Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
+3
சபீர்
கலைவேந்தன்
சிவா
7 posters
Page 10 of 10
Page 10 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
First topic message reminder :
கடல்...
உலகின் முதல் அதிசயம்.
சத்தமிடும் ரகசியம்.
காலவெள்ளம்
தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.
வாசிக்கக் கிடைக்காத
வரலாறுகளைத் தின்றுசெரித்து
நின்றுசிரிக்கும் நிஜம்.
கடல்...
ஒருவகையில் நம்பிக்கை.
ஒருவகையில் எச்சரிக்கை.
கடல்குடித்துக் கொண்டிருந்த
கலைவண்ணன் மடியில்கிடந்த
தமிழ்ரோஜாவை மறந்துபோனான்.
அவள் அழகின் நவீனம்.
சிறகுகளைந்து சுடிதார்கொண்ட
சொப்பனதேவதை. ரத்தஓட்டம்
பாயும் தங்கம் அவள் தேகம்.
பொறுக்கி எடுத்த உலக
அழகுகளை நெருக்கித் தொடுத்த
நேர்த்தியான சித்திரம். குமரி
வயதுகொண்ட குமரி அவள்.
அவன் அழகன். இளைய அறிஞன்.
காதலிக்கும்போதும் கம்பீரம்
குறையாதவன்.
என்ன யோசனை?
என்றாள் தமிழ்.
கலைவண்ணன் மனது
கரையேறியது.
இந்தச் செவிட்டுக் கரைகளோடு
அந்த அலைகள் இத்தனை
யுகங்களாய் அப்படி என்னதான்
பேசும் என்று யோசிக்கிறேன்.
பூமியில் கிடந்துகொண்டே இந்தக்
கடல் தூரத்துவானத்துக்குத்
தூரிகையில்லாமல் எப்படி
வர்ணமடிக்கிறது என்று
யோசிக்கிறேன்.
மடியில் கிடந்தவள் நொடியில்
எழுந்தாள்.
நீங்கள் கடல்பைத்தியம்.
இல்லை. நான் கடற்காதலன்.
கடல் உங்களுக்குச் சலிக்கவே
சலிக்காதா?
காதலியும் கடலும் சலிப்பதில்லை தமிழ்ரோ.
அவள் மல்லிகைக்கரம் தொட்டு
மணிக்கட்டில் முத்தமிட்டான்.
நேசமின்சாரம் நெஞ்சுக்குள் பரவியது.
அவளை இழுத்து வளைத்து
இறுக்கி இறுக்கி உருக்கி உருக்கி
மடியில் ஊற்றிக் கொண்டான்.
ஓர் அலை அவர்கள் மீது அட்சதை தூவியது.
காதுமடல்களின் வெயில்மறைவுப்
பிரதேசங்களில் விளையாடி
அவன் விரல் நன்னம்பிக்கை முனைநோக்கி
நகர்ந்தபோது வெடுக்கென்று விலகிக்
கொண்டவள் பொய்க் கோபத்தில் பூத்தாள்.
அவன் அறிவான் - ஊடல் என்பது
பசிதூண்டும் பந்தி. பந்திக்கு முந்தியவளை
வம்புக்கிழுத்தான்.
வா. கொஞ்ச நேரம் கடலோடு கால்நனைப்போம்.
அய்யோ. கடலுக்குள்ளா? நான் மாட்டேன்.
கலாபமயில் கூட்டுப்புழுவானது குறுகிக் குறுகி.
ஏன்? என் மீது நம்பிக்கையில்லையா?
இல்லை, கடல்மீது நம்பிக்கையில்லை.
எதனால்?
ஆக்டோப அலைகள் என்னை அள்ளிக்
கொண்டோடிவிட்டால்?
அப்படியாவது கடல்நீர் குடிநீராகட்டுமே.
சிரித்தது அவன் நுரைத்தது கடல்
தள்ளி நின்றாள் தமிழ்ரோஜா,
தான்மட்டும் அலைதாண்டிக் கடல்புகுந்தான்
கலைவண்ணன்.
வா
மாட்டேன். எனக்கு பயம் தண்ணீர் பயம்.
குடிநீர் குளிநீர் தவிர எல்லாம் பயம்.
வெள்ளித்திரையில் வெள்ளம் பார்த்தாலே
விழிமுடிக் கொள்வேன்.
ஆறோ ஏரியோ கடலோ என் கனவுகளில்
ததும்பும்போது என் படுக்கையில் நான்
வியர்த்து விழிக்கிறேன்.
மாட்டேன் கடலாட மாட்டேன். என்னை
ஆபத்துக்குள் அழைக்காதீர்கள்.
ஒரே ஒரு பயம்
எனக்கு தண்ணீர் பயம்
பேசப் பேச அவள்
படபடப்பைப் பறைசாற்றின
கண்களில் உடைந்துவிழுந்த
மின்மினி மின்னல்கள்.
கடல்...
உலகின் முதல் அதிசயம்.
சத்தமிடும் ரகசியம்.
காலவெள்ளம்
தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.
வாசிக்கக் கிடைக்காத
வரலாறுகளைத் தின்றுசெரித்து
நின்றுசிரிக்கும் நிஜம்.
கடல்...
ஒருவகையில் நம்பிக்கை.
ஒருவகையில் எச்சரிக்கை.
கடல்குடித்துக் கொண்டிருந்த
கலைவண்ணன் மடியில்கிடந்த
தமிழ்ரோஜாவை மறந்துபோனான்.
அவள் அழகின் நவீனம்.
சிறகுகளைந்து சுடிதார்கொண்ட
சொப்பனதேவதை. ரத்தஓட்டம்
பாயும் தங்கம் அவள் தேகம்.
பொறுக்கி எடுத்த உலக
அழகுகளை நெருக்கித் தொடுத்த
நேர்த்தியான சித்திரம். குமரி
வயதுகொண்ட குமரி அவள்.
அவன் அழகன். இளைய அறிஞன்.
காதலிக்கும்போதும் கம்பீரம்
குறையாதவன்.
என்ன யோசனை?
என்றாள் தமிழ்.
கலைவண்ணன் மனது
கரையேறியது.
இந்தச் செவிட்டுக் கரைகளோடு
அந்த அலைகள் இத்தனை
யுகங்களாய் அப்படி என்னதான்
பேசும் என்று யோசிக்கிறேன்.
பூமியில் கிடந்துகொண்டே இந்தக்
கடல் தூரத்துவானத்துக்குத்
தூரிகையில்லாமல் எப்படி
வர்ணமடிக்கிறது என்று
யோசிக்கிறேன்.
மடியில் கிடந்தவள் நொடியில்
எழுந்தாள்.
நீங்கள் கடல்பைத்தியம்.
இல்லை. நான் கடற்காதலன்.
கடல் உங்களுக்குச் சலிக்கவே
சலிக்காதா?
காதலியும் கடலும் சலிப்பதில்லை தமிழ்ரோ.
அவள் மல்லிகைக்கரம் தொட்டு
மணிக்கட்டில் முத்தமிட்டான்.
நேசமின்சாரம் நெஞ்சுக்குள் பரவியது.
அவளை இழுத்து வளைத்து
இறுக்கி இறுக்கி உருக்கி உருக்கி
மடியில் ஊற்றிக் கொண்டான்.
ஓர் அலை அவர்கள் மீது அட்சதை தூவியது.
காதுமடல்களின் வெயில்மறைவுப்
பிரதேசங்களில் விளையாடி
அவன் விரல் நன்னம்பிக்கை முனைநோக்கி
நகர்ந்தபோது வெடுக்கென்று விலகிக்
கொண்டவள் பொய்க் கோபத்தில் பூத்தாள்.
அவன் அறிவான் - ஊடல் என்பது
பசிதூண்டும் பந்தி. பந்திக்கு முந்தியவளை
வம்புக்கிழுத்தான்.
வா. கொஞ்ச நேரம் கடலோடு கால்நனைப்போம்.
அய்யோ. கடலுக்குள்ளா? நான் மாட்டேன்.
கலாபமயில் கூட்டுப்புழுவானது குறுகிக் குறுகி.
ஏன்? என் மீது நம்பிக்கையில்லையா?
இல்லை, கடல்மீது நம்பிக்கையில்லை.
எதனால்?
ஆக்டோப அலைகள் என்னை அள்ளிக்
கொண்டோடிவிட்டால்?
அப்படியாவது கடல்நீர் குடிநீராகட்டுமே.
சிரித்தது அவன் நுரைத்தது கடல்
தள்ளி நின்றாள் தமிழ்ரோஜா,
தான்மட்டும் அலைதாண்டிக் கடல்புகுந்தான்
கலைவண்ணன்.
வா
மாட்டேன். எனக்கு பயம் தண்ணீர் பயம்.
குடிநீர் குளிநீர் தவிர எல்லாம் பயம்.
வெள்ளித்திரையில் வெள்ளம் பார்த்தாலே
விழிமுடிக் கொள்வேன்.
ஆறோ ஏரியோ கடலோ என் கனவுகளில்
ததும்பும்போது என் படுக்கையில் நான்
வியர்த்து விழிக்கிறேன்.
மாட்டேன் கடலாட மாட்டேன். என்னை
ஆபத்துக்குள் அழைக்காதீர்கள்.
ஒரே ஒரு பயம்
எனக்கு தண்ணீர் பயம்
பேசப் பேச அவள்
படபடப்பைப் பறைசாற்றின
கண்களில் உடைந்துவிழுந்த
மின்மினி மின்னல்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
எங்கள் கனவுகளைப்
பரீட்சித்துப் பார்ப்பதற்கு
இந்த பூமியில் அவகாசமில்லை
என்பதனால், கொண்டு வந்த
கனவுகளை மீண்டும்
கொண்டு போகிறோம்.
எங்கள் படகின் முழ்காத
விளிம்பில் முகாமிட்டிருக்கும்
மரணமே. இதோ இந்த
நிமிடத்திலும் நான்
நிறைவாகவே இருக்கிறேன்.
எது பிறப்பு? எது இறப்பு?
-இரண்டிலும் நான்
தெளிவாகவே இருக்கிறேன்.
பிறப்பு என்பது ஐம்பூதங்கள்
கொடுத்த கடன். இறப்பு
என்பது ஐம்பூதங்களின் வசூல்.
நிலம் - நீர் - தீ - வளி -
வெளி என்னும் ஐம்பூதங்களால்
ஆக்கப்பட்ட இந்த உடம்பை,
ஐம்பூதங்களும் மீண்டும்
பிரித்தெடுத்துக் கொள்கின்றன.
எங்கள் பாதம் தாங்கிய
மண்ணே.. நன்றி. எங்களின்
ரத்தமான தண்ணீரே.. நன்றி.
எங்களுக்கு ஒளி கொடுத்த
தீயே.. நன்றி. எங்கள்
உயிரை இயக்கிய காற்றே.
நன்றி. எங்களுக்கு நிலவும்
கதிரும் மழையும் கொடுத்த
ஆகாயமே... நன்றி.
சரிந்து கிடக்கும் தமிழே.
உன்னை என் தோள்களில்
ஏற்றிக் கொள்கிறேன். என்
தலை முழ்காமல், உன் தலை
முழ்கவிடமாட்டேன்
அவன் கண்களை
முடிக்கொண்டான். புறஉலகம்
இருண்டிருந்தது. ஆனால் அவன்
அகஉலகில் ஆயிரம் ஜோதிகளின்
சுடர் தெரிந்தது.
என்ன இது? என்ன நேர்கிறது
எனக்கு? என்ன நேர்கிறது
எங்கள் படகுக்கு?
முழ்கிவிட்டேனா? இல்லையே..
முச்சுவிட முடிகிறதே.
என்ன அதிசயம்?
எங்கள் படகு
எழுகிறதே. ஏதேனும்
திமிங்கிலத்தின் முதுகு வந்து
படகை முட்டுகிறதா?
அவன் கண் திறந்தான்.
அமிழ்ந்த படகு மெல்ல மெல்ல
மேலெழுந்து, தண்ணீர் மட்டம்
தாண்டி அந்தரத்தில் மிதந்தது.
நான் இருக்கிறேனா?
இறந்துவிட்டேனா? இறந்தபிறகும்
கனவு வருமா?
இல்லை. நிஜம் - எல்லாம்
நிஜம்.
பக்கத்தில் நிற்கும்
உதவிக்கப்பலின் ராட்சக்கிரேனின்
கரங்கள், முழ்கிய படகைத்
தண்ணீர்ச் சொட்டச் சொட்டக்
கடலுக்கு மேலே தூக்கிக்
கப்பலில் வைத்துவிட்டது.
மரணத்தின் பிடியிலிருந்த படகு,
வாழ்வின் மடியில் வந்து
விழுந்தது.
கரை...
பொழியும் மழை பொழிந்து
கொண்டேயிருந்தது. நனையும்
மனிதர்கள் நனைந்து
கொண்டேயிருந்தார்கள்.
உறவினர்கள் உயிர் துடிக்க -
மீனவர்கள் காத்திருக்க -
காவல்துறையும் கடலோரக்
காவல்படையும் வெற்றிப்புன்னகை
பூத்திருக்க -
தண்ணீர் தேசத்துக் கைதிகள்
தரை இறங்கினார்கள்.
வெறிகொண்ட கூட்டம்
அவர்களை நோக்கி ஓடிவந்தது.
மயக்கம் தெளிந்து இறங்கிய
மீனவர் நால்வரும், ஓடிவந்த
கூட்டத்தை நோக்கி
ஓடிவரவில்லை.
தடதடவென்று தரையில்
விழுந்தார்கள். மண்ணில்
உருண்டார்கள். புரண்டார்கள்.
அழுதார்கள். அரற்றினார்கள்.
என் தாயே. என் மண்ணே.
என் மாதாவே. என்று
வெறிகொண்டு பூமியை
முத்தமிட்டார்கள்.
பாண்டி, ஒரு பிடி மண்ணை அள்ளி
வாயில் போட்டுக் கரகரவென்று
மென்று தின்றான்.
கீழே விழுந்து புரண்டவர்களை
ஓடிவந்து ஓடிவந்து உறவினர்கள்
தூக்கினார்கள்.
மருத்துவமனை வாசலில் -
கலைவண்ணனைச் சூழ்ந்துகொண்டு
பத்திரிகையாளர்கள்
கேட்டார்கள்.
நீங்கள் மீட்கப்பட்டதற்காக
யாருக்கு நன்றி சொல்வீர்கள் -
அரசாங்கத்துக்கா?
ஆண்டவனுக்கா?
நம்பிக்கைக்கு. - அந்த
ஒற்றைச் சொல் மந்திரத்தை
உச்சரித்துவிட்டுக் கலைவண்ணன்,
தன் காதலியின்
நெற்றிதொட்டான்.
வெப்பம் தணிந்திருந்தது.
இனி -
தமிழுக்கு மரணமில்லை.
---------------------------------------------------------------------
- நிறைந்தது
---------------------------------------------------------------------
பரீட்சித்துப் பார்ப்பதற்கு
இந்த பூமியில் அவகாசமில்லை
என்பதனால், கொண்டு வந்த
கனவுகளை மீண்டும்
கொண்டு போகிறோம்.
எங்கள் படகின் முழ்காத
விளிம்பில் முகாமிட்டிருக்கும்
மரணமே. இதோ இந்த
நிமிடத்திலும் நான்
நிறைவாகவே இருக்கிறேன்.
எது பிறப்பு? எது இறப்பு?
-இரண்டிலும் நான்
தெளிவாகவே இருக்கிறேன்.
பிறப்பு என்பது ஐம்பூதங்கள்
கொடுத்த கடன். இறப்பு
என்பது ஐம்பூதங்களின் வசூல்.
நிலம் - நீர் - தீ - வளி -
வெளி என்னும் ஐம்பூதங்களால்
ஆக்கப்பட்ட இந்த உடம்பை,
ஐம்பூதங்களும் மீண்டும்
பிரித்தெடுத்துக் கொள்கின்றன.
எங்கள் பாதம் தாங்கிய
மண்ணே.. நன்றி. எங்களின்
ரத்தமான தண்ணீரே.. நன்றி.
எங்களுக்கு ஒளி கொடுத்த
தீயே.. நன்றி. எங்கள்
உயிரை இயக்கிய காற்றே.
நன்றி. எங்களுக்கு நிலவும்
கதிரும் மழையும் கொடுத்த
ஆகாயமே... நன்றி.
சரிந்து கிடக்கும் தமிழே.
உன்னை என் தோள்களில்
ஏற்றிக் கொள்கிறேன். என்
தலை முழ்காமல், உன் தலை
முழ்கவிடமாட்டேன்
அவன் கண்களை
முடிக்கொண்டான். புறஉலகம்
இருண்டிருந்தது. ஆனால் அவன்
அகஉலகில் ஆயிரம் ஜோதிகளின்
சுடர் தெரிந்தது.
என்ன இது? என்ன நேர்கிறது
எனக்கு? என்ன நேர்கிறது
எங்கள் படகுக்கு?
முழ்கிவிட்டேனா? இல்லையே..
முச்சுவிட முடிகிறதே.
என்ன அதிசயம்?
எங்கள் படகு
எழுகிறதே. ஏதேனும்
திமிங்கிலத்தின் முதுகு வந்து
படகை முட்டுகிறதா?
அவன் கண் திறந்தான்.
அமிழ்ந்த படகு மெல்ல மெல்ல
மேலெழுந்து, தண்ணீர் மட்டம்
தாண்டி அந்தரத்தில் மிதந்தது.
நான் இருக்கிறேனா?
இறந்துவிட்டேனா? இறந்தபிறகும்
கனவு வருமா?
இல்லை. நிஜம் - எல்லாம்
நிஜம்.
பக்கத்தில் நிற்கும்
உதவிக்கப்பலின் ராட்சக்கிரேனின்
கரங்கள், முழ்கிய படகைத்
தண்ணீர்ச் சொட்டச் சொட்டக்
கடலுக்கு மேலே தூக்கிக்
கப்பலில் வைத்துவிட்டது.
மரணத்தின் பிடியிலிருந்த படகு,
வாழ்வின் மடியில் வந்து
விழுந்தது.
கரை...
பொழியும் மழை பொழிந்து
கொண்டேயிருந்தது. நனையும்
மனிதர்கள் நனைந்து
கொண்டேயிருந்தார்கள்.
உறவினர்கள் உயிர் துடிக்க -
மீனவர்கள் காத்திருக்க -
காவல்துறையும் கடலோரக்
காவல்படையும் வெற்றிப்புன்னகை
பூத்திருக்க -
தண்ணீர் தேசத்துக் கைதிகள்
தரை இறங்கினார்கள்.
வெறிகொண்ட கூட்டம்
அவர்களை நோக்கி ஓடிவந்தது.
மயக்கம் தெளிந்து இறங்கிய
மீனவர் நால்வரும், ஓடிவந்த
கூட்டத்தை நோக்கி
ஓடிவரவில்லை.
தடதடவென்று தரையில்
விழுந்தார்கள். மண்ணில்
உருண்டார்கள். புரண்டார்கள்.
அழுதார்கள். அரற்றினார்கள்.
என் தாயே. என் மண்ணே.
என் மாதாவே. என்று
வெறிகொண்டு பூமியை
முத்தமிட்டார்கள்.
பாண்டி, ஒரு பிடி மண்ணை அள்ளி
வாயில் போட்டுக் கரகரவென்று
மென்று தின்றான்.
கீழே விழுந்து புரண்டவர்களை
ஓடிவந்து ஓடிவந்து உறவினர்கள்
தூக்கினார்கள்.
மருத்துவமனை வாசலில் -
கலைவண்ணனைச் சூழ்ந்துகொண்டு
பத்திரிகையாளர்கள்
கேட்டார்கள்.
நீங்கள் மீட்கப்பட்டதற்காக
யாருக்கு நன்றி சொல்வீர்கள் -
அரசாங்கத்துக்கா?
ஆண்டவனுக்கா?
நம்பிக்கைக்கு. - அந்த
ஒற்றைச் சொல் மந்திரத்தை
உச்சரித்துவிட்டுக் கலைவண்ணன்,
தன் காதலியின்
நெற்றிதொட்டான்.
வெப்பம் தணிந்திருந்தது.
இனி -
தமிழுக்கு மரணமில்லை.
---------------------------------------------------------------------
- நிறைந்தது
---------------------------------------------------------------------
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
இனியவர்களே.
ஒரு வேள்வி செய்தேன்.
வரம் வந்திருக்கிறதோ
இல்லையோ - வேள்விக்குச்
செலவான விறகு நெய்யும்
நிஜம்.
இந்தத் தண்ணீர் தேசத்திற்காக
கொங்குதேர் வாழ்க்கை
அஞ்சிறைத் தும்பியாய் நான்
அறிவுசேர்க்க அலைந்தது நிஜம்.
மேகங்களை இழுத்துப்
போர்த்துக்கொண்ட
எத்தனையோ ராத்திரிகளில்,
நான் மட்டும் விழித்துக் கிடந்தது
நிஜம்.
தமிழுக்கு இது புதியது
என்று தமிழறிந்தோர் சிலரேனும்
தகுதியுரை சொன்னால்,
இதற்காக நான் ஓராண்டாய்
இழந்த சக்தி ஒரு நொடியில்
ஊறிவிடும்.
எந்தத் தொடருக்கும் நான்
இத்தனை பாடு பட்டதில்லை.
விசைப்படகில் என்னைக்
கடலுக்குள் அனுப்பிவைத்த
ஆனந்தவிகடன் ஆசிரியர்
அவர்களுக்கும் -
என்னைக் கடலுக்குள் அழைத்துச்
சென்ற மீனவத் தோழர்கள்
குணசேகர், முருகன், தங்கதுரை
முவருக்கும் -
தொழிலதிபர் நண்பர் பிரசாத்
அவர்களுக்கும் -
விமான மீட்புப்பணி பற்றிய
அறிவுச் செய்திகளை எனக்கு
அறிவித்த கேப்டன் கணேசன்
அவர்களுக்கும் - அவரிடம்
என்னை ஆற்றுப்படுத்திய அன்புச்
சகோதரர் தமிழகத் தேர்தல்
ஆணையர் திரு கே. மலைச்சாமி
ஐ.ஏ.எ . அவர்களுக்கும் -
எனக்கு நூல் தந்து உதவிய
சென்னையின் அனைத்து
நூலகங்களுக்கும் -
நான் கேட்ட
நூல்களையெல்லாம்
கொண்டுவந்து குவித்த என்
மைத்துனர் மு. தணிகாசலம்
அவர்களுக்கும் -
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
கவிப்பேரரசின் தண்ணீர் தேசத்தை இங்கு பதிவிடப் பணித்த அன்பு அக்கா ஆதிராவிற்கு என் நன்றிகள்
!!!
![தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
என்னிடம் இந்த அருமையான கவிதைக்காதை இருக்கிறது சிவா.. நீங்கள் பதிவேன் என்றதால் காத்திருந்தேன்..
மிக அருமையான காவியம்...! நன்றி சிவா...![தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
மிக அருமையான காவியம்...! நன்றி சிவா...
![தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
பதியபட்டிருக்கும் வைரவரிகள் அனைத்தும் மிக மிக மிக ஆ........ழ.................மா............ன கருத்துக்களைக்கொண்டுள்ளது
இதனை பதிவிட்ட சகோதரன் சிவா அவர்களுக்கும்/ ஆதிரா அக்காவுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றேன்
இதனை பதிவிட்ட சகோதரன் சிவா அவர்களுக்கும்/ ஆதிரா அக்காவுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
இதில் என் பங்கு எதுவும் இல்லை சிவா.தங்களின் உழைப்பும் முயற்சியுமே காரணம். தங்கள் தமிழார்வத்துக்குத் தலை வணங்குகிறேன்.. பதிவிட்டமைக்கு .மிக்க நன்றி சிவா.
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
தமிழின் முதல் முதலில் கவிபேரரசு விஞ்ஞானத்தை புகுத்திய காவியம் பதிவிட்ட ஆதிரா அம்மையாருக்கும் சிவா அவர்களுக்கும் ஈகரை கவிதை பிரியர்கள் கடமை பட்டுள்ளோம்
Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
கவிக்கடலின் அலைகள் காதுகளில் ரீங்காரமிடுகின்றன படிக்கின்றபோதும் முடித்த போதும் மீண்டும் மீண்டும் ஒலிக்கும்
அழகான வரிகள்
பகிர்வுக்கு மிக்க நன்றி தல
![தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
அழகான வரிகள்
பகிர்வுக்கு மிக்க நன்றி தல
![தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசமுடன் ஹாசிம்
![தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 Hasim4](https://2img.net/r/ihimizer/img52/3733/hasim4.png)
Page 10 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
» உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து
» ஊழி - கவிப்பேரரசு வைரமுத்து
» இசை - கவிப்பேரரசு வைரமுத்து
» அடங்காநல்லூர் - கவிப்பேரரசு வைரமுத்து
» உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து
» ஊழி - கவிப்பேரரசு வைரமுத்து
» இசை - கவிப்பேரரசு வைரமுத்து
» அடங்காநல்லூர் - கவிப்பேரரசு வைரமுத்து
Page 10 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|