தா சாகல. அவ இந்த வீட்டுக்குள்ள இருக்கா. அவகூட நான் இருக்கப் போறேன்.

தவிரவும் நான் இந்த வீட்டவிட்டு வெளியேறிட்டேன்னு வச்சுக்குங்க... கறையான் கட்ன வீட்டுல கருநாகம் புகுந்திரும். வால உள்ள சுருட்டிவச்சு வாசல்ல நின்னு படமெடுக்கும். வீட்டக் காப்பாத்த நான் வீட்லதான் இருந்தாகணும். ஓட்டப் பந்தயம் மாதிரி இருக்கு பொழப்பு. ஓடிப் பாக்குறேன். அங்கங்க விழுந்தா ஆளும்பேருமா வந்து கை தூக்கிவிடுங்க" கும்புட்டு அழுதா பாவம் குமுறிக் குமுறி.

வந்தவுக போனவுக போடுபணம் போட்டுப் போனத எண்ணிப் பாத்தா, ஒரு இருபத்தி நாலே கால் தேறுச்சு. ரெண்டு மூணு மாசத்துக்கு வேணுங்கிற தானியங்களும் உப்புப் புளி மொளகாயும் வாங்கி உள்வீட்டுல வச்சிட்டு, மொதலக்கம் பட்டிச் சொந்தமும் போயிருச்சு.

வைத்தியச்சியும் முக்குறுணியும் பவளமும் ஆள் மாத்தி ஆள் வந்து தொணைக்குப் படுத்துக்கிட்டாக.

அஞ்சு முடிஞ்சு மாசம் ஆறு. இப்பத்தானய்யா பொம்பளைக்கு வகுறு தெரியுது. அஞ்சு மாசம் வரைக்கும் பூசுனாப்புல இருந்த வகுறு பூத்து எந்திரிச்சு நிக்கிது. அவ இழுத்து மறைச்சு சீமையில இல்லாத சீலக்கட்டு கட்டுனாலும் நெறஞ்ச வகுறு தெரிஞ்சுபோகுது.

பசியாப் பசிக்குது கருவாச்சிக்கு. மண்ணும் சாம்பலுமாத் தின்னு தீத்த வாயி இப்ப சகலமும் கேக்குது. கேப்பக் கூழு சோளக் கூழு புளிச்ச தண்ணியில கெடந்த பழைய கஞ்சி எது கெடைச்சாலும் அள்ளி அள்ளித் திங்க ஆசையா இருக்கு. நெல்லுக் கஞ்சி காய்ச்சி நெய்மீன் கருவாடு வறுத்துக் குடுத்தா வைத்தியச்சி.

"இதெல்லாம் இருக்கட்டு மாத்தா. ஊசிப்போன பருப்புச் சாறு இருந்தா ஒரு கிண்ணம் ஊத்திக் கொண்டா"னு வெக்கப் படாமக் கேட்டுச் சின்னதா ஒரு சிரிப்பும் சிரிச்சுக்கிறா. வயித்துச் சுவத்துக்குள்ள புள்ள முணுமுணுங்குது. உள்ள எறும்பு ஊர்ற மாதிரி சொகஞ்சொகமா ஒரு தொந்தரவு தெரியுது.

மூங்கிக் குச்சி மாதிரி நெடுநெடுன்னு இருந்த பொம்பள தூருகட்ன தென்னமரமாக் கனத்துப்போனா. வீட்ல சும்மா இருப்பாளா? அப்பப்ப வேல வெட்டிக்கும் போயிருக்கிறா.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 8 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Fri Aug 06, 2010 6:54 am

[You must be registered and logged in to see this image.]




ஆறு முடிஞ்சு மாசம் ஏழு.

"ஏ பெரியாத்தா! இங்க ஓடியா... ஓடியா... ஓடியா... எம் பிள்ள என் வகுத்துக்குள்ள சிலம்பு சுத்துது என்னான்னு கேளு."

மீன் குழம்புக்குக் கூட்டிப்போட்டு அடுப்புல வெறகு தள்ளிக்கிட்டிருந்த வைத்தியச்சி விசுக்குன்னு ஓடிவந்தா.

"தொட்டுப் பாரு... தொட்டுப் பாரு..." தொட்டுப் பாத்தா வகுத்துக்குள்ள பிள்ள ஒரு பக்கம் ஒதறுது ஒரு பக்கம் முண்டுது.

"ஒதர்ற பக்கம் காலு... முண்டுற பக்கம் தல... ஏண்டியாத்தா! வகுத்துல புலிக்குட்டி வளக்குறியா? இந்தத் துள்ளு துள்ளுது."

"ஒன்னியப் பாத்துத் தானத்தா இந்த ஒத ஒதைக்குது. நீதான அழிக்கப்பாத்தவ."

"போடீய்... ஏ போடீ..." செல்லமா அவ கொமட்டுல ஒரு குத்துக் குத்துனவ, "தாய் வகுத்துல பசை கொறைஞ்சாத்தானடி புள்ள முண்டும். அழுத பிள்ளைக்குப் பாலு முண்டுன பிள்ளைக்குச் சோறு இந்தா! இதைத் திண்டுக்கிட்டே இரு"ன்னு அவிச்ச கடலைய அள்ளி அவ மடியில போட்டுட்டு, அடுப்பாங்கரைக்குப் போயிட்டா.

பிள்ளத்தாய்ச்சி வகுறு அரிப்பா அரிக்குது கருவாச்சிக்கு. வகுத்துல தடிப்புத் தடிப்பா விழுந்திருச்சு, பத்து வெரல் நகத்துலயும் பிறாண்டிப் பிறாண்டி. அப்பப்ப சீப்ப எடுத்து வலிக்காம வருடி வருடிக் குடுத்துக்கிட்டேயிருக்கா வகுத்துல. முக்குறுணி சொல்றா: "வகுத்துல இருக்கிற பிள்ளைக்கு மயிர்க்கட்டு நெறையா இருந்தாத்தான் பிள்ளத்தாச்சிக்கு அரிப்பெடுக்குமடி மகளே. பொழுதுக்கும் சொரண்டாத புண்ணாப் போயிரும் வகுறு."

கடைசிவரைக்கும் ஓடியாடி வேலை செய்யிற பொம்பளைக்குப் பேறுகாலம் லேசு. படுத்தே கெடக்கிறவளுக்குக் கடுசு.

ஏழு மாசத்துலயும் கருவாச்சி களகண்ணிக்குப் போறா. கொழையறுக்கப் போறா. வேணுங்கிற பொம்பளைகளுக்கு ஒலக்க புடிச்சுச் சோளம் குத்திக் குடுத்து அரிசியும் தவிடும் வாங்கி வீடு வந்து சேர்றா. தவிட்ட வறுத்து, வெல்லம் போட்டு இடிச்சு உருண்ட புடிச்சு,கொண்ண வாயனுக்கு ரெண்டு குடுத்துட்டுத் தானும் ரெண்டு தின்டு தண்ணி குடிச்சுப் படுத்துக் கிர்றா.

படுக்கிற பக்குவம் சொல்லிக்குடுத்தா புள்ளத்தாய்ச்சிக்கு வைத்தியச்சி. "மகளே! மல்லாக்கப் படுத்திராத. ஓரமா வகுத்த ஒதுங்கப் போட்டு ஒருக்கழிச்சுப் படு. பெரண்டு படுக்கணும்னு வச்சுக்க ஒரு கைய ஊன்டி எந்திரி ஒக்காரு. ஒரு பூமாலய கழட்டிப் போடற மாதிரி பொத்துனாப்புல வயித்தத் தூக்கி மறுபக்கம் போட்டு மறுபடியும் ஒருக்கழிச்சுப் படுத்துக்க. அப்படியில்லாம மல்லாக்கப் படுத்து கடக்கு மடக்குன்னு புரண்டேன்னு வச்சுக்க... வயித்துல இருக்கிற பிள்ள நெரிஞ்சாலும் நெரிஞ்சுபோயிரும்."

தாய்தகப்பன் இல்லாத பிள்ளைத்தாச்சியாப் போனதால தயிர்ச் சோறும் புளிச் சோறும் தந்து ஊரே அவள ஊட்டி வளக்குது.

ஏழு முடிஞ்சு மாசம் எட்டு.

இப்ப ஊன்டி உக்கார முடியுது லேசுல எந்திரிக்க முடியல. கீழ கெடந்த வகுறு ஏறி நெஞ்சுல முட்டி நிக்குது. அவ செவக்கிக் கட்டாமச் சீல வெலகி உக்காந்திருந்தா, வகுத்துக்குள்ள பிள்ள முண்டி வெளையாடுறது எதுக்க இருக்க ஆளுக்கு அலை அலையாத் தெரியுது வகுத்துல ஒரு ஊமப் படம் ஓடுது. வைத்தியச்சிக்கும் முக்குறுணிக்கும் ஒரு கவல வந்திருச்சு.

"ஏண்டியாத்தா! இப்படி சாலு மாதிரி வகுறுவச்சு உக்காந்திருக்காளே... சுகப் பேறுகாலம் ஆகுமா இவளுக்கு. எட்டு ஒம்பது மாசம் வரைக்கும் புருசன் சேந்து படுத்துச் செல்ல விளையாட்டு வெளையாடிக்கிட் டேயிருந்தா புள்ள வெளிய வார வழி பூப்போல மலந்து கெடக்கும். மொழுக்குன்னு புள்ள கடக்குன்னு வந்திரும். இவ கதவு அடைச்சது அடைச்சதுதான் அதுக்குப் பெறகு தெறக்கவே இல்லையே."

"ஏ ரெங்கம்மா! அது ஒருவழிக்கு நல்லதுன்னு நெனச்சுக்க. அந்தக் கட்டையன் இப்ப இவகூட இருந்தான்னு வச்சுக்க. கருத்தக்கண்ணி கதையாகிப் போகும் கருவாச்சி கத."

"எந்தக் கருத்தக்கண்ணி..?"

"நம்ம முத்தணம்பட்டி கருத்தக்கண்ணி. அவளுக்கு எட்டு மாசம் முடிஞ்சு ஒம்போது பெறக்க, அவ புருசன் ஊமச்சாமி சாராயம் குடிச்சுட்டுச் சாமியாடிட்டே வந்து எக்குத்தப்பாப் புடிச்சு அமுக்கி எடக்குமடக்காப் பண்ணப் போக, வகுத்துல கெடந்த பிள்ள குபுக்குன்னு நெஞ்சில ஏறி சம்மணங்கால் போட்டு உக்காந்திருச்சு. மூச்சுப் போயி செத்துப் போனாளா இல்லையா?

சுடுகாட்டுல தோட்டியும் சவரக்காரனும் சேந்துதான் நெஞ்சக் கீறிப் பிள்ளையை எடுத்து, தாய் பிள்ளையை ஒண்ணுமேல ஒண்ணு வச்சு எரிச்சாங்க. கட்டையன் இன்னிக்கிக் கூடயிருந்தா அந்தக் கூத்தாயிப்போயிரும் கருவாச்சிக்கு. புண்ணியம் பண்ணுனவ பொழைச்சா."

இன்னும் கருவாச்சிதான் வாசத் தொளிக்கிறா. தனியாப் போயி தண்ணிப்பான சொமந்து வாரா. அவளாக் கஞ்சி காச்சி கொண்ண வாயனுக்கும் தூக்குச் சட்டியில குடுத்துவிடுறா. அத்தக் கூலிக்கும் அப்பப்பப் போயிட்டு வர்றா.

எட்டு முடிஞ்சு மாசம் ஒம்போது.

பிள்ள பெறப்போற ஒரு பிள்ளத்தாச்சி, பாவாட கட்டத் தெரியாத பள்ளிக்கூடத்துப் பிள்ள மாதிரி கேக்குறா. "சொல்லு ஆத்தா. எனக்கு ஆம்பளப் பிள்ள பொறக்குமா? பொம்பளப் புள்ள பொறக்குமா?"

"எந்தப் பிள்ள பெறந்தாலும் ஒன் சொந்தப் பிள்ளதான். ஆனாலும் சொல்றேன்... ஒனக்கு ஆம்பளப் பிள்ளதான் பொறக்கும்."

"எதவச்சுச் சொல்ற?"

"உக்காந்த ஒரு பிள்ளத்தாச்சி எப்பவும் வலது கைய ஊன்டி எந்திரிச்சான்னா அவளுக்கு ஆம்பளப் புள்ள. எடது கைய ஊன்டி எந்திரிச் சான்னா பொம்பளைப் புள்ள. நான் பாத்த அளவுல நீ வலது கைய ஊன்டித்தான் எந்திரிக்கிறவ. சக்கம்மா மேல சத்தியமாச் சொல்றேன், கருவாச்சி கருவுல சொமக்கிறது ஆம்பளப் புள்ளதான்டி அம்மா."

ஏழே நாள்ல நெஞ்சுல முட்டிநின்ன வயிறு ரெண்டு பக்கமும் சன்னஞ்சன்னமாச் சரிஞ்சுபோச்சு தொப்புள் மலந்துபோச்சு. பாத்தவுடன சொல்லிட்டாளுக பெரிய பொம்பளைக ரெண்டு பேரும். "ஒரு வாரமோ பத்து நாளோ பெத்துரு வடியம்மா பிள்ள. அந்த அங்காள ஈஸ்வரியும் ஆத்தா பெரிய மூக்கியும் ஓங்கூடவே இருப்பாக. கொற வராது."

பங்குனி கடைசி.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 8 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Fri Aug 06, 2010 6:59 am

வரப்போற சித்திரை வறுத்தெடுக் கிறதுக்கு முன்னால பூமி குளிர ஒரு போடு போட்டுட்டுப் போயிடறேன்னு கூடி நிக்கிது கோடை மேகம். பிள்ள பெற இன்னும் பத்து நாள் இருக்குங்கிற நம்பிக்கையில, அகமலையில விறகெடுத்துத் தலையில சொமந்து வறட்டாறு தாண்டி வந்துக்கிட்டிருக்கா நெறமாசக்காரி. எங்கிட்டிருந் தாலும் ஒரு சாரக்காத்து வந்து லேசா ஒரு தட்டுத் தட்டினா ஒடைஞ்சு ஒழுகிரும் மேகம்.

அதுக்கான அறிகுறி கண்டதும் ஓடி ஒளிஞ்சுபோச்சு ஆடுமாடு மேய்க்கிற கூட்டம். கண்ணுக்கெட்டின மட்டும் காக்கா, குருவி, கழுகு தவிர எதும் தட்டுப்படல. மேல ஆகாயம் கீழ பூமி. தலையில வெறகு வகுத்துல பிள்ள.

இடிக்கப் போறேங்குது மேகம். அடிக்கப் போறேங்குது மழை. கிழிச்சும் தைப்பேன் தச்சும் கிழிப்பேன்னு கிறுக்குப்புடிச்சு அலையுது மின்னலு.

சூராம் புதருக்குள்ள ஒரு சூறாவளி சுத்தி, வேரோட புடுங்க ஒரு இத்துப்போன மரமிருக்கான்னு விசில் அடிச்சு விசாரிச்சுக்கிட்டே வருது ஒரு கடுங்காத்து. ஒத்தையில நிக்கிறா கருவாச்சி, அத்துவானக் காட்டுல.

என்னத்தச் சொல்ல..?
எடுத்திருச்சய்யா இடுப்பு வலி!
காடு, நடுக்காடு.
காலம், சாயங்காலம்.

ஆகாயத்துல சூரியனையுங் காணோம் அக்கம்பக்கம் ஆளுகளையும் காணோம். என்ன பண்ணுவா பாவம் இடுப்பு வலி எடுத்தவ?

[You must be registered and logged in to see this image.]



யாத்தே! என்னியக் காப்பாத்துங்கன்னு உசுர் கிழிய ஓங்கிக் கத்துனாலும் அந்த ஓசை கேக்குற ஒலி வட்டத்துக்குள்ள உசுருக எதும் இல்ல. வெலாப்பக்கம் மின்னல் சுளீர் சுளீர்னு வெட்டி வெட்டிச் சுண்டுது. இடுப்புக்குள்ள யாரோ குடியிருந்துக் கிட்டே கோடாலி எடுத்து வெட்டுற மாதிரியிருக்கு.

தடால்னு தூக்கித் தரையில எறிஞ்சா வெறக. பிள்ள பெறக்க ஒரு வாரம் பத்து நாள் ஆகும்னு கெழவிக சொன்னது தப்பாப்போச்சே. இந்த வலி பொய் வலியாத் தெரிய லையே... உசுரக் கிண்டிக் கெழங் கெடுக்கிற வலியாத் தெரியுதே!

"கடவுளே என்னியக் காப்பாத்திரு. தாயும் பிள்ளையும் தனித்தனின்னு ஆக்கிரு."

எங்க போயி விழுகிறது?
நிக்கிற பூமி நெருஞ்சிக் காடு.

கெழக்க வறட்டாறு மேற்க அகமலை வடக்க இண்டம்புதர்க்காடு தெக்க ஒரு கெணத்து மேடு. அங்க தெரியுது ஒரு காவக் குடிசை. ஒரு முந்நூறு அடி தூரந்தான் இருக்கும்... முந்நூறு மைலாத் தெரியுது இடுப்புவலிக்காரிக்கு. இடுப்புல கைய வச்சு அழுத்தி, வகுத்துல சிலுவை சொமந்து, ஒரு பக்கமா ஒருக்களிச்சு ஓரஞ்சாஞ்சு, நெருஞ்சி முள்ளு வழி நடந்து காவக் குடிசைக்குள்ள போயி விழுந்துபோனா.

சின்னக் குடிசை, குட்டையன்கூட அதுல குனிஞ்சுதான் போகணும். அகத்திக் கம்புகள ஊடுமரமா வச்சுத் தென்னங்கீத்துகள்ல கட்டிவச்ச குடிசை. சாமை வைக்கோலப் பரப்பியிருக்கு தரையில இத்த சாக்கு ஒண்ணு விரிச்சுக்கெடக்கு அதுக்கு மேல. மறுகு கருது அறுத்துவச்ச கம்பங்கருது மூடைக ரெண்டு ஓரத்துல. பச்சைப் பிள்ளக்காரி பிள்ளைய அட்டத்துல போட்டுப்படுத்திருக்க மாதிரி கம்பங்கருதுச் சாக்குகளுக்கு அங்கிட்டு ஒண்ணும் இங்கிட்டு ஒண்ணுமா ரெண்டு பூசணிக்கா. குடிசைக் கூரைக்கு மத்தியில கயிறு கட்டிச் சுக்காக் காஞ்சு தொங்குது சொரக்குடுக்க ஒண்ணு. இடுப்பப் புடிச்சு யப்பே! யாத்தேன்னு கத்திக் கதறிச் சாஞ்சு விழுந்து, சரிஞ்சு கெடக்கா கம்பங்கருது மூட்டையில கருவாச்சி.

"கடவுளே! ஒத்தையில பிள்ள பெறுன்னு என் நெத்தியில எழுதிட்டியா?"

இந்த ஒலகத்துல மொதல் பிள்ள பெத்த பொம்பளைக்கு எவ பிரசவம் பாத்தது? அப்பிடி ஆகிப்போச்சா இந்தக் கருவாச்சி கத?

முண்டித் தவிக்குது பிள்ள முட்டித் தெறிக்குது வலி. "இந்தப் பொழப்புக்குச் செத்தே போகலாம் போலிருக்கே!" பேறுகால வலியில துடிக்கிற எல்லாப் பொம்பளைகளும் ஒரு தடவையாவது போயிட்டுவார முடிவுக்கு அவளும் போயிட்டு வந்துட்டா.

"முன்னப்பின்னப் பிள்ள பெத்தவஇல்லையே... யாத்தே நான் என்ன பண்ணுவேன்? ஆளுக யாராச்சும் கூட இருந்தா நாம மல்லாக்கக் கெடக்கலாம் வேலைய அவுக பாப்பாக. இப்ப நானேதான் பிள்ளத்தாச்சி நானேதான் மருத்துவச்சி. மல்லாக்கக் கெடந்து எடக்குமடக்காகிப் போனா எந்திரிக்க முடியுமா?"

அனத்திக்கிட்டே ஒரு கையத் தரையிலஊன்டி ஒருக்களிச்சு எந்திரிச்சா. சரசரசரன்னு சீலயத் தெரைச்சுத் தொடைக்கு மேலே சுருட்டி இடுப்புக்கு மேல ஏத்திவிட்டா. பல்லக் கடிச்சு முனகிக்கிட்டே முன்னுக்க சாக்க இழுத்துப் போட்டு அதுமேல முட்டிக்கால் போட்டா. ரெண்டு பக்கமும் ரெண்டு கையத் தரையில அழுத்தி ஊன்டிக்கிட்டு ஆனமட்டும்தொடை ரெண்டையும் அகலப்படுத்திக்கிட்டா. தலைய முன்னுக்க இழுத்து லேசாக் குனிஞ்சு

"ஏலே! கடைசியில செயிச்சது யாரு? கருவாச்சி தான! அத்துவிட்டாக அழிச்சாட்டியம் பண்ணியும் பாத்தாக, நேத்து காட்ல பொதையலெடுத்த மாதிரி கையில பிள்ளையோட வந்துட்டாளா இல்லையா?

ஆதியிலேயே அப்பன் இல்ல, இப்ப ஆத்தாளுமில்ல. உள்ளங்கையில அடுப்புக் கூட்டி ஒருத்தியாக் கஞ்சி காச்சிற மாதிரி, ஒத்தையில பிள்ள பெத்து ஒண்ணும் நடக்காத மாதிரி நடந்து வந்துட்டாளப்பா. கட்டையன் கட்டின தாலி கழுத்துல கட்டையன் குடுத்த பிள்ள இடுப்புல. இன்னைக்கிக் சொல்றேன் எழுதிக்க, என்னைக்கிருந் தாலும் சடையத்தேவன் தேடிவச்ச சொத்தக் கட்டியாளப்போறது யாரு? கருவாச்சி மகன்தானப்பா!"


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 8 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Fri Aug 06, 2010 7:00 am

கட்டையன் மூஞ்சியில கரும்புள்ளி செம்புள்ளி குத்தாத குறை தான். அவன் காதுபடவே பேசுது கடந்துபோற சனம். காஞ்ச மொளகாயில வெதைகள்லாம் ஓடி வந்து மொளகா மூக்குல சேர்ற மாதிரி, அவன் ஒடம்புல இருக்கிற கோபமெல்லாம் ஒண்ணு கூடித் தெரண்டு மூக்கு நுனியில வந்து ஒக்காந்திருக்கிருச்சு, மூட்ட முடிச்சோட! தீக்குச்சி யெல்லாம் தேவையில்ல, அவன் மூக்கு மேல பத்தங்குல தூரத்துல வச்சாலும் பத்திக்கிரும் பீடி. அவன் சின்ன மூக்கு வெடைக்கிறப்ப துவாரம் ரெண்டும் விரிஞ்சு விரிஞ்சு ரெண்டு கொட்டாவி விடுது.

"சொத்து கேப்பாளா மில்ல சொத்து..? அவ பிள்ளையக் கண்டந் துண்டமாப் பிச்சுப் பிச்சுக் காக்காய்க்குப் போட்டுட்டா..? எங்கூட படுத்துப் பெற முடியுமா இன்னொரு பிள்ள..? ஏலே! நரி நண்டத் தூக்குற மாதிரி துண்டாத் தூக்கிட்டு வாங்கடா அவ பெத்து வச்சிருக்கிற பிண்டத்த." எரிஞ்சுக்கிட்டிருந்த பீடியத் தீயோட வாய்க்குள்ள தள்ளி, கறிச் கறிச்சுன்னு மென்னு தின்னு, நாக்கப் பல்லுல நறநறன்னு வழிச்சுக் கரேர்னு காறித் துப்புறான் கட்டையன்.

வீட்டு வாசல்ல கெடந்த வெளிக் கல்லுல ஒக்காந்து வெத்தல தட்டிக்கிட்டிருக்காரு சடையத்தேவரு. இடிச்ச கூலிக்கு எனக்கொரு பங்குன்னு எவனும் கேட்டுரக் கூடாதுங்கிறதுக்காக... அவரா இடிச்சு அவராப் போட்டுக்கிறது தான் அவரோட வெகுநாளைய வெத்தலக் கொள்கை.

விழுகட்டும் அவர் காதுலன்னு வேணும்னே பேசிட்டுப் போறாக வெவகாரம் புடிச்ச ரெண்டு மூணு ஆளுக.

"கருவாச்சி புள்ள கறுப்பா? செவப்பா?"

"குங்குமப்பூவப் பால்ல போட்டுக் கொடங்கொடமாக் குடிச்சாலும் சிவீர்னா இருக்கும் கட்டையனுக்கும் கருவாச்சிக்கும் பெறந்த பிள்ள? அவுக வம்ச நெறந்தான் கறுப்பு."

"பிள்ள யார் மாதிரி இருக்கு..? அவுக அப்பன் மாதிரியா? ஆத்தா மாதிரியா?"

"ரெண்டு கழுதைக மாதிரியும் இல்லையாம்."

"பெறகு?"

"அவுக தாத்தன் சடையத்தேவர் சாடையாம்."

காலம் முறுக்கிப் புழிஞ்ச முதுகுத் தண்டுக்குள்ள சிலீர்னு ஒரு மின்னல் ஓடி மறைஞ்சதுல சிலுத்துப்போகுது கெழவனுக்கு. வெத்தல ஒரல்ல தாளம் தப்புது. ஒத்தையில பிள்ளையெடுத்து வந்தவள ஊரே வேடிக்கை பாத்துட்டுப் போக, வீட்டு வெளிக்கதவச் சாத்திக் கிட்டு நடுவாசல்ல தயிர்ப் பலகையைப் போட்டு, கருவாச்சி ஒடம்பெல்லாம் மஞ்சப்பூசி அவள ஒட்டுத்துணியில்லாம ஒக்காரவச்சு, எட்டி நின்னுக்கிட்டு எளம் வெந்நிய சொம்புல மோந்து அவ மேல சல்லு சல்லுன்னு வீசியடிக்கிறா ரங்கம்மா.

சும்மா மஞ்சள் மழை பேஞ்ச மாதிரி ஒழுகி வருது தண்ணி ஒடம்பெல்லாம்.

"போதுமாத்தா போதுமாத்தா"கையில தண்ணியத் தடுத்துக் கத்துறா கருவாச்சி. "ஏய்! சும்மா இர்றீ. பிள்ள பெத்த பச்ச ஒடம்புல பிசுக்குப் போகணுமா இல்லையா?"

கிட்ட வந்து மூஞ்சி தேச்சு, முதுகு தேச்சு, முன் மார்பு கழுவிவிட்டவ, தண்ணி ஊத்திக்கிட்டே வகுத்தப் புடிச்சு வலிக்காம ஒரு எளங் கசக்குக் கசக்கிவிடுறா கச கச கசன்னு வெளியேறுது கழிவு கசடெல்லாம். ஒடம்புல ஒழுகுற மஞ்சத் தண்ணியும் உறுப்புல ஒழுகுற செந்தண்ணியும் சேந்து புது நெறம் குடுத்துப் போகுது வாசல் வழி.

பேறு காலம் ஆன பொம்பளைக்கு முப்பது நாளைக்கும் இருக்கும் தீட்டு. சில பொம்பளைகள மூணு மாசம் வரைக்கும் தீட்டிப்புடும் போட்டு. கருவாச்சிய கரகரகரன்னு தேச்சுக் கழுவி வந்தவ, யாத்தேன்னு அலறிட்டா... அவ உயிர்த்தலத்த உத்துப் பாத்ததும்.

"அடி பாதகத்தி மகளே! பூவா இருக்க வேண்டிய எடத்தப் புண்ணா வச்சிருக்கிறியே!" புண்பட்ட எடத்தப் புகையவிட்டு ஆத்துன்னு அதுக்கொரு வைத்தியம் ஆரம்பிச்சுட்டா ரங்கம்மா.

ஒரு மஞ்சட்டியில அடுப்புக் கங்குகள அள்ளிக் கொட்னா. அதுல சாம்பிராணிய அள்ளி எறிஞ்சா. அது மேல ஆவாரங்குழை பரப்பி அதுக்கு மேல வேப்பங்குழைய வச்சா. சட்டியில இருந்த சந்துகள்ல வெள்ளப்பூடுத் தொலியையும் அள்ளிப்போட்டா. "சுவத்தப் புடிச்சு நின்னுக்கிட்டுக் கால் ரெண்டையும் அகட்டி வையிடி ஆத்தா"ன்னு அதட்டுனா.

சீலயத் தெரட்டிச் சுருட்டி ரெண்டு காலையும் அவ அகட்டி நிக்க, காலுக்கு மத்தியில மஞ்சட்டிய நீட்டி இவ புகை மூட்டம் போட, கவுட்டு வழி போகுதய்யா புகை மண்டலம், புண்பட்ட எடம் தேடி. ஆவி புடிச்ச பொம்ளைய ஆதரவா அணச்சுப் பாயில படுக்கவச்சாக. தோலெல்லாம் திட்டுத்திட்டா ரத்தக் கட்டி, பிசுக்கு ஒட்டிக் கெடந்த பெறந்த பிள்ளையத் தூக்கி உடம்பெல்லாம் நசநசநசன்னு நல்லெண்ணெயத் தடவி, கம்மாக் கரம்பையத் தேச்சுக் கழுவிவிடவும், சும்மா பளபளன்னு கண்ணாடி மாதிரி ஆகிப்போனான் கருவாச்சி மகன். குளிப்பாட்ன பிள்ளைக்கு லேசா சாம்பிராணி காட்டி ஆத்தாளோட சேத்துவிடவும் அது மொதல் மொதலா வாய் பொருத்துது மொலையில. சப்புது பிள்ள தாய்ப்பால் இல்ல.

பேறுகாலம் பாக்க ஆத்தா இல்லையேங்கற வருத்தத்தில கடைசிப் பத்து நாளா அன்னந்தண்ணி இல்லாம அழுதுக்கிட்டேயிருந்த வளுக்கு, குழாயத் திருகிவிட்ட மாதிரி கொட்டவா போகுது பாலு?

"ஏலே கொண்ணவாயா! வெள்ளாட்டம்பால் இருந்தாப் பீச்சி வெரசாக் கொண்டாடா."

எங்க போயிப் புடிச்சானோ... எத்தனை ஆட்டுல பீச்சினானோ? கா(ல்) மணி நேரத்துல ஓடி வந்துட்டான் அரைக்காச் சொம்புப் பாலோட.

ஆட்டு ரோமம் பால்ல கெடந்தா மாட்டிக்கிரும் பிள்ளைக்குன்னு வெறும் துணியில வடிகட்டிச் சங்குல ஊத்துனா பால. பண்ணருவா எடுத்தா அத உள்ளடுப்புல போட்டு ஓரம் சுடவச்சா. சுட்ட பண்ணருவா மூக்க சங்குல செலுத்த சுரீர்னு சத்தம் போட்டுச் சுட்டுட்டேன்னு சொல்லுச்சு பாலு புகட்டிட்டா வைத்தியச்சி.

தாயில்லாத பிள்ளைகளுக்கும் தாய்ப் பால் இல்லாத பிள்ளை களுக்கும் ஆடும் மாடும்தான ஆத்தா.

தேனி சந்தைக்குப் போனா, திருக்கை மீன் கருவாடும் நெத்திலியும் வாங்கிட்டு வரணும். அதுல பச்சப்பூடு போட்டுக் கொழம்புவச்சுக் குடுத்தா, பால்கட்டும் பச்ச ஒடம்புக்காரிக்கு.

"நாலு ஆளுக கம்பு சுத்தி என்னிய வளச்சு வளச்சு அடிச்ச மாதிரி மேலுகாலு வலிக்குது. பேய்ப் பசி பசிக்குது. இப்ப என்ன குடுத்தாலும் திம்பேன். எதாகிலும் குடுங்க" வைத்தியச்சியையும் பவளத்தையும் கெஞ்சிக் கேக்குறா கருவாச்சி.

"இந்தாத்தா! வகுத்துப்புள்ளக்காரி எதையும் திங்கலாம் கைப்புள்ளக்காரி கண்டதையும் திங்கப்படாது. பிள்ளைக்கு ஆகாது. வாயக் கட்னவ பிள்ள வளப்பா வயித்தக் கட்னவ புருசன் வளப்பானு சும்மாவா சொன்னாக?"

விடிய்ய, அடுப்புல தண்ணிப் பான வச்சு, அதுல புளிய எலைய அமுக்கிக் கொதிக்க வச்சு, இடுப்புக்குத் தண்ணி ஊத்தி, சுக்குக் களி கிண்டிச் சூடு ஆறும் முன்ன நல்லெண்ணெயை ஊத்தி நறுக்கா கருப்பட்டி போட்டு அவ ரெண்டு வாய் திங்க... "என் பேரன் எங்க?"ன்னு கேட்டு வந்துட்டாரு சுப்பஞ் செட்டியாரு.

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 8 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Fri Aug 06, 2010 7:03 am

பாயில கெடந்த பயல மடியில தூக்கிவச்சுக் கொஞ்சிட்டு, சட்டைக்கு உள்கூட்ல கையவிட்டு தங்கச் சங்கிலிய எடுத்துப் பிள்ள கழுத்துல போட்டு, "கைக்காசு போட்டுச் செய்முறை செய்ய வக்கில்லைன்னாலும், கடனத் திருப்பிக் கட்டத் தெம்பு இருக்கு தாயி. எம் மகளுக்கு ஒன் ஆத்தா போட்ட சங்கிலிய ஒம் மகனுக்கு நான் திருப்பிப் போட்டிருக்கேன்"னு சொல்லி வயசான கண்ல அழுதாரு.

களி தின்டுக்கிட்டிருந்தவ தன்னையறியாம எச்சிக் கையெடுத்துக் கும்பிட்டா பெரியவர.

கோழியடிச்சு கும்பா நெறையக் கொழம்புவச்சு நல்லெண்ண ஊத்தி எலும்பில்லாத கறியா எடுத்து, "தின்னு மகளே தின்னு"ன்னு திங்கவச்சு அவ ஒடம்பத் தேத்த, மூணாம் நாளே கண்ணு கசிய ஆரம்பிச்சிருச்சு காம்பு. மொதல்ல மஞ்சளா வருது சீம்பாலு. முட்டி முட்டி முண்டுது பிள்ள. யப்பே! ஒக்காந்துக்கிட்டே பறக்கிற மாதிரியில்ல இருக்கு பயபுள்ள பால் குடிக்கிறது!

கடவுளே! இதுல யார் சொகம் பெருசு..? குடுக்கிற தாய்க்கா? இல்ல குடிக்கிற பிள்ளைக்கா? இதுல ரெண்டு சொகம் எங்கயிருக்கு? பிள்ள சொகமும் சேந்து தாய்க்கு தாய் சொகமும் சேந்து பிள்ளைக்கு.

மூணாம் நாளு வந்து குமுஞ்சுபோனாக மொதலக்கம்பட்டி ஆளுக. அரிசி ஒரு பையில பேறுகாலச் செலவு ஒரு பையில நாலஞ்சு வெடக்கோழிக் குஞ்சுக கையில. ஆணும் பொண்ணுமாப் பத்துப் பன்னெண்டு பேர் வந்து, பிள்ள இடுப்புல ஒரு வெள்ளி அருணாக்கயிறையும் கட்டிவிட்டுட்டு, பெறந்து வந்துட்டாண்டா பீம மகராசான்னு பெருமையும் பேசிக்கிட்டாக.

பேறுகாலமான வீடு தீட்டு வீடு. ஒம்போது நாள் தீட்டுக் கழியாம அங்க யாரும் தங்குறதுமில்ல உங்குறதுமில்ல. செய்மொறையச் செஞ்சுபுட்டு, போயிட்டு வாரோம்னு பொழுதிருக்கப் போயிட்டாக. தாயும் பிள்ளையும் படுத்திருக்கிற பாயச்சுத்தி வட்டமா ஒரு சாம்பல்கோடு போட்டுவிடுவாக. அப்பிடிச் செஞ்சாப் பேய் பிசாசு அண்டாதுங்கிறது நம்பிக்கை. ஆனா, ஈ எறும்பு தாண்டாதுங்கிறதுதான் எதார்த்தம். அந்தச் சாம்பல் வட்டத்துக்குள்ள படுத்திருக்கா கருவாச்சி. பல்லு மொளைக்காத பிள்ள வாயில கட்ட வெரல வச்சுக் "கடி கடி"ங்கிறா. இளம் ஈறு அழுத்த அழுத்த என்னென்னமோ ஆகுது பிள்ள பெத்த ஒடம்புக்குள்ள.

"இப்பப் பாயில கெடக்குற நீயா மகனே... பத்து மாசம் படுத்திருந்த என் வகுத்துக்குள்ள? ஒன்னிய நான் காப்பாத்தப்போறனா? என்னிய நீ காப்பாத்தப்போறயா? பெறந்து மண்ணுல விழுந்ததுல யிருந்து நீ அழுகவே இல்லையே மகனே. ஒனக்கும் சேத்து அழுதுட்டா ஆத்தா அதே போதும்னு நெனைக்கிறியா? நீ வகுத்துக்குள்ள வளந்து வரல மகனே என் வைராக்கியத்துல வளந்து வந்திருக்க. பொழைச்சுக் காமிக்கணுமடா இந்த பூமியில. அஞ்சாம் நாளே காஞ்சு விழுந்து போச்சப்பா ஒந்தொப்பூழ்க் கொடி. ஆனா, எந்த நாள்லயும் விழுந்திரக் கூடாதுடா ஒன் வைராக்கியம். முள்ளுல கெடக்குடா மகனே ஆத்தா முந்தான வளந்து ஆளாகி வந்து எடுத்துவிடு."

கையக் கால ஒதறிக் காடாவெளக்கு வெளிச்சத்துல சிரிக்குது பிள்ள.

மொதலக்கம்பட்டி ஆளுக குடுத்த பேறுகாலச் செலவுலயிருந்து காயங்கருப்பட்டி சேக்குறாக ரங்கம்மாவும் பவளமும். மஞ்சள் கடுகு சுக்கு மௌகு திப்பிலி தேசாவதாரம் ஓமம் சதகுப்ப சித்தரத்த வசம்பு பெருங் காயம் வால்மௌகு எல்லாத்தையும் வறட்டோடுல போட்டு வறுத்தாக. ஒரல்ல போட்டு நொறுங்க இடிச்சாக. ஒரு சிரட்டை மேல எளந்துணி போட்டு அதுல இடிச்சதப் போட்டுச் சலிச்சாக. அரை வீச வெள்ளப்பூட எடுத்துப் பல்லு பல்லா உரிச்சு எளஞ்சூட்ல நல்லெண்ணெ விட்டு அரைவேக்காடா வதக்குனாக. இடிச்ச பொடிய அதுல கொட்டி ஒடைச்ச கருப்பட்டிய உள்ள போட்டு, பெரட்டு பெரட்டுன்னு பெரட்டியெடுத்தாக,

ஒரு பஞ்சாமிர்தப் பதத்துக்கு வந்ததும் மாமியாளுக்கு மருமக ஊத்துற மாதிரி பட்டும் படாம நெய்விட்டு விளாவி, ஒரே பதமா எறக்கி உறியில தூக்கி வச்சுட்டாக. உறியில வச்சுட்டா எறும்பு கிறும்பு ஏறாது நாய் பூன நக்காது எப்பப்ப வேணுமோ அப்பப்பப் பிள்ள பெத்தவ எடுத்து தின்டுக்கிட்டேயிருக்க வேண்டியது தான். அத்தன சக்தி அந்தக் காயங் கருப்பட்டிக்கு. ஊறாத பாலையும் இழுத்து ஊத்திப்பிடும் ஊத்தி.

யாரும் நெனைக்கல. அஞ்சாம் நாளு குளுர் காய்ச்சல் வந்திருச்சு பிள்ளைக்கு. மழையில நனைஞ்சு பிள்ளைக்கு மார்ச் சளி புடிச்சிருந்துச்சு அதான் காய்ச்சல் வந்திருச்சு. இன்னிக்கி நாளைக்குள்ள எறங்கிரணும் காய்ச்சல். இல்லாட்டி ஜன்னி வந்தாலும் வந்திரும். பிள்ளைக்கு இப்பவே பத்து போட்டாகணும். அடுப்புல வறட்டோட்ட வச்சு அளவா கேப்ப மாவ வச்சா. வேணுங்கிற தண்ணிவிட்டுக் கெட்டிப்படாமக் கிண்டுனா. களிப் பதத்துக்கு அது கூடிவாரப்ப ஒரு சிட்டிகை குங்குமத்தப் போட்டுக் கொழகொழன்னு எறக்குனா. ராமர் அணிலுக்குக் கோடு போட்டார்னு சொல்ற மாதிரி, அதை எடுத்து, பிள்ள உச்சந்தலையில மூணு வெரலு இழுகிவிட்டா நெத்தியில பத்துப் போட்டா அடிக் காது வரைக்கும் இழுத்து இழுகிவிட்டா. ரெண்டு நாளா சூடு கொஞ்சம் கொறையுதே தவிர அடங்கல. "எம்பிள்ளைக்கு ஒண்ணும் ஆகிறாதே..?"பெத்த வகுறு நடுங்குது கருவாச்சிக்கு.

பிள்ளைக்கு ஒண்ணும் ஆகல அவளுக்குத்தான் ஒண்ணு ஆகிப்போச்சு.

காய்ச்ச வந்த பிள்ள தாய் மார்புல வாய் வைக்காதில்லையா... ரெண்டு நாளா பிள்ள குடிக்காததுனால கட்டிப்போச்சு மார்பு கருவாச்சிக்கு. நெஞ்சு நெறபெருக்கா இருப்பதனால விண்ணு விண்ணுன்னு தெறிக்குது விட்டு விட்டு. பொதுவாப் பேறுகாலம் ஆன பொம்பளைகளுக்கு ரெண்டு வலி வரும். வகுத்துல சுண்டு வலி மாருல நெஞ்சு வலி.

சுண்டு வலி வரல கருவாச்சிக்கு நெஞ்சு வலி வந்திருச்சு இப்ப. சொல்லிவிட்டதும் கையில இருந்த கஞ்சித் தட்டத் தரையில வச்சுட்டுக் கூடவே ஓடி வந்துட்டா மருத்துவச்சி சீலையம்மா. எத்தன மார்புக்கு எடுத்து விட்டவ? இது அவளுக்கு லேசு.

"அஞ்சாத பயப்படாத செத்தவெடத்துல சொடக்கெடுத்த வெரலு மாதிரி சொகப்படுத்திடறேன் தாயி."

[You must be registered and logged in to see this image.]


பாதி கிழிஞ்ச பழைய சீலய எடுத்தா. எளம் வெந்நியில நனைச்சா. முறுக்கிப் புழிஞ்சா. கருவாச்சிய மண்டிபோட்டு ஒக்காரவச்சா. கனத்த மார்பு ரெண்டையும் துணிக்குள்ள அள்ளிப் போட்டுக் கட்டிப் பின் பக்கம் முதுகுல ஒரு சுத்துச் சுத்தி முடிச்சுப் போட்டா. மார்பு தரை பாக்கக் குனின்னா குனிஞ்சா இப்ப மொழங்கால அவ முதுகுல அழுத்தி இறுக்குறா சீலய. ஈரத்துணி வழியா சாரை சாரையா ஒழுகுதய்யா பாலு.

தாய்ப்பாலே சுத்தம் இது வடிகட்டின தாய்ப்பாலு. மருத்துவச்சி கசக்காமக் கசக்குறா. அழுத்தாம அழுத்துறா. காம்பு வழியா வீசம்படி பால் வெளி யேறுது. பாலுக்குப் பின்னாலயே வாரேன் வாரேன்னு வலியும் வெளியேறுது.

"இப்ப எப்படி இருக்கு தாயி?"

"வகுத்துலயிருந்து ஒரு பிள்ளைய எறக்கிவச்ச மாதிரி இப்ப நெஞ்சிலிருந்து ஒரு பிள்ளைய எறக்கிவைக்கிற மாதிரியிருக்கு."

ரெண்டு பேரும் முதுகக் காட்டிக்கிட்டு சுவத்துப் பக்கம் நின்னு வைத்தியம் பாத்து முடிச்சாகளா... திரும்பிப் பாத்தா பிள்ளையப் போட்டுவச்ச பாய் கெடக்கு பாயில போட்டுவச்ச பிள்ளையக் காணோம்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 8 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Tue Nov 09, 2010 3:06 am

கருவாச்சிக்குத் தெரியாமப் பிள்ளையத் தூக்கிட்டுப்போன சுப்பஞ் செட்டியாரு நேர வந்து நின்னாரு, சடையத்தேவர் வீட்டு வாசல்ல.

"யப்பா... சடையத் தேவா! பெரிய மனுசா! எங்கையில இருக்கிறது யாருன்னு கண்ணக்கொண்டு பாரப்பா. ஒன் வம்ச வாரிசு வந்திருக்கப்பா ஓங் குலக்கொழுந்து. ஒன்னியவே உரிச்சு வச்சிருக்கான் பாரு களவாணிப் பய. ஓங்கிட்ட சொத்துக்கேட்டு வரலப்பா முத்தங்கேட்டு வந்திருக்கான். ஏலே பயலே! முழிச்சு பார்றா ஒன் தாத்தன... உரிமை இல்லேன்னு போயிருமா? எங்க... ஒரு எத்து எத்தி எச்சியத் துப்பு கெழவன் மேல. வம்பு புடிச்சவன்டா ஒன் தாத்தன் அவன் வைராக்கியத்துல எட்டி ஒரு மிதி மிதி!"

ஆடுறா ராமா ஆடுறானு குரங்கக் குட்டிக்கரணம் போட வைப்பானா இல்லையா குரங்காட்டி... அந்த மாதிரி, கையில பிள்ளைய வச்சுக் கிட்டே சகல வித்தையும் பண்ணிப் பாக்குறாரு சுப்பஞ் செட்டியாரு சாயல சடையத் தேவரு.

மேனகை பிள்ளையத் தூக்கிட்டு வந்து காமிக்க, விசுவாமித்திரர் வச்சிருந்தாரு பாருங்க ஒரு மூஞ்சி... அந்த மூஞ்சிய இன்னைக்கு மட்டும் குடுங்கன்னு இரவல் வாங்கி மாட்டிக் கிட்டு, கடைவாய்ப் பல்லுல சிக்குன கறிய வெளக்கமாத்துக்குச்சி ஒடிச்சுப் பல்லுக் குத்திக்கிட்டே பராக்கு பாத்துக்கிட்டிருக்காரு சடையத் தேவரு.

"பேரு வையப்பா பேரனுக்கு" கடைசியா ஒரு அம்ப விட்டுப் பாத்தாரு சுப்பஞ் செட்டியாரு.

பார்வை பிள்ள பக்கம் விழுந்திரு மோன்னு வலிய முயற்சி பண்ணி மூஞ்சிய முதுகுப் பக்கம் வெச்சுக்கிட்டு, இன்னிக்கி மழை கிழ வருமான்னு அண்ணாந்து ஆகாயம் பாத்துக்கிட்டே சாவகாசமாச் சொல்றாரு சடையத் தேவரு "நாயி பேயி பன்னிக்கெல்லாம் நான் பேரு வைக்கிறதில்லப்பா!"

சுண்டிச் சூம்பிக் கறுத்துப்போச்சு சுப்பஞ் செட்டியாரு மூஞ்சி. சீ! இந்தாள மனுசக் கணக்குல சேக்க முடியாதுன்னு நெனச்சுக்கிட்டாரு மனசுக்குள்ள. "பிள்ளையக் காட்டிக் கருவாச்சிக்கு நல்லது பண்ணிப்புடலாம்னு நெனச்ச நெனப்புல மண்ணடிச்சுட்டானே மனுசன். சாகப்போற கெழட்டு மாட்டுக்கே இம்புட்டு வீம்பு இருந்தா, சல்லிக்கட்டுக் காள ஒனக்கு எம்புட்டு வீம்பு இருக்கும்? ஒரு நாளைக்கு ஒன்னியத் தேடி வருவான்டா கெழவன். அன்னிக்கு ஒண்ணுக்கடி ஒந் தாத்தன் மடியில" பிள்ளையத் தூக்கிக்கிட்டு விறு விறு விறுனு வெளியேறிட்டாரு சுப்பஞ் செட்டியாரு.

சுப்பஞ் செட்டியார் பிள்ளையத் தூக்கி நடக்க, முதுகுல வச்சிருந்த மூஞ்சியத் திருப்பி, பேரன் மூஞ்சியில தன் சாடை தெரியுதா பாத்திராலாம்னு சடையத் தேவர் நெனைக்க, சுப்பஞ் செட்டியார் முதுகுதான் தெரியுது பிள்ள மூஞ்சி தெரியல போய்ட்டாரு மனுசன்.

அதுக்குள்ள பிள்ளையக் காணோமேனு கதறி, நெஞ்சு வெந்து, அடிவகுத்துக் குடலு அந்து வந்துக்கிட்டிருக்காக கருவாச்சியும் வைத்தியச்சியும். "உசுரு போயி உசுரு வந்துருச்சு எங்களுக்கு. காய்ச்ச அடிக்கிற பிள்ளய எங்க தூக்கிட்டுப் போயிட்டீக எங்களக் கேக்காம?"

"வேறொண்ணுமில்ல ஆத்தா... தப்பையை வச்சுக் கட்டி நாய் வால நிமித்தலாம்னு நெனச்சேன். தப்பையே வளஞ்சுபோச்சு வந்துட்டேன்."

"என்ன சொல்றீக?"

"ஒடஞ்சு போன குடும்பத்த இந்தப் பச்ச மண்ண வச்சு ஒட்டவைக்கலாம்னு பாத்தேன் நடக்கல. பேர் வைக்கக்கூட யோக்யதை இல்ல. பெரிய மனுசனாம் பெரிய மனுசன்."

"மதியாத வாசப்படி மிதிக்க வச்சுட்டீகளே, எம் பிள்ளைய. பெத்துத் தரையில விழுந்தன்னைக்கே பேரும் வச்சிட்டனே எம் பிள்ளைக்கு."

"என்ன பேரு தாயி?"

"அழகு சிங்கம்."

"போடு அப்படிப் போடு. அடிச்சுக் கெளப்புடா தங்கம், அழகு சிங்கம்." பிள்ளையத் தலைக்கு மேல தூக்கி ரெண்டு சுத்துச் சுத்தி ஆனந்தக் கூத்தாடி மகிந்து மலந்துபோனாரு சுப்பஞ் செட்டியாரு. அவரு போட்டுவிட்ட தங்கச் சங்கிலிய வாயில கவ்விச் சப்பிச் சப்புக்கொட்டுது சவலப் பிள்ள. அந்தத் தங்கச் சங்கிலிதான் அவர் பொழச்ச பொழப்பையே பொரட்டிப் போடப்போகுதுனு அப்பத் தெரியாது பாவம் அவருக்கு.

"யப்பா! அக்கா வந்திருக்கா ஊருலயிருந்து."

உச்சியிலிருந்த பிள்ளைய உச்சுனாப்புல எறக்கி கருவாச்சி கையில குடுத்துட்டு, தகவல் சொல்ல வந்த எளைய மகளப் பாத்துக் கேக்குறாரு சுப்பஞ் செட்டியாரு "தனியா வந்திருக் காளா? தொணையா வந்திருக்காளா?"

"தனியாத்தான் வந்திருக்கா."

சொன்னது சொல்லு இல்ல காதுல தச்ச முள்ளு. மூத்த மக என்னா வேசங்கட்டி வந்திருக் காளோ... நெஞ்சப் புடிச்சுக் கிட்டே கெழட்டு நடை நடந்துபோறாரு சுப்பஞ் செட்டியாரு.

ஏறு வெயிலு, முள் முருங்கை மரத்து நெழல்ல பள்ளம் பறிச்சுப் படுத்திருக்கு கோழி. நல்லவகளப் பாத்தாலும், கெட்டவ களப் பாத்தாலும் உர்ருனு ஒரே மாதிரி உறுமிட்டுத் திரும்பவும் கண்ண மூடி அனத்திக்கிட்டே படுத்துக்கெடக்கு சொகமில்லாத ஒரு சொறி நாயி. காத்து இல்லாத சித்திரை மாத்தையில மேலயும் கீழயும் ஆடி அடங்குது காக்கா உக்காந்து போன வேப்பங்கொப்பு. பூனக்குட்டி ஒண்ணு உக்காந்திருக்கு வளவிப் பொதியப் பொத்திவச்ச கம்பளி மேல. வீட்டுக் குள்ள நொழையிறாக தகப்பனும் மகளும்.

"மகளே கனகம்! என்னாத்தா இது? மூஞ்சி வீங்கிப்போயி வந்திருக்கவ?"

"அது ஒண்ணும் வேற வீக்கமில்லப்பா... பொன்னுக்கு வீங்கி" தேங்காய்க்கு ஒரு கல்லெறிய மாங்கா விழுகிற மாதிரி, மூத்த வளக் கேள்வி கேட்டா எளையவ பட்டுன்னு பட்டாசு வெடிக்குறா.

புளிச்ச தண்ணிப் பானை யில ஊறிக் கெடக்கற சோளக் கஞ்சிக்கு மறுமாத்தமா பச்ச மொளகா வெங்காயம் வதக்கி, உப்புக் கருவாடு வறுக்க அடுப்புப் பத்தவைக்க ஆரம்பிச்சுட்டா பவளம்.

"ஒத்தையா வந்திருக்கி யேம்மா."


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 8 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Tue Nov 09, 2010 3:06 am

"ஒத்தையில வந்ததுனாலதான், ஒத்த உருண்ட சோளச்சோற வச்சு ஒப்பேறுது பொழப்பு. அக்காவோட மாமனும் சேந்து வந்திருந்தா நித்தம் எங்க போறது நெல்லுச் சோத்துக்கு?"

அடுப்பு இன்னும் பத்தல அவளாப் பத்தி எரியிறா பவளம். எந்தக் கேள்வி கேட்டாலும் ரெண்டே பதில்தான் வச்சிருக்கா கனகாம்பரம். ஒண்ணு கண்ணீரு... இன்னொண்ணு விசும்பல். தெரியும் தெரியாதுங்கிற ரெண்டே வார்த்தையில எல்லாக் கேள்விக்கும் பதில் சொல்ல முடியுமா இல்லையா, அப்பிடி! மகள உத்துப் பாத்ததுல பகீர்னு பதறிப்போனாரு சுப்பஞ் செட்டியாரு.

"இதென்னம்மா இது... புருவத்துல காயம்?" இந்தக் கேள்விக்கும் அடுப்புப் புகைக்குள்ளயிருந்து அசரீரி மாதிரி வருது பதிலு.

"கழுத்துல கெடந்த சங்கிலியையும் புடுங்கிட்டுப் போயிட்டான் வைர மோதிரம் போடச் சொன்னா ஒங்கப்பன் வளவி போட்டுவிட்ருவான் போலிருக்கேனு நாழிய எடுத்து எறிஞ்சா புருவம் கிழியாம என்ன பண்ணும்? அந்தாளுக்குப் புத்தி கலங்கிப்போச்சு இவளுக்குப் புருவம் கலங்கிப்போச்சு."

கிட்ட வந்தாரு சுப்பஞ் செட்டியாரு. மக புருவத்த ஒத்த வெரல்ல பட்டும் படாமத் தொட்டுத் தடவுனாரு. அவ தலையில கைவச்சு ஆதரவா ஒரு செல்ல அழுத்து அழுத்திச் சொல்றாரு: "ஏஞ் செல்லங்களா, ஒங்க ஆத்தா ஒங்கள வகுத்துல சொமந்து பெத்துப் போட்டுட்டுப் போயிட்டா. நான் தோள்ல வளவி சொமந்து ஒங்கள வளத்தெடுத்தனம்மா. அப்பன் வச்சுக்கிட்டு வஞ்சகம் பண்ணுவேனா? முந்தி மாதிரி செமக்க முடியல. ஊரு ஊரா அலைய முடியல. அதான் நான் கும்புடுற சாமிமேல குட்டிப் பூன உக்காந்திருக்கு."

சீ போ கழுத அங்கிட்டுன்னு பூனக்குட்டிய வெரட்டுனவரு, ரெண்டு கையிலயும் அடியில கோத்து ஏந்தி வளையல் பொதியத் தூக்குனாரு.

க்ளங்... க்ளுங்... களுங்... கிணுங்... அந்த சங்கீதச் சத்தம் வெரட்டோ வெரட்டுனு வெரட்டி அடிச்சிருச்சு அங்கிருந்த வெறுமைய ஒரு நாதம் கசிஞ்சு வழிஞ்சு நனச்செடுக்குது வீட்ட. தலையில ஒட்டி இறுக்கி உருமாக் கட்டி, வளவிக சொருகிவச்ச ஜம்பைத் திண்டுகள அடுக்கிவச்ச பைகளத் தோள்ல போட்டு, அதுக்கு மேல பக்கத் துக்குப் பத்துத் தோடா மேனிக்கு எடப் பக்கத்துலயும் வலப் பக்கத்துலயும் நூல் கயித்துல கோத்துவச்ச இருவது தோடா வளையலச் சொமந்துக்கிட்டு அதுக்கு மேல கம்பளியும் போட்டுப் பொத்திப் பெருஞ்செருப்பெடுத்து மாட்டி, ஒரு கறுப்புக் கொடைய நீட்டிச் சுப்பஞ் செட்டியார் நடந்துபோனா ஆம்பளைகளே ஆசைப்படணும், அவர்கிட்ட வந்து வளவி போட.

எந்த ஊருக்குள்ள போனாலும் அந்த ஊர ஒரு சுத்துச் சுத்தி வந்து "வளையல்... வளையல்"னு ஒரு சத்தம் விடுவாரு. ஆயிரம் வளவிக ஒண்ணுகூடி மொத்தமாச் சத்தமாச் சொல்ற மாதிரி இருக்கும் அவர் வளையல்னு ஆசையோடு விடுற ஓசை. வந்திருக்கேன் வளவிக்காரன்னு அறிவிச்சிட்டு, ஊரு மந்தையிலயோ கோவில்லயோ கம்பளி விரிச்சுக் கடை போட்ருவாரு.

கல கல கலன்னு வளவி பேசுறது பாதி சல சல சலன்னு அவர் வாய் பேசுறது பாதி. வளவிச் சத்தத்துல நீட்டிருவாக பொம்பளைக கைய வாய்த் தாட்டியத்து லயே இவரு மாட்டிரு வாரு வளவிய. நூல் கயித்துல கோத்திருக்கிற இருபது தோடா வளையலயும் ரெண்டு திருகுத் திருகி ஒரு முறுக்கு முறுக்கி எறக்கி வப்பாரு பாருங்க... ராசா வீட்டுப் பிள்ளைய வேலக்காரன் தரையில எறக்கிவிடுற மாதிரி அம்புட்டுப் பக்குவமா எறக்கிவைப்பாரு. அவரு ஆயுசில ஒத்த வளவி ஒடஞ்சதில்ல. கடை விரிச்சு ஊரக் கூட்டி வர்ணிப்பாரு பாருங்க வளவிய சும்மா கெறக்கமாவந்திரும் கெழவிகளுக்கும்.

" யம்மா! நீங்க வானவில்லப் பாத்தி ருப்பீக. அது ஏழு நெறம். அதுக்கு மேக்கொண்டதம்மா என் வளவி இது ஒம்போது நெறம். இந்தா அடுக்கி வச்சிருக்கேன் எண்ணிப் பாத்துக்குங்க." பச்சை செவப்பு ஆரஞ்சு மஞ்சள் காப்பி நீலம் செந்தூரம் வெள்ள ஊதா சும்மா கண்ணப் பறிச்சு மின்னும் கண்ணாடி வளையல். "என்னிய எடுத்துக்கிர்றியா... என்னிய எடுத்துக்கிர் றியா..."னு எல்லா நெறமும் கூப்பிடும்.

எந்தப் பொம்பள கண்ணு எந்த நெறத்துல நெலகுத்தி நிக்கிதோ அந்த வளையல எடுத்து, "சும்மா போட்டுப் பாரு தாயி!"னு மாட்டிவிடுவாரு.

ஒரு பொம்பள கை பெறந்த ராசியப் பாத்தவுடனயே அது என்னா அளவுனு அவரு கண்ணு சொல்லிப்பிடும். வளவிக்கு நெறம் ஒம்போதுங்கிற மாதிரியே வளவி போடுற பொம்பளைக கை அளவும் ஊர் தேசம் பூரா சுத்துனாலும் ஒம்போதுக்குள்ள தான் அடங்குது. அரையரைக்கா முக்கா முக்காலே யரைக்கா ஒண்ணே காலரைக்கா ஒண்ணரை ரெண்டு ரெண்டேயரைக்கா ரெண்டே கால் ரெண்டே காலரைக்கா இதுதான் பொதுவா பொம்பளைக கைகளுக்கு ஒலகத்துல உண்டான அளவு.

என்னமோ தொட்டிலை ஆட்டுற கையி தொல்லுலகை ஆள்ற கையினு பாட்டுக் கட்டிப் பாடுறாகளே... ஒலகத்துல எந்தக் கையா இருந்தாலும் இந்த ஒம்போதுக்குள்ள அடக்கம். சிலதுக யானைக் கால கையின்னு வச்சுப் பொறந்திருக்கும் அதுகள்லாம் கணக்குல சேராது.

சுப்பஞ் செட்டியாரு ஒரு பொம்பளைக்கு வளவி மாட்டிவிட் டாருன்னா, அந்தப் பொம்பள வேற ஊருக்கு வாக்கப்பட்டுப் போனாலும் சுப்பஞ் செட்டியார் அந்த ஊருக்கு வார வரைக்கும் வேற யாருகிட்டயும் வளவி போட மாட்டா. வளவி போட வார எல்லாப் பொம்பளையையும் மக மாதிரிதான் பாப்பாரு மகராசன். அவர் வளவி போடுற சோங்கும் பாங்கும் வேற யாருக்கும் சொல்லிக் குடுத்தெல்லாம் வராது. வளவி போடுற பிள்ள கைய நீட்ன வுடன, அத வாங்கி வசதி பண்ணி லேசா ஒரு சொடக்கெடுத்து விடுவாரு. கொஞ்சம் மோட்டுக் கையி முரட்டுக் கையா இருந்தா எடது கையில ஏந்தி வலது கையால மணிக்கட்ட ஒரு எளம் நசுக்கு நசுக்கி விடுவாரு. அவருக்குத் தெரியும் எந்தமேடு வளவிய வழி மறிக்கும்னு. மெல்லுசா சல்லுசா அந்த மேடு கோடு தட்டி விடுவாரு. வளவி என்னதான் எடக்குப் பண்ணாலும் எக்கார ணத்தக் கொண்டும் எண்ண போட்டுத் தள்ளுறதில்ல தொழிலுக்கு அது இழுக்காம். "நான் வளவிக்காரச் செட்டியாரு தான் தாயி எண்ணக்காரச் செட்டியார் இல்லே"ம்பாரு சிரிச்சுக்கிட்டே.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 8 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Tue Nov 09, 2010 3:06 am

வலது கையில பதிமூணு எடது கையில பன்னெண்டு. மொத்த வளவியக் கூட்னா ஒத்தப்படையில வரணும். இதான் ஊர் நாட்ல உண்டானது. ஒண்ணே முக்கால் ரூவாய்க்கு வித்தா, கால் ரூவா லாபங்கிறது கணக்கு. இதுல சில பேர் குடுப் பாக. சில பேர் நவதான்யம் வாங்கிட்டுப் போறீகளாம்பாக. சில பேர் நடையா நடக்கவிடுவாக.

வளவி விக்கப்போன எடத்துல குள்ளப்பக் கவுண்டன்பட்டியில ஒரு கூத்தாகிப்போச்சு. வழியில போயிக்கிட்டிருந்த வளவிக் காரரை வான்னு கூப்பிட்டான் வெள்ளையுஞ்சொள்ளையுமா இருந்த ஒரு எளந்தாரி. அவனப் பாத்தாச் சிரிப்பா இருந்துச்சு. உள்ள போட்டிருக்கிற முண்டா பனியன் வெள்ளையா வெளிய தெரியிற மாதிரி மெல்லுசா ஒரு சட்ட. உள் கால் சட்டப் பட்டைக பளீர்னு வெளிய தெரியற மாதிரி ஒரு மல்லு வேட்டி. பாவம் வேட்டிக்கும் சட்டைக்கும் வீணாச் செலவழிச்ச பய.

"எஞ் சொந்தபந்தம் எல்லாத்துக்கும் வளவி போடு"ன்னான். சும்மா ரேசனுக்கு அரிசி வாங்குற மாதிரி வரிசையா வந்து நின்னுட் டாக பொம்பளைக. "இன்னைக்கி நரி முகத்துல முழிச்சமடா சாமி"ன்னு வந்தவுக போனவுகளுக்கெல்லாம் வளவி போட்டு முடிக்க, "நான் வெள்ளிக் கெழமை யாருக்கும் துட்டுத் தாரதில்ல நாளைக்கு வந்து வாங்கிட்டுப் போ"ன்னுட்டான் அந்த ஆளு. சனிக்கெழமை போயிக் கேட்டா, அவன் ஊர்லயே இல்ல. மாமன் பெருமையை மச்சினிகளுக்குக் காமிக்கிறேன்னு காமிச்சுட்டு, வளையல அங்க மாட்டி விட்டுட்டு இவரு காதுல பூமாட்டி விட்டுட்டு ஓடியே போனான் புது மாப்பிள. சல்லிக் காசுகூட வரல போனது போனதுதான்.

அப்பிடிக் காத்துலயும் வெயில்லயும் மழையிலயும் குளுர்லயும் ஊர் ஊரா அலைஞ்சு எச்சிய முழுங்கிக்கிட்டே எட்டணா ஒரு ரூவானு சேத்துவச்சு ஒரு மகளக் கரை சேத்துட்டோம்னு நெனச்சா, கரை சேந்தவ திருப்பித் தண்ணியில விழுந்து கெடக்கா. இப்ப இருக்கிறவளக் கரை சேக்குறதா? வந்தவளக் கரை சேக்குறதா?

"கண்ணாடி வளவிக சத்தம் போடும் ரப்பர் வளவிக போடாது. நான் பெத்த மகளுகளா, நீங்க கண்ணாடி வளவிக. சத்தம் போடுறீக. அப்பன் ரப்பர் வளவி என்னத்தப் பேசுவேன்? ஆனா ஒண்ணு... ஒங்க ரெண்டு பேரையும் கரை சேக்காம என் கட்டை வேகாது." தான் ஒண்ணு நெனச்சா தெய்வம் ஒண்ணு நெனைக் கும்னு சொல்லுவாக. ஆனா, செத்துச் சீலப் பேனாகிப் போன சுப்பஞ் செட்டியார் கதையக் கேட்ட தெய்வம் ஏதொண்ணும் நெனைக்கலன்னு தான் சொல்லத் தோணும், ஏன்னா... அப்படியெல்லாம் ஒரு கருமாயத்தக் கற்பனை பண்ணி நெனைக்க தெய்வத்துக்கே தெரியாது.

"அடியே கருவாச்சி! எனக்கும் ஒனக்கும் சின்ன வயசிலிருந்தே வித்தியாசம்டி. நீ கறுப்பு நான் செவப்பு. நீ மாடு மேய்க்கப் போன நான் பள்ளிக்கூடம் போனேன். ஒனக்குத் தாய் இருந்திச்சு தகப்பன் இல்ல. எனக்குத் தகப்பன் இருக்க, தாயில்ல. எனக்கு வெளியூர்ல கல்யாணம் ஒனக்கு உள்ளூர்ல கல்யாணம். ஒனக்குப் பிள்ளை இருக்கு புருசன் இல்ல. எனக்குப் புருசன் இருக்க, பிள்ளை இல்ல.

கருவாச்சி மகன் அழகுசிங்கத்த வாங்கி மடியில போட்டுக்கிட்டு சோகத்த மறந்து கெக்கக்கெக்கக் கெக்கேனு சிரிக்கிறா கனகம். துன்பம்ங்கிறது விருந்தாடி மாதிரிதான் எப்பவாச்சும் வந்தாத்தான் மரியாதை. நித்தம் நித்தம் துன்பம் வந்தா மனசு மரத்துப்போகுதா இல்லையா? அப்படி மரத்து மறந்துபோனாக பொம்பளைக ரெண்டு பேரும்.

"யம்மா கனகாம்பரம்! வீட்டுக்குப் போ தாயி ஒரு விசேசம் வந்திருக்கு" - போறபோக்குல சொல்லிட்டுப் போனாரு அம்மைய நாயக்கரு.

என்னமோ ஏதோன்னு லொங்கு லொங்கு லொங்குனு ஓடுறா கனகாம்பரம் ஒடம்பத் தூக்கிக்கிட்டு. வீட்டுக்கு வந்து பாத்தவ நெலப்படிய ஒரு கையிலயும் நெஞ்ச ஒரு கையிலயும் புடிச்சு நின்னே போனா. பவளத்துக்குச் சொக்குப் பொடி போட்டு சோங்கு பண்ணிக்கிட்டிருக்கான் கனகம் புருசன் முத்துக்காமு.

"ஏ பவளம்... இங்க வா பிள்ள, வா. ஒன்னிய நான் கடிச்சா தின்னுபிடப் போறேன்? என்னமோ சொல்றாகளே ஊரெல்லாம். நீ பேன் பாக்குறதுல பெருங்கொண்ட கையின்னு. ஒங்க அக்காகூட படுத்துப் படுத்து எந்தலையில ஏறிக்கெடக்கு ஏகப்பட்ட பேனு. வா கண்ணு வா மண்ட காயுதுடி மாமனுக்கு. வந்து பேன் பாரு வா."

மச்சினிச்சிக்காக வெல்லப்பாகு மாதிரி எளகி ஓடுன மூஞ்சி, பொண்டாட்டியப் பாத்ததும் கருப்பட்டி மாதிரி இறுகிப்போச்சு. "ஏண்டி! புருசன் வீட்லயிருந்து ஓடி வந்தவ அப்பன் வீட்லயும் தங்குறதில்லையா? எங்கடி போயிட்டு வாரவ?"


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 8 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Tue Nov 09, 2010 3:07 am

நியாயப்படி கேள்வி கேக்க பாத்தியப் பட்டவளும் பாதிக்கப்பட்டவளும் அவதான். ஆனா, அவ கேள்வி கேக்குறதுக்கு ஒரு சந்துவிடாம முந்திக்கிட்டு மூஞ்சியில எள்ளு வெடிக்கிறான் முத்துக்காமு. நிலைப்படி கொள்ளாம நிக்கிறவளத் திரும்பவும் ஒரு அமட்டு அமட்டுறான்:

"சொல்லுடி, எங்கடி போயிருந்த?"

உடம்பு அலுங்காம உதடு மட்டும் அசைய அவ சொல்றா: "மாப்ள பாக்க."

"பாப்படி பாப்ப! ரெண்டு கையிலயும் வளவி போடுறவன் மகதான? கைக்கொரு புருசன் கேப்ப."

கையில இருந்த மோர்ச் செம்ப எடுத்து எறியப்போனவன ஓடி வந்து தடுத்து உள்ள விழுந்த பவளம், மோர்ச் செம்பப் புடுங்கித் துண்டாத் தூர எறிஞ்சிட்டுச் சொல்றா: "அவ ஒரு வெனயங்கெட்ட சிறுக்கி நீ ஒரு வெவரங்கெட்ட மாமன். கருவாச்சி மகனப் பாக்கப் போனாளா... அவனத்தான் மாப்ளைங்கிறா. அவள நாத்துனா ஒறவு சொல்லித்தான் நாங்க வளந்திருக்கோம். ஆமா... எடுத்ததுக்கெல்லாம் கை நீட்றது என்ன பழக்கம் மாமா?"

மச்சினிச்சி தொட்டதுல சன்னஞ் சன்னமா சாமி எறங்கிப்போனான் முத்துக்காமு.

முத்துக்காமு ஒரு சவங்கப் பய. அவன் இழுத்த இழுவைக்குத்தான் ஊருலகம் வந்து சேரணும்னு நெனைப்பானே தவிர, ஊருலகம் இழுக்கிற இழுவைக்கு அவன் போக மாட்டான். நித்தம் காசு சம்பாதிக்கணும் நித்தம் கறி திங்கணும். இந்த ரெண்டையும் தவிர, பெறவிக்கு அர்த்தம் பெருசா என்ன இருக்குன்னு நெனைக்கிறவன் முத்துக்காமு.

ஆள் செத்த வீட்ல * கவிச்சி பொழங்கக் கூடாதுங்கிறது ஐதீகம். அப்படிச் சொந்தபந்தத்துல ஆள் செத்துப்போனா, பொணம் தூக்குறவரைக்கும் பொறுமையா இருப்பான். பொணம் தூக்குனதும் கால்ல தண்ணி ஊத்திக்கிட்டே ஈரங் காயுமுன்ன கறிக் கடைக்குப் போயிருவான். வீடு, வாச, சொந்தம், பந்தம், பொண்டாட்டி, பொட்டிக் கடை, ஊரு, உலகம் எல்லாம் காசு பண்ணவும் கறி திங்கவும் கடவுள் அவனுக்குச் செஞ்சுகுடுத்த ஏற்பாடுங்கறது அவன் தீர்மானமான முடிவு. அன்னிக்கி ஒண்ணும் வழியில்லையா, உப்புக் கருவா டாச்சும் சுட்டு வைக்கலேன்னா பொண்டாட்டிய அடிக்கிற அடியில, வீடு வீங்கிப் போகும்.

சில பேருக்கு மூக்குல மச்ச மிருக்கிற மாதிரி இவன் மூக்குல கோவம் எப்பவும் ஒட்டிக்கிட்டேயிருக்கும். ரெண்டு கொணம், ரெண்டு பேச்சு இருக்கு அவன்கிட்ட. இவனுக்குக் காசு தர வேண்டிய ஆளுககிட்ட வழுவழுனு பேசுவான். இவன் காசு குடுக்க வேண்டிய ஆளுககிட்ட கடுகடுனு பேசுவான். கொடுக்கும் காம்பும் ஒரே எடத்துல இருக்கிற பிராணிய நீங்க பாத்திருக்கீகளா? அவன்தான் அது. கொடுக்கு எப்ப கொட்டும் காம்பு எப்ப சொட்டும்?

அதுக்கெல்லாம் காலதேச வர்த்தமானத்துல கணக்கெல்லாம் ஒண்ணும் கெடையாது. அப்பன் அவன் கிட்ட ஒப்படைச் சிட்டுச் செத்தது அவன் ஆத்தாளையும் ஒரு பொட்டிக்கடையை யும். ஆத்தாள செலவுக் கணக்குல சேத்துட் டான் பொட்டிக் கடையை வரவு வச்சுக் கிட்டான்.

அவன் அப்பன் ஒரு சத்தியவந்தன். "பொருளு வித்துப் பொழைக்கலாம் புத்திய வித்துப் பொழைக் கலாம். நேர்மைய வித்துப் பொழைக்கக் கூடாதுடா மகனே"னு சொல்லிட்டுச் செத்தாரு. அவரு பொணத்தோட சேத்து அவர் புத்திமதியையும் புதைச்சிட்டான் முத்துக் காமு. போதுமடா அப்பன் பொழைச்ச பொழப்புனு பொட்டிக்கடையில களவாணிப் பொருள் வாங்கி விக்க ஆரம்பிச் சான். கெழங்கு, வாழத் தாரு, முட்டை, நெலக்கடலையெல்லாம் களவாண்டு வர்ற ஆளுகளுக்குப் பத்துக்கு ஒரு வெல குடுத்தாப் போதும் குடுத்தத வாங்கிக்கிட்டுக் கும்பிட்டுப் போயிருவாக. அதுல அடிப்பானய்யா முத்துக்காமு லாபம். ஒண்ணுக்கு அஞ்சா வெல சொல்லி, ஒண்ணுக்கு மூணா வித்திருவான். அப்படிச் சம்பாரிச்சுக் கல்லாவும் ஆளும் கனத்துப்போனான் அதுலதான் வந்து சேந்துச்சு ஒரு ஆபத்து.

அவுக ஆத்தா செத்து ஆறு மாசமிருக்கும். விடிய்ய கடை தெறக்க ஒரு அம்பது திருட்டுத் தேங்காயத் தலைச் சொமையா சொமந்து கடையில கொண்டுவந்து எறக்கிட்டான் பொத்தக் காதன் திருட்டு ஆளாயிருந்தாலும் மொரட்டு ஆளு. ஒரு தேங்காய்க்கு ஒரணா மேனிக்கு வாங்கிட்டு, "போயிட்டு வாரனப்பா"னு போயிட்டான். போனவன் மறுநாள் திரும்பி வந்து, "காளியம்மன் கோயிலுக்குச் செதறு தேங்கா போடணுமப்பா... ரெண்டு தேங்கா குடு"னு கேட்டிருக்கான். "ஆறணா எடுத்து வையி. ஒரு தேங்கா மூணு அணா"னான் முத்துக்காமு.

"இதென்னப்பா கூத்தாயிருக்கு. ஒனக்கு ஒரணாவுக்கு நான் வித்த காயை எனக்கே மூணு அணாவுக்கு விக்கிறியே இது நியாயமா?"னு பொத்தக் காதன் கேக்க, "ஊரான் பொருளுக்கு நான் ஒரணா குடுத்தனே... என் பொருளுக்கு நீ மூணு அணா குடுத்தா என்ன?"னு முத்துக்காமு கேக்க... காசக் குடுத்துட்டுப் பேசாம வாங்கிட்டுப் போயிட்டான் பொத்தக் காதன். கோயில்ல போயி ஒடைச்சுப் பாத்தாரெண்டும் அழுகுன தேங்கா. கெட்ட கோவத்தோட புத்தி மாறி வாரான் பொத்தக் காதன்.

"ஏண்டா... ஆறணா வாங்குனது மில்லாம அழுகுன தேங்காயா குடுத்துவிட்ட? மாத்துத் தேங்கா குடுக்கல.... மரியாதை கெட்டுப் போகும்."

"அதெல்லாம் குடுக்க முடியாது. ஒன் நேரம் நல்லாயில்லைன்னா நான் என்னா பண்ணுவேன்?"

"என் நேரமா நல்லால்ல... ஒன் நேரந்தான் நல்லா இல்லடீ."

சும்மா தேங்காக் கடையில யான புகுந்த மாதிரி அடிச்சு ஒடச்சு மிதிச்சு அப்பளம் பண்ணிப் பொருள்கள எடுத்து வீதியில எறிஞ்சு பொட்டிக் கடையை இழுத்துத் தரையில போட்டு சாச்சுத் தேச்சு வீட்டுக்குள்ள புகுந்து அதுவரைக்கும் அவன் சன்னஞ்சன்னமாச் சேத்துவச்சிருந்த சம்பாத்தி யத்தையும் எடுத்துக்கிட்டு, போடி மெட்டு மேல ஏறி மூணாறுல ஓடி ஒளிஞ்சுபோனான் பொத்தக் காதன்.

சோளம் அடிச்ச களம் மாதிரி சிந்திச் செதறி நொறுங்கிக் கெடக்குற பலகையும் தகரமும் கூரையும் கொஞ்ச நேரத்துக்கு முன்னால எங்க பேரு பொட்டிக் கடைனு முழியா முழிக்குதுக. முத்துக்காமு பாவம்! மூக்குல இருந்த கோபத்தையும் காணம் மூக்கையும் காணம்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 8 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum