ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள்.

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள். - Page 2 Empty இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள்.

Post by அப்புகுட்டி Tue Apr 20, 2010 3:52 pm

First topic message reminder :

இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள். - Page 2 Hitlerchildrendm_708x800

இரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே. அவர்தான் ஹிட்லர். முதல் உலகப்போரின்போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். அவர் பெயரைக் கேட்டாலே உலகம் நடுங்கியது. இரண்டாம் உலகப்போர் மூள்வதற்கும், அதன் மூலம் 5 கோடி பேருக்கு மேல் சாவதற்கு காரணமாக இருந்த ஹிட்லரின் வாழ்க்கை, பல திருப்பங்களும், திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்தது.

ஹிட்லர்

ஜேம்ஸ்பாண்ட் சினிமா படங்களைவிட விறு விறுப்பானது. வட ஆஸ்திரியாவில் உள்ள பிரானவ் என்ற ஊரில் 1889-ம் ஆண்டு ஏப்ரல் 20-ந்தேதி பிறந்தவர் ஹிட்லர். (நேருவை விட 7 மாதம் மூத்தவர்) இவருடைய தந்தையின் பெயர் அலாய்ஸ் ஷிக்கிள் கிரப்பர் ஹிட்லர். இவர் சுங்க இலாகா அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மூன்று மனைவிகள். மூன்றாவது மனைவியான கிளாராவின் நான்காவது மகன் ஹிட்லர். பிறந்தது முதலே ஹிட்லர் நோஞ்சானாக இருந்தார். அடிக்கடி காய்ச்சல் வரும். கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குப் பிறகுதான் உடம்பு தேறியது.

தந்தை சுங்க அதிகாரியாகப் பணியாற்றியதால், அடிக்கடி வெளி
யூர் சென்றுவிடுவார். அதனால், ஹிட்லருக்கு அம்மாவிடம் செல்லம் அதிகம். தாய் மீது மிகுந்த பக்தியும், பாசமும் கொண்டவர் ஹிட்லர். பள்ளியில் படிக்கும்போது, ஹிட்லர்தான் வகுப்பில் முதல் மாணவர். பிறகு அவருக்குப் படிப்பில் ஆர்வம் குறைந்தது. படம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது. விரைவிலேயே அழகாக படங்கள் வரையும் ஆற்றல் பெற்றார். மாணவப் பருவத்திலேயே நிறைய நாவல்கள் படித்தார். போர்கள் பற்றிய கதைகள் என்றால் நாட்டம் அதிகம்.

1903-ம் ஆண்டு, ஹிட்லரின் தந்தை இறந்து போனார். தந்தையின் கண்டிப்பு இல்லாமல் வளர்ந்த ஹிட்லர், நாளுக்கு நாள் முரடனாக மாறினார். மாணவர்களுடன் சண்டை போடுவதுடன், ஆசிரியர்களுடனும் மோதுவார். தனது 17-வது வயதில், பள்ளி இறுதித் தேர்வில் தேறினார். ஹிட்லர் அதற்காகக் கொடுத்த சான்றிதழை வாங்கிக்கொண்டு வருகிற வழியில் நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தினார். சர்டிபிகேட்டைக் கிழித்தெறிந்தார்.

இதை அறிந்த ஆசிரியர், அவரைக்கூப்பிட்டுக் கண்டித்தார். "இனி என் வாழ்நாளில் சிகரெட்டையும், மதுவையும் தொடமாட்டேன்" என்று சபதம் செய்தார், ஹிட்லர். அதன்படி, கடைசி மூச்சு உள்ளவரை சிகரெட்டையும், மதுவையும் அவர் தொடவில்லை. 1907-ல் ஒரு ஓவியப் பள்ளியில் சேர முயன்றார். இடம் கிடைக்கவில்லை. அந்த ஆண்டின் இறுதியில் ஹிட்லரின் தாயார் இறந்து போனார்.

அதன்பின் ஓவிய அட்டைகள் தயாரித்து, பிழைப்பு நடத்தினார் ஹிட்லர். இரவில் கூட மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்தில் ஓவியங்கள் வரைவார். சில மாடல் அழகிகளை வைத்து ஹிட்லர் வரைந்த படங்கள், நல்ல விலைக்குப் போயின. அதனால் சொந்தமாக ஒரு ஓவியக்கூடம் அமைத்தார். இந்தச் சமயத்தில், சிந்தியா என்ற பெண்ணை ஹிட்லர் காதலித்தார். காதல் தோல்வி அடையவே, ராணுவத்தில் சேர்ந்தார்.

1914-ல் தொடங்கி, 1918 வரை நடந்த முதல் உலகப் போரின் போது ஜெர்மனி ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். 1918-ல் போரில் ஜெர்மனி தோற்றது. இந்த தோல்விக்கு ஜனநாயகவாதிகளும், யூதர்களும்தான் காரணம் என்று ஹிட்லர் நினைத்தார்.

"உலகில் ஜெர்மானியரே உயர்ந்த இனத்தினர். உலகம் முழுவதையும் ஜெர்மனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரவேண்டும்" என்று விரும்பினார். ஹிட்லர் பேச்சு வன்மை மிக்கவர். தேசிய சோசலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் ஒரு உறுப்பினராகச் சேர்ந்து, தனது பேச்சு வன்மையால் விரைவிலேயே கட்சித்தலைவரானார்.

அரசாங்கத்தின் நிர்வாகத்திறமை இன்மையால்தான் நாட்டில் வறுமையும், வேலை இல்லாத்திண்டாட்டமும் பெருகிவிட்டதாகப் பிரசாரம் செய்தார். அரசாங்கத்துக்கு எதிராக மக்களைத் தூண்டி விட்டு, ஆட்சியைக் கைப்பற்ற முயன்றார். ஆனால், அந்த முயற்சியில் தோல்வி அடைந்தார். அரசாங்கம் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. ஹிட்லருக்கு முதலில் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

பிறகு அது ஓராண்டு தண்டனையாகக் குறைக்கப்பட்டது. சிறையில் இருந்தபோது, "எனது போராட்டம்" என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதினார் ஹிட்லர். இது உலகப் புகழ் பெற்ற நூல். 1928-ல் நடந்த தேர்தலில் ஹிட்லரின் கட்சி தோல்வி அடைந்தது. ஆனால் ஹிட்லர் சோர்ந்து போய்விடவில்லை.

தன்னுடைய கட்சியின் பெயரை "நாஜி கட்சி" என்று மாற்றி நாடு முழுவதும் தீவிரவாதத்தில் ஈடுபட்டார். அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் புரட்சிக்கு வழிவகுத்தார். அவருடைய இடைவிடாத உழைப்பும், பேச்சுவன்மையும், ராஜதந்திரமும் வெற்றி பெற்றன. ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து, பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாராளுமன்றக் கட்டிடம் கொளுத்தப்பட்டது. ஜனாதிபதியாக இருந்த ஹிண்டன்பர்க், மக்கள் போராட்டத்திற்கு அடிபணிந்தார். 1933-ஜனவரி 30-ந்தேதி ஹிட்லரை அழைத்துப் பிரதமராக நியமித்தார். அன்று முதல் ஹிட்லருக்கு ஏறுமுகம்தான். பிரதமராக இவர் பதவி ஏற்ற 1 வருடத்தில் ஜனாதிபதி ஹிண்டன்பர்க் மரணம் அடைந்தார். அவ்வளவுதான். ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றிக் கொண்டு, எதிர்ப்பாளர்களை எல்லாம் ஒழித்துவிட்டு, ஜெர்மனியின் சர்வாதிகாரி ஆனார் ஹிட்லர். பாராளுமன்றத்தைக் கலைத்தார்.

ராணுவ இலாகாவையும், ராணுவ தளபதி பதவியையும் தானே எடுத்துக்கொண்டார். அரசியல் கட்சிகளை எல்லாம் தடை செய்தார். எதிரிகளைச் சிறையில் தள்ளினார். "இனி ஜெர்மனியில் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை" என்று அறிவித்தார். யூதர்களை அடியோடு அழிக்கவேண்டும் என்று முடிவு செய்து, ஒரு பாவமும் அறியாத யூதர்களைக் கைது செய்து, சிறையில் பட்டினி போட்டுச்சித்திரவதை செய்து கொன்றார். பலர் இருட்டறைகளில் அடைக்கப்பட்டு, விஷப்புகையால் கொல்லப்பட்டனர். தினமும் சராசரியாக 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் விஷப்புகையிட்டுச் சாகடிக்கப்பட்டனர்.

ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சம். முதல் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்விக்குக் காரணமான பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளைப் பழிவாங்க வேண்டுமென்று திட்டமிட்டார். ராணுவத்தைப் பலப்படுத்தினார். ஜெர்மனியின் தரைப்படை, கப்பல் படை, விமானப்படை மூன்றும் உலகின் சிறந்த படைகளாக உருவெடுத்தன. உலகத்தையே தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர நேரம் நெருங்கிவிட்டதாக நினைத்தார் ஹிட்லர். 1939-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி, எந்தவிதப் போர்ப்பிரகடனமும் வெளியிடாமல் போலந்து நாட்டின் மீது படையெடுத்தார் ஹிட்லர்.

பிரிட்டனும், பிரான்சும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்ப்பிரகடனம் வெளியிட்ட போதிலும், போரில் நேரடியாக குதிக்கவில்லை. இதனால், இரண்டே வாரங்களில் போலந்தைக் கைப்பற்றிக் கொண்டது ஜெர்மன் ராணுவம். இந்தச் சமயத்தில் ஹிட்லருடன் நட்புக்கொண்டார் இத்தாலி சர்வாதிகாரி முசோலினி.

ஜப்பான் உள்பட வேறு சில நாடுகளும் ஜெர்மனியுடன் கைகோர்த்துக் கொண்டன. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் ஒரு ரகசிய ஒப்பந்தத்தைச் செய்து கொண்டன. ஆசியப் பகுதிகளை ஜப்பானும், ஆப்பிரிக்காவை இத்தாலியும், ஐரோப்பிய பகுதிகளை ஜெர்மனியும் தாக்கிக் கைப்பற்றவேண்டும் என்பதே அந்த ரகசிய ஒப்பந்தம்.


இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள். - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள். - Page 2 Empty Re: இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள்.

Post by அப்புகுட்டி Tue Apr 20, 2010 3:57 pm

முசோலினியின் கோர முடிவு

முசோலினி சிறை வைக்கப்பட்ட சம்பவம் ஹிட்லருக்கு அதிர்ச்சி அளித்தது. தன் ஆத்ம நண்பரை விடுவிக்க முடிவு செய்தார். பகிரங்கமாக படையெடுத்துச் சென்று முசோலினியை விடுவிப்பது முடியாத காரியம் என்பதை போர்க்கலையில் வல்லவரான ஹிட்லர் அறிந்திருந்தார். முசோலினியை மீட்க தனது ரகசியப்படையை அனுப்பினார். ரகசிய படையினர் முசோலினி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து முசோலினியையும் அவர் குடும்பத்தையும் மீட்டனர். வடக்கு இத்தாலியில் முசோலினிக்கு ஓரளவு ஆதரவு இருந்தது.

மனைவியுடனும் காதலி கிளாராவுடனும் அங்கு தப்பிச் சென்றார். அங்கு ஒரு பொம்மை அரசாங்கத்தை அமைத்துக் கொண்டார். இத்தாலியின் உண்மையான அதிபர் நானே என்று பிரகடனம் செய்தார். அப்போது இத்தாலி விடுதலை இயக்கம் என்ற புரட்சிக்கர இயக்கமே தோன்றியது. இத்தாலி முழுவதும் புரட்சிக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். முசோலினியை பிடித்து கொலை செய்வது என்று புரட்சிக்காரர்கள் சபதம் எடுத்துக் கொண்டனர். புரட்சிக்காரர்களால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்நது கொண்ட முசோலினி அண்டை நாடான சுவிட்சர்லாந்திற்கு தப்பி ஓட முடிவு செய்தார்.

2 ரானுவ லாரிகளில் தனது இரண்டு குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். ஆனால் வழியிலே அந்த லாரிகளை புரட்சிக்காரர்கள் மடக்கினார்கள். முசோலினியை கைது செய்தார்கள். இதைக்கண்ட முசோலினியின் காதலி கிளாரா அலறிக் கொண்டு லாரியிலிருந்து குதித்தாள். அவளையும் புரட்சிக்காரர்கள் பிடித்துக் கொண்டனர். முசோலினியின் மனைவி லாரிக்குள் பதுங்கிக் கொண்டதால் அவள் புரட்சிக்காரர்கள் கண்ணில்படவில்லை.

இது நடந்தது 1945 -ம் ஆண்டு ஏப்ரல் 27-ந்தேதி. அன்று டோங்கா நகரில் ஒரு அறையில் முசோலினியும், கிளாராவும் அடைத்து வைக்கப்பட்டனர். மறுநாள் அவர்களை புரட்சிக்காரர்கள் ஒரு காரில் அழைத்துச் சென்றனர். மலைப்பகுதியிலிருந்து கார் கீழே இறங்கியதும் முசோலினியையும் காதலி கிளாராவையும் கீழே இறங்கச் சொன்னார்கள்.

கீழே இறங்கியதும் அவர்களை நடுரோட்டில் நிற்க வைத்தார்கள். தங்களை சுடப்போகிறார்கள் என்பதை உணர்நது கொண்ட கிளாரா முசோலினியின் முன்னால் வந்து நின்று முதலில் என்னைச்சுடுங்கள் என்றாள். இயந்திர துப்பாக்கிகளால் புரட்சிக்காரர்கள் சரமாரியாகச் சுட்டார்கள். இருவர் உடல்களும் துளைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தன. முசோலினிக்கு உதவியாக இருந்த வேறு சிலரையும் சுட்டுக் கொன்றார்கள். முசோலினியின் உடலையும், மற்றவர்களின் உடல்களையும் புரட்சிக்காரர்கள் மிலான் நகருக்கு கொண்டு சென்றார்கள். அங்கு விளக்கு கம்பத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டார்கள். அன்று மாலை உடல்கள் இறக்கப்பட்டு அடையாளம் தெரியாத இடத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு புதைக்கப்பட்டன.


இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள். - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள். - Page 2 Empty Re: இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள்.

Post by அப்புகுட்டி Tue Apr 20, 2010 3:57 pm

காதலியுடன் தற்கொலை

1945 ஏப்ரல் 30-ந்தேதி இரவு 9 மணி. "இன்று மாலை 4 மணிக்கு இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியும், அவர் மனைவியும் எதிர்ப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்" என்று சுவீடன் நாட்டு ரேடியோ அறிவித்தது. ரேடியோச் செய்தியை ஹிட்லர் நேரடியாகக் கேட்டார். காதலியுடன் முசோலினியின் முடிவு, ஹிட்லருக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கியது. அன்றிரவு 12 மணி, பெர்லின் நகரம் முற்றிலுமாக ரஷியப்படைகள் வசமாகிவிட்டது என்றும், எந்த நேரத்திலும், சுரங்க மாளிகை தகர்க்கப்படலாம் என்றும், ஹிட்லருக்குத் தகவல் கிடைத்தது. ஹிட்லரின் முகம் இருண்டது. மவுனமாக எழுந்து, தன் தோழர்களுடன் கை குலுக்கினார்.

1945-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி பெர்லின் நகரை ரஷியப் படைகள் சூழ்ந்து கொண்டு விட்டன. விமானங்கள் குண்டு மாரிப்பொழிந்து கொண்டு இருந்தன. எந்த நேரத்திலும் ரஷியப் படைகள், பெர்லின் நகருக்குள் புகுந்து விடலாம் என்கிற நிலை. எதிரிகளிடம் யுத்தக் கைதியாகப் பிடிபட்டால் தன் நிலை என்னவாகும் என்பதை உணர்ந்தார் ஹிட்லர். எதிரிகளிடம் சிக்குவதற்குள் தற்கொலை செய்து கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். தன் முடிவைக் காதலி ஈவாபிரவுனிடம் தெரிவித்தார். ஹிட்லரின் முடிவைக் கேட்டு, ஈவாபிரவுன் திடுக்கிடவில்லை. "வாழ்விலும் உங்களுடன் இருந்தேன். சாவிலும் உங்களுடன்தான் இருப்பேன். உங்களுடன் நானும் தற்கொலை செய்து கொள்வேன்" என்றாள்.

பிறகு தன் அந்தரங்க உதவியாளரை அழைத்து, "நானும் ஈவாவும் ஒன்றாக இறந்துவிடப்போகிறோம். நாங்கள் இறந்தபின், எங்கள் உடல்களை ஒரு போர்வையில் சுருட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்துச் சாம்பலாக்கி விடுங்கள். எங்கள் அறையில் உள்ள கடிதங்கள், டைரிகள், என் உடைகள், என் பேனா, கண்ணாடி முதலிய பொருள்களை சேகரித்து, ஒன்று விடாமல் எரித்துவிடுங்கள்" என்று கூறிவிட்டு, மனைவியையும் அழைத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றார். அறைக்கதவு சாத்தப்பட்டது. வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. ஹிட்லரும் ஈவாவும் என்ன ஆனார்கள் என்று வெளியே இருந்தவர்களுக்குத் தெரியவில்லை. வெளியே நீண்ட நேரம் காத்திருந்த மந்திரிகளும், தளபதிகளும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றனர். அங்கே அவர்கள் கண்ட காட்சி: ஒரு சோபாவில், உட்கார்ந்த நிலையில் ஹிட்லரின் உயிரற்ற உடல். அவர் காலடியில் ஒரு துப்பாக்கி கிடந்தது. அதன் நுனியிலிருந்து புகை வந்து கொண்டிருந்ததால், அவர் சற்று நேரத்துக்கு முன்தான் தன்னைச் சுட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று அனுமானிக்க முடிந்தது. அவருடைய வலது காதுக்கு கீழ் அரை அங்குல அளவுக்கு துவாரம் விழுந்து, அதிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.

ஹிட்லர், துப்பாக்கி முனையை வாய்க்குள் வைத்து சுட்டதால்தான், குண்டு காதுக்கு அருகே துளைத்துக் கொண்டு சென்றிருக்கவேண்டும் என்று தளபதிகள் கருதினார்கள். ஹிட்லரின் வலது கரம் ஒரு புகைப்படத்தை மார்போடு அணைத்தபடி இருந்தது. அந்தப்படம், ஹிட்லரின் தாயாரின் புகைப்படம். தாயின் மீது ஹிட்லர் கொண்டிருந்த பாசத்தை எண்ணி அவர் நண்பர்கள் கண்ணீர் சிந்தினர். ஹிட்லர் உடல் இருந்த சோபாவில் சாய்ந்தபடி பிணமாகியிருந்தாள் அவருடைய மனைவி ஈவா. வெள்ளைப் புள்ளிகளோடு கூடிய கருநீல "மாக்சி" உடை அணிந்திருந்தாள். அவள் உடல் நீலம் பாய்ந்திருந்தது. எனவே அவள் சயனைடு விஷம் சாப்பிட்டிருக்க வேண்டும் என்பது புலனாகியது.

ரஷ்யாவின் பீரங்கி தாக்குதலால் பொடிபொடியான ஹிட்லரின் பாதாள மாளிகை ஹிட்லர் உடலையும், ஈவா உடலையும் உதவியாளர்கள் ஒரு கம்பளிப்போர்வையில் சுற்றினார்கள். பிறகு அந்த உடல்களை அந்த அறையிலிருந்து தலைமைச் செயலகத் தோட்டத்திற்கு தூக்கிக் கொண்டு போனார்கள். அங்கே, பெட்ரோலையும், எரிவாயுவையும் கொண்டு இரு உடல்களையும் எரித்துச் சாம்பலாக்கினார்கள். சில மணி நேரம் கழித்து அங்கு வந்த ரஷியப்படையினர் ஹிட்லரைக் காணாமல் திகைத்துப் போனார்கள். அவர் தற்கொலை செய்து கொண்டதும், பிணம் எரிக்கப்பட்டதும் பிறகுதான் தெரிந்தது. எனினும் ஹிட்லர் சாகவில்லை, தலைமறைவாக இருக்கிறார் என்று நீண்ட காலம் நம்பியவர்கள் ஏராளம்!

ஹிட்லர் ஈவு இரக்கமற்ற கொடியவராக இருந்தாலும், ஆச்சரியப்படத்தக்க வகையில் சில நல்ல குணங்களும் இருந்தன. ஹிட்லர், குழந்தைகளிடமும், பிராணிகளிடமும் அன்பு கொண்டவர். மது அருந்த மாட்டார். புகை பிடிக்க மாட்டார். சைவ உணவே சாப்பிடுவார்.

உலகப் போரின்போது, ஹிட்லரின் பிரசார பீரங்கியாகச் செயல்பட்டவர், கோயபல்ஸ். 1897-ல் பிறந்த கோயபல்ஸ், 8 பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பயின்றவர். தத்துவத்தில் "டாக்டர்" பட்டம் பெற்றவர். சிறந்த பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் மிக்கவர். 1929-ல் இவர் ஹிட்லர் மந்திரி சபையில் பிரசார மந்திரியானார். உலகப்போரின்போது, புதுப்புது உத்திகளைக் கையாண்டு, ஹிட்லரின் பெயர் உலகம் முழுவதும் பரவச் செய்தார். (போரில் ஹிட்லர் தோல்வியைச் சந்தித்தபோதும், அவர் வெற்றி பெற்று வருவதாக பிரசாரம் செய்தார். இதன் காரணமாக பொய் பேசுபவர்களை "கோயபல்ஸ்" என்று வர்ணிக்கும் வழக்கம் வந்தது.) ஹிட்லர் மீது இவர் கொண்டிருந்த பக்திக்கு அளவே இல்லை. ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதற்கு மறுநாள், கோயபல்ஸ் தன் மனைவியுடனும், 6 குழந்தைகளுடனும் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார். குழந்தைகள் 2 முதல் 12 வயது வரை உள்ளவர்கள்.


இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள். - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள். - Page 2 Empty Re: இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள்.

Post by அப்புகுட்டி Tue Apr 20, 2010 3:58 pm

அணுகுண்டு வீச்சு

ஹிட்லர் இறந்தபின் இனி சரண் அடைவது தவிர வேறு வழி இல்லை என்று ஜெர்மனி தளபதிகள் முடிவு செய்தனர். அதன்படி 1945 மே 8-ந்தேதி ஜெர்மனி சரணாகதி அடைந்தது. நேச நாடுகளின் தளபதி மக்ஆர்தரிடம் ஜெர்மனி தளபதிகள் சரணாகதி பத்திரம் எழுதிக்கொடுத்தனர். அத்துடன் உலகப்போர் முடிந்திருக்க வேண்டும். ஆனால் போரை நிறுத்த ஜப்பான் மறுத்தது. பசிபிக் மகாசமுத்திரத்தில் போய்க்கொண்டிருந்த அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் ஒன்றின் மீது ஜப்பானிய விமானங்கள் குண்டு வீசின. கப்பல் தீப்பிடித்து எரிந்து 343 பேர் பலியானார்கள்.

ஜெர்மனி சரண் அடைந்ததும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன், பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில், ரஷிய அதிபர் ஸ்டாலின் ஆகிய மூவரும், ஜெர்மனியில் உள்ள போட்ஸ்டாம் என்ற இடத்தில் சந்தித்துப் பேசினார்கள். 1945 ஜுலை 17-ந்தேதி இந்த சந்திப்பு நடந்தது. "உடனே சரண் அடையுங்கள். இல்லாவிட்டால் ஜப்பானை அடியோடு அழித்து விடுவோம்" என்று மூவரும் ஜப்பானை எச்சரித்துக் கூட்டறிக்கை விடுத்தனர். ஜப்பான் இதை லட்சியம் செய்யவில்லை. தொடர்ந்து போரில் ஈடுபட்டது.

யுத்தம் மேலும் தொடர்ந்தால் விபரீதமாகிவிடும் என்று ட்ரூமன் கருதினார். ஜப்பானை ஒடுக்க அணுகுண்டு வீசுவதைத்தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தார். ஜப்பான் மீது அணுகுண்டு வீசுமாறு, விமானப்படைக்கு கட்டளையிட்டார். 1945 ஆகஸ்டு 6-ந் தேதி, ஜப்பானிய நேரம் காலை 8 மணிக்கு, ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரம் மீது, "எனோலா கேய்" என்ற பெயருடைய அமெரிக்க போர் விமானம், உலகின் முதல் அணு குண்டை வீசியது. இந்த அணுகுண்டின் பெயர் "லிட்டில் பாய்" (சின்னப் பையன்).

ஐந்து டன் எடையுள்ளது. அணுகுண்டு வெடித்தபோது இடி முழக்கம் போல பயங்கர சத்தம் கேட்டது. வானத்துக்கும், பூமிக்குமாக நாய்க்குடை வடிவில் புகை மண்டலம் சூழ்ந்தது. இரண்டாவது அணு குண்டுவீசப்பட்டதால் ஹிரோஷிமா நகரின் 60 சதவீதப் பகுதிகள், கண் மூடிக் கண் திறப்பதற்குள் தரைமட்டமாயின. 80 ஆயிரம் மக்கள் நொடிப் பொழுதில் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர்.

ஹிரோஷிமா நகரம் அழிந்த பிறகும், சரண் அடைய ஜப்பான் மறுத்தது. எனவே, மூன்று நாட்கள் கழித்து (ஆகஸ்டு 9-ந்தேதி) அமெரிக்கா தனது இரண்டாவது அணுகுண்டை ஜப்பானின் மற்றொரு நகரமான நாகசாகி மீது வீசியது. இந்த அணுகுண்டின் பெயர் "குண்டு மனிதன்". இதனால் நகரின் பெரும் பகுதி அழிந்தது. 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். லட்சக் கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர். (அணுகுண்டு வெடிப்பினால் ஏற்பட்ட சாவு பற்றி, அப்போது அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையே மேலே கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும் என்று கருதப்படுகிறது.)

இரண்டாவது அணுகுண்டு வீசப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் ரேடியோவில் பேசினார். "உடனே சரண் அடையாவிட்டால், ஜப்பானை அடியோடு அழித்து விடுவோம்" என்று இறுதி எச்சரிக்கை விடுத்தார்.


இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள். - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள். - Page 2 Empty Re: இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள்.

Post by அப்புகுட்டி Tue Apr 20, 2010 3:58 pm

ஜப்பான் சரணாகதி

போரின்போது ஜப்பானிய மன்னராக இருந்தவர் ஹிரோ ஹிட்டோ. அவர் போரை விரும்பவில்லை. என்றாலும், அவரைக் கேட்காமல் அமெரிக்காவின் பெர்ல் துறைமுகத்தைத் தாக்கி, அமெரிக்காவை வலுச்சண்டைக்கு இழுத்தவர் பிரதமர் டோஜோ. போரில் ஜப்பான் ஈடுபட அவரே காரணம். போரில் ஜப்பானுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்தபோது, அவரை ஜப்பான் மக்கள் புகழ்ந்தனர். ஆனால் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தபோது, மக்களின் வெறுப்புக்கு உள்ளானார். ஜப்பான் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டதைத் தொடர்ந்து, மன்னர் ஹிரோஹிட்டோ மனம் கலங்கினார். 1945 ஆகஸ்டு 9-ந்தேதி ஜப்பான் வானொலி மூலம், தனது சரணாகதியை அறிவித்தார். ஜப்பான் மன்னர் ரேடியோவில் பேசியது வாழ்நாளில் இதுவே முதல் தடவை. அதுமட்டுமல்ல நேச நாடுகளின் சேனாதிபதியாக இருந்து போரை நடத்திய அமெரிக்க தளபதி மக்ஆர்தரைச் சந்தித்து "போருக்கு முழுப்பொறுப்பையும் ஏற்கிறேன்" என்றார்.

ஜப்பானிய தளபதிகள், அமெரிக்காவின் "மிசவுரி" என்ற போர்க்கப்பலுக்குச் சென்றார்கள். அங்கு அமெரிக்காவின் பிரதம தளபதி மக்ஆர்தர் இருந்தார். அவரிடம், சரணாகதி பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுத்தனர். ஏற்கனவே ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதால், ஐரோப்பாவில் போர் முடிந்துவிட்டது. இப்போது ஜப்பான் சரண் அடைந்ததைத் தொடர்ந்து உலகப்போர் முடிந்தது.

போருக்கு ஜப்பான் பிரதமர் டோஜாதான் காரணம் என்பது நேச நாடுகளுக்குத் தெரியும். அவரைக் கைது செய்யத் தளபதிகள் சென்றபோது, அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு, தற்கொலை செய்து கொள்ள முயன்றார். என்றாலும் அவர் முயற்சி தோல்வி அடைந்தது. நேசப் படைகளால் கைது செய்யப்பட்டார். அணுகுண்டு வீசப்பட்டதும், ஜப்பான் மன்னர் ஹிரோஹிட்டோ, அமெரிக்க தளபதி மக்ஆர்தரை சந்தித்து, ஜப்பான் சரண் அடைவதாக தெரிவித்தார். விசாரணையின்போது, டோஜோ "போருக்கு நான்தான் காரணம்; மன்னர் நிரபராதி" என்று கூறினார்.

டோஜோ குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1948 டிசம்பர் 23-ந்தேதி டோஜோவும், மற்றும் சில ஜப்பான் ராணுவ அதிகாரிகளும் தூக்கிலிடப்பட்டனர். இரண்டாவது உலகப் போரில் ஏற்பட்ட சேதம் எவ்வளவு என்று யாராலும் சரியாகக் கணக்கிட இயலவில்லை. போர் வீரர்களும், பொதுமக்களும் மொத்தம் 5 கோடிப்பேருக்கு மேல் பலியானதாக மதிப்பிடப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான போர்க்கப்பல்களும், போர் விமானங்களும் அழிந்தன. நாசமான நகரங்களுக்கு கணக்கே இல்லை. அணுகுண்டு வீச்சினால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைவிட மிக அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏனெனில் படுகாயம் அடைந்த பலர், சில நாட்களில் மரணம் அடைந்தனர். ஹிரோஷிமா நகரில் உள்ள கல்லறைகளில், இறந்தவர்களின் 1,38,890 பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அணுகுண்டுகள் வெடித்த போது ஏற்பட்ட கதிர் வீச்சினால் பாதிக்கப்பட்டு பார்வை இழந்தவர்கள், உடல் வெந்து கருகிப் போனவர்கள் பல லட்சம் பேர்.


இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள். - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள். - Page 2 Empty Re: இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள்.

Post by அப்புகுட்டி Tue Apr 20, 2010 3:58 pm

போருக்குப்பின்...

ஹிட்லர் தோல்வி அடைந்து தற்கொலை செய்து கொண்டதும், ஜெர்மனியை நேசநாடுகள் பங்கு போட்டுக்கொண்டன. மேற்கு ஜெர்மனி என்றும், கிழக்கு ஜெர்மனி என்றும் இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டன. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளின் சார்புடைய அராசாங்கம் மேற்கு ஜெர்மனியிலும், ரஷிய சார்புடைய அரசாங்கம் கிழக்கு ஜெர்மனியிலும் அமைக்கப்பட்டன. ஜெர்மனி தலைநகரமான பெர்லின், குண்டு வீச்சின் காரணமாகப் பாழடைந்துபோய் விட்டது.

அந்த நகரமும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு மேற்கு பெர்லின் மேற்கு ஜெர்மனியிலும், கிழக்கு பெர்லின் கிழக்கு ஜெர்மனியிலும் சேர்க்கப்பட்டன. 1950-ல் கிழக்கு ஜெர்மனியில் இருந்து ஏராளமான பேர் மேற்கு ஜெர்மனிக்கு அகதிகளாக குடியேறினார்கள். அகதிகள் போவதற்கு பெர்லின் நகரம்தான் வழியாகப் பயன்பட்டது. எனவே, அகதிகள் போவதை தடுக்க கிழக்கு பெர்லினையும், மேற்கு பெர்லினையும் பிரிக்கும் வகையில் பெரிய சுவர் ஒன்றை கிழக்கு ஜெர்மனி அரசாங்கம் அமைத்தது.

பெர்லின் சுவர் என்று இது அழைக்கப்பட்டது. அமெரிக்காவின் உதவியுடன் மேற்கு பெர்லின் நகரம் புதுப்பிக்கப்பட்டது. உலகின் அழகிய நரங்களில் ஒன்றாக அந்த நகரம் கம்பீரமாக எழுந்தது. ஆனால் கிழக்கு பெர்லின் நகரம் மிக மிக மெதுவாகவே வளர்ச்சி அடைந்தது. இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் ஜெர்மனி மக்கள் உணர்ச்சியால் ஒன்றுபட்டவர்கள்தானே. இரண்டு நாடுகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்பினார்கள். இரண்டு ஜெர்மனிகளையும் ஒன்றாக இணைப்பது என்று இரு நாடுகள் இடையேயும் 1990-ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி 1990 அக்டோபர் 3-ந் தேதி இரு ஜெர்மனிகளும் ஒரே நாடாக இணைந்தன.

பெர்லின் சுவர் இடித்துத் தள்ளப்பட்டது. அணுகுண்டு வீச்சினால் பேரழிவுக்கு உள்ளான ஜப்பான் அந்த சோதனைகளை எல்லாம் எதிர்கொண்டு பொருளாதார துறையில் படிப்படியாக முன்னேறியது. ஜப்பானிய மக்களின் அயராத உழைப்பினால், இன்று உலகிலேயே எலக்ட்ரானிக் துறையில் தலை சிறந்து விளங்குகிறது. உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. போரின் போது அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் தோளோடு தோன் நின்று ஹிட்லரை எதிர்த்துப்போர் புரிந்த ஸ்டாலின், பின்னர் ரஷியாவில் தன் எதிரிகளை ஒழித்துக்கட்டிவிட்டு சர்வாதிகாரியானார். ரஷியாவில் நடப்பது வெளி உலகுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டன. ரஷியாவில் இரும்புத்திரை போடப்பட்டு விட்டதாக சர்ச்சில் வர்ணித்தார்.

இரண்டாவது உலகப்போரின்போது இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. போர் முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவை இங்கிலாந்து கோரியது. போர் முயற்சிகளில் பிரிட்டனுக்கு இந்தியா ஆதரவாக இருந்தால் இந்தியாவுக்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் டொமினியன் அந்தஸ்து கொடுக்கப்படும் என்று அறிவித்தது. இது சம்பந்தமாக 1942 மார்ச் மாதத்தில் இங்கிலாந்து மந்திரி கிரிப்ஸ் இந்தியாவுக்கு வந்து காந்தியையும், மற்ற தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். ஆனால் பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. உலகப்போரில் ஹிட்லருடன் சேர்ந்திருந்த ஜப்பான், தொடக்கத்தில் பல வெற்றிகளைப் பெற்றது. பிரிட்டன் வசம் இருந்த மலாயா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளை கைப்பற்றியது. இந்தியா மீதும் ஜப்பான் படையெடுக்கலாம் என்றும் கருதப்பட்டது.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி இருந்து வருவதால்தான் ஜப்பானியர் இந்த நாட்டின் மீது படையெடுக்கும் அபாயம் உள்ளது. எனவே, இந்தியாவில் இருந்து பிரிட்டிஷார் உடனே வெளியேற வேண்டும் என்று காந்தி அறிக்கை வெளியிட்டார். வெள்ளையனே வெளியேறு என்று புகழ் பெற்ற தீர்மானத்தை 1942 ஆகஸ்டு மாதத்தில் காங்கிரஸ் நிறைவேற்றியது. எனினும் இந்திய இளைஞர்கள் பெருமளவில் ராணுவத்தில் சேர்ந்து போர் முனைக்கு சென்றார்கள். குறிப்பாக ஜப்பானை எதிர்த்துப் போர் புரிய சிங்கப்பூர், மலாயா, பர்மா ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்ட படைகளில் இந்திய இளைஞர்கள் அதிக அளவில் இருந்தனர். யுத்த காலத்தில் இந்தியாவில் கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. உணவுக்கு ரேஷன் கொண்டு வரப்பட்டது.

தமிழ்நாட்டில் அரிசிக்கு ரேஷன் அமுலாகியது. வரவர அரிசியின் அளவு குறைக்கப்பட்டு கோதுமை, மக்காச்சோளம் ஆகியவை தரப்பட்டன. கடைகளில் ரொட்டி வாங்க வேண்டும் என்றால் கூட அரிசியைக் குறைத்துக் கொண்டு அதற்கு சமமான கூப்பனை பெற்றுக்கொண்டு அதைக் கொடுத்துத்தான் ரொட்டி வாங்க முடியும், சென்னை, மதுரை, திருச்சி, கோவை முதலிய நரங்களில் பாதுகாப்பு குழிகள் வெட்டப்பட்டன. அடிக்கடி அபாயச் சங்கு ஊதி ஒத்திகை பார்ப்பார்கள். அப்போது ரோட்டில் நடந்து போகிறவர்கள். பதுங்குக் குழிகளில் ஒளிந்து கொள்ள வேண்டும்.

இரவில் விளக்கு வெளிச்சம் எதிரி விமானங்களுக்கு தெரியக் கூடாது என்பதற்காக, தெரு விளக்குகளுக்கு மேல் கறுப்பு மூடிகள் போடப்பட்டன. கச்சா பிலிமுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், சினிமா படங்களை நீளமாகத் தயாரிக்க தடை போடப்பட்டது. 13 ஆயிரம் அடிக்குள் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவு விடப்பட்டது. இந்த உத்தரவு, நல்லதாகவும் அமைந்தது. படங்களில் பாடல்கள் குறைக்கப்பட்டு விறுவிறுப்பு கூடியது. மிகப்பெரிய வெற்றிப்படங்களான ஹரிதாஸ் ஸ்ரீவள்ளி நாம் இருவர் ஆகியவை இந்தக் காலக்கட்டத்தில் குறைந்த நீளத்தில் தயாரிக்கப்பட்டவைதான்.

மாலைமலர்


இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள். - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள். - Page 2 Empty Re: இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள்.

Post by அப்புகுட்டி Tue Apr 20, 2010 3:59 pm

இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள். - Page 2 Bodies

ஹிட்லர் இறந்த பின்னர் அவருடைய இறந்த உடலை எவரும் கண்டுபிடிக்கவில்லை என்பதே பொதுவான ஒரு கருத்து. ஆனால் சில மீடியாக்கள் அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டு அதனை மிகவும் ரகசியமாக அழிக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள்.

இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள். - Page 2 Mastersecurityphoto
ரஷ்யதரப்பிலிருந்து வெளியான படம்

ரஷ்யாவின் பக்கத்திலிருந்து அதற்கு ஆதாரமாக சில படங்களை வெளியிட்டு இது ஹிட்லர் இறந்த பின் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று சில படங்கள வெளியிட்டு இருந்தது. அப்படங்கள் பொய்யானவை என்று ஒரு சாரார் வாதிடுகிறார்கள். இல்லை, அது அவரின் இறந்த உடல்தான் என்ரு மற்றொரு சாரார் வாதிடுகிறார்கள். இன்னும் சிலர் ஹிட்லர் எந்த சமயத்திலும் தற்கொலை செய்யவில்லை. போரில் தோற்றபின்னர் அவர் அவுஸ்திரியாவிற்கு தப்பிச்சென்று அங்கே மறைந்து வாழ்ந்து அங்கேயே இயற்கை மரணம் அடைந்தார் என்கிறார்கள். எது எப்படியோ எனிமேல் அப்படிப்பட்ட ஒரு மனிதன் இப்பூவுலகில் மறு அவதாரம் எடுக்காமல் விட்டால் சரி.


நன்றி இணையம்....... அன்பு மலர் அன்பு மலர்
இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள். - Page 2 9136f1d81f8c47e2e7815bccbae4c275


இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள். - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள். - Page 2 Empty Re: இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள்.

Post by ஹாசிம் Tue Apr 20, 2010 4:13 pm

மஹா சரித்திரம் ஹிட்லரை அறிமுகம் சொய்த அப்புவுக்கு மிக்க நன்றி இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள். - Page 2 678642


நேசமுடன் ஹாசிம்
இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள். - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள். - Page 2 Empty Re: இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள்.

Post by கலைவேந்தன் Wed Nov 03, 2010 12:15 am

இன்று தான் முழுவதும் வாசித்தேன் அப்பு. பிரமிக்க வைக்கிறது. ஹிட்லரின் சரித்திரம்.. பகிர்வுக்கு நன்றி அப்பு...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள். - Page 2 Empty Re: இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள்.

Post by புவனா Wed Nov 03, 2010 3:27 am

பகிர்வுக்கு நன்றி... முழு சரித்திரமும் வாசித்தேன்...பிரமிக்க வைக்கிறது.


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள். - Page 2 Empty Re: இன்று ஹிட்லரின் பிறந்த நாள் ஹிட்லர் பற்றிய சில குறிப்புகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ர‌மணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
» இன்று பிறந்த நாள் காணும் செல்ல மருமகள் வர்ஷாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum