Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்by ayyasamy ram Yesterday at 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழுக்குச் சட்டை
3 posters
Page 1 of 1
அழுக்குச் சட்டை
"டேய் சுந்தர்... இங்கே வா!'' தெருவில் விளையாடிக் கொண்டிருந்த தன் மகனை அழைத்தாள் கிரேஸ். சுந்தர் வந்தான்.
"நீ போட்டிருக்கிற சட்டையைப் பாருடா. எவ்வளவு அழுக்கா இருக்கு! பழைய சட்டையாவும் இருக்கு. இந்தா.... அந்த பழைய சட்டையைக் கழற்றிட்டு இந்த புதுச் சட்டையைப் போட்டுக்கோ'' என்று கொடுத்தாள் கிரேஸ்.
"போம்மா... எனக்கு இந்தப் பழைய சட்டையே போதும். புதுச் சட்டை வேண்டாம். புதுச் சட்டையை போட்டுக்கிட்டு விளையாடப் போனா அதுவும் அழுக்காகி பழைய சட்டை ஆகிடும்'' என்றான்.
"டேய் சுந்தர்... உன்னோட விளையாடும் பசங்களின் சட்டையைப் பார்த்தாயா? உன் சட்டை மாதிரி அழுக்காவாடா போட்டிருக்காங்க? சுத்தம் சுகம் தரும்னு நீ படிச்சதில்லையா?'' என்றாள் அம்மா.
"போம்மா... புதுச் சட்டையும் வேணாம், ஒண்ணும் வேணாம். இந்தப் பழைய சட்டையே போதும்'' என சொல்லிக் கொண்டே மறுபடி தெருவுக்கு விளையாடச் சென்றான் சுந்தர்.
சுந்தர் விளையாடிவிட்டு வீட்டுக்குத் திரும்பினான். அப்போதும் அம்மா கிரேஸ் அந்த பழைய அழுக்குச் சட்டையைக் கழற்றிவிட்டு துவைத்த சட்டையை போட்டுக் கொள்ளும்படி கொடுத்தாள். தனக்கு அந்தச் சட்டையே போதும் என்றான் அவன். வேறு சட்டை போட்டுக்கொள்ள முடியாது என்று அவன் மறுத்தான்.
"டேய் ஏண்டா இப்படிப் பண்றே...? உனக்கு எத்தனை புதுச்சட்டை இருக்கு? நீ இல்லாத வீட்டுப் பிள்ளையைப் போல எப்போதும் ஒரே அழுக்குச் சட்டையை போட்டுக் கொண்டே திரியறே... ஒரே அழுக்குச் சட்டையை போட்டுக்கிட்டிருந்தா நோய்க் கிருமிகள் பரவி உடல் நலத்தைப் பாதிக்கும்'' என்றாள். ஆனால் அம்மா என்ன சொல்லியும் சுந்தர் கேட்பதாக இல்லை.
அம்மாவும் மகனும் நடத்திய உரையாடலை கேட்டுக்கொண்டிருந்தார் சுந்தரின் அப்பா தங்கவேல். "டேய் சுந்தர்... ஆடை இல்லா மனிதன் அரைமனிதன். கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்பதெல்லாம் அணியும் ஆடைகள் பற்றி வந்த அழகான பொன்மொழிகள். ஒருவன் அணியும் ஆடைதான் அவனுக்குப் புதுப் பொலிவைத் தரும்'' என்றவர், பழைய அழுக்குச் சட்டையை கழற்றிவிட்டு வேறு சட்டை போட்டுக்கொள்ளும்படி சுந்தரை அறிவுறுத்தினார். அவனோ அதையெல்லாம் கேட்பதாக இல்லை.
தன் கணவரிடம், "என்னங்க நம்ம பையன் இப்படி இருக்கான்? போட்டால் ஒரே சட்டைதான். எப்பப் பார்த்தாலும் பழைய அழுக்குச் சட்டைகளை போட்டுக்கொண்டே திரிகிறான். பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க?'' என்று கணவரிடம் மகனைப் பற்றி குறைபட்டுக் கொண்டாள் கிரேஸ்.
இந்நிலையில் ஒருநாள் தங்கவேல் பக்கத்து ஊர் பஸ் ஸ்டாண்டில் கண்ட காட்சியை தன் மகனின் அழுக்குச் சட்டையோடு ஒப்பிட்டுப் பார்த்தார். அதுதான் தன் மகனின் மனமாற்றத்திற்கு உதவும் என அவர் நம்பினார்.
அன்று பள்ளி விடுமுறை. தன் மகன் சுந்தரை அழைத்துக் கொண்டு பக்கத்து ஊருக்குச் சென்றார் தங்கவேல். வெயில் காலம் என்பதால் அங்கு வரும் மக்களுக்கு அதிக தாகம் எடுத்தது. அவர்கள் பஸ் ஸ்டாண்டில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் டிரம் அருகே குழுமி நின்று தாகம் தீர்த்துக் கொண்டிருந்தார்கள். அதை சுந்தரும் தொலைவில் நின்று வேடிக்கை பார்த்தான்.
அவன் தன் தந்தையிடம், "ஏம்பா... ரெண்டு குடிநீர் டிரம் இருக்கு. ஆனால் ஆட்கள் எல்லாம் ஒரே டிரம்மில் உள்ள தண்ணீரையே குடிக்கிறாங்க. இன்னொரு டிரம்மில் தண்ணீர் இல்லையாப்பா? ரெண்டு டிரம்மில் உள்ள தண்ணீரையும் மக்கள் பருகினால் தண்ணீர் குடிக்க இப்படி ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டாமே? போட்டி போட வேண்டாமே?'' என்றான்.
"நீ கேட்பது நல்ல கேள்விதான். வா, அருகில் போய் பார்ப்போம்'' என தன் மகனை அழைத்துக் கொண்டு தண்ணீர் டிரம்கள் அருகே சென்றார் தங்கவேல். மிக அருகில் சென்றபோதுதான் சுந்தருக்குப் புரிந்தது. இரண்டு டிரம்களில் தண்ணீர் இருந்தும் மக்கள் அனைவரும் குறிப்பிட்ட ஒரே டிரம் தண்ணீரை மட்டும் விரும்புவதற்கான காரணம் தெரிந்தது.
ஒரு டிரம்மில் தண்ணீர் நிறைய இருந்தபோதும் அந்த டிரம் அழுக்கு படிந்து பார்க்கச் சகிக்காமல் இருந்ததால் மக்கள் தாகமாக இருந்தும் அந்த டிரம்மை சீண்டவில்லை என்பதை உணர்ந்தான்.
`பிறருடைய மதிப்பைப் பெற நம்முடைய நடவடிக்கைகள் மட்டுமல்ல, நம்முடைய உருவத் தோற்றமும், நம் உருவத் தோற்றத்தை பளிச்சென்று எடுத்துக் காட்டும் ஆடைகளும் அவசியம்' என்று உணர்ந்தான் சுந்தர்.
வீட்டிற்கு வந்த அவன், தன் அம்மா- அப்பாவிடம், தன் மனதை அந்த அழுக்கு தண்ணீர் டிரம் மாற்றிவிட்டது என்றான். சுந்தர் இப்போது எல்லாம் பழைய அழுக்குச் சட்டைகளை அணிவதில்லை. அம்மா கிரேஸ் துவைத்து தரும் தூய்மையான சட்டைகளை மட்டுமே அணிந்து கொள்கிறான்.
குட்டீஸ்... நீங்களும் துவைத்த தூய ஆடை களைத்தானே அணிகிறீர்கள்? சபாஷ்!
"நீ போட்டிருக்கிற சட்டையைப் பாருடா. எவ்வளவு அழுக்கா இருக்கு! பழைய சட்டையாவும் இருக்கு. இந்தா.... அந்த பழைய சட்டையைக் கழற்றிட்டு இந்த புதுச் சட்டையைப் போட்டுக்கோ'' என்று கொடுத்தாள் கிரேஸ்.
"போம்மா... எனக்கு இந்தப் பழைய சட்டையே போதும். புதுச் சட்டை வேண்டாம். புதுச் சட்டையை போட்டுக்கிட்டு விளையாடப் போனா அதுவும் அழுக்காகி பழைய சட்டை ஆகிடும்'' என்றான்.
"டேய் சுந்தர்... உன்னோட விளையாடும் பசங்களின் சட்டையைப் பார்த்தாயா? உன் சட்டை மாதிரி அழுக்காவாடா போட்டிருக்காங்க? சுத்தம் சுகம் தரும்னு நீ படிச்சதில்லையா?'' என்றாள் அம்மா.
"போம்மா... புதுச் சட்டையும் வேணாம், ஒண்ணும் வேணாம். இந்தப் பழைய சட்டையே போதும்'' என சொல்லிக் கொண்டே மறுபடி தெருவுக்கு விளையாடச் சென்றான் சுந்தர்.
சுந்தர் விளையாடிவிட்டு வீட்டுக்குத் திரும்பினான். அப்போதும் அம்மா கிரேஸ் அந்த பழைய அழுக்குச் சட்டையைக் கழற்றிவிட்டு துவைத்த சட்டையை போட்டுக் கொள்ளும்படி கொடுத்தாள். தனக்கு அந்தச் சட்டையே போதும் என்றான் அவன். வேறு சட்டை போட்டுக்கொள்ள முடியாது என்று அவன் மறுத்தான்.
"டேய் ஏண்டா இப்படிப் பண்றே...? உனக்கு எத்தனை புதுச்சட்டை இருக்கு? நீ இல்லாத வீட்டுப் பிள்ளையைப் போல எப்போதும் ஒரே அழுக்குச் சட்டையை போட்டுக் கொண்டே திரியறே... ஒரே அழுக்குச் சட்டையை போட்டுக்கிட்டிருந்தா நோய்க் கிருமிகள் பரவி உடல் நலத்தைப் பாதிக்கும்'' என்றாள். ஆனால் அம்மா என்ன சொல்லியும் சுந்தர் கேட்பதாக இல்லை.
அம்மாவும் மகனும் நடத்திய உரையாடலை கேட்டுக்கொண்டிருந்தார் சுந்தரின் அப்பா தங்கவேல். "டேய் சுந்தர்... ஆடை இல்லா மனிதன் அரைமனிதன். கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்பதெல்லாம் அணியும் ஆடைகள் பற்றி வந்த அழகான பொன்மொழிகள். ஒருவன் அணியும் ஆடைதான் அவனுக்குப் புதுப் பொலிவைத் தரும்'' என்றவர், பழைய அழுக்குச் சட்டையை கழற்றிவிட்டு வேறு சட்டை போட்டுக்கொள்ளும்படி சுந்தரை அறிவுறுத்தினார். அவனோ அதையெல்லாம் கேட்பதாக இல்லை.
தன் கணவரிடம், "என்னங்க நம்ம பையன் இப்படி இருக்கான்? போட்டால் ஒரே சட்டைதான். எப்பப் பார்த்தாலும் பழைய அழுக்குச் சட்டைகளை போட்டுக்கொண்டே திரிகிறான். பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க?'' என்று கணவரிடம் மகனைப் பற்றி குறைபட்டுக் கொண்டாள் கிரேஸ்.
இந்நிலையில் ஒருநாள் தங்கவேல் பக்கத்து ஊர் பஸ் ஸ்டாண்டில் கண்ட காட்சியை தன் மகனின் அழுக்குச் சட்டையோடு ஒப்பிட்டுப் பார்த்தார். அதுதான் தன் மகனின் மனமாற்றத்திற்கு உதவும் என அவர் நம்பினார்.
அன்று பள்ளி விடுமுறை. தன் மகன் சுந்தரை அழைத்துக் கொண்டு பக்கத்து ஊருக்குச் சென்றார் தங்கவேல். வெயில் காலம் என்பதால் அங்கு வரும் மக்களுக்கு அதிக தாகம் எடுத்தது. அவர்கள் பஸ் ஸ்டாண்டில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் டிரம் அருகே குழுமி நின்று தாகம் தீர்த்துக் கொண்டிருந்தார்கள். அதை சுந்தரும் தொலைவில் நின்று வேடிக்கை பார்த்தான்.
அவன் தன் தந்தையிடம், "ஏம்பா... ரெண்டு குடிநீர் டிரம் இருக்கு. ஆனால் ஆட்கள் எல்லாம் ஒரே டிரம்மில் உள்ள தண்ணீரையே குடிக்கிறாங்க. இன்னொரு டிரம்மில் தண்ணீர் இல்லையாப்பா? ரெண்டு டிரம்மில் உள்ள தண்ணீரையும் மக்கள் பருகினால் தண்ணீர் குடிக்க இப்படி ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டாமே? போட்டி போட வேண்டாமே?'' என்றான்.
"நீ கேட்பது நல்ல கேள்விதான். வா, அருகில் போய் பார்ப்போம்'' என தன் மகனை அழைத்துக் கொண்டு தண்ணீர் டிரம்கள் அருகே சென்றார் தங்கவேல். மிக அருகில் சென்றபோதுதான் சுந்தருக்குப் புரிந்தது. இரண்டு டிரம்களில் தண்ணீர் இருந்தும் மக்கள் அனைவரும் குறிப்பிட்ட ஒரே டிரம் தண்ணீரை மட்டும் விரும்புவதற்கான காரணம் தெரிந்தது.
ஒரு டிரம்மில் தண்ணீர் நிறைய இருந்தபோதும் அந்த டிரம் அழுக்கு படிந்து பார்க்கச் சகிக்காமல் இருந்ததால் மக்கள் தாகமாக இருந்தும் அந்த டிரம்மை சீண்டவில்லை என்பதை உணர்ந்தான்.
`பிறருடைய மதிப்பைப் பெற நம்முடைய நடவடிக்கைகள் மட்டுமல்ல, நம்முடைய உருவத் தோற்றமும், நம் உருவத் தோற்றத்தை பளிச்சென்று எடுத்துக் காட்டும் ஆடைகளும் அவசியம்' என்று உணர்ந்தான் சுந்தர்.
வீட்டிற்கு வந்த அவன், தன் அம்மா- அப்பாவிடம், தன் மனதை அந்த அழுக்கு தண்ணீர் டிரம் மாற்றிவிட்டது என்றான். சுந்தர் இப்போது எல்லாம் பழைய அழுக்குச் சட்டைகளை அணிவதில்லை. அம்மா கிரேஸ் துவைத்து தரும் தூய்மையான சட்டைகளை மட்டுமே அணிந்து கொள்கிறான்.
குட்டீஸ்... நீங்களும் துவைத்த தூய ஆடை களைத்தானே அணிகிறீர்கள்? சபாஷ்!
எஸ். டேனியல் ஜுலியட்
***
***
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எஸ்.அஸ்லி- தளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
Similar topics
» சட்டைக்குள் சட்டை, சட்டைக்குள் சட்டை – விடுகதைகள்
» கிழிந்த சட்டை
» கதை:மணச் சட்டை !
» என் சட்டை கிழிஞ்சிருச்சு !!!
» தங்க சட்டை
» கிழிந்த சட்டை
» கதை:மணச் சட்டை !
» என் சட்டை கிழிஞ்சிருச்சு !!!
» தங்க சட்டை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|