Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
+3
சபீர்
கலைவேந்தன்
சிவா
7 posters
Page 8 of 10
Page 8 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
First topic message reminder :
கடல்...
உலகின் முதல் அதிசயம்.
சத்தமிடும் ரகசியம்.
காலவெள்ளம்
தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.
வாசிக்கக் கிடைக்காத
வரலாறுகளைத் தின்றுசெரித்து
நின்றுசிரிக்கும் நிஜம்.
கடல்...
ஒருவகையில் நம்பிக்கை.
ஒருவகையில் எச்சரிக்கை.
கடல்குடித்துக் கொண்டிருந்த
கலைவண்ணன் மடியில்கிடந்த
தமிழ்ரோஜாவை மறந்துபோனான்.
அவள் அழகின் நவீனம்.
சிறகுகளைந்து சுடிதார்கொண்ட
சொப்பனதேவதை. ரத்தஓட்டம்
பாயும் தங்கம் அவள் தேகம்.
பொறுக்கி எடுத்த உலக
அழகுகளை நெருக்கித் தொடுத்த
நேர்த்தியான சித்திரம். குமரி
வயதுகொண்ட குமரி அவள்.
அவன் அழகன். இளைய அறிஞன்.
காதலிக்கும்போதும் கம்பீரம்
குறையாதவன்.
என்ன யோசனை?
என்றாள் தமிழ்.
கலைவண்ணன் மனது
கரையேறியது.
இந்தச் செவிட்டுக் கரைகளோடு
அந்த அலைகள் இத்தனை
யுகங்களாய் அப்படி என்னதான்
பேசும் என்று யோசிக்கிறேன்.
பூமியில் கிடந்துகொண்டே இந்தக்
கடல் தூரத்துவானத்துக்குத்
தூரிகையில்லாமல் எப்படி
வர்ணமடிக்கிறது என்று
யோசிக்கிறேன்.
மடியில் கிடந்தவள் நொடியில்
எழுந்தாள்.
நீங்கள் கடல்பைத்தியம்.
இல்லை. நான் கடற்காதலன்.
கடல் உங்களுக்குச் சலிக்கவே
சலிக்காதா?
காதலியும் கடலும் சலிப்பதில்லை தமிழ்ரோ.
அவள் மல்லிகைக்கரம் தொட்டு
மணிக்கட்டில் முத்தமிட்டான்.
நேசமின்சாரம் நெஞ்சுக்குள் பரவியது.
அவளை இழுத்து வளைத்து
இறுக்கி இறுக்கி உருக்கி உருக்கி
மடியில் ஊற்றிக் கொண்டான்.
ஓர் அலை அவர்கள் மீது அட்சதை தூவியது.
காதுமடல்களின் வெயில்மறைவுப்
பிரதேசங்களில் விளையாடி
அவன் விரல் நன்னம்பிக்கை முனைநோக்கி
நகர்ந்தபோது வெடுக்கென்று விலகிக்
கொண்டவள் பொய்க் கோபத்தில் பூத்தாள்.
அவன் அறிவான் - ஊடல் என்பது
பசிதூண்டும் பந்தி. பந்திக்கு முந்தியவளை
வம்புக்கிழுத்தான்.
வா. கொஞ்ச நேரம் கடலோடு கால்நனைப்போம்.
அய்யோ. கடலுக்குள்ளா? நான் மாட்டேன்.
கலாபமயில் கூட்டுப்புழுவானது குறுகிக் குறுகி.
ஏன்? என் மீது நம்பிக்கையில்லையா?
இல்லை, கடல்மீது நம்பிக்கையில்லை.
எதனால்?
ஆக்டோப அலைகள் என்னை அள்ளிக்
கொண்டோடிவிட்டால்?
அப்படியாவது கடல்நீர் குடிநீராகட்டுமே.
சிரித்தது அவன் நுரைத்தது கடல்
தள்ளி நின்றாள் தமிழ்ரோஜா,
தான்மட்டும் அலைதாண்டிக் கடல்புகுந்தான்
கலைவண்ணன்.
வா
மாட்டேன். எனக்கு பயம் தண்ணீர் பயம்.
குடிநீர் குளிநீர் தவிர எல்லாம் பயம்.
வெள்ளித்திரையில் வெள்ளம் பார்த்தாலே
விழிமுடிக் கொள்வேன்.
ஆறோ ஏரியோ கடலோ என் கனவுகளில்
ததும்பும்போது என் படுக்கையில் நான்
வியர்த்து விழிக்கிறேன்.
மாட்டேன் கடலாட மாட்டேன். என்னை
ஆபத்துக்குள் அழைக்காதீர்கள்.
ஒரே ஒரு பயம்
எனக்கு தண்ணீர் பயம்
பேசப் பேச அவள்
படபடப்பைப் பறைசாற்றின
கண்களில் உடைந்துவிழுந்த
மின்மினி மின்னல்கள்.
கடல்...
உலகின் முதல் அதிசயம்.
சத்தமிடும் ரகசியம்.
காலவெள்ளம்
தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.
வாசிக்கக் கிடைக்காத
வரலாறுகளைத் தின்றுசெரித்து
நின்றுசிரிக்கும் நிஜம்.
கடல்...
ஒருவகையில் நம்பிக்கை.
ஒருவகையில் எச்சரிக்கை.
கடல்குடித்துக் கொண்டிருந்த
கலைவண்ணன் மடியில்கிடந்த
தமிழ்ரோஜாவை மறந்துபோனான்.
அவள் அழகின் நவீனம்.
சிறகுகளைந்து சுடிதார்கொண்ட
சொப்பனதேவதை. ரத்தஓட்டம்
பாயும் தங்கம் அவள் தேகம்.
பொறுக்கி எடுத்த உலக
அழகுகளை நெருக்கித் தொடுத்த
நேர்த்தியான சித்திரம். குமரி
வயதுகொண்ட குமரி அவள்.
அவன் அழகன். இளைய அறிஞன்.
காதலிக்கும்போதும் கம்பீரம்
குறையாதவன்.
என்ன யோசனை?
என்றாள் தமிழ்.
கலைவண்ணன் மனது
கரையேறியது.
இந்தச் செவிட்டுக் கரைகளோடு
அந்த அலைகள் இத்தனை
யுகங்களாய் அப்படி என்னதான்
பேசும் என்று யோசிக்கிறேன்.
பூமியில் கிடந்துகொண்டே இந்தக்
கடல் தூரத்துவானத்துக்குத்
தூரிகையில்லாமல் எப்படி
வர்ணமடிக்கிறது என்று
யோசிக்கிறேன்.
மடியில் கிடந்தவள் நொடியில்
எழுந்தாள்.
நீங்கள் கடல்பைத்தியம்.
இல்லை. நான் கடற்காதலன்.
கடல் உங்களுக்குச் சலிக்கவே
சலிக்காதா?
காதலியும் கடலும் சலிப்பதில்லை தமிழ்ரோ.
அவள் மல்லிகைக்கரம் தொட்டு
மணிக்கட்டில் முத்தமிட்டான்.
நேசமின்சாரம் நெஞ்சுக்குள் பரவியது.
அவளை இழுத்து வளைத்து
இறுக்கி இறுக்கி உருக்கி உருக்கி
மடியில் ஊற்றிக் கொண்டான்.
ஓர் அலை அவர்கள் மீது அட்சதை தூவியது.
காதுமடல்களின் வெயில்மறைவுப்
பிரதேசங்களில் விளையாடி
அவன் விரல் நன்னம்பிக்கை முனைநோக்கி
நகர்ந்தபோது வெடுக்கென்று விலகிக்
கொண்டவள் பொய்க் கோபத்தில் பூத்தாள்.
அவன் அறிவான் - ஊடல் என்பது
பசிதூண்டும் பந்தி. பந்திக்கு முந்தியவளை
வம்புக்கிழுத்தான்.
வா. கொஞ்ச நேரம் கடலோடு கால்நனைப்போம்.
அய்யோ. கடலுக்குள்ளா? நான் மாட்டேன்.
கலாபமயில் கூட்டுப்புழுவானது குறுகிக் குறுகி.
ஏன்? என் மீது நம்பிக்கையில்லையா?
இல்லை, கடல்மீது நம்பிக்கையில்லை.
எதனால்?
ஆக்டோப அலைகள் என்னை அள்ளிக்
கொண்டோடிவிட்டால்?
அப்படியாவது கடல்நீர் குடிநீராகட்டுமே.
சிரித்தது அவன் நுரைத்தது கடல்
தள்ளி நின்றாள் தமிழ்ரோஜா,
தான்மட்டும் அலைதாண்டிக் கடல்புகுந்தான்
கலைவண்ணன்.
வா
மாட்டேன். எனக்கு பயம் தண்ணீர் பயம்.
குடிநீர் குளிநீர் தவிர எல்லாம் பயம்.
வெள்ளித்திரையில் வெள்ளம் பார்த்தாலே
விழிமுடிக் கொள்வேன்.
ஆறோ ஏரியோ கடலோ என் கனவுகளில்
ததும்பும்போது என் படுக்கையில் நான்
வியர்த்து விழிக்கிறேன்.
மாட்டேன் கடலாட மாட்டேன். என்னை
ஆபத்துக்குள் அழைக்காதீர்கள்.
ஒரே ஒரு பயம்
எனக்கு தண்ணீர் பயம்
பேசப் பேச அவள்
படபடப்பைப் பறைசாற்றின
கண்களில் உடைந்துவிழுந்த
மின்மினி மின்னல்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 8 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
அதனால் மட்டும்தானே நீங்கள்
உயர்ந்தவர்கள்?
இருந்துவிட்டுப் போங்கள்.
கொஞ்சம் தண்ணீர்...
கொஞ்சம் தண்ணீர்
முர்ச்சை தெளிந்தும்
தெளியாமலும்
அவள் புலம்பிக் கிடந்தாள்.
எங்கு போவது தண்ணீருக்கு?
என்ன செய்வது தண்ணீருக்கு?
கலைவண்ணனால் அப்போது
கொடுக்க முடிந்தது
தண்ணீரல்ல. தன்னை
மட்டும்தான்.
இசக்கி மட்டும் பிரமை
பிடித்தவனாய்க் கடலையே
வெறித்துப் பார்த்துக்
கொண்டிருந்தான்.
அந்தி வானத்தில் அ தமனக்
கோடுகள் விழத் தொடங்கிய
வேளையில், படகின் விளிம்பில்
உட்கார்ந்திருந்த பரதன்
கடலிலும் வானத்திலும் தன்
கண்களை வீசி, ஆபத்தில்
உயிர் காக்கும் அடையாளம்
தேடினான்.
இருப்பது இறப்பது இந்த
இரண்டுக்கும் இடையிலான
வித்தியாசங்கள், அங்குலம்
அங்குலமாக அழிந்துகொண்டே
வருவதை அவன் உணர்ந்தான்.
தற்செயலாய்த் தலை
தாழ்த்தினான்.
ஆ. அவை என்ன?
தண்ணீர் மட்டத்துக்கு மேல்
தலைதூக்கும் அந்தப்
பிராணிகள் கடற்பாம்புகளா?
சற்றே உற்றுப் பார்த்தான்.
ஆமைகள். கடல்
ஆமைகள். என்று
கத்தினான்.
எல்லோரும் அவன் குரல்
கேட்டுக்
கூடுவதற்குள் அவன் கடலில் குதித்தான்.
வெயிலில் ஒதுங்கவும். படகின் வயிற்றில்
படிந்திருக்கும் பாசிதின்னவும் படகை உரசிய
அந்த ஆமைகளை ஒவ்வொன்றாய்த்
தலைபற்றித் தளத்தில் வீசியெறிந்தான்..
தப்பித்தவை போகத் தளத்தில் விழுந்தவை
முன்று ஆமைகள். ஒவ்வொன்றும்
ஆறு கிலோ எடை இருக்கும்.
தலையும் காலும் வாலும் தவிர ஓட்டுக்கு
வெளியே ஒன்றும் தெரியவில்லை.
ஆகா. ஆகா. ஆமைகள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போதுதான்
படகில் பசிக்குரல் மறைந்து உயிர்க்குரல் கேட்டது.
கடலில் கிடந்த பரதன் தாவிக்குதித்து
மேலே வந்தான்.
சமையல்கட்டு சென்றான்.
கத்தியும் சட்டியும் கொண்டுவந்தான்.
ஆமைகளை நெருங்கினான்.
பார்த்து. கையைக் கடித்துவிடப்போகிறது
ஆமை.
அடப்போடா. ஆமைக்குப் பல்லில்லை
என்பது எனக்குத் தெரியாதா?
வெள்ளையாய்த் தெரிந்தது அடிவயிறு.
அதன் இதயப்பகுதியில் கத்தி வைத்தான்.
குத்தினான் - அழுத்தினான் - கீறினான் - கிழித்தான்.
முதலில் கசிய ஆரம்பித்த கருஞ்சிவப்பு
ரத்தம் குபுகுபுவெனக் கொட்டத் தொடங்கியது.
ஆமையின் தலைதுடிப்பதை அவனால் தாங்க
முடியவில்லை. அதை வெட்டி எறிந்தான்.
அப்படியே தூக்கிப் பிடித்துக் கவிழ்த்து
அதன் ரத்தத்தைச் சட்டியில் கொட்டினான்.
அவ்வாறே மற்ற ஆமைகளையும் பிளந்து
ரத்தமெடுக்க, நிரம்பிவிட்டது. பாதிச்சட்டி
பரதன் உற்சாகத்தில் கத்தினான்.
இப்போது இது ரத்தமல்ல. சிவப்பு தண்ணீர்
குடியுங்கள் - எல்லோரும் குடியுங்கள்.
அதுவரை இறந்துகிடந்த டம்ளர்களுக்கெல்லாம்
உடனே உயிர் வந்தது.
சட்டியில் விட்டு ஆளுக்கொரு டம்ளர்
ஆமை ரத்தம் அவசரமாய் மொண்டான்.
இந்தா பாண்டி. இது உனக்கு.
இந்தா சலீம். இது உனக்கு.
இதோ பேனாக்காரரே. இது உங்களுக்கு.
தூரத்தில் பிரமை பிடித்துப் பேசாதிருந்தான்
இசக்கி.
இந்தா இசக்கி இது உனக்கு.
அதுவரை திரும்பாதிருந்த இசக்கி திரும்பினான்.
அவன் கண்ணிலிருந்து ஒரு துளிக் கண்ணீர்
ஆமை ரத்தத்தில் விழுந்தது.
என்னை மன்னித்து விடுங்கள்.
இன்றுமுதல் நான் சாகும் வரைக்கும்
அசைவம் தொடமாட்டேன். நான் கொன்ற
சுண்டெலிக்கு ஆயுள் முழுதும் நான்
செலுத்தும் அஞ்சலி அதுதான்.
அசையவில்லை யாரும், அப்படியே
நின்றார்கள்
இசக்கி சைவமாகிவிட்டானா?
வேங்கைக்கு வெற்றிலை மட்டும் போதுமா?
இது என்ன புது அதிர்ச்சி.
அவர்கள் எதிர்பாராத திசையிலிருந்து
இன்னோர் அதிர்ச்சியும் வந்தது.
எனக்கும் கொடுங்கள் ஒரு டம்ளர்
ஆமை ரத்தம்.
திகைத்து திரும்பினார்கள்.
கேட்டவள் தமிழ்ரோஜா.
இந்தப் பிரபஞ்சத்தில் எதுவும்
நேரலாம். இன்று காண்பது
நாளை மாறலாம்.
மாற்றமே பரிணாமம்.
மாறுதல் ஒன்றுதான் உலகில்
மாறாதிருப்பது.
உயர்ந்தவர்கள்?
இருந்துவிட்டுப் போங்கள்.
கொஞ்சம் தண்ணீர்...
கொஞ்சம் தண்ணீர்
முர்ச்சை தெளிந்தும்
தெளியாமலும்
அவள் புலம்பிக் கிடந்தாள்.
எங்கு போவது தண்ணீருக்கு?
என்ன செய்வது தண்ணீருக்கு?
கலைவண்ணனால் அப்போது
கொடுக்க முடிந்தது
தண்ணீரல்ல. தன்னை
மட்டும்தான்.
இசக்கி மட்டும் பிரமை
பிடித்தவனாய்க் கடலையே
வெறித்துப் பார்த்துக்
கொண்டிருந்தான்.
அந்தி வானத்தில் அ தமனக்
கோடுகள் விழத் தொடங்கிய
வேளையில், படகின் விளிம்பில்
உட்கார்ந்திருந்த பரதன்
கடலிலும் வானத்திலும் தன்
கண்களை வீசி, ஆபத்தில்
உயிர் காக்கும் அடையாளம்
தேடினான்.
இருப்பது இறப்பது இந்த
இரண்டுக்கும் இடையிலான
வித்தியாசங்கள், அங்குலம்
அங்குலமாக அழிந்துகொண்டே
வருவதை அவன் உணர்ந்தான்.
தற்செயலாய்த் தலை
தாழ்த்தினான்.
ஆ. அவை என்ன?
தண்ணீர் மட்டத்துக்கு மேல்
தலைதூக்கும் அந்தப்
பிராணிகள் கடற்பாம்புகளா?
சற்றே உற்றுப் பார்த்தான்.
ஆமைகள். கடல்
ஆமைகள். என்று
கத்தினான்.
எல்லோரும் அவன் குரல்
கேட்டுக்
கூடுவதற்குள் அவன் கடலில் குதித்தான்.
வெயிலில் ஒதுங்கவும். படகின் வயிற்றில்
படிந்திருக்கும் பாசிதின்னவும் படகை உரசிய
அந்த ஆமைகளை ஒவ்வொன்றாய்த்
தலைபற்றித் தளத்தில் வீசியெறிந்தான்..
தப்பித்தவை போகத் தளத்தில் விழுந்தவை
முன்று ஆமைகள். ஒவ்வொன்றும்
ஆறு கிலோ எடை இருக்கும்.
தலையும் காலும் வாலும் தவிர ஓட்டுக்கு
வெளியே ஒன்றும் தெரியவில்லை.
ஆகா. ஆகா. ஆமைகள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போதுதான்
படகில் பசிக்குரல் மறைந்து உயிர்க்குரல் கேட்டது.
கடலில் கிடந்த பரதன் தாவிக்குதித்து
மேலே வந்தான்.
சமையல்கட்டு சென்றான்.
கத்தியும் சட்டியும் கொண்டுவந்தான்.
ஆமைகளை நெருங்கினான்.
பார்த்து. கையைக் கடித்துவிடப்போகிறது
ஆமை.
அடப்போடா. ஆமைக்குப் பல்லில்லை
என்பது எனக்குத் தெரியாதா?
வெள்ளையாய்த் தெரிந்தது அடிவயிறு.
அதன் இதயப்பகுதியில் கத்தி வைத்தான்.
குத்தினான் - அழுத்தினான் - கீறினான் - கிழித்தான்.
முதலில் கசிய ஆரம்பித்த கருஞ்சிவப்பு
ரத்தம் குபுகுபுவெனக் கொட்டத் தொடங்கியது.
ஆமையின் தலைதுடிப்பதை அவனால் தாங்க
முடியவில்லை. அதை வெட்டி எறிந்தான்.
அப்படியே தூக்கிப் பிடித்துக் கவிழ்த்து
அதன் ரத்தத்தைச் சட்டியில் கொட்டினான்.
அவ்வாறே மற்ற ஆமைகளையும் பிளந்து
ரத்தமெடுக்க, நிரம்பிவிட்டது. பாதிச்சட்டி
பரதன் உற்சாகத்தில் கத்தினான்.
இப்போது இது ரத்தமல்ல. சிவப்பு தண்ணீர்
குடியுங்கள் - எல்லோரும் குடியுங்கள்.
அதுவரை இறந்துகிடந்த டம்ளர்களுக்கெல்லாம்
உடனே உயிர் வந்தது.
சட்டியில் விட்டு ஆளுக்கொரு டம்ளர்
ஆமை ரத்தம் அவசரமாய் மொண்டான்.
இந்தா பாண்டி. இது உனக்கு.
இந்தா சலீம். இது உனக்கு.
இதோ பேனாக்காரரே. இது உங்களுக்கு.
தூரத்தில் பிரமை பிடித்துப் பேசாதிருந்தான்
இசக்கி.
இந்தா இசக்கி இது உனக்கு.
அதுவரை திரும்பாதிருந்த இசக்கி திரும்பினான்.
அவன் கண்ணிலிருந்து ஒரு துளிக் கண்ணீர்
ஆமை ரத்தத்தில் விழுந்தது.
என்னை மன்னித்து விடுங்கள்.
இன்றுமுதல் நான் சாகும் வரைக்கும்
அசைவம் தொடமாட்டேன். நான் கொன்ற
சுண்டெலிக்கு ஆயுள் முழுதும் நான்
செலுத்தும் அஞ்சலி அதுதான்.
அசையவில்லை யாரும், அப்படியே
நின்றார்கள்
இசக்கி சைவமாகிவிட்டானா?
வேங்கைக்கு வெற்றிலை மட்டும் போதுமா?
இது என்ன புது அதிர்ச்சி.
அவர்கள் எதிர்பாராத திசையிலிருந்து
இன்னோர் அதிர்ச்சியும் வந்தது.
எனக்கும் கொடுங்கள் ஒரு டம்ளர்
ஆமை ரத்தம்.
திகைத்து திரும்பினார்கள்.
கேட்டவள் தமிழ்ரோஜா.
இந்தப் பிரபஞ்சத்தில் எதுவும்
நேரலாம். இன்று காண்பது
நாளை மாறலாம்.
மாற்றமே பரிணாமம்.
மாறுதல் ஒன்றுதான் உலகில்
மாறாதிருப்பது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 8 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
இந்தக் கிரகத் தொகுதியும்
கட்சி மாறலாம்.
வியாழனை முட்டித் துளைத்த
வால்நட்சத்திரத்தால் அங்கே
தண்ணீரும் உயிர்களும்
உற்பத்தியாகலாம்.
என்றேனும் ஒரு நாள் -
இந்தப் பூமி என்னும் கிரகம்
இடிகொண்ட முட்டையாய்ச்
சிதறுண்டு போக, இங்கிருந்து
தப்பிக்க வசதிகொண்ட
மனிதர்கள் வியாழன் கிரகத்தில்
வீடு வாங்கலாம்.
இதுவரைக்கும் பூமிக்கு வெயில்
தந்த பழைய சூரியனைப்
புறந்தள்ளிவிட்டு, இன்னொரு
சூரியக் குடும்பத்துக்கு
ஜீவராசிகள் இடம்
பெயரலாம்.
நிகழும் வரைக்கும்தான் ஒன்று
அதிசயம். நிகழ்ந்த பிறகு அது
சம்பவம்.
தொப்பூழ்க்கொடி அறுத்தது
முதல் அசைவக்
கலாசாரத்திலேயே வளர்ந்த
இசக்கி, அன்று முதல் தன்னைச்
சைவன் என்று
பிரகடனப்படுத்திக் கொண்டதும்
- எறும்பு செத்து மிதக்கும்
பாலைக்கூட அசைவமென்று
ஒதுக்கிய தமிழ் ரோஜா,
அன்று ஆமை ரத்தம் பருகக்
கேட்டதும் பழகியவர்களுக்கு
அதிர்ச்சியே தவிர
பண்பாட்டுக்கு அதிர்ச்சி அல்ல.
மனிதன் இயற்கையின் குழந்தை.
அவனது உணவை, உடையை,
உறையுளை ஏற்படுத்திக்
கொடுப்பதும் இயற்கைதான்.
மதுரையில் சட்டையில்லாத
உழவனைப் பார்த்து, இனி
சட்டை அணிவதில்லை என்று
வடநாட்டு உழவன் சபதம்
செய்தால், அது சரியான
சிந்தனை என்று கருத
முடியாது.
அந்த வெயில் பூமியில்
சட்டையில்லாமலிருப்பது ஓர்
உழவனின் செளகரியம்.
வடநாட்டுக் குளிரில் ஓர்
உழவன் சட்டையும்
தலைப்பாகையும்
அணிந்தே ஆக வேண்டும்.. அது
அவன் தேவை.
எனவே, சட்டை அணிவது -
அணியாதிருப்பது என்பதை
வானிலை தீர்மானிக்கிறது.
மனிதனின் ஆணைகள்,
மீறுவதற்காகவே
பிறப்பிக்கப்படுகின்றன.
இயற்கையின் ஆணைகள்
தேவைக்காகவே
படைக்கப்படுகின்றன.
ஆமைரத்தம் சைவமா
அசைவமா என்று
வாதாடுவதற்கான வாய்ப்பை,
தமிழ்ரோஜாவின் தாகம்
அவளுக்குத் தரவில்லை.
அவளைப் பொறுத்தவரை
அப்போது அவளுக்கு அது
திடதிரவம்.
குடித்தாள்.
குடித்துவிட்டுப் பால்குடித்த
குழந்தைபோல் இதழ்க்கடை
துடைத்தாள்.
அடுத்தொரு கேள்வியும் அவளே
கேட்டாள்.
அந்த ஆமைக்கறியைச்
சமைக்க முடியுமா?
மீனவர் நிமிர்ந்தனர்.
அதைப் பச்சையாகவே
சாப்பிடுவது என்று அவர்கள்
நெஞ்சுக்குள் நிறைவேற்றிக்
கொண்ட மெளனத் தீர்மானம்
சற்றே ஒத்தி வைக்கப்பட்டது.
இதைச் சமைக்கத்தான்
வேண்டுமா?
பச்சையாய் உண்டாலும்
அடிவயிற்றில் எரியும் அக்கினியில்
இது வெந்து போகாதா?
நெருப்பு என்பது அந்த
நிமிடத்தில் அவர்களுக்கு
ஆடம்பரம்.
அவர்களின் அந்த நேரத்து
அகராதியில் சமைத்தல் என்ற
சொல்லுக்கு நேரே,
காலவிரயம் அல்லது
படாடோபம் என்று பொருள்
போட்டிருந்தது.
ஆனாலும், ஒரு சைவப்
பெண்ணின் அசைவத்
தேவைக்காக அவர்கள்
சமைக்க ஆயத்தமானார்கள்.
முன்று வருடங்கடந்து மழை
பெய்த ஒரு திருநாளில், தன்
பழைய கலப்பையைத் தேடுகிற
ஓர் ஏழை விவசாயியைப்போல
அவர்கள் திசைக்கொருவராய்ப்
பறந்து தீப்பெட்டி
தேடினார்கள்.
ஒரு குடியானவன் வீட்டு
உண்டியலின் கடைசிக்
காசைப்போல அது ஏதோ
ஓர் ஆழத்தில் அகப்பட்டது.
அது சற்றே ஈரம்பூத்திருந்தது.
உள்ளே- ரயப்
படையெடுப்பில் தோற்றுத்
திரும்பிய நெப்போலியனின்
படைவீரர்களைப் போல
எண்ணிக்கையில் குறைவாகவே
இருந்தன தீக்குச்சிகள்.
பற்றவைக்க முயன்றான்
பாண்டி.
முதலாம் தீக்குச்சி -
உடைந்தது.
இரண்டாம் தீக்குச்சி -
பட்டையில் ஒரு பாதி கிழித்துத்
தானும் தேய்ந்தது.
முன்றாம் தீக்குச்சி - சற்றே
பற்றிச் சட்டென்று அணைந்தது.
தீக்குச்சி நாலாவது -
பற்றியது. ஏமாற்றாமல்
எரிந்தது.
அடுப்பும் முகங்களும் ஒரே
நேரத்தில் ஒளிகொண்டன.
தண்ணீர் இல்லாததால் அதன்
ரத்தம் ஊற்றப்பட்டு
அவசரமாய்ச் சமைக்கப்பட்டது
ஆமைக்கறி.
தட்டேந்தி நிற்கவோ
பங்கிட்டுக் கொள்ளவோ
பொறுமையின்றி, ஆளுக்கொரு
துண்டாய் அவர்கள் அவசரமாய்
உண்ட பிறகுதான்
தெரிந்தது... வெந்திருப்பது
கறி அல்ல - அவர்களின்
நாக்குகள் என்று.
அவர்களின் உடம்பின் ஆழத்தில்
வற்றி வண்டலாகிப் போன
உயிர் ஒவ்வொரு சொட்டாய்
ஊறத் தொடங்கியது.
கரை.
கட்சி மாறலாம்.
வியாழனை முட்டித் துளைத்த
வால்நட்சத்திரத்தால் அங்கே
தண்ணீரும் உயிர்களும்
உற்பத்தியாகலாம்.
என்றேனும் ஒரு நாள் -
இந்தப் பூமி என்னும் கிரகம்
இடிகொண்ட முட்டையாய்ச்
சிதறுண்டு போக, இங்கிருந்து
தப்பிக்க வசதிகொண்ட
மனிதர்கள் வியாழன் கிரகத்தில்
வீடு வாங்கலாம்.
இதுவரைக்கும் பூமிக்கு வெயில்
தந்த பழைய சூரியனைப்
புறந்தள்ளிவிட்டு, இன்னொரு
சூரியக் குடும்பத்துக்கு
ஜீவராசிகள் இடம்
பெயரலாம்.
நிகழும் வரைக்கும்தான் ஒன்று
அதிசயம். நிகழ்ந்த பிறகு அது
சம்பவம்.
தொப்பூழ்க்கொடி அறுத்தது
முதல் அசைவக்
கலாசாரத்திலேயே வளர்ந்த
இசக்கி, அன்று முதல் தன்னைச்
சைவன் என்று
பிரகடனப்படுத்திக் கொண்டதும்
- எறும்பு செத்து மிதக்கும்
பாலைக்கூட அசைவமென்று
ஒதுக்கிய தமிழ் ரோஜா,
அன்று ஆமை ரத்தம் பருகக்
கேட்டதும் பழகியவர்களுக்கு
அதிர்ச்சியே தவிர
பண்பாட்டுக்கு அதிர்ச்சி அல்ல.
மனிதன் இயற்கையின் குழந்தை.
அவனது உணவை, உடையை,
உறையுளை ஏற்படுத்திக்
கொடுப்பதும் இயற்கைதான்.
மதுரையில் சட்டையில்லாத
உழவனைப் பார்த்து, இனி
சட்டை அணிவதில்லை என்று
வடநாட்டு உழவன் சபதம்
செய்தால், அது சரியான
சிந்தனை என்று கருத
முடியாது.
அந்த வெயில் பூமியில்
சட்டையில்லாமலிருப்பது ஓர்
உழவனின் செளகரியம்.
வடநாட்டுக் குளிரில் ஓர்
உழவன் சட்டையும்
தலைப்பாகையும்
அணிந்தே ஆக வேண்டும்.. அது
அவன் தேவை.
எனவே, சட்டை அணிவது -
அணியாதிருப்பது என்பதை
வானிலை தீர்மானிக்கிறது.
மனிதனின் ஆணைகள்,
மீறுவதற்காகவே
பிறப்பிக்கப்படுகின்றன.
இயற்கையின் ஆணைகள்
தேவைக்காகவே
படைக்கப்படுகின்றன.
ஆமைரத்தம் சைவமா
அசைவமா என்று
வாதாடுவதற்கான வாய்ப்பை,
தமிழ்ரோஜாவின் தாகம்
அவளுக்குத் தரவில்லை.
அவளைப் பொறுத்தவரை
அப்போது அவளுக்கு அது
திடதிரவம்.
குடித்தாள்.
குடித்துவிட்டுப் பால்குடித்த
குழந்தைபோல் இதழ்க்கடை
துடைத்தாள்.
அடுத்தொரு கேள்வியும் அவளே
கேட்டாள்.
அந்த ஆமைக்கறியைச்
சமைக்க முடியுமா?
மீனவர் நிமிர்ந்தனர்.
அதைப் பச்சையாகவே
சாப்பிடுவது என்று அவர்கள்
நெஞ்சுக்குள் நிறைவேற்றிக்
கொண்ட மெளனத் தீர்மானம்
சற்றே ஒத்தி வைக்கப்பட்டது.
இதைச் சமைக்கத்தான்
வேண்டுமா?
பச்சையாய் உண்டாலும்
அடிவயிற்றில் எரியும் அக்கினியில்
இது வெந்து போகாதா?
நெருப்பு என்பது அந்த
நிமிடத்தில் அவர்களுக்கு
ஆடம்பரம்.
அவர்களின் அந்த நேரத்து
அகராதியில் சமைத்தல் என்ற
சொல்லுக்கு நேரே,
காலவிரயம் அல்லது
படாடோபம் என்று பொருள்
போட்டிருந்தது.
ஆனாலும், ஒரு சைவப்
பெண்ணின் அசைவத்
தேவைக்காக அவர்கள்
சமைக்க ஆயத்தமானார்கள்.
முன்று வருடங்கடந்து மழை
பெய்த ஒரு திருநாளில், தன்
பழைய கலப்பையைத் தேடுகிற
ஓர் ஏழை விவசாயியைப்போல
அவர்கள் திசைக்கொருவராய்ப்
பறந்து தீப்பெட்டி
தேடினார்கள்.
ஒரு குடியானவன் வீட்டு
உண்டியலின் கடைசிக்
காசைப்போல அது ஏதோ
ஓர் ஆழத்தில் அகப்பட்டது.
அது சற்றே ஈரம்பூத்திருந்தது.
உள்ளே- ரயப்
படையெடுப்பில் தோற்றுத்
திரும்பிய நெப்போலியனின்
படைவீரர்களைப் போல
எண்ணிக்கையில் குறைவாகவே
இருந்தன தீக்குச்சிகள்.
பற்றவைக்க முயன்றான்
பாண்டி.
முதலாம் தீக்குச்சி -
உடைந்தது.
இரண்டாம் தீக்குச்சி -
பட்டையில் ஒரு பாதி கிழித்துத்
தானும் தேய்ந்தது.
முன்றாம் தீக்குச்சி - சற்றே
பற்றிச் சட்டென்று அணைந்தது.
தீக்குச்சி நாலாவது -
பற்றியது. ஏமாற்றாமல்
எரிந்தது.
அடுப்பும் முகங்களும் ஒரே
நேரத்தில் ஒளிகொண்டன.
தண்ணீர் இல்லாததால் அதன்
ரத்தம் ஊற்றப்பட்டு
அவசரமாய்ச் சமைக்கப்பட்டது
ஆமைக்கறி.
தட்டேந்தி நிற்கவோ
பங்கிட்டுக் கொள்ளவோ
பொறுமையின்றி, ஆளுக்கொரு
துண்டாய் அவர்கள் அவசரமாய்
உண்ட பிறகுதான்
தெரிந்தது... வெந்திருப்பது
கறி அல்ல - அவர்களின்
நாக்குகள் என்று.
அவர்களின் உடம்பின் ஆழத்தில்
வற்றி வண்டலாகிப் போன
உயிர் ஒவ்வொரு சொட்டாய்
ஊறத் தொடங்கியது.
கரை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 8 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
மீனவர் சங்கம் மிதந்தது
சத்தத்தில்.
காணவில்லை என் மகனை.
கண்டுபிடிக்க மாட்டீர்களா?
- அந்தக் கோடையிலும்
நடுங்கியது ஒரு முதாட்டியின்
குரல்.
காணவில்லை என் கணவனை.
செத்தாரா இருக்கிறாரா...
செய்தி
சொல்லமாட்டீர்களா? -
இது ஒரு
கைக்குழந்தைக்காரியின்
கதறல்.
பதறாதீர்கள், ஒன்றும்
ஆகாது அவர்கள் உயிர்களுக்கு.
இன்றைக்கே தேட ஏற்பாடு
செய்வோம். எப்படியும்
கிடைப்பார்கள் - ஒரு
பிசிறில்லாத ஆண்குரல்
பேசியது.
அவனுக்கு மட்டும்
ஏதாவதானால் நான்
கடலாத்தா மடியில்
விழுந்துதான் செத்துப்
போவேன்.
தரையில் செத்தால் எனக்குக்
கொள்ளிவைக்கத்தான் வேறு
பிள்ளை இல்லையே.
பாவம். கிழவியின் பீளைக்
கண்களில் ஏழைக்கண்ணீர்.
கடல்.
நேற்றுச் சொன்னேனே..
அது நிமாகிவிட்டது தமிழ்.
என்ன சொன்னீர்கள்?
இயற்கை அளவற்ற
கருணையுடையது என்றேன்.
இயற்கை தன் கருணையை ஆமை
வடிவில் அனுப்பி வைத்ததா
இல்லையா?
ஒரு பட்டமரத்தில்
புறப்படும் முதல் தளிரைப்
போல எனக்குள் புதிய
நம்பிக்கை பூத்திருக்கிறது.
பூமியைப் பற்றிக்கொள்ளும்
வேர்களைப்போல நீ
நம்பிக்கையைப் பற்றிக்கொள்.
ஒரு பறவை உன் தலைக்கு
மேலே பறப்பதை உன்னால்
தடுக்க முடியாது. ஆனால்,
அது உன் தலையில்
கூடுகட்டாமல் உன்னால் தடுக்க
முடியும்.
அவள் பாதி உதட்டில்
புன்னகைத்தாள்.
அதில் தேவையான சதவிகிதம்
சிருங்காரம் இருந்தது.
அதுவரைக்கும் பசியில் உலர்ந்து
கிடந்த காதல், சின்னதாய்ச்
சிலிர்த்துச் சிறகு விரித்தது.
அவன் நெருங்கி வந்தான்.
பட்டாம்பூச்சி பிடிக்கும்
சிறுவனைப் போல அசையாமல்
அவளையே பார்த்தான்.
சட்டென்று குனிந்தான்.
அவள் அசைவ உதடுகளில்
அவசரமாய் முத்தமிட்டான்.
உதடுகளின் ஓப்பந்தம் சில
நிமிடங்கள் நீடித்தது.
கடைசியில் பார்த்தால்
கரித்தது முத்தம்.
அவனுக்குத் தெரியாமல் அவளும்
அவளுக்குத் தெரியாமல் அவனும்
அழுத துளிகள் பர பரம்
உதடுகளில்
பரிமாறப்பட்டிருந்தன.
ஆனந்தக் கண்ணீர் மட்டும்
இனிக்குமா என்ன?
மேகமற்ற ராத்திரி.
மெல்லிய பிறை. ஒற்றை
உதட்டால் சிரித்தது மேற்கு
வானத்தில்.
கலங்காதிரு பிறையே.
உனக்குள்தான்
பூரணச்சந்திரன்
புதைந்திருக்கிறான்
- மகாகவி இக்பாலின் இந்தக்
கவிதை சலீமுக்குத் தெரியாது.
தெரிந்திருந்தால் பிறையை
அவன் முழுமையாய்
ரசித்திருப்பான்.
வயிற்றுக்குள் ஆமையை
நிரப்பிக்கொண்ட ஆனந்தக்
களிப்பில் - ஒரு மயக்க
போதை போன்ற பாதி
உறக்கத்தில் தளத்தில் அவர்கள்
சுதந்திரமாய்ச் சிதறி,
உருண்டும் நெளிந்தும் புரண்டும்
கொண்டிருந்தபொழுதில்
தூரத்தில் தெரிந்தது ஓர் ஒளி
ஊர்வலம்.
தன் உள்ளங்கைகளால் கண்களை
உரக்கத் தேய்த்துக்கொண்டு
மீண்டும் மீண்டும் பார்த்தான்
பாண்டி.
தன்னை மறந்து கத்தினான்.
கப்பல். கப்பல்.
தீப்பிடித்த வீடாய் அந்த
ஒரே சத்தத்தில்
விழித்துக்கொண்டது படகு.
கப்பல்தான். அது
கப்பல்தான். மென்மையாய்
மிதந்துபோகும் ஒரு
வெளிச்சத்தீவு.
அவர்கள் காத்துக்கிடந்த
நம்பிக்கை அதோ
கண்படுதூரத்தில்.
அதோ. அவர்களை உரசாமல்
போகிறது அவர்களின்
ஒளிமயமான எதிர்காலம்.
எப்படி அதை எட்டுவது?
ஒன்று - கப்பலை, அவர்கள்
சென்றுசேர வேண்டும்.
அல்லது -
கப்பல் அவர்களிடம்
வரவேண்டும்.
கப்பலை அவர்கள் சென்று
அடைய முடியாது.
அவர்களின் இருப்பையோ
கப்பல் அறியாது.
அது கெட்டிச்சாயம்
போட்டுக்கொண்ட ராத்திரி.
அவர்களின் இருப்பை
அவர்கள்தான் அறிவிக்க
வேண்டும்.
அவர்களாய் அறிவிப்பதற்கு
இரண்டே வழிகள்.
ஒன்று - ஒலி.
இன்னொன்று - ஒளி.
கப்பல் செல்வதோ ஒலி
எட்டாத தூரம்.
சத்தத்தில்.
காணவில்லை என் மகனை.
கண்டுபிடிக்க மாட்டீர்களா?
- அந்தக் கோடையிலும்
நடுங்கியது ஒரு முதாட்டியின்
குரல்.
காணவில்லை என் கணவனை.
செத்தாரா இருக்கிறாரா...
செய்தி
சொல்லமாட்டீர்களா? -
இது ஒரு
கைக்குழந்தைக்காரியின்
கதறல்.
பதறாதீர்கள், ஒன்றும்
ஆகாது அவர்கள் உயிர்களுக்கு.
இன்றைக்கே தேட ஏற்பாடு
செய்வோம். எப்படியும்
கிடைப்பார்கள் - ஒரு
பிசிறில்லாத ஆண்குரல்
பேசியது.
அவனுக்கு மட்டும்
ஏதாவதானால் நான்
கடலாத்தா மடியில்
விழுந்துதான் செத்துப்
போவேன்.
தரையில் செத்தால் எனக்குக்
கொள்ளிவைக்கத்தான் வேறு
பிள்ளை இல்லையே.
பாவம். கிழவியின் பீளைக்
கண்களில் ஏழைக்கண்ணீர்.
கடல்.
நேற்றுச் சொன்னேனே..
அது நிமாகிவிட்டது தமிழ்.
என்ன சொன்னீர்கள்?
இயற்கை அளவற்ற
கருணையுடையது என்றேன்.
இயற்கை தன் கருணையை ஆமை
வடிவில் அனுப்பி வைத்ததா
இல்லையா?
ஒரு பட்டமரத்தில்
புறப்படும் முதல் தளிரைப்
போல எனக்குள் புதிய
நம்பிக்கை பூத்திருக்கிறது.
பூமியைப் பற்றிக்கொள்ளும்
வேர்களைப்போல நீ
நம்பிக்கையைப் பற்றிக்கொள்.
ஒரு பறவை உன் தலைக்கு
மேலே பறப்பதை உன்னால்
தடுக்க முடியாது. ஆனால்,
அது உன் தலையில்
கூடுகட்டாமல் உன்னால் தடுக்க
முடியும்.
அவள் பாதி உதட்டில்
புன்னகைத்தாள்.
அதில் தேவையான சதவிகிதம்
சிருங்காரம் இருந்தது.
அதுவரைக்கும் பசியில் உலர்ந்து
கிடந்த காதல், சின்னதாய்ச்
சிலிர்த்துச் சிறகு விரித்தது.
அவன் நெருங்கி வந்தான்.
பட்டாம்பூச்சி பிடிக்கும்
சிறுவனைப் போல அசையாமல்
அவளையே பார்த்தான்.
சட்டென்று குனிந்தான்.
அவள் அசைவ உதடுகளில்
அவசரமாய் முத்தமிட்டான்.
உதடுகளின் ஓப்பந்தம் சில
நிமிடங்கள் நீடித்தது.
கடைசியில் பார்த்தால்
கரித்தது முத்தம்.
அவனுக்குத் தெரியாமல் அவளும்
அவளுக்குத் தெரியாமல் அவனும்
அழுத துளிகள் பர பரம்
உதடுகளில்
பரிமாறப்பட்டிருந்தன.
ஆனந்தக் கண்ணீர் மட்டும்
இனிக்குமா என்ன?
மேகமற்ற ராத்திரி.
மெல்லிய பிறை. ஒற்றை
உதட்டால் சிரித்தது மேற்கு
வானத்தில்.
கலங்காதிரு பிறையே.
உனக்குள்தான்
பூரணச்சந்திரன்
புதைந்திருக்கிறான்
- மகாகவி இக்பாலின் இந்தக்
கவிதை சலீமுக்குத் தெரியாது.
தெரிந்திருந்தால் பிறையை
அவன் முழுமையாய்
ரசித்திருப்பான்.
வயிற்றுக்குள் ஆமையை
நிரப்பிக்கொண்ட ஆனந்தக்
களிப்பில் - ஒரு மயக்க
போதை போன்ற பாதி
உறக்கத்தில் தளத்தில் அவர்கள்
சுதந்திரமாய்ச் சிதறி,
உருண்டும் நெளிந்தும் புரண்டும்
கொண்டிருந்தபொழுதில்
தூரத்தில் தெரிந்தது ஓர் ஒளி
ஊர்வலம்.
தன் உள்ளங்கைகளால் கண்களை
உரக்கத் தேய்த்துக்கொண்டு
மீண்டும் மீண்டும் பார்த்தான்
பாண்டி.
தன்னை மறந்து கத்தினான்.
கப்பல். கப்பல்.
தீப்பிடித்த வீடாய் அந்த
ஒரே சத்தத்தில்
விழித்துக்கொண்டது படகு.
கப்பல்தான். அது
கப்பல்தான். மென்மையாய்
மிதந்துபோகும் ஒரு
வெளிச்சத்தீவு.
அவர்கள் காத்துக்கிடந்த
நம்பிக்கை அதோ
கண்படுதூரத்தில்.
அதோ. அவர்களை உரசாமல்
போகிறது அவர்களின்
ஒளிமயமான எதிர்காலம்.
எப்படி அதை எட்டுவது?
ஒன்று - கப்பலை, அவர்கள்
சென்றுசேர வேண்டும்.
அல்லது -
கப்பல் அவர்களிடம்
வரவேண்டும்.
கப்பலை அவர்கள் சென்று
அடைய முடியாது.
அவர்களின் இருப்பையோ
கப்பல் அறியாது.
அது கெட்டிச்சாயம்
போட்டுக்கொண்ட ராத்திரி.
அவர்களின் இருப்பை
அவர்கள்தான் அறிவிக்க
வேண்டும்.
அவர்களாய் அறிவிப்பதற்கு
இரண்டே வழிகள்.
ஒன்று - ஒலி.
இன்னொன்று - ஒளி.
கப்பல் செல்வதோ ஒலி
எட்டாத தூரம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 8 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
அப்படியே உயிரைத் திரட்டி
ஒலி செய்தாலும் கப்பலின்
எந்திர ஓசைகிழித்து அவர்களை
எட்டுமோ? எட்டாதோ?
அடுத்துள்ள ஒரே வழி - ஒளி.
வெளிச்சம் காட்டுவோம்-
அவர்கள் வேகமான,
விவேகமான முடிவுக்கு
வந்தார்கள்.
படகின் மின்கலம் சில
நாட்களுக்கு முன்பே
செத்துவிட்டது.
ஒரு தீப்பந்தம்
தயாரிக்கலாம் அவசரத்
தீர்மானம் நிறைவேறியது.
அடுத்த விநாடியே
பாய்மரக்கழி ஒன்று
உருவப்பட்டது.
துணி. துணி.
பாய்மரம் பிரிக்கப்பட்டது.
துண்டுகள் - துணிகள் -
லுங்கிகள்
கழியில் சுற்றப்பட்டன.
சற்று நேரத்தில் கழிக்குத்
தலை முளைத்தது.
சரி... சரி.
கொளுத்து.
இரு... இரு. டீசலில்
நனை.
நனைத்தார்கள்.
கொளுத்து.
நிறுத்து.
ஏன் தடுக்கிறாய்?
ஒருவேளை பந்தம்
பற்றாமல் போனால்..?
முதலில் அடுப்பைப்
பற்றவைப்போம். அதிலிருந்து
நெருப்பெடுப்போம்.
அதுதான் சரி.
அவசரமாய் அடுப்படியில்
கூடினார்கள்.
தீப்பெட்டி திறந்தார்கள்.
உள்ளே-
இரண்டே குச்சிகள் இருந்தன.
ஒருவர் முகத்தை ஒருவர்
பார்த்துக் கொண்டார்கள்.
சுற்றி அடிக்கும் காற்று
சுழற்றியது படகை.
தீக்குச்சிகளின் இரண்டு
நுனிகளிலும் அவர்களின்
எதிர்காலம்
திரண்டிருந்தது
ஏ தீக்குச்சிகளே. எங்கள் எதிர்காலத்தின்
மந்திரக்கோல்களே. கைகூப்புகிறோம்
உங்களை, கைவிட்டு விடாதீர்கள்.
நெருப்பை ஒரு சின்னக்குச்சியின் உச்சியில்
சேமித்து வைத்தவனே. உனக்கு எங்கள்
நன்றி.
இந்த நெருப்பை அடைவதற்கு எமக்கு
முன்னிருந்த மனிதஜாதி என்னென்ன
பாடுபட்டிருக்கும்?
ஒரு முங்கில்காடு பற்றுகிறவரைக்கும்
நெருப்புக்குக் காத்திருந்த
ஆதிமனிதர்களைப் போல் -சிக்கிமுக்கிக்
கல்லுக்குள்ளும் தீக்கடைகோலுக்குள்ளும்
நெருப்பைப் பிரசிவிக்கப் பாடுபட்ட
மனிதர்களைப் போல் - உரசியும் - தேய்த்தும்
-கடைந்தும் - குடைந்தும் தீயைத்தேடி
அடைந்த மனிதர்களைப்போல் - இதோ
நாங்களும் எங்கள் உயிரைக் கையில்
பிடித்துக் கொண்டு, எங்கள் ஜீவநெருப்பின்
னனத்துக்குக் காத்திருக்கிறோம்.
தீக்குச்சியே பற்றிக்கொள்.
காற்றே அணைத்துவிடாதே.
தீப்பந்தமே எரி.
கப்பலே நில்.
பாண்டி முதல் குச்சியை எடுத்தான்,
அவனுக்குக் கை நடுங்கியது.
எல்லோரும் வட்டமாய் நின்று காற்றை
மறைத்து வீடு கட்டினார்கள்.
கப்பல் கடந்துவிடப்போகிறது..
உரசு பாண்டி. உரசு.
மென்மையாய் உரசினான்.
அது பற்றவில்லை.
சற்றே அழுத்தினான், ஒரு பாதி மருந்து
உராய்ந்து தேய்ந்தது,
மறுபக்கம் உரசினான்,
அவ்வளவுதான், அது சிரச்சேதமானது.
எல்லோரும் பதறினார்கள்.
இன்னும் ஒரே ஒரு குச்சி..
அவர்களின் உயிர்க்குச்சி.
ஒதுங்கு. என்னிடம் கொடு
தீப்பெட்டியைப் பரதன் வாங்கினான்.
அம்பின் நுனியில் மனம் குவிக்கும் ஒரு
வில்வீரனைப்போல முழு கவனத்தோடு
முனைந்தான்.
தன் உள்ளங்கை உணத்தைப்
பட்டைக்கும் தீக்குச்சிக்கும் பரிமாறித்
தீப்பெட்டியை இடக்கையில் இறுக்கிப் பற்றி,
வலக்கையில் தீக்குச்சி ஏந்தித் தன் ஒரு
விரலால் அதற்குப் பக்கபலம் சேர்த்துத்
தன் உள்ளத்தையெல்லாம் தீக்குச்சியில்
வைத்து உரசியபோது முன்றாவது உரசலில்
பொசுக்கென்று பூத்தது நெருப்பு.
ஆகா. உயிரின் ஒளிவடிவம்.
அந்தப் பரவசத்தோடு அதை அடுப்புத்
திரியில் பற்றவைக்கப் போன அந்த
விநாடியின் இரண்டாம் பாகத்தில், சந்துவழி
வந்த சுழற்காற்று அந்த உயிரின் சுடரைப்
பொசுக்கென்று அணைத்துவிட்டுப்
போய்விட்டது.
ஆ. அய்யோ. அய்யய்யோ.
எல்லோரும் பரபரவென்று ஒடிவந்து
விளிம்பில் நின்று பார்த்தபோது கப்பல்
கடந்துவிட்டது.
அவர்கள் நம்பிக்கையின் இறுதி
ஊர்வலமாய் அது தூரத்தில்
மறைந்துகொண்டிருந்தது.
ஏ பகலே.
நாங்கள் என்ன தவறு
செய்தோம்?
பூமிக்கே வெளிச்சம்
கொண்டுவரும் நீ,
எங்களை மட்டும்
ஏன் விட்டுவிட்டு விடிகிறாய்?
எங்கள் ஒவ்வொரு
நம்பிக்கையையும் நீரில்
விழுந்த நிலவின் பிம்பமாய்க்
காட்டுவதுபோல் காட்டி
ஏன் கலைத்துவிடுகிறாய்?
ஏ கடலே.
ஒலி செய்தாலும் கப்பலின்
எந்திர ஓசைகிழித்து அவர்களை
எட்டுமோ? எட்டாதோ?
அடுத்துள்ள ஒரே வழி - ஒளி.
வெளிச்சம் காட்டுவோம்-
அவர்கள் வேகமான,
விவேகமான முடிவுக்கு
வந்தார்கள்.
படகின் மின்கலம் சில
நாட்களுக்கு முன்பே
செத்துவிட்டது.
ஒரு தீப்பந்தம்
தயாரிக்கலாம் அவசரத்
தீர்மானம் நிறைவேறியது.
அடுத்த விநாடியே
பாய்மரக்கழி ஒன்று
உருவப்பட்டது.
துணி. துணி.
பாய்மரம் பிரிக்கப்பட்டது.
துண்டுகள் - துணிகள் -
லுங்கிகள்
கழியில் சுற்றப்பட்டன.
சற்று நேரத்தில் கழிக்குத்
தலை முளைத்தது.
சரி... சரி.
கொளுத்து.
இரு... இரு. டீசலில்
நனை.
நனைத்தார்கள்.
கொளுத்து.
நிறுத்து.
ஏன் தடுக்கிறாய்?
ஒருவேளை பந்தம்
பற்றாமல் போனால்..?
முதலில் அடுப்பைப்
பற்றவைப்போம். அதிலிருந்து
நெருப்பெடுப்போம்.
அதுதான் சரி.
அவசரமாய் அடுப்படியில்
கூடினார்கள்.
தீப்பெட்டி திறந்தார்கள்.
உள்ளே-
இரண்டே குச்சிகள் இருந்தன.
ஒருவர் முகத்தை ஒருவர்
பார்த்துக் கொண்டார்கள்.
சுற்றி அடிக்கும் காற்று
சுழற்றியது படகை.
தீக்குச்சிகளின் இரண்டு
நுனிகளிலும் அவர்களின்
எதிர்காலம்
திரண்டிருந்தது
ஏ தீக்குச்சிகளே. எங்கள் எதிர்காலத்தின்
மந்திரக்கோல்களே. கைகூப்புகிறோம்
உங்களை, கைவிட்டு விடாதீர்கள்.
நெருப்பை ஒரு சின்னக்குச்சியின் உச்சியில்
சேமித்து வைத்தவனே. உனக்கு எங்கள்
நன்றி.
இந்த நெருப்பை அடைவதற்கு எமக்கு
முன்னிருந்த மனிதஜாதி என்னென்ன
பாடுபட்டிருக்கும்?
ஒரு முங்கில்காடு பற்றுகிறவரைக்கும்
நெருப்புக்குக் காத்திருந்த
ஆதிமனிதர்களைப் போல் -சிக்கிமுக்கிக்
கல்லுக்குள்ளும் தீக்கடைகோலுக்குள்ளும்
நெருப்பைப் பிரசிவிக்கப் பாடுபட்ட
மனிதர்களைப் போல் - உரசியும் - தேய்த்தும்
-கடைந்தும் - குடைந்தும் தீயைத்தேடி
அடைந்த மனிதர்களைப்போல் - இதோ
நாங்களும் எங்கள் உயிரைக் கையில்
பிடித்துக் கொண்டு, எங்கள் ஜீவநெருப்பின்
னனத்துக்குக் காத்திருக்கிறோம்.
தீக்குச்சியே பற்றிக்கொள்.
காற்றே அணைத்துவிடாதே.
தீப்பந்தமே எரி.
கப்பலே நில்.
பாண்டி முதல் குச்சியை எடுத்தான்,
அவனுக்குக் கை நடுங்கியது.
எல்லோரும் வட்டமாய் நின்று காற்றை
மறைத்து வீடு கட்டினார்கள்.
கப்பல் கடந்துவிடப்போகிறது..
உரசு பாண்டி. உரசு.
மென்மையாய் உரசினான்.
அது பற்றவில்லை.
சற்றே அழுத்தினான், ஒரு பாதி மருந்து
உராய்ந்து தேய்ந்தது,
மறுபக்கம் உரசினான்,
அவ்வளவுதான், அது சிரச்சேதமானது.
எல்லோரும் பதறினார்கள்.
இன்னும் ஒரே ஒரு குச்சி..
அவர்களின் உயிர்க்குச்சி.
ஒதுங்கு. என்னிடம் கொடு
தீப்பெட்டியைப் பரதன் வாங்கினான்.
அம்பின் நுனியில் மனம் குவிக்கும் ஒரு
வில்வீரனைப்போல முழு கவனத்தோடு
முனைந்தான்.
தன் உள்ளங்கை உணத்தைப்
பட்டைக்கும் தீக்குச்சிக்கும் பரிமாறித்
தீப்பெட்டியை இடக்கையில் இறுக்கிப் பற்றி,
வலக்கையில் தீக்குச்சி ஏந்தித் தன் ஒரு
விரலால் அதற்குப் பக்கபலம் சேர்த்துத்
தன் உள்ளத்தையெல்லாம் தீக்குச்சியில்
வைத்து உரசியபோது முன்றாவது உரசலில்
பொசுக்கென்று பூத்தது நெருப்பு.
ஆகா. உயிரின் ஒளிவடிவம்.
அந்தப் பரவசத்தோடு அதை அடுப்புத்
திரியில் பற்றவைக்கப் போன அந்த
விநாடியின் இரண்டாம் பாகத்தில், சந்துவழி
வந்த சுழற்காற்று அந்த உயிரின் சுடரைப்
பொசுக்கென்று அணைத்துவிட்டுப்
போய்விட்டது.
ஆ. அய்யோ. அய்யய்யோ.
எல்லோரும் பரபரவென்று ஒடிவந்து
விளிம்பில் நின்று பார்த்தபோது கப்பல்
கடந்துவிட்டது.
அவர்கள் நம்பிக்கையின் இறுதி
ஊர்வலமாய் அது தூரத்தில்
மறைந்துகொண்டிருந்தது.
ஏ பகலே.
நாங்கள் என்ன தவறு
செய்தோம்?
பூமிக்கே வெளிச்சம்
கொண்டுவரும் நீ,
எங்களை மட்டும்
ஏன் விட்டுவிட்டு விடிகிறாய்?
எங்கள் ஒவ்வொரு
நம்பிக்கையையும் நீரில்
விழுந்த நிலவின் பிம்பமாய்க்
காட்டுவதுபோல் காட்டி
ஏன் கலைத்துவிடுகிறாய்?
ஏ கடலே.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 8 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
கருணை காட்டி எங்களைக்
கரைசேர்...
அல்லது உன் வயிற்றுக்குள்
எங்களை உள்ளிழுத்துக்கொள்.
எங்களுக்கு
ஏதாவது ஒன்றுதான் வேண்டும்-
வாழ்வு அல்லது சாவு.
ஆனால் ஒன்று -
இரண்டில் எதுவென்றாலும்,
எமக்கு முழுமையாய் வேண்டும்.
ஒன்று - பூரண வாழ்வு
அல்லது பூரணச் சாவு.
வாழ்வென்றால் -
எதிலும் மிச்சம் வைக்காத
முழுவாழ்வு.
சாவென்றால் -
தவணை முறையில் இல்லாத
முழுச்சாவு.
கொஞ்சம் வாழ்வு -
கொஞ்சம் சாவு...
இந்த விளையாட்டெல்லாம்
வேண்டாம்.
மனித வாழ்வின் பெருந்துன்பம்
எது தெரியுமா?
மரணத்தைவிட வாழ்க்கை
பயமானது என்று தெரிந்த
பின்பும், வாழ்க்கையோடு
ஒட்டிக்கொண்டிருப்பதுதான்.
உடம்பு மெல்ல மெல்ல
உலர்ந்து கொண்டிருக்கிறது.
உயிர் மட்டும் எந்த வழியாக
வெளியேறுவது என்ற
தீர்மானத்துக்குப் பக்கத்தில்
திணறிக் கொண்டிருக்கிறது.
மிக ஆர்வமாய் - ஆனால்,
தீர்க்கமாய்க் கேட்டாள்
தமிழ்ரோஜா.
பேசாமல்
இறந்துவிடலாமா?
முகமெங்கும் முள்முள்ளாய்ப்
பூத்திருந்த தாடியைத்
தடவிக்கொண்டே
ஜீவன் இல்லாமல் சிரித்தான்
கலைவண்ணன்.
இதோ பார். தட்டுப்பட்ட
ஒரே ஒரு கப்பலையும்
தவறவிட்டதற்குத்தானே உன்
கண்கள் மரணக்கண்ணீர்
வடிக்கின்றன? ஓர்
அ தமனத்துக்காக அழுது,
பூமிக்கு இனிமேல் பகலே
இல்லை என்று புலம்பினால்
எப்படி?
நாம் வாழ வேண்டுமென்று
நம்மைப் போலவே
இயற்கையும் ஆசைப்படுகிறது.
அந்த ஆசையின்
அடையாளங்களே ஆமையும் -
கப்பலும். நீ இடையில்
அடைந்த தைரியத்தை
இழந்துவிடாதே.
சந்தோத்தின் தேதி குறிப்பது
மட்டும்தான் மனிதகுலத்தின்
வேலை. சாவின் தேதி
குறிப்பது காலத்தின்
வேலை...
சாவதற்குக்கூட எனக்கு
உரிமையில்லையா?
சாவது என்பது உன்
உரிமையன்று. அது நியதி. நீ
உயிரோடு பூமியில் வந்து
விழுந்ததை எப்படி நீ முடிவு
செய்யவில்லையோ, அப்படியே
- இந்த உடம்பைப் பூமியில்
போட்டுவிட்டுப் போவதையும்
நீ முடிவு செய்ய முடியாது.
கொஞ்சம் போராடு...
போராடும் தெம்பு
போய்விட்டது. என் வாழ்க்கை
முடிந்துவிட்டது...
இல்லை - இனிமேல்தான்
உன் வாழ்க்கை
தொடங்கப்போகிறது.
நிச்சயம் நாம்
கரைமீள்வோம். பிறகு பார்.
மரணத்தின் வாசல்வரை சென்று
மீண்டவர்களுக்கே வாழ்வின்
பெருமை விளங்கும்.
நீ வாழ்க்கையைத்
துளித்துளியாய் ரசிப்பாய்.
வாழ்வின் ஒவ்வொரு கணமும்
உனக்குப் பெருமை
உடையதாகும். ஒவ்வொரு
புல்லிலும் பூவிலும் தீராத
வாழ்க்கை தேங்கி நிற்பது
தெரியும். தான் உதிரும் முதல்
நிமிம் வரைக்கும் - ஏன்...
உதிர்ந்து பூமியில்
விழும்வரைக்கும், இந்தப்
பிரபஞ்சத்தின் சந்தோத்தை
மட்டுமே காற்றோடு
பேசிக்கொண்டிருக்கும் ஒரு
தென்னங்கீற்றைப் போல -
இனி இன்பமன்றி உனக்கு வேறு
இராது.
முதன்முதலாக மலேசியா
வந்திறங்கிய ஓர் அரபி,
மழைத்துளிகளை நேசிப்பது
போல்- நீ நிமிங்களை
நேசிப்பாய். டிசம்பர்
மாதத்தின் இந்திய வெயிலை
நேசிக்கும் ஓர் எ கிமோவைப்
போல் - நீ வாழ்க்கையை
ரசிப்பாய்.
ஒரு சிறைக்கைதிக்குத்தான்
தெரியும் - சுதந்திரத்தின்
பெருமை. நம்மைப் போன்ற
அலைக்கைதிகளுக்குத்தான்
தெரியும் - பூமியின் அருமை.
பொறு தமிழ். பொறு...
இரவில் நம்மைக் கடந்த
கப்பல், ஒரு பகலில்
கடவாதா?
அவளை அள்ளித் தழுவி ஆதரவு
செய்தான். காமமில்லாமல்
அவள் கழுத்தில் முத்தமிட்டான்.
அவள், அவன் மடியில் முகம்
புதைத்துப் பாதுகாப்பாய்
அழுதாள்.
ஓடிவாருங்கள்...
எல்லாரும் ஓடிவாருங்கள்.
பரதன் தலை சுற்றி
விழுந்துவிட்டான். பயமாக
இருக்கிறது. அவன் கண்ணில்
கருப்புமணிகள் காணவில்லை.
வெள்ளைவிழி தெரிகிறது.
கண்கள் செருகிவிட்டன.
ஓடிவாருங்கள்... எல்லாரும்
ஓடிவாருங்கள்...
- உடம்பும் சொல்லும்
நடுங்க நடுங்கத் துடித்துக்
கத்தினான் இசக்கி.
எல்லோரும் சோர்வு மறந்து
அவனைச் சூழ்ந்தார்கள்.
அசைவற்ற கட்டையாய்க்
கிடந்தவன் முகத்தில், கடல்நீர்
பிழியவும் முனகினான்.
பிறகு சற்றே கண்விழித்தவன் -
பிசாசு, பிசாசு. படகு
பத்திரம். என்று கூறியது
கூறினான்.
உண்மை சொல் பரதன்,
என்ன கண்டாய்? என்ன
உளறுகிறாய்?
- கலைவண்ணன் அவனை
உலுக்கினான்.
அவன் தன் முகத்தைக்
கைகளால் முடிக்கொண்டே
குனிந்து பேசினான்.
நேற்றிரவு நீங்களெல்லாம்
தூங்கிவிட்டீர்கள். நான்
தூங்கவில்லை.
நள்ளிரவுக்குமேல் யாரோ
படகை உள்ளே பிடித்து
இழுப்பதாய்த் தோன்றியது.
படகு விட்டுவிட்டு
இழுக்கப்பட்டது.
படகு முழுக்க இழுக்கப்பட்டு
நாம் முழ்கிப் போவோம்
என்றே நினைத்தேன்.
சந்தேகமே இல்லை
- அது கடல் பிசாசுதான்.
கரையில் கதை கதையாய்ச்
சொல்வார்கள்.
முத்தாண்டிக் கிழவனும் அவன்
பேரனும் அப்படித்தான் இறந்து
போனார்கள். இரவெல்லாம்
பயத்தில் என்னால் பேச
முடியவில்லை. கடல் பிசாசு
நம்மைக் கரையேற விடாது
பேனாக்காரரே.
கரைசேர்...
அல்லது உன் வயிற்றுக்குள்
எங்களை உள்ளிழுத்துக்கொள்.
எங்களுக்கு
ஏதாவது ஒன்றுதான் வேண்டும்-
வாழ்வு அல்லது சாவு.
ஆனால் ஒன்று -
இரண்டில் எதுவென்றாலும்,
எமக்கு முழுமையாய் வேண்டும்.
ஒன்று - பூரண வாழ்வு
அல்லது பூரணச் சாவு.
வாழ்வென்றால் -
எதிலும் மிச்சம் வைக்காத
முழுவாழ்வு.
சாவென்றால் -
தவணை முறையில் இல்லாத
முழுச்சாவு.
கொஞ்சம் வாழ்வு -
கொஞ்சம் சாவு...
இந்த விளையாட்டெல்லாம்
வேண்டாம்.
மனித வாழ்வின் பெருந்துன்பம்
எது தெரியுமா?
மரணத்தைவிட வாழ்க்கை
பயமானது என்று தெரிந்த
பின்பும், வாழ்க்கையோடு
ஒட்டிக்கொண்டிருப்பதுதான்.
உடம்பு மெல்ல மெல்ல
உலர்ந்து கொண்டிருக்கிறது.
உயிர் மட்டும் எந்த வழியாக
வெளியேறுவது என்ற
தீர்மானத்துக்குப் பக்கத்தில்
திணறிக் கொண்டிருக்கிறது.
மிக ஆர்வமாய் - ஆனால்,
தீர்க்கமாய்க் கேட்டாள்
தமிழ்ரோஜா.
பேசாமல்
இறந்துவிடலாமா?
முகமெங்கும் முள்முள்ளாய்ப்
பூத்திருந்த தாடியைத்
தடவிக்கொண்டே
ஜீவன் இல்லாமல் சிரித்தான்
கலைவண்ணன்.
இதோ பார். தட்டுப்பட்ட
ஒரே ஒரு கப்பலையும்
தவறவிட்டதற்குத்தானே உன்
கண்கள் மரணக்கண்ணீர்
வடிக்கின்றன? ஓர்
அ தமனத்துக்காக அழுது,
பூமிக்கு இனிமேல் பகலே
இல்லை என்று புலம்பினால்
எப்படி?
நாம் வாழ வேண்டுமென்று
நம்மைப் போலவே
இயற்கையும் ஆசைப்படுகிறது.
அந்த ஆசையின்
அடையாளங்களே ஆமையும் -
கப்பலும். நீ இடையில்
அடைந்த தைரியத்தை
இழந்துவிடாதே.
சந்தோத்தின் தேதி குறிப்பது
மட்டும்தான் மனிதகுலத்தின்
வேலை. சாவின் தேதி
குறிப்பது காலத்தின்
வேலை...
சாவதற்குக்கூட எனக்கு
உரிமையில்லையா?
சாவது என்பது உன்
உரிமையன்று. அது நியதி. நீ
உயிரோடு பூமியில் வந்து
விழுந்ததை எப்படி நீ முடிவு
செய்யவில்லையோ, அப்படியே
- இந்த உடம்பைப் பூமியில்
போட்டுவிட்டுப் போவதையும்
நீ முடிவு செய்ய முடியாது.
கொஞ்சம் போராடு...
போராடும் தெம்பு
போய்விட்டது. என் வாழ்க்கை
முடிந்துவிட்டது...
இல்லை - இனிமேல்தான்
உன் வாழ்க்கை
தொடங்கப்போகிறது.
நிச்சயம் நாம்
கரைமீள்வோம். பிறகு பார்.
மரணத்தின் வாசல்வரை சென்று
மீண்டவர்களுக்கே வாழ்வின்
பெருமை விளங்கும்.
நீ வாழ்க்கையைத்
துளித்துளியாய் ரசிப்பாய்.
வாழ்வின் ஒவ்வொரு கணமும்
உனக்குப் பெருமை
உடையதாகும். ஒவ்வொரு
புல்லிலும் பூவிலும் தீராத
வாழ்க்கை தேங்கி நிற்பது
தெரியும். தான் உதிரும் முதல்
நிமிம் வரைக்கும் - ஏன்...
உதிர்ந்து பூமியில்
விழும்வரைக்கும், இந்தப்
பிரபஞ்சத்தின் சந்தோத்தை
மட்டுமே காற்றோடு
பேசிக்கொண்டிருக்கும் ஒரு
தென்னங்கீற்றைப் போல -
இனி இன்பமன்றி உனக்கு வேறு
இராது.
முதன்முதலாக மலேசியா
வந்திறங்கிய ஓர் அரபி,
மழைத்துளிகளை நேசிப்பது
போல்- நீ நிமிங்களை
நேசிப்பாய். டிசம்பர்
மாதத்தின் இந்திய வெயிலை
நேசிக்கும் ஓர் எ கிமோவைப்
போல் - நீ வாழ்க்கையை
ரசிப்பாய்.
ஒரு சிறைக்கைதிக்குத்தான்
தெரியும் - சுதந்திரத்தின்
பெருமை. நம்மைப் போன்ற
அலைக்கைதிகளுக்குத்தான்
தெரியும் - பூமியின் அருமை.
பொறு தமிழ். பொறு...
இரவில் நம்மைக் கடந்த
கப்பல், ஒரு பகலில்
கடவாதா?
அவளை அள்ளித் தழுவி ஆதரவு
செய்தான். காமமில்லாமல்
அவள் கழுத்தில் முத்தமிட்டான்.
அவள், அவன் மடியில் முகம்
புதைத்துப் பாதுகாப்பாய்
அழுதாள்.
ஓடிவாருங்கள்...
எல்லாரும் ஓடிவாருங்கள்.
பரதன் தலை சுற்றி
விழுந்துவிட்டான். பயமாக
இருக்கிறது. அவன் கண்ணில்
கருப்புமணிகள் காணவில்லை.
வெள்ளைவிழி தெரிகிறது.
கண்கள் செருகிவிட்டன.
ஓடிவாருங்கள்... எல்லாரும்
ஓடிவாருங்கள்...
- உடம்பும் சொல்லும்
நடுங்க நடுங்கத் துடித்துக்
கத்தினான் இசக்கி.
எல்லோரும் சோர்வு மறந்து
அவனைச் சூழ்ந்தார்கள்.
அசைவற்ற கட்டையாய்க்
கிடந்தவன் முகத்தில், கடல்நீர்
பிழியவும் முனகினான்.
பிறகு சற்றே கண்விழித்தவன் -
பிசாசு, பிசாசு. படகு
பத்திரம். என்று கூறியது
கூறினான்.
உண்மை சொல் பரதன்,
என்ன கண்டாய்? என்ன
உளறுகிறாய்?
- கலைவண்ணன் அவனை
உலுக்கினான்.
அவன் தன் முகத்தைக்
கைகளால் முடிக்கொண்டே
குனிந்து பேசினான்.
நேற்றிரவு நீங்களெல்லாம்
தூங்கிவிட்டீர்கள். நான்
தூங்கவில்லை.
நள்ளிரவுக்குமேல் யாரோ
படகை உள்ளே பிடித்து
இழுப்பதாய்த் தோன்றியது.
படகு விட்டுவிட்டு
இழுக்கப்பட்டது.
படகு முழுக்க இழுக்கப்பட்டு
நாம் முழ்கிப் போவோம்
என்றே நினைத்தேன்.
சந்தேகமே இல்லை
- அது கடல் பிசாசுதான்.
கரையில் கதை கதையாய்ச்
சொல்வார்கள்.
முத்தாண்டிக் கிழவனும் அவன்
பேரனும் அப்படித்தான் இறந்து
போனார்கள். இரவெல்லாம்
பயத்தில் என்னால் பேச
முடியவில்லை. கடல் பிசாசு
நம்மைக் கரையேற விடாது
பேனாக்காரரே.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 8 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
அவன் மெல்ல நடுங்கினான்.
குலுங்கி அழுதது குன்று.
கண்ணீர் அருவிகள் சிதறின.
கலைவண்ணன், அவன் கைகளை
வாரித் தன் தோள்களில்
இட்டுக்கொண்டான்.
ஒவ்வொரு விரலாய்ச்
சொடுக்கெடுத்துக்கொண்டே
சொன்னான்.
பயம் வேண்டாம் பரதன்.
இப்படிக் கடல் பிசாசு கண்டு
கலங்கும் பயம் உங்களுக்குமட்டுமல்ல, உலகம்
முழுவதுமிருக்கிறது. சற்றே
செவி கொடுங்கள், ஒரு
சரித்திரம் சொல்கிறேன்.
அட்லாண்டிக் சமுத்திரத்தில்
பெர்முடா முக்கோணம்
என்றொரு மர்ம முக்கோணம்
இருக்கிறது. அதற்குள் நுழைந்த
கப்பல்கள் காணாமல்
போயின. காணாமல் போன
கப்பல்களைத் தேடப்போன
விமானங்கள், அந்த
எல்லைக்குள் நுழைந்தவுடன்
வெடித்துச் சிதறின.
அறுபத்திரண்டு கப்பல்களும்
பதினெட்டு விமானங்களும்
இரண்டாயிரம் மனிதர்களும்
அதற்குள் தொலைந்து
போனதாய்ச் சொன்னார்கள்.
தப்பிப் பிழைத்த ஒரு விமானி
சொன்னார்.
விமானத்தை ஏதோ ஒரு
சக்தி இழுத்தது. விமானமே
வேலைநிறுத்தம் செய்தது.
சற்று நேரத்தில்
வெடித்துவிட்டது...
பெர்முடா முக்கோணத்துக்கு
மேலே பல மைல்
தூரத்துக்குப் பரவியிருக்கும்
காந்த சக்திதான் அதற்குக்
காரணம் என்ற ஒரு கற்பனை
முடிவுக்கு வந்தவர்கள்,
அதற்குள் பிளா டிக்
படகுகளைச் செலுத்தினார்கள்.
பிளா டிக் படகுகளையும்
பெர்முடா சிதறுதேங்காய்
போட்டது. பிறகுதான்
பிசாசுகள் வாழும்
பெர்முடா என்று உலகம்
பேசத் தொடங்கியது.
ஆனால், ரயர்கள் மட்டும்
அதை நம்பவில்லை. 1982-ல்
விட்யா என்ற கப்பலில்
புறப்பட்டு, முக்கோண
எல்லைக்குச் சற்றே தூரத்தில்
நிறுத்தித் துப்பறிந்தார்கள்.
கொஞ்சம் முன்னேறவும்,
கப்பலில் இருந்தவர்களுக்குக்
கை-கால் விளங்கவில்லை.
புயலின் சின்னம்
எதுவுமில்லாமலே, புயல்
வீசுவதாய்க் கருவி காட்டியது.
அதன்பிறகுதான் உண்மை
அறியப்பட்டது.
பெர்முடா சில் ராட்சச
நீர்ச்சுழிகள் உண்டாகி,
நிரந்தரமாய்ச் சுழல்கின்றன.
அதன்மேல் அசுரச் சூறாவளி
ஒன்று அமைதியாய்
வீசிக்கொண்டிருக்கிறது. அதுவே
கப்பல்களும் விமானங்களும்
கவிழக் காரணம். இந்த
விஞ்ஞான நெருப்பு
வீசப்பட்டவுடன், அதுவரை
நம்பப்பட்டு வந்த பிசாசு
இறந்துவிட்டது.
அதைப்போலத்தான் இதுவும்.
கடல்நீரின் ஏற்றவற்றத்தில்
படகு அமிழலாம்.
எழும்பலாம்.
அது பிசாசு அல்ல பரதன்.
பேசாமலிரு.
மனப்பேய்களையும்
மனிதப்பேய்களையும் தவிர,
மனிதப் பிரபஞ்சத்தில் வேறு
பேய்கள் இல்லை. எழுந்திரு
பரதன். எழுந்திரு.
தூங்குமுஞ்சி மரத்தின் இலைகள்
அதிகாலையில் மெல்ல மெல்ல
விரிவதுபோல், பரதன் மெல்ல
மெல்லப் பயம் தெளிந்தான்.
அவனுக்கு முன்னால் அவன்
நம்பிக்கை எழுந்து கொண்டது.
இந்தக் காதுமடல்
இருக்கிறதே. அது உடம்பின்
ஓர் உணர்ச்சிமயமான
பிரதேசம். மெல்லிய
குருத்தெலும்புகளாலான
மென்மையான பாகம்.
அந்தக் காலத்தில் பல
மீன்தார்களுக்குக்
காதுமடல்களை யாராவது
வருடிக்கொடுத்தால்தான்
தூக்கம் வருமாம்.
பாலியல் பொழுதுகளிலும்
அதற்கொரு மன்மதப் பங்கு
உண்டு.
இமைகள் என்னும் முடி
கண்களுக்குண்டு.
இதழ்கள் என்னும் முடி
வாய்க்குண்டு.
முக்கையும்கூடக் கைகளின்
உதவியின்றியே முடிக்கொள்ள
முடியும்.
உடம்பின் பிற வாசல்களும்
அப்படித்தான். ஆனால், இந்த
உடம்பில் காதுகளுக்கு
மட்டும்தான் கதவுகளில்லை.
காதுகளை மட்டும்தான் முயற்சி
இல்லாமல் முட முடியாது.
கண்களையும் வாயையும்
காதுகளையும் தனித்தனியே
பொத்திக் கொண்டிருக்கும்
குரங்குச் சிலைகள் முன்று
தேவையில்லை.
குலுங்கி அழுதது குன்று.
கண்ணீர் அருவிகள் சிதறின.
கலைவண்ணன், அவன் கைகளை
வாரித் தன் தோள்களில்
இட்டுக்கொண்டான்.
ஒவ்வொரு விரலாய்ச்
சொடுக்கெடுத்துக்கொண்டே
சொன்னான்.
பயம் வேண்டாம் பரதன்.
இப்படிக் கடல் பிசாசு கண்டு
கலங்கும் பயம் உங்களுக்குமட்டுமல்ல, உலகம்
முழுவதுமிருக்கிறது. சற்றே
செவி கொடுங்கள், ஒரு
சரித்திரம் சொல்கிறேன்.
அட்லாண்டிக் சமுத்திரத்தில்
பெர்முடா முக்கோணம்
என்றொரு மர்ம முக்கோணம்
இருக்கிறது. அதற்குள் நுழைந்த
கப்பல்கள் காணாமல்
போயின. காணாமல் போன
கப்பல்களைத் தேடப்போன
விமானங்கள், அந்த
எல்லைக்குள் நுழைந்தவுடன்
வெடித்துச் சிதறின.
அறுபத்திரண்டு கப்பல்களும்
பதினெட்டு விமானங்களும்
இரண்டாயிரம் மனிதர்களும்
அதற்குள் தொலைந்து
போனதாய்ச் சொன்னார்கள்.
தப்பிப் பிழைத்த ஒரு விமானி
சொன்னார்.
விமானத்தை ஏதோ ஒரு
சக்தி இழுத்தது. விமானமே
வேலைநிறுத்தம் செய்தது.
சற்று நேரத்தில்
வெடித்துவிட்டது...
பெர்முடா முக்கோணத்துக்கு
மேலே பல மைல்
தூரத்துக்குப் பரவியிருக்கும்
காந்த சக்திதான் அதற்குக்
காரணம் என்ற ஒரு கற்பனை
முடிவுக்கு வந்தவர்கள்,
அதற்குள் பிளா டிக்
படகுகளைச் செலுத்தினார்கள்.
பிளா டிக் படகுகளையும்
பெர்முடா சிதறுதேங்காய்
போட்டது. பிறகுதான்
பிசாசுகள் வாழும்
பெர்முடா என்று உலகம்
பேசத் தொடங்கியது.
ஆனால், ரயர்கள் மட்டும்
அதை நம்பவில்லை. 1982-ல்
விட்யா என்ற கப்பலில்
புறப்பட்டு, முக்கோண
எல்லைக்குச் சற்றே தூரத்தில்
நிறுத்தித் துப்பறிந்தார்கள்.
கொஞ்சம் முன்னேறவும்,
கப்பலில் இருந்தவர்களுக்குக்
கை-கால் விளங்கவில்லை.
புயலின் சின்னம்
எதுவுமில்லாமலே, புயல்
வீசுவதாய்க் கருவி காட்டியது.
அதன்பிறகுதான் உண்மை
அறியப்பட்டது.
பெர்முடா சில் ராட்சச
நீர்ச்சுழிகள் உண்டாகி,
நிரந்தரமாய்ச் சுழல்கின்றன.
அதன்மேல் அசுரச் சூறாவளி
ஒன்று அமைதியாய்
வீசிக்கொண்டிருக்கிறது. அதுவே
கப்பல்களும் விமானங்களும்
கவிழக் காரணம். இந்த
விஞ்ஞான நெருப்பு
வீசப்பட்டவுடன், அதுவரை
நம்பப்பட்டு வந்த பிசாசு
இறந்துவிட்டது.
அதைப்போலத்தான் இதுவும்.
கடல்நீரின் ஏற்றவற்றத்தில்
படகு அமிழலாம்.
எழும்பலாம்.
அது பிசாசு அல்ல பரதன்.
பேசாமலிரு.
மனப்பேய்களையும்
மனிதப்பேய்களையும் தவிர,
மனிதப் பிரபஞ்சத்தில் வேறு
பேய்கள் இல்லை. எழுந்திரு
பரதன். எழுந்திரு.
தூங்குமுஞ்சி மரத்தின் இலைகள்
அதிகாலையில் மெல்ல மெல்ல
விரிவதுபோல், பரதன் மெல்ல
மெல்லப் பயம் தெளிந்தான்.
அவனுக்கு முன்னால் அவன்
நம்பிக்கை எழுந்து கொண்டது.
இந்தக் காதுமடல்
இருக்கிறதே. அது உடம்பின்
ஓர் உணர்ச்சிமயமான
பிரதேசம். மெல்லிய
குருத்தெலும்புகளாலான
மென்மையான பாகம்.
அந்தக் காலத்தில் பல
மீன்தார்களுக்குக்
காதுமடல்களை யாராவது
வருடிக்கொடுத்தால்தான்
தூக்கம் வருமாம்.
பாலியல் பொழுதுகளிலும்
அதற்கொரு மன்மதப் பங்கு
உண்டு.
இமைகள் என்னும் முடி
கண்களுக்குண்டு.
இதழ்கள் என்னும் முடி
வாய்க்குண்டு.
முக்கையும்கூடக் கைகளின்
உதவியின்றியே முடிக்கொள்ள
முடியும்.
உடம்பின் பிற வாசல்களும்
அப்படித்தான். ஆனால், இந்த
உடம்பில் காதுகளுக்கு
மட்டும்தான் கதவுகளில்லை.
காதுகளை மட்டும்தான் முயற்சி
இல்லாமல் முட முடியாது.
கண்களையும் வாயையும்
காதுகளையும் தனித்தனியே
பொத்திக் கொண்டிருக்கும்
குரங்குச் சிலைகள் முன்று
தேவையில்லை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 8 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
கண்களை இமைகளாலும் வாயை
உதடுகளாலும் சுயமாக
முடிக்கொண்டு, காதுகளை
மட்டும் கைகளால்
பொத்திக்கொள்ளும் ஒரே ஒரு
குரங்குச் சிலை போதும்.
தொழிலாளிகளுக்குக் காதுமடல்
என்பது சேமிப்பு வங்கி.
பீடி, பென்சில், காது
குடையும் குச்சி - இவற்றைக்
காதுமடல்களில்
வைத்துக்கொள்வது அவர்களுக்கு
வசதி.
இசக்கியின் காதுமடலில்
தற்செயலாய்ப் பார்வை
ஓட்டிய சலீம், அண்ணே.
அது என்ன? என்று
ஆச்சரியம் காட்டினான்.
அதில் ஒரே ஒரு குச்சி -
காது குடைய வைத்திருந்த தீக்குச்சி
- காணப்பட்டது.
எப்போதோ எடுத்து வைத்த
அந்தத் தீக்குச்சியும் அதன்
நுனியில் மருந்திருப்பதும்
அவனுக்கு மறந்து
போயிருந்தது.
அதைப் பாய்ந்துசென்று
பறித்துப் பரவசத்தில்
கூத்தாடினான் சலீம்.
தீக்குச்சி. தீக்குச்சி.
என்று கத்தினான்.
வேர்வைச் சொட்டுகளில்
நனைந்திருந்த அந்தத்
தீக்குச்சியை அந்திவெயிலில்
காயவைத்தார்கள்.
அதில் மட்டும் தீப்பந்தம்
பற்றிக்கொண்டால் ஒரு தீர்வு
கிடைக்கும் என்று
நம்பினார்கள்.
ஒரு தாய் தன் குழந்தைக்கு
மைதீட்டும் கவனத்தோடும்,
ஒரு காதலன் தன் காதலிக்கு
முதல் கடிதம் எழுதும்
ஆர்வத்தோடும் அவர்கள்
அதைப் பத்திரமாகப்
பற்றவைக்க, பற்றிக்கொண்டது
தீப்பந்தம்.
ஆகா. ஆகா.
இது நம்பிக்கைச் சுடர்.
வாழ்வின் ¤வாலை.
இதை அணைய விடக்கூடாது.
இதை அணையவிட்டால், நம்
உயிர்த்தீயை அணையவிட்டோம்
என்று அர்த்தம்.
நெருப்பு ஓர் அபூர்வமாகவும்
அதிசயமாகவும் இருந்த
ஆதிகாலத்தில், பழைய
எகிப்திலும் கிரேக்கத்திலும்
ரோமிலும் ஊருக்கு மத்தியில்
ஒரே ஓர் இடத்தில்,
எப்போதும் நெருப்பு
எரிந்து கொண்டேயிருக்குமாம்.
எவர் தேவைக்கும் எடுத்துச்
செல்லலாமாம். அவர்கள்
அதை அணையவிட்டதில்லையாம்.
அப்படித்தான் இதுவும் -
பொதுநெருப்பு.
அணையாமல் காப்போம்.
அனைவரும் காப்போம்.
இரவு...
வானமங்கை தன் அடர்த்தியான
கூந்தலைப் பூமியில்
அவிழ்த்துவிட்டாள்.
நட்சத்திரங்களைக்
காணவில்லை.
ஆனால், அவர்கள்
நம்பிக்கையைப் போலவே,
பிறையும் சில மில்லிமீட்டர்
வளர்ந்திருந்தது.
அங்கங்கே கனத்த மேகங்கள்
வானத்தை மறைத்திருந்தன.
ஏ காலமே. எமக்குக்
கருணை காட்டு. நேற்று
எங்கள் கையில்
தீப்பந்தமில்லை.
எங்கள் பாதையில் ஒரு கப்பல்
கடக்கவிட்டாய். இன்று எங்கள் கையில்
தீப்பந்தமிருக்கிறது, தயவுசெய்து இன்னொரு
கப்பலைக் கடக்கவிடு.
இரவு முழுவதும் தீப்பந்தத்தை
ஒருவரையெருவர் மாற்றி மாற்றி உயர்த்திப்
பிடிப்பதாய் முடிவானது.
பாண்டியின் கையிலிருந்து பரதனுக்கும்,
பரதன் கையிலிருந்து இசக்கிக்கும் வந்த
தீப்பந்தம் நள்ளிரவுக்குப் பிறகு சலீம் கைக்கு
இடம் பெயர்ந்தது.
அவன் உறக்கத்தை உதறிவிட்டுத்
தீப்பந்தத்தை உயர்த்திப் பிடித்தான்,
மற்றவர்கள் உறங்கிவிட்டார்கள்.
நள்ளிரவு கடந்தபோது,
அந்த அதிசயம் நிகழ்ந்தது.
ஒரு கஞ்சனின் பையிலிருந்து அவனுக்குத்
தெரியாமல் விழுந்துவிட்ட வெள்ளிக்
காசைப்போல, மேகத்திலிருந்து அவிழ்ந்து
விழுந்தது ஒரு துளி.
பிறகு, ஒன்றிரண்டு முன்றென்று துளிகளின்
எண்ணிக்கை தொடர்ந்தது.
மழை. மழை.
என்று கத்தினான் சலீம்.
எல்லோரும் அலறியடித்து எழுந்தோடி
வரவும் வானம் கிழிந்து கொண்டது
கொட்டோ கொட்டேன்று கொட்டத்
தொடங்கியது.
ஆனந்தம் - அதிர்ச்சி - பரவசம் -
பதற்றம்.... அவர்களுக்கு ஒன்றுமே
தோன்றவில்லை.
படபடவென்று ஆளுக்கொரு பாத்திரம்
எடுத்தார்கள், பிடித்தார்கள்.
பீப்பாய் கொண்டுவந்து தளத்தில் வைத்தார்கள்
மழை. மழை.
விட்டுவிடக்கூடாது இந்த மழையை
எடுங்கள் தார்ப்பாயை.
நான்கு முனையை நான்கு பேர் ஏந்துங்கள்
சற்றே தார்ப்பாயைத் தளரவிட்டுக்
குழி செய்யுங்கள்,
தார்ப்பாயில் நிரம்பட்டும் தண்ணீர்.
அப்படியே செய்தார்கள்,
அதுவும் வழிந்தது.
ஒதுங்காதே தமிழ்.
வா, வெளியே வா.
கொட்டும் மழையில் முழுக்க முழுக்க
நனைந்துவிடு.
உன் ஆடைகளை நனைத்துத் தண்ணீரைச்
சேமி, பிறகு பிழிந்து கொள்ளலாம்,
அவளும் அப்படியே செய்தாள்.
அவர்கள் குதித்தார்கள் குளித்தார்கள்
கைதட்டினார்கள், கத்தினார்கள்.
மழை நின்றபோது, ஏறத்தாழ அவர்களின்
எல்லாப் பாத்திரங்களும் நிரம்பியிருந்தன.
ஆனால் அவசரத்தில் சலீம் ஓர் ஓரத்தில்
சாய்ந்து நிறுத்திய தீப்பந்தம் மட்டும் மழையில்
அணைந்து கிடந்தது.
அழுவதா? ஆனந்தப்படுவதா?
கைவசம் இருந்த
கடைசிநெருப்பு அணைந்து
போனதற்காக அழுவதா?
அவர்களின் உயிரை ஊறவைக்கும்
தண்ணீரால் பாத்திரங்கள்
நிறைந்து வழிவது பார்த்து
ஆனந்தப்படுவதா?
ஒன்றை இழந்துதான்
இன்னொன்றா?
இயற்கை இட்ட சட்டம்
இதுதானா?
அனுபவம் வேண்டுமா -
இளமையை இழ...
ஆயுள் வேண்டுமா - போகம்
இழ...
கவிதை வேண்டுமா-உன்னை
இழ...
காதல் வேண்டுமா -
இதயத்தை இழ...
வளர்ச்சி வேண்டுமா -
தூக்கத்தை இழ...
வரவு வேண்டுமா -
வியர்வையை இழ.
ஒன்றை இழந்துதான்
இன்னொன்று.
அவர்கள் அணைந்துபோன
தீப்பந்தத்துக்காக
அழுவதாயில்லை.
மழை - உடம்பிலிருந்த உப்புப்
பிசுக்கையும் உள்ளத்திலிருந்த
கண்ணீர்ப் பிசுக்கையும்
ஒருசேரக் கழுவி விட்டதில்
அவர்கள் ஆனந்தமே
அடைந்தார்கள்.
ஆகா.
உடம்பில் தண்ணீர் விழுந்தால்
உயிர் நனைந்து போகுமோ?
பீப்பாய்த் தண்ணீரை
அவர்கள் வாரிவாரிக்
குடித்ததில் வயிறு முட்டியது.
மழை நின்றுவிட்டது.
நனைந்த ஆடையைப் போலவே
உடம்பும் வாடைக்காற்றில்
வெடவெடவென்று ஆடத்
தொடங்கியது.
அய்யோ. என்னை
நனையவைத்து நடுங்கவைத்து
விட்டீர்களே.
உதடுகளாலும் சுயமாக
முடிக்கொண்டு, காதுகளை
மட்டும் கைகளால்
பொத்திக்கொள்ளும் ஒரே ஒரு
குரங்குச் சிலை போதும்.
தொழிலாளிகளுக்குக் காதுமடல்
என்பது சேமிப்பு வங்கி.
பீடி, பென்சில், காது
குடையும் குச்சி - இவற்றைக்
காதுமடல்களில்
வைத்துக்கொள்வது அவர்களுக்கு
வசதி.
இசக்கியின் காதுமடலில்
தற்செயலாய்ப் பார்வை
ஓட்டிய சலீம், அண்ணே.
அது என்ன? என்று
ஆச்சரியம் காட்டினான்.
அதில் ஒரே ஒரு குச்சி -
காது குடைய வைத்திருந்த தீக்குச்சி
- காணப்பட்டது.
எப்போதோ எடுத்து வைத்த
அந்தத் தீக்குச்சியும் அதன்
நுனியில் மருந்திருப்பதும்
அவனுக்கு மறந்து
போயிருந்தது.
அதைப் பாய்ந்துசென்று
பறித்துப் பரவசத்தில்
கூத்தாடினான் சலீம்.
தீக்குச்சி. தீக்குச்சி.
என்று கத்தினான்.
வேர்வைச் சொட்டுகளில்
நனைந்திருந்த அந்தத்
தீக்குச்சியை அந்திவெயிலில்
காயவைத்தார்கள்.
அதில் மட்டும் தீப்பந்தம்
பற்றிக்கொண்டால் ஒரு தீர்வு
கிடைக்கும் என்று
நம்பினார்கள்.
ஒரு தாய் தன் குழந்தைக்கு
மைதீட்டும் கவனத்தோடும்,
ஒரு காதலன் தன் காதலிக்கு
முதல் கடிதம் எழுதும்
ஆர்வத்தோடும் அவர்கள்
அதைப் பத்திரமாகப்
பற்றவைக்க, பற்றிக்கொண்டது
தீப்பந்தம்.
ஆகா. ஆகா.
இது நம்பிக்கைச் சுடர்.
வாழ்வின் ¤வாலை.
இதை அணைய விடக்கூடாது.
இதை அணையவிட்டால், நம்
உயிர்த்தீயை அணையவிட்டோம்
என்று அர்த்தம்.
நெருப்பு ஓர் அபூர்வமாகவும்
அதிசயமாகவும் இருந்த
ஆதிகாலத்தில், பழைய
எகிப்திலும் கிரேக்கத்திலும்
ரோமிலும் ஊருக்கு மத்தியில்
ஒரே ஓர் இடத்தில்,
எப்போதும் நெருப்பு
எரிந்து கொண்டேயிருக்குமாம்.
எவர் தேவைக்கும் எடுத்துச்
செல்லலாமாம். அவர்கள்
அதை அணையவிட்டதில்லையாம்.
அப்படித்தான் இதுவும் -
பொதுநெருப்பு.
அணையாமல் காப்போம்.
அனைவரும் காப்போம்.
இரவு...
வானமங்கை தன் அடர்த்தியான
கூந்தலைப் பூமியில்
அவிழ்த்துவிட்டாள்.
நட்சத்திரங்களைக்
காணவில்லை.
ஆனால், அவர்கள்
நம்பிக்கையைப் போலவே,
பிறையும் சில மில்லிமீட்டர்
வளர்ந்திருந்தது.
அங்கங்கே கனத்த மேகங்கள்
வானத்தை மறைத்திருந்தன.
ஏ காலமே. எமக்குக்
கருணை காட்டு. நேற்று
எங்கள் கையில்
தீப்பந்தமில்லை.
எங்கள் பாதையில் ஒரு கப்பல்
கடக்கவிட்டாய். இன்று எங்கள் கையில்
தீப்பந்தமிருக்கிறது, தயவுசெய்து இன்னொரு
கப்பலைக் கடக்கவிடு.
இரவு முழுவதும் தீப்பந்தத்தை
ஒருவரையெருவர் மாற்றி மாற்றி உயர்த்திப்
பிடிப்பதாய் முடிவானது.
பாண்டியின் கையிலிருந்து பரதனுக்கும்,
பரதன் கையிலிருந்து இசக்கிக்கும் வந்த
தீப்பந்தம் நள்ளிரவுக்குப் பிறகு சலீம் கைக்கு
இடம் பெயர்ந்தது.
அவன் உறக்கத்தை உதறிவிட்டுத்
தீப்பந்தத்தை உயர்த்திப் பிடித்தான்,
மற்றவர்கள் உறங்கிவிட்டார்கள்.
நள்ளிரவு கடந்தபோது,
அந்த அதிசயம் நிகழ்ந்தது.
ஒரு கஞ்சனின் பையிலிருந்து அவனுக்குத்
தெரியாமல் விழுந்துவிட்ட வெள்ளிக்
காசைப்போல, மேகத்திலிருந்து அவிழ்ந்து
விழுந்தது ஒரு துளி.
பிறகு, ஒன்றிரண்டு முன்றென்று துளிகளின்
எண்ணிக்கை தொடர்ந்தது.
மழை. மழை.
என்று கத்தினான் சலீம்.
எல்லோரும் அலறியடித்து எழுந்தோடி
வரவும் வானம் கிழிந்து கொண்டது
கொட்டோ கொட்டேன்று கொட்டத்
தொடங்கியது.
ஆனந்தம் - அதிர்ச்சி - பரவசம் -
பதற்றம்.... அவர்களுக்கு ஒன்றுமே
தோன்றவில்லை.
படபடவென்று ஆளுக்கொரு பாத்திரம்
எடுத்தார்கள், பிடித்தார்கள்.
பீப்பாய் கொண்டுவந்து தளத்தில் வைத்தார்கள்
மழை. மழை.
விட்டுவிடக்கூடாது இந்த மழையை
எடுங்கள் தார்ப்பாயை.
நான்கு முனையை நான்கு பேர் ஏந்துங்கள்
சற்றே தார்ப்பாயைத் தளரவிட்டுக்
குழி செய்யுங்கள்,
தார்ப்பாயில் நிரம்பட்டும் தண்ணீர்.
அப்படியே செய்தார்கள்,
அதுவும் வழிந்தது.
ஒதுங்காதே தமிழ்.
வா, வெளியே வா.
கொட்டும் மழையில் முழுக்க முழுக்க
நனைந்துவிடு.
உன் ஆடைகளை நனைத்துத் தண்ணீரைச்
சேமி, பிறகு பிழிந்து கொள்ளலாம்,
அவளும் அப்படியே செய்தாள்.
அவர்கள் குதித்தார்கள் குளித்தார்கள்
கைதட்டினார்கள், கத்தினார்கள்.
மழை நின்றபோது, ஏறத்தாழ அவர்களின்
எல்லாப் பாத்திரங்களும் நிரம்பியிருந்தன.
ஆனால் அவசரத்தில் சலீம் ஓர் ஓரத்தில்
சாய்ந்து நிறுத்திய தீப்பந்தம் மட்டும் மழையில்
அணைந்து கிடந்தது.
அழுவதா? ஆனந்தப்படுவதா?
கைவசம் இருந்த
கடைசிநெருப்பு அணைந்து
போனதற்காக அழுவதா?
அவர்களின் உயிரை ஊறவைக்கும்
தண்ணீரால் பாத்திரங்கள்
நிறைந்து வழிவது பார்த்து
ஆனந்தப்படுவதா?
ஒன்றை இழந்துதான்
இன்னொன்றா?
இயற்கை இட்ட சட்டம்
இதுதானா?
அனுபவம் வேண்டுமா -
இளமையை இழ...
ஆயுள் வேண்டுமா - போகம்
இழ...
கவிதை வேண்டுமா-உன்னை
இழ...
காதல் வேண்டுமா -
இதயத்தை இழ...
வளர்ச்சி வேண்டுமா -
தூக்கத்தை இழ...
வரவு வேண்டுமா -
வியர்வையை இழ.
ஒன்றை இழந்துதான்
இன்னொன்று.
அவர்கள் அணைந்துபோன
தீப்பந்தத்துக்காக
அழுவதாயில்லை.
மழை - உடம்பிலிருந்த உப்புப்
பிசுக்கையும் உள்ளத்திலிருந்த
கண்ணீர்ப் பிசுக்கையும்
ஒருசேரக் கழுவி விட்டதில்
அவர்கள் ஆனந்தமே
அடைந்தார்கள்.
ஆகா.
உடம்பில் தண்ணீர் விழுந்தால்
உயிர் நனைந்து போகுமோ?
பீப்பாய்த் தண்ணீரை
அவர்கள் வாரிவாரிக்
குடித்ததில் வயிறு முட்டியது.
மழை நின்றுவிட்டது.
நனைந்த ஆடையைப் போலவே
உடம்பும் வாடைக்காற்றில்
வெடவெடவென்று ஆடத்
தொடங்கியது.
அய்யோ. என்னை
நனையவைத்து நடுங்கவைத்து
விட்டீர்களே.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 8 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
கலைவண்ணன் சிரித்தான்.
கண்ணை முடாமல் தும்ம
முடியுமா? தண்ணீர் படாமல்
குளிக்க முடியுமா? எங்கே உன்
ஆடை கொடு. நான் பிழிந்து
விடுகிறேன். ஒரு மிச்சப்
பாத்திரத்தில் அதையும்
பிடித்துக் கொள்கிறேன்.
பிறகு, நானே அதைக்
குடித்துக் கொள்கிறேன்.
முலிகைகளை மோதிவரும்
தண்ணீருக்கே நோய்தீர்க்கும்
குணமுண்டாமே. உன்னைத் தடவி
வந்த தண்ணீருக்கு
என்னை உயிர்ப்பிக்கும் சக்தி
இருக்காதா?
வாடைக் காற்றில் நனைந்து
நடுங்கியவளைச் சிறிதும்
சிந்திவிடாமல் சேர்த்தணைத்துத்
தன் உடம்பின் உணத்தை
ஊட்டினான் கலைவண்ணன்.
மீனவர்கள் ஆடை கழற்றிப்
பிழிந்து ஒருவரையொருவர்
துவட்டிவிட்டார்கள்.
விடிந்தது.
மழையில் நனைந்த இரவை
சூரியன் வந்து துவட்டி விட்டது.
தமிழ்ரோஜாவின் கைப்பை
திறந்துபார்த்ததில் பளிச்சென்று
மின்னலிட்டன கலைவண்ணன்
கண்கள்.
நாம் ஒரு கடிதம் எழுதிக்
கடலில் வீசினாலென்ன?
எப்படி எழுதுவது?
இதோ உன் கைப்பையில்
பேனாவும் குறிப்பேடும்...
இரண்டையும் வெளியில்
எடுத்தான்.
தமிழ்ரோஜா என்று எழுதிப்
பார்த்தான். எழுதியது.
சிறந்த யோசனை.
ஆனால், எப்படி
அனுப்புவது?
நம்மிடமிருக்கும் ஒரு
காலிப்புட்டியில்... கடிதத்தை
வைத்து நீர்புகாமல் இறுக
முடியிட்டுக் கடலில் அஞ்சல்
செய்வோம். கரைசென்று
சேர்ந்தாலும் சரி அல்லது ஒரு
கப்பலையோ
கட்டுமரத்தையோ
அடைந்தாலும் சரி
எல்லோரும் கூடிவிட்டார்கள்.
சரி... என்ன
எழுதுவது?
சென்னைக்
கடற்கரையிலிருந்து
வங்காளவிரிகுடாவின்
தென்கிழக்கே 40 முதல் 50
கிலோ மீட்டருக்குள் பதின்முன்று
நாட்களாய்ப் பழுதான படகில்
சிறையிருக்கும் தண்ணீர்க்
கைதிகள் நாங்கள். இது
கடற்பயணிகளின் கையில்
சேர்ந்தால் தயவுசெய்து
எங்களைக் காப்பாற்ற
வாருங்கள்.
கரையிலுள்ளவர்களின் கையில்
சேர்ந்தால் கருணைகொண்டு
காவல்துறை இயக்குநருக்குச்
சேர்த்துவிடுங்கள்.
எதற்கும் தமிழில் எழுதிவிட்டு
ஆங்கிலத்திலும் எழுதுவோம்.
சரியாகச் சொன்னாய்...
நன்றி தமிழ். நன்றி.
ஈரச்சட்டையை உயர்த்திப்
பிடித்துக் காற்றிலும் வெயிலிலும்
உலர்த்திக் கொண்டிருந்த
இசக்கி, பேனாக்காரரே.
எனக்கு ஒரு சகாயம்
செய்வீர்களா? என்றான்.
எல்லோர் பார்வையும்
அவன்பக்கம் திரும்பி
என்னவென்றது.
தாய்-என் தாய்-வாழ்வு,
வைத்துக்கொள்ள முடியாமலும்
சாவு, வாங்கிக் கொள்ள
முடியாமலும் தள்ளாடும் வயதில்
இருக்கும் என் தாய் -
அவளுக்கு ஒரே ஒரு சேதியை
இத்தோடு சேர்த்து
அனுப்பமுடியுமா?
பரதன் படபடப்பானான்.
உனக்கு மட்டும்தான்
சொந்தமா? நாங்களெல்லாம்
அநாதைகளா? எங்களுக்காக
அழுவதற்குக் கரையில் ஆளே
இல்லையா? பேனாக்காரரே.
நானும் சேதி சொல்ல
வேண்டும். எனக்கும் சேர்த்து
எழுதுங்கள்.
கலைவண்ணன் சற்றே மெளனம்
காத்தான். கண்களால் கண்கள்
படித்தான்.
பிறகு பேசினான்.
கடிதம் அனுப்பும் உரிமையும்
உறவும் நம் ஒவ்வொருவருக்கும்
உண்டு. ஆளுக்கொரு கடிதம்
எழுதுவோம். எல்லாவற்றையும்
மொத்தமாக அனுப்புவோம்.
இசக்கி இப்போது உனக்காக
எழுதுகிறேன். என்ன எழுத
வேண்டும் சொல்.
இசக்கியின் உணர்ச்சி -
கலைவண்ணன் வார்த்தைகளில்
கடிதமானது.
அன்புள்ள அம்மா
மேரி செல்லத்தாயி
அவர்களுக்கு. உன் மகன்
கடலுக்குள் இருந்து எழுதும்
கடிதம் இது. நடுக்கடலில்
படகு பழுதாகி உயிருக்குப்
போராடிக்
கொண்டிருக்கிறேன். உன்
வயதான முகத்தை எண்ணி எண்ணி
யாருக்கும் தெரியாமல் அழுது
கொள்கிறேன். விற்பனைக்குக்
கூறுகட்டி வைத்த மீன்களில்
ஒட்டும் ஈக்களை ஓட்டி ஓட்டி
ஓய்ந்துபோன அந்தக்
கைகளுக்கு மீண்டும் முத்தமிடும்
வாய்ப்பைக் கர்த்தர்
எனக்கருள்வாரா? ஒருவேளை,
நான் செத்துவிட்டால்,
தாயே... மீனவர் சங்கம்
வழங்கும் என் மிச்சச்
சேமிப்பில் நம் கூரைவீட்டுக்கு
ஓடு மாற்றிக் கொள்.
இப்படிக்கு,
இசக்கி
இசக்கி கண்ணீரைத் துடைத்துக்
கொண்டான். கலைவண்ணன் தன்
கண்ணீரை மறைத்துக்
கொண்டான்.
இப்போது பாண்டியின் கடிதம்
எழுதப்பட்டது.
என் அன்பு மனைவி
வரலட்சுமி. நீயும்
குழந்தைகளும் சுகமா?
என்னைப் பற்றிக்
கேட்கிறாயா? இந்தக் கடிதம்
எழுதப்படும் இந்த நிமிம்
வரை நான்
உயிரோடுதானிருக்கிறேன்.
கரைமீது எங்களுக்கு ஆசை.
எங்கள்மீது கடலுக்கு ஆசை.
எப்படியும் மீள்வோம் என்ற
நம்பிக்கையோடுதான்
இருக்கிறோம். எனக்காக அழ
வேண்டாம். ஒருவேளை, நான்
இறந்துவிட்டால் வளரும்
பிள்ளைகள் வளரும் வரை
அவர்களுக்கு நான் செத்த
செய்தி சொல்லாதே.
கண்ணை முடாமல் தும்ம
முடியுமா? தண்ணீர் படாமல்
குளிக்க முடியுமா? எங்கே உன்
ஆடை கொடு. நான் பிழிந்து
விடுகிறேன். ஒரு மிச்சப்
பாத்திரத்தில் அதையும்
பிடித்துக் கொள்கிறேன்.
பிறகு, நானே அதைக்
குடித்துக் கொள்கிறேன்.
முலிகைகளை மோதிவரும்
தண்ணீருக்கே நோய்தீர்க்கும்
குணமுண்டாமே. உன்னைத் தடவி
வந்த தண்ணீருக்கு
என்னை உயிர்ப்பிக்கும் சக்தி
இருக்காதா?
வாடைக் காற்றில் நனைந்து
நடுங்கியவளைச் சிறிதும்
சிந்திவிடாமல் சேர்த்தணைத்துத்
தன் உடம்பின் உணத்தை
ஊட்டினான் கலைவண்ணன்.
மீனவர்கள் ஆடை கழற்றிப்
பிழிந்து ஒருவரையொருவர்
துவட்டிவிட்டார்கள்.
விடிந்தது.
மழையில் நனைந்த இரவை
சூரியன் வந்து துவட்டி விட்டது.
தமிழ்ரோஜாவின் கைப்பை
திறந்துபார்த்ததில் பளிச்சென்று
மின்னலிட்டன கலைவண்ணன்
கண்கள்.
நாம் ஒரு கடிதம் எழுதிக்
கடலில் வீசினாலென்ன?
எப்படி எழுதுவது?
இதோ உன் கைப்பையில்
பேனாவும் குறிப்பேடும்...
இரண்டையும் வெளியில்
எடுத்தான்.
தமிழ்ரோஜா என்று எழுதிப்
பார்த்தான். எழுதியது.
சிறந்த யோசனை.
ஆனால், எப்படி
அனுப்புவது?
நம்மிடமிருக்கும் ஒரு
காலிப்புட்டியில்... கடிதத்தை
வைத்து நீர்புகாமல் இறுக
முடியிட்டுக் கடலில் அஞ்சல்
செய்வோம். கரைசென்று
சேர்ந்தாலும் சரி அல்லது ஒரு
கப்பலையோ
கட்டுமரத்தையோ
அடைந்தாலும் சரி
எல்லோரும் கூடிவிட்டார்கள்.
சரி... என்ன
எழுதுவது?
சென்னைக்
கடற்கரையிலிருந்து
வங்காளவிரிகுடாவின்
தென்கிழக்கே 40 முதல் 50
கிலோ மீட்டருக்குள் பதின்முன்று
நாட்களாய்ப் பழுதான படகில்
சிறையிருக்கும் தண்ணீர்க்
கைதிகள் நாங்கள். இது
கடற்பயணிகளின் கையில்
சேர்ந்தால் தயவுசெய்து
எங்களைக் காப்பாற்ற
வாருங்கள்.
கரையிலுள்ளவர்களின் கையில்
சேர்ந்தால் கருணைகொண்டு
காவல்துறை இயக்குநருக்குச்
சேர்த்துவிடுங்கள்.
எதற்கும் தமிழில் எழுதிவிட்டு
ஆங்கிலத்திலும் எழுதுவோம்.
சரியாகச் சொன்னாய்...
நன்றி தமிழ். நன்றி.
ஈரச்சட்டையை உயர்த்திப்
பிடித்துக் காற்றிலும் வெயிலிலும்
உலர்த்திக் கொண்டிருந்த
இசக்கி, பேனாக்காரரே.
எனக்கு ஒரு சகாயம்
செய்வீர்களா? என்றான்.
எல்லோர் பார்வையும்
அவன்பக்கம் திரும்பி
என்னவென்றது.
தாய்-என் தாய்-வாழ்வு,
வைத்துக்கொள்ள முடியாமலும்
சாவு, வாங்கிக் கொள்ள
முடியாமலும் தள்ளாடும் வயதில்
இருக்கும் என் தாய் -
அவளுக்கு ஒரே ஒரு சேதியை
இத்தோடு சேர்த்து
அனுப்பமுடியுமா?
பரதன் படபடப்பானான்.
உனக்கு மட்டும்தான்
சொந்தமா? நாங்களெல்லாம்
அநாதைகளா? எங்களுக்காக
அழுவதற்குக் கரையில் ஆளே
இல்லையா? பேனாக்காரரே.
நானும் சேதி சொல்ல
வேண்டும். எனக்கும் சேர்த்து
எழுதுங்கள்.
கலைவண்ணன் சற்றே மெளனம்
காத்தான். கண்களால் கண்கள்
படித்தான்.
பிறகு பேசினான்.
கடிதம் அனுப்பும் உரிமையும்
உறவும் நம் ஒவ்வொருவருக்கும்
உண்டு. ஆளுக்கொரு கடிதம்
எழுதுவோம். எல்லாவற்றையும்
மொத்தமாக அனுப்புவோம்.
இசக்கி இப்போது உனக்காக
எழுதுகிறேன். என்ன எழுத
வேண்டும் சொல்.
இசக்கியின் உணர்ச்சி -
கலைவண்ணன் வார்த்தைகளில்
கடிதமானது.
அன்புள்ள அம்மா
மேரி செல்லத்தாயி
அவர்களுக்கு. உன் மகன்
கடலுக்குள் இருந்து எழுதும்
கடிதம் இது. நடுக்கடலில்
படகு பழுதாகி உயிருக்குப்
போராடிக்
கொண்டிருக்கிறேன். உன்
வயதான முகத்தை எண்ணி எண்ணி
யாருக்கும் தெரியாமல் அழுது
கொள்கிறேன். விற்பனைக்குக்
கூறுகட்டி வைத்த மீன்களில்
ஒட்டும் ஈக்களை ஓட்டி ஓட்டி
ஓய்ந்துபோன அந்தக்
கைகளுக்கு மீண்டும் முத்தமிடும்
வாய்ப்பைக் கர்த்தர்
எனக்கருள்வாரா? ஒருவேளை,
நான் செத்துவிட்டால்,
தாயே... மீனவர் சங்கம்
வழங்கும் என் மிச்சச்
சேமிப்பில் நம் கூரைவீட்டுக்கு
ஓடு மாற்றிக் கொள்.
இப்படிக்கு,
இசக்கி
இசக்கி கண்ணீரைத் துடைத்துக்
கொண்டான். கலைவண்ணன் தன்
கண்ணீரை மறைத்துக்
கொண்டான்.
இப்போது பாண்டியின் கடிதம்
எழுதப்பட்டது.
என் அன்பு மனைவி
வரலட்சுமி. நீயும்
குழந்தைகளும் சுகமா?
என்னைப் பற்றிக்
கேட்கிறாயா? இந்தக் கடிதம்
எழுதப்படும் இந்த நிமிம்
வரை நான்
உயிரோடுதானிருக்கிறேன்.
கரைமீது எங்களுக்கு ஆசை.
எங்கள்மீது கடலுக்கு ஆசை.
எப்படியும் மீள்வோம் என்ற
நம்பிக்கையோடுதான்
இருக்கிறோம். எனக்காக அழ
வேண்டாம். ஒருவேளை, நான்
இறந்துவிட்டால் வளரும்
பிள்ளைகள் வளரும் வரை
அவர்களுக்கு நான் செத்த
செய்தி சொல்லாதே.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 8 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
கடைசியில், ஒரே ஒரு
உண்மையை மட்டும் உனக்குச்
சொல்லிவிட்டுப் போகிறேன்.
என்னை மன்னிப்பாயா? எனக்கு
வரும் நட ஈட்டுத் தொகையில்
ஒரு பகுதியை நம் வீட்டில்
வாழாவெட்டியாக வாழ்ந்து
கொண்டிருக்கிறாளே உன்
தங்கை கலா - அவளுக்கும்
பிரித்துக்கொடு. ஏனென்றால்
எனக்கும்... அவளுக்கும்...
அவ்வளவுதான் சொல்வேன்.
நான் சாவதற்காக
அஞ்சவில்லை. நான் செத்தால்
ஒரே வீடு இரண்டு
விதவைகளைத் தாங்குமா
என்றுதான் வருந்துகிறேன்.
என்னை மன்னிப்பாயா
வரலட்சுமி? மன்னிப்பாயா?
இப்படிக்கு,
பாண்டி
எல்லோரும் ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொண்டார்கள்.
இப்போது பரதனின்
உணர்ச்சிகள் தமிழாயின.
அன்புள்ள மீனா. என் ஆசை
மகளே. நீ பிறந்தது முதல்
உன்னைப் பத்து
நாட்களுக்குமேல்
பார்க்காமலிருந்தது
இப்போதுதான். ஒருவேளை,
உன்னை இனிமேல் பார்க்கவே
மாட்டேனோ என்று
பயமாகவும் இருக்கிறது. உன்
பிரசவத்திலேயே உன் தாயைப்
பறிகொடுத்த நான்
அப்போதே செத்திருப்பேன்.
ஆனால், உன் பிஞ்சுக்கைகளின்
உத்தரவுக்குத்தான் நான்
பிழைத்துக் கிடந்தேன்.
எனக்கு ஒரே ஓர் ஆசை
இருந்தது தாயே. அந்தத்
தகரப்பெட்டியில் நாப்தலின்
உருண்டைகளுக்கு மேலே மடித்து
வைக்கப்பட்டிருக்கும் உன்தாயின்
பழைய பட்டுப் புடவையை, நீ
வளர்ந்த பிறகு உனக்குக் கட்டி
அழகு பார்த்து.. உன்னில் உன்
தாயைப் பார்க்க
ஆசைப்பட்டேன். என்
நியாயமான ஆசை
அநியாயமான கனவாகவே
அழிந்துவிடுமா? உன் தாயின்
பிரிவை நான் தாங்காதது
போலவே என் பிரிவை அவளும்
தாங்கவில்லைபோலும்.
கண்ணுக்குத் தெரியாத கைநீட்டி
என்னை அழைத்துக்
கொண்டேயிருக்கிறாள். கரை
வந்தால் உன்னோடு
வாழ்வேன். என்னைக்
கடல்கொண்டால் உன்
தாயோடு சேர்வேன். படி
மகளே. படி. நம் இனத்தைப்
பரம்பரைத் துயரிலிருந்து
மீனவர்மகளே... மீட்கப்
படி. ஒரு விதையைப் பூமி
பாதுகாப்பதைப் போல
உன்னை
உன் தாத்தா பாதுகாப்பார்
என்று நம்புகிறேன்.
ஜென்மங்களில் எனக்கு
நம்பிக்கை இல்லை மகளே.
இருந்தால் - எவ்வளவு
வசதியாக இருக்கும்.
உன் அன்பு அப்பா,
பரதன்
கடிதத்தின் கடைசி வரியைச்
சொல்லமுடியாமல் விசும்பி
விசும்பி அழுத பரதனைக்
கட்டிக்கொண்டு ஆறுதல்
சொல்லவந்த பாண்டியும்
ஓவென்று அழுதுவிட்டான்.
சலீம். இப்போது உன்
முறை. என்ன எழுத
விரும்புகிறாய்? யாருக்கு எழுத
விரும்புகிறாய்?
அவன் விரக்தியாய்ச்
சிரித்தான்.
காற்று யாருக்குக் கடிதம்
எழுதப் போகிறது? நான்
அநாதை. எனக்கிருந்த ஒரே
ஓர் உறவு என் மனைவி.
அவளும் ஓடிப் போய்விட்டாள்.
இப்போது நான் எழுத
வேண்டுமென்றால் ஒரே
ஒருத்திக்குத்தான்.
தேநீர்க்கடை
சுப்பம்மாவுக்குத்தான்
எழுதமுடியும்.
எல்லோரும் நிமிர்ந்து
பார்த்தார்கள்.
சொல்கிறேன்
எழுதுங்கள். சலீமுக்காகக்
கலைவண்ணன் பேனா ஒரு
காதல் கடிதத்தை முத்தமிடக்
குனிந்தது.
அன்புள்ள சுப்பம்மா.
செளக்கியமா? சாவுக்குப்
பக்கத்தில் நானும்
செளக்கியமாயிருக்கிறேன்.
ஒரே ஒரு நம்பிக்கை - உன்
நினைவுதான். ஊருக்குத்
தெரியாத நம் சிநேகம்தான்
என்னை உயிர்வாழச்
சொன்னது. ஆனால், நான்
காதலிப்பது கடலுக்குப்
பொறுக்கவில்லை
போலிருக்கிறது. ஒரு
கோப்பைத் தேநீரை உன்னைப்
பார்த்துக் கொண்டே ஒரு மணி
நேரம் குடிக்கும் சுகம் இனி
வாய்க்குமா? உன் கணவனைப்
போலவே உன் காதலனும்
அகால மரணமடைய
வேண்டியதுதானா? இந்த
அலைகடலுக்கு மத்தியில் நான்
அழிய நேரும்போதும் என்
கடைசிச் சக்திகளையெல்லாம்
திரட்டி உன் பெயரை மட்டுமே
உச்சரிக்கப் பயன்படுத்துவேன்.
உன் பெயரை அலைகள்
கற்றுக்கொள்ளும். கரையில்
நின்று கேட்டுப்பார். ஓடிவந்து
மோதும் ஒவ்வோர் அலையும்
சலீமின் சார்பாக உன் பெயர்
சொல்லும். எனக்கான
துக்கத்தை ஒருவாரத்துக்கு
மேல் நீட்டிக்காதே.
காதல் என்பது எனக்கும்
புதிதல்ல. உனக்கும் புதிதல்ல.
என் ஞாபகத்தை எங்காவது
ஒரு முலையில் முடிந்துவிட்டு நீ
இன்னொரு வாழ்க்கை
தொடங்கு.
இப்படிக்கு,
உன் சலீம்.
சலீம். அழக்கூடத் தெரியாத
அப்பாவியே. உனக்குள் இப்படி
ஒரு வாழ்க்கையா?
அவன் உள்ளங்கைகளை
உறவோடு பற்றித் தாடி
முளைத்த கன்னம் தடவினார்கள்
மீனவர்கள்.
முடிந்தது கடிதம்.
இந்தக் கடிதத்துக்குக்
காலிபுட்டிதான் உறை.
எல்லாம் சரி.. இந்தத்
தபாலுக்குக் கட்டணம் கட்ட
வேண்டுமே...
கடல் தபாலுக்குக்
கட்டணமா?
இது யார் கையில்
சேர்ந்தாலும் அவர்கள் அதை
அலட்சியப்படுத்திவிடக்
கூடாதல்லவா.
கொண்டு சேர்ப்பவர்களுக்குக்
கூலிவேண்டாமா?
கூலியா? கூலிக்கு எங்கு
போவது?
எல்லாரின் சில்லறைகளையும்
திரட்டத் தொடங்கினார்கள்.
தொகுத்தபிறகும் ருபாய்
நூற்றுப்பதினேழு ஐம்பதுதான்
தேறியது.
இது போதாது என்று
உதடு பிதுக்கினான் கலைவண்ணன்.
யோசித்துத் தாழ்ந்த கண்கள்,
தமிழ்ரோஜாவின் விரலிலிருந்த
தங்கமோதிரத்தில் பட்டுத்
தெறித்தன.
காணாமல்போன குழந்தையை
மீண்டும் கண்டெடுத்த ஒரு
தாயைப் போலப்
பரபரவென்று அவள் கைபற்றிய
கலைவண்ணன் கழற்று.
உண்மையை மட்டும் உனக்குச்
சொல்லிவிட்டுப் போகிறேன்.
என்னை மன்னிப்பாயா? எனக்கு
வரும் நட ஈட்டுத் தொகையில்
ஒரு பகுதியை நம் வீட்டில்
வாழாவெட்டியாக வாழ்ந்து
கொண்டிருக்கிறாளே உன்
தங்கை கலா - அவளுக்கும்
பிரித்துக்கொடு. ஏனென்றால்
எனக்கும்... அவளுக்கும்...
அவ்வளவுதான் சொல்வேன்.
நான் சாவதற்காக
அஞ்சவில்லை. நான் செத்தால்
ஒரே வீடு இரண்டு
விதவைகளைத் தாங்குமா
என்றுதான் வருந்துகிறேன்.
என்னை மன்னிப்பாயா
வரலட்சுமி? மன்னிப்பாயா?
இப்படிக்கு,
பாண்டி
எல்லோரும் ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொண்டார்கள்.
இப்போது பரதனின்
உணர்ச்சிகள் தமிழாயின.
அன்புள்ள மீனா. என் ஆசை
மகளே. நீ பிறந்தது முதல்
உன்னைப் பத்து
நாட்களுக்குமேல்
பார்க்காமலிருந்தது
இப்போதுதான். ஒருவேளை,
உன்னை இனிமேல் பார்க்கவே
மாட்டேனோ என்று
பயமாகவும் இருக்கிறது. உன்
பிரசவத்திலேயே உன் தாயைப்
பறிகொடுத்த நான்
அப்போதே செத்திருப்பேன்.
ஆனால், உன் பிஞ்சுக்கைகளின்
உத்தரவுக்குத்தான் நான்
பிழைத்துக் கிடந்தேன்.
எனக்கு ஒரே ஓர் ஆசை
இருந்தது தாயே. அந்தத்
தகரப்பெட்டியில் நாப்தலின்
உருண்டைகளுக்கு மேலே மடித்து
வைக்கப்பட்டிருக்கும் உன்தாயின்
பழைய பட்டுப் புடவையை, நீ
வளர்ந்த பிறகு உனக்குக் கட்டி
அழகு பார்த்து.. உன்னில் உன்
தாயைப் பார்க்க
ஆசைப்பட்டேன். என்
நியாயமான ஆசை
அநியாயமான கனவாகவே
அழிந்துவிடுமா? உன் தாயின்
பிரிவை நான் தாங்காதது
போலவே என் பிரிவை அவளும்
தாங்கவில்லைபோலும்.
கண்ணுக்குத் தெரியாத கைநீட்டி
என்னை அழைத்துக்
கொண்டேயிருக்கிறாள். கரை
வந்தால் உன்னோடு
வாழ்வேன். என்னைக்
கடல்கொண்டால் உன்
தாயோடு சேர்வேன். படி
மகளே. படி. நம் இனத்தைப்
பரம்பரைத் துயரிலிருந்து
மீனவர்மகளே... மீட்கப்
படி. ஒரு விதையைப் பூமி
பாதுகாப்பதைப் போல
உன்னை
உன் தாத்தா பாதுகாப்பார்
என்று நம்புகிறேன்.
ஜென்மங்களில் எனக்கு
நம்பிக்கை இல்லை மகளே.
இருந்தால் - எவ்வளவு
வசதியாக இருக்கும்.
உன் அன்பு அப்பா,
பரதன்
கடிதத்தின் கடைசி வரியைச்
சொல்லமுடியாமல் விசும்பி
விசும்பி அழுத பரதனைக்
கட்டிக்கொண்டு ஆறுதல்
சொல்லவந்த பாண்டியும்
ஓவென்று அழுதுவிட்டான்.
சலீம். இப்போது உன்
முறை. என்ன எழுத
விரும்புகிறாய்? யாருக்கு எழுத
விரும்புகிறாய்?
அவன் விரக்தியாய்ச்
சிரித்தான்.
காற்று யாருக்குக் கடிதம்
எழுதப் போகிறது? நான்
அநாதை. எனக்கிருந்த ஒரே
ஓர் உறவு என் மனைவி.
அவளும் ஓடிப் போய்விட்டாள்.
இப்போது நான் எழுத
வேண்டுமென்றால் ஒரே
ஒருத்திக்குத்தான்.
தேநீர்க்கடை
சுப்பம்மாவுக்குத்தான்
எழுதமுடியும்.
எல்லோரும் நிமிர்ந்து
பார்த்தார்கள்.
சொல்கிறேன்
எழுதுங்கள். சலீமுக்காகக்
கலைவண்ணன் பேனா ஒரு
காதல் கடிதத்தை முத்தமிடக்
குனிந்தது.
அன்புள்ள சுப்பம்மா.
செளக்கியமா? சாவுக்குப்
பக்கத்தில் நானும்
செளக்கியமாயிருக்கிறேன்.
ஒரே ஒரு நம்பிக்கை - உன்
நினைவுதான். ஊருக்குத்
தெரியாத நம் சிநேகம்தான்
என்னை உயிர்வாழச்
சொன்னது. ஆனால், நான்
காதலிப்பது கடலுக்குப்
பொறுக்கவில்லை
போலிருக்கிறது. ஒரு
கோப்பைத் தேநீரை உன்னைப்
பார்த்துக் கொண்டே ஒரு மணி
நேரம் குடிக்கும் சுகம் இனி
வாய்க்குமா? உன் கணவனைப்
போலவே உன் காதலனும்
அகால மரணமடைய
வேண்டியதுதானா? இந்த
அலைகடலுக்கு மத்தியில் நான்
அழிய நேரும்போதும் என்
கடைசிச் சக்திகளையெல்லாம்
திரட்டி உன் பெயரை மட்டுமே
உச்சரிக்கப் பயன்படுத்துவேன்.
உன் பெயரை அலைகள்
கற்றுக்கொள்ளும். கரையில்
நின்று கேட்டுப்பார். ஓடிவந்து
மோதும் ஒவ்வோர் அலையும்
சலீமின் சார்பாக உன் பெயர்
சொல்லும். எனக்கான
துக்கத்தை ஒருவாரத்துக்கு
மேல் நீட்டிக்காதே.
காதல் என்பது எனக்கும்
புதிதல்ல. உனக்கும் புதிதல்ல.
என் ஞாபகத்தை எங்காவது
ஒரு முலையில் முடிந்துவிட்டு நீ
இன்னொரு வாழ்க்கை
தொடங்கு.
இப்படிக்கு,
உன் சலீம்.
சலீம். அழக்கூடத் தெரியாத
அப்பாவியே. உனக்குள் இப்படி
ஒரு வாழ்க்கையா?
அவன் உள்ளங்கைகளை
உறவோடு பற்றித் தாடி
முளைத்த கன்னம் தடவினார்கள்
மீனவர்கள்.
முடிந்தது கடிதம்.
இந்தக் கடிதத்துக்குக்
காலிபுட்டிதான் உறை.
எல்லாம் சரி.. இந்தத்
தபாலுக்குக் கட்டணம் கட்ட
வேண்டுமே...
கடல் தபாலுக்குக்
கட்டணமா?
இது யார் கையில்
சேர்ந்தாலும் அவர்கள் அதை
அலட்சியப்படுத்திவிடக்
கூடாதல்லவா.
கொண்டு சேர்ப்பவர்களுக்குக்
கூலிவேண்டாமா?
கூலியா? கூலிக்கு எங்கு
போவது?
எல்லாரின் சில்லறைகளையும்
திரட்டத் தொடங்கினார்கள்.
தொகுத்தபிறகும் ருபாய்
நூற்றுப்பதினேழு ஐம்பதுதான்
தேறியது.
இது போதாது என்று
உதடு பிதுக்கினான் கலைவண்ணன்.
யோசித்துத் தாழ்ந்த கண்கள்,
தமிழ்ரோஜாவின் விரலிலிருந்த
தங்கமோதிரத்தில் பட்டுத்
தெறித்தன.
காணாமல்போன குழந்தையை
மீண்டும் கண்டெடுத்த ஒரு
தாயைப் போலப்
பரபரவென்று அவள் கைபற்றிய
கலைவண்ணன் கழற்று.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 8 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
உடனே கழற்று என்றான்.
அய்யோ. இது நீங்கள் என்
பிறந்த நாளுக்குப்
பரிசளித்தது -அவள்
வெடுக்கென்று கையிழுத்தாள்.
இன்னொரு பிறந்த நாள்
உனக்கு வேண்டுமா வேண்டாமா
- கழற்று அவன் கடிந்து
சொன்னான்.
மாட்டேன்...
மாட்டேன்...
அவள் முரண்டுபிடித்தாள்.
அவன் முயன்று பறித்தான்.
அந்த மோதிரத்தைப்
புட்டியிலிட்டுப் பூட்டினார்கள்.
அதில் நீர்புகாமல் இருக்க
உப்புத்தூள் கொண்டு வந்த
பாலிதீன் பை சுற்றிக் கயிறு
கட்டினார்கள்.
அதில் ஒவ்வொருவராக உதடு
பதித்து முத்தமிட்டார்கள்.
தமிழ்ரோஜா மட்டும் தன்
விரலைத் தொட்டுத் தொட்டுப்
பார்த்து விசும்பிக்
கொண்டிருந்தாள்.
அந்தக் கடிதத்தைக் கலைவண்ணன்,
பலம் கொண்ட மட்டும் கடலில் வீசினான்.
நீரலைகளில் அது மிதந்தது - மிதந்தது,
சற்று நேரத்தில் அவர்கள் பார்வையிலிருந்து
மறைந்தது.
நாவுக்கு மட்டும் என்பதில்லை
உடம்பின் ஒவ்வோர்
உறுப்புக்கும் கேட்கத்
தெரியும்.
உடம்பில் நீர் குறைந்தால்
தாகத்தின் வழியே அது தண்ணீர்
கேட்கும்.
உடம்பு களைத்துப் போனால்
கண்கள் உறக்கம் கேட்கும்.
புறத்தோலில் அரிப்பென்றால்
உறக்கத்திலும் சொறியக்
கேட்கும்.
உயிர் துடித்தால் கலவி கேட்கும்.
உடல் துடித்தால் உணவு கேட்கும்.
அன்றென்னவோ பாண்டியின்
மனசுக்குப் பாட்டுக்
கேட்கத் தோன்றியது.
ஏதோ ஒரு நெகிழ்ச்சி -
ஏதோ ஒரு கிளர்ச்சி...
கடலில் வீசிய புட்டி வெடித்துப்
பூதம் கிளம்பி நாம்
காப்பாற்றப்படுவோம்
என்றதொரு நம்பிக்கையின்
மலர்ச்சி.
எனக்கு இப்போது
பாட்டுப்பாட வேண்டும் அல்லது
கேட்க வேண்டும்
போலிருக்கிறது. என்றான்
பாண்டி.
நீ தண்டிக்க வேண்டாம்.
நானே தண்டிக்கிறேன்
என்றான் சலீம்.
நீ பாடப்போகிறாயா?
என்றான் இசக்கி.
பாடக்கூடாதா?
என்றான் சலீம்.
ஆயுள் தண்டனைக் கைதி
நான். கசையடி என்ன
செய்யும்... பாடு.
இசக்கி தண்டனைக்குத் தன்னைத்
தயாரித்துக் கொண்டான்.
சலீம் தன் சொந்த
சோகத்தில் சுதி சேர்த்தான்.
இக்கரையில் நானிருக்க
அக்கரையில் அவளிருக்க
அக்கறை இல்லாததென்ன
கடலலையே.
அந்தக் கடைசி சுரத்தின்
ஏகாரசங்கதியில் ஏறி
உட்கார்ந்தவன்
இறங்கவேயில்லை.
நிறுத்து. இல்லையென்றால்
நான் பாட
வேண்டியிருக்கும். இசையைக்
கசக்கிப் பிழிந்தவனை நோக்கி
இசக்கி கத்தினான்.
இசக்கியின் கத்தலுக்காக அல்ல
- அதற்கு மேல் பாட்டு
வரிகள் தெரியாததால் சலீம்
தன்னைத் துண்டித்துக்
கொண்டான்.
வாடிக்கிடந்த தமிழ்ரோஜாவை
மார்பில் அணிந்த வண்ணம்,
அவள் அழுத கண்ணீரில் தான்
நனைந்த கலைவண்ணன்,
மீனவர்களின் பாமர
நாடகத்தையும் பக்கவாட்டில்
ரசித்துக் கொண்டான்
பாதிக்கண்களால்.
நீ பாடு பரதன்.
எனக்கொரு நல்ல பாட்டுக்
கேட்க வேண்டும்
பரதன் சுற்றும்முற்றும்
பார்த்தான்.
நீங்கள் தப்பிக்க
வேறுவழியே இல்லை என்பதால்
பாடுகிறேன்.
கானம் பாடுவதற்கு முன்னால்
அவன் கனைத்தபோது ஒரு
குதிரை சங்கீதத்துக்குத்
தயாராவது போலிருந்தது.
தோணி வருகுதுன்னு
துறைமுகமே காத்திருந்தேன்
தோணி கவுந்திருச்சே
துறைமுகமே ஆசையில்ல
கப்பல் வருகுதுன்னு
கடற்கரையே காத்திருந்தேன்
கப்பல் கவுந்திருச்சே
கடற்கரையே ஆசையில்ல.
அவன் பாடியதில் பாவமில்லை.
ஆனால், உணர்ச்சி இருந்தது-
வெயிலில் சருகானாலும் வீரியம்
போகாத முலிகை மாதிரி.
ஆனால், புன்னகையில்
தொடங்கிய பாட்டு கண்ணீரில்
முடிந்து போனது -
ஈரங்காயப் போட்ட துணி
மழையில் நனைந்தது மாதிரி.
அந்தப் படகில் மெல்லியதாய்
விழுந்த ஒரு சந்தோ
நிழல் விசுக்கென்று மறைய
மீண்டும் வெயில் சுட்டது.
மீனவர் நால்வரும் அவரவர்
சோகத்தில் அமிழ்ந்து
கண்ணீர் குடித்த வேளையில் -
தமிழ்ரோஜாவைச் சற்றே
தளர்த்தித் தளத்தில் கிடத்தி
வந்த கலைவண்ணன்
ஒவ்வொருவர்
தோளையும் உரிமையாய்த்
தொட்டான்.
என் தோழர்களே.
மீன் பிடிக்க வந்து சந்தர்ப்பம்
பின்னிய சதிவலையில் சிக்கிக்
கொண்டவர்களே.
இப்போது நீங்கள்
பாடவேண்டிய
பாடல் இதுவல்லவே.
முத்துக் குளிக்கும் சக்தி
கொண்ட நீங்கள்... உங்கள்
கண்களில் உப்புக்
காய்ச்சக்கூடாது.
உங்களுக்காக நான்
பாடுவேன். உங்கள் நம்பிக்கை
நரம்பு தேடி எடுத்து அதில்
சந்தோ ஊசி போடுவேன்.
சிரிப்பவனைப் பார்த்து மரணம்
தூரத்தில் நிற்கிறது. அழுபவன்
வீட்டுக் கதவைத்தான் அது
அவசரமாய்த் தட்டுகிறது.
இப்போது நாம் நம்பிக்கை
பேசுவோம். நம் உடம்பும்
மனசும் உலராதிருக்க
உற்சாகத்தில் கொஞ்சம்
நனைத்து வைப்போம்.
உங்களுக்கு நான் ஒரு பாடல்
கொண்டு வந்தேன். என்
தமிழை உங்கள் இதயப்
பலகையில் எழுதிக்
கொள்ளுங்கள்.
காதுவழிப்புகும் என்
கானவரிகளை ரத்தத்தில்
கரைத்துக் கொள்ளுங்கள்.
என் பாடலால் உங்கள்
நம்பிக்கையும் கனவுகளும்
ஒருநாள் நீட்டிக்கப்பட்டாலும்
நான் பிரம்மனின் வேலை
செய்தேன் என்ற பெருமை
பெறுவேன். எங்கே, உங்கள்
கண்ணிமைகள் மெள்ளக் கவிழ்ந்து
கொள்ளட்டும்.
உங்கள் செவிகள் எனக்காகத்
திறந்திருக்கட்டும்.
அவன் மெல்லிய குரலில்
பாடத்தொடங்கினான்.
மீனவர்களின் இதய இறுக்கம்
மெள்ள மெள்ள அவிழத்
தொடங்கியது.
நீர்மட்டத்துக்கு மேலே
தலைதூக்கும்
தண்ணீர்ப்பாம்பாய்த் தளத்தில்
கவிழ்ந்து கிடந்த
தமிழ்ரோஜாகூட மெள்ளத்
தலை தூக்கினாள்.
காற்றோசையே சுருதி.
அலைகளே தாளம்.
அரங்கேறியது பாட்டு
மனிதன் நினைத்தால்
வழி பிறக்கும்.
அய்யோ. இது நீங்கள் என்
பிறந்த நாளுக்குப்
பரிசளித்தது -அவள்
வெடுக்கென்று கையிழுத்தாள்.
இன்னொரு பிறந்த நாள்
உனக்கு வேண்டுமா வேண்டாமா
- கழற்று அவன் கடிந்து
சொன்னான்.
மாட்டேன்...
மாட்டேன்...
அவள் முரண்டுபிடித்தாள்.
அவன் முயன்று பறித்தான்.
அந்த மோதிரத்தைப்
புட்டியிலிட்டுப் பூட்டினார்கள்.
அதில் நீர்புகாமல் இருக்க
உப்புத்தூள் கொண்டு வந்த
பாலிதீன் பை சுற்றிக் கயிறு
கட்டினார்கள்.
அதில் ஒவ்வொருவராக உதடு
பதித்து முத்தமிட்டார்கள்.
தமிழ்ரோஜா மட்டும் தன்
விரலைத் தொட்டுத் தொட்டுப்
பார்த்து விசும்பிக்
கொண்டிருந்தாள்.
அந்தக் கடிதத்தைக் கலைவண்ணன்,
பலம் கொண்ட மட்டும் கடலில் வீசினான்.
நீரலைகளில் அது மிதந்தது - மிதந்தது,
சற்று நேரத்தில் அவர்கள் பார்வையிலிருந்து
மறைந்தது.
நாவுக்கு மட்டும் என்பதில்லை
உடம்பின் ஒவ்வோர்
உறுப்புக்கும் கேட்கத்
தெரியும்.
உடம்பில் நீர் குறைந்தால்
தாகத்தின் வழியே அது தண்ணீர்
கேட்கும்.
உடம்பு களைத்துப் போனால்
கண்கள் உறக்கம் கேட்கும்.
புறத்தோலில் அரிப்பென்றால்
உறக்கத்திலும் சொறியக்
கேட்கும்.
உயிர் துடித்தால் கலவி கேட்கும்.
உடல் துடித்தால் உணவு கேட்கும்.
அன்றென்னவோ பாண்டியின்
மனசுக்குப் பாட்டுக்
கேட்கத் தோன்றியது.
ஏதோ ஒரு நெகிழ்ச்சி -
ஏதோ ஒரு கிளர்ச்சி...
கடலில் வீசிய புட்டி வெடித்துப்
பூதம் கிளம்பி நாம்
காப்பாற்றப்படுவோம்
என்றதொரு நம்பிக்கையின்
மலர்ச்சி.
எனக்கு இப்போது
பாட்டுப்பாட வேண்டும் அல்லது
கேட்க வேண்டும்
போலிருக்கிறது. என்றான்
பாண்டி.
நீ தண்டிக்க வேண்டாம்.
நானே தண்டிக்கிறேன்
என்றான் சலீம்.
நீ பாடப்போகிறாயா?
என்றான் இசக்கி.
பாடக்கூடாதா?
என்றான் சலீம்.
ஆயுள் தண்டனைக் கைதி
நான். கசையடி என்ன
செய்யும்... பாடு.
இசக்கி தண்டனைக்குத் தன்னைத்
தயாரித்துக் கொண்டான்.
சலீம் தன் சொந்த
சோகத்தில் சுதி சேர்த்தான்.
இக்கரையில் நானிருக்க
அக்கரையில் அவளிருக்க
அக்கறை இல்லாததென்ன
கடலலையே.
அந்தக் கடைசி சுரத்தின்
ஏகாரசங்கதியில் ஏறி
உட்கார்ந்தவன்
இறங்கவேயில்லை.
நிறுத்து. இல்லையென்றால்
நான் பாட
வேண்டியிருக்கும். இசையைக்
கசக்கிப் பிழிந்தவனை நோக்கி
இசக்கி கத்தினான்.
இசக்கியின் கத்தலுக்காக அல்ல
- அதற்கு மேல் பாட்டு
வரிகள் தெரியாததால் சலீம்
தன்னைத் துண்டித்துக்
கொண்டான்.
வாடிக்கிடந்த தமிழ்ரோஜாவை
மார்பில் அணிந்த வண்ணம்,
அவள் அழுத கண்ணீரில் தான்
நனைந்த கலைவண்ணன்,
மீனவர்களின் பாமர
நாடகத்தையும் பக்கவாட்டில்
ரசித்துக் கொண்டான்
பாதிக்கண்களால்.
நீ பாடு பரதன்.
எனக்கொரு நல்ல பாட்டுக்
கேட்க வேண்டும்
பரதன் சுற்றும்முற்றும்
பார்த்தான்.
நீங்கள் தப்பிக்க
வேறுவழியே இல்லை என்பதால்
பாடுகிறேன்.
கானம் பாடுவதற்கு முன்னால்
அவன் கனைத்தபோது ஒரு
குதிரை சங்கீதத்துக்குத்
தயாராவது போலிருந்தது.
தோணி வருகுதுன்னு
துறைமுகமே காத்திருந்தேன்
தோணி கவுந்திருச்சே
துறைமுகமே ஆசையில்ல
கப்பல் வருகுதுன்னு
கடற்கரையே காத்திருந்தேன்
கப்பல் கவுந்திருச்சே
கடற்கரையே ஆசையில்ல.
அவன் பாடியதில் பாவமில்லை.
ஆனால், உணர்ச்சி இருந்தது-
வெயிலில் சருகானாலும் வீரியம்
போகாத முலிகை மாதிரி.
ஆனால், புன்னகையில்
தொடங்கிய பாட்டு கண்ணீரில்
முடிந்து போனது -
ஈரங்காயப் போட்ட துணி
மழையில் நனைந்தது மாதிரி.
அந்தப் படகில் மெல்லியதாய்
விழுந்த ஒரு சந்தோ
நிழல் விசுக்கென்று மறைய
மீண்டும் வெயில் சுட்டது.
மீனவர் நால்வரும் அவரவர்
சோகத்தில் அமிழ்ந்து
கண்ணீர் குடித்த வேளையில் -
தமிழ்ரோஜாவைச் சற்றே
தளர்த்தித் தளத்தில் கிடத்தி
வந்த கலைவண்ணன்
ஒவ்வொருவர்
தோளையும் உரிமையாய்த்
தொட்டான்.
என் தோழர்களே.
மீன் பிடிக்க வந்து சந்தர்ப்பம்
பின்னிய சதிவலையில் சிக்கிக்
கொண்டவர்களே.
இப்போது நீங்கள்
பாடவேண்டிய
பாடல் இதுவல்லவே.
முத்துக் குளிக்கும் சக்தி
கொண்ட நீங்கள்... உங்கள்
கண்களில் உப்புக்
காய்ச்சக்கூடாது.
உங்களுக்காக நான்
பாடுவேன். உங்கள் நம்பிக்கை
நரம்பு தேடி எடுத்து அதில்
சந்தோ ஊசி போடுவேன்.
சிரிப்பவனைப் பார்த்து மரணம்
தூரத்தில் நிற்கிறது. அழுபவன்
வீட்டுக் கதவைத்தான் அது
அவசரமாய்த் தட்டுகிறது.
இப்போது நாம் நம்பிக்கை
பேசுவோம். நம் உடம்பும்
மனசும் உலராதிருக்க
உற்சாகத்தில் கொஞ்சம்
நனைத்து வைப்போம்.
உங்களுக்கு நான் ஒரு பாடல்
கொண்டு வந்தேன். என்
தமிழை உங்கள் இதயப்
பலகையில் எழுதிக்
கொள்ளுங்கள்.
காதுவழிப்புகும் என்
கானவரிகளை ரத்தத்தில்
கரைத்துக் கொள்ளுங்கள்.
என் பாடலால் உங்கள்
நம்பிக்கையும் கனவுகளும்
ஒருநாள் நீட்டிக்கப்பட்டாலும்
நான் பிரம்மனின் வேலை
செய்தேன் என்ற பெருமை
பெறுவேன். எங்கே, உங்கள்
கண்ணிமைகள் மெள்ளக் கவிழ்ந்து
கொள்ளட்டும்.
உங்கள் செவிகள் எனக்காகத்
திறந்திருக்கட்டும்.
அவன் மெல்லிய குரலில்
பாடத்தொடங்கினான்.
மீனவர்களின் இதய இறுக்கம்
மெள்ள மெள்ள அவிழத்
தொடங்கியது.
நீர்மட்டத்துக்கு மேலே
தலைதூக்கும்
தண்ணீர்ப்பாம்பாய்த் தளத்தில்
கவிழ்ந்து கிடந்த
தமிழ்ரோஜாகூட மெள்ளத்
தலை தூக்கினாள்.
காற்றோசையே சுருதி.
அலைகளே தாளம்.
அரங்கேறியது பாட்டு
மனிதன் நினைத்தால்
வழி பிறக்கும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 8 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 8 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
» உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து
» ஊழி - கவிப்பேரரசு வைரமுத்து
» இசை - கவிப்பேரரசு வைரமுத்து
» அடங்காநல்லூர் - கவிப்பேரரசு வைரமுத்து
» உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து
» ஊழி - கவிப்பேரரசு வைரமுத்து
» இசை - கவிப்பேரரசு வைரமுத்து
» அடங்காநல்லூர் - கவிப்பேரரசு வைரமுத்து
Page 8 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|