ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காசநோய் பற்றி முழுவிளக்கம்

+3
சிவா
மனோஜ்
சபீர்
7 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

காசநோய் பற்றி முழுவிளக்கம் Empty காசநோய் பற்றி முழுவிளக்கம்

Post by சபீர் Tue Apr 20, 2010 7:10 pm

காச நோய் (ரியூபகியூலோசிஸ்) அறிமுகம்

உயிர்ப்பான நிலையிலுள்ள காசநோயானது தீவிர கிருமித்தொற்று நிலையாகும். இது பொதுவாக நுரையீரல்களைப் பாதிக்கின்றது. உயிர்ப்பான காசநோயானது எவரிலும் ஏற்படலாம் ஆயின் முன்னரே உடலாரோக்கியம் குன்றிய நிலையில் அல்லது நிர்ப்பீடனத்தொகுதி பலவீனமாக காணப்படும் போது ஏற்படும் சந்தர்ப்பங்கள் உயர்வாகும். சிகிச்சை மூலம் அநேகர் குணமடைகின்றனர். சிகிச்சையற்ற போது காச நோயானது மோசமடைந்து செல்வதுடன் மரணமும் சம்பவிக்கலாம். இதற்கு நீண்டகால சிகிச்சை (பொதுவாக ஆறு மாதங்கள்) அவசியமாகும். மற்றும் பூரண குணமடைவதற்கு சரியாக சிகிச்சையினை பெற்றுக் கொள்ளுதல் அவசியமாகும். ஏனைய வீட்டு அங்கத்தவர்கள் மற்றும் நெருங்கிய தொடர்பை உடையவர்களில் காசநோய்ப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவது அவசியமாகும், விசேடமாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களில்.

காச நோய் என்றால் என்ன?

காச நோய் என்பது ஒரு பக்றீரியா கிருமித்தொற்று ஆகும். இது Mycobacterium tuberculosis எனும் பக்றீரியாவினால் ஏற்படுத்தப்படுகிறது. இது பொதுவாக நுரையீரலைப் பாதிக்கின்றது, ஆயின் உடலின் எப்பகுதியையும் இது பாதிக்கக் கூடியது.


Last edited by சபீர் on Tue Apr 20, 2010 7:18 pm; edited 1 time in total




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

காசநோய் பற்றி முழுவிளக்கம் Empty Re: காசநோய் பற்றி முழுவிளக்கம்

Post by சபீர் Tue Apr 20, 2010 7:10 pm

காச நோய் எவ்வாறு ஏற்படுகிற்து?
அநேக நோயாளிகளில் முதலில் நுரையீரலை பாதிக்கின்றது. உயிர்ப்பான காசநோய் உடையவர்களால் இருமும் போது அல்லது தும்மும் போது காசநோய் பக்றீரியாவானது வளியினுள் விடப்படுகிறது. இவ் பக்றீரியாவானது மிகச் சிறிய நீர்த்துளிகளாக வளியிலே காவப்படுகிறது. நீங்கள் சிறிதளவு பக்றீரியாவினை உட்சுவாசிக்கும் போது அவை உங்களது நுரையீரலில் பெருக்கத்துக்கு உட்படுகின்றன. அங்கு பின்னர் மூன்று வழிகளில் நோயானது செல்லமுடியும்.
காசநோயின் போக்கு

மூன்று வழிகளில் நோயானது செல்லமுடியும்.

குணங்குறிகளற்ற இலேசான கிருமித் தொற்று – அநேகரில் ஏற்படுகிறது.
அநேக சிறந்த உடல்ஆரோக்கியத்துடன் காணப்படுபவர்களால் காசநோய் பக்றீரியாவானது உட்சுவாசிக்கப்படும் போது உயிர்ப்பான காசநோய் ஏற்படுத்தப்படுவதில்லை. உட்சுவாசிக்கப்படும் பக்றீரியாவானது நுரையீரலில் பெருக்கமடைய ஆரம்பிக்கிறது. இது நிர்ப்பீடனத் தொகுதியை செயற்படத் தூண்டுகின்றது. காசநோய் பக்ரீரியாக்கள் நிர்ப்பீடனத் தொகுதியினால் (வெண் குழியங்கள்) அழிக்கப்படுகின்றன அல்லது உயிர்ப்பற்றதாக்கப்படுகின்றன். இவர்களில் சில காலங்களுக்கு இலேசான குணங்குறிகள் காணப்படலாம் அல்லது குணங்குறிகள் ஏற்படாது நோயானது நிறுத்தப்பட்டிருக்கலாம்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

காசநோய் பற்றி முழுவிளக்கம் Empty Re: காசநோய் பற்றி முழுவிளக்கம்

Post by சபீர் Tue Apr 20, 2010 7:11 pm

நீங்கள் பொதுவாக இவ்வாறான இலேசான கிருமித்தொற்று ஏற்பட்டமையை அறிந்திருக்கமாட்டீர்கள். நெஞ்சுப்பகுதிக்குரிய எக்ஸ் கதிர்ப் பரிசோதனையிலே சிறிய தழும்புகள் அவதானிக்கப்படலாம். இது பக்ரீரியாவிற்கும் நிர்ப்பீடனத் தொகுதிக்குமிடையில் நடைபெற்ற தாக்கத்துகுரிய சான்றாகும்.

இவ்வாறான கிருமித் தொற்று மிகப் பொதுவானது. எனவே அனேக காசநோய் பக்றீரியாவை உட்சுவாசிப்பவர்களில் குணங்குறிகள் ஏற்படுவதில்லை மற்றும் கிருமித் தொற்றானது நிர்ப்பீடனத் தொகுதியினால் நிறுத்தப்படுகிறது.

கிருமித் தொற்றானது உயிர்ப்பான காசநோயாக மோசமடைந்து செல்லல் – சிலரில் ஏற்படுகிறது.
குணங்குறிகளுடன் கூடிய உயிர்ப்பான காசநோயானது காசநோய் பறீரியாவை உட்சுவாசிக்கும் சிலரில் ஏற்படுகிறது. இவர்களில் நிர்ப்பீடனத்தொகுதியானது பக்றீரியாவுடன் தாக்கமடைந்து வெல்ல முடியாமையினால் இதனை நிறுத்த முடிவதில்லை. காசநோய் பக்றீரியாவானது மேலும் பெருக்கமடைந்து நுரையீரலின் ஏனைய பகுதிகளுக்கும் உடலின் ஏனைய பகுதிகளுக்கும் பரவலடைகிறது. உயிர்ப்பான காசநோயின் குணங்குறிகள் பக்றீரியா உட்சுவாசிக்கப்பட்டு 6-8 வாரங்களின் பின்னர் தோன்றுகின்றன.

காச நோய் கிருமித்தொற்றானது உயிர்ப்பான நோயாக எவரிலும் ஏற்படலாம். ஆயின் முன்னரே உடலாரோக்கியம் குன்றிய நிலையில் இருப்பவர்களில் ஏற்படும் சந்தர்ப்பங்கள் உயர்வாகும். உ-ம் போசணைக் குறைபாடுடன் காணப்படும் சிறுவர்கள் போன்றார். புதிதாய் பிறந்த குழந்தைகளிலும் உயிர்ப்பான காச நோய் ஏற்படும் ஆபத்து உயர்வாகும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

காசநோய் பற்றி முழுவிளக்கம் Empty Re: காசநோய் பற்றி முழுவிளக்கம்

Post by சபீர் Tue Apr 20, 2010 7:11 pm

காசநோயின் போக்கு

மீள் உயிர்ப்பாக்கப்பட்ட (இரண்டாம் நிலையான) கிருமித்தொற்றுக்கள் காரணமான உயிர்ப்பான காசநோய்.
சிலரில் இலேசான காசநோய் கிருமித்தொற்று ஏற்பட்டு நிறுத்தப்பட்டு மாதங்கள் அல்லது வருடங்களின் பின் உயிர்ப்பான காசநோய் ஏற்படுகிறது. ஆரம்பத்தில் நிர்ப்பீனத்தொகுதியானது பக்றீரியா பெருக்கமடைவதைத் தடுக்கின்றது. ஆயின் பக்றீரியாக்கள் முழுமையாக அழிக்கப்படுவதில்லை. சில பக்றீரியாக்கள் இலேசான கிருமித்தொற்று ஏற்பட்ட காயங்களினுள் மறைக்கப்பட்டு காணப்படலாம். இவை பெருக்கமடைவது நிணநீர்த் தொகுதியினால் தடுக்கப்படுகிறது. இவை எப்பாதிப்பினையும் ஏற்படுத்தாது உறங்கு நிலையில் பல வருடங்கள் காணப்படக் கூடியன. உறங்கு நிலையிலுள்ள பக்றீரியாவானது உடலின் நிர்ப்பீடனத் தொகுதியானது சில காரணங்களால் பலவீனமடையும் போது பெருக்கமடைய ஆரம்பித்து உயிர்ப்பான காசநோயினை ஏற்படுத்துகிறது.
பலவீனமான நிர்ப்பீடனத்தொகுதி மற்றும் மீள் உயிர்ப்பாக்கப்பட்ட காசநோயானது பின்வரும் சந்தர்ப்பங்களில் ஏற்படுவது உயர்வாகும்:
வயது முதிர்ந்த அல்லது உடற் பலவீனமானோர்
போசனைக் குறைபாடுடையோர்
நீரிழிவுநோய் உடையவர்கள்
ஸ்டீரொயிட் அல்லது நிர்ப்பீடனத்துக்கெதிரான மருந்துகளை பயன்படுத்துவோர்.
சிறுநீரக செயலிழப்புடன் காணப்படுபவர்கள்
மதுபானத்திற்கு அடிமையானோர்
எயிட்ஸ் நோய் உடையவர்கள்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

காசநோய் பற்றி முழுவிளக்கம் Empty Re: காசநோய் பற்றி முழுவிளக்கம்

Post by சபீர் Tue Apr 20, 2010 7:11 pm

காசநோயின் தொற்றும் தன்மை எவ்வாறானது?
நுரையீரலில் உயிர்ப்பான காசநோயுடைய ஒருவர் இருமுதல் மற்றும் தும்முதலின் போது வெளிவிடப்படும் காசநோய் பக்றீரியாவானது ஏனையவர்களை தொற்றுக்குள்ளாக்கக் கூடியது.
காச நோயினை பெற்றுக் கொள்வதற்கு பொதுவாக உயிர்ப்பான நுரையீரல் காசநோயுடைய ஒருவருடன் நெருக்கமான மற்றும் நீண்டகால தொடர்பு அவசியமாகும். எனவே ஒரே வீட்டில் அல்லது குடும்பத்தில் உள்ளவர்களுக்கே கிருமித் தொற்றுக்குட்படும் வாய்ப்புக்கள் அதிகமாகும். எனவே ஒருவரில் காசநோயானது நோய் நிர்ணயம் செய்யப்படும் போது ஏனைய நெருங்கிய தொடர்புடையவர்களில் காச நோய் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

காசநோய் பற்றி முழுவிளக்கம் Empty Re: காசநோய் பற்றி முழுவிளக்கம்

Post by சபீர் Tue Apr 20, 2010 7:11 pm

காசநோயின் பரம்பல் எத்தகையது?

காசநோயானது வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் பொதுவானது. ஏனைய கிருமித் தொற்றுக்களுடன் ஒப்பிடுகையில் காசநோய் காரணமாக அதிகளவு இறப்பு ஏற்படுகிறது (ஆண்டு தோறும் மூன்று மில்லியன் அளவில்). உலகளாவிய ரீதியில் காசநோய்க்குரிய பிரதான காரணியாக காணப்படுவது: போசணைக் குறைபாடு, மோசமான குடியிருப்புக்கள், பொதுவான உடலாரோக்கியம் குன்றிய தன்மை, போதுமான வைத்திய வசதியின்மை மற்றும் எயிட்ஸ் நோய் என்பன.

காசநோய் யாரில் ஏற்படுகிறது?

காச நோய் எவரிலும் ஏற்படலாம். பின்வரும் சந்தர்ப்பங்களில் காசநோய் ஏற்படும் ஆபத்து உயர்வாகும்.
நுரையீரலில் உயிர்ப்பான காசநோயுடையவர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருத்தல். ( ஒரே வீட்டில் வசித்தல், அல்லது அந்நபருடன் அதிகளவு நேரத்தினை செலவிடல்)
சுற்றாடல் மற்றும் ஏழ்மைநிலை. வீடற்றோர், சிறைக் கைதிகள் மற்றும் பல பிற்போக்கான பிரதேசங்களில் வாழ்வோரில் காச நோய் அதிகளவில் காணப்படுகிரது.
நிர்ப்பீடனத்தொகுதி பலவீனமாக இருத்தல் உ-ம் எச் ஐ வி கிருமித்தொற்று, நிர்ப்பீடனத்தைக் குறைக்கின்ற மருந்து வகைகள், மதுபான பாவனை, போதை மருந்துகளின் பாவனை போன்றன.
போசணைக் குறைபாடு : போசனைக் குறைபாடு மற்றும் விற்றமின் டி குறைபாடு காச நோயுடன் தொடர்புபட்டுள்ளது
: குழந்தைகள், சிறுவர்கள், மற்றும் வயது முதிர்ந்தோரில் காசநோய் ஏற்படும் ஆபத்து உயர்வாகும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

காசநோய் பற்றி முழுவிளக்கம் Empty Re: காசநோய் பற்றி முழுவிளக்கம்

Post by சபீர் Tue Apr 20, 2010 7:12 pm

உயிர்ப்பான காசநோயின் குணங்குறிகள் எவை?

மூன்று வாரங்கட்கு மேற்பட்ட இருமல் அநேகமாக ஆரம்ப அறிகுறியாகும். இது வறண்ட அரிப்பூட்டுகின்ற இருமலாக ஆரம்பிக்க முடியும். இது மாதங்கள் வரையில் நீடித்து மோசமான நிலையினை அடைகிறது. காலஞ் செல்லச் செல்ல சளியுடன் கூடிய இருமல் உருவாகின்றது. இதனால் இருமும் போது அதிகளவு சளி வெளியேற்றப்படும். அது இரதக்கசிவுடன் காணப்படலாம்.

ஏனைய பொதுவான குணங்குறிகள்
காய்ச்சல், அதிகரித்த வியர்வை, உடல் அசதி, உடல் நிறை குறைவடைதல் , நெஞ்சு வலி, மற்றும் பசியின்மை என்பன. கிருமித் தொற்று தீவிரமடைந்து நுரையீரல் பாதிக்கப்படும் போது நோயாளிக்கு சுவாச சிரமம் ஏற்படுகிறது. சிகிச்சை வழங்கப்படாத விடத்து பல சிக்கல்கள் உருவாகின்றன. நுரையீரலிற்கும் நெஞ்சறை சுவருக்குமிடையிலுள்ள புடை மென்சவ்வுகளுக் கிடையில் திரவம் சேகரிக்கப்படுதல். இதனால் சுவாச சிரமம் மேலும் மோசமடைகிறது. காச நோயானது நுரையீரலிலுள்ள குருதிக் கலன்களை பாதிக்கையில் இருமும்போது குருதி வெளியேற்றப்படுகிறது.

காசநோய் கிருமித்தொற்றானது சில வேளைகளில் குருதிச் சுற்றோட்டத்தொகுதி மற்றும் நிர்ப்பீடனத்தொகுதிக்குள் பரவும் போது உடலின் ஏனைய பகுதிகளிலும் கிருமித் தொற்று ஏற்படுகிறது. உடலின் எப்பகுதி பாதிக்கப்படுகிறது என்பதற்கிணங்க பல்வேறு குணங்குறிகள் உருவாகின்றன.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

காசநோய் பற்றி முழுவிளக்கம் Empty Re: காசநோய் பற்றி முழுவிளக்கம்

Post by சபீர் Tue Apr 20, 2010 7:12 pm

நிணநீர்க் கணுக்கள் வீக்கமடைதல் – உடலின் எப் பகுதியிலுமுள்ள நிணநீர்க் கணுக்கள் வீக்கமடையலாம். கழுத்து, தோள் மூட்டின் உட்பகுதி மற்றும் இடுப்பு தொடை சந்திப்புலுள்ள நிணநீர் கணுக்களை தொட்டுணர முடியும்.
உணவுக் கால்வாய் மற்றும் வயிறு – காசநோயானது வயிற்று வலி அல்லது வீக்கத்தினை ஏற்படுத்துகிறது. அல்லது போதிய சமிபாடின்றி வயிற்றொட்டம் மற்றும் உடல் நிறை குறைவடைதல் போன்றவை ஏற்படுகிறது.
என்பு மற்றும் மூட்டுகள் - காச நோயானது என்பு அல்லது மூட்டுக்களை பாதிப்பதன் காரணமாக என்பு நோ (உ-ம் முள்ளந்தண்டு) மற்றும் மூட்டு வலி அல்லது வீக்கம் ஏற்படுகிறது.
இதயம் – காச நோய் சில வேளைகளில் இதயத்தினை சூழ அழற்சியினை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக நெஞ்சு வலி அல்லது சுவாச சிரமம் என்பன ஏற்படுகின்றன.
சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப்பை - இவை கிருமித் தொற்றுக்குட்படும் போது இடுப்பின் பின் பகுதியில் இரு கரைகளிலும் வலி, சிறுநீர் கழிக்கும்போது வலி என்பன ஏற்படுகின்றன.
மூளை – காசநோய் காரணமாக மூளைய மென்சவ்வழற்சி ஏற்படலாம். இதனால் தலைவலி, அருவருப்பு, வாந்தி, வலிப்பு, நித்திரை ஏற்படுவது போன்ற உணர்வு மற்றும் நடத்தை மாற்றங்கள் என்பன.
தோல் – காசநோய் காரணமாக தோலில் தழும்புகள் ”எரித்தீமா நோடோசம்” எனும் சிவந்த முடிச்சுப் போன்றவை கால்களில் ஏற்படும் தழும்புகளாகும். லூபஸ்வல்காரிஸ் எனும் கட்டிகள் அல்லது புண்கள்.
உடலின் ஏனைய பகுதிகளுகளுக்குப் பரவலடைதல். இது மிலியரி காச நோய் எனப்படும். இது நுரையீரல், என்புகள், ஈரல் மற்றும் கண்கள் தோல் என்பவற்றைப் பாதிக்கிறது.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

காசநோய் பற்றி முழுவிளக்கம் Empty Re: காசநோய் பற்றி முழுவிளக்கம்

Post by சபீர் Tue Apr 20, 2010 7:12 pm

காசநோயை நோய் நிர்ணயம் செய்தல்

சில வேளைகளில் காசநோயினை நேரடியாகவே நோய் நிர்ணயம் செய்ய முடியும். ஆயின் சில சந்தர்ப்பங்களில் இது கடினமானது. பொதுவாக குணங்குறிகளை அவதானிப்பதன் மூலமும் பரிசோதனை பெறுபேறுகளுக்கிணங்கவும் நோய் நிர்ணயம் செய்யப்படும். நெஞ்சுப் பகுதிக்குரிய எக்ஸ் கதிர்ப்பரிசோதனை மற்றும் மான்ரொக்ஸ் எனும் பரிசோதனை, சளிப் பரிசோதனை என்பவற்றுடன் சோதனைகள் ஆரம்பிக்கப்படும்.

நெஞ்சுப் பகுதிக்குரிய எக்ஸ் கதிர்ப் பரிசோதனை.

எகஸ் கதிர்ப் பரிசோதனையிலே உயிர்ப்பான நுரையீரல் காசநோயினை அவதானிக்கமுடியும். இது குணமடைந்த அல்லது உயிர்ப்பற்ற காசநோயினையும் காண்பிக்கக் கூடியது.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

காசநோய் பற்றி முழுவிளக்கம் Empty Re: காசநோய் பற்றி முழுவிளக்கம்

Post by சபீர் Tue Apr 20, 2010 7:13 pm

மான்டோக்ஸ் சோதனை அல்லது ரியூபகியீலின் சோதனை

இச்சோதனை காசநோய் பக்றீரியாவுடன் எப்போதாவது தொடுகைக்கு உட்பட்டமையை காட்டுகின்றது. ஆயின் இது தற்போதைய உயிர்ப்பான காசநோயினை உறுதிப்படுத்த மாட்டாது. ரியூபகியூலின் என்பது காசநோய் பக்றீரியாவிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் பதார்த்தமாகும். இது தோலினுள் ஊசி மூலமாக செலுத்தப்படும். இப்பகுதி சில நாட்களின் பின் பரீட்சிக்கப்படும்.
தாக்கம் ஏற்படும்போது தோலில் செந்நிற மாற்றம் அவதானிக்கப்படும். அதாவது தற்போதைய உயிர்ப்பான காச நோய்த் தொற்றினையோ அல்லது முன்னைய கிருமித்தொற்றினையோ அல்லது பீ சீ ஜீ தடுப்பூசி வழங்கப்பட்டமையையோ குறிக்கின்றது. இத்தாக்கம் ஏற்படாதவிடத்து காசநோயினை விலக்க முடியும். ஆயின் சிலரில் தவறாக தாக்கம் ஏற்படாதிருக்கலாம். உ-ம் மிகத் தீவிரமான காசநோய் காணப்படும் போது, எயிட்ஸ் நோய் உள்ள போது, நிர்ப்பீடனத்தொகுதி பலவீனமானதாக காணப்படும் போது, அல்லது இளம் சிறுவர்களில் கிருமித்தொற்றின் ஆரம்ப நிலைகளில் ஆகும்.
காசநோயை நோய் நிர்ணயம்

சளிப் பரிசோதனைகள்
நெஞ்சுப்பகுதிக்குரிய எக்ஸ் கதிர்ப் பரிசோதனை அல்லது மாண்டோக்ஸ் சோதனை பெறுபேறுகள் காசநோய்க்குரியனவாக இருக்கும் போது நுரையீரலில் பக்றீரியாவினை அவதானிப்பதற்குரிய சோதனைகள் மேற்கொள்ளப்படும். இதன் பொருட்டு சளி மாதிரியானது ஆய்வுகூடத்திற்கு அனுப்பப்படும்.
முதலில் சளிப்படலமாந்து விசேட சாயமூட்டப்பட்டு நுணுக்குக்காட்டியின் கீழ் அவதானிக்கப்பட்டு காசநோய் பக்றீரியா அவதானிக்கப்படும். இதன் பெறுபேறுகள் விரைவாக சில நாட்களிலேயே பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

காசநோய் பற்றி முழுவிளக்கம் Empty Re: காசநோய் பற்றி முழுவிளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum