Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காசநோய் பற்றி முழுவிளக்கம்
+3
சிவா
மனோஜ்
சபீர்
7 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
காசநோய் பற்றி முழுவிளக்கம்
First topic message reminder :
காச நோய் (ரியூபகியூலோசிஸ்) அறிமுகம்
உயிர்ப்பான நிலையிலுள்ள காசநோயானது தீவிர கிருமித்தொற்று நிலையாகும். இது பொதுவாக நுரையீரல்களைப் பாதிக்கின்றது. உயிர்ப்பான காசநோயானது எவரிலும் ஏற்படலாம் ஆயின் முன்னரே உடலாரோக்கியம் குன்றிய நிலையில் அல்லது நிர்ப்பீடனத்தொகுதி பலவீனமாக காணப்படும் போது ஏற்படும் சந்தர்ப்பங்கள் உயர்வாகும். சிகிச்சை மூலம் அநேகர் குணமடைகின்றனர். சிகிச்சையற்ற போது காச நோயானது மோசமடைந்து செல்வதுடன் மரணமும் சம்பவிக்கலாம். இதற்கு நீண்டகால சிகிச்சை (பொதுவாக ஆறு மாதங்கள்) அவசியமாகும். மற்றும் பூரண குணமடைவதற்கு சரியாக சிகிச்சையினை பெற்றுக் கொள்ளுதல் அவசியமாகும். ஏனைய வீட்டு அங்கத்தவர்கள் மற்றும் நெருங்கிய தொடர்பை உடையவர்களில் காசநோய்ப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவது அவசியமாகும், விசேடமாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களில்.
காச நோய் என்றால் என்ன?
காச நோய் என்பது ஒரு பக்றீரியா கிருமித்தொற்று ஆகும். இது Mycobacterium tuberculosis எனும் பக்றீரியாவினால் ஏற்படுத்தப்படுகிறது. இது பொதுவாக நுரையீரலைப் பாதிக்கின்றது, ஆயின் உடலின் எப்பகுதியையும் இது பாதிக்கக் கூடியது.
காச நோய் (ரியூபகியூலோசிஸ்) அறிமுகம்
உயிர்ப்பான நிலையிலுள்ள காசநோயானது தீவிர கிருமித்தொற்று நிலையாகும். இது பொதுவாக நுரையீரல்களைப் பாதிக்கின்றது. உயிர்ப்பான காசநோயானது எவரிலும் ஏற்படலாம் ஆயின் முன்னரே உடலாரோக்கியம் குன்றிய நிலையில் அல்லது நிர்ப்பீடனத்தொகுதி பலவீனமாக காணப்படும் போது ஏற்படும் சந்தர்ப்பங்கள் உயர்வாகும். சிகிச்சை மூலம் அநேகர் குணமடைகின்றனர். சிகிச்சையற்ற போது காச நோயானது மோசமடைந்து செல்வதுடன் மரணமும் சம்பவிக்கலாம். இதற்கு நீண்டகால சிகிச்சை (பொதுவாக ஆறு மாதங்கள்) அவசியமாகும். மற்றும் பூரண குணமடைவதற்கு சரியாக சிகிச்சையினை பெற்றுக் கொள்ளுதல் அவசியமாகும். ஏனைய வீட்டு அங்கத்தவர்கள் மற்றும் நெருங்கிய தொடர்பை உடையவர்களில் காசநோய்ப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவது அவசியமாகும், விசேடமாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களில்.
காச நோய் என்றால் என்ன?
காச நோய் என்பது ஒரு பக்றீரியா கிருமித்தொற்று ஆகும். இது Mycobacterium tuberculosis எனும் பக்றீரியாவினால் ஏற்படுத்தப்படுகிறது. இது பொதுவாக நுரையீரலைப் பாதிக்கின்றது, ஆயின் உடலின் எப்பகுதியையும் இது பாதிக்கக் கூடியது.
Last edited by சபீர் on Tue Apr 20, 2010 7:18 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: காசநோய் பற்றி முழுவிளக்கம்
சளி மாதிரிக்குரிய மற்றைய சோதனையாக ஆய்வுகூட வளர்ப்பு பரிசோதனை மேற்கொள்ளப்படும். இங்கு காசநோய் பக்றீரியாவானது ஆய்வுகூடத்தில் வளர்ப்பூடகத்தில் வளர்க்கப்படும். இதற்கு பல வாரங்கள் வரை செல்கிறது காரணம் காசநோய் பக்றீரியாவானது மிக மெதுவாகவே வளர்ச்சியடைகிறது. இப் பரிசோதனையினை மேற்கொள்வதற்கு இரு காரணங்கள் உள்ளன. ஒன்று காசநோய் பக்றீரியாவினை கண்டறிதல். (சளிப்படல பரிசோதனையில் காணப்படாத போதாகும்) மற்றையது வளர்ப்பூடகப் பரிசோதனை மூலம் காசநோய் பக்றீரியாவானது நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்புடைய தன்மையினை கொண்டிள்ளதா என கண்டறியமுடியும்.
சளிப்பரிசோதனை மூலம் காசநோய் தொற்றினைக் உறுதி செய்வதற்கு பல வாரங்கள் செல்கிறது. எனவே உயிர்ப்பான காச நோயென சந்தேகிக்கப்படும் போது ( குறிப்பான அறிகுறிகள் மற்றும் எக்ஸ் கதிர்ப்படங்கள் மூலம்) பரிசோதனைப் பெறுபேறுகள் கிடைப்பதற்கு முன்னரே சிகிச்சையானது ஆரம்பிக்கப்படும். இதன் நோக்கம் நோய் மோசமடைந்து செல்வதைத் தவிர்ப்பதும் ஏனையோருக்கு பரவுவதை தடுப்பதுமாகும்.
ஏனைய சோதனைகள்
இரத்தப்பரிசோதனை - குருதிக்கல எண்ணிக்கைப் பரிசோதனை, ஈ.எஸ்.ஆர் (ESR) செங்குழியங்களின் படிவுவீதப் பரிசோதனை.
சி ரி ஸ்கான் மற்றும் எம் ஆர் ஐ ஸ்கான் பரிசோதனைகள் உடல் உள்ளுறுப்புக்களை அவதானிக்கப் பயன்படுகின்றது. உ-ம் மூளையில் காசநோய்த்தொற்று மற்றும் மூளைய மென்சவ்வழற்சி.
சளிப்பரிசோதனை மூலம் காசநோய் தொற்றினைக் உறுதி செய்வதற்கு பல வாரங்கள் செல்கிறது. எனவே உயிர்ப்பான காச நோயென சந்தேகிக்கப்படும் போது ( குறிப்பான அறிகுறிகள் மற்றும் எக்ஸ் கதிர்ப்படங்கள் மூலம்) பரிசோதனைப் பெறுபேறுகள் கிடைப்பதற்கு முன்னரே சிகிச்சையானது ஆரம்பிக்கப்படும். இதன் நோக்கம் நோய் மோசமடைந்து செல்வதைத் தவிர்ப்பதும் ஏனையோருக்கு பரவுவதை தடுப்பதுமாகும்.
ஏனைய சோதனைகள்
இரத்தப்பரிசோதனை - குருதிக்கல எண்ணிக்கைப் பரிசோதனை, ஈ.எஸ்.ஆர் (ESR) செங்குழியங்களின் படிவுவீதப் பரிசோதனை.
சி ரி ஸ்கான் மற்றும் எம் ஆர் ஐ ஸ்கான் பரிசோதனைகள் உடல் உள்ளுறுப்புக்களை அவதானிக்கப் பயன்படுகின்றது. உ-ம் மூளையில் காசநோய்த்தொற்று மற்றும் மூளைய மென்சவ்வழற்சி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: காசநோய் பற்றி முழுவிளக்கம்
உடலின் ஏனைய பகுதிகளில் இருந்து மாதிரிகளைப் பெற்றுக் கொள்ளுதல் - நுரையீரல் தவிர்ந்த ஏனைய அங்கங்களில் காச நோய் ஏற்படும் போது இழையங்கள் மற்றும் திரவ மாதிரிகள் என்பன அவற்றிலிருந்து பெற்றுக் கொள்ளப்படும். பின்னர் இம்மாதிரிகள் சளிப் பரிசோதனையை ஒத்த விதமாக பரிசோதிக்கப்படும். உ-ம் சிறுநீர், நிணநீர்க் கணுக்கள் மாதிரி, போன்றன. மூளைய மென்சவ்வழற்சியென சந்தேகிக்கப்படின் மூளைய முண்ணான் பாய்பொருள் மாதிரி பெற்றுக் கொள்ளப்படும்.
காசநோய்க்குரிய சிகிச்சை
சாதாரண நுண்ணுயிர்கொல்லி மருந்து வகைகள் காசநோய் பக்றீரியாவினை அழிக்கமாட்டாதன. எனவே விசேட கூட்டான நுண்ணுயிர்கொல்லி மருந்துகளை சில மாதங்களுக்கு உட்கொள்ள வேண்டியது அவசியமாகும். பொதுவாக அநேக காசநோய்களுக்கு ஆறு மாதகால சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதலில் கூட்டான நான்கு நுண்ணுயிர் கொல்லிகள் இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும். அவையாவன ஐசோனயசிட், ரிபாம்பிசின், பைராசினமைட், எதாம்பியூடோல் என்பன. இதன் பின்னர் தொடர்ச்சியாக ஐசோன்யசிட் மற்றும் ரிபாம்பிசின் மேலும் நான்கு மாதங்களுக்கு வழங்கப்படும். காசநோயின் வகை மற்றும் உடலின் எப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கிணங்க சிகிச்சை முறை வேறுபடலாம்.
காசநோய்க்குரிய சிகிச்சை
சாதாரண நுண்ணுயிர்கொல்லி மருந்து வகைகள் காசநோய் பக்றீரியாவினை அழிக்கமாட்டாதன. எனவே விசேட கூட்டான நுண்ணுயிர்கொல்லி மருந்துகளை சில மாதங்களுக்கு உட்கொள்ள வேண்டியது அவசியமாகும். பொதுவாக அநேக காசநோய்களுக்கு ஆறு மாதகால சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதலில் கூட்டான நான்கு நுண்ணுயிர் கொல்லிகள் இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும். அவையாவன ஐசோனயசிட், ரிபாம்பிசின், பைராசினமைட், எதாம்பியூடோல் என்பன. இதன் பின்னர் தொடர்ச்சியாக ஐசோன்யசிட் மற்றும் ரிபாம்பிசின் மேலும் நான்கு மாதங்களுக்கு வழங்கப்படும். காசநோயின் வகை மற்றும் உடலின் எப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கிணங்க சிகிச்சை முறை வேறுபடலாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: காசநோய் பற்றி முழுவிளக்கம்
சிகிச்சை தோல்வியடைவது பொதுவாக காசநோய் மருந்துகளை சரியாகவும் ஒழுங்காகவும் உட்கொள்ளாமையினால் ஆகும். மருந்துகள் பற்றிய அறிவுரைகளை பின்பற்றுவது மிக முக்கியமான விடயமாகும். சில வாரங்களில் உடல் நலத்தில் முன்னேற்றம் உணரப்படினும் (அநேகரில் ஏற்படுகிறது) சிகிச்சை அட்டவணையை பூரணப்படுத்தும் வரை நிறுத்தக்கூடாது.
தொடர்ச்சியான வைத்திய பரிசோதனைக்கு சமூகமளித்தல் அவசியமாகும். இதன் மூலம் சிகிச்சைக்கு பதிலளித்தல் பற்றியும் மற்றும் மருந்துகளின் பக்க விளைவுகள் பற்றியும் சோதிக்கப்படும்.
சிகிச்சை அட்டவணைக்கிணங்க பூரணமாக காச நோய் மருந்துகளை உட்கொள்ள வேண்டியதன் அவசியம்.
காச நோய் பக்றீரியாவினை உடலிலிருந்து பூரணமாக அகற்றுவது ஏனைய சாதாரண பக்றீரியாக்களுடன் ஒப்பிடுகையில் மிகக் கடினமானதாகும். நீண்ட கால முழுமையான சிகிச்சை மூலமே பூரணமாக வெளியேற்ற முடியும். முழுமையான சிகிச்சை பெற்றுக் கொள்ளப்படாதவிடத்து பின்வரும் சிக்கல்கல் ஏற்படக்கூடும்.
நோயாளி தொடர்ச்சியாக ஏனையவர்களுக்கு கிருமித்தொற்றை பரப்பியவாறு காணப்படுவார்.
நோயாளி குணமடையமாட்டார். ஆரம்பத்தில் உடல் நலமடைவது போல் உணரப்படினும் சில காச நோய் பக்றீரியாக்கள் உடலில் தொடர்ச்சியாக காணப்படுகின்றன. இவை பின்னர் மீள உயிர்ப்பாக்கப்பட்டு நோயினை ஏற்படுத்தக் கூடியன.
ஆரம்ப கிருமித்தொற்றானது பகுதியாகவே சிகிச்சையளிக்கப்படும் போது நுண்ணுயிர் கொல்லிக்கு எதிரான காசநோய் பக்றீரியா பேதங்கள் உருவாக்கப்படலாம். இதன் பின்னர் காசநோயினை அழிப்பது மிகக் கடினமாகும்.
தொடர்ச்சியான வைத்திய பரிசோதனைக்கு சமூகமளித்தல் அவசியமாகும். இதன் மூலம் சிகிச்சைக்கு பதிலளித்தல் பற்றியும் மற்றும் மருந்துகளின் பக்க விளைவுகள் பற்றியும் சோதிக்கப்படும்.
சிகிச்சை அட்டவணைக்கிணங்க பூரணமாக காச நோய் மருந்துகளை உட்கொள்ள வேண்டியதன் அவசியம்.
காச நோய் பக்றீரியாவினை உடலிலிருந்து பூரணமாக அகற்றுவது ஏனைய சாதாரண பக்றீரியாக்களுடன் ஒப்பிடுகையில் மிகக் கடினமானதாகும். நீண்ட கால முழுமையான சிகிச்சை மூலமே பூரணமாக வெளியேற்ற முடியும். முழுமையான சிகிச்சை பெற்றுக் கொள்ளப்படாதவிடத்து பின்வரும் சிக்கல்கல் ஏற்படக்கூடும்.
நோயாளி தொடர்ச்சியாக ஏனையவர்களுக்கு கிருமித்தொற்றை பரப்பியவாறு காணப்படுவார்.
நோயாளி குணமடையமாட்டார். ஆரம்பத்தில் உடல் நலமடைவது போல் உணரப்படினும் சில காச நோய் பக்றீரியாக்கள் உடலில் தொடர்ச்சியாக காணப்படுகின்றன. இவை பின்னர் மீள உயிர்ப்பாக்கப்பட்டு நோயினை ஏற்படுத்தக் கூடியன.
ஆரம்ப கிருமித்தொற்றானது பகுதியாகவே சிகிச்சையளிக்கப்படும் போது நுண்ணுயிர் கொல்லிக்கு எதிரான காசநோய் பக்றீரியா பேதங்கள் உருவாக்கப்படலாம். இதன் பின்னர் காசநோயினை அழிப்பது மிகக் கடினமாகும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மனோஜ்- இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
Re: காசநோய் பற்றி முழுவிளக்கம்
காசநோய் சிகிச்சையிலே பக்கவிளைவுகள் காணப்படுகின்றனவா?
காசநோய் சிகிச்சைக்கென பயன்படுத்தப்படும் மருந்துகளின் பாதுகாப்பு பொதுவாக சிறப்பானது. சில சந்தர்ப்பங்களில் பக்கவிளைவுகள் ஏற்படலாம். இவ்வாறு ஏற்படின் உடனடியாக வைத்தியரை அணுகவேண்டும். அதன் மூலம் உங்கள்து சிகிச்சையினை மாற்றியமைக்கவோ அல்லது வேறு நுண்ணுயிர் கொல்லிகளை மாற்றவோ இயலும்.
சில முக்கிய பக்க விளைவுகள் வருமாறு,
ஈரல் தொடர்பான சிக்கல்கள்
இரத்தப் பரிசோதனைகள் மூலம் ஈரற்தொழிற்பாடு பரீட்சிக்கப்படும். காசநோய் மருந்துகளை உட்கொள்ளும் போது ஈரல் சோதனைகளில் இலேசான மாற்றங்கள் ஏற்படுவது பொதுவானதகும். ஏறத்தள 100ல் 1 ரில் மிக அசாதாரண ஈரல் சோதனை அல்லது ஈரல் தொடர்பான சிக்கல்கள் ஏற்படலாம். அவ்வாறு ஏற்படின் சிகிச்சையினை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகும். ஈரல் தொடர்பான சிக்கல்களுக்குரிய குணங்குறிகளாக : மஞ்சட் காமாலை (தோல் மற்றும் விழிவெண்படலம் மஞ்சள் நிறமாக தோன்றல்) காய்ச்சல், அருவருப்பு, வாந்தி, சொறி/கடி, பொதுவன உடல் அசௌகரியம் என்பன காணப்படுகின்றன. இவ்வாறன ஏதேனும் குணங்குறிகள் காணப்படின் மருந்துகளை நிறுத்திவிட்டு உடனடியாக வைத்தியரை அணுக வேண்டும்.
காசநோய் சிகிச்சைக்கென பயன்படுத்தப்படும் மருந்துகளின் பாதுகாப்பு பொதுவாக சிறப்பானது. சில சந்தர்ப்பங்களில் பக்கவிளைவுகள் ஏற்படலாம். இவ்வாறு ஏற்படின் உடனடியாக வைத்தியரை அணுகவேண்டும். அதன் மூலம் உங்கள்து சிகிச்சையினை மாற்றியமைக்கவோ அல்லது வேறு நுண்ணுயிர் கொல்லிகளை மாற்றவோ இயலும்.
சில முக்கிய பக்க விளைவுகள் வருமாறு,
ஈரல் தொடர்பான சிக்கல்கள்
இரத்தப் பரிசோதனைகள் மூலம் ஈரற்தொழிற்பாடு பரீட்சிக்கப்படும். காசநோய் மருந்துகளை உட்கொள்ளும் போது ஈரல் சோதனைகளில் இலேசான மாற்றங்கள் ஏற்படுவது பொதுவானதகும். ஏறத்தள 100ல் 1 ரில் மிக அசாதாரண ஈரல் சோதனை அல்லது ஈரல் தொடர்பான சிக்கல்கள் ஏற்படலாம். அவ்வாறு ஏற்படின் சிகிச்சையினை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகும். ஈரல் தொடர்பான சிக்கல்களுக்குரிய குணங்குறிகளாக : மஞ்சட் காமாலை (தோல் மற்றும் விழிவெண்படலம் மஞ்சள் நிறமாக தோன்றல்) காய்ச்சல், அருவருப்பு, வாந்தி, சொறி/கடி, பொதுவன உடல் அசௌகரியம் என்பன காணப்படுகின்றன. இவ்வாறன ஏதேனும் குணங்குறிகள் காணப்படின் மருந்துகளை நிறுத்திவிட்டு உடனடியாக வைத்தியரை அணுக வேண்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: காசநோய் பற்றி முழுவிளக்கம்
பார்வைப்புல மாற்றங்கள் (எதாம்பியூரோல் மருந்தினை உட்கொள்ளும் போது) ஆரம்ப அறிகுறிகளாக இலேசான பார்வைக் குறைவு அல்லது நிறக்குருடு என்பன ஏற்படுகின்றன.. பார்வைக் குறைபாடு உணரப்படின் எதாம்பியூரோல் மருந்தினை நிறுத்திவிட்டு உடனடியாக வைத்தியரை அணுக வேண்டும். எதாம்பியூரோலாந்து விரைவாக நிறுத்தப்படின் பார்வையானது பூரணமாக மீளத்திரும்புகிறது.
நரம்புப் பாதிப்புகள். இதன் காரணமாக புயங்கள் மற்றும் கால்களில் விறைப்பு மற்றும் உணர்ச்சி குன்றிய தன்மை என்பன ஏற்படுகிறது.. மேலதிகமான விற்றமின் பிரிடொக்சினை உட்கொள்வது இதற்கு உதவி புரிகின்றது. சில சந்தைப்பங்களில் ஐசோனயசிட்டுடன் இது சேர்த்து வழங்கப்படும்.
ரிபாப்பிசின் காரணமாக கண்ணீர் மற்றும் சிறுநீர் என்பன செம்மஞ்சள் நிறமாக மாற்றமடைகின்றன. இது சாதாரணமானதாகும்.
காச நோய் மருந்துகள் ஏனைய மருந்துகளை பாதிக்கக்கூடும்.
கருத்தடை மருந்துகள் உள்ளடங்கலாகவாகும். எனவே நோயாளி உள்ளெடுக்கும் மருந்துகள் பற்றி காச நோய் சிகிச்சை நிலையத்திலே தெரிவித்தல் அவசியமாகும். இதன் மூலம் அவற்றை மாற்றியமைக்க முடியும்.
நரம்புப் பாதிப்புகள். இதன் காரணமாக புயங்கள் மற்றும் கால்களில் விறைப்பு மற்றும் உணர்ச்சி குன்றிய தன்மை என்பன ஏற்படுகிறது.. மேலதிகமான விற்றமின் பிரிடொக்சினை உட்கொள்வது இதற்கு உதவி புரிகின்றது. சில சந்தைப்பங்களில் ஐசோனயசிட்டுடன் இது சேர்த்து வழங்கப்படும்.
ரிபாப்பிசின் காரணமாக கண்ணீர் மற்றும் சிறுநீர் என்பன செம்மஞ்சள் நிறமாக மாற்றமடைகின்றன. இது சாதாரணமானதாகும்.
காச நோய் மருந்துகள் ஏனைய மருந்துகளை பாதிக்கக்கூடும்.
கருத்தடை மருந்துகள் உள்ளடங்கலாகவாகும். எனவே நோயாளி உள்ளெடுக்கும் மருந்துகள் பற்றி காச நோய் சிகிச்சை நிலையத்திலே தெரிவித்தல் அவசியமாகும். இதன் மூலம் அவற்றை மாற்றியமைக்க முடியும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: காசநோய் பற்றி முழுவிளக்கம்
எவ்வாறு காசநோய்குரிய பரிசோதனைகள் மற்றும் சிகிச்சையினை பெற்றுக்கொள்ள முடியும்?
சோதனைகள் மற்றும் சிகிச்சையானது இலங்கையிலே அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.
வைத்தியர் காசநோயென சந்தேகிக்கும் பட்சத்தில் மேலதிக பரிசோதனைகட்கு உத்தரவிடுவார். இது பொதுவாக அப்பிரதேசத்துகுரிய காசநோய் சிகிச்சை நிலையத்திற்கு அல்லது மார்புநோய் சிகிச்சை நிலையத்திற்காகும்.
சிகிச்சையானது பொதுவாக காசநோய் சிகிச்சை நிலையத்தினால் வழங்கப்படும். இங்குள்ள சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் காசநோய் சிகிச்சையிலே அனுபவம் வாய்ந்தவர்களாக காணப்படுவர்.
அநேக காசநோய் நோயாள்களால் வீட்டிலேயே சிகிச்சையினை பெற்றுக்கொள்ள முடியும். மிகவும் உடல்நலம் குன்றியிருத்தல், அலலது சிகிச்சையானது சில காரணங்களால் சிக்கலடைந்திருத்தல், அல்லது மோசமான வீட்டுச் சூழல் போன்றவை காணப்பட்டாலன்றி வைத்தியசாலையில் அனுமதித்தல் அவசியமில்லை.
சிலர் கிரமமாக மருந்தினை உட்கொள்ள மறந்து விடுவர். அவ்வாறு காணப்படுமாயின் “அவதானிக்கப்படும் சிகிச்சை” எனும் விசேட வழிமுறை கையாளப்படும். இங்கு சுகாதார உத்தியோகத்தர் ஒவ்வொரு தடவை மருந்தினை உட்கொள்ளும் போதும் அவதானிப்பார்.
சோதனைகள் மற்றும் சிகிச்சையானது இலங்கையிலே அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.
வைத்தியர் காசநோயென சந்தேகிக்கும் பட்சத்தில் மேலதிக பரிசோதனைகட்கு உத்தரவிடுவார். இது பொதுவாக அப்பிரதேசத்துகுரிய காசநோய் சிகிச்சை நிலையத்திற்கு அல்லது மார்புநோய் சிகிச்சை நிலையத்திற்காகும்.
சிகிச்சையானது பொதுவாக காசநோய் சிகிச்சை நிலையத்தினால் வழங்கப்படும். இங்குள்ள சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் காசநோய் சிகிச்சையிலே அனுபவம் வாய்ந்தவர்களாக காணப்படுவர்.
அநேக காசநோய் நோயாள்களால் வீட்டிலேயே சிகிச்சையினை பெற்றுக்கொள்ள முடியும். மிகவும் உடல்நலம் குன்றியிருத்தல், அலலது சிகிச்சையானது சில காரணங்களால் சிக்கலடைந்திருத்தல், அல்லது மோசமான வீட்டுச் சூழல் போன்றவை காணப்பட்டாலன்றி வைத்தியசாலையில் அனுமதித்தல் அவசியமில்லை.
சிலர் கிரமமாக மருந்தினை உட்கொள்ள மறந்து விடுவர். அவ்வாறு காணப்படுமாயின் “அவதானிக்கப்படும் சிகிச்சை” எனும் விசேட வழிமுறை கையாளப்படும். இங்கு சுகாதார உத்தியோகத்தர் ஒவ்வொரு தடவை மருந்தினை உட்கொள்ளும் போதும் அவதானிப்பார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: காசநோய் பற்றி முழுவிளக்கம்
ஏனையோருக்கு பரவுவதை தடுப்பதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
உயிர்ப்பான காசநோய் காணப்படும் போது சரியான காசநோய் சிகிச்சையினை இரு வாரங்களுக்கு உட்கொள்ளும் வரை நோயாளியிலிருந்து ஏனையோருக்கு கிருமித்தொற்று ஏற்படலாம். அதன் பின்னர் சாதாரணமாக தொற்றமாட்டாது. (ஆயின் சிகிச்சையினை தொடர வேண்டியது கட்டாயமாகும்) முதல் இரு வாரங்களும் வீட்டில் தங்கியிருக்குமாறு பணிக்கப்படுவார். (வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்படுவார்) மற்றும் நிர்ப்பீடனம் குன்றியவர்களுடன் தொடர்பை தவிர்க்க வேண்டும். உ-ன் எச் ஐ வி நோயாளிகள், புற்று நோய்மருந்துச்சிகிச்சை உட்கொள்வோர், குழந்தைகள் போன்றோர்.
சில சந்தர்ப்பங்கலில் மேலதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகும். தீவிரதொற்றும் தன்மையுடைய காச நோய், அலலது நொண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்புடைய காச நோய் என்பன.
உயிர்ப்பான காசநோய் காணப்படும் போது சரியான காசநோய் சிகிச்சையினை இரு வாரங்களுக்கு உட்கொள்ளும் வரை நோயாளியிலிருந்து ஏனையோருக்கு கிருமித்தொற்று ஏற்படலாம். அதன் பின்னர் சாதாரணமாக தொற்றமாட்டாது. (ஆயின் சிகிச்சையினை தொடர வேண்டியது கட்டாயமாகும்) முதல் இரு வாரங்களும் வீட்டில் தங்கியிருக்குமாறு பணிக்கப்படுவார். (வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்படுவார்) மற்றும் நிர்ப்பீடனம் குன்றியவர்களுடன் தொடர்பை தவிர்க்க வேண்டும். உ-ன் எச் ஐ வி நோயாளிகள், புற்று நோய்மருந்துச்சிகிச்சை உட்கொள்வோர், குழந்தைகள் போன்றோர்.
சில சந்தர்ப்பங்கலில் மேலதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகும். தீவிரதொற்றும் தன்மையுடைய காச நோய், அலலது நொண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்புடைய காச நோய் என்பன.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: காசநோய் பற்றி முழுவிளக்கம்
ஏனைய குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் நண்பர்களில் சோதனைகள் மேற்கொள்வது அவசியமா?
வீட்டு அங்கத்தவர்கள் மற்றும் நோயாளியுடன் தொடர்ச்சையான நெருங்கிய தொடர்புடையவர்களில் காசநோய் சோதனையினை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்படும். இவர்களில் பொதுவான சோதனையாக நெஞ்சுப் பகுதிக்குரிய எக்ஸ் கதிர்ப் பரிசோதனை மற்றும் மாண்டோக்ஸ் எனும் சோதனை என்பன மேற்கொள்ளப்படும். இவற்றில் காசநோய்குரிய சான்றுகள் காணப்படின் மேலதிக சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
ஆயின் குழந்தைகள் மற்றும் இரண்டு வயதிலும் குறைந்த சிறுவர்களில் உயிர்ப்பான காசநோயுடையவருடனான தொடர்பிற்கு பின்னரான நடைமுறைகள் வேறுபட்டது. இளம் சிறுவர்களில் காசநோயினை நோய் நிர்ணயம் செய்தல் கடினமாதாகும். ஆரம்ப நிலைகளில் சோதனைகளில் மாற்றம் ஏதும் காணப்படாது. ஆயின் இளம் சிறுவர்களில் காசநோய் ஏற்படும் சந்தர்ப்பங்கள் உயர்வாகும். (அவர்களில் தீவிர கிருமித்தொற்று ஏற்படலாம்) எனவே அவர்களில் சில சிகிச்சைகள் (உ-ம் ஐசோனயசிட்) சிலவாரங்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் மேலதிக சோதனை முடிவுகள் மூலம் காசநோயினை உறுதிப்படுத்தும் வரை தீவிர கிருமித்தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
வீட்டு அங்கத்தவர்கள் மற்றும் நோயாளியுடன் தொடர்ச்சையான நெருங்கிய தொடர்புடையவர்களில் காசநோய் சோதனையினை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்படும். இவர்களில் பொதுவான சோதனையாக நெஞ்சுப் பகுதிக்குரிய எக்ஸ் கதிர்ப் பரிசோதனை மற்றும் மாண்டோக்ஸ் எனும் சோதனை என்பன மேற்கொள்ளப்படும். இவற்றில் காசநோய்குரிய சான்றுகள் காணப்படின் மேலதிக சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
ஆயின் குழந்தைகள் மற்றும் இரண்டு வயதிலும் குறைந்த சிறுவர்களில் உயிர்ப்பான காசநோயுடையவருடனான தொடர்பிற்கு பின்னரான நடைமுறைகள் வேறுபட்டது. இளம் சிறுவர்களில் காசநோயினை நோய் நிர்ணயம் செய்தல் கடினமாதாகும். ஆரம்ப நிலைகளில் சோதனைகளில் மாற்றம் ஏதும் காணப்படாது. ஆயின் இளம் சிறுவர்களில் காசநோய் ஏற்படும் சந்தர்ப்பங்கள் உயர்வாகும். (அவர்களில் தீவிர கிருமித்தொற்று ஏற்படலாம்) எனவே அவர்களில் சில சிகிச்சைகள் (உ-ம் ஐசோனயசிட்) சிலவாரங்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் மேலதிக சோதனை முடிவுகள் மூலம் காசநோயினை உறுதிப்படுத்தும் வரை தீவிர கிருமித்தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: காசநோய் பற்றி முழுவிளக்கம்
விசேட சந்தர்ப்பங்கள்
நுண்ணுயிர்க்கொல்லிக்கு எதிர்ப்புடைய காசநோய்
சிலரில் காணப்படும் காசநோய் பக்றீரியாவானது சில நுண்ணுயிக் கொல்லிகளுக்கு எதிப்புடையது. அதாவது இவை அந்நுண்ணுயிர் கொல்லியால் அழிக்கப்படுவதில்லை. எனவே காசநோயினை குணப்படுத்த பிரதியீடாக வேறு நுண்ணுயிர்க் கொல்லிகள் பயன்படுத்தப்பட வேண்டும். ஆகவே நுண்ணுயிர் கொல்லிக்கு எதிர்ப்புடைய தன்மை காசநோய் சிகிச்சையினை மேலும் கடினமாக்குகிறது. அத்துடன் ஏனையோருக்கு தொற்றும் போது ஆபத்தானது. ஒன்றுக்கு மேற்பட்ட நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்பினை கொண்டிருக்கும் போது சிகிச்சையின் கடினம் மேலும் அதிகரிக்கின்றது. (பலமருந்துகளுக்கு எதிர்ப்புடைய காசநோய்)
நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்புடைய காசநோய்குரிய காரணமாக முழுமையான காசநோய் சிகிச்சையினை பெற்றுக் கொள்ளாமை அல்லது ஏற்கனவே நோயினை ஏற்படுத்திய பக்றீரியா எதிர்ப்பினை கொண்டிருத்தல் என்பன அமைகின்றன.
நுண்ணுயிர் கொல்லிக்கு எதிர்ப்புடைய காசநோயாக காணப்படும் போது ஏனையவர்களுக்கு பரவுவதை தடுக்கும் பொருட்டு மேலதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியமாகும். இதை சுகாதார உத்தியோகத்தர் அறிவுறுத்துவார். விசேட வைத்தியரின் ஆலோசனைக்கிணங்க வேறுபட்ட நுண்ணுயிக் கொல்லிகள் அவசியப்படும்.
நுண்ணுயிர்க்கொல்லிக்கு எதிர்ப்புடைய காசநோய்
சிலரில் காணப்படும் காசநோய் பக்றீரியாவானது சில நுண்ணுயிக் கொல்லிகளுக்கு எதிப்புடையது. அதாவது இவை அந்நுண்ணுயிர் கொல்லியால் அழிக்கப்படுவதில்லை. எனவே காசநோயினை குணப்படுத்த பிரதியீடாக வேறு நுண்ணுயிர்க் கொல்லிகள் பயன்படுத்தப்பட வேண்டும். ஆகவே நுண்ணுயிர் கொல்லிக்கு எதிர்ப்புடைய தன்மை காசநோய் சிகிச்சையினை மேலும் கடினமாக்குகிறது. அத்துடன் ஏனையோருக்கு தொற்றும் போது ஆபத்தானது. ஒன்றுக்கு மேற்பட்ட நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்பினை கொண்டிருக்கும் போது சிகிச்சையின் கடினம் மேலும் அதிகரிக்கின்றது. (பலமருந்துகளுக்கு எதிர்ப்புடைய காசநோய்)
நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்புடைய காசநோய்குரிய காரணமாக முழுமையான காசநோய் சிகிச்சையினை பெற்றுக் கொள்ளாமை அல்லது ஏற்கனவே நோயினை ஏற்படுத்திய பக்றீரியா எதிர்ப்பினை கொண்டிருத்தல் என்பன அமைகின்றன.
நுண்ணுயிர் கொல்லிக்கு எதிர்ப்புடைய காசநோயாக காணப்படும் போது ஏனையவர்களுக்கு பரவுவதை தடுக்கும் பொருட்டு மேலதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியமாகும். இதை சுகாதார உத்தியோகத்தர் அறிவுறுத்துவார். விசேட வைத்தியரின் ஆலோசனைக்கிணங்க வேறுபட்ட நுண்ணுயிக் கொல்லிகள் அவசியப்படும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Page 2 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம்
» என்பு நோய் பற்றிய முழுவிளக்கம்
» இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்
» காசநோய்
» காசநோய் Tuberculosis
» என்பு நோய் பற்றிய முழுவிளக்கம்
» இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்
» காசநோய்
» காசநோய் Tuberculosis
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|