ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 7 Empty கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Mon Apr 26, 2010 10:31 pm

First topic message reminder :

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு வைரமுத்து


'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்கள் எழுதிய 'கருவாச்சி காவியம்' என்ற நூல் வெளியீட்டு விழா 2006 டிசம்பர் 16 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

கலைஞர் கருணாநிதி நூலை வெளியிட, முதல் நூலை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் பெற்றுக் கொண்டார்.


[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 7 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Fri Aug 06, 2010 6:16 am

[You must be registered and logged in to see this image.]

"என்னிய வலியோட கொன்னுட்டுப் போயிட்டானே ஒரு கொலகாரப் பாவி"ன்னு கத்துனவன்தான். அதுக்குப் பெறகு பொண்டாட்டி பேறுகாலத்துக் குக்கூட சொக்கத்தேவன்பட்டிக்கு வரல வாழ்நாள் பூரா வர மாட்டேன்னு சொல்லிட்டான். கொண்ணவாயன் கெடைக்குக் காவல் காக்கப் போன கத ஒரு சோகக் கத.

தை மாச ஒழவுக்கு முன்னால காடுகரைகள்ல கெடை அமத்துறது வழக்கம். ஆயிரம் உரம் போட்டாலும் ஆட்டுப் புழுக்கையும் கோமியமும் நெலத்துல விழுகிற மாதிரி வருமா? கெழக்க ராமநாதபுரம் சிவகங்கையில் இருந்து ஐந்நூறு ஆயிரம்னு ஆடுகள ஓட்டிக்கிட்டே மேற்க வருவாக கெடையாட்டுக்காரங்க. வேணும்ங்கிற வங்க பத்து நாள் பதினஞ்சு நாள் அவுகவுக நெலத்துல ஆடுகள அமத்திக்கலாம். பகல்ல எங்கிட்டு மேஞ்சாலும் பொழுசாய நெலத்துல கொண்டாந்து அத்தன ஆடுகளையும் அடைச்சுருவாக கெடையாட்டுக் காரங்க. களவாணிப் பயக யாரும் வந்தா கண்டு சொல்றதுக்கு உள்ளூர்ல கொறஞ்ச கூலிக்கு ஒரு ஆளு வேணும்னு கொண்ணவாயனப் பேசி அமத்திக்கிட்டாக, கெடை யாட்டுக்காரக.

வீட்டு வேலையெல்லாம் முடிச்சிட்டு, பசுவுக்குத் தீவனம் வச்சிட்டு, ஆட்டுக்குப் புல் அள்ளிப் போட்டுட்டு, சம்பளம் வாங்கிற வீட்டுலயே சாப்பிட்டுட்டு, மசங்கக் கெடைக்கு வந்து விடியிற வரைக்கும் இருக்கணும். காலே அரைக்கா ரூவா சம்பளம் மாசத்துக்கு.

இவன் வேலைக்குச் சேந்த ஏழாம் நாளு கெடையில ஒரு குறும்பாட்டங் குட்டி செத்துப்போச்சு, கொண்ண வாயன் மசங்கக் கெடைக்குப் போக, குறும்பாட்டங் குட்டிய மொத்தமாக் கொழம்புவச்சுத் தின்னுபுட்டு சட்டியக் கவுத்திக்கிட்டிருக்கானுங்க கெடையாட்டங்காரங்க,

அவங்க கைவிரல் இடுக்குல இருந்த கொழுப்புப் பசையும் கொழம்பு மணமும் கொண்ணவாயன் கொடல்ல இருந்த பசியக் குத்திக் கெளறுது. கொண்ணவாயன் பொழுசாய வருவானே அவனுக்கு ஒரு இத்த எலும்பாச்சும் எடுத்து வைக்கணுமேன்னு எடுத்துவைக்கல பாவிப் பயக. அன்னைக்கின்னு கெடைய இவன்கிட்ட விட்டுட்டு, அரப்படித்தேவன்பட்டிக்கு வள்ளித் திருமணம் பாக்கப் போய்ட்டாங்க எல்லாரும்.

முன்பனிக்காலம், ஈரக்கொல நடுங்குது ஈரக் காத்துல, அவங்க கூட்டிவச்ச அடுப்புல மிச்சமிருந்த நெருப்புல செடிசெத்தைகளப் போட்டுக் *கூதக்காயிறான் கொண்ணவாயன். கவுத்துவச்ச சட்டிக்குள்ளயிருந்து கழுவியும் போகாத கொழம்பு வாசன மூக்கத் தொளைச்சு நாக்கத் தூக்குது. திடீர்னு கொண்ணவாயனப் புடிச்சிருச்சு கறி வெறி. ஆடுகளுக்கு கொழையறுத்துப் போடுற வாங்கருவாள எடுத்தான். எந்தெந்த ஆடுக கைக்குச் சிக்குதோ அந்தந்த ஆடுகளோட காதுகள மட்டும் சரக் சரக் சரக்னு அறுத்தான். சில ஆடுகள்ல ரெண்டு காது சில ஆடுகள்ல ஒரு காது. கலவரம் பண்ணி ஓடுதுக காதுகளத் தரையில போட்ட ஆடுக. கெடைக் குள்ள அஞ்சாறு புலிக புகுந்து காது கடிக்கிற மாதிரி அமளிதுமளியாகுது மந்தை. என்னமோ தரையில கெடந்த அரசு எலைகளப் பெறக்கிற மாதிரி கீழ கெடந்த காதுகள ஒண்ணுவிடாமப் பொருக்கிறான். கூதக்காய்ஞ்ச அடுப்புல மொத்தமாப் போட்டுச் சுட்டுச் சுட்டுத் திங்கிறான் சொரண்டிச் சொரண்டித் திங்கிறான். விடிய விடியத் தின்டுபாத்தும் பத்துக் காதுகளுக்கு மேல திங்க முடியல. விடிய்ய வந்துட்டாங்க நாடகம் பாக்கப் போனவங்க.

கத்திக்கிட்டே அலையுதுக காதுக இல்லாத ஆடுக. இந்தக் கூத்தப் பாத்ததும் அவங்களுக்கு அந்தக் கூத்து மறந்துபோச்சு. கெடை உண்டான காலத்திலிருந்து இது வரைக்கும் இல்லாத சரித்திரமா இருக்கே!

கெடைக்குள்ள நரிக புகுந்து காதுகளக் கடிச்சுக் கத்திரிச்சு எடுத்துக்கிட்டு ஓடிப்போச்சோ? இல்லையே கடிச்ச மாதிரி இல்லையே. அளந்து அறுத்த மாதிரியில்ல இருக்கு. அப்ப எதிரிக வேலையா இருக்குமோ? இருக்கும். திருப்புவனம் கெடைக்காரங்களுக்கும் நமக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம்தான். அவங்க வேலையாகத்தான் இருக்கும். ஆனா, அவங்க ஆடு புடிக்கிற கூட்ட மாச்சே காதறுக்க மாட்டாங்களே... இப்படிப் பல தினுசா நெனச்சு, என்ன நடந்துச்சுன்னு கொண்ணவாயனவே கேட்டிருவோம்னு அவனத் தேடினா, பழைய கம்பளி பொத்திப் பம்மிப் பம்மி ஒக்காந்திருக்கான் பய. கிட்ட வர வர ஒரு கருகல் வாசன வருது.

இதென்னடா புதுசா இருக்கு.... எங்கியிருந்து வருது வாசனைன்னு பாத்தா, அடுப்புத் தீக் கங்குகள்லயிருந்து வருது. ஒரு குச்சியெடுத்து சரசரசரன்னு அடுப்பக் கிண்டிப்பாத்தா "எங்க கதியப் பாத்திகளா?"ன்னு வெடச்சுக் கெடக்குதுக கருகிப்போன காதுக.

"ஏலே! இது இவன் சோலி தாண்டா"ன்னு பதறிப்போய்த் திரும்பிப் பாத்தா, கம்பளிய ஒதறிட்டு ஓட்டத்துல கூடிட்டான் கொண்ண வாயன். அவன் ஒதறி எறிஞ்ச வேகத் துல அவன் சட்டைப் பையிலிருந்து துண்டா ஓடி விழுகுதுக அஞ்சாறு காதுக. "ஓங்காத அறுக்காம விட மாட்டோம்டி"ன்னு அவங்க வெரட்ட, இவன் ஓட... கரட்டுக்காட்ல நடக்குது ஓட்டப் பந்தயம்.வெடிச்சு விழுந்த பருத்திப் பஞ்சு காத்துல பறந்துபோறது மாதிரி போறான் பய.

ஒரு சிங்கம் முயலத் துரத்துனா, சிங்கத்தவிட வேகமா ஓடுமாம் முயலு. ஏன்னா, சிங்கம் துரத்துறது பசிக்காக முயல் ஓடறது உசுருக்குக்காக. பசிக்காக ஓடறதவிட உசுருக்காக ஓடற ஓட்டம் வேகம் குடுக்குமா இல்லையா? கொண்ணவாயன் தப்பிச்சு ஓடியே போனான். ஆனாலும், கெடைக்காரன் ஒருத்தன் வீசி எறிஞ்ச வாங்கருவா கொண்ணவாயன் காதோரமா ஒரசிக்கிட்டே போய் விழுந்ததில எலும்பில்லாத அடிக் காது ஒரு ஓரமா அந்துபோச்சு.

அவனுக்கு இடது காதுல இப்பவும் இருக்கிற ஒச்சம் காதறுத்த ஞாபகச் சின்னம். இப்படி எல்லா விசயத்திலயும் அரைக் கேணயனா இருந்த கொண்ண வாயன், ஒரே ஒரு விசயத்துல மட்டும் வெவரமா இருந்தான். தைப் பொங்க, தீவாளிக்குச் சொந்த ஊருக்குப் போக லைன்னா கிறுக்கு முத்திப் போயிரும் அவனுக்கு. பையில பலகாரம் வாங்கு வான் அப்பனுக்கு வேட்டி துண்டு வாங்குவான் அவனுக்கு யாரு வீட்ல யாவது திங்கத் தர்ற அதிரசம் முறுக்கத் திங்காம ஒண்ணு சேப்பான்.

கடைசியா சுப்பஞ் செட்டியார் வீட்டுக்குப் போயிக் கைக்கு ஏழு மேனிக்குப் பதினாலு வளவி வாங்குவான். அதை மட்டும் தனிப்பையில போட்டு முடிஞ்சு இடுப்புல சொருகிக்கிரு வான். முடவன் கொம்புத் தேனுக்கு ஆசப்படலாமான்னு ஒரு பழமொழி சொல்லுவாக. தப்பான பழமொழி அது. முடவன் கொம்புத் தேன் எடுக்க முடியாதுன்னு சொல்லலாம் ஆசப்படக் கூடாதுன்னு சொல்லலாமா? ஆசப்படறதுல என்ன தப்பு? அவன் ஆசப்பட்டுட்டான்.

கொண்ணவாயனுக்கும் ஒரு காதல் இருக்கு.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 7 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Fri Aug 06, 2010 6:19 am

"யப்பா கட்டையா! நான் பெத்த நல்ல மகனே! கேட்டியா..? மாசமா இருக்காளாம்டா, ஒம் பழைய பொண்டாட்டி, அத்து அனாதிக்காட்ல விட்டும் கழுத்துல தாலி வகுத்துல பிள்ள. தாலியக் கழத்தவும் மாட்டாளாம் கருவக் கலைக்கவும் மாட்டாளாம். நாளைக்கிப் பிள்ளையப் பெத்துக் கையில புடிச்சுட்டு வந்து, இவந்தாண்டா ஒன் அப்பன்.... இதாண்டா ஒன் சொத்துன்னு வம்புதும்பு பண்ணா என்ன பண்ணுவ? வழிவழியா வந்த சொத்துக்கு வாரிசு வேணுமடா மகனே! இன்னொரு கல்யாணம் பண்ணிக்க. நாளைக்கி வாராக செல்லம்பட்டி ஆளுக, மாப்ள வீடு பாக்க. செவக்காட்டுப் புழுதியில உழுது வந்தவன் மாதிரி சிவீர்னு வராம, குளிச்சு முடிச்சு வெள்ளையுஞ் சொள்ளையுமா வாடா மகனே!

சடையத்தேவர் வார்த்தைக்குச் சரி சொல்லிட்டான் கட்டையன். மாசமாயிருக்கிற ஒரு பொம்ப ளைக்குப் பத்து மாசமும் துன்பந்தானாம். அதுலயும் இந்த மொத அஞ்சு மாசமும் கடைசி ரெண்டு மாசமும் இருக்கே... வேணாமப்பா இந்த பொழப்புன்னு வெறுப்பே வந்திருமாம். கொமட்டலும் வாந்தி யும் கொடலப் பெரட்டுமாம் தூக்கந் தூக்கமா வருமாம் கண்ட எடத்துல கால நீட்டிக் கட்டையச் சாய்க்கச் சொல்லுமாம்.

[You must be registered and logged in to see this image.]



வயித்துல ஒண்ணும் இல்லேன்னாலும் வாந்தி வாந்தியா வருமாம். ஒரு சின்னப் பல்லு மொளைக்குது, அதுக்கே ஈறு வலிக்குதே... ஒடம்புக் குள்ள ஒரு உசுரே மொளைக்கிற போது வலிக்காமப்போகுமா ஒரு பொம்பளைக்கு.

கருவாச்சி பாவம், எல்லாத்தையும் பல்லக் கடிச்சிக்கிட்டுப் பொறுத்துக் கிட்டா. ஆனா, இந்தச்சோறு பொங்குற வாசனையும் தாளிக்கிற வாசனையும் கறிக் குழம்பு வாசனையும் வந்தாப்போதும், ஊரவிட்டே ஓடிக் கரட்டுல போயிக் குடியிருக்கலாமான்னு தோணுது அவளுக்கு.

ஒண்ணுஞ் சாப்பிடப் புடிக்கல ஒறப்பும் புளிப்பும் தேடிச் சப்புக் கொட்டி நிக்கிது நாக்கு. புளியங்கொழுந்த உருவிப் பச்ச மொளகா வச்சு அரச்சு யார் குடுத்தாலும் கடவுளேன்னு கால்ல விழுந்திரலாம் போல இருக்கு. சோறு செல்லல ஆனா, ஊறவச்ச அரிசின்னா உசுராயிருக்கு.

திருநீறு கெடைச்சாத் தின்னே தீக்குறா, நாயன்மார் அறுபத்தி மூணு பேரும் ஆயுசு பூராக் கொழச்சுப் பூசின திருநீற-, அஞ்சே நாள்ல இவ தின்டுபுட்டா. சாம்பல், சாப்பாடுன்னு ஆகிப் போச்சு மாங்கா, தொட்டுக்கன்னு ஆகிப்போச்சு. இந்த நாலஞ்சு மாசத்துல அவ அள்ளித் தின்ன சாம்பல் இருக்கே... அதக் கரட்டுக் காட்டுக்கு ஒரமா அடிச்சிருந்தா பருத்தி வெடிச்சுப் பவுனா விழுந்திருக்கும். பான தலையில கொடம் இடுப்புல. கெணத்துல தண்ணி எடுத்துப் பொடிநடையா வாரா கருவாச்சி.

"ஏந்தாயி! சடையத்தேவர் வீடு எங்கிட்டு இருக்கு?"

தண்ணிப் பானையத் தலையில வச்சமேனிக்கு எல்லாரையும் நின்னு நிதானிச்சுப் பாக்குறா கருவாச்சி. ஆணும் பெண்ணுமாப் பத்துப் பதினஞ்சு பேர்கொண்ட கூட்டம் எதுக்க நிக்கிது.

"இப்படியே இடது கைப் பக்கம் போனீங்கன்னா சாவடி வரும் சாவடியத் தாண்டி வேப்ப மரம். வேப்பமரத்துலயிருந்து மூணாம் வீடு." வந்தவுக பூரிச்சுப்போனாக அவ வழி சொன்னதுக்கு இல்ல நிறைகுடம் எதுக்க வந்தா நல்ல சகுனமாம் சம்பந்தம் கூடி வருமாம் அதுக்கு.

அன்னைக்கே பாதிக் கல்யாண வீடாகிப்போச்சு சடையத்தேவர் வீடு. தெருவெல்லாம் ஊர்வலம் போயி திரும்பித் திரும்பி வருது சமையல் வாசனை. கல்யாணம் பேச வாரவகளுக்குக் கறிச்சாப்பாடு போடறதில்ல. போடறதாயிருந்தா கெடையில காணாமப்போயிருக்கும் ஏழெட்டுக் கெடா.

பொண்டாட்டி தீட்டா இருக்கிற வீட்ல மாமியாக்காரி வந்து பரிமாறது மாதிரி, கறி இல்லையேங்கிற கொறைய லேசா ஈடுகட்டும் நெய்யி. அஞ்சாறு ஊர்கள்ல சொல்லிவச்சு வாங்கி உருக்கிவச்ச நெய்யிருக்கும் ஒரு மரக்கா. நெய்யில நீச்சலடிக்கலாம்யா சடையத்தேவன் வீட்லன்னு பெருமை பேசி அலையுது பெருசு.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 7 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Fri Aug 06, 2010 6:21 am

[You must be registered and logged in to see this image.]





உக்காந்து வாழை எலையிலயும் சாப்பிடலாம் வாழை எலையிலயே உக்காந்தும் சாப்பிடலாம் பெருங் கொண்ட எலைக.

வாசலப் பெருக்கி வைக்கோல் போட்டு வைக்கோல்மேல சமக்காளம்போட்டு, "சம்பந்தம் அப்புறம் பேசுவோம் மொதல்ல சாப்பிடுங்கப்பா"ன்னு எல்லாரையும் உக்காரவைக்க, உள்ளவாராக உருமாப் பெருமாத் தேவரும், காவக்காரச் சக்கணனும், சுப்பஞ் செட்டியாரும். அவுக மூணு பேரையும் பாத்து மூஞ்சி செத்துப்போன சடையத்தேவரு "வாங்கப்பா! நீங்களும் ஒக்காருங்க பந்தியில"ன்னு சொன்னாரு ஒப்புக்கு.

"சடையத்தேவன் வீட்ல சாப்பாடு என்ன மெதமாவா இருக்கும்? சாப்பிடுவோம் பேசிட்டுச் சாப்பிடுவோம்".

"என்னப்பா பேச்சு ஒரு இழுவையா இருக்கு. சாப்பிட வந்தீகளா? சண்டபுடிக்க வந்தீகளா?

"நல்ல காரியம் நடக்கட்டுமப்பா, அப்புறம் வாரோம்".

"நீங்க வந்ததச் சொல்லலேன்னா நாங்க வெந்ததத் திங்க முடியாதப்பா. வந்த சோலியச் சொல்லுங்க".

"பரம்பரையாப் பெரிய பொழப்புப் பொழச்சதப்பா ஒங் குடும்பம். இன்னும் பல தலைமொறைக்குப் பால் பாலா இருக்கணும்."

"அதுக்கு என்ன குறை இப்ப?"

"ஒன் வீட்ல சம்பந்தம் பேச வந்திருக்காக சரிதான். கட்டையனுக்கு இன்னொரு கல்யாணம் பண்றதும் நல்லது தான். ஆனா, நம்ம கள்ள நாட்டு ஆசாரப்படி தீத்தவ கழுத்துல தாலி இருக்க இன்னொருத்திக்குத் தாலி கட்ட முடியாது புருசன்."

"அதுக்கு வேற வழி இருக்கா.. இல்லையா?"

"இருக்கு. புதுப் பொண்ணு கழுத்துல புருசன் கட்ட முடியாது தாலிய, மொதப் பொண்டாட்டி வந்துதான் மூணு முடிச்சுப் போடணும். அப்பத்தான் கல்யாணம் செல்லுபடியாகும், நம்ம
சமூகத்துக்கான சட்டப்படி."

"ஒண்ணு, அந்தச் சிறுக்கி மகளத் தாலி முடிச்ச அவுக்கச் சொல்லுங்க. இல்ல எம் புது மருமகளுக்கு முடிச்சுப் போடச் சொல்லுங்க."

"கழுதையக்கூட கட்டிக்கிரட்டும் முடிச்செல்லாம் போட முடியாதுன் னுட்டா கருவாச்சி".

"மீறி நாங்க கல்யாணம் பண்ணினா?"

"பண்ண மாட்டப்பா. நீ பாரதம் படிச்ச ஆளு. மீறி நடந்தா என்னாகும்னு ஒனக்குத் தெரியாதா? ஊரே கூடி ஒன் வீட்டுக் கூரையில வேப்பங் கொழையச் சொருகிவச்சிரும். வேப்பங் கொழையச் சொருகுன வீட்டுக்கும் ஊருக்கும் உள்ள உறவு அந்துபோகும். ஊருக்குள்ள அந்தக் குடும்பம் இருக்கும். அந்தக் குடும்பத்தோட ஊர் இருக்காது. எங்களவிடப் புத்தி முத்தி நிக்கிற ஆளு நீ. ஒனக்குப் போயி நாங்க சொல்றோம் பாரு."

"அவள அத்துவிட்டது தப்பு அடிச்சே கொன்றுக்கணும்"ஓடிப் போயி ஒலக்கைய எடுக்கிறான் கட்டையன்.

"கருவாச்சிக்கு மொதல்ல கருமாதி... அப்பறந்தான் எங்க வீட்ல கல்யாணம்" சோத்துச்சட்டி தூக்கிட்டு வந்த சலம்பல்பாண்டி சட்டியக் கீழ போட்டுட்டுத் தாம்தூம்னு தவ்வி, சோறுவச்ச எலைக மேல சேறு மிதிச்சு ஆடிட்டான்.

விசாரிக்காமலேயே எல்லா விசயமும் புரிஞ்சுபோச்சு சம்பந்தம் பேச வந்த ஆளுகளுக்கு. குடிக்கவச்ச தண்ணிய எடுத்து எலையிலயே கை கழுவிட்டு எந்திரிச்சுப் போயிட்டாக எல்லாரும். சமச்ச சோறு ஆறிப்போச்சு கொதிச்ச மனசு ஆறல.

"ஒனக்கு இருக்குடி பிள்ளா"கருவாச்சி மேல வம்மம் வச்சு, கட்டையன் ஒரே எத்தா எத்தித் தள்ளுனதுல திண்ணையில ஒழுகி வாசல்ல பெருகி மாட்டுக் கோமியத்துல ஓடிக் கலக்குது நெய்யி. ஐப்பசி மாசம், புனுபுனுங்குது மழை சொதசொதங்குது பூமி. மசங்குன மாதிரியிருக்கு மத்தியானம். வீட்டுக்குள்ள வெளிச்சம் பத்தாதுன்னு தெரு வாசப்படியில உள்வீடு பாத்துக் கருவாச்சிய ஒக்காரவச்சு, அவளுக்குப் பின்னுக்க ஒரு முக்காலி போட்டுப் பேன் பாத்துக்கிட்டிருக்கா பவளம்.

சிலபேர் சல்லிக்கட்டு மாடு புடிக்கிறதுல, சிலபேர் புலிவேட்டை ஆடுறதுல பெரிய ஆளுகளா இருக்கிற மாதிரி, பேன் பாக்குறதுல பெருங்கொண்ட பேரெடுத்தவ பவளம். அவ பேன் பாக்குற சொகத்துல சொக்கிப்போன சொக்கத்தேவன்பட்டிப் பொம்பளைக பேன் பாத்து விடுறது புண்ணியம்னு அவ காதுல பூவும் வச்சுவிட்டுட்டாளுக.

ஆட்டுப் பண்ணை, கோழிப் பண்ணை வச்சிருக்கிற மாதிரி தலையில பேன் பண்ணை வச்சு அலையிறாக அந்த ஊர்ல பல பொம்பளைக. காடுகரைகளே கதின்னு கெடக்குற பொம்பளைக நித்தம் சீவக்கா போட்டுச் சுத்தம் பண்ண முடியுதா? இல்ல வெள்ளி செவ்வாய்க்கு எண்ணெ தேச்சு முழுகத்தான் லாயக்கு இருக்கா?

தலையில குப்பை கூளம் சொமக்கிறது கெடச்ச எடத்துல தலவச்சு செடி செத்தையில படுக்கிறது வறுமைக் கொடுமையில தல சீவாமப் போறது முடியில தூசு தும்பு சேர்றது இதெல்லாம் பேனை வா வான்னு கூப்பிட்டுச் சோறு போட்டுச் சொந்தம் பாராட்டி வச்சுக்கிரும் தலையில.

ஒரு பேச்சும் பேசாமத் தலையப் பவளம்கிட்ட ஒப்படைச்சிட்டு, கால நீட்டித் தலையக் கவுந்து ஒக்காந்துட்டா கருவாச்சி. மாசம் அஞ்சு வரைக்கும் வயிறு எந்திரிக்காது பொம்பளைக்கு. நாலு முடிஞ்சு அஞ்சு ஆரம்பம். எறும்பு கடிச்ச உதடு மாதிரி லேசா மேடு கட்டின வயிறு, அவ இடுப்புல சரிஞ்சுகெடக்கு சந்தோஷமா.

"எந் தலையில யாரோ கூதக்காயுற மாதிரி அரிப்பா அரிக்குதுடீ"ங்கிறா கருவாச்சி. "தலையா வச்சிருக்கிற தல? காளவாச வச்சாலும் எரியாத ஓந் தலையில கூதக்காயுறாங்களாம் கூத?" சின்னதா ஒரு செல்லக் கோபம் கோவிச்ச பவளம், சிக்கும் சிண்டுமாயிருந்த கருவாச்சி முடியப் பிச்சுப் பின்னலெடுத்துப் பளார் பளார்ன்னு ஒதரி, கையில வெலக்கிக் காத்தாடவிட்டா. சல்லுச்சல்லுச்சல்லுன்னு அவ முடிய அடிச்சுத் தொவைச்சு அவ தோள்லயே காயப்போட்டா. அவ தலையில தலப்பெரட்டுப் பண்ணப் பண்ணத் துன்பத்துல ஒரு இன்பமாயிருக்கு இன்பத்துல ஒரு துன்பமாயிருக்கு. கெறங்கிக் கிறுகிறுத்துப்போறா கருவாச்சி.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 7 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Fri Aug 06, 2010 6:22 am

சிணுக்கறுக்கி, ஈருவல்லி, சீப்பு இந்த மூணு ஆயுதமுமில்லாம, பெண்ணாப் பெறந்தவ போகக் கூடாது பேன் வேட்டைக்கு. பவளம் சிணுக்கறுக்கி எடுத்தா சடை புடிச்சுக் கெடந்த கருவாச்சி குடுமியச் சன்னஞ் சன்னமாச் சிக்கெடுத்தா. அட்ச ரேகை பூமத்திய ரேகை போட்டுத் தலய பாகம் பிரிச்சா. ஒவ்வொரு முடியா வெலக்கி உள்ள போயிப் பாத்தா, ஒனக்கும் எங்களுக்கும் பந்தயம், புடிச்சிரு பாப்பம்னு சவால்விடுதுக ஆண் பேனும், பெண் பேனும். பேன்கள்ல ஆண் பேன் எப்பவும் சிறுசு பெண் பேனுதான் பெருசு. சென கொண்டு அலையிறதுனால பெண் பேன் வெரசா ஓடாது சிக்கிரும் சீக்கிரம். ஆண் பேன் அப்படியில்ல. இந்தா புடிச்சாச்சுன்னு நெனைக்கிறப்ப ஒத்த முடிக்குள்ள ஓடிப் போயிப் பாசாங்கு பண்ணிப் பதுங்கிரும். பேன் பாக்கிறவளக் கண்ணக் கட்டிக் காட்டுல விட்டிரும்.


[You must be registered and logged in to see this image.]




கருவாச்சி தலையப் பாத்துப் பயந்துபோனா பவளம். அவ ஆயுசுல பாத்ததில்ல இப்படி ஒரு பேன் காடு. பத்து வெரலையும் குடுமி வேர் வரைக்கும் செலுத்திப் பிறாண்டு பிறாண்டுன்னு பிறாண்டி விட்டா. அவ பிறாண்டுற பிறாண்டல்ல பேனுக்குக் கிறுக்குப் புடிக்கணும் அப்பத்தான் பேன இவ புடிக்க முடியும். வேட்டைக்குப் போறவுக டமாரம் தட்டி, பொதருக்குள்ள இருக்கிற வெலங்குகள வெளியில கெளப்புற மாதிரி இவ பிறாண்டல்ல பதுங்குகுழிய விட்டு வெளிய வந்து மெதக்குதுக பேனுக. செனப் பேனுக போதையேறிக் கெடந்த இடத்துலயே கெடக்கும் எங்கயும் போகாதுக.

மொதல்ல ஆண் பேனாப் புடிக்க ஆரம்பிச்சா. ஒவ்வொண்ணாப் புடிச்சுப் புடிச்சு ரெண்டு கட்டை வெரல் நகத்துக்கு மத்தியில வச்சு மொறுக் மொறுக்குன்னு குத்துறா சொடக் சொடக்குன்னு சத்தம் கேக்குது. அவ பத்து வெரலும் தலைக்குள்ள பரபரன்னு பயணம் போக, தலை யெல்லாம் பூப்பூக்குற மாதிரி ஒரு கெறக்கம் உண்டாக... அவ காது கழுத்து பொடனியில வெரல்படுற சொகம் ஒரு வீணை வாசிக்க... பேன் குத்துற சத்தம் ஒரு சங்கீதம் படிக்க... தலையில அரிப்பெடுக்கிற எடத்தில நண்டு மாதிரி நடந்துபோற வெரல் சொல்லாமச் சொறிஞ்சு சுரீர்னு சொகங் குடுக்க...

ஐப்பசி மாச மழைத் தூத்தலும் குதுகுதுன்னு ஒரு கூதக்காத்தும் முதுகுத்தண்டு வழி பாஞ்சு, மூளைக்குள்ள கிச்சுக்கிச்சுப் பண்ண... கண் மயங்கி ஒறங்கிப்போனா கருவாச்சி. எவ தலையக் கொடுத்தாளோ அவளப் பொதுவா ஒறங்கவிட மாட்டா பேன் பாக்குற பொம்பள. நான் கழுத்து வலிக்கக் கருமாயப் பட்டுப் பேன் பாக்க, நீ அந்த உல்லாசத்துல ஒறங்குறவளான்னு பேனப் புடிச்சுப் புடிச்சு ஒறங்குறவல எழுப்பிக் குத்துடி நீயும்னு குடுத்திருவா கையில. ஒறக்கம் தொலைச்சவ ஒறங்கட்டும் பாவம்னு பவளம் விட்டுட்டா. முதுகுல தொங்குற முடிய அள்ளி அவ மூஞ்சிக்கு முன்ன போட்டுட்டு, தாலியக் கொஞ்சம் பின்னுக்கிழுத்து முதுகுல போட்டுக்கிட்டு அவ பொடணிப் பள்ளத்தக் கண்டுபுடிச்சா பவளம்.

தோட்டம் துரவுல மேச்ச ஆடுமாடுகளத் கடைசியாத் தொழுவுல கொண்டாந்து அடைக்கிற மாதிரி, புடிச்ச பேனுகள அடைச்சுவக்கிற பள்ளம் அதுதான். அவ புடிச்சுப் போடப் போட நெம்பிப் போச்சு பொடணிப் பள்ளம். இந்தா இந்தான்னு எல்லாப் பேனையும் எடுத்தாச்சு. வெள்ளை வெள்ளையா ஈரு மட்டும்தான் மிச்சமிருக்கு. பேன் வைக்கிற முட்டைதான் ஈருங்கிறது. அது கைக்குச் சிக்காது கழுத. உருவுறா உருவுறா ஈருவல்லி போட்டு உருவிக்கிட்டே இருக்கா. ஒரு உருவு உருவ ஈருவல்லிய வெளிய எடுத்து ஒரு அமுக்கு அமுக்க ஈருவல்லி இடுக்குகள்ல அந்த ஈருக சடக் சடக்ன்னு ஒடையிற சத்தம் கேக்க... ஏதோ கனாவுல பாட்டுக் கேக்குற மாதிரியிருக்கு கருவாச்சிக்கு.

சிக்கெடுத்த தலையத் திரும்பவும் ஒரு தடவ ஒதறி, குதிரக் கயிறு மாதிரி இடது கையில அவ குடுமிய இழுத்துப் புடிச்சு, வலது கையில சீப்பெடுத்து அழுந்தச் சீவி முடிஞ்சதடியம்மா என் வேலன்னு ஒரு முடியும் போட்டு பவளம் எந்திரிச்சுத் தன் சீலயப் படீர் படீர்னு ஒதறவும், சோளக் கருது அடிச்சு முடிச்சவ சீலையி லிருந்து சொங்கு விழுகிற மாதிரி, ஈரும் பேனும் முடியுமா காத்துல பறக்குது. அவ வெரல் இடுக்குல யெல்லாம் பிசுபிசுங் குது பேன் குத்துன ரத்தம்.

"ஏ கருவாச்சி எந்திர்றீ"ன்னு சொல்லிட்டு வீட்டுக்குள்ள கைகழுவப் போனா பவளம். கவுந்த தல கவுந்த மேனிக்கு அர மயக்கத்துலயே கெடக்கா கருவாச்சி. தெருவுல நடமாட்டமில்ல ஆள் சத்தமில்ல. வேப்பமரத்துல கத்திக்கிட்டிருக்கு மழையில நனஞ்சு தொண்டகட்டிப் போன காக்கா. காத்துல லேசா வருது யாரு வீட்லயோ கருவாடு சுடுற வாசன. "ம்மா"ன்னு அடிவயித்துலிருந்து கத்துது நாயக்கர் வீட்ல நேத்து ஈன்ட பசுமாடு. ஒரு அரத்தூக்க நெனப்புலயே இதை யெல்லாம் அனுமானிச்சுக் கவுந்து கெடந்த கருவாச்சி யாத்தேன்னு அலறித்துடிச்சு எந்திரிக்கிறா. அவ கழுத்துல யாரோ கயித்தவச்சு இறுக்குற மாதிரி இருந்திச்சு. எந்திரிச்சுப் பாத்தா, கழுத்துல கெடந்த தாலியக் காணோம்.

சேறும் சகதியுமா இருந்த தெருவுல யாரோ தடதடன்னு ஓடுற மாதிரியிருக்கு. நடந்தது என்னான்னு நின்னு நிதானிக்க முடியல. அய்யோன்னு கொடல் ஜவ்வு கிழியக் கத்துனா. தண்ணி மாதிரி தரையில கெடந் தவ தண்ணிப் பாம்பு மாதிரி எந்திரிச்சா. முந்தானைய எடுத்து இழுத்துச் சுத்துனா எடுப்புல. பளீர்னு தவ்வுனா வாசலுக்கு வெளிய தெருவுல. முழங்காலுக்கு மேல சுருட்டித் தூக்குனா சீலய. நடக்கக்கூட லாயக் கில்லாமக் கொழ கொழன்னு சேறாக் கெடந்த தெருவுல ஓடி வாராய்யா கருவாச்சி... உள்ள கெடந்த உசுரு உச்சந்தலையில முட்ட முட்ட!

"யாத்தே எந்தாலிய அத்துட்டுப் போறான். யாத்தே எந்தாலிய அத்துட்டுப் போறான்"

அவ போட்ட சத்தத்துல தீப்புடிக்குது நனஞ்சு நசநசன்னு கெடந்த தெருவு.

"அய்யோ எந் தாலி! அய்யோ என் தாலி..."

அஞ்சு மாசம் முழுகாம இருந்த பொம்பளைக்கு அந்தத் தெம்பும் தெறமும் எங்கிட்டிருந்து வந்துச்சுன்னே தெரியல. கொழஞ்ச சோத்தக் கொட்டிவச்ச மாதிரி சும்மா சொதசொதன்னு கெடக்குற ஐப்பசி மாசத் தெருவுல வெறிகொண்டு வெரட்டிப் போறா, தாலி அத்து ஓடுறவன் பின்னால.

மின்னல் மாதிரி ஓடி நாயக்கர் வீடு தாண்டி, கருவேலமுள்ளு அடைச்ச சந்து வழியாத் தவ்வப்பாத்து, சேறு வழுக்கித் தொப்புக்கட்டீர்னு விழுந்து போனான் தாலி அத்தவன் தாலியைத் தூக்கிப்பிடிச்ச கையோட மல்லாக்கக் கெடக்கான்.

தத்தக்கா பித்தக்கான்னு ஓடிவந்து, அவன் கையிலிருந்த தாலியை வெடுக்குன்னு புடுங்கிக் கழுத்துல கட்டிக்கிட்டு "நான் ஒனக்கு என்னாண்ணே பாவம் பண்ணேன்"னு கருவாச்சி கத்திக் கதறவும், வீட்டுக் குள்ளருந்த ஊரு வெளிய வந்திருச்சு.

மழைத் தண்ணியோட அழுதுக்கிட்டே, "ஒம் பொண்டாட்டி தாலி பால் பாலா இருக்கட்டும்"னு அவனக் கையெடுத்துக் கும்புட்டா, வல்லூறு வேகத்துல வந்தவ பாவம் வாத்து மாதிரி திரும்பிப் போறா.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 7 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Fri Aug 06, 2010 6:25 am

ஊரே வையிது, தாலிய அத்துட்டுப் போன ஒலக்கையன் தம்பிய.

"தாலிய அத்துப் பொழைக்கிறதுக்குத் தாலிய வித்துப் பொழைக்கலாமில்ல."

"இவன் பாவம் அம்பு கட்டையன் தான் வில்லு."

"சொந்த புத்தி எங்க போச்சு? பன்னி திங்கிறதத் திம்பானா கட்டையன் திங்கச் சொன்னா..?"

காறித் தெருவுல துப்புன எச்சியில, அவன் மூஞ்சியிலயும் தெறிச்சுப்போச்சு ஒண்ணு ரெண்டு. ஏழு மணிக்கே நடுச்சாமம் மாதிரி ஆகிப்போச்சு ஐப்பசி மாச ராத்திரி. "தாலியத்தவன் நாசமாகப்போக"ன்னு மண்ணள்ளித் தூத்துறேன்னு சேத்த அள்ளித் தூத்திட்டு வந்த பெரியமூக்கி, மேல்வலின்னு அனத்திப் படுத்திருக்கிற மகளுக்குக் கைகால் அமுக்கிவிடுறா.

கைகால் அமுக்கிவிடுறது பெரிய கம்பசூத்திரம் எல்லாருக்கும் வராது. பெரியமூக்கி அதுல தெள்ளக் கடைஞ்சவ. சில பேர் கைகால் அமுக்கிவிட்டா வலி வெளிய போயிரும் சுளுக்கு உள்ள வந்திரும். பெரியமூக்கி கைகால் அமுக்கிவிட்டா அம்பத்தாறு தேசத் துக்கு அங்கிட்டுப் போயிருந்தாலும் றெக்கைகட்டிப் பறந்து வந்து கண்ணுல சம்மணங்கால் போட்டு ஒக்காந்திரும் ஒறக்கம்.

மக குடுமிக்குள்ள கை செலுத்திக் கோலம் போட்டு, காதோரம் குருத்தெலும்புகளத் தடவிக் குடுத்து, தோள்பட்டையப் பந்து மாதிரி அமுக்கிப் புடிச்சு, பஞ்சு மாதிரி விடுதல பண்றா ஒடம்பவிட்டு வலி வெளிய போறதக் கண்ல பாக்குறா கருவாச்சி.

புடிச்சுவிடற துன்னா எல்லாத்துக்கும் ஒரே மாதிரி புடியா? கெடையாது. சதை யுள்ள சாராங்கத்துக்கு வேற புடி. எலும்புத் தாக்கான எடங்களுக்கு வேற புடி. பொடணிக்கு வேற பாதத்துக்கு வேற. அவ கைச் சதைய ரெண்டு கையிலயும் அமுக்கி விரல்கள்ல அழுத்தி உள்ளங்கைப் பள்ளத்துல கொண்டாந்து குவிச்சு, தவழ்ற பிள்ளையத் தரையில எறக்கிவிடுற மாதிரி பொத்துனாப்புல புடிச்சுவிட்டா, நெத்தியில வந்து ஒக்காந்திரும் நித்திரை.

கட்டை வெரலையும் சுட்டு வெரலையும் பொடணியில அழுத்திப் பதிச்சு ஒரு அங்குலம் சதையை ஒசக்க இழுத்து, பழுத்த வாழப்பழத்த அழுத்திப் பாக்குற மாதிரி வலிக்காம அமுக்கிவிட்டா. காச்சுப் போன அந்தக் கையில எங்கதான் மயிலிறக வச்சிருப்பாளோ? சும்மா மழை பேஞ்சு ஓஞ்ச மேகம் மாதிரி மெதக்குது ஒடம்பு. பாவிமக விரல்ல என்னதான் மந்திரம் வச்சிருக்காளோ? அவ சொன்னாச் சொன்னபடி கேக்குது சொடக்கு. வெரலப் புடிச்சுப் பெருவிரலால நகத்த ஒரு அழுத்து அழுத்தி, சொன்னா வந்திருன்னு ஒரு சுண்டு சுண்டுவா பாருங்க, சடக்சடக்குங்குற சத்தத்தோட ஒடஞ்சு வெளியேறும் சொடக்கு. இந்தக் கட்டை வெரல் நாலு மட்டும் எடக்குப் பண்ணும் சொடக்குப் போட, கட்டைவெரல் சொடக்குப் போட அவகிட்ட வேற சூத்திரம் இருக்கு. உள்ளங்கையில ஒரு கூடு பண்ணி உள்ளுக்கு இழுத்துக் கிருவா கட்டவெரல. அதத் தடவித் தன் வசமாக்கிப் படக்குன்னு இழுத்து மடக்குன்னு ஒடிப்பா கடக்குன்னு சத்தம் கேக்கும்.

தலையிலயிருந்து ஆரம்பிச்சுக் கடைசியாப் பாதசேவைக்கு வந்து சேர்ந்துட்டா. தூசுதும்பு பூச்சியெல்லாம் எடுக்கிறதுக்குத் தாய்க்கோழி குஞ்சுக் கோழிய மூக்கால கொத்தும் பாருங்க, அப்படிக் கருவாச்சி பாதத்த நகத்தால பட்டும்படாமக் கொத்திக் கொத்திவிடுறா பெரியமூக்கி. ஒடம்புல அலுப்ப எடுத்து எறிஞ்சிட்டு மூளைக்குள்ள அடைப்பு எடுக்குது அந்த நகக்கொத்து. எல்லாம் முடிச்சு, அணில் முதுகுல ராமர் மூணு கோடு போட்ட மாதிரி, பாதத்துல நகத்தால மூணு கோடு போட்டுட்டா முடிஞ்சது சோலின்னு அர்த்தம். எப்படிப்பட்ட ஆளாயிருந்தாலும் அதுக்குள்ள கொறட்ட விட்டாகணும். இத்தன பண்ணியும் அன்னைக்கு ஒறக்கம் வரல கருவாச்சிக்கு.

இவ ஆத்தாளா? அழுக்குச் சீல கட்டிவந்த கடவுளா? என்னிய விட்டா யாருமில்ல இவளுக்கு. எம் முந்தானையவிட நீளமில்ல இவ ஒலகம். நான் ஒறங்கிட்டதா நெனச்சுக்கிட்டு என் இடுப்ப இறுக்கிப் புடிக்குதுன்னு தளர்த்திவிடுறாளே இந்தச் சீல... இதச் செவக்கிக் கட்டச் சொல்லிக்குடுத்தது கூட இவதானே! பாவாடையில உருவாஞ்சுருக்குப் போடத் தெரியாம கல்லு முடிச்சுப் போட்டு அலைஞ்ச கேணச்சிறுக்கி நானு. இவதான் சொல்லிக் குடுத்தா சீல உடுத்த.

பதினாறு மொழப் பொடவையில ஒரு முந்தியெடுத்து இடுப்புல ஒரு சுத்துச் சுத்தி எடப் பக்கம் ஒரு சொருகு, வலப் பக்கம் ஒரு சொருகுச் சொருகி முடிஞ்சுக்கிட்டு, சின்னச் சின்னதா ஏழெட்டு விசிறி மடிப்பு மடிச்சு, சுங்கம் சேத்து அதைப் பின்பக்கம் தள்ளிக் கொசுவம்விட்டு, நெஞ்சோட சேத்துத் தச்சது மாதிரி ஒரு இறுக்கு இறுக்கி, முந்தானைய இடுப்புல சேத்து ஆப்படிச்சது மாதிரி சொருகிவிட்டுச் சொல்றா: "பிரிட்டிஷ்காரன் பீரங்கியில சுட்டா கட்டுன கோட்டை விழுந்தாலும் விழுந்திரும் கட்டுன சேல விழுந்திராது பாத்துக்க!" பக்கத்துலயே ஒருக்களிச்சுப் படுத்துக்கிட்டா ஆத்தா. கருவாச்சி மூஞ்சில விழுந்து ஒரசுது ஆத்தா முந்தான. இந்த முந்தானையப் பத்தி அவ சொன்ன சொல்லு இன்னும் காதுலயே இருக்கு.

"பதினாறு மொழத்துல மிச்சம் விட்ருக்கேனே... இந்த ரெண்டரை மொழம் முந்தான. இதுல இருக்குடி ஆத்தா ஒரு பொம்பள பொழப்பு. முந்தானைக்கு வேல ஒண்ணா ரெண்டா? படுக்க ஒக்கார முக்காடுபோட தலையில முண்டுகட்ட தலை தொவட்ட சும்மாடு சுத்த காசு முடிய விசிறி வீச கட்டுக்கட்ட ஞாபக முடி போட பண்டபாத்திரம் சுத்தம் பண்ண மூஞ்சி தொடைக்க ஒலை எறக்க அவசரத்துல புருசனுக்குப் பாய் விரிக்க...

எல்லாத் துக்கும் அந்த முந்தானதான். அஞ்சரை அடிப் பொம்பள பொழப்பு இருக்கு அந்த ரெண்டரை மொழத்துல..." ஆனா அவ சொன்னதெல்லாம் போக, சொல்லாத ஒரு வேலையும் செஞ்சது அவ முந்தான.

அப்ப... பத்துப் பதினோரு வயசிருக்கும் கருவாச்சிக்கு. ஆத்தாளும் மகளுமா கரட்டுக்காட்டுல கூலிக்குக் களையெடுத்தாக கண்ணுல சிக்குன காஞ்ச வெறகெல்லாம் ஒண்ணு சேத்துத் தலையில கட்டிச் சொமந்தாக பொழுதிருக்க வந்துக்கிட்டிருக்காக புடிச்சிருச்சு மழை. எங்க நிக்கிறது இடமில்லாத காட்ல..? நாம நனஞ்சாப் பரவாயில்ல. நனஞ்ச வெறகு எரியாதேங்கிற வருத்தத்துல வந்துக்கிட்டிருக்காக ரெண்டு பேரும்.


[You must be registered and logged in to see this image.]






மேகாட்ல மழை பேஞ்சு காட்டோடையில கரையறுத்து வருது செக்கச் செவேர்னு செந்தண்ணி. ஆத்தக் கடக்கணும் பாத்து வாடீன்னு சொல்லிட்டு, முழங்கால் தண்ணியில முன்னுக்கப் போறா பெரியமூக்கி. ஆத்தா முன்னுக்கப் போகட்டும். ஆழம் பாத்துப் பின்னுக்கப் போகலாம்னு கரையில நிக்கிறா கருவாச்சி. பெரியமூக்கி கரையேறிட்டா. ஆத்தாளுக்கு முழங்கால் தண்ணி இருந்தா இடுப்புத் தண்ணி இருக்கும் தனக்கு இது கருவாச்சி கணக்கு.

வெறகுக்கட்ட ஒத்தக் கையில புடிச்சுக்கிட்டே பாவாடைய இழுத்துச் சுருட்டி இடுப்புல சொருகி இறங்கிட்டா. பாதி ஓடை கடக்க, வெறகோட சேத்து அவள யாரோ இழுக்குற மாதிரி இருந்திச்சு. என்னா ஏதுன்னு நிதானிக்குறதுக் குள்ள மேகாட்ல பேஞ்ச மழையில இடைகாட்டுத் தண்ணியெல்லாம் ஒண்ணுகூடிக் கரை மீறி வருது காட்டாறு. ஆயிரம் தண்ணிப் பாம்புக ஒண்ணு சேந்து வார மாதிரி சீறிப் பாஞ்சு வருதுக செந்தண்ணி அலைக. கரையில ஏறி முழங்கால மடக்கிச் சீலயப் புழிஞ்சுக்கிட்டிருந்த பெரியமூக்கிக்குத் தெரிஞ்சுபோச்சு தண்ணிக்கொடம் ஒடைஞ்சு வந்த புள்ள தண்ணியில போகப் போகுதுன்னு.

"வந்துருடீ... கருவாச்சி வந்துருடீ" கத்துறா பாவம் கரையில கெடந்து. தண்ணிக்குள்ள தரைக்கும் காலுக்குமிருந்த பிடிமானம் போய்க்கிட்டிருக்கு... கருவாச்சி தத்தளிக்கிறா... அலைமோதுறா... தண்ணியும் குடிச்சுப்புட்டா. அப்பவும் மார்க்கண்டேயன் புடிச்ச சிவலிங்கம் மாதிரி வெறகுக் கட்டை விட மாட்டேங்கறா. "வெறக விட்டுர்றி கையக் கால ஒதறிக் கரைக்கு வாடீ" பெருங் கூச்சல் போடுறா பெரியமூக்கி.

கரையக் கொடஞ்சு கருவேலமரத்த விழுத்தாட்டி வேகவேகமா வருது வெள்ளம்.

சுத்தியும்முத்தியும் பாத்தா ஆத்தா. கடவுள் மாதிரி கெடந்துச்சு கரையில ஒரு கல்லு. என்ன வேகத்துல எடுத்தா... என்ன வேகத்துல அத முந்தானையில முடிஞ்சா... என்ன வேகத்துல அதத் தண்ணியில எறிஞ்சா... இன்ன வரைக்கும் அதை அறிய மாட்டா பெரியமூக்கி. கல்லோட வந்து தண்ணியில தொப்புன்னு விழுந்த முந்தானைய கருவாச்சி கெட்டியாப் புடிக்க.. இழு இழுன்னு அவள இழுத்துக் கரையில சேத்துட்டுத் தான் கால்பதிச்சு நின்னுருந்த கரை ஒடையவும் ஆத்துல விழுந்துபோனா பெரியமூக்கி. ஆத்தா இப்ப ஆத்தோட போக "யாத்தே யாத்தே"ன்னு கருவாச்சி கரையிலிருந்து கத்த... வெள்ளத்தோட மெதந்து வந்த மாட்டு வாலப் புடிச்சு ஒரு பர்லாங் தள்ளிக் கரையேர்றா பெரியமூக்கி. மக ஓடிப்போயி ஆத்தாளத் தூக்கிவிடவும் "என் தண்ணிக்கொடம் ஒடஞ்சு ஒரு பெறப்பு இன்னிக்குத் தண்ணியில ஒனக்கு மறுபெறப்பு மகளே"ன்னு காட்டோடைக் கரையில பாட்டுப் படிக்க ஆரம் பிச்சுட்டா. உசுரு பொழச்ச சந்தோசத்த விட, வெறகு போன வருத்தத்துல வீடு வந்து சேந்தாக தாயும் மகளும்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 7 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Fri Aug 06, 2010 6:27 am

மூஞ்சியோரம் கெடந்த முந்தானைய எடுத்து மோந்து பாத்தா கருவாச்சி. ஆத்தா வாசன அடிச்சுச்சு அதுல. ஆத்தாள நெனச்சா ஊத்தா ஊத்துது கண்ணீரு. தொடச்சுக் கிட்டே எந்திரிச்சு ஆத்தாளுக்குக் கால் அமுக்கிவிடுறா கருவாச்சி. காடுகரடு கடந்த காலு என்னியத் தூக்கிக் கல்லுலயும் முள்ளுலயும் நடந்த காலு தேஞ்சு சிறுத்துப் போனாலும் ஓஞ்சுபோகாத காலு.

இந்தா படுத்திருக் காளே ஆத்தா! இதே எடந்தான். எனக்கு அப்ப ஏழெட்டு வயசிருக்கும். அம்மை பாத்துக் கெடக்கேன். எள்ளு விழுக எடமில்லாம ஒடம்பெல்லாம் அம்மை போட்டு நெறபூட்டுப் பூட்டியிருக்கா மாரியாத்தா. வாழ இலைய விரிச்சு என்னப் பெறந்தமேனியா உரிச்சுப் படுக்கவச்சிருக்கா ஆத்தா. ஒடம்பெல்லாம் முத்துப் போட்டிருக்கு அசைய முடியல. நாக்குலயும் கொப்புளம் போட்டிருக்கு முழுங்க முடியல. இமைக்கு மேல ரெண்டு மூணு அம்மை ஒறங்க முடியல.

அம்மை பாத்த வீட்டுக்கு ஆளுக யாரும் வாரதில்ல போறதில்ல. அந்த இருவத்தோரு நாளும் ஆத்தா பெரியமூக்கி பட்டிருக்கா பாரு ஒரு பாடு... அதை நெனச்சாப் போதும்
நெஞ்சுக்குழியில முட்டிக் கண்ணு வழியா எட்டிப் பார்க்கும் கண்ணீரு. தலமாட்டுல எப்பவும் எளநி வெட்டிவச்சு, வேப்பங்கொழை ஒடிச்சு விடாம நீவிவிட்டு, மஞ்சள், வேப்பங்கொழுந்து, அருகம்புல்லு, ஆமணக்கு வித்து நாலையும் அம்மியில வச்சு, கல் இல்லாத களிமண் மாதிரி அரைச்சு, "இதாண்டி அம்மன் காப்பு"ன்னு திரேகமெல்லாம் பூசிவிட்டு, இருவத்தோரு நாளும் கண்ணுறங்காம கண்ணுக்கெட்டின தூரத்துலயே இருந்தாளே... அதுகூடப் பெருசில்ல... ஒடம்பு முழுக்கப் போட்டிருக்கிற அம்மையில ஒவ்வொரு முத்தா ஒடஞ்சு, அதுல ஒழுகுன தண்ணி அடிவாழ இலையில ஓடி ஆறாப் பெருகி, வீடே வீச்சமெடுத்துக்கெடக்க, அம்மனப் பழிக்கப்படாது அத வெளக்கமாத்துல பெருக்கவும் படாதுன்னு ரெண்டு கையும் குமிச்சு அத வாரி எடுத்து மஞ்சத் தண்ணியோட வீதியில எறிஞ்சாளே... கடவுளாயிருந்தாலும் போதுமடி பிள்ளன்னு போயிருமா இல்லையா... ஆத்தா போனாளா?... இல்லையே! எல்லாக் கடவுளுக்கும் பிள்ளை இருக்கோ இல்லையோ... எல்லாப் பிள்ளைக்கும் கடவுள் இருக்கு ஆத்தா ரூபத்துல.

நம்மூர்ல காலங்காலமாப் பொம்பளைக்குன்னு வந்ததெல்லாம் ஆத்தா வழிவந்த அறிவுதான். கோலம் போடச் சொல்லிக்குடுத்தவ ஆத்தா. குழம்பு கூட்டிப் போடச் சொல்லிக்குடுத்தவ ஆத்தா. ரசம் வைக்கயில அது இளங்கொதி கொதிச்சு அடங்க, நுனி நகத்துல இத்துனூண்டு வெல்லங் கிள்ளி அதுல சுண்டிவிட்டு, இன்னொரு கொதிகொதிக்க எறக்கணும்னு சொல்லிக்குடுத்தவ ஆத்தா.

ஆத்து மீனும் கொளத்து மீனும் பெரிய மீனாயிருந்தா சுத்தம் பண்றது லேசு. உரசு உரசுன்னு உரசி அதுக வாயில இருக்குற பாசி தூசியக்கூட விரல விட்டு எடுத்து வெளியில எறிஞ்சிரலாம். அயிர மீனுக சின்னது. அதுக வாயில மண்ணு இருக்கும் எடுக்க வராது. அதுக்கும் ஒரு வழி சொல்லிக்குடுத்தவ ஆத்தா. உசுருள்ள அயிர மீனாத்தான் வாங்குவா. தண்ணி ஊத்தி நல்லா அலசிட்டு மீனுக மேல பால ஊத்திவிட்டுருவா. பாலு ஒண்ணு மட்டும் ஒவ்வாது அயிர மீனுக்கு. வாயிலிருக்கிற மண்ணுகளக் கக்கிப்புடும் கக்கி. அயிர மீனு நாத்தமும் போயிரும் மீனும் சுத்தமாயிரும்.

இன்னொண்ணும் சொல்லிக் குடுத்தா ஆத்தா. அப்பப் புரியல அது இப்பப் புரியுது. "ஒறங்கப் போகையில பாவாடையத் தெரட்டிப் பந்து சுருட்டித் தொடை இடுக்குலவச்சுத் தூங்குடீ"ன்னு சொல்லிக்குடுத்தா. ஏன் எதுக்குன்னு கேட்டதுக்குச் சொன்னா: "தூங்கப் போகையில யான தும்பிக்கையச் சுருட்டி வாய்க்குள்ள வைச்சிருக்கிரும்டீ... இல்லேன்னா புழுப் பூச்சிக உள்ள போயிருமா இல்லையா"... அவ சொன்னது பெரியவளாகிப் புரியறப்ப வெக்கம் வெக்கமா வந்துச்சு பின்னாடி நெனச்சா சிரிப்புச் சிரிப்பா வந்துச்சு.

கருவாச்சி இப்பவும் அதை நெனச்சுப் பல்லுத் தெரியாமச் சிரிக்கிறா பல்லி கத்துற மாதிரி சிரிக்கிறா விட்டுவிட்டுச் சிரிக்கிறா பட்டும்படாமச் சிரிக்கிறா. ஆனா, அப்படியாப்பட்ட ஆத்தாளுக்கு அதுதான் கடைசி ராத்திரின்னு தெரிஞ்சிருந்தா இந்தச் சிரி சிரிச்சிருக்க மாட்டா பாவம்!

[You must be registered and logged in to see this image.]



கடந்த ஒரு மாசமாவே சொக்கத் தேவன்பட்டியே சோகமாகிப் போச்சு. வெதச்ச வெள்ளாமக் காடெல்லாம் குறுக்கொடிஞ்சு கெடக்கு. பதினாறு வயசுப் பொண்ணுக எண்ணெ வச்சுத் தல பின்னி நிக்கிற மாதிரி, தளதளன்னு இருந்த காடுகளுக்குள்ள வெள்ளக்காரன் படையெடுத்து வந்தது மாதிரி, வெட்டுக்கிளிக கூட்டமா வந்து குமுஞ்சிருச்சுக. ரம்பத்த வச்சு அறுத்த மாதிரி எளங்குருத்துகளக் கத்திரிச்சுக் கத்திரிச்சு அதுக தின்னுட்டுப் போனதுல பொணங்கள நின்டமேனிக்கு நிறுத்திவச்ச மாதிரி சுடுகாடுகளா நிக்கிதுக சோளக் காடுக. கையில இருந்த காசுகள எல்லாம் காடுகரைகள்ல போட்டுட்டு உள்ளதும் போச்சேன்னு நிக்கிது ஊரு.

வெவசாயம் அழிஞ்சு போனா வேலவெட்டி ஏது?

பெரியமூக்கியும் கருவாச்சியும் பித்துப் புடிச்சு நின்னாக. வெளையாமப்போச்சு காடு, மடி வத்திப்போச்சு மாடு குலுக்கையில இருந்த கம்பும் கேப்பையும் கொறைஞ் சுக்கிட்டே வந்துச்சு. அடகு வைக்கப் பொருளிருந்தாலும் அடகு வாங்க ஆள் இல்ல ஊர்ல. மொசப் புடிக்கப் பம்முற வேட்டை நாய் மாதிரி எப்ப வேண்ணாலும் பாஞ்சிருவேன்னு, ஊர் எல்லையில பதுங்கி நிக்கிது பஞ்சம். அன்னைக்கி விடிஞ்சும் எந்திரிக்கல ஆத்தா. தலவலி காய்ச்சல்னு படுத்தேகெடக்கா. சுக்குத் தண்ணியக் குடிச்சுக் குடிச்சு, ஒட்டிக்கெடக்குற உசுர அப்பப்ப ஊறவச்சுக்கிறா. அவளுக்கு நெல்லுக்கஞ்சியும் மொளகு ரசமும் வச்சுத் தரலாம்னா காப்படி அரிசி வாங்கக் காசில்ல கருவாச்சி கையில.

அப்பத்தான் அன்னஞ்சியில காளையன் கெழவன் செத்துப் போனான்னு சேதி வருது. கூலிக்கு மாரடிக்க ஆள் கூப்பிட ஆள் வந்திருக்கு. கல்யாணத்துலயும் சாவுலயும் தெரிஞ்சுபோகும் ஒரு மனுசன் இந்த பூமியில பொழச்ச பொழப்பு. காசு குடுத்துக் கூப்பிட்டுப் போனாலொழிய காளையன் கெழவனுக்கு அழுகுறதுக்கு ஆள் இல்ல அன்னஞ்சியில. கண்ணுல வெங்காயத்தப் புழிஞ்சுவிட்டாலும் கண்ணீர் வராது யாருக்கும். அழுகுறதுக்கு முகாந்திரமோ லாயக்கோ இல்லாத சாவு, கெழவன் சாவு.

காளையன் கெழவன் மாதிரி கஞ்சப்பய சில்லாவுலயே இல்லேன்னு செல்லம்பட்டிப் பட்டயத்துல தைரியமா எழுதிப்போடலாம். செத்தா, தன்னக் கேக்காமச் செலவழிச்சுப் புடுவாங்களேன்னுதான் தொண்ணூத் தஞ்சு வயசுல உசுரக் கையில புடிச்சு உக்காந்திருக்கான் கெழவன்னு ஊர்ல பேசுவாக.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 7 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Fri Aug 06, 2010 6:31 am

[You must be registered and logged in to see this image.]



சொத்து விரிய விரிய மனசு சுருங்கிப்போச்சு கெழவனுக்கு. ஒரு மனுசன் கஞ்சப்பயலா இருக்கறதுனால பணக்காரனாகிறானா..? பணத்தைக் காப்பாத்தக் கஞ்சப்பயலாகிறானா? முந்துனது முட்டையா... கோழியாங்கிற மாதிரி பதிலுக்குச் சிக்காத கேள்வி இது. காளையன் கெழவன் அப்பப்ப ஊருக்குள்ள மூக்குப் பொடி கடன் குடுக்குறதும் உண்டு. ஒரே ஒரு நிபந்தனதான். பொடிய அவர்தான் குடுப்பாரு. திருப்பி அவரேதான் எடுத்துக்குவாரு. அதுல ஒரு சூட்சுமம் வச்சிருந்தாரு.

இடுப்பு வேட்டியில முடிஞ்சு வச்சிருப்பாரு பொடி டப்பாவ. யாராச்சும் கடன் கேட்டா, இடுப்புல இருந்து கிட்னியவே எடுக்குற மாதிரி நிதானமா எடுப்பாரு. சுட்டு வெரல டப்பாவுக்குள்ள செலுத்தி, சுட்டு விரல் நகத்துல என்ன வருதோ அத அப்படியே எடுத்து எதிராளிக்குக் குடுத்திட்டு, விரல்ல ஒட்டியிருக்கிற மிச்சப் பொடியத் தன் மூக்குல மாத்தி மாத்திச் செலுத்திச் சந்துபொந் தெல்லாம் இழுகிக்கிடுவாரு. கடன் குடுத்த பொடிய அப்புறம் வசூலிப்பாரு பாருங்க. அங்கதான் இருக்கு கெழவனோட கெட்டியத்தனம். இவரு பொடியக் கடன் குடுக்கறது சுட்டு விரல் நகத்துல வசூலிக்கிறது கட்ட வெரல் நகத்துல. அதுக்குன்னே கட்ட விரல் நகத்தக் கெடா கொம்பு வளத்த மாதிரி வளத்துவச்சிருப்பாரு.

வாழை மட்டையிலயோ டப்பாவுலயோ வெரல் நகத்த நொழச்சு ஒரு எம்பு எம்பி அள்ளுனாருனுன்னா, சல்லிக்கட்டுக் காள கொம்புல மண்ணக் குத்தி ஒரு நெம்பு நெம்புமா இல்லையா, அப்படி அள்ளிப்புடும் அள்ளி. அது பொடிக்கு அவர் வசூலிக்கிற ஒரு பொடி வட்டி. அப்பிடித்தான் உள்ளூர்ல ஒரு எழவு வீட்டுக்குப் போயிருந்தாரு காளையன் கெழவன், போனவரு பொணத்து நெத்தியில இருந்த கால் ரூவாயப் பாத்துட்டு, அதக் கொண்டாங்கப்பா, இந்தா எட்டணா இதை வைங்கன்னாரு. எழவு வீடே எந்திரிச்சு உக்காந்திருச்சு. இதென்னப்பா இது கூத்தாயிருக்கு? சாயம் போகாதுன்னு சொல்லி வெள்ள வேட்டிய வித்துப்புடற வினயமான ஆளு. காலணாவ எடுத்துட்டு எட்டணாவத் தர்றாறே. இன்னக்கிப் பொளந்துகட்டப்போகுதுடா மழைன்னு வந்த சனம் பேசுது.

எங்கிட்டிருந்து மழை பெய்யும்? ஒரு செல்லாத அரை ரூபாயப் பொணத்துக்கு வித்து அதிலயும் ஒரு கால் ரூபா லாபம் பாத்த காளையன் கெழவனக் கண்டு இறங்கி வந்த மேகம் திரும்பிப் போயிருமா இல்லையா?

எட்டூரும் மறக்காது காளையன் கெழவன் சாலு* இரவல் குடுத்த கதையை. "எலே, தொரக் கண்ணு... இந்தாடா சாலு எடுத்துக்க. என் ஆயுசுல யாருக்கும் சாலு தோலு இரவல் குடுத்ததில்லப்பா ஒனக்குக் குடுக்குறேன் ஓட்டகீட்ட ஒண்ணும் கெடையாது பாத்துக்க கன்னிப்பொண்ணு மாதிரி வச்சிருக்கேன். சேதமில்லாமத் திருப்பித் தந்தா வாங்கிக்கிறேன். ஒரு புள்ளி விழுந்தாக்கூட புதுச்சால் தரணும்டா. எடுத்துட்டுப் போ".

[You must be registered and logged in to see this image.]



மறுநாள் சாலு திரும்பி வந்தப்ப உருட்டி உருட்டிப் பாத்து ஒரு ஓட்டையைக் கண்டு பிடிச்சிட்டாரு காளையன் கெழவன். புதுச்சாலு தந்தாலே ஆச்சுன்னு தகராறு பண்ண ஆரம்பிச்சுட்டாரு. துரைக்கண்ணு தலைகீழா நின்னு பாத்தான் நடக்கல, புதுச்சாலு வாங்கிக்கிட்டுத்தான் கழுத்துல போட்ட துண்ட எடுத்தாரு. ஏற்கெனவே அது ஓட்ட விழுந்த சாலுங்கறதும், களிமண்ணும் புளியும் வச்சு அடைச்சுக் குடுத்த ஓட்டைங்கறதும் காளையன் கெழவனுக்கும் கடவுளுக்கும்தான் தெரியும். காளையன் கெழவன் உண்மை சொல்றதில்ல கடவுள் பேசறதேயில்ல.

இப்படியாப்பட்ட ஆள் செத்துப்போனா எவன் கண்ல தண்ணி வரும்? மகனே அழுகல மகன் பிள்ள பேரன் பேத்திகளும் அழுகல.

சொக்கத்தேவன்பட்டிக்கு ஆள் வந்திருக்கு, கூலிக்கு மாரடிக்கிற பொம்பளை களக் கூட்டிட்டுப் போக. தொழில் கெடைச்சுப் போச்சுங்கிற சந்தோஷத் துல வைத்தியச்சி ரங்கம்மா, முக்குறுணி, இருளாயி மூணு பேரும் சீலய அவுத்து ஒதறி இழுத்துக் கட்டி அவுந்த குடுமிய அள்ளி முடிஞ்சு அன்னஞ்சிக்குப் புறப்பட, ஒங்ககூட நானும் வாரேன்னு ஓடிவந்து ஒட்டிக்கிட்டா கருவாச்சி.

"ஏய்! வகுத்துப் புள்ளக்காரி வரக் கூடாதுடீ எழவுக்கு". மூணு பேரும் ஒண்ணு சொன்னாப்புல தடுத்தாக.

"என் சிய்யான்கிய்யான் செத்துப்போனா வராம இருப்பனா. அப்படி நெனச்சுக்குங்க. வகுத்துல இருக்கிற பிள்ளையையும் காப்பாத் தணும் வகுத்துல சொமந்த ஆத்தாளயும் காப்பாத்தணும் கூட்டிட்டுப் போங்க. ஆத்தாளுக்கு மட்டும் சொல்லாதீக".


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 7 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Fri Aug 06, 2010 6:35 am

[You must be registered and logged in to see this image.]



கூலிக்கு மாரடிச்சு வர்ற வருமானத்துல ரங்கம்மாவுக்குப் பாதிப் பங்கு மிச்சப் பாதியில மூணு பொம்பளைகளுக்கும் மூணு பங்கு இப்படி ஒரு ஒப்பந்தம் பேசி முடிச்சு ஒத்தையடிப் பாதையில நடையில கூடிட்டாக நாலு பேருமா. மசங்கலாயிருக்கு மத்தியானமே. இருட்டுக் கட்டியிருக்கு பூமி. காது வழியா நொழைஞ்சு நெஞ்சுக்குழியில உக்காந்து ஈரக் கொலைய அறுக்குது காத்து. தூசிகீசி விழுந்திருச்சோ என்னமோ... கண்ணக் கசக்கி நிக்கிது ஆகாயம்.

முந்தானைய எடுத்து இறுக்கி முக்காடு போட்டுக் கிட்டு ஒண்ணுக்குப் பின்னால ஒண்ணா ரயில் பெட்டி மாதிரி போறாக நாலு பொம்பளைகளும். அவிச்சு மடியில போட்டிருந்த கல்லுப்பயறை ஆளுக்கு ஒரு கை அள்ளிக் குடுத்து நாலு பேர்ல நாந்தான் பணக்காரின்னு நெஞ்ச நிமித்தி முன்னுக்க நடந்துபோறா முக்குறுணி. சுளீர்சுளீர்னு அடிச்ச காத்து இப்பச் சொழட்டிச்சொழட்டி அடிக்குது.

நடந்து நடந்து தொண்ட காஞ்சுபோச்சு கருவாச்சிக்கு. நாக்கும் மீனும் ஒண்ணோ என்னமோ... தண்ணி இல்லாட்டி ரெண்டுமே செத்துப்போயிரும் போலருக்கு. கஞ்சப்பய பிச்சை போடுற மாதிரி சில்லறை சில்லறையா விழுகிற மழைத் துளியில நாக்க வெளிய நீட்டி நனைச்சுக்கிர்றா கருவாச்சி. இதப் பாத்துட்டா பின்னுக்கு வந்த வைத்தியச்சி. நில்லுங்கடின்னு எல்லாரையும் நிறுத்திட்டு, போற வழியில பொதர்ல இருந்த ஒரு கள்ளிச் செடி மேல முந்தானைய விசுக்குன்னு வீசி, பொத்துனாப்புல இழுத்துக் காம்போட திருகி எடுத்தா ஒரு கள்ளிப் பழத்தை. சும்மா நீலமும் செவப்பும் பூத்து நிக்கிது அது. பாறையில போட்டு ஒரு மீன உரசுற மாதிரி முள்ள ஒரசுனா. குல்லாய எடுத்துத் துண்டா வைக்கிற மாதிரி மேல் தோல உச்சுனாப்புல பிச்சுட்டு, தின்னுடி ஆத்தான்னு திங்கக் குடுத்தா. தின்னவும் வெத்தல போட்ட மாதிரி ஆகிப்போச்சு கருவாச்சி வாயி.

தவிக்கிற வாய்க்கு அங்கங்க தண்ணி வச்சிருக்குடி கடவுளுன்னு சொல்லிக்கிட்டே நடந்தாக மேற்கொண்டு நாலு பேரும். வெள்ளக்காரனக் கட்டமொம்மு வெரட்டி வெரட்டி அடிச்ச மாதிரி கூடிவந்த மேகங்களக் கலைச்சுக் கலைச்சு வீசுது காத்து. திடீர்னு எறங்கி வந்து மூஞ்சியில படீர்னு அடிச்சுட்டு ஒரே ஓட்டமா ஓடி ஒளிஞ்சுபோகுது மழை. வெட்டவெளியில ஆதிக்கஞ் செலுத்தி நிக்கிது ஒரு கனத்த வேப்பமரம். அதுல போயி ஒதுங்குனாக.

"ஏண்டி இருளாயி! குத்துக்கல்லு மாதிரி பேசாம வாரதுக்குக் கூதலுக்கு ஒரு கதை சொல்றது..?"

[You must be registered and logged in to see this image.]



"வெறுங்கதை எதுக்கு? விடுகதை சொல்றேன். விடுவி பாப்போம்".

"சொல்லு..?"

"கத்திபோல் எலையிருக்கும்
கவரிமான் பூப்பூக்கும்
திங்கப் பழம் பழுக்கும்
திங்காத காய் காய்க்கும்.
அது என்னா?"


"தெரியாதாக்கும். கருவாச்சிக்குப் புடுங்கிக் குடுத்தனே கள்ளிப்பழம்... அதானே?"

"இல்ல."

"ஆலமரம்."

"பொத்தாம் பொதுவாச் சொல்லாத ஆத்தா... புத்தியைச் செலவழி".

"கடைசியாக் கருவாச்சி சொன்னா: "நாம ஒதுங்கி நிக்கிறமே... வேப்பமரம், அதுதான?"

"அப்படிப் போடு தலை எல்லாம் மூளையடியம்மா கருவாச்சிக்கு".

ஆள் செத்த அடை யாளமே இல்ல அன்னஞ்சிக்குள்ள, பொணத்த நாற்காலியில உக்காரவச்சிட்டு ரெண்டு ஊதுவத்தியும் கொளுத்திவச்சிட்டு, சண்டைக்காரங்க மாதிரி ஒருத்தர ஒருத்தர் பாக்காம உக்காந்திருந்தாங்க பத்துப் பதினைஞ்சு ஆளுக. எழவு வீட்டுக்குன்னு ஒரு மூஞ்சி இருக்கா இல்லையா. அத மறக்காம எடுத்து மாட்டியிருந்தாக எல்லாரும். ஏழெட்டுக் கெழவிகளோட புலம்பல் வேற, கண்ணுல ஈரப்பசையே இல்லாம.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 7 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Fri Aug 06, 2010 6:35 am

உலகத்துலேயே பெரிய சோகம் கண்ணீர் வராம அழுகிறதுதான். அந்தக் கெழவிக அழுக முடியாம அழுகுறதப் பாத்தா... அழுகையே வந்துரும் அழுதறியாத ஆளுக்கும். காளையன் கெழவன் கடைசி மக கோம்பையில வாக்கப்பட்டவ "என்னப் பெத்த அப்பே"ன்னு தலைய விரிச்சுப்போட்டு நெஞ்சில அடிச்சு அழுது வர்றா. செயிக்கிற சீட்டு வந்து சேரலையேன்னு பெருங்கொண்ட சோகத்திலிருந்த காளையன் கெழவன் மகன் சீட்டை எறிஞ்சிட்டுத் திண்ணையவிட்டு மளார்னு எந்திரிச்சு, "நாசமாப் போகன்னு அப்பன மண்ண வாரித் தூத்திட்டுப் போன கழுத... இப்ப என்ன நெஞ்சில அடிச்சு நீலி மாதிரி அழுது வாரவ?"ன்னு சொல்லி... விட்டான் ஒரு அறை. ஒப்புச் சொல்லி அழுது வந்த ஒரே ஒருத்தியும் ஓஞ்சுபோனா.

"ஏ சொக்கத்தேவன்பட்டிப் பொம்பளைகளா, நீங்க மட்டும் அழுங்களா" ஒரு சாராயச் சத்தம் போட்டு சீட்டு வெளையாடப் போயிட்டான்.

"காக்கா பறக்காத
கள்ளிக்காட்டு பூமியில
கர்ணன் வந்து பெறந்தீரே
காளையனார் ரூபத்துல"
"ஊரெல்லாம் அன்னமிட்டு
உறவுக்குக் காசு தந்து
எமனுக்குத் தானமிட
ஏறிட்டீரோ பூந்தேரு?"

ரங்கம்மா இட்டுக்கட்டி மொத வரி பாட... முக்குறுணி ரெண்டாம் வரியில கூட... இருளாயி, கருவாச்சி ரெண்டு பேரும் பின்பாட்டுல சேந்து பின்னியெடுக்குறாக. இல்லாத கீர்த்தியெல்லாம் பாட்டுல கேக்கக் கேக்க சாவு ஆசை வருது கேட்டுக்கிட்டிருந்த கெழடுகளுக்கு.

பொழுதிருக்கப் பொணந் தூக்கியாச்சு. நாலு பொம்பளைகளுக்கும் சேத்து ஆறு ரூபா குடுத்தாக அழுத கூலி. பன்னாடை மாதிரி ஆளுக்கொரு நூல் சீலையும் தந்தாக. மாரடிச்ச பொம்பளைகளுக்கு இம்புட்டுக் கூலியாகும்னு தெரிஞ்சிருந்தா மண்டையப் போட்டிருக்க மாட்டாரு கெழவன். செத்துப்போனதனால இப்பத் தெரியவும் போறதில்ல தெரிஞ்சா வேகாம வெறச்சேகெடந் திருக்கும் நெஞ்சுக்கூடு.

பொழுதோட பொழுதா ஊரு போய்ச் சேந்திரலாம்னு பொம்பளைக நாலு பேரும் புறப்பட்டா, ஆலமரத்தத் தூக்கி அங்கிட்டு வைக்கிற மாதிரி அடிக்குது காத்து. காத்துன்னாக் காத்து கடுங்காத்து. கல்லுகளப் பேத்து ஆளுக மேல எறியிற காத்து. "இந்தக் காத்துல போனா ஊரு போய்ச் சேர மாட்டீக. இருந்து விடியப் போங்க"ன்னு சொல்லீட்டாக எழவு வீட்டு ஆளுக. சோளச் சோறும் மொச்சப் புளிக்குழம்பும் பசிக்கு ருசியா இருந்துச்சு. ஆத்தாகிட்டச் சொல் லாம வந்துட்டமேங்கிற நெனப்பு நெஞ்சுக்குழிய அறுக்க, ராத்திரி எல்லாம் கண்ணு மூடாமக்கெடந்தா கருவாச்சி.

விடியவிடிய அடிச்ச காத்து விடிய்... ய ஓஞ்சுபோச்சு. நடந்தா ஒத்தையடிப் பாதை மண்ணு மூடிக் கெடக்கு. வாரப்ப மழைக்கு ஒதுங்குன வேப்பமரம் என்னிய அடையாளம் தெரியலையான்னு குறுக்கொடிஞ்சு நிக்கிது. பாதிக் கெணறு மேடாகிப்போச்சு கெணத்துமேடு சரிஞ்சு. கடுங்காத்து தூக்கி எறிஞ்சதுல தோல் மாதிரி தொங்கிக்கெடக்கு வேலி முள்ளு மேல ஒரு வெள் ளாட்டங்குட்டி. குச்சி குச்சியா நின்ன வெள்ளாமக்காடு அறுத்துப் போட்ட மாதிரி தரையில கெடக்கு.

சொக்கத்தேவன் பட்டிக்குள்ள வந்தா வீடு தெருவுக்கு வந்துட்ட மாதிரியும், தெருவு வீட்டுக்குள்ள வந்துட்ட மாதிரியும் உருமாறிக்கெடக்கு ஊர். முள்முருங்கை மர மெல்லாம் நட்ட எடத்தைவிட்டு நாலடி தள்ளிக்கெடக்கு. தலையத் தரையில போட்டுக்கெடக்கு புன்னமரம் ரெண்டு. ஒரலு அம்மிக்கல்லத் தூக்கிக் குண்டு வெளையாடிட்டுப் போயிருக்கு காத்து. அலுப்பும் மயக்க முமா வந்த கருவாச்சி அதிர்ச்சியாகிப் போனா. வீடு தொறந்துகெடக்கு வீட்ல யாருமில்ல ம்மான்னு கத்திக் கத்திக் கயித்த இழுத்து இழுத்து அக்கப் பாத்ததுல கழுத்து புண்ணாகி நிக்கிதுக பசுவும் கன்டும். உள்வீடு ஏன் வெளிச்சமாயிருக்கு?

ஓடிப் போயிப் பாத்தா தலைக்கு மேல இருந்த ரெண்டு தகரத்தக் காணோம். மேல வச்சிருந்த கல்லத் தள்ளி விட்டுட்டுத் தகரத்தத் துண்டாத் தூக்கி எறிஞ்சிட்டுப் போயிருச்சு காத்து. கொண்ண வாயனக் காணோம். ஆத்தா எங்க போனா? தகரம் தேடிப் போயி ருப்பாளோ?

வீட்டத் தாண்டி, விழுந்துகெடக்குற படல்களத் தாண்டி சரிஞ்சுகெடக்குற படப்பு களத் தாண்டி தரையில கொட்டிக் கெடக்குற கூரைகளத் தாண்டிப் போனா, சீமக்கருவேலம் புதர் மேல தெரியுது ஒரு தகரம்.

ஆகா! ஏழேழு கடல் தாண்டிப் போனாலும் திரும்பி வந்திருமாமில்ல ஏலேலசிங்கன் பொருளு. ஆத்தா தண்டட்டிய வித்துப் போட்ட தகரம். எங்க போயிரும்? ஆளுக்கொரு பக்கம் புடிச்சுக் கருவாச்சியும் வைத்தியச்சியும் தகரத்தத் தூக்கிப் பாத்தா உள்ளுக்க... கழுத்தறுந்து செத்துக்கெடக்கா பெரியமூக்கி. வெட்டருவாளக் கையில புடிச்சு வெறகுக்கு முள்ளு வெட்ட வந்தவள, காத்துல பறந்து வந்த தகரம் கழுத்த அறுத்திருக்கு.

ஒறஞ்ச ரத்தம் குங்குமக்கட்டி மாதிரி ஒட்டியிருக்கு. பாதிக் கண்ணு தெறந்தே கெடக்கு. "யாத்தே"ன்னு கத்துனா பாருங்க கருவாச்சி... கர்ப்பம் கலங்கிருமோன்னு கையப் புடிச்சு இழுத்து அவள நெஞ்சில போட்டுக்கிட்டா வைத்தியச்சி.

"வந்துட்டியா மகளே வா.... கடைசியா ஒன்னியப் பாத்துட்டுப் போகலாம்னுதான் கண்ணு முழுசா மூடாமக் காத்துக்கெடக்கேன்... வா!"


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 7 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா Fri Aug 06, 2010 6:38 am

பெரியமூக்கி பொணம் பேசுற மாதிரியே இருக்கு.

ஆடு மாடு செத்துப் போனாலே ஆள் செத்த மாதிரி அழுது பொலம்புற ஊரு அது. காத்துல பறந்து வந்த தகரத்துல கழுத்தறுபட்டுச் செத்துப்போனா பெரிய மூக்கின்னு கேள்விப்பட்டதும், எடுத்த பொருள நின்ட எடத்துல போட்டுட்டு ஓடிவந்து குமுஞ்சுபோச்சு ஊரு.

பெரியமூக்கி வீட்டுப் பசு அடிவயிறு ரெண்டாக்கிழிய ம்மான்னு ஒரு கத்துக் கத்துச்சு பாருங்க... ஊரு ஒறஞ்சு உசுர் வத்திப்போச்சு. சாவுக்குன்னே கத்துறதுக்கு வேற வேற சத்தம் வச்சிருக்குதுக சகல சீவராசிகளும்.

"பெ... பெ... பெரியத்தா... போ... போ... போயிட்டியா"ன்னு பொலம்பிக்கிட்டே கையில இருக்கிற சாட்டைக்கம்புல தன் மண்டையிலயே மாறிமாறி அடிச்சு, நெத்தியிலயும் புருவத்துலயும் ரத்தம் ஒழுகி நிக்கிறான் கொண்ணவாயன்.

"இந்தக் கடவுளுக்கும் கருவாச்சிக்கும் அப்படி என்னதான் சண்டையோ..? அவ குடுமியப் புடிச்சு இந்த ஆட்டு ஆட்டுதே..."

"ஆத்தாளுக்கு ஆத்தாளா... அப்பனுக்கு அப்பனா இருந்த ஒருத்தியும் போயிட்டா. கருவாச்சி பொழப்ப இன்னும் என்னென்ன சூறாவாளி சுத்தப் போகுதோ?"

இருளப்பக் கோடாங்கி, கடப்பாரைக் கவுண்டரு, அம்மைய நாயக்கரு, முக்குறுணி, பவளம், இருளாயி எல்லாரும் வாயிலயும் வயித்துலயும் அடிச்சுக்கிட்டே வந்து கூடிட்டாக அழுகாத சனம் பாக்கியில்ல. கருவாச்சி மட்டும் அழுகல. எந்த எடத்துல ஆத்தாளப் பொணமாப் பாத்தாளோ அந்த எடத்துலயே புத்தியப் போக்கடிச்சவ மாதிரி மூளையில முள்ளடிச்சு உக்காந்து போனா.

அவளுக்கு நெறம் தெரியுது உருவம் ஏறல கண்ணுல. சத்தம் கேக்குது சொல்லு விழுகல காதுல.

நடை மாறிப்போன உருமாப் பெருமாத்தேவரு "போய்ச் சேந்துட்டியா ஆத்தா"ன்னு பொலம்பிக்கிட்டே எழவு வீட்டுல வந்து நெஞ்சப் புடிச்சு ஒக்காந்திட்டாரு. அடிச்ச காத்து ஒடிச்சுக் கெணத்துக் குள்ள போட்டுப் போன கமலைய, வால்கயிறு கட்டி இழுத்துக்கிட்டிருந்த காவக்காரச் சக்கணன் தகவல் தெரிஞ்சு, ஊரடித் தோட்டத்தவிட்டு ஓடிவாராரு ஒத்த வரப்புல.

காத்துலயும் கவலையிலயும் நெறங் கொலைஞ்சு போன வீட்ட ஓடி ஓடி ஒழுங்கு பண்ணுதுக பெருசுக.

"ஏலே சின்னமாயி! அந்தக் கூரைத் தகரத்தப் போட்டுவிடப்பா. வீடே வீதிமாதிரி கெடக்கு".

படபடன்னு ரெண்டு பேரு ஏறுனாங்க. ஓரம் சாரம் பாத்து ஒழுங்காத் தகரம் சொருகி, எச்சா ரெண்டு கல்லையும் தூக்கி வச்சாங்க.

"யப்பா! அழகர் நாயக்கர் மகனே! நரியடிச்ச கோழி மாதிரி பொணம் கெடக்கு தரையில. ஒழுங்கு பண்ணிப் பொணத்த உக்கார வையப்பா." விறுவிறுன்னு வேல பாத்தாக ரெண்டு மூணு எளந்தாரிக. அந்த ஊர்லயே மொத்தம் மூணு பேரு வீட்லதான் நாற்காலியிருக்கு. அதுல ரெண்டு வீட்ல எழவுக்குத் தாரதில்ல. மூணாம் வீட்டு நாற்காலிய வாங்கிட்டு வந்து பெரியமூக்கி பொணத்தத் தாங்கிப் புடிச்சு உக்கார வைக்க, கைகால் நிக்கிது கழுத்து நிக்கல.

ஒரு கிழிஞ்ச துண்டெடுத்தாக காயம் மறைய அவ கழுத்துல சுத்துனாக. ஒரு சரடு எடுத்தாக ரெண்டு மூணு சுத்துச் சுத்திக் கழுத்த நிமித்திப் பின் நாற்காலியில முடிச்சுப் போட தலை நிமிந்திருச்சு பொணத்துக்கு. இப்பக் கட்ன கயிறு கண்ணுக்குத் தெரியுது. அவ குடுமியை எடுத்து உதறிப் பரப்பிக் கயித்த மூடுனாக. தொடையை நெருக்குனாக. கால் கட்ட வெரல் ரெண்டை யும் ஒட்டிக் கட்டி வச்சாக ஒண்ணு சொன்னாப்ல கை ரெண்டையும் நாற்காலியோட சேத்துக் கட்டவும் அம்சம் வந்திருச்சு பொணத்துக்கு.

பொணத்துக்குப் பக்கத்துல நெறை மரக்கால்ல நெல்லு வச்சு, ஊதுவத்தி கொளுத்தி வச்சு, ஒடையாத தேங்கா ரெண்டும் கண் தெறக்காத வாழப் பழம் அஞ்சும் வைக்கவும் பூரண மாகிப்போச்சு பொணவீடு. அழுகை அடங்கல, பொணமாக் கெடக்கிறவளப் போட்டுட்டு உசுரோட இருக்கிற கருவாச்சியப் பாத்துத்தான் ஊரே உச்சுக்கொட்டுது.

"மாசமா இருக்கவளுக்கு மயக்கம் வந்திரப் போகுது, புளிச்ச தண்ணியில கூழக்கரைச்சுக் குடுங்கடி"பல்லில்லாத கெழவிக பதறிச் சொல்றாக. உக்காந்தாப் புடிச்சு எந்திரிக்கத் தோதான எடம்பாத்து உக்காந்திருச்சுக வெளிவாசல்ல பெருசுக.

"யப்பா! இது ஆம்பளையில்லாத வீடு. அதுலயும் அத்துவிட்ட பிள்ள ஒத்தையில நிக்கிறா. தவிரவும் ஈருசுரா வேற இருக்கா. தோட்டிக்குத் துட்டுத் தரணும், எழவு சொல்லப் போறவனுக்குச் செலவு இருக்கு. பூக்காரன், சலவைக்காரன், சவரக்காரன், சாங்கியம் சம்பிரதாயம்னு இந்தா இந்தான்னு இழுத்திரும். பாவம்! எங்க போவா காசுக்கு இடுப்பொடிஞ்ச பிள்ள... ஆகையினால பொதுவுல பணம் போட்டுப் பொணம் தூக்கற துன்னு முடிவு பண்ணியிருக்கோம். நீங்க என்ன சொல்றீக."

"பெருசு சொன்னாச் சரிதானப்பா." அவுகவுக சக்திக்கு உட்பட்டு, காலு அரை ஒண்ணுன்னு வந்து விழுந்ததுல இழுத்துக்க பறிச்சுக்கன்னு பத்தே கால்ரூவா சேந்து போச்சு.

"இந்தாங்கப்பா... எம் பங்கு ரெண்டு ரூவா. என்னாயிருந்தாலும் அவ என் பழைய சம்பந்திகாரி யில்லயா?" எழவுக்கு சடையத்தேவர் வந்ததும் இல்லாம ரூவா ரெண்டும் எடுத்து நீட்னதும் பேச்சு மூச்சு இல்லாமப் போச்சு ஊரு.

"தானாடாவிட்டாலும் சதை ஆடும்னு சொல்லுவாகளேப்பா... சும்மாவா?"இப்படிக் குளுந்து பேசுது ஒரு கூட்டம். "சோழியன் குடுமி சும்மா ஆடுமா? என்னமோ சூட்சமம் இருக்கப்பா" இப்படி இழுத்துப் பேசுது இன்னொரு கூட்டம்.

எழவு வீட்டுக்கு விருந்தாடி வந்ததுமாதிரி வெள்ளையுஞ் சொள்ளையுமா ஒரு ஓரமா நிக்கிறான் அப்பன் கூட வந்த கட்டையன். அவன் கூட நிக்கிறான் ஒரு பரட்டைப்பய கண்ணுமட்டும் செவப்பா. அவன் யாருன்னா... பெரியமூக்கி புருசன் துரைச்சாமிக்கு அண்ணன் மகன். கருவாச்சிக்கு ஒண்ணுவிட்ட அண்ணன். வாத்துமாயின்னு பேரு அவனுக்கு. சொக்கத் தேவன்பட்டியில அவன் பங்குக்கு விழுந்த வீட்ட வித்துட்டு அஞ்சாறு வருசத்துக்கு முதல்லயே பச்சக் கோமாச்சி மலைக்குப் போயிட்டான். அங்க அவனுக்குக் கஞ்சா வெவசாயம். அதனால கட்டையனுக்கும் அவனுக்கும் நல்ல ராசி. கட்டையன் அவன் காதுக்குள்ள ஏதோ சொல்லச் சொல்ல, நிறுத்தாமத் தலையாட்டிக்கிட்டேயிருக்கான் வாத்துமாயி.

"யப்பா! இந்தச் சாவு தன் சாவு இல்ல அசம்பாவித மான சாவு. ஆகையினால பொதைக்கப் படாது எரிச்சாகணும். ரெண்டாவது பொணம் புதுப்பொணமில்ல நேத்துப் பொணம். இன்னிக்கி மத்தியானமே எடுத்தாகணும்."

ஒரு ஆளும் மறுத்துப் பேசல ஒப்புக்கிட்டாக.

எத்தன பாடை கட்ன கையோ! ஆரம்பிச்சிட்டான் தோட்டி அவன் வேலைய. ஆறு ஆறரை அடி நீளத்துல ரெண்டு பச்சை மூங்கில் வாங்கிட்டு வந்தான். இரண்டு அடி நீளத்துல ஊடுகுச்சி ஆறு. கொச்சக்கயிறு வச்சு ஏணி மாதிரி இறுக்கிக்கட்டிட்டான். கட்ன மூங்கி மரத்துல பச்சைத் தென்னங்கிடுக வச்சான். அதுமேல பசபசபசன்னு வைக்கோலப் பரப்புனான். தலை மாட்டுல ஒரு கயிறு விட்டான், போற பொணம் போறேன் போறேன்னு தலை யாட்டிட்டே போகாமக் கழுத்துல சேத்துக் கட்டுறதுக்கு. சலவைக்கார வீட்ல ஒரு பழைய சீலய வாங்கி, வைக்கோல் மேல போட்டுப் பொத்திப் பஞ்சு மெத்தையாக்கிட்டான் பாடையை. பாடை கட்டி முடிக்க...

தெரு முனையிலிருந்து அழுகையில கூடி மொது மொதுன்னு வந்து சேந்துட்டாக மொதலக் கம்பட்டி ஆளுக. பிறந்த வீட்டு ஆசாரப்படி பச்ச கொண்டுவந்து, பொணத்துக்குப் பக்கத்துல நட்டிருந்த கொடிக்கள்ளி மேல கோடி சாத்தி அழுதாக. வந்தவுக கட்டிப்புடிச்சு அழுதும் கருவாச்சி அழுகல. நீர்மால முடிஞ்சிருச்சு நேரம் நெருங்கிருச்சு. இப்பவோ பெறகோன்னு மேகம் வேற நெறமாசக்காரி மாதிரி நிக்கிது.

"எடுங்கப்பா எடுங் கப்பா"ன்னு வெளியே ஒரு சத்தம் கேக்கவும், தோட்டி உள்ள ஓடிவந்து "ஆத்தா மேல போத்திக் கொண்டுபோக ஒரு சீல இருக்கா"ன்னு கேட்டான். அது வரைக்கும் கல்லு மாதிரி உக்காந்திருந்த கருவாச்சி, தீ விழுந்த பட்டாசு மாதிரி திடீர்ன்னு வெடிச்சு எந்திரிச்சா. நேத்து மாரடிக்கப் போயிக் கூலியா வாங்கிட்டு வந்த சீலைய ஆத்தா மேல போட்டு "எம் மொதச் சம்பாத்தியமே உன் கடைசிச் சீலயாப் போச்சே ஆத்தா"ன்னு அழுதா பாருங்க... வந்திருந்த சனத்துக்கெல்லாம் நெஞ்சுக்கறி வெந்து போச்சு.

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 7 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum