புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_c10 
91 Posts - 61%
heezulia
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_c10 
1 Post - 1%
viyasan
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_c10 
1 Post - 1%
eraeravi
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_c10 
283 Posts - 45%
heezulia
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_c10 
19 Posts - 3%
prajai
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு


   
   

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 24, 2010 12:58 pm

First topic message reminder :



மக்கா வாழ்க்கை


பரம்பரை

ஆசியாவிலுள்ள பல நாடுகளில், தென்வடலாக 1500 மைல் நீளமும் கிழமேலாக 800 மைல் அகலமுள்ள பாலைவனப் பிரதேசமான அரபு நாடும் ஒன்று. அந்த நாடு செழிப்பால் வறண்ட நாடு. ஆயினும் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று கண்டங்களும் ஒளிதில் தொடர்பு கொள்ளத்தக்க முக்கியமான ஓர் இடத்தில் அது அமைந்திருக்கிறது. எனவே தான் மக்கா பண்டைக்காலங்தொட்டு ஒரு முக்கிய வியாபார கேந்திரமாகத் திகழ்ந்து வந்துள்ளது.

இவ்வித நடு நாயகமான ஓர் இடத்தில் அரபு நாடு அமைந்திருந்த போதிலும், வளமில்லாத பாலைவனப் பிரதேசமாக இருக்கும் காரணத்தினால், சுற்றுப்புற நாடுகளை அரசாண்ட அரசர்கள் எவரும் அரபு நாட்டின் மீது ஆசையோ, அக்கறையோ கொண்டு ஆட்சி கொள்ளமுன் வரவில்லை. ஆனதால், அந்த நாட்டில் வாழ்ந்த மக்கள் தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் வாழ்ந்து வரலாயினர். இங்கு வாழ்ந்த வழுகின்ற மக்களை, நூஹ் நபியவர்களின் புத்திரர் ஷாம் என்பவரின் வழித்தோன்றல்களான ஆதிப் பழங்குடி அரபியர்கள், பாலைவன அராபியர்கள், குடியேறிகளான அந்நியர்கள் என மூன்று பெரும் பிரவுக்குள் அடக்கலாம்.

அரபுநாட்டில் குடியேறி வசித்த அந்நியர்களில் ஆபிரஹாம் தீர்க்கதரிசி என்னும் இப்ராஹீம் நபியும் அவரது மகன் இஸ்மாயீல் நபியும் சேருகின்றனர். இப்ராஹீம் நபி இராக்கிலுள்ள கல்தூனியா என்ற இராச்சியத்தைச் சேர்ந்தவர். இவருடைய சிறிய தந்தை ஆஸர் என்பவர் கோயில்களுக்கு உருவ வழிபாடு செய்வோருக்கும் விக்கிரகங்கள் செய்து கொடுத்து வந்தார். இப்ராஹீம் நபி விக்கிரக வணக்கத்தை கண்டித்து ஏக இறைவனை வணக்குமாறு மக்களிடையேப் பிரச்சாரம் செய்தார். இதனால் அவரின் சிறிய தந்தையும் அந்நாட்டு அரசன் நம்ரூது என்பானும், உற்றார் உறவினரும் இவரை வெறுத்து அந்நாட்டை விட்டும் வெளியேற்றிவிட்டனர்.

எனவே, அவர் பாலஸ்தீனம் சென்று அங்கு கன்ஆன் என்னும் இடத்தில் தங்கினார். பின் அங்கிருந்து வெளியாகி சிரியாவுக்கு வந்து வசித்த போது தமது சிறிய தந்தையின் மகளான சாரா என்ற பெண்மணியை மணம் செய்து கொண்டார். சில காலஞ்சென்று மீண்டும் சொந்த நாட்டுக்கு வந்து இறைவனின் மகத்துவத்தைப் பற்றியும், விக்கிரக வணக்கத்தைக் கண்டித்தும் பிரச்சாரம் செய்யலானார். அதனால் அரசன் நம்ரூது அவரை நெருப்புக் குண்டத்துள் எறியச் செய்தான். இறைவனின் ஆணைப்படி அந்நெருப்பு அவருக்கு குளிர்ந்த புங்காவாக மாறி விட்டது. பின்னர் சொந்த நாட்டைத் துறந்து மனைவி சாராவுடன் எகிப்து நாட்டுக்குச் சென்றார். எகிப்து அரசன் ரக்கிய்யூன் என்பான் இப்ராஹீம் நபியைக் கண்ணியப்படுத்தி பல வெகுமதிகளுடன் அரசகுமாரி ஹாஜரா என்ற மங்கையையும் பரிசிலாகக் கொடுத்தனுப்பினான்.

இப்ராஹீம் நபியவர்களுக்கும் வயதாகி வந்தது. ஆயினும் சாராவைக் கொண்டு மகப்பேறு கிட்டாதிருந்தது. எனவே ஹாஜராவையும் அவர் திருமணம் செய்து கொண்டார். சிறிது காலத்தில் ஹாஜராவுக்கு ஆண் மகவு ஒன்று பிறந்தது. அவ்வன்புக் குழந்தைக்கு இஸ்மாயீல் என அழகுத் திருப்பெயர் சூட்டி மிக்கப் பற்றுப் பாசத்துடன் வளர்த்தார்கள். இப்ராஹீம் நபியவர்களுக்கு அது சமயம் 86 வயதாக இருந்தது. அதன்பின் மூத்த மனைவி சாராவுக்கும் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதற்கு இஸ்ஹாக் எனப் பெயரிட்டார். அது போழ்து இப்ராஹீம் நபி 99 வயதை அடைந்திருந்தார்கள்.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 4:34 pm

தமக்கு எதிரே பொந்தொன்று அடைபடாதிருப்பதை அப்போது தான் அபுபக்கர் (ரலி) கவனித்தார்கள். அதில் விஷ ஜந்து எதுவும் இருக்கக்கூடுமென எண்ணியவராய்த் தம் கால் படத்தால் அப்பொந்தை அடைத்தார்கள். சந்தேகித்தவாறே அதிலிருந்த நச்சவரம் அவர்களின் குதியில் தீண்டி விட்டது. வினாடிக்கு வினாடி விஷம் ஏறிக் கொண்டிருந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு தாங்கியும் வேதனையைப் பொறுக்க முடியவில்லை. அசைந்தால் அண்ணலாரின் நித்திரை கலைந்து விடுமே என்ற அச்சம் வேறு என்ன செய்வார்கள்? தாளாத வேதனையால் அபுபக்கர் அவர்களின் கண்கள் கண்ணீரை உகுத்தன. அதினின்று வழிந்த துளிகளில் இரண்டொன்று பெருமானாரின் திருவதனத்தின் மீது விழுந்து விட்டன. சட்டென்று விழித்தெழுந்த வித்தகத் திருநபிகளார் விஷயத்தை அறிந்தார்கள். உடனே தங்கள் திருவாயினின்று உமிழ்நீர் தொட்டுக் கடிவாயில் வைத்தார்கள். அபுபக்கர் அவர்கள் விஷம் நீங்கிச் சுகம் பெற்றார்கள்.

வைகறைப் போது, பெருமானார் வீட்டின் கதவு இலேசாகத் திறந்திருப்பதைக் கண்டு சந்தேகமுற்ற குறைஷி வாலிபர்களில் சிலர் சரேலென வீட்டினுள் பாய்ந்தனர். சுற்றுமுற்றும் நோட்டமிட்டனர். பெருமானார் படுத்திருக்கக்கூடிய கட்டிலின் மீது பச்சைப் போர்வையால் போர்த்தியவாறு ஒருவர் படுத்திருக்கக் கண்டனர். திருத்தூதரே தூங்குகின்றார்கள் என்ற களிப்பில் சட்டெனப் போர்வையை நீக்கினர். என்ன ஆச்சரியம்!. அலீ (ரலி) எழுந்து நெட்டி முறித்துக் கண்களைத் துடைத்துக் கட்டிலில் அமர்ந்தார்கள். வந்த வாலிபர்கள் குழப்பமடைந்தவர்களாக "முஹம்மது எங்கே! என வினவினர். "இறைவனின் தூதரைப் பற்றிய செய்தி இறைவனுக்கல்லவோ தெரியும். நீங்கள் தானே வெளியில் காவல் காத்து நின்றீர்கள். அவர்கள் வெளியில் சென்றிருந்தால் உங்களுக்குத் தானே தெரிந்திருக்க வேண்டும்" எனச் சாவதானமாகவும் குத்தலாகவும் அலீ பதில் கூறினார்கள். முயற்சியில் தோல்வி கண்டு முகங்களில் ஈயாடதவர்களாய் வாலிபரனைவரும் அவ்விடம் விட்டகன்றனர்.

இதனை "தன் உயிரைப் பணயம் வைத்து, உங்களில் அல்லாஹ்வின் பிரீதியை விலைக்கு வாங்குபவர் யார்? அல்லாஹ் (இத்தகைய) தன் அடியார் மீது மிகவும் கருணையுள்ளவன்" என இறைவன் தன் திருமறையில் 2:207 திருவசனத்தின் மூலம் ஹலரத் அலீ (ரலி) அவர்களைப் புகழ்கிறான்.

பெருமானார் அவர்கள் வீட்டிலில்லை என்பதைத் தெரிந்த அபுஜஹ்ல் அடங்காத ஆத்திரம் கொண்டான். அபுபக்கர் அவர்கள் இல்லம் சென்று பார்த்தான். அவரும் அங்கு இல்லை. அவர் தம் புதல்வி அஸ்மாவை நோக்கி, "முஹம்மது இங்கே வந்தாரா? உன் தந்தை எங்கே?" என அதட்டினான். "எனக்குத் தெரியாது" என்ற அமைதியான பதிலைக் கேட்ட அபுஜஹல் ஆத்திரம் மேலிட்டவனாய் அஸ்மாவின் கன்னத்தில் பளாரென அறைந்தான். அதனால், அஸ்மாவின் காதணி ஒன்று தெறித்து அப்பால் போய் விழுந்தது.

அஸ்மாவும் அப்துல்லாஹ்வும் அபுபக்கர் அவர்களின் மூத்த தாரமான கதீஜாவுக்குப் பிறந்தவர்கள். ஆயிஷா நாயகியும் அப்துர் ரஹ்மானும் அவரின் மற்றொரு தாரமான உம்மு ரும்மான் என்ற ஜைனபுக்குப் பிறந்தவர்கள். அஸ்மா, ஆயிஷா நாயகிக்குப் பத்தாண்டு மூத்தவர். இவர் நாயகத் தோழர்களில் பிற்காலத்தில் மிக்க செல்வம் படைத்தவரான ஜுபைர் இப்னு அவ்வாம் என்பவருக்கு மணமுடிக்கப் பெற்று ஒரு நூறு ஆண்டுகள் வாழ்ந்து ஹிஜ்ரி 73ல் மரணமானார். அண்ணலாரை அபுபக்கரவர்கள் வீட்டிலும் காணாதலால் அபுஜஹல், குறைஷிகளை குதிரை, ஓட்டகைகளில் சென்று நாலா திசைகளிலும் தேடச் சொன்னான். மக்க மாநகர் அமளி துமளிப்பட்டது. எல்லாரது வாயிலும், "முஹம்மது எங்கு சென்றார்" என்ற பேச்சாகவே இருந்தது. குறைஷிகளிடம் காணப்பட்ட பரபரப்பையும் ஏமாற்றத்தையும், அலங்கோலத்தையும் கண்ட அலீ அவர்கள் தமக்குள் புன்னகை புத்திருந்தார்கள். அண்ணல் நபிகளாரைக் கண்டுபிடித்துக் கொண்டு வருபவருக்கு நூறு பெண் ஒட்டகைகளைச் சன்மானம் தருவதாகக் குறைஷித் தலைவர்கள் தங்களுக்குள் கூடிப்பேசி பறை அறிவித்தனர்.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 4:35 pm

நாம் மூவர்

பெருமானாரைத் தேடிப் பார்க்க வடக்கே சென்றவருள் ஒரு கோஷ்டியினர் தெற்கே தௌர் மலையை வந்தடைந்தனர். அவர்கள் அங்குள்ள பொதும்புகள் அனைத்தையும் துருவிப் பார்த்து விட்டு இறுதியாக அண்ணலாரும் அபுபக்கரும் பதுங்கியிருந்த பொதும்பின் வாயிலை வந்தடைந்தனர். அங்கு அவர்கள் நின்று கொண்டு உள்ளே நுழைந்து பார்க்கலாமா வேண்டாமா என்பது பற்றிய விவாதத்திலிறங்கி வார்த்தையாடி நின்றனர். அவர்கள் பேசுவது உள்ளே இருந்த இருவருக்கும் தெளிவாகக் கேட்டது. ஒரு வேளை குறைஷிகள் உள்ளே நுழைந்து விடுவார்களோ என்ற பயத்தில் அபுபக்கர், நாயகம் அவர்களை நோக்கி "என் செய்வோம்? நாம் இருவர் தாமே இங்கிருக்கின்றோம்" என மெய்சிலிர்க்க ஏக்கத்துடன் கூறினர். மலை பெயரினும் நிலை குலையா மாமேருவாக வீற்றிருந்த அமைதியின் திருவுறு அண்ணல் நபிகளார்," இல்லை நாம் மூவர் இங்கு இருக்கிறோம். நம்மோடு அல்லாஹ்வும் இருக்கிறான். அஞ்சற்க" என மறுமொழி பகர்ந்தார்கள். அதனைக் கேட்ட அபுபக்கர் ஆறுதலும் தைரியமும் கொண்டு இறைவனின் பாதுகாப்பில் பெருமானார் கொண்டிருந்த அசையா நம்பிக்கையைக் கண்டு பேராச்சரியமுற்றார்கள்.
ஒன்னலரோ பற்பலர்நா மோவிருவர்
உற்றடந்தா லென்ன செய்வ தென்ற ழுங்க
இல்லையில்லை யாமூவர் பன்னரிய யீசனும்நம்
பக்கமுளன் அஞ்சலீ ரென்
றுன்னரிய வாய்மை சொற்ற வூக்கநிலை நோக்கமோ
ஓகை நபி நாயகமே! வூக்கநிலை நோக்கமோ
என சதாவதானி சேகுத்தம்பி பாவலர் பாடியுள்ளார்.

சற்று முன்னர் அங்கொரு அதிசயம் நிகழ்ந்தது. தௌர் குகையின் வாயிலை அடைக்கும் வண்ணம் சிலந்தி புச்சியைக் கொண்டு வலை ஒன்று பின்னி முடிக்குமாறு செய்தான் இறைவன். அதையும், அதே நேரத்தில் இரு புறாக்கள் அப்பொதும்பினின்று வெளிப்பறந்து செல்வதையும் அக்குறைஷிகள் கண்டனர். இவற்றை உமய்யதிப்னு கலபி என்ற ஒருவன் சுட்டிக் காட்டி குகையுள் மனித நடமாட்டமில்லையெனச் சாமாதானங் கூறினான். எனவே, வந்தவர்களனைவரும் அங்கிருந்து அகன்றனர். அண்ணலாரும் அபுபக்கரும் ஆறுதல் பெருமூச்சு விட்டவர்களாய் ஆண்டவனைப் போற்றிப் புகழ்ந்தனர்.

இதனை, "சிலந்தி நூற்ற வலையாலும், புறா கட்டிய கூட்டினாலும்) அல்லாஹ் உண்டாக்கிய பாதுகாவல், உருக்குச் சட்டைகளையும், உயர் கோட்டைகளையுமே தேவையற்றதாக்கி விட்டது" என இமாம் புஸிரி தங்கள் புர்தா ஷரீபில் அழகுறக் கருத்தாழத்துடன் பாடியுள்ளார்கள்.

பெருமானாரும் அபுபக்கரும் தௌர் குகைக்குள் மூன்று பகல் மூன்று இரவு தங்கியிருந்தனர். அந்நாட்களில் ஒவ்வோர் மாலையிலும் அபுபக்கர் அவர்களின் மூத்த புதல்வர் அப்துல்லாஹ் தம் சகோதரி அஸ்மா சமைத்தளிக்கும் உணவுகளை அங்கெடுத்து வந்து கொடுத்து மக்காவின் நிலவரங்களையும் அறிவித்து விட்டு இராத்தங்கி மறுநாள் அதிகாலையில் வீடு திரும்புவார். அபுபக்கர் அவர்களின் பணியாள் ஆமிர் பின் ஃபுஹைரா காலை நேரங்களில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிப் போவது போல் தௌர் மலைக்குச் சென்று இருவருக்கும் தேவையான பாலைக் கரந்து கொடுத்து விட்டுத் திரும்புவார்.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 4:35 pm

யத்ரிபை நோக்கி

மக்காவில் இப்போது கொந்தளிப்பு அடங்கிப் பெருமானாரைத் தேடும முயற்சி கைவிடப்பட்டதென அப்துல்லாஹ்வின் மூலம் அறிந்த அண்ணலார் தம் உயிர்த்தோழர் அபுபக்கர் அவர்களுடன் வடக்கே சுமார் 270 மைல் தூரத்திலுள்ள யத்ரிப் நோக்கிப் பயணம் மேற்கொள்ளச் சித்தமானார்கள். அப்துல்லாஹ்விடம் சொல்லியனுப்பியவாறு, மறுநாள் அப்துல்லாஹ் பின் உறைகித் என்னும் வழிகாட்டி, அபுபக்கர் அவர்கள் இப்பிரயாணத்திற்கென வாங்கி வளர்த்த இரு ஒட்டகைகளையும் ஓட்டிக் கொண்டு வந்து தௌர் மலைச் சாரலில் மேய்த்துக் கொண்டிருந்தார். இவர் முஸ்லிம் அல்லாதவர். மக்காவிலிருந்து யத்ரிப் செல்லும் எல்லாப் பாட்டைகளையும் இவர் நன்கறிவார். மாலை மசங்கிய போது அஸ்மா பிரயாணத்திற்கான சில உணவுகளைத் தயாரித்துக் கொண்டு அவற்றை தௌர் குகைக்கு எடுத்து வந்தார். நள்ளிரவில் ஒட்டகங்களிரண்டும் குகையருகே கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. கஸ்வா என்ற ஒட்டகத்தின் மீது அண்ணலாரும் அபுபக்கரும் ஏறி அமர்ந்து கொண்டார்கள். மற்றொரு ஒட்டகத்தின் மீது அப்துல்லாஹ் பின் உறைகித்தும் ஆமிர் பின் ஃபுஹைராவும் ஏறிக் கொண்டார்கள். அபுபக்கர் அவர்கள் ஒட்டகங்களை வாங்கிய சமயம் கஸ்வாவைப் பெருமானாருக்கு அன்பளிப்புச் செய்ய முன் வந்த போது அன உரிய கிரயத்தை ஏற்றுக் கொண்டாலன்றி ஏற்க முடியாதெனக் கூறி விட்டார்கள். வேறு வழியின்றி அபுபக்கர் அவர்கள் அதன் கிரயத்தை ஏற்க நேர்ந்தது. இப்பயணத்தின் போது அபுபக்கர் அவர்கள் தம்மோடு ஆறாயிரம் திர்ஹங்களை எடுத்துச் சென்றார்கள்.

வீட்டில் ரொக்கப் பணம் எதுவும் விட்டு வரவில்லை. கி.பி. 622ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி – ரபீயுல் அவ்வல் முதலாம் நாள் - திங்கள் இரவு நபிகள் கோமான் தௌர் குகையை விட்டும் யத்ரிபு நோக்கித் தம் சரித்திர பிரசித்தி பெற்ற "ஹிஜ்ரத்" பயணத்தைத் துவங்கினார்கள். பிரயாணிகள் வழக்கமாகச் செல்லும் பாட்டையில் அழைத்துச் செல்லாது, இப்னு உறைகித் இவர்களை மற்றவர்கள் கண்ணுக்குத் தென்படாத கடற்கரைப் பக்கமாகச் செல்லும் புதியதொரு பாட்டையில் இட்டுச் சென்றார். பின், உஸ்வான் என்ற இடத்திற்கு அருகில் திசை மாறி அமஜ் என்ற பகுதியை அடைந்தனர். பிரயாண காலமோ தகிக்கும் கோடையாக இருந்தது. நண்பகலில் பிரயாணம் செய்வது சிரமமெனக் கருதியதால், விடிந்த மறுநாள் காலையில் நால்வரும் ஒட்டகங்களுடன் நிழலான ஓர் இடத்தில் தங்கிச் சிரம பரிகாரம் செய்து கொண்டனர். அன்று மதியம் அவ்வழியே ஆடுகளை ஓட்டிச் சென்ற ஓர் இடையனை அழைத்துப் பால் கரந்து கேட்டு வாங்கிப் பருகிக் களை தீர்த்துக் கொண்டார்கள். பொழுது தணிந்ததும் பிரயாணத்தைத் தொடர்ந்தார்கள். புதிய பாட்டையில் ஒரு நாள் பயணத்தைக் கடந்து விட்டதால் மக்காவாசிகளால் இனி ஆபத்தில்லை எனக்கருதி வழக்கமான பாட்டையில் பிரயாணத்தைத் தொடர்ந்தார்கள். அதனால் அபுபக்கர் அவர்களின் பணியாள் ஆமிர் பின் ஃபுஹைராவை மக்காவுக்கு அனுப்பி விட்டு அண்ணல் நபியவர்கள் கஸ்வாவின் மீதும் அபுபக்கர் அவர்களும் வழிகாட்டியும் மற்றொரு ஒட்டகையிலும் பிரயாணம் செய்தார்கள்.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 4:36 pm

சுறாகா


சுறாகா பின் மாலிக் ஜுஃஷம் என்பவனும் மற்றும் சிலரும் ஓரிடத்தில் உட்கார்ந்து பெருமானார் குறைஷிகளிடம் சிக்காமல் தப்பித்துச் சென்று விட்டது குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அந்நேரம் வழியே வந்த வழிப்போக்கன் ஒருவன் இவர்களின் பேச்சை நின்று கவனித்தான். அவன் அக்குறைஷிகளை விளித்து," நீங்கள் யாரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்களோ அவரும் மற்றவரும் இரண்டு ஒட்டகைகளின் யத்ரிப் நோக்கிச் சென்று கொண்டிருப்பதை நான் இப்போது தான் பார்த்தேன்." எனக் கூறினான். சுய நலமும் பேராசையும் கொண்ட சுறாகா, குறைஷிகள் வாக்களித்துள்ள நூறு பெண் ஒட்டகைகளையும் தானே அடைந்து விடக் கருதியவனாய், குயுக்தியும் சாமர்த்தியமுமாக, நானும் தான் சிறிது நேரத்திற்கு முன் அவர்களைப் பார்த்தேன். அவர்கள் காணாமல் போன தங்கள் ஒட்டகையை அல்லவோ தேடிச் செல்கின்றனர். நாங்கள் இப்போது பேசிக் கொண்டிருப்பது அவர்களைப் பற்றி அல்லவே! எனச் சட்டென அடித்துப் பேசி வழிப்போக்கனின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காதவாறு திசை திருப்பினான். சற்று நேரத்தில் சுறாகா, தனக்கு வீட்டில் வேலையிருப்பதாகக் கூறி அங்கிருந்து அகன்றான்.

வீடு சென்ற சுறாகாஈ தனது துடியான குதிரையொன்றுக்குச் செணமிட்டு ஆயுதபாணியாக அதன்மீது தாவியமர்ந்து மின்னல் வேகத்தில் பறந்தான். அவன் பெருமானாரைப் பின்தொடர்ந்து செல்லும்போது குதிரை, வழியில் இரு தடவை தடுமாறி விழுந்தது. அச்சந்தர்பங்களில் அவன் தனது அம்பறாத் தூணிலிருந்த குறி சொல்லும் அம்புகளை எடுத்து வானில் எய்து பார்த்தான். இரு தடவைகளிலும் “முன்னேறாதே” என்ற எச்சரிக்கையை மீறித் தன் குதிரையை எதிர்நோக்கிச் செலுத்தினான். சுறாகா தங்களைத் துரத்தி வருகிறானென.பதை அபூபக்கர் அவர்களின் கூரிய கண்கள் கண்டுவிட்டன. விஷயத்தை அண்ணலாருக்குத் தெரியப்படுத்தினார்கள். எதிரி வாயு வேகத்தில் தன் பரியைச் செலுத்தி அண்டி விட்டான் என்பதைக் கண்ட நபிகளார் இறைவனிடம் இரு கரமேந்திப் பிரார்த்தித்து விட்டுப் பின்னால் திரும்பிப் பார்த்தார்கள. அவர்கள் கண்டதென்ன? சுறாகாவினுடைய குதிரையின் முன்னங்பால்களிரண்டும் “மார்புவரை மணலுக்குள் புதைந்து தலைக்குப்புற நிற்பதையும், அவன் வானில் தூக்கி எறியப்பட்டுக் கீழே வந்த விழுவதையும் கண்டார்கள். அவ்வளவுதான், சுறாகாவைத் திகிலும் நடுக்கமும் பற்றிக் கொண்டன. அவன் நபிகள் நாதரைக் கூப்பாடிட்டு அழைத்தவாறு, “நபிகள் பெருமானே! என் பெயர் சுறாகாவாகும், என்னைக் காப்பாற்றுங்கள், கொன்று விடாதீர்கள். நான் திரும்பிச் நெல்ல யாரிடத்தும் எதுவும் கூறமாட்டேன். இது உறுதி, சத்தியம்” என உயிர்ப்பிச்சை கேட்டவனாகப் பெருமானார் முன் ஓடிவந்து நின்றான். கருணை நபியவர்கள் சுறாகாவுக்கு நல்லுரை கூறி மக்கா திரும்ப அனுமதித்தார்கள். அத்துடன் பாரசீக மன்னின் அரண்மணையிலுள்ள இரத்தினங்கள் இழைத்த தங்கக் காப்புகள் அவன் கைகளில் பூட்டப்படுமெனவும் தீர்க்கதரிசனம் கூறினார்கள். அவ்வாறே சுறாகா பின்னர் இஸ்லாத்தில் சேர்ந்து ஹலரத் உமர் அவர்கள் காலத்தில் பாரசீகத்தை வெற்றிக் கொண்ட போது, அந்த யுத்தத்தில் முக்கிய பங்கு கொண்ட சுறாகாவின் கரங்களில் குஸ்ரூ மன்னின் தங்கக் காப்புகளைப் பூட்டிப் பெருமானரின் தீர்க்க தரிசனைத்தை மெய்ப்பித்தார்கள். பெருமானாரை விட்டுப் பிரிந்த சுறாகா, வழியில் எதிர்பட்ட குறைஷிகள், மற்றவர்களிடம் அண்ணலாரைத் தான் வெகுதூரம் அலைந்து தேடியும் காண முடியவில்லையெனக் கூறி மக்காவுக்குத் திரும்பி அழைத்துச் சென்றான்.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 4:36 pm

பெருமானாரின் பயணம் தொடர்ந்தது. வழிகாட்டி இப்னு உறைகித், இப்போது அவர்களை வாணிபக் கூட்டத்தார் செல்லும் செங்கடல் ஓரமான பாட்டையில் செலுத்திச் சென்றார். மூன்றாம் நாள் காலையில் அவர்களுக்கு வாணிபக் கூட்டம் ஒன்று எதிர்பட்டது. அது அபூபக்கர் அவர்களின் மருமகன் தல்ஹாவினுடையதாக இருந்தது. அபூபக்கர் அவர்களும் தல்ஹாவும் ஒருவரையொருவர் சந்தித்த மகிழ்ச்சியில் கட்டித் தழுவி முகமன் கூறிக்கொண்டனர். தல்ஹா, அபுபக்கர் அவர்களின் புதல்வி உம்மு குல்தூமை மணமுடித்திருந்தார். இந்த வியாபாரக் கூட்டத்தில் பெருமானாரின் அத்தை சபியாவுக்கும் கதீஜா நாயகியின் சகோதரர் அவ்வாமுக்கும் பிறந்த ஜூபைரும் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஜூபைர், அபூபக்கர் அவர்களின் புதல்வி அஸ்மாவின் கணவர். பிரயாணத்தால் பெருமானார், அபூபக்கர் இருவரின் ஆடைகளும் அழுக்கேறி இருந்ததால், தல்ஹா தாம் சிரியாவிலிருந்து வாங்கி வந்த உயர்ந்த வெண்ணிற ஆடைகளில் இரண்டைக் கொடுத்து அணியச் செய்தார். மற்றுமொரு மகிழ்ச்சிகரமான செய்தியையும், அவர்களிடம் தல்ஹா தெரிவித்தார் அண்ணலாரின் வருகையை யத்ரிப் மக்கள் ஆவலுடன் எதிர் நோக்கியவாறு இருந்து வருகின்றனர் என்பதாகும் அது.

அங்கிருந்து பயணம் மீண்டும் தொடர்ந்தது. யத்ரிபுக்கு இரண்டு நாள் பயணத்தில் அல்அர்ஜ் என்னுமிடத்தில் கருணை நபியவர்களின் கஸ்வா என்னும் ஒட்டகை மேற்கொண்டு நடக்க இயலாமல் களைப்புற்றுச் சோர்ந்து விட்டது. இதைக் கவனித்த அஸ்லம் கோத்திரத்தாரின் தலைவர் ஒளஸ் இப்னு ஹிஜ்ர், தமது இப்னல் ரிதா என்னும் ஒட்டகையை பெருமானாரின் சவாரிக்காகத் தந்து வழிகாட்டி மஸ்ஊது பின் ஹுனைகாவையும் உடன் அனுப்பி வைத்தார். கஸ்வாவுக்குக் களைப்புத் தீர்ந்தபின் இப்னு உறைகித் அதைக் குபா கொண்டு வந்து சேர்த்தார்.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 4:37 pm













தொடரும்.......................




நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 26, 2010 6:35 pm

சூப்பர் தல அருமையான தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Logo12
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Mon Apr 26, 2010 9:02 pm

மிக மிக அருமை..நன்றி...நன்றி..

எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sat May 01, 2010 12:59 pm

நபியவர்கள் பற்றி நீங்களும் தெரிந்துகொண்டு அடுத்தவரும் தெரிந்திருக்க வேண்டும் என்ற என்னதை நான் வரவேற்கிறேன் நன்றி வாழ்த்துக்கள்



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 7 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
Sponsored content

PostSponsored content



Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக