ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவேந்தரின் நினைவு நாள் இன்று......

3 posters

Go down

பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Empty பாவேந்தரின் நினைவு நாள் இன்று......

Post by தமிழ் Wed Apr 21, 2010 8:21 am

புரட்சிக்கவி


பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Bharathidasan


பெரியார்காட்டியவழி :
பகுத்தறிவு
இயக்கத்தில் ஈடுபடத் தொடங்கிய பின் பாரதிதாசனார் "புரட்சிக்கவிஞர் " எனப்
போற்றப்பட்டார் . பாரதிதாசனாரின் கவிதைகள் இடி முழக்கமாகவும் , பகுத்தறிவு
பெருமழையாகவும், தமிழ் தேசிய சுடர் விளக்காகவும் தமிழ் இலக்கிய வரலாற்றில்
தனியிடம் பெற்றன

1928 -இல் தான் பாவேந்தருக்கு குடியரசு இதழும்,
அய்யா பெரியாரின் சொற்பொழிவுகளும் அறிமுகமாயின. 1928 - இல் நவம்பர் மாதம்
தீபாவளி வந்தது. பண்டிகைக்கு துணிமணி சாமான் வாங்குவது பற்றி கவலையோடு
தன்னிடம் வினவிய துணைவியாரிடம், "தீபாவளியும் இல்லை, மதப் பண்டிகை எதுவும்
நம் வீட்டில் இனிமேல் இல்லை. நீ ஓய்வாக இருந்துக்கொள்" - என பாவேந்தர்
பதில் தந்தார்.

"உள்ளத்திற்கு சரியெனப் பட்டதை உலகிற்கு அறிவிக்க
வேண்டும் " எனக் கூறுபவர் பாரதிதாசன். " கடவுள், மதம், அதிகாரம் என எது
வந்து ஆசை காட்டினாலும் , அச்சமூடினாலும் அவற்றை தூசியாக நினைக்க
வேண்டும்; துணிந்து எதிர்க்க வேண்டும் . அவ்வாறு செய்பவன் மட்டுமே மனிதன்"
என அறிவுறுத்துகிறார்.

பகுத்தறிவை வெறும் கொள்கையாக மட்டும் நிறுத்திக்கொள்ளாமல்- இலக்கியமாகவும், இயக்கமாகவும் தாங்கி நின்றவர் பாவேந்தர்.
மறக்கமுடியாநிகழ்வு :

புதுவை மாநிலம் கூனிச்சம்பட்டு என்னும் ஊரில் பாரதிதாசன் பணியாற்றிய போது
அவர் மனைவிக்கு மகப்பேறு. உதவி செய்ய யாரும் முன்வரவில்லை . பிறந்த
குழந்தையும் இரண்டே நாளில் இறந்து விட்டது." சுப்புரத்தின வாத்தியாருக்கு
யாரும் உதவ கூடாது" என்று ஊர் கட்டுப்பாடு. அதனால், குழந்தையின் உடலை
எவருதவியும் இல்லாமல் பாரதிதாசனே புதைத்து வந்த அவலம் நிகழ்ந்தது.

புதுவையின் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் கிறிஸ்தவப் பாதிரிமார்களால் "மதவிரோதி" என்று வெறுத்து ஒதுக்கப்பட்டார்.

1942
-இல் புதுவை திராவிட கழக மாநாட்டிற்கு வந்த தந்தை பெரியாரையும், அறிஞர்
அண்ணாவையும் வரவேற்க சென்ற பாரதிதாசனாரை கலகக்காரர்கள் நூறுபேர்
சூழ்ந்துக்கொண்டு செருப்புகளாலேயே தாக்கினர்.
பகுத்தறிவுப்பாதை :
சலுகை போனால் போகட்டும் - என்
அலுவல் போனால் போகட்டும்
என தாம் எழுதிய வரிகளுக்கு இலக்கியமாக வாழ்ந்த சிறப்பு பாரதிதாசன் அவர்களையே சாரும்.

கவிஞன் எல்லோருக்கும் ஓர் அரசியல் கொள்கை கட்டாயம் இருக்க வேண்டும். அரசியல் இல்லாமல் வெறுமனே எழுதிக் கொண்டு இருக்க என்னால் முடியாது - எனக் கூறுபவர் பாரதிதாசன்.

புராண இதிகாசங்களையும், மூட நம்பிக்கைப் புரட்டையும் அம்பலப்படுத்த அவர் எழுதிய சிறுக் காப்பியமே " சஞ்சீவிபர்வதத்தின்சாரல் ". " பக்தப் பிரகலாதா" என பத்தர்கள் கொண்டாடும் இராமாயணக் கதை பாவேந்தரால் பகுத்தறிவு வண்ணம் பெற்றது. " இரணியன்அல்லதுஇணையற்றவீரன்"
என்னும் பெயரில் 1934 இல் நாடகமாக உருவெடுத்தது.

"பகுத்தறிவுஎன்பதுஆதாரத்தைக்கொண்டுதெளிவடைவது. மூடநம்பிக்கை என்பது, ஆராயாமல்ஏற்றுக்கொள்வது. நமதுஇழிநிலை, முட்டாள்தனம்மாற வேண்டுமானால்பகுத்தறிவுக்கொண்டுதாராளமாகசிந்தித்தால்போதும்"- இது பெரியார்வழங்கியபகுத்தறிவுவிளக்கம் . [b]

"தமிழ் பாடல் மதம் சாதி மூட எண்ணம்
தரும் பாட்டை இருப்பதிலும் இல்லாமை நன்று "
[b]
[/b][/b] - என அடித்துப் பேசும் ஆண்மை பாவேந்தருக்கு இப்படி தான் கிடைத்தது.

" தெய்வம்தொழவேண்டா -அது
தீது செய்யத்தூண்டும் "


- என ஆத்திகசிந்தனையின் ஆணிவேரை அசைத்தார் பாவேந்தர்.

மதங்களை வெறுத்த பாரதிதாசன்,
" துருக்கன்என்றசொல்லைநீக்கு!
கத்தோலிக்க
பித்தம்தொலைப்பாய்!

இந்துஎன்றசிந்தனைவேண்டாம் ! "


- என்கிறார்.



" காசைப்பிடுங்கிடுதர்க்கே - பலர்
கடவுள் என்பார் இருகாதையும்மூடு !
கூசிநடுங்கிடுதம்பி - கெட்ட
கோயில்என்றால்ஒருகாதத்தில் ஓடு "
-என மனிதனுக்கு அறிவுறுத்துகிறார்.

"சாதிஒழித்தல்ஒன்று - நல்ல
தமிழ்வளர்த்தல்மற்றொன்று
பாதியை
நாடுமறந்தால் - மற்ற
பாதி
துலங்குவதில்லை"
- என்று தமிழர் தமிழராக ஒன்று பட வேண்டும் என வலியுறுத்துகிறார்.

தாலாட்டில்,
" சாணிக்குபோட்டிட்டுசாமிஎன்பார்செய்கைக்கு
நாணிகண்ணுறங்குநகைத்துநீகண்ணுறங்கு"
- என அறியாமையை எண்ணி சிரித்தபடி கண்ணுறங்குமாறு தாலாட்டுகிறார்.

அறியாமையை,
"ஆலயம்அமைத்தவர்யாரடிதோழி? - மக்கள்
அறிவைஇருட்டாக்கிஆளநினைப்பவர்தோழா "
- என்று விளக்குகிறார்.

புராண இதிகாச பேச்சு வணிகர்களை,
" ராமாயணம்சொல்லிநாளைக்கிழிக்கின்ற
ஏமாந்தார்க்காசுக் (கு ) எசமானன் "
- என்று கூறி எச்சரித்தார்.

புராண இதிகாசங்களை,
" பேதம்வளர்க்கபெரும்பெரும்புராணங்கள்
சாதிசண்டைவளர்க்கதக்கஇதிகாசங்கள் "
- இவ்வாறு கட்டுக்கதைகளைப் படம் பிடிக்கிறார்.

மூடர்களை,
" முகத்தில்பிறப்பதும்உண்டாமுட்டாளே ?
தோளில்பிறப்பார்உண்டாதொழும்பனே ?
இடையில்
பிறப்பார்உண்டாஎருமையே ?
காலில்பிறப்பார்உண்டாகழுதையே?
நான்முகன்
என்பான்உளனோநாயே?
புளுகடா
புகன்றவை ..."
- என்று மூடர்களை தான் எழுத்துக்களால் சுட்டெரிக்கிறார்.

பெண்ணடிமை:

" மாண்டவர்மாந்தப்பின்னர் - அவனின்
மனைவியின்உளத்தை ஆண்டையர்காண்பதில்லை - ஐயகோ
அடிமைப்பெண்கதியே ! "

மறுமணத்தை,
" காதல்சுரக்கின்றநெஞ்சத்திலே
கெட்ட
கைம்மையைதூர்க்காதீர் - ஒரு
கட்டழகன்
திருத்தோளினைசேர்ந்திட
சாத்திரம்பார்க்காதீர் "
-இவ்வாறு விதவை மறுமணத்தை வலியுறுத்துகிறார்.

இல்வாழ்க்கை :
மனிதர்கள் அனைவருக்கும் இனிமையான இல்வாழ்க்கை அமைய பாவேந்தர் இயற்றியதே "குடும்பவிளக்கு "ஆகும்
இதில் முதியோர் காதலில்,

" புதுமலர் அல்ல; காய்ந்த
புற்கட்டே
அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்
தள்ளாடி விழும் மூதாட்டி

மதியல்ல முகம் அவட்கு
வறள்நிலம்! குழிகள் கண்கள்!
எது
எனக்கின்பம் நல்கும்?
‘இருக்கின்றாள்’ என்ப தொன்றே! "
- என்று மெய் சிலிர்க்க வைக்கிறார் கவிஞர்.

நமதுஇழப்பு:

இம் மாபெரும் புரட்சி கவி இன்று நம்மிடையே இல்லாமல் இருந்தாலும் அவர்
ஊட்டிய தமிழ் வீரமும், பகுத்தறிவும் நம்மிடையே உள்ளது. இனி இவரைப் போன்ற
ஒரு புரட்சிகவி பிறக்கபோவதும் இல்லை.
எனவே ,பாவேந்தர் காட்டிய பாதையில் அவரின் சிந்தனையோடு பயணித்தால் நம் வாழ்க்கை சிறக்கும் , தமிழ் வானம் திறக்கும் .


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Empty Re: பாவேந்தரின் நினைவு நாள் இன்று......

Post by Aathira Wed Apr 21, 2010 8:34 am

நல்ல தகவல். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தமிழ்.. பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... 678642 பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... 154550


பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Aபாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Aபாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Tபாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Hபாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Iபாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Rபாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Aபாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Empty Re: பாவேந்தரின் நினைவு நாள் இன்று......

Post by சரவணன் Wed Apr 21, 2010 11:09 am

பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... 677196 ................. பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... 678642

பகிர்ந்தமைக்கு நன்றி தமிழ்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பாவேந்தரின் நினைவு நாள் இன்று...... Empty Re: பாவேந்தரின் நினைவு நாள் இன்று......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum