புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள்.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
வைரமுத்துவின் "கறுப்பு நிலாவில்” நெருப்புப் பொறிகள்.
“கவிஞன் தன்னை இருபது வயதுக்குள் அடயாளம் காட்டா விட்டால், அவன் கவிஞனே ஆக முடியாது” என்று பெரெஞ்சுக் கவிஞர் பாடிலெர் கூறுவார். வைரமுத்து பதெனேழு வயதில் எழுதிப் பத்தொன்பது வயதில் வெளியிட்ட நூல் ‘வைகறை
மேகங்கள்’. மழலைப் புறப்பாட்டின் ’கன்னி முத்திரை’ என்று இந்நூலைச் சொல்லவேண்டும் என்பார் இந்திரா பார்த்தசாரதி.
சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கின்ற ஒரு மரபை, பல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கோட்பாட்டை மாற்றுவது என்பாது கடுமுயற்சியும், அஞ்சா நெஞ்சமும் கொண்ட ஒருவரால் மட்டுமே இயல்வது. அம்மாற்றத்தை எடுத்து மொழியவும் எதிர்ப்புகளையும், விளைவுகளையும் எதிர் கொள்ளவும் வைரம் பாய்ந்த நெஞ்சம் வேண்டும். அத்தகு எதிர்ப்புகளைச் சந்தித்த கவிதையே கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘கருப்பு நிலா’.
திறனாய்வுத் திறன் என்பது படைக்கும் திறன், சுவைக்கும் திறன்
இவ்விரண்டிலும் வேறுபட்டது என்பர் தா. ஏ. ஞானமூர்த்தி. இம்மூன்றும் ஒருங்கே பெற்றவர் கவிஞர் வைரமுத்து என்பதை இத்திறனாய்வுக் கவிதை புலப்படுத்தும். ‘உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்’ என்ற அறத்தை நிலைநாட்ட எழுந்த தமிழரின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம். ‘நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும் பேணிய கற்பும் பெருந்துணையாகக் கொண்ட கற்பு நிலா
கண்ணகியைத் திறனாய்வு என்ற தணலில் சுட்டெரிக்க வந்தது இந்தக் கறுப்பு நிலா! பத்தினித் தெய்வமாம் கண்ணகியின் பாத்திரப் படைப்பையும் கவிஞர் வைரமுத்துவின் திறனாய்வுப் பார்வயையும் பொருத்திப் பார்ப்பது இக்கட்டுரையின் நோக்கம்.
இலக்கியம் என்பது மனிதப் பெருமானங்களை (Human Values) மிகுந்த வன்மையுடன் கற்பிக்கிறது. இந்தப் பெருமானங்கள் அந்தப் பாத்திரங்களின் ஊடாட்டங்களின் மூலமும் அவற்றின் கூற்றுகள், செயல்கள் மூலமும் தெரிய வருகிறது என்பார் (கா. சிவத்தம்பி)
”தெய்வம் தொழுந்தகைமை திண்ணிதால், தெய்வமாய்
மண்ணக மாந்தர்க்கு அணியாய கண்ணகி
விண்ணக மாந்தர்க்கு விருந்து” என்றும்
”தீதிலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்
மாதரார் தொழுதுஏத்த வயங்கிய பெருங்குணத்துக் காதலாள்” என்றும்
“கற்புக்கடம் பூண்ட இத்தெய்வமல்லது பொற்புடைத்தெயவம்
யாம் கண்டிலமால்” என்றும்
”ஒரு மாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி” என்றும்
போற்றுவதுடன், பத்தினித் தெய்வமாக, பதிகம் (5, 36), வஞ்சின மாலை (50), அழற்படுகாதை (155), கட்டுரைக் காதை (14, 177), குன்றக்குறவை (19 - 70), காட்சிக்காதை (74, 129), நீர்ப்படைக்காதை (15, 128), நடுகல் காதை (210) ஆகிய இடங்களில்
ஏத்துவார் இளங்கோவடிகள். இத்தகு சிறப்பு வாய்ந்த கவிஞர் வைரமுத்து பத்தினியாய நீயிருந்தும் பயனில்லை என்று கூறுவதுடன் செல்லுபடியாகாத சிறுகாசு (12), கல்லாகிப் போனவளே (23), பேதைத் தலைமகளே (50), பாவி, படுபாவி (58), பித்தம் பிடித்தவள், பேதைப் பெரும் பேதை (81), தேராதாள் (90) என்றெல்லாம் நெஞ்சு நோக ஏசுகிறார். இத்துணிவு இக்கவிஞரிடம் பிறக்கக் காரணம் கண்ணகி சினம் கொள்ள வேண்டிய காலத்தில் அமைதி காத்தவளாகவும், அமைதியாக ஆராய்ந்து நோக்க வேண்டிய காலத்தில் சினம் கொண்டவளாகவும்
முரண்பாடுகள் நிறைந்தவளாகக் காணப்படுவதே ஆகும்.
“கவிஞன் தன்னை இருபது வயதுக்குள் அடயாளம் காட்டா விட்டால், அவன் கவிஞனே ஆக முடியாது” என்று பெரெஞ்சுக் கவிஞர் பாடிலெர் கூறுவார். வைரமுத்து பதெனேழு வயதில் எழுதிப் பத்தொன்பது வயதில் வெளியிட்ட நூல் ‘வைகறை
மேகங்கள்’. மழலைப் புறப்பாட்டின் ’கன்னி முத்திரை’ என்று இந்நூலைச் சொல்லவேண்டும் என்பார் இந்திரா பார்த்தசாரதி.
சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கின்ற ஒரு மரபை, பல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கோட்பாட்டை மாற்றுவது என்பாது கடுமுயற்சியும், அஞ்சா நெஞ்சமும் கொண்ட ஒருவரால் மட்டுமே இயல்வது. அம்மாற்றத்தை எடுத்து மொழியவும் எதிர்ப்புகளையும், விளைவுகளையும் எதிர் கொள்ளவும் வைரம் பாய்ந்த நெஞ்சம் வேண்டும். அத்தகு எதிர்ப்புகளைச் சந்தித்த கவிதையே கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘கருப்பு நிலா’.
திறனாய்வுத் திறன் என்பது படைக்கும் திறன், சுவைக்கும் திறன்
இவ்விரண்டிலும் வேறுபட்டது என்பர் தா. ஏ. ஞானமூர்த்தி. இம்மூன்றும் ஒருங்கே பெற்றவர் கவிஞர் வைரமுத்து என்பதை இத்திறனாய்வுக் கவிதை புலப்படுத்தும். ‘உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்’ என்ற அறத்தை நிலைநாட்ட எழுந்த தமிழரின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம். ‘நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும் பேணிய கற்பும் பெருந்துணையாகக் கொண்ட கற்பு நிலா
கண்ணகியைத் திறனாய்வு என்ற தணலில் சுட்டெரிக்க வந்தது இந்தக் கறுப்பு நிலா! பத்தினித் தெய்வமாம் கண்ணகியின் பாத்திரப் படைப்பையும் கவிஞர் வைரமுத்துவின் திறனாய்வுப் பார்வயையும் பொருத்திப் பார்ப்பது இக்கட்டுரையின் நோக்கம்.
இலக்கியம் என்பது மனிதப் பெருமானங்களை (Human Values) மிகுந்த வன்மையுடன் கற்பிக்கிறது. இந்தப் பெருமானங்கள் அந்தப் பாத்திரங்களின் ஊடாட்டங்களின் மூலமும் அவற்றின் கூற்றுகள், செயல்கள் மூலமும் தெரிய வருகிறது என்பார் (கா. சிவத்தம்பி)
”தெய்வம் தொழுந்தகைமை திண்ணிதால், தெய்வமாய்
மண்ணக மாந்தர்க்கு அணியாய கண்ணகி
விண்ணக மாந்தர்க்கு விருந்து” என்றும்
”தீதிலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்
மாதரார் தொழுதுஏத்த வயங்கிய பெருங்குணத்துக் காதலாள்” என்றும்
“கற்புக்கடம் பூண்ட இத்தெய்வமல்லது பொற்புடைத்தெயவம்
யாம் கண்டிலமால்” என்றும்
”ஒரு மாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி” என்றும்
போற்றுவதுடன், பத்தினித் தெய்வமாக, பதிகம் (5, 36), வஞ்சின மாலை (50), அழற்படுகாதை (155), கட்டுரைக் காதை (14, 177), குன்றக்குறவை (19 - 70), காட்சிக்காதை (74, 129), நீர்ப்படைக்காதை (15, 128), நடுகல் காதை (210) ஆகிய இடங்களில்
ஏத்துவார் இளங்கோவடிகள். இத்தகு சிறப்பு வாய்ந்த கவிஞர் வைரமுத்து பத்தினியாய நீயிருந்தும் பயனில்லை என்று கூறுவதுடன் செல்லுபடியாகாத சிறுகாசு (12), கல்லாகிப் போனவளே (23), பேதைத் தலைமகளே (50), பாவி, படுபாவி (58), பித்தம் பிடித்தவள், பேதைப் பெரும் பேதை (81), தேராதாள் (90) என்றெல்லாம் நெஞ்சு நோக ஏசுகிறார். இத்துணிவு இக்கவிஞரிடம் பிறக்கக் காரணம் கண்ணகி சினம் கொள்ள வேண்டிய காலத்தில் அமைதி காத்தவளாகவும், அமைதியாக ஆராய்ந்து நோக்க வேண்டிய காலத்தில் சினம் கொண்டவளாகவும்
முரண்பாடுகள் நிறைந்தவளாகக் காணப்படுவதே ஆகும்.
” கற்பு வழிப்பட்டவர் பரத்தையை ஏத்தலும் உள்ளத்து ஊடல் உண்டென மொழிப”
என்று கலவியும், புலவியும்மாக கொண்டானுடன் கூடிவாழ்தலையே கற்புடைமை என்று வகுக்கும் தொல்காப்பியம்.
“ஊடுதல் காமத்திற்கு இன்பம்” என்று திருவள்ளுவமும் இதனைச் சுட்டும். கணவனின் மனநிலையை அறிய உதவுவது ஊடல்.
அதனால்தான் பிற பெண்களைப்பற்றிப் பேசுவதும், பரத்தையைப் பற்றிப் பேசுவதும் தலைவனின் மனவறி கருவியாம் என்பார் தொல்காப்பியர். வடு நீங்கு சிறப்பான மனையறத்தை மறந்து மாதவியிடம் விடுதலறியா விருப்பினனாகக் காம வாழ்வு
வாழ்கிறான் கோவலன். இந்நிலையில் பெற்றோர், உற்றார், உறவினர் என எவரையும் கோவலனிடம் அனுப்பித் தன் நிலையை உரைக்கச் செய்ய வில்லை கண்ணகி. பரத்தமை மேற்கொண்ட கண்ணகியிடம் தோழியை தூது அனுப்புவது சங்க காலம் தொட்டே இருந்து வரும் மரபு. கண்ணகியின் உயிர்த்தோழி தேவந்தி கண்ணிகியைப் போன்றே தலைவனைப் பிரிந்து, சோமகுண்டம், சூரிய குண்டம் ஆகிய பொய்கையில் மூழ்கி மீண்டும்
கணவனிடம் கூடப் பெற்றவள். அவளிடம் கூடத் தன் நிலையைக் கூற மறுக்கிறாள் கண்ணகி.
இவ்வாறு கணவனைக் காக்கத்தக்க பருவத்தில் காவாமல் விட்டுவிட்டு கதை முடிந்த பின்பு கதறுவதைக் கண்டு
“அளவுக்குமேல் பொறுமை அன்னமே நீ காட்டியதால்
களவுக்குப்போனதம்மா காத்துவைத்த உன் சொத்து” என்று பாடுகிறார்.
மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, காசறு பொன்னே, கரும்பே, தேனே என்றெல்லாம் பாராட்டும் தலைவனின் காதலை எண்ணிப் பூரித்த கண்ணகி அவையெல்லாம் மோகத்தால்
கூறிய வெற்று மொழிகள் என்பதைக்கூட அறிய முடியாத மடமகளாக இருக்கிறாள். இதனை,
“பட்டுத்துகில் விரித்த பவளம்பூம் பஞ்சனையில்
தொட்டுப் பிடித்துச் சுவையிதழில் விரல் தடவிப்
பதமான சுகங்கண்டு பாவிமகன் உனைப் பற்றி
முதலிரவில் சொன்னதெல்லாம் மோகமொழி தானென்றே
அறியாமல் போனாயே: அதுவுன்றன் பிழையலவா?”
என்று அவள் மீது எல்லையில்லா கரிசனையைக் கொட்டுகிறார்.
“பிரிக்காத ஏடுன்னை பிரிந்தெங்கோ போனானே” என்றும் கூறுகிறார். இந்த அடியில் ‘கோரிக்கையற்று கிடக்குது இங்கு வேரிற் பழுத்த பலா’ என்ற பாரதிதாசனின் ஆதங்கம் வெளிப்படுவதைக் காணலாம்.
அடுத்து புறத்தொழுக்கம் கொண்டு மீண்டு,அதாவது மாதவியின் இல்லம் விடுத்து மீண்டும் கண்ணகியிடம் தஞ்சம் புகுகிறான். அப்போதும் அவனது இல்லாமையைக் கண்டு இரங்கி சிலம்பு உள்ளது கொள்க என்று உதவுபவளாகவே அதுவும் நகைமுகம் காட்டி உதவுகிறாள். இளங்கோவின் கூற்று இதோ.
“நலங்கேழ் முறுவல் நகை முகம் காட்டி
சிலம்புல கொண்ம”
இந்த நகை முகமே சமுதாய அக்கறை கொண்ட வைரமுத்து என்ற இளங்கவியின் கடுஞ்சினத்திற்குக் காரணமாகிறது.. (இக்கவிதையைப் படைக்கும் போது கவிஞர் வைரமுத்து இளநிலை முதலாமாண்டு மாணவர்) பாவி, பேதை, பித்தம் பிடித்தவள்
என்று ஏசவும் செய்கிறது.
”மோகக் கதையதனை முடித்துவிட்டே உன்கணவன்
வேகமாய் உனைநாடி வீடுதேடி வந்தவுடன்
சிரித்துக் களித்துச் செவியெல்லாம் தேன்பாய
உரித்த சுளைபோலும் உன்னிதழை நீ திறந்து
சிந்தைநிலாக் காவலரே சிலம்பிதனை நாடித்தான்
வந்தீரோ? என்று வாய் நிறையத் தேன்வழியச்
சொன்னாயே பாவி”
என்று அடிவயிற்றில் இருந்து சொற்கள் வெடித்துச் சிதறுகிறது. உன்மத்தனுக்கும் காமாந்தகனுக்கும் தலைமை தந்து பணிந்து நிற்கும் பெண்ணடிமைத் தனத்தைக் களைந்து எறியும் வண்மை
”அநியாயக் காரனுக்கு ஆரத்தி எடுத்தவள் நீ” என்ற அடியில் வீறு கொண்டு எழுகிறது.
என்று கலவியும், புலவியும்மாக கொண்டானுடன் கூடிவாழ்தலையே கற்புடைமை என்று வகுக்கும் தொல்காப்பியம்.
“ஊடுதல் காமத்திற்கு இன்பம்” என்று திருவள்ளுவமும் இதனைச் சுட்டும். கணவனின் மனநிலையை அறிய உதவுவது ஊடல்.
அதனால்தான் பிற பெண்களைப்பற்றிப் பேசுவதும், பரத்தையைப் பற்றிப் பேசுவதும் தலைவனின் மனவறி கருவியாம் என்பார் தொல்காப்பியர். வடு நீங்கு சிறப்பான மனையறத்தை மறந்து மாதவியிடம் விடுதலறியா விருப்பினனாகக் காம வாழ்வு
வாழ்கிறான் கோவலன். இந்நிலையில் பெற்றோர், உற்றார், உறவினர் என எவரையும் கோவலனிடம் அனுப்பித் தன் நிலையை உரைக்கச் செய்ய வில்லை கண்ணகி. பரத்தமை மேற்கொண்ட கண்ணகியிடம் தோழியை தூது அனுப்புவது சங்க காலம் தொட்டே இருந்து வரும் மரபு. கண்ணகியின் உயிர்த்தோழி தேவந்தி கண்ணிகியைப் போன்றே தலைவனைப் பிரிந்து, சோமகுண்டம், சூரிய குண்டம் ஆகிய பொய்கையில் மூழ்கி மீண்டும்
கணவனிடம் கூடப் பெற்றவள். அவளிடம் கூடத் தன் நிலையைக் கூற மறுக்கிறாள் கண்ணகி.
இவ்வாறு கணவனைக் காக்கத்தக்க பருவத்தில் காவாமல் விட்டுவிட்டு கதை முடிந்த பின்பு கதறுவதைக் கண்டு
“அளவுக்குமேல் பொறுமை அன்னமே நீ காட்டியதால்
களவுக்குப்போனதம்மா காத்துவைத்த உன் சொத்து” என்று பாடுகிறார்.
மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, காசறு பொன்னே, கரும்பே, தேனே என்றெல்லாம் பாராட்டும் தலைவனின் காதலை எண்ணிப் பூரித்த கண்ணகி அவையெல்லாம் மோகத்தால்
கூறிய வெற்று மொழிகள் என்பதைக்கூட அறிய முடியாத மடமகளாக இருக்கிறாள். இதனை,
“பட்டுத்துகில் விரித்த பவளம்பூம் பஞ்சனையில்
தொட்டுப் பிடித்துச் சுவையிதழில் விரல் தடவிப்
பதமான சுகங்கண்டு பாவிமகன் உனைப் பற்றி
முதலிரவில் சொன்னதெல்லாம் மோகமொழி தானென்றே
அறியாமல் போனாயே: அதுவுன்றன் பிழையலவா?”
என்று அவள் மீது எல்லையில்லா கரிசனையைக் கொட்டுகிறார்.
“பிரிக்காத ஏடுன்னை பிரிந்தெங்கோ போனானே” என்றும் கூறுகிறார். இந்த அடியில் ‘கோரிக்கையற்று கிடக்குது இங்கு வேரிற் பழுத்த பலா’ என்ற பாரதிதாசனின் ஆதங்கம் வெளிப்படுவதைக் காணலாம்.
அடுத்து புறத்தொழுக்கம் கொண்டு மீண்டு,அதாவது மாதவியின் இல்லம் விடுத்து மீண்டும் கண்ணகியிடம் தஞ்சம் புகுகிறான். அப்போதும் அவனது இல்லாமையைக் கண்டு இரங்கி சிலம்பு உள்ளது கொள்க என்று உதவுபவளாகவே அதுவும் நகைமுகம் காட்டி உதவுகிறாள். இளங்கோவின் கூற்று இதோ.
“நலங்கேழ் முறுவல் நகை முகம் காட்டி
சிலம்புல கொண்ம”
இந்த நகை முகமே சமுதாய அக்கறை கொண்ட வைரமுத்து என்ற இளங்கவியின் கடுஞ்சினத்திற்குக் காரணமாகிறது.. (இக்கவிதையைப் படைக்கும் போது கவிஞர் வைரமுத்து இளநிலை முதலாமாண்டு மாணவர்) பாவி, பேதை, பித்தம் பிடித்தவள்
என்று ஏசவும் செய்கிறது.
”மோகக் கதையதனை முடித்துவிட்டே உன்கணவன்
வேகமாய் உனைநாடி வீடுதேடி வந்தவுடன்
சிரித்துக் களித்துச் செவியெல்லாம் தேன்பாய
உரித்த சுளைபோலும் உன்னிதழை நீ திறந்து
சிந்தைநிலாக் காவலரே சிலம்பிதனை நாடித்தான்
வந்தீரோ? என்று வாய் நிறையத் தேன்வழியச்
சொன்னாயே பாவி”
என்று அடிவயிற்றில் இருந்து சொற்கள் வெடித்துச் சிதறுகிறது. உன்மத்தனுக்கும் காமாந்தகனுக்கும் தலைமை தந்து பணிந்து நிற்கும் பெண்ணடிமைத் தனத்தைக் களைந்து எறியும் வண்மை
”அநியாயக் காரனுக்கு ஆரத்தி எடுத்தவள் நீ” என்ற அடியில் வீறு கொண்டு எழுகிறது.
பாண்டியன் ஆராயது தீர்ப்பு வழங்கியதை ’தேரா மன்னா’ என்று பழித்துரைக்கும் கண்ணகியின் நிலையும் அவனைப் போன்றதே.
“பட்டாங்கில் யானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையையும்”என்று வஞ்சினம் கூறி மதுரை மக்களை அழித்தது ஒரு சிறிதும் பொருத்தமற்ற செயல். பொறுமை பெண்களின் குணம் என்பதை கண்ணகி எள்ளளவும் இந்த இடத்தில் போற்றாதது, பாண்டியனை வெஞ்சினத்தோடு அழித்தது, பின்பு அவளே ‘தென்னவன் தீதிலன்’ என்று செங்குட்டுவனிடம் கூறுவது இப்படி பொங்கி எழ வேண்டிய காலத்தில் அதிக பொறுமையும் , சினத்தை அடக்கி ஆள வேண்டிய கால்த்தில் ஆறா சினமும் கொண்ட கண்ணகியின் குணம்,
“அறம்பாடி மதுரை அரசன் புகழ்சாடித்
திறம்பாடும் பூநகரைத் தீயால் எரித்தாயே
அத்திறத்தைச் சோணாட்டில் அணுவளவு காட்டிநின்றால்
சத்தியமாய் வாழ்வில் தளிர்த்துச் செழித்திருப்பாய்”
என்று கவிஞரைக் கூற வைக்கிறது. அத்துடன்
“மன்னன் அல்லன் தேராதான்
மலர்க்கொடியே நீயேதான்”
என்று தார்மீகக் கோபமாக வெடிக்கிறது கவிமனம்.
இறுதியாக
”குலத்து மாந்தர்க்கு கற்புஇயல் பாகுமாம்
கொடுமை செய்தும் அறிவை யழித்தும் அந்
நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்”
என்பார் பாரதியார். ஆனால் இன்றளவும் பெண் என்றால் கண்ணகியாய் வாழ்வதைத்தான் எழுதி வைத்த மறையாகத் தமிழ்ச் சமுதாயம் கொண்டுள்ளது. ‘பத்தினி’ என்ற சொல்லே சிலப்பதிகாரக் காலத்தில் இருந்துதான் வழக்கில் வந்தது என்பர். இன்றும் ‘கண்ணகி’ என்பது பத்தினி தன்மை என்பதன் குறியீடாகத் தமிழ் மண்ணில் பேச்ப்பட்டு வருகிறது. ஆண் வர்க்கத்தின் கொடுமைகளை எதிர்த்துக் கேட்கும் திராணியற்றவர்களாக, எதிர்த்துக் கேட்கக் கூடாதவர்களாக, கண்ணீரை மட்டுமே சிந்திக் கொண்டு இருப்பதே கற்பின் வரையறை என்றால் அக்கற்பு இவ்வுலகத்தில் இல்லாது ஒழியட்டும் என்று கற்பு என்ற
விலங்கில் தன்னைத் தானே பூட்டிக் கொண்ட பெண்களுக்காக அழுத்தமாகக் குரல் கொடுக்கிறார் வைரமுத்து. இளமைக் குருதியின் வேக ஓட்டம் கவிதை ஓட்டத்தைச் சூடேற்றுகிறது. அதனால் தான்
”இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா?
இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனி மலைகளா?
இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்?
இவன் மூளைக்குள்ளேதான் எத்தனை ஆயிரம் விருட்சங்களுக்கான விதைகள்?
என்று இமை விரிக்கிறார் கலைஞர்.
(இதுகவிப்பேரரசு வைரமுத்துவின் ‘கறுப்பு நிலா’ என்ற கவிதையின் விமர்சனக் கட்டுரை. அடுத்து ஈகரை உறவுகளுக்காக அந்தக் கவிதையை ரசித்த கவிதைகள் பகுதியில் பதிகிறேன். ருசித்து மகிழவும்)
ஆதிரா..
“பட்டாங்கில் யானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையையும்”என்று வஞ்சினம் கூறி மதுரை மக்களை அழித்தது ஒரு சிறிதும் பொருத்தமற்ற செயல். பொறுமை பெண்களின் குணம் என்பதை கண்ணகி எள்ளளவும் இந்த இடத்தில் போற்றாதது, பாண்டியனை வெஞ்சினத்தோடு அழித்தது, பின்பு அவளே ‘தென்னவன் தீதிலன்’ என்று செங்குட்டுவனிடம் கூறுவது இப்படி பொங்கி எழ வேண்டிய காலத்தில் அதிக பொறுமையும் , சினத்தை அடக்கி ஆள வேண்டிய கால்த்தில் ஆறா சினமும் கொண்ட கண்ணகியின் குணம்,
“அறம்பாடி மதுரை அரசன் புகழ்சாடித்
திறம்பாடும் பூநகரைத் தீயால் எரித்தாயே
அத்திறத்தைச் சோணாட்டில் அணுவளவு காட்டிநின்றால்
சத்தியமாய் வாழ்வில் தளிர்த்துச் செழித்திருப்பாய்”
என்று கவிஞரைக் கூற வைக்கிறது. அத்துடன்
“மன்னன் அல்லன் தேராதான்
மலர்க்கொடியே நீயேதான்”
என்று தார்மீகக் கோபமாக வெடிக்கிறது கவிமனம்.
இறுதியாக
”குலத்து மாந்தர்க்கு கற்புஇயல் பாகுமாம்
கொடுமை செய்தும் அறிவை யழித்தும் அந்
நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்”
என்பார் பாரதியார். ஆனால் இன்றளவும் பெண் என்றால் கண்ணகியாய் வாழ்வதைத்தான் எழுதி வைத்த மறையாகத் தமிழ்ச் சமுதாயம் கொண்டுள்ளது. ‘பத்தினி’ என்ற சொல்லே சிலப்பதிகாரக் காலத்தில் இருந்துதான் வழக்கில் வந்தது என்பர். இன்றும் ‘கண்ணகி’ என்பது பத்தினி தன்மை என்பதன் குறியீடாகத் தமிழ் மண்ணில் பேச்ப்பட்டு வருகிறது. ஆண் வர்க்கத்தின் கொடுமைகளை எதிர்த்துக் கேட்கும் திராணியற்றவர்களாக, எதிர்த்துக் கேட்கக் கூடாதவர்களாக, கண்ணீரை மட்டுமே சிந்திக் கொண்டு இருப்பதே கற்பின் வரையறை என்றால் அக்கற்பு இவ்வுலகத்தில் இல்லாது ஒழியட்டும் என்று கற்பு என்ற
விலங்கில் தன்னைத் தானே பூட்டிக் கொண்ட பெண்களுக்காக அழுத்தமாகக் குரல் கொடுக்கிறார் வைரமுத்து. இளமைக் குருதியின் வேக ஓட்டம் கவிதை ஓட்டத்தைச் சூடேற்றுகிறது. அதனால் தான்
”இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா?
இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனி மலைகளா?
இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்?
இவன் மூளைக்குள்ளேதான் எத்தனை ஆயிரம் விருட்சங்களுக்கான விதைகள்?
என்று இமை விரிக்கிறார் கலைஞர்.
(இதுகவிப்பேரரசு வைரமுத்துவின் ‘கறுப்பு நிலா’ என்ற கவிதையின் விமர்சனக் கட்டுரை. அடுத்து ஈகரை உறவுகளுக்காக அந்தக் கவிதையை ரசித்த கவிதைகள் பகுதியில் பதிகிறேன். ருசித்து மகிழவும்)
ஆதிரா..
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
நான் மிகவும் நேசிக்கும் ஒருவரில் இந்த கவியரசு ஒருவர்.இவரின்
வார்த்தைகளின் வசிகிரத்தில் நான் என்னை மறந்தது உண்டு.
”இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா?
இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனி மலைகளா?
இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்?
இவன் மூளைக்குள்ளேதான் எத்தனை ஆயிரம் விருட்சங்களுக்கான விதைகள்?
இது உண்மையே.கருப்புக்குள் மறைந்து இருக்கும் கருத்துக்கள்.
நன்றி தோழியே .பகிர்ந்தமைக்கு..
வார்த்தைகளின் வசிகிரத்தில் நான் என்னை மறந்தது உண்டு.
”இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா?
இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனி மலைகளா?
இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்?
இவன் மூளைக்குள்ளேதான் எத்தனை ஆயிரம் விருட்சங்களுக்கான விதைகள்?
இது உண்மையே.கருப்புக்குள் மறைந்து இருக்கும் கருத்துக்கள்.
நன்றி தோழியே .பகிர்ந்தமைக்கு..
kalaimoon70 wrote:நான் மிகவும் நேசிக்கும் ஒருவரில் இந்த கவியரசு ஒருவர்.இவரின்
வார்த்தைகளின் வசிகிரத்தில் நான் என்னை மறந்தது உண்டு.
”இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா?
இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனி மலைகளா?
இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்?
இவன் மூளைக்குள்ளேதான் எத்தனை ஆயிரம் விருட்சங்களுக்கான விதைகள்?
இது உண்மையே.கருப்புக்குள் மறைந்து இருக்கும் கருத்துக்கள்.
நன்றி தோழியே .பகிர்ந்தமைக்கு..
மிக்க நன்றி கலைநிலா. இந்தக் கட்டுரை சிலருக்குப் புரியாது. இருந்தாலும் ஒரு தைரியத்தில் பதிந்துள்ளேன். த்ங்கள் முதல் கருத்துரைக்கு மிக்க நன்றி...
என் கல்லூரிக்காலத்திலேயே என் கனவுக்கவிக்காதலனாய்த் திகழ்ந்தவர் வைரமுத்து. அன்னாரது கவிதையின் திறனாய்வு என்னைக் களிப்படையச் செய்தது,
பகிர்ந்தமைக்கு நன்றி ஆதிரா,,,!
பகிர்ந்தமைக்கு நன்றி ஆதிரா,,,!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை நீங்கள் அந்தக் கவிதை படித்து இருக்கிறீர்களா? கலை உங்களுக்கு விடுமுறை தொடங்கிவிட்டதா?Aathira wrote:கலை wrote:என் கல்லூரிக்காலத்திலேயே என் கனவுக்கவிக்காதலனாய்த் திகழ்ந்தவர் வைரமுத்து. அன்னாரது கவிதையின் திறனாய்வு என்னைக் களிப்படையச் செய்தது,
பகிர்ந்தமைக்கு நன்றி ஆதிரா,,,!
மிக்க நன்றி கலை.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|