Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்
5 posters
Page 2 of 11
Page 2 of 11 • 1, 2, 3, ... 9, 10, 11
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்
First topic message reminder :
''குடும்ப விளக்கு'' எழுதிய 1942 ஆம் ஆண்டிலே வெளிவந்த இசையமுது, முதற்பகுதியில் ''ஆண் உயர்வென்பது பெண் உயர் எனபதும் நீணிலத் தெங்கிலும் இல்லை''என பாவேந்தர் உறுதியிட்டு கூறியுள்ளார்.
சமுதாயக் கருத்து மாற்றத்துக்கு வித்திட்ட பாவேந்தர், மகளிர் உரிமைப் போராட்டத்திற்கும் வித்திட்டவர்.
''குடும்ப விளக்கு'' எழுதிய 1942 ஆம் ஆண்டிலே வெளிவந்த இசையமுது, முதற்பகுதியில் ''ஆண் உயர்வென்பது பெண் உயர் எனபதும் நீணிலத் தெங்கிலும் இல்லை''என பாவேந்தர் உறுதியிட்டு கூறியுள்ளார்.
சமுதாயக் கருத்து மாற்றத்துக்கு வித்திட்ட பாவேந்தர், மகளிர் உரிமைப் போராட்டத்திற்கும் வித்திட்டவர்.
[You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்
கணவனிடம் கணக்கு ஒப்புவித்தாள்
கொண்டவன் வந்தான்; கண்கள்
குளிர்ந்திடக் கண்டாள்: "அத்தான்
கண்டுள்ள கணக்கின் வண்ணம்
சரக்குகள் கடன்தந் தார்க்குத்
தண்டலும் கொடுத்தேன்; விற்று
முதலினைத் தனியே வைத்தேன்;
உண்டங்கு வேலை" என்றே
உரைத்தனள்; வீடு சென்றாள்.
வீட்டறை மருத்துவமைனை
படுக்கையில் மாம னாரைப்
பார்த்தனள்; "காலில் இன்னும்
கடுக்கை தீர்ந்திலதோ" என்று
கனிவோடு கேட்டு டுக்கும்
உடுக்கையும் மாற்று வித்து,
மட்டான உணவு தந்து
தடுக்கினி லிருந்து தூக்கிச்
சாய்வு நாற்காலி சேர்த்தாள்.
மற்றும் வீட்டு வேலை
வரிசையாய்க் காய வைத்த
வடகத்தை, வற்றல் தன்னைப்
பெரிசான சாலில் சேர்த்தாள்;
பிணைந்துள்ள மாடு கன்றுக்(கு)
உரியநல் தீனி வைத்தாள்;
உறிவிளக் குகள்து டைத்தாள்;
வரும்மக்கள் எதிர்பார்த் திட்டாள்;
வந்தனர்; மகிழ்ச்சி பெற்றாள்.
கடற்கரையில்
சிற்றுண வளித்தாள்; பின்பு
திரைகடற் கரையை நாடிப்
பெற்றதன் மக்கள் சூழப்
பெருவீதி ஓர மாகப்
பொற்கொடி படர்ந்தாள் தேனைப்
பொழிந்திடு பூக்க ளோடு!
வற்றாத வெள்ளக் காட்டின்
மணற்கரை ஓரம் வந்தாள்!
கடற்கரைக் காட்சி
அக்கரை செலும்உள் ளத்தை
அளாவிடக் கிடந்த வில்லும்,
இக்கரை அலையின் ஆர்ப்பும்,
இவற்றிடைச் செவ்வா னத்தின்
மிக்கொளி மிதக்கும் மேனி
விரிபுனற் புரட்சிப் பாட்டும்,
"ஒக்கவே வாழ்க மக்காள்"
என்பதோர் ஒலியும் கேட்டாள்;
காட்சி இன்பம்
குளிர்புனல் தெளிவி லெல்லாம்
ஒளிகுதி கொள்ளும்; வெள்ளத்
துளிதொறும் உயிர்து டிக்கும்;
தொன்மைசேர் கடல், இவ் வைய
வெளியெலாம் அரசு செய்யும்
விண்ணெலாம் ஒளியைச் செய்யும்!
களியெலாம் காணக் காணக்
கருத்தெலாம் இன்பம் பொங்கும்!
கடற் காற்று
கடலிடைப் புனலில் ஆடிக்
குளிரினிற் கனிந்த காற்றை
உடலிடைப் பூசு கின்ற
ஒலிகடற் கரையின் ஓரம்
அடர்சிற கன்னப் புட்கள்
அணிபோல அலைந டக்கும்
நடையடு நடந்து வீடு
நண்ணினாள் மக்க ளோடு.
கொண்டவன் வந்தான்; கண்கள்
குளிர்ந்திடக் கண்டாள்: "அத்தான்
கண்டுள்ள கணக்கின் வண்ணம்
சரக்குகள் கடன்தந் தார்க்குத்
தண்டலும் கொடுத்தேன்; விற்று
முதலினைத் தனியே வைத்தேன்;
உண்டங்கு வேலை" என்றே
உரைத்தனள்; வீடு சென்றாள்.
வீட்டறை மருத்துவமைனை
படுக்கையில் மாம னாரைப்
பார்த்தனள்; "காலில் இன்னும்
கடுக்கை தீர்ந்திலதோ" என்று
கனிவோடு கேட்டு டுக்கும்
உடுக்கையும் மாற்று வித்து,
மட்டான உணவு தந்து
தடுக்கினி லிருந்து தூக்கிச்
சாய்வு நாற்காலி சேர்த்தாள்.
மற்றும் வீட்டு வேலை
வரிசையாய்க் காய வைத்த
வடகத்தை, வற்றல் தன்னைப்
பெரிசான சாலில் சேர்த்தாள்;
பிணைந்துள்ள மாடு கன்றுக்(கு)
உரியநல் தீனி வைத்தாள்;
உறிவிளக் குகள்து டைத்தாள்;
வரும்மக்கள் எதிர்பார்த் திட்டாள்;
வந்தனர்; மகிழ்ச்சி பெற்றாள்.
கடற்கரையில்
சிற்றுண வளித்தாள்; பின்பு
திரைகடற் கரையை நாடிப்
பெற்றதன் மக்கள் சூழப்
பெருவீதி ஓர மாகப்
பொற்கொடி படர்ந்தாள் தேனைப்
பொழிந்திடு பூக்க ளோடு!
வற்றாத வெள்ளக் காட்டின்
மணற்கரை ஓரம் வந்தாள்!
கடற்கரைக் காட்சி
அக்கரை செலும்உள் ளத்தை
அளாவிடக் கிடந்த வில்லும்,
இக்கரை அலையின் ஆர்ப்பும்,
இவற்றிடைச் செவ்வா னத்தின்
மிக்கொளி மிதக்கும் மேனி
விரிபுனற் புரட்சிப் பாட்டும்,
"ஒக்கவே வாழ்க மக்காள்"
என்பதோர் ஒலியும் கேட்டாள்;
காட்சி இன்பம்
குளிர்புனல் தெளிவி லெல்லாம்
ஒளிகுதி கொள்ளும்; வெள்ளத்
துளிதொறும் உயிர்து டிக்கும்;
தொன்மைசேர் கடல், இவ் வைய
வெளியெலாம் அரசு செய்யும்
விண்ணெலாம் ஒளியைச் செய்யும்!
களியெலாம் காணக் காணக்
கருத்தெலாம் இன்பம் பொங்கும்!
கடற் காற்று
கடலிடைப் புனலில் ஆடிக்
குளிரினிற் கனிந்த காற்றை
உடலிடைப் பூசு கின்ற
ஒலிகடற் கரையின் ஓரம்
அடர்சிற கன்னப் புட்கள்
அணிபோல அலைந டக்கும்
நடையடு நடந்து வீடு
நண்ணினாள் மக்க ளோடு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்
இரவுக்கு வரவேற்பு
மேற்றிசைக் கதிர்ப்ப ழத்தை
விருந்துண்டு, நீல ஆடை
மாற்றுடை யாய் உடுத்து
மரகத அணிகள் பூண்டு,
கோற்கிளை ஒடுங்கும் புட்கள்
கோட்டிடும் இறகின் சந்தக்
காற்சிலம் பசையக் காதற்
கரும்பான இரவு தன்னை;
திருவிளக் கேந்தி வந்து
தெருவினில் வரவேற்கின்றாள்.
உருவிளக் கிடவீட் டுக்குள்
ஒளிவிளக் கனைத்தும் ஏற்றி
ஒருபெருங் கலயத் துள்ளே
உயர்நறும் புகை எழுப்பிப்
பெரியோரின் உள்ளம் எங்கும்
பெருகல்போல் பெருகச் செய்தாள்.
அத்தானை எதிர்பார்க்கின்றாள்
கட்டுக்குள் அடங்கா தாடிக்
களித்திடும் தனது செல்வச்
சிட்டுக்கள், சுவடிக் குள்ளே
செந்தமிழ்த் தீனி உண்ண
விட்டுப்பின் அடுக்க ளைக்குள்
அமுதத்தை விளைவு செய்தாள்;
எட்டுக்கு மணி அடிக்க
அத்தானை எதிர்பார்க் கின்றாள்
எண்சீர் விருத்தம்
கட்டில் அழகு
சரக்கொன்றை தொங்ககவிட்ட பந்த லின்கீழ்
தனிச்சிங்கக் கால்நான்கு தாங்கும் கட்டில்
இருக்கின்ற மெத்தைதலை யணைகள் தட்டி
இருவீதி மணமடிக்கும் சந்த னத்தைக்
கரைக்கின்ற கலையத்துட் கரைத்துத் தென்றல்
கலக்கின்ற சன்னலினைத் திறந்து, நெஞ்சில்
சுரக்கின்ற அன்பினால், தெருவில் மீண்டும்
துடிக்கின்றாள் கணவனது வரவு பார்த்தே!
அவன் மலை போன்ற செல்வம்
பறக்கின்ற கருங்குயிலாள் மீண்டும் வீட்டில்
பழக்குலையைத் தட்டத்தில் அடுக்கிப் பாலைச்
சிறக்கின்ற செம்பினிலே ஊற்றி வைத்துச்
சிரிக்கின்ற முல்லையினைக் கண்ணி யாக்கி,
நிறக்கின்ற மணிவிளக்கைச் சிறிது செய்து
நினைக்கின்ற இன்பத்தை நெஞ்ச வீட்டில்
மறைக்கின்ற படிமறைத்து மற்றும் சென்று
மலைபோன்ற செல்வத்தின் வரவு பார்த்தாள்.
பிள்ளைகட்குப் பரிசு
கால்ஒடிந்து போகுமுன்னே அவனும் வந்தான்;
கதையன்று கேட்டாயா? எனவுட் கார்ந்தான்.
மேலிருந்து "பிள்ளைவளர்ப் புப்போ ட்டிக்கு
விடைவந்து சேர்ந்த" தென்றான்; எவ்வா றென்றாள்.
"ஆல்ஒடிந்து வீழ்ந்தாலும் தோள்கள் தாங்கும்
அப்படி நாம் பிள்ளைகளை வளர்த்த தாலே,
பாலொடுசர்க் கரைகலந்த இனிய சொல்லாய்
பரிசுநமக் குத்தந்தார் பாராய்!" என்றான்.
மேற்றிசைக் கதிர்ப்ப ழத்தை
விருந்துண்டு, நீல ஆடை
மாற்றுடை யாய் உடுத்து
மரகத அணிகள் பூண்டு,
கோற்கிளை ஒடுங்கும் புட்கள்
கோட்டிடும் இறகின் சந்தக்
காற்சிலம் பசையக் காதற்
கரும்பான இரவு தன்னை;
திருவிளக் கேந்தி வந்து
தெருவினில் வரவேற்கின்றாள்.
உருவிளக் கிடவீட் டுக்குள்
ஒளிவிளக் கனைத்தும் ஏற்றி
ஒருபெருங் கலயத் துள்ளே
உயர்நறும் புகை எழுப்பிப்
பெரியோரின் உள்ளம் எங்கும்
பெருகல்போல் பெருகச் செய்தாள்.
அத்தானை எதிர்பார்க்கின்றாள்
கட்டுக்குள் அடங்கா தாடிக்
களித்திடும் தனது செல்வச்
சிட்டுக்கள், சுவடிக் குள்ளே
செந்தமிழ்த் தீனி உண்ண
விட்டுப்பின் அடுக்க ளைக்குள்
அமுதத்தை விளைவு செய்தாள்;
எட்டுக்கு மணி அடிக்க
அத்தானை எதிர்பார்க் கின்றாள்
எண்சீர் விருத்தம்
கட்டில் அழகு
சரக்கொன்றை தொங்ககவிட்ட பந்த லின்கீழ்
தனிச்சிங்கக் கால்நான்கு தாங்கும் கட்டில்
இருக்கின்ற மெத்தைதலை யணைகள் தட்டி
இருவீதி மணமடிக்கும் சந்த னத்தைக்
கரைக்கின்ற கலையத்துட் கரைத்துத் தென்றல்
கலக்கின்ற சன்னலினைத் திறந்து, நெஞ்சில்
சுரக்கின்ற அன்பினால், தெருவில் மீண்டும்
துடிக்கின்றாள் கணவனது வரவு பார்த்தே!
அவன் மலை போன்ற செல்வம்
பறக்கின்ற கருங்குயிலாள் மீண்டும் வீட்டில்
பழக்குலையைத் தட்டத்தில் அடுக்கிப் பாலைச்
சிறக்கின்ற செம்பினிலே ஊற்றி வைத்துச்
சிரிக்கின்ற முல்லையினைக் கண்ணி யாக்கி,
நிறக்கின்ற மணிவிளக்கைச் சிறிது செய்து
நினைக்கின்ற இன்பத்தை நெஞ்ச வீட்டில்
மறைக்கின்ற படிமறைத்து மற்றும் சென்று
மலைபோன்ற செல்வத்தின் வரவு பார்த்தாள்.
பிள்ளைகட்குப் பரிசு
கால்ஒடிந்து போகுமுன்னே அவனும் வந்தான்;
கதையன்று கேட்டாயா? எனவுட் கார்ந்தான்.
மேலிருந்து "பிள்ளைவளர்ப் புப்போ ட்டிக்கு
விடைவந்து சேர்ந்த" தென்றான்; எவ்வா றென்றாள்.
"ஆல்ஒடிந்து வீழ்ந்தாலும் தோள்கள் தாங்கும்
அப்படி நாம் பிள்ளைகளை வளர்த்த தாலே,
பாலொடுசர்க் கரைகலந்த இனிய சொல்லாய்
பரிசுநமக் குத்தந்தார் பாராய்!" என்றான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்
பழங்காலக் கிழங்கள்
அறையினிலே படுத்திருந்த பெற்றோர் காதில்
அதைப் போடத் துவக்கினான். "வளர்ப்புப் போட்டி
அறியோமே எம்நாளில்" என்றார் பெற்றோர்.
அப்படி என்றாலின்ன தெனவி ளக்கிக்
"குறையின்றி வளர்ப்பவர்கள் பரிசு கொள்ளல்"
கூறினான். "குழந்தைகளை விசாரித் துத்தான்
அறிந்தாரோ?" எனக் கேட்டார் அக்கா லத்தார்;
அதன்விரிவும் கூறியபின் மகிழ்வு கொண்டார்.
அடுக்களையிற் பிள்ளைகள்
பரிசுதனைப் பெற்ற பிள்ளை, ஓடி வந்தான்;
பலருமே சூழ்ந்தார்கள்; குருவிக் கூட்டம்
பெரிசாக, இன்மொழிகள் செவிபி ளக்கப்
பெருமானும் பெருமாட்டி தானும், அன்பின்
அரசாட்சி செலுத்தியபின், எல்லா ரும்போய்
அடுக்களையிற் கூடாரம் அடித்து விட்டார்;
ஒருபெரும்போர்க் களம்புகுந்தார், உணவைத் தூக்கி
'ஓடிப்போ டா' என்றார்; "பசி"ப றந்தான்.
குழந்தைகள் தூங்கியபின்
அவன்பாடிக் கொண்டிருந்தான் அறைவீட் டுக்குள்
அருமையுள்ள மாமனார் மாமி யார்க்கும்,
உவந்தருள உணவிட்டுக் கடன் முடித்தாள்;
உட்பக்கத் தறைநோக்கி அவரும் போனார்;
குவிந்திருக்கும் சுவையுணவு தானும் உண்டாள்;
கொக்கரிக்கும் நெஞ்சுக்குத் துணிவு கூறி,
அவிழ்ந்துவரும் நிலாஒளியால் இதழ்கள் மூடும்
அல்லிப்பூ விழிகள்குழந் தைகள் மூட.
கதவைத் தாழிட்டாள்
கண்டுபடுக் கைதிருத்தி உடைதிருத்திக்
காற்றில்லாப் போதினிலே விசிறி வீசி,
வண்டுவிழி திறக்குமொரு குழந்தை, "தண்ணீர்
வை" என்னும்; ஒன்றுதலை தூக்கிப் பார்க்கும்;
பண்டிதர்கள் பழங்கதையின் ஓட்டைக் கெல்லாம்
பணிக்கையிடல் போல்அனைத்தும் தணிக்கை செய்தே
ஒண்பசு,நற் கன்றுக்கு வைக்கோல் ஈந்தே
உட்கதவு, வெளிக்கதவின் தாழ்அ டைத்தாள்.
கட்டிலண்டை மங்கை
தொண்டையினில் ஒன்றுமே அடைக்க வில்லை;
துணைவனவன் சிறுகனைப்புக் கனைக்க லுற்றான்;
அண்டையிலே மங்கைபோய் "அத்தான்" என்றாள்.
அத்தானா தூங்கிடுவான்? "உட்கார்" என்றான்.
திண்தோளில் சந்தனத்தைப் பூசு கின்றாள்;
சேயிழைக்கு முல்லைமலர் சூட்டு கின்றான்.
கண்டான்!கண் டாள்! உவப்பின் நடுவிலே,"ஓர்
கசப்பான சேதியுண்டு கேட்பீர்" என்றாள்!
அறையினிலே படுத்திருந்த பெற்றோர் காதில்
அதைப் போடத் துவக்கினான். "வளர்ப்புப் போட்டி
அறியோமே எம்நாளில்" என்றார் பெற்றோர்.
அப்படி என்றாலின்ன தெனவி ளக்கிக்
"குறையின்றி வளர்ப்பவர்கள் பரிசு கொள்ளல்"
கூறினான். "குழந்தைகளை விசாரித் துத்தான்
அறிந்தாரோ?" எனக் கேட்டார் அக்கா லத்தார்;
அதன்விரிவும் கூறியபின் மகிழ்வு கொண்டார்.
அடுக்களையிற் பிள்ளைகள்
பரிசுதனைப் பெற்ற பிள்ளை, ஓடி வந்தான்;
பலருமே சூழ்ந்தார்கள்; குருவிக் கூட்டம்
பெரிசாக, இன்மொழிகள் செவிபி ளக்கப்
பெருமானும் பெருமாட்டி தானும், அன்பின்
அரசாட்சி செலுத்தியபின், எல்லா ரும்போய்
அடுக்களையிற் கூடாரம் அடித்து விட்டார்;
ஒருபெரும்போர்க் களம்புகுந்தார், உணவைத் தூக்கி
'ஓடிப்போ டா' என்றார்; "பசி"ப றந்தான்.
குழந்தைகள் தூங்கியபின்
அவன்பாடிக் கொண்டிருந்தான் அறைவீட் டுக்குள்
அருமையுள்ள மாமனார் மாமி யார்க்கும்,
உவந்தருள உணவிட்டுக் கடன் முடித்தாள்;
உட்பக்கத் தறைநோக்கி அவரும் போனார்;
குவிந்திருக்கும் சுவையுணவு தானும் உண்டாள்;
கொக்கரிக்கும் நெஞ்சுக்குத் துணிவு கூறி,
அவிழ்ந்துவரும் நிலாஒளியால் இதழ்கள் மூடும்
அல்லிப்பூ விழிகள்குழந் தைகள் மூட.
கதவைத் தாழிட்டாள்
கண்டுபடுக் கைதிருத்தி உடைதிருத்திக்
காற்றில்லாப் போதினிலே விசிறி வீசி,
வண்டுவிழி திறக்குமொரு குழந்தை, "தண்ணீர்
வை" என்னும்; ஒன்றுதலை தூக்கிப் பார்க்கும்;
பண்டிதர்கள் பழங்கதையின் ஓட்டைக் கெல்லாம்
பணிக்கையிடல் போல்அனைத்தும் தணிக்கை செய்தே
ஒண்பசு,நற் கன்றுக்கு வைக்கோல் ஈந்தே
உட்கதவு, வெளிக்கதவின் தாழ்அ டைத்தாள்.
கட்டிலண்டை மங்கை
தொண்டையினில் ஒன்றுமே அடைக்க வில்லை;
துணைவனவன் சிறுகனைப்புக் கனைக்க லுற்றான்;
அண்டையிலே மங்கைபோய் "அத்தான்" என்றாள்.
அத்தானா தூங்கிடுவான்? "உட்கார்" என்றான்.
திண்தோளில் சந்தனத்தைப் பூசு கின்றாள்;
சேயிழைக்கு முல்லைமலர் சூட்டு கின்றான்.
கண்டான்!கண் டாள்! உவப்பின் நடுவிலே,"ஓர்
கசப்பான சேதியுண்டு கேட்பீர்" என்றாள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்
பொதுத்தொண்டு செய்தோமா?
"மிதிபாகற் காய்கசக்கும்; எனினும் அந்த
மேற்கசப்பின் உள்ளேயும் சுவைஇ ருக்கும்;
அதுபோலத் தானேடி! அதனாலென்ன?
அறிவிப்பாய் இளமானே" என்றான் அன்பன்;
அதிகாலை தொடங்கிநாம் இரவு மட்டும்
அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்ப தல்லால்,
இதுவரைக்கும் பொதுநலத்துக் கென்ன செய்தோம்?
என்பதைநாம் நினைத்துப்பார்ப் பதுவு மில்லை.
வீட்டுத் தொண்டா பொதுத் தொண்டு?
"இன்றைக்குக் கறிஎன்ன? செலவு யாது?
ஏகாலி வந்தானா? வேலைக் காரி
சென்றாளா? கொழுக்கட்டை செய்ய லாமா?
செந்தாழை வாங்குவமா? கடைச் சரக்கை
ஒன்றுக்கு மூன்றாக விற்ப தெந்நாள்?
உன்மீதில் எனக்காசை பொய்யா? மாடு
குன்றுநிகர் குடம் நிறையக் கறப்ப துண்டா?
கொடுக்கலென்ன? வாங்கலென்ன? இவைதாம் கண்டோம்.
தன்னலத்தால் என்ன நடக்கும்
"தமிழரென்று சொல்லிக்கொள் கின்றோம் நாமும்;
தமிழ்நாட்டின் முன்னேற்றம் விரும்பு கின்றோம்;
எமதென்று சொல்கின்றோம் நாடோ றுந்தான்;
எப்போது தமிழினுக்குக் கையா லான
நமதுழைப்பை ஒருகாசைச் செலவு செய்தோம்?
நாமிதனை என்றேனும் வாழ்நாள் தன்னில்,
அமைவாகக் குந்திநினைத் தோமா? இல்லை;
அனைவருமிவ் வாறிருந்தால் எது நடக்கும்?"
பெரும்படியான தொண்டு செய்துள்ளோம்
கரும்படியின் சாறுநிகர் மொழியாள் இந்தக்
கனிந்தமொழி சொன்னவுடன் அவன்உ ரைப்பான்;
"வரும்படிவீ தப்படிநான் தரும்ப டிக்கு
வாக்களித்த படிகணக்கர் திங்கள் தோறும்
கரம்படி வீதித்தமிழர் கழகத் தார்கள்
கடைப்படியை மிதித்தவுடன் எண்ணி வைப்பார்
பெரும்படியாய்ச் செய்ததுண்டு; படிக்க ணக்கைப்
பேசிவிட்டாய் கண்டபடி" என்று சொல்ல.
தமிழ் படிக்க வேண்டும் எல்லோரும்
"அப்படியா! அறியாத படியால் சொன்னேன்;
அந்தமிழர் படிப்படியாய் முன்னேற் றத்தை
எப்படியா யினும்பெற்று விட்டால் மக்கள்
இப்படியே கீழ்ப்படியில் இரார்க ளன்றோ?
மெய்ப்படிநம் அறிஞரின் சொற்படிந டந்தால்,
மேற்படியார் செப்படி வித்தை பறக்கும்.
முற்படில் ஆகாததுண்டா? எப்ப டிக்கும்
முதற்படியாய்த் தமிழ்படிக்க வேண்டும்" என்றாள்.
தமிழ்நாடு தலைதூக்க உயிரையும் தருவேன்
"இழந்தபழம் புகழ்மீள வேண்டும் நாட்டில்,
எல்லோரும் தமிழர்களாய் வாழ வேண்டும்.
வழிந்தொழுகும் சுவைத்தமிழே பெருக வேண்டும்.
மாற்றலர்கள் ஏமாற்றம் தொலைய வேண்டும்.
விழுந்ததமிழ் நாடுதலை தூக்க என்றன்
உயிர்தனையே வேண்டிடினும் தருவேன்" என்றான்.
"பழம்இடுவேன் சர்க்கரைப்பால் வார்ப்பேன் உங்கள்
பண்பாடும் வாய்திறப்பீர் அத்தான்" என்றாள்.
"மிதிபாகற் காய்கசக்கும்; எனினும் அந்த
மேற்கசப்பின் உள்ளேயும் சுவைஇ ருக்கும்;
அதுபோலத் தானேடி! அதனாலென்ன?
அறிவிப்பாய் இளமானே" என்றான் அன்பன்;
அதிகாலை தொடங்கிநாம் இரவு மட்டும்
அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்ப தல்லால்,
இதுவரைக்கும் பொதுநலத்துக் கென்ன செய்தோம்?
என்பதைநாம் நினைத்துப்பார்ப் பதுவு மில்லை.
வீட்டுத் தொண்டா பொதுத் தொண்டு?
"இன்றைக்குக் கறிஎன்ன? செலவு யாது?
ஏகாலி வந்தானா? வேலைக் காரி
சென்றாளா? கொழுக்கட்டை செய்ய லாமா?
செந்தாழை வாங்குவமா? கடைச் சரக்கை
ஒன்றுக்கு மூன்றாக விற்ப தெந்நாள்?
உன்மீதில் எனக்காசை பொய்யா? மாடு
குன்றுநிகர் குடம் நிறையக் கறப்ப துண்டா?
கொடுக்கலென்ன? வாங்கலென்ன? இவைதாம் கண்டோம்.
தன்னலத்தால் என்ன நடக்கும்
"தமிழரென்று சொல்லிக்கொள் கின்றோம் நாமும்;
தமிழ்நாட்டின் முன்னேற்றம் விரும்பு கின்றோம்;
எமதென்று சொல்கின்றோம் நாடோ றுந்தான்;
எப்போது தமிழினுக்குக் கையா லான
நமதுழைப்பை ஒருகாசைச் செலவு செய்தோம்?
நாமிதனை என்றேனும் வாழ்நாள் தன்னில்,
அமைவாகக் குந்திநினைத் தோமா? இல்லை;
அனைவருமிவ் வாறிருந்தால் எது நடக்கும்?"
பெரும்படியான தொண்டு செய்துள்ளோம்
கரும்படியின் சாறுநிகர் மொழியாள் இந்தக்
கனிந்தமொழி சொன்னவுடன் அவன்உ ரைப்பான்;
"வரும்படிவீ தப்படிநான் தரும்ப டிக்கு
வாக்களித்த படிகணக்கர் திங்கள் தோறும்
கரம்படி வீதித்தமிழர் கழகத் தார்கள்
கடைப்படியை மிதித்தவுடன் எண்ணி வைப்பார்
பெரும்படியாய்ச் செய்ததுண்டு; படிக்க ணக்கைப்
பேசிவிட்டாய் கண்டபடி" என்று சொல்ல.
தமிழ் படிக்க வேண்டும் எல்லோரும்
"அப்படியா! அறியாத படியால் சொன்னேன்;
அந்தமிழர் படிப்படியாய் முன்னேற் றத்தை
எப்படியா யினும்பெற்று விட்டால் மக்கள்
இப்படியே கீழ்ப்படியில் இரார்க ளன்றோ?
மெய்ப்படிநம் அறிஞரின் சொற்படிந டந்தால்,
மேற்படியார் செப்படி வித்தை பறக்கும்.
முற்படில் ஆகாததுண்டா? எப்ப டிக்கும்
முதற்படியாய்த் தமிழ்படிக்க வேண்டும்" என்றாள்.
தமிழ்நாடு தலைதூக்க உயிரையும் தருவேன்
"இழந்தபழம் புகழ்மீள வேண்டும் நாட்டில்,
எல்லோரும் தமிழர்களாய் வாழ வேண்டும்.
வழிந்தொழுகும் சுவைத்தமிழே பெருக வேண்டும்.
மாற்றலர்கள் ஏமாற்றம் தொலைய வேண்டும்.
விழுந்ததமிழ் நாடுதலை தூக்க என்றன்
உயிர்தனையே வேண்டிடினும் தருவேன்" என்றான்.
"பழம்இடுவேன் சர்க்கரைப்பால் வார்ப்பேன் உங்கள்
பண்பாடும் வாய்திறப்பீர் அத்தான்" என்றாள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்
அன்றன்று புதுமை
"அன்றிலடி நாமிருவர் பழமும் பாலும்
ஆருக்கு வேண்டுமடி! என்றன் ஆசைக்
குன்றத்திற் படர்ந்தமலர்க் கொடியே, மண்ணில்
குவிந்திருக்கும் சுவையுள்ள பொருள்கள் எல்லாம்
ஒன்றொன்றும் மறுநாளே பழமை கொள்ளும்;
ஒன்றொன்றும் சிலநாளில் தெவிட்டிப் போகும்;
அன்றன்று புதுமையடி, தெவிட்ட லுண்டோ?
ஆருயிரே நீகொடுக்கும் இன்பம்" என்றான்.
இரவுக்கு வழியனுப்பு விழா
நள்ளிரவின் அமைதியிலே மணிவி ளக்கும்
நடுங்காமல் சன்னலுக்குள் புகுந் தென்றல்
மெல்லஉடல் குளிரும்வகை வீசா நிற்கும்;
வீணையில்லை காதினிலே இனிமை சேர்க்கும்;
சொல்லரிதாய். இனிதினிதாய் நாழி கைபோம்;
சுடர்விழிகள் ஈரிரண்டு, நான்கு பூக்கள்,
புல்லிதழிற் போய்ஒடுங்கும்; தமைம றந்து
பூரிப்பார் நலம்பாடி இரவு செல்லும்.
"அன்றிலடி நாமிருவர் பழமும் பாலும்
ஆருக்கு வேண்டுமடி! என்றன் ஆசைக்
குன்றத்திற் படர்ந்தமலர்க் கொடியே, மண்ணில்
குவிந்திருக்கும் சுவையுள்ள பொருள்கள் எல்லாம்
ஒன்றொன்றும் மறுநாளே பழமை கொள்ளும்;
ஒன்றொன்றும் சிலநாளில் தெவிட்டிப் போகும்;
அன்றன்று புதுமையடி, தெவிட்ட லுண்டோ?
ஆருயிரே நீகொடுக்கும் இன்பம்" என்றான்.
இரவுக்கு வழியனுப்பு விழா
நள்ளிரவின் அமைதியிலே மணிவி ளக்கும்
நடுங்காமல் சன்னலுக்குள் புகுந் தென்றல்
மெல்லஉடல் குளிரும்வகை வீசா நிற்கும்;
வீணையில்லை காதினிலே இனிமை சேர்க்கும்;
சொல்லரிதாய். இனிதினிதாய் நாழி கைபோம்;
சுடர்விழிகள் ஈரிரண்டு, நான்கு பூக்கள்,
புல்லிதழிற் போய்ஒடுங்கும்; தமைம றந்து
பூரிப்பார் நலம்பாடி இரவு செல்லும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்
இரண்டாம் பகுதி
விருந்தோம்பல்
சிந்துக் கண்ணி
தலைவன் கடைக்குச் சென்றான்
அன்பு மணவாளன்
ஆன வுணவருந்திப்
பின்பு, மனைவிதந்த
பேச்சருந்தித்-தன்புதுச்
சட்டை யுடுத்துத்
தனிமூ விரற்கடையில்
பட்டை மடித்த
படியணிந்து-வட்டநிலைக்
கண்ணாடி பார்த்துக்
கலைந்த முடியதுக்கிக்
"கண்ணேசெல் கின்றேன்
கடைக்"கென்றான்-பெண்வாய்க்
கடைவிரித்துப் புன்னகைப்புக்
காட்டி "நன்" றென்றாள்;
குடைவிரித்துத் தோள்சாய்த்துக்
கொண்டே-நடை விரித்தான்.
தலைவி விருந்தினரை வரவேற்றாள்
தன்னருமை மக்கள்
தமிழ்க்கழகம் தாம்செல்லப்
பின்னரும் ஐயன்செல்லப்
பெண்ணரசி-முன்சுவரில்
மாட்டி யிருந்த
மணிப்பொறி "இரண்டென்று"
காட்டி யிருந்ததுவும்
கண்டவளாய்த்-தீட்டிச்
சுடுவெயிலில் காயவைத்த
சோளம் துழவி
உடல்நிமிர்ந்தாள் கண்கள்
உவந்தாள்-நடைவீட்டைத்
தாண்டி வரும்விருந்தைத்
தான்கண்டாள் கையேந்திப்
பூண்ட மகிழ்வால்
புகழேந்தி-வேண்டி
"வருக!அம் மாவருக!
ஐயா வருக!
வருக! பாப்பா தம்பி"
யென்று-பெருகன்பால்
பொன்துலங்கு மேனி
புதுமெருகு கொள்ள,முகம்
அன்றலர்ந்த செந்தா
மரையாக-நன்றே
வரவேற்றாள்; வந்தவரின்
பெட்டி படுக்கை
அருகில் அறைக்குள்
அமைத்தாள்-விரைவாக
அண்டாவின் மூடி
அகற்றிச்செம் பில்தண்ணீர்
மொண்டுபுறந் தூய்மை
முடிப்பிரென்று-விண்டபின்
சாய்ந்திருக்க நாற்காலி
தந்தும்வெண் தாழையினால்
வாய்ந்திருக்கும் பாய்விரித்தும்
மற்றதிலே-ஏய்ந்திருக்க
வெள்ளையுறை யிட்டிருக்கும்
மெத்தை தலையணைகள்
உள்ளறையில் ஓடி
யெடுத்துதவி-அள்ளியே
விருந்தோம்பல்
சிந்துக் கண்ணி
தலைவன் கடைக்குச் சென்றான்
அன்பு மணவாளன்
ஆன வுணவருந்திப்
பின்பு, மனைவிதந்த
பேச்சருந்தித்-தன்புதுச்
சட்டை யுடுத்துத்
தனிமூ விரற்கடையில்
பட்டை மடித்த
படியணிந்து-வட்டநிலைக்
கண்ணாடி பார்த்துக்
கலைந்த முடியதுக்கிக்
"கண்ணேசெல் கின்றேன்
கடைக்"கென்றான்-பெண்வாய்க்
கடைவிரித்துப் புன்னகைப்புக்
காட்டி "நன்" றென்றாள்;
குடைவிரித்துத் தோள்சாய்த்துக்
கொண்டே-நடை விரித்தான்.
தலைவி விருந்தினரை வரவேற்றாள்
தன்னருமை மக்கள்
தமிழ்க்கழகம் தாம்செல்லப்
பின்னரும் ஐயன்செல்லப்
பெண்ணரசி-முன்சுவரில்
மாட்டி யிருந்த
மணிப்பொறி "இரண்டென்று"
காட்டி யிருந்ததுவும்
கண்டவளாய்த்-தீட்டிச்
சுடுவெயிலில் காயவைத்த
சோளம் துழவி
உடல்நிமிர்ந்தாள் கண்கள்
உவந்தாள்-நடைவீட்டைத்
தாண்டி வரும்விருந்தைத்
தான்கண்டாள் கையேந்திப்
பூண்ட மகிழ்வால்
புகழேந்தி-வேண்டி
"வருக!அம் மாவருக!
ஐயா வருக!
வருக! பாப்பா தம்பி"
யென்று-பெருகன்பால்
பொன்துலங்கு மேனி
புதுமெருகு கொள்ள,முகம்
அன்றலர்ந்த செந்தா
மரையாக-நன்றே
வரவேற்றாள்; வந்தவரின்
பெட்டி படுக்கை
அருகில் அறைக்குள்
அமைத்தாள்-விரைவாக
அண்டாவின் மூடி
அகற்றிச்செம் பில்தண்ணீர்
மொண்டுபுறந் தூய்மை
முடிப்பிரென்று-விண்டபின்
சாய்ந்திருக்க நாற்காலி
தந்தும்வெண் தாழையினால்
வாய்ந்திருக்கும் பாய்விரித்தும்
மற்றதிலே-ஏய்ந்திருக்க
வெள்ளையுறை யிட்டிருக்கும்
மெத்தை தலையணைகள்
உள்ளறையில் ஓடி
யெடுத்துதவி-அள்ளியே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்
தேன்குழலும் உண்ணத்
தெவிட்டாத பண்ணியமும்
வான் குழலாள் கொண்டுவந்து
வைத்தேகி-ஆன்கறந்த
பாலும் பருகும்
படிவேண்டி, வெற்றிலைக்கு
நாலும் கலந்து
நறுக்கியகாய்-மேலுமிட்டுச்
செந்தாழை, பல்பூக்கள்
பச்சையடு சேர்கண்ணி
வந்தாள் குழல்சூட்டி
மற்றவர்க்கும்-தந்துபின்
நின்ற கண்ணாடி
நெடும்பேழை தான்திறந்(து)
இன்று மலர்ந்த
இலக்கியங்கள்-தொன்றுவந்த
நன்னூற்கள் செய்தித்தாள்
நல்கி,"இதோ வந்தேன்"
என்று சமைக்கும்
எதிர்அறைக்குள்-சென்றவளை
விருந்தினர் வரவை மாமன் மாமிக்கு
வந்தோர்கள் கண்டு
மலர்வாய் இதழ்நடுங்க,
"எந்தாயே எந்தாயே
யாமெல்லாம்-குந்தி
விலாப்புடைக்க வீட்டில்இந்த
வேளையுண வுண்டோம்
பலாப்பழம்போல் எம்வயிறு
பாரீர்-நிலாப் போலும்
இப்போதும் பண்ணியங்கள்
இட்டீர் அதையுமுண்டோம்
எப்போதுதான் அமைதி"
என்றுரைக்க-"அப்படியா!
சற்றேவிடை தருவீர்
தங்களருந் தோழர்தமைப்
பெற்றெடுத்த என்மாமன்
மாமியர்பால்-உற்ற செய்தி
சொல்லிவரு வேன்"என்று
தோகை பறந்தோடி
மெல்ல "மாமா மாமி
வில்லியனூர்ச்-செல்வர்திரு
மாவரச னாரும்
மலர்க்குழவி அம்மாவும்
நாவரசும் பெண்ணாள்
நகைமுத்தும்-யாவரும்
வந்துள்ளார்" என்றுரைத்தாள்
மாமனார் கேட்டவுடன்,
தெவிட்டாத பண்ணியமும்
வான் குழலாள் கொண்டுவந்து
வைத்தேகி-ஆன்கறந்த
பாலும் பருகும்
படிவேண்டி, வெற்றிலைக்கு
நாலும் கலந்து
நறுக்கியகாய்-மேலுமிட்டுச்
செந்தாழை, பல்பூக்கள்
பச்சையடு சேர்கண்ணி
வந்தாள் குழல்சூட்டி
மற்றவர்க்கும்-தந்துபின்
நின்ற கண்ணாடி
நெடும்பேழை தான்திறந்(து)
இன்று மலர்ந்த
இலக்கியங்கள்-தொன்றுவந்த
நன்னூற்கள் செய்தித்தாள்
நல்கி,"இதோ வந்தேன்"
என்று சமைக்கும்
எதிர்அறைக்குள்-சென்றவளை
விருந்தினர் வரவை மாமன் மாமிக்கு
வந்தோர்கள் கண்டு
மலர்வாய் இதழ்நடுங்க,
"எந்தாயே எந்தாயே
யாமெல்லாம்-குந்தி
விலாப்புடைக்க வீட்டில்இந்த
வேளையுண வுண்டோம்
பலாப்பழம்போல் எம்வயிறு
பாரீர்-நிலாப் போலும்
இப்போதும் பண்ணியங்கள்
இட்டீர் அதையுமுண்டோம்
எப்போதுதான் அமைதி"
என்றுரைக்க-"அப்படியா!
சற்றேவிடை தருவீர்
தங்களருந் தோழர்தமைப்
பெற்றெடுத்த என்மாமன்
மாமியர்பால்-உற்ற செய்தி
சொல்லிவரு வேன்"என்று
தோகை பறந்தோடி
மெல்ல "மாமா மாமி
வில்லியனூர்ச்-செல்வர்திரு
மாவரச னாரும்
மலர்க்குழவி அம்மாவும்
நாவரசும் பெண்ணாள்
நகைமுத்தும்-யாவரும்
வந்துள்ளார்" என்றுரைத்தாள்
மாமனார் கேட்டவுடன்,
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்
மாமன் மாமி மகிழ்ச்சி
"வந்தாரா? மிக்க
மகிழ்ச்சியம்மா!-வந்தவரைக்
காணவோ கண்டு
கலகலெனப் பேசவோ
வீணவா உற்றேன்
விளைவதென்ன! நாணல்
துரும்பென்றும் சொல்லவொண்ணா
என்றன் உடம்பை
இரும்பென்றா எண்ணுகின்றாய்
நீயும்-திரும்பிப் போய்க்
கேட்டுக்கொள் நான்அவரை
மன்னிப்புக் கேட்டதாய்
வீட்டுக்கு வந்த
விருந்தோம்பு;-நாட்டிலுறு
நற்றமிழர் சேர்த்தபுகழ்
ஞாலத்தில் என்னவெனில்,
உற்ற விருந்தை
உயிரென்று-பெற்றுவத்தல்;
மோந்தால் குழையும்அனிச்
சப்பூ முகமாற்றம்
வாய்ந்தால் குழையும்
வருவிருந்தென்(று)-ஆய்ந்ததிரு
வள்ளுவனார் சொன்னார்
அதனைநீ எப்போதும்
உள்ளத்து வைப்பாய்
ஒருபோதும்-தள்ளாதே!
ஆண்டு பலமுயன்றே
ஆக்குசுவை ஊண்எனினும்
ஈண்டு விருந்தினர்க்கும்
இட்டுவத்தல்-வேண்டுமன்றோ?
வந்தாரின் தேவை
வழக்கம் இவைஅறிக
நந்தா விளக்குன்றன்
நல்லறிவே!- செந்திருவே!
இட்டுப்பார் உண்டவர்கள்
இன்புற் றிருக்கையிலே
தொட்டுப்பார் உன்நெஞ்சைத்
தோன்றுமின்பம்-கட்டிக்
கரும்பென்பார் பெண்ணைக்
கவிஞரெலாம் தந்த
விருந்தோம்பும் மேன்மையினா
லன்றோ?-தெரிந்ததா?"
என்றுரைக்க, மாமி
இயம்பலுற்றாள் பின்னர்;
"வந்தாரா? மிக்க
மகிழ்ச்சியம்மா!-வந்தவரைக்
காணவோ கண்டு
கலகலெனப் பேசவோ
வீணவா உற்றேன்
விளைவதென்ன! நாணல்
துரும்பென்றும் சொல்லவொண்ணா
என்றன் உடம்பை
இரும்பென்றா எண்ணுகின்றாய்
நீயும்-திரும்பிப் போய்க்
கேட்டுக்கொள் நான்அவரை
மன்னிப்புக் கேட்டதாய்
வீட்டுக்கு வந்த
விருந்தோம்பு;-நாட்டிலுறு
நற்றமிழர் சேர்த்தபுகழ்
ஞாலத்தில் என்னவெனில்,
உற்ற விருந்தை
உயிரென்று-பெற்றுவத்தல்;
மோந்தால் குழையும்அனிச்
சப்பூ முகமாற்றம்
வாய்ந்தால் குழையும்
வருவிருந்தென்(று)-ஆய்ந்ததிரு
வள்ளுவனார் சொன்னார்
அதனைநீ எப்போதும்
உள்ளத்து வைப்பாய்
ஒருபோதும்-தள்ளாதே!
ஆண்டு பலமுயன்றே
ஆக்குசுவை ஊண்எனினும்
ஈண்டு விருந்தினர்க்கும்
இட்டுவத்தல்-வேண்டுமன்றோ?
வந்தாரின் தேவை
வழக்கம் இவைஅறிக
நந்தா விளக்குன்றன்
நல்லறிவே!- செந்திருவே!
இட்டுப்பார் உண்டவர்கள்
இன்புற் றிருக்கையிலே
தொட்டுப்பார் உன்நெஞ்சைத்
தோன்றுமின்பம்-கட்டிக்
கரும்பென்பார் பெண்ணைக்
கவிஞரெலாம் தந்த
விருந்தோம்பும் மேன்மையினா
லன்றோ?-தெரிந்ததா?"
என்றுரைக்க, மாமி
இயம்பலுற்றாள் பின்னர்;
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்
மாமி மருமகளுக்கு
"முன்வைத்த முத்துத்
தயிரிருக்கும்-பின்னறையில்
பண்ணியங்கள் மிக்கிருக்கும்
பழமை படாத
வெண்ணெய் விளங்காய்
அளவிருக்கும்-கண்ணே
மறக்கினும் அம்மாவென்(று)
ஓதி மடிப்பால்
கறக்கப் பசுக்காத்
திருக்கும்-சிறக்கவே
சேலத்தின் அங்காடிச்
சேயிழையார் நாள்தோறும்
வேலைக் கிடையில்
மிகக்கருத்தாய்-தோலில்
கலந்த சுளைபிசைந்து
காயவைத்து விற்கும்
இலந்தவடை வீட்டில்
இருக்கும்-மலிந்துநீர்
பாய்நாகர் கோவில்
பலாச்சுளையின் வற்றலினைப்
போய்நீபார் பானையிலே
பொன்போலே!-தேய்பிறைபோல்
கொத்தவரை வற்றல்முதல்
கொட்டிவைத்தேன்; கிள்ளியே
வைத்தவரை உண்டுபின்
வையாமைக்-குத்துன்பம்
உற்றிடச்செய்-ஊறுகாய்
ஒன்றல்ல கேட்பாய்நீ;
இற்றுத்தேன் சொட்டும்
எலுமிச்சை!-வற்றியவாய்
பேருரைத்தால் நீர்சுரக்கும்
பேர்பெற்ற நாரத்தை
மாரிபோல் நல்லெண்ணெய்
மாறாமல்-நேருறவே
வெந்தயம் மணக்கஅதன்
மேற்காயம் போய்மணக்கும்
உந்துசுவை மாங்காயின்
ஊறுகாய்-நைந்திருக்கும்
காடி மிளகாய்
கறியோடும் ஊறக்கண்
ணாடியிலே இட்டுமேல்
மூடிவைத்தேன்-தேடிப்பார்
இஞ்சி முறைப்பாகும்
எலுமிச்சை சர்பத்தும்
பிஞ்சுக் கடுக்காய்
பிசைதுவக்கும்-கொஞ்சமா?
கீரைதயிர் இரண்டும்
கேடுசெய்யும் இரவில்
மோரைப் பெருக்கிடு
முப்போதும்-நேரிழையே
சோற்றைஅள் ளுங்கால்
துவள்வாழைத் தண்டில்உறும்
சாற்றைப்போ லேவடியத்
தக்கவண்ணம்-ஊற்றுநெய்யை!
வாழை இலையின்அடி
உண்பார் வலப்புறத்தில்
வீழ விரித்துக்
கறிவகைகள்-சூழவைத்துத்
தண்ணீர்வெந் நீரைத்
தனித்தனியே செம்பிலிட்டு
வெண்சோ றிடுமுன்
மிகஇனிக்கும்-பண்ணியமும்
முக்கனியும் தேனில்
நறுநெய்யில் மூழ்குவித்தே
ஒக்கநின்றே உண்டபின்பால்
சோறிட்டுத்-தக்கபடி
கேட்டும் குறிப்பறிந்தும்
கெஞ்சியும் மிஞ்சுமன்பால்
ஊட்டுதல்வேண் டும்தாய்போல்
ஒண்டொடியே!-கேட்டுப்போ;
எக்கறியில் நாட்டம்
இவர்க்கென்று நீயுணர்ந்தே
அக்கறியை மேன்மேலும்
அள்ளிவை-விக்குவதை
நீமுன் நினைத்து
நினைப்பூட்டு நீர்அருந்த!
ஈமுன்கால் சோற்றிலையில்
இட்டாலும்-தீமையம்மா
பாய்ச்சும் பசும்பயற்றுப்
பாகுக்கும் நெய்யளித்துக்
காய்ச்சும் கடிமிளகு
நீருக்கும்-வாய்ப்பாகத்
தூய சருகிலுறு
தொன்னைபல வைத்திடுவாய்
ஆயுணவு தீர்ந்தே
அவர்எழுமுன்-தாயே
அவர்கைக்கு நீர்ஏந்தி
நெய்ப்பசை யகற்ற
உவர்கட்டி தன்னை
உதவு-துவைத்ததுகில்
ஈரம் துடைக்கஎன
ஈந்து,மலர்ச் சந்தனமும்
ஓரிடத்தே நல்கியே
ஒள்இலைகாய்-சேரவைத்து
மேல்விசிறி வீசுவிப்பாய்
மெல்லியலே!" என்றுரைத்தாள்.
"முன்வைத்த முத்துத்
தயிரிருக்கும்-பின்னறையில்
பண்ணியங்கள் மிக்கிருக்கும்
பழமை படாத
வெண்ணெய் விளங்காய்
அளவிருக்கும்-கண்ணே
மறக்கினும் அம்மாவென்(று)
ஓதி மடிப்பால்
கறக்கப் பசுக்காத்
திருக்கும்-சிறக்கவே
சேலத்தின் அங்காடிச்
சேயிழையார் நாள்தோறும்
வேலைக் கிடையில்
மிகக்கருத்தாய்-தோலில்
கலந்த சுளைபிசைந்து
காயவைத்து விற்கும்
இலந்தவடை வீட்டில்
இருக்கும்-மலிந்துநீர்
பாய்நாகர் கோவில்
பலாச்சுளையின் வற்றலினைப்
போய்நீபார் பானையிலே
பொன்போலே!-தேய்பிறைபோல்
கொத்தவரை வற்றல்முதல்
கொட்டிவைத்தேன்; கிள்ளியே
வைத்தவரை உண்டுபின்
வையாமைக்-குத்துன்பம்
உற்றிடச்செய்-ஊறுகாய்
ஒன்றல்ல கேட்பாய்நீ;
இற்றுத்தேன் சொட்டும்
எலுமிச்சை!-வற்றியவாய்
பேருரைத்தால் நீர்சுரக்கும்
பேர்பெற்ற நாரத்தை
மாரிபோல் நல்லெண்ணெய்
மாறாமல்-நேருறவே
வெந்தயம் மணக்கஅதன்
மேற்காயம் போய்மணக்கும்
உந்துசுவை மாங்காயின்
ஊறுகாய்-நைந்திருக்கும்
காடி மிளகாய்
கறியோடும் ஊறக்கண்
ணாடியிலே இட்டுமேல்
மூடிவைத்தேன்-தேடிப்பார்
இஞ்சி முறைப்பாகும்
எலுமிச்சை சர்பத்தும்
பிஞ்சுக் கடுக்காய்
பிசைதுவக்கும்-கொஞ்சமா?
கீரைதயிர் இரண்டும்
கேடுசெய்யும் இரவில்
மோரைப் பெருக்கிடு
முப்போதும்-நேரிழையே
சோற்றைஅள் ளுங்கால்
துவள்வாழைத் தண்டில்உறும்
சாற்றைப்போ லேவடியத்
தக்கவண்ணம்-ஊற்றுநெய்யை!
வாழை இலையின்அடி
உண்பார் வலப்புறத்தில்
வீழ விரித்துக்
கறிவகைகள்-சூழவைத்துத்
தண்ணீர்வெந் நீரைத்
தனித்தனியே செம்பிலிட்டு
வெண்சோ றிடுமுன்
மிகஇனிக்கும்-பண்ணியமும்
முக்கனியும் தேனில்
நறுநெய்யில் மூழ்குவித்தே
ஒக்கநின்றே உண்டபின்பால்
சோறிட்டுத்-தக்கபடி
கேட்டும் குறிப்பறிந்தும்
கெஞ்சியும் மிஞ்சுமன்பால்
ஊட்டுதல்வேண் டும்தாய்போல்
ஒண்டொடியே!-கேட்டுப்போ;
எக்கறியில் நாட்டம்
இவர்க்கென்று நீயுணர்ந்தே
அக்கறியை மேன்மேலும்
அள்ளிவை-விக்குவதை
நீமுன் நினைத்து
நினைப்பூட்டு நீர்அருந்த!
ஈமுன்கால் சோற்றிலையில்
இட்டாலும்-தீமையம்மா
பாய்ச்சும் பசும்பயற்றுப்
பாகுக்கும் நெய்யளித்துக்
காய்ச்சும் கடிமிளகு
நீருக்கும்-வாய்ப்பாகத்
தூய சருகிலுறு
தொன்னைபல வைத்திடுவாய்
ஆயுணவு தீர்ந்தே
அவர்எழுமுன்-தாயே
அவர்கைக்கு நீர்ஏந்தி
நெய்ப்பசை யகற்ற
உவர்கட்டி தன்னை
உதவு-துவைத்ததுகில்
ஈரம் துடைக்கஎன
ஈந்து,மலர்ச் சந்தனமும்
ஓரிடத்தே நல்கியே
ஒள்இலைகாய்-சேரவைத்து
மேல்விசிறி வீசுவிப்பாய்
மெல்லியலே!" என்றுரைத்தாள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்
தலைவி விருந்தினரிடம்
கால்வலியும் காணாக்
கனிமொழியாள்-வேல்விழியை
மிக்க மகிழ்ச்சி
தழுவ விடைபெற்றுத்
தக்க விருந்தினர்பால்
தான்சென்றே-"ஒக்கும்என்
அன்புள்ள அம்மாவே
ஐயாவே, அம்முதியோர்
என்பு மெலிந்தார்
எழுந்துவரும்-வன்மையிலார்.
திங்களை அல்லி
அரும்புவந்து தேடாதோ?
தங்கப் புதையல்எனில்
தங்குவனோ-இங்கேழை?
பெற்ற பொழுதன்பால்
பெற்றாள்தன் பிள்ளையினைப்
பற்றி அணைத்துமுகம்
பார்க்கஅவா-முற்றாளா?
தாய்வந்தாள் தந்தைவந்தான்
என்றுரைக்கத் தான்கேட்டால்
சேய்வந்து காணும்அவாத்
தீர்வானோ-வாயூறிப்
போனாரே தங்களது
பொன்வருகை கேட்டவுடன்
ஊன்உறுதி யில்லை
உமைக்கானக்-கூனி
வரஇயலா மைக்காக
மன்னிப்புத் தாங்கள்
தரஇயலு மாஎன்று
சாற்றி-வருந்தினார்"
என்றுரைத்தால் இல்லத்
தலைவி, இதுகேட்டு,
கால்வலியும் காணாக்
கனிமொழியாள்-வேல்விழியை
மிக்க மகிழ்ச்சி
தழுவ விடைபெற்றுத்
தக்க விருந்தினர்பால்
தான்சென்றே-"ஒக்கும்என்
அன்புள்ள அம்மாவே
ஐயாவே, அம்முதியோர்
என்பு மெலிந்தார்
எழுந்துவரும்-வன்மையிலார்.
திங்களை அல்லி
அரும்புவந்து தேடாதோ?
தங்கப் புதையல்எனில்
தங்குவனோ-இங்கேழை?
பெற்ற பொழுதன்பால்
பெற்றாள்தன் பிள்ளையினைப்
பற்றி அணைத்துமுகம்
பார்க்கஅவா-முற்றாளா?
தாய்வந்தாள் தந்தைவந்தான்
என்றுரைக்கத் தான்கேட்டால்
சேய்வந்து காணும்அவாத்
தீர்வானோ-வாயூறிப்
போனாரே தங்களது
பொன்வருகை கேட்டவுடன்
ஊன்உறுதி யில்லை
உமைக்கானக்-கூனி
வரஇயலா மைக்காக
மன்னிப்புத் தாங்கள்
தரஇயலு மாஎன்று
சாற்றி-வருந்தினார்"
என்றுரைத்தால் இல்லத்
தலைவி, இதுகேட்டு,
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Page 2 of 11 • 1, 2, 3, ... 9, 10, 11
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குடும்ப விளக்கு – பாரதிதாசன் தரவிறக்க
» பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கைக் குறிப்பு
» எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்
» பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்...!!
» பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்...!!
» பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கைக் குறிப்பு
» எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்
» பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்...!!
» பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்...!!
Page 2 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|