Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
+3
சபீர்
கலைவேந்தன்
சிவா
7 posters
Page 6 of 10
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
First topic message reminder :
கடல்...
உலகின் முதல் அதிசயம்.
சத்தமிடும் ரகசியம்.
காலவெள்ளம்
தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.
வாசிக்கக் கிடைக்காத
வரலாறுகளைத் தின்றுசெரித்து
நின்றுசிரிக்கும் நிஜம்.
கடல்...
ஒருவகையில் நம்பிக்கை.
ஒருவகையில் எச்சரிக்கை.
கடல்குடித்துக் கொண்டிருந்த
கலைவண்ணன் மடியில்கிடந்த
தமிழ்ரோஜாவை மறந்துபோனான்.
அவள் அழகின் நவீனம்.
சிறகுகளைந்து சுடிதார்கொண்ட
சொப்பனதேவதை. ரத்தஓட்டம்
பாயும் தங்கம் அவள் தேகம்.
பொறுக்கி எடுத்த உலக
அழகுகளை நெருக்கித் தொடுத்த
நேர்த்தியான சித்திரம். குமரி
வயதுகொண்ட குமரி அவள்.
அவன் அழகன். இளைய அறிஞன்.
காதலிக்கும்போதும் கம்பீரம்
குறையாதவன்.
என்ன யோசனை?
என்றாள் தமிழ்.
கலைவண்ணன் மனது
கரையேறியது.
இந்தச் செவிட்டுக் கரைகளோடு
அந்த அலைகள் இத்தனை
யுகங்களாய் அப்படி என்னதான்
பேசும் என்று யோசிக்கிறேன்.
பூமியில் கிடந்துகொண்டே இந்தக்
கடல் தூரத்துவானத்துக்குத்
தூரிகையில்லாமல் எப்படி
வர்ணமடிக்கிறது என்று
யோசிக்கிறேன்.
மடியில் கிடந்தவள் நொடியில்
எழுந்தாள்.
நீங்கள் கடல்பைத்தியம்.
இல்லை. நான் கடற்காதலன்.
கடல் உங்களுக்குச் சலிக்கவே
சலிக்காதா?
காதலியும் கடலும் சலிப்பதில்லை தமிழ்ரோ.
அவள் மல்லிகைக்கரம் தொட்டு
மணிக்கட்டில் முத்தமிட்டான்.
நேசமின்சாரம் நெஞ்சுக்குள் பரவியது.
அவளை இழுத்து வளைத்து
இறுக்கி இறுக்கி உருக்கி உருக்கி
மடியில் ஊற்றிக் கொண்டான்.
ஓர் அலை அவர்கள் மீது அட்சதை தூவியது.
காதுமடல்களின் வெயில்மறைவுப்
பிரதேசங்களில் விளையாடி
அவன் விரல் நன்னம்பிக்கை முனைநோக்கி
நகர்ந்தபோது வெடுக்கென்று விலகிக்
கொண்டவள் பொய்க் கோபத்தில் பூத்தாள்.
அவன் அறிவான் - ஊடல் என்பது
பசிதூண்டும் பந்தி. பந்திக்கு முந்தியவளை
வம்புக்கிழுத்தான்.
வா. கொஞ்ச நேரம் கடலோடு கால்நனைப்போம்.
அய்யோ. கடலுக்குள்ளா? நான் மாட்டேன்.
கலாபமயில் கூட்டுப்புழுவானது குறுகிக் குறுகி.
ஏன்? என் மீது நம்பிக்கையில்லையா?
இல்லை, கடல்மீது நம்பிக்கையில்லை.
எதனால்?
ஆக்டோப அலைகள் என்னை அள்ளிக்
கொண்டோடிவிட்டால்?
அப்படியாவது கடல்நீர் குடிநீராகட்டுமே.
சிரித்தது அவன் நுரைத்தது கடல்
தள்ளி நின்றாள் தமிழ்ரோஜா,
தான்மட்டும் அலைதாண்டிக் கடல்புகுந்தான்
கலைவண்ணன்.
வா
மாட்டேன். எனக்கு பயம் தண்ணீர் பயம்.
குடிநீர் குளிநீர் தவிர எல்லாம் பயம்.
வெள்ளித்திரையில் வெள்ளம் பார்த்தாலே
விழிமுடிக் கொள்வேன்.
ஆறோ ஏரியோ கடலோ என் கனவுகளில்
ததும்பும்போது என் படுக்கையில் நான்
வியர்த்து விழிக்கிறேன்.
மாட்டேன் கடலாட மாட்டேன். என்னை
ஆபத்துக்குள் அழைக்காதீர்கள்.
ஒரே ஒரு பயம்
எனக்கு தண்ணீர் பயம்
பேசப் பேச அவள்
படபடப்பைப் பறைசாற்றின
கண்களில் உடைந்துவிழுந்த
மின்மினி மின்னல்கள்.
கடல்...
உலகின் முதல் அதிசயம்.
சத்தமிடும் ரகசியம்.
காலவெள்ளம்
தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.
வாசிக்கக் கிடைக்காத
வரலாறுகளைத் தின்றுசெரித்து
நின்றுசிரிக்கும் நிஜம்.
கடல்...
ஒருவகையில் நம்பிக்கை.
ஒருவகையில் எச்சரிக்கை.
கடல்குடித்துக் கொண்டிருந்த
கலைவண்ணன் மடியில்கிடந்த
தமிழ்ரோஜாவை மறந்துபோனான்.
அவள் அழகின் நவீனம்.
சிறகுகளைந்து சுடிதார்கொண்ட
சொப்பனதேவதை. ரத்தஓட்டம்
பாயும் தங்கம் அவள் தேகம்.
பொறுக்கி எடுத்த உலக
அழகுகளை நெருக்கித் தொடுத்த
நேர்த்தியான சித்திரம். குமரி
வயதுகொண்ட குமரி அவள்.
அவன் அழகன். இளைய அறிஞன்.
காதலிக்கும்போதும் கம்பீரம்
குறையாதவன்.
என்ன யோசனை?
என்றாள் தமிழ்.
கலைவண்ணன் மனது
கரையேறியது.
இந்தச் செவிட்டுக் கரைகளோடு
அந்த அலைகள் இத்தனை
யுகங்களாய் அப்படி என்னதான்
பேசும் என்று யோசிக்கிறேன்.
பூமியில் கிடந்துகொண்டே இந்தக்
கடல் தூரத்துவானத்துக்குத்
தூரிகையில்லாமல் எப்படி
வர்ணமடிக்கிறது என்று
யோசிக்கிறேன்.
மடியில் கிடந்தவள் நொடியில்
எழுந்தாள்.
நீங்கள் கடல்பைத்தியம்.
இல்லை. நான் கடற்காதலன்.
கடல் உங்களுக்குச் சலிக்கவே
சலிக்காதா?
காதலியும் கடலும் சலிப்பதில்லை தமிழ்ரோ.
அவள் மல்லிகைக்கரம் தொட்டு
மணிக்கட்டில் முத்தமிட்டான்.
நேசமின்சாரம் நெஞ்சுக்குள் பரவியது.
அவளை இழுத்து வளைத்து
இறுக்கி இறுக்கி உருக்கி உருக்கி
மடியில் ஊற்றிக் கொண்டான்.
ஓர் அலை அவர்கள் மீது அட்சதை தூவியது.
காதுமடல்களின் வெயில்மறைவுப்
பிரதேசங்களில் விளையாடி
அவன் விரல் நன்னம்பிக்கை முனைநோக்கி
நகர்ந்தபோது வெடுக்கென்று விலகிக்
கொண்டவள் பொய்க் கோபத்தில் பூத்தாள்.
அவன் அறிவான் - ஊடல் என்பது
பசிதூண்டும் பந்தி. பந்திக்கு முந்தியவளை
வம்புக்கிழுத்தான்.
வா. கொஞ்ச நேரம் கடலோடு கால்நனைப்போம்.
அய்யோ. கடலுக்குள்ளா? நான் மாட்டேன்.
கலாபமயில் கூட்டுப்புழுவானது குறுகிக் குறுகி.
ஏன்? என் மீது நம்பிக்கையில்லையா?
இல்லை, கடல்மீது நம்பிக்கையில்லை.
எதனால்?
ஆக்டோப அலைகள் என்னை அள்ளிக்
கொண்டோடிவிட்டால்?
அப்படியாவது கடல்நீர் குடிநீராகட்டுமே.
சிரித்தது அவன் நுரைத்தது கடல்
தள்ளி நின்றாள் தமிழ்ரோஜா,
தான்மட்டும் அலைதாண்டிக் கடல்புகுந்தான்
கலைவண்ணன்.
வா
மாட்டேன். எனக்கு பயம் தண்ணீர் பயம்.
குடிநீர் குளிநீர் தவிர எல்லாம் பயம்.
வெள்ளித்திரையில் வெள்ளம் பார்த்தாலே
விழிமுடிக் கொள்வேன்.
ஆறோ ஏரியோ கடலோ என் கனவுகளில்
ததும்பும்போது என் படுக்கையில் நான்
வியர்த்து விழிக்கிறேன்.
மாட்டேன் கடலாட மாட்டேன். என்னை
ஆபத்துக்குள் அழைக்காதீர்கள்.
ஒரே ஒரு பயம்
எனக்கு தண்ணீர் பயம்
பேசப் பேச அவள்
படபடப்பைப் பறைசாற்றின
கண்களில் உடைந்துவிழுந்த
மின்மினி மின்னல்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 6 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
எனக்கோ ஓட்டைப்
படகிலிருந்து உடனே மீட்சி
வேண்டும். இப்போது எனக்குத்
தனிமை வேண்டும்.
விட்டுவிடுங்கள்.
என்னைத் தனிமையில்
விட்டுவிடுங்கள்.
அவள் சத்தமிட்டுப்
பின்னேறினாள்.
உழக்கில் என்ன கிழக்கு
மேற்கு? முட்டையில் என்ன வட
துருவம் - தென் துருவம்?
நாற்பத்தொன்பதடி நீளம்
கொண்ட சின்னப் படகில் என்ன
தன்னந்தனிமை?
அவன் முனகிக்கொண்டே எழுந்து
நடந்து முன்விளிம்பில்
கலந்தான்.
தனிமை. வெறுமை. பெயர்
தெரியாத ஒரு கிரகத்தில்
வழிதெரியாமல்
விழுந்தவர்களைப்போல் ஒரு
பிரமை.
அந்தப் படகின் ஒரே ஓர்
ஆறுதல் தாளிப்பு
வாசனைதான்.
அளந்து வைத்த சாப்பாடு.
ஆளுக்கொரு மீன்.
சாப்பாட்டின் கடைசியில்
மிச்சமானது போல்
எல்லோருக்கும் கொஞ்சம்
கொஞ்சம் குழம்பு.
ஒரே ஒரு தட்டில் மட்டும்
சாப்பாடும் சாம்பாரும்.
எல்லாச் சோற்றையும்
பசிபிசைந்தது.
தமிழும் பிசைந்தாள்.
அவசரத்தில் பிசைந்ததில்
சோற்றின் சூட்டில் அவள்
ரோஜாத்தோல் வெந்தது.
உருட்டிய கவளத்தை
எல்லோரும்
உண்ணப்போனபோது -
நிறுத்துங்கள் என்று
சத்தமிட்டுக் கத்தினான் சலீம்.
அதிர்ச்சியில் யாரும்
அசையவில்லை.
ஒவ்வொருவர் பங்காய்க்
கொஞ்சம் கொஞ்சம் சோறு
கொடுங்கள்.
அவன் இரு கை ஏந்தினான்.
ஏனென்று யாரும்
கேட்கவில்லை.
விசாலமாய் விசாரிக்க
அவர்களின் பசிக்குப் பொறுமை
இல்லை.
எல்லோரும் கொஞ்சம்
கொஞ்சம் கொடுத்தார்கள்.
இரு கைகள் ஏந்தியும் ஒரு
கையும் நிரம்பவில்லை.
வசூலித்த சோறெடுத்து உள்ளே
ஓடினான்.
ஓடிய வேகத்தில் உடனே
திரும்பினான்.
சுண்டெலிக்குச் சோறு
கொடுத்துவிட்டேன்.
எல்லோரும் சாப்பிடலாம்
என்று கூவினான்.
அவர்கள் கோர சில்
புன்னகைத்தார்கள்.
தமிழ். சாப்பாடு
எப்படி? கலைவண்ணன்
கண்ணடித்தான்.
சாம்பார் - சோறு
இரண்டில் ஏதோ ஒன்றில்
உப்பில்லை. எது என்று
தெரியவில்லை.
அதுவரை அமைதியாயிருந்த
பாண்டி அதிர்ந்தெழுந்தான்.
சாப்பிடுவது பிச்சைச்
சோறு. இதில் உப்புப்
பார்ப்பது உங்கள் தப்பு.
வாயிலிருந்த சோற்றைக்
கலைவண்ணன் தட்டில்
துப்பினான்.
பாண்டி. இதுவரை உங்கள்
வார்த்தை தடித்ததில்லையே.
நாங்கள் தன்மானிகள்.
படகிலிருந்து உடனே மீட்சி
வேண்டும். இப்போது எனக்குத்
தனிமை வேண்டும்.
விட்டுவிடுங்கள்.
என்னைத் தனிமையில்
விட்டுவிடுங்கள்.
அவள் சத்தமிட்டுப்
பின்னேறினாள்.
உழக்கில் என்ன கிழக்கு
மேற்கு? முட்டையில் என்ன வட
துருவம் - தென் துருவம்?
நாற்பத்தொன்பதடி நீளம்
கொண்ட சின்னப் படகில் என்ன
தன்னந்தனிமை?
அவன் முனகிக்கொண்டே எழுந்து
நடந்து முன்விளிம்பில்
கலந்தான்.
தனிமை. வெறுமை. பெயர்
தெரியாத ஒரு கிரகத்தில்
வழிதெரியாமல்
விழுந்தவர்களைப்போல் ஒரு
பிரமை.
அந்தப் படகின் ஒரே ஓர்
ஆறுதல் தாளிப்பு
வாசனைதான்.
அளந்து வைத்த சாப்பாடு.
ஆளுக்கொரு மீன்.
சாப்பாட்டின் கடைசியில்
மிச்சமானது போல்
எல்லோருக்கும் கொஞ்சம்
கொஞ்சம் குழம்பு.
ஒரே ஒரு தட்டில் மட்டும்
சாப்பாடும் சாம்பாரும்.
எல்லாச் சோற்றையும்
பசிபிசைந்தது.
தமிழும் பிசைந்தாள்.
அவசரத்தில் பிசைந்ததில்
சோற்றின் சூட்டில் அவள்
ரோஜாத்தோல் வெந்தது.
உருட்டிய கவளத்தை
எல்லோரும்
உண்ணப்போனபோது -
நிறுத்துங்கள் என்று
சத்தமிட்டுக் கத்தினான் சலீம்.
அதிர்ச்சியில் யாரும்
அசையவில்லை.
ஒவ்வொருவர் பங்காய்க்
கொஞ்சம் கொஞ்சம் சோறு
கொடுங்கள்.
அவன் இரு கை ஏந்தினான்.
ஏனென்று யாரும்
கேட்கவில்லை.
விசாலமாய் விசாரிக்க
அவர்களின் பசிக்குப் பொறுமை
இல்லை.
எல்லோரும் கொஞ்சம்
கொஞ்சம் கொடுத்தார்கள்.
இரு கைகள் ஏந்தியும் ஒரு
கையும் நிரம்பவில்லை.
வசூலித்த சோறெடுத்து உள்ளே
ஓடினான்.
ஓடிய வேகத்தில் உடனே
திரும்பினான்.
சுண்டெலிக்குச் சோறு
கொடுத்துவிட்டேன்.
எல்லோரும் சாப்பிடலாம்
என்று கூவினான்.
அவர்கள் கோர சில்
புன்னகைத்தார்கள்.
தமிழ். சாப்பாடு
எப்படி? கலைவண்ணன்
கண்ணடித்தான்.
சாம்பார் - சோறு
இரண்டில் ஏதோ ஒன்றில்
உப்பில்லை. எது என்று
தெரியவில்லை.
அதுவரை அமைதியாயிருந்த
பாண்டி அதிர்ந்தெழுந்தான்.
சாப்பிடுவது பிச்சைச்
சோறு. இதில் உப்புப்
பார்ப்பது உங்கள் தப்பு.
வாயிலிருந்த சோற்றைக்
கலைவண்ணன் தட்டில்
துப்பினான்.
பாண்டி. இதுவரை உங்கள்
வார்த்தை தடித்ததில்லையே.
நாங்கள் தன்மானிகள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 6 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
ஞாபகமிருக்கட்டும். எங்கள்
உடம்பில் ஓடுவது
தமிழ்ரத்தம்.
எங்கள் உடம்பில் ஓடுவது
மட்டும் இங்கிலீ ரத்தமா?
தமிழ்ரத்தம்தான்.
உரத்துப்பேசினான் பாண்டி.
கொடுப்பது இலவசம்.
அதிலென்ன நவரசம்?
இசக்கியும் சேர்ந்து
கொண்டான்.
இவர்கள் கால்வைத்த
நேரம் படகு
பழுதாகிவிட்டது. பரதன்
பழிபோட்டான்.
விசைப்படகின் விளிம்பில்
அமர்ந்திருந்த கலைவண்ணன்
எழுந்து நின்றான்.
இப்படியெல்லாம்
அவமானப்படுத்தினால் நான்
கடலில் குதித்துவிடுவேன்.
நீயென்ன குதிப்பது?
நாங்களே
தள்ளிவிடுகிறோம்.
மீனவர் முவரும் எழுந்து
கலைவண்ணன் நெஞ்சில்
கைவைத்து அழுத்தினார்கள்.
அவன் திமிறினான்.
வேண்டாம். வேண்டாம்.
தமிழ்ரோஜா ஆடும் படகில்
ஆடிக்கொண்டே ஓடி வந்தாள்.
அதற்குள் முவரின் மிருகபலமும்
கலைவண்ணனைப் புரட்டிக்
கடலில் தள்ளியது.
உள்ளே விழுந்தவன் முழ்கினான்.
வெளிவந்தான்.
மிதந்தான். மறைந்தான், கைகால்கள்
உதறினான், நீர் குடித்தான், நிலை மறந்தான்.
காப்பாற்றுங்கள் என்று சைகை செய்தான்
யாரும் அவனைக் காப்பாற்ற முனையவில்லை.
அய்யோ. அய்யய்யோ. அவரைக்
காப்பாற்றுங்கள் - தமிழ் ரோஜா கதறினாள்.
எல்லோரும் இறுகி நின்றார்கள், யாரும்
இரங்கவில்லை.
தண்ணீரில் தத்தளித்தவன் முழ்கிவிடுவான்
போலிருந்தது.
அவன் ஏதேதோ உளறினான். தண்ணீர் குடித்துத்
தமிழ்பேசியதில் ஒன்றும் புரியவில்லை.
அவ்வளவுதான். அவன் தன் சுயபலம்
இழந்துவிட்டான் போல் தோன்றியது.
காப்பாற்றுங்கள், தயவுசெய்து காப்பாற்றுங்கள்.
அவர்கள் மசியவில்லை முதுகுதிருப்பிக்
கொண்டார்கள்.
தொப்பென்று சத்தம் கேட்டது., திரும்பிப்
பார்த்தார்கள்.
தமிழ்ரோஜாவைக் காணவில்லை.
குதித்தவள் அவள்தான்.
என்னை மன்னித்துவிடு தமிழ்.
நானே இயக்கிய நாடகத்தில்
நீமட்டும்தான்
நிமான பாத்திரம்.
மன்றாடிக் கேட்கிறேன்.
மன்னித்துவிடு.
மொட்டுக்களை
உடைத்துவிட்டதற்காகச்
செடியிடம் தென்றல்
மன்னிப்புக் கேட்பதில்லை.
சிவக்கச் சிவக்கச்
சுட்டுவிட்டதற்காகத்
தங்கத்திடம்
நெருப்பு மன்னிப்புக்
கேட்பதில்லை.
உடம்பில் ஓடுவது
தமிழ்ரத்தம்.
எங்கள் உடம்பில் ஓடுவது
மட்டும் இங்கிலீ ரத்தமா?
தமிழ்ரத்தம்தான்.
உரத்துப்பேசினான் பாண்டி.
கொடுப்பது இலவசம்.
அதிலென்ன நவரசம்?
இசக்கியும் சேர்ந்து
கொண்டான்.
இவர்கள் கால்வைத்த
நேரம் படகு
பழுதாகிவிட்டது. பரதன்
பழிபோட்டான்.
விசைப்படகின் விளிம்பில்
அமர்ந்திருந்த கலைவண்ணன்
எழுந்து நின்றான்.
இப்படியெல்லாம்
அவமானப்படுத்தினால் நான்
கடலில் குதித்துவிடுவேன்.
நீயென்ன குதிப்பது?
நாங்களே
தள்ளிவிடுகிறோம்.
மீனவர் முவரும் எழுந்து
கலைவண்ணன் நெஞ்சில்
கைவைத்து அழுத்தினார்கள்.
அவன் திமிறினான்.
வேண்டாம். வேண்டாம்.
தமிழ்ரோஜா ஆடும் படகில்
ஆடிக்கொண்டே ஓடி வந்தாள்.
அதற்குள் முவரின் மிருகபலமும்
கலைவண்ணனைப் புரட்டிக்
கடலில் தள்ளியது.
உள்ளே விழுந்தவன் முழ்கினான்.
வெளிவந்தான்.
மிதந்தான். மறைந்தான், கைகால்கள்
உதறினான், நீர் குடித்தான், நிலை மறந்தான்.
காப்பாற்றுங்கள் என்று சைகை செய்தான்
யாரும் அவனைக் காப்பாற்ற முனையவில்லை.
அய்யோ. அய்யய்யோ. அவரைக்
காப்பாற்றுங்கள் - தமிழ் ரோஜா கதறினாள்.
எல்லோரும் இறுகி நின்றார்கள், யாரும்
இரங்கவில்லை.
தண்ணீரில் தத்தளித்தவன் முழ்கிவிடுவான்
போலிருந்தது.
அவன் ஏதேதோ உளறினான். தண்ணீர் குடித்துத்
தமிழ்பேசியதில் ஒன்றும் புரியவில்லை.
அவ்வளவுதான். அவன் தன் சுயபலம்
இழந்துவிட்டான் போல் தோன்றியது.
காப்பாற்றுங்கள், தயவுசெய்து காப்பாற்றுங்கள்.
அவர்கள் மசியவில்லை முதுகுதிருப்பிக்
கொண்டார்கள்.
தொப்பென்று சத்தம் கேட்டது., திரும்பிப்
பார்த்தார்கள்.
தமிழ்ரோஜாவைக் காணவில்லை.
குதித்தவள் அவள்தான்.
என்னை மன்னித்துவிடு தமிழ்.
நானே இயக்கிய நாடகத்தில்
நீமட்டும்தான்
நிமான பாத்திரம்.
மன்றாடிக் கேட்கிறேன்.
மன்னித்துவிடு.
மொட்டுக்களை
உடைத்துவிட்டதற்காகச்
செடியிடம் தென்றல்
மன்னிப்புக் கேட்பதில்லை.
சிவக்கச் சிவக்கச்
சுட்டுவிட்டதற்காகத்
தங்கத்திடம்
நெருப்பு மன்னிப்புக்
கேட்பதில்லை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 6 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
தண்ணீரில் உன்னைக்
குதிக்கவைத்ததற்காக உன்னிடம்
நான் மன்னிப்புக்
கோருகிறேன்.
தென்றல் முட்டியது -
மொட்டுக்களை மலர்த்த.
நெருப்பு சுட்டது - தங்கம்
நகையாக.
நாடகமாடி நாங்கள் தண்ணீரில்
உன்னைக் குதிக்கவைத்தது -
உனக்குள் உறங்கும் வீரத்தை
உசுப்ப.
தைக்கும் பருத்தித் துணியைத்
தண்ணீரில் ஊறப் போடும் ஒரு
தையற்காரனைப் போல் -
உன்னை வேண்டுமென்றே
நனைத்தேன். இப்போது
சொல். எப்படி வந்தது
இந்தச் செப்படி வித்தை?
அலைகண்டு மயங்கிவிழும் நீ
ஆழ்கடலில் குதித்ததெப்படி?
அச்சம் என்பது ஒரு நினைப்பு நிலை.
மறந்தால் அச்சமில்லை.
என்னைக் காப்பாற்றும்
அவசரத்தில் நீ தன்னை மறந்து
தாவிக் குதித்தாயே. அதுதான்
இத்தனை நாளாய் உனக்குள்
உறக்கநிலையில் இருந்த சக்தி.
உன் பங்களாவாசத்தில்
உறங்கிக் கொண்டிருந்த சக்தி.
வங்காளவிரிகுடாவில்
விழித்திருக்கிறது. மீண்டும்
உறங்கவிட்டு விடாதே.
இதோ. சொட்டிக்
கொண்டிருக்கும் உன் ஆடையின்
ஈரம் வடிய வடிய உன்
அச்சமும் வடிந்துவிட வேண்டும்.
வடிந்தே தீரும்.
ஏ தெப்பமாய் நனைந்துபோன
சிற்பமே. கவிழ்ந்த தலை
நிமிர்ந்து பார். கண்ணெடுத்துப்
பார்.
நல்ல நடிகர்கள் நம் மீனவ
நண்பர்கள்.
வாத்தியாரின் நோட்டில்
கிறுக்கிவிட்ட மாணவர்களைப்
போலக் குற்ற உணர்ச்சியில்
அவர்கள் குறுகிநிற்பது பார்.
என்னை மன்னிப்பாயோ...
மாட்டாயோ... அவர்களை
நீ மன்னிக்கத்தான்
வேண்டும்.
அவர்களை ஏன் நான்
மன்னிக்க வேண்டும்?
முழங்காலில் முகம்புதைத்துத்
தண்ணீர் சொட்டக் குனிந்திருந்த
தமிழ், பளிச்சென்று
நிமிர்ந்தொரு பட்டாசு
வெடித்தாள்.
குதிக்கவைத்ததற்காக உன்னிடம்
நான் மன்னிப்புக்
கோருகிறேன்.
தென்றல் முட்டியது -
மொட்டுக்களை மலர்த்த.
நெருப்பு சுட்டது - தங்கம்
நகையாக.
நாடகமாடி நாங்கள் தண்ணீரில்
உன்னைக் குதிக்கவைத்தது -
உனக்குள் உறங்கும் வீரத்தை
உசுப்ப.
தைக்கும் பருத்தித் துணியைத்
தண்ணீரில் ஊறப் போடும் ஒரு
தையற்காரனைப் போல் -
உன்னை வேண்டுமென்றே
நனைத்தேன். இப்போது
சொல். எப்படி வந்தது
இந்தச் செப்படி வித்தை?
அலைகண்டு மயங்கிவிழும் நீ
ஆழ்கடலில் குதித்ததெப்படி?
அச்சம் என்பது ஒரு நினைப்பு நிலை.
மறந்தால் அச்சமில்லை.
என்னைக் காப்பாற்றும்
அவசரத்தில் நீ தன்னை மறந்து
தாவிக் குதித்தாயே. அதுதான்
இத்தனை நாளாய் உனக்குள்
உறக்கநிலையில் இருந்த சக்தி.
உன் பங்களாவாசத்தில்
உறங்கிக் கொண்டிருந்த சக்தி.
வங்காளவிரிகுடாவில்
விழித்திருக்கிறது. மீண்டும்
உறங்கவிட்டு விடாதே.
இதோ. சொட்டிக்
கொண்டிருக்கும் உன் ஆடையின்
ஈரம் வடிய வடிய உன்
அச்சமும் வடிந்துவிட வேண்டும்.
வடிந்தே தீரும்.
ஏ தெப்பமாய் நனைந்துபோன
சிற்பமே. கவிழ்ந்த தலை
நிமிர்ந்து பார். கண்ணெடுத்துப்
பார்.
நல்ல நடிகர்கள் நம் மீனவ
நண்பர்கள்.
வாத்தியாரின் நோட்டில்
கிறுக்கிவிட்ட மாணவர்களைப்
போலக் குற்ற உணர்ச்சியில்
அவர்கள் குறுகிநிற்பது பார்.
என்னை மன்னிப்பாயோ...
மாட்டாயோ... அவர்களை
நீ மன்னிக்கத்தான்
வேண்டும்.
அவர்களை ஏன் நான்
மன்னிக்க வேண்டும்?
முழங்காலில் முகம்புதைத்துத்
தண்ணீர் சொட்டக் குனிந்திருந்த
தமிழ், பளிச்சென்று
நிமிர்ந்தொரு பட்டாசு
வெடித்தாள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 6 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
எல்லோரும் தவித்துநிற்க,
அவளே தொடர்ந்தாள்.
அவர்களுக்குரியது
மன்னிப்பல்ல. நன்றி.
நன்றியா? எதற்கு?
என் பயத்தைக் கடல்நீரில்
கழுவினார்களே. அதற்கு.
எனக்குள்ளிருந்த வீரத்தை
எனக்குத் தெரியாமல் விழிக்க
வைத்தார்களே. அதற்கு.
என்னையும் உங்களையும்
காப்பாற்றிக் கலம்
சேர்த்தார்களே. அதற்கு.
கொஞ்சம் கொஞ்சம்
புரிகிறதெனக்கு. பொறுங்கள்.
நான் முழுப்பெண்ணாக முயன்று
பார்க்கிறேன்.
அவள் பேசப் பேச, அத்தனை
முகங்களிலும் ஆச்சரியப்
புன்னகை.
ஓ.
முதல் வெற்றி.
முன்று சூரியன்கள்
தொலைந்துவிட்டன. முன்று
நிலவுகள் விழுந்துவிட்டன.
ஆனால், அவர்களின்
கண்ணுக்கெட்டியமட்டும்
கப்பலோ படகோ
தட்டுப்படவில்லை.
மேலே ஏற்றிய
தேசியக்கொடிகூடப்
பறந்து பறந்து படுத்துவிட்டது.
அபாயக்கொடியான லுங்கி
அவிழ்ந்துகொண்டது.
பீப்பாயிலும் அவர்கள்
உடம்பிலும் தண்ணீர்
குறைந்துகொண்டே வந்தது.
உணவைப் போலவே
உரையாடலும் மெள்ள மெள்ள
சுருங்கிவிட்டது.
பார்வைகளால் மட்டுமே
ஒருவரை ஒருவர் நலம்
கேட்டுக்கொண்ட ஊமை
வாழ்க்கை அங்கே
தொடங்கிவிட்டது.
அசைந்தால் சக்தி
செலவாகுமென்று கலைவண்ணன்
மடியில் சலனமின்றிக் கிடந்தாள்
தமிழ்ரோஜா.
அவள் தங்கத்தோல் மங்கத்
தொடங்கிவிட்டாலும் அவள்
முகத்தில் மட்டும்
தைரியரேகைகள்.
அவள் நெற்றியில் புறப்பட்ட
அவன் சுட்டுவிரல்,
புருவமத்தியிலும் முக்கின்
பள்ளத்தாக்கிலும் முக்கின்
சிகரத்திலும் பயணப்பட்டு -
மேலுதட்டில் குதித்து -
கீழுதட்டில் தாவி - நாடிப்
பள்ளம்விட்டு நகர்ந்து - அவள்
பிஞ்சுக் கழுத்தில் பிரயாணம்
முடித்துச் சற்றே யோசித்துச்
சட்டென்று நின்றது.
அதற்குமேலும்
எதிர்பார்த்தவள், விரலின்
வேலைநிறுத்தம் உணர்ந்து
விழித்துக்கொண்டாள்.
தமிழ். அடியே தமிழ்.
என் உயிரின் திடப்பொருளே.
இந்தப் பிரபஞ்சத்தின் என்
பங்கே. உனக்குத்தான்
என்மேல் எத்தனை ஆசை.
கடல் வீழ்ந்தான் காதலன்
என்று கண்டதும் நீ தன்னை
மறந்தாய். தன் நாமம்
கெட்டாய். தண்ணீர்பயம்
களைந்தாய். நீச்சல்
தெரியாதென்பதை
நினைவிலிருந்து அழித்தாய்.
எப்படியடி குதித்தாய்?
என் இரண்டாம் உயிரே.
காவிரி கொண்டுபோன
ஆட்டனத்தியை மீட்க
ஆதிமந்திகூட வெள்ளத்தில்
விழவில்லை. கரையில் நின்று
அழுதுதான் காவியைக்
கரிக்கவைத்தாள். நீயோ
கடல்குதித்தல்லவா காதலனை
மீட்க நினைத்தாய். எப்போது
என்னுயிர் காக்க நீ தண்ணீரில்
குதித்தாயோ - அப்போதே
நாம் சாவென்ற சம்பவத்தைத்
தாண்டிவிட்டோம்.
அவளே தொடர்ந்தாள்.
அவர்களுக்குரியது
மன்னிப்பல்ல. நன்றி.
நன்றியா? எதற்கு?
என் பயத்தைக் கடல்நீரில்
கழுவினார்களே. அதற்கு.
எனக்குள்ளிருந்த வீரத்தை
எனக்குத் தெரியாமல் விழிக்க
வைத்தார்களே. அதற்கு.
என்னையும் உங்களையும்
காப்பாற்றிக் கலம்
சேர்த்தார்களே. அதற்கு.
கொஞ்சம் கொஞ்சம்
புரிகிறதெனக்கு. பொறுங்கள்.
நான் முழுப்பெண்ணாக முயன்று
பார்க்கிறேன்.
அவள் பேசப் பேச, அத்தனை
முகங்களிலும் ஆச்சரியப்
புன்னகை.
ஓ.
முதல் வெற்றி.
முன்று சூரியன்கள்
தொலைந்துவிட்டன. முன்று
நிலவுகள் விழுந்துவிட்டன.
ஆனால், அவர்களின்
கண்ணுக்கெட்டியமட்டும்
கப்பலோ படகோ
தட்டுப்படவில்லை.
மேலே ஏற்றிய
தேசியக்கொடிகூடப்
பறந்து பறந்து படுத்துவிட்டது.
அபாயக்கொடியான லுங்கி
அவிழ்ந்துகொண்டது.
பீப்பாயிலும் அவர்கள்
உடம்பிலும் தண்ணீர்
குறைந்துகொண்டே வந்தது.
உணவைப் போலவே
உரையாடலும் மெள்ள மெள்ள
சுருங்கிவிட்டது.
பார்வைகளால் மட்டுமே
ஒருவரை ஒருவர் நலம்
கேட்டுக்கொண்ட ஊமை
வாழ்க்கை அங்கே
தொடங்கிவிட்டது.
அசைந்தால் சக்தி
செலவாகுமென்று கலைவண்ணன்
மடியில் சலனமின்றிக் கிடந்தாள்
தமிழ்ரோஜா.
அவள் தங்கத்தோல் மங்கத்
தொடங்கிவிட்டாலும் அவள்
முகத்தில் மட்டும்
தைரியரேகைகள்.
அவள் நெற்றியில் புறப்பட்ட
அவன் சுட்டுவிரல்,
புருவமத்தியிலும் முக்கின்
பள்ளத்தாக்கிலும் முக்கின்
சிகரத்திலும் பயணப்பட்டு -
மேலுதட்டில் குதித்து -
கீழுதட்டில் தாவி - நாடிப்
பள்ளம்விட்டு நகர்ந்து - அவள்
பிஞ்சுக் கழுத்தில் பிரயாணம்
முடித்துச் சற்றே யோசித்துச்
சட்டென்று நின்றது.
அதற்குமேலும்
எதிர்பார்த்தவள், விரலின்
வேலைநிறுத்தம் உணர்ந்து
விழித்துக்கொண்டாள்.
தமிழ். அடியே தமிழ்.
என் உயிரின் திடப்பொருளே.
இந்தப் பிரபஞ்சத்தின் என்
பங்கே. உனக்குத்தான்
என்மேல் எத்தனை ஆசை.
கடல் வீழ்ந்தான் காதலன்
என்று கண்டதும் நீ தன்னை
மறந்தாய். தன் நாமம்
கெட்டாய். தண்ணீர்பயம்
களைந்தாய். நீச்சல்
தெரியாதென்பதை
நினைவிலிருந்து அழித்தாய்.
எப்படியடி குதித்தாய்?
என் இரண்டாம் உயிரே.
காவிரி கொண்டுபோன
ஆட்டனத்தியை மீட்க
ஆதிமந்திகூட வெள்ளத்தில்
விழவில்லை. கரையில் நின்று
அழுதுதான் காவியைக்
கரிக்கவைத்தாள். நீயோ
கடல்குதித்தல்லவா காதலனை
மீட்க நினைத்தாய். எப்போது
என்னுயிர் காக்க நீ தண்ணீரில்
குதித்தாயோ - அப்போதே
நாம் சாவென்ற சம்பவத்தைத்
தாண்டிவிட்டோம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 6 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
ஐம்பூதங்கள் தந்த இந்த
உடலை நாளை ஐம்பூதங்களும்
பிரித்தெடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், மரணம் என்ற
பெளதிகச் சம்பவத்தால் நாம்
மரிக்கப் போவதில்லை.
சூரியன் சுடரும்வரை அதன்
ஏதாவதொரு கிரணத்தில் நம்
கண்ணொளி கலந்திருக்கும்.
காற்றின் சுழற்சியில் நாம்
விட்டுவிட்டுப் போகும் சுவாசம்
இழைந்திருக்கும்.
அந்த நிலப்பரப்பில் நாம்
பதித்த சுவடுகளைக் காற்றின்
கரங்கள் அழித்துவிட்டாலும்,
நம் உள்ளங்கால்களின்
உணத்தை அது பத்திரமாகவே
பாதுகாத்து வைத்திருக்கும்.
காதல் என்ற அருவத்தின்
உருவங்கள் நாம். தடயங்கள்
அழியலாம். தத்துவங்கள்
அழிவதில்லை.
அவன் பேசிக்கொண்டேயிருக்க
- அந்தப் பேச்சுப் பாடகனை
அவள் கேட்டுக்கொண்டேயிருக்க
- வீசிக் கொண்டேயிருக்கும்
காற்றோசை மட்டும் அவனை
ஆம் ஆம் என்று
வழிமொழிந்தது.
இன்னொரு மோசமான இரவும்
முடிந்தது. லுங்கிக்குள் கூட்டுப்
புழுக்களாய் அங்கங்கே
சிதறிக் கிடந்தனர் மீனவர்கள்.
எழுந்திருங்கள். தயவுசெய்து
எல்லோரும் எழுந்திருங்கள்.
என்ன இது, வித்தியாச
விடியல். யார் குரல் இது?
புரண்டுபடுத்துச் சோம்பல்
முறித்தவர்கள் ஒரு கண் திறந்து
பார்த்தார்கள்.
இது என்ன, தேநீர்க்
கோப்பைகளோடு ஒரு
தேவதை. எல்லோரும்
சோர்வுதுடைத்துச்
சுறுசுறுப்பானார்கள்.
அம்மா. நீயாம்மா?
ஆச்சரியம் காட்டினார்கள்.
நானே தயாரித்தேன்.
எல்லோருக்கும் தேநீரை
அவளே நீட்டினாள்.
பாண்டியும் இசக்கியும்
கண்களைக் கசக்கிக் கசக்கிப்
பார்த்தார்கள்.
ம்.. வாங்கிக்
கொள்ளுங்கள். நானும் உங்கள்
வாழ்க்கைக்குத்
தயாராகிவிட்டேன்.
தேநீர் கறுத்திருந்தது. அவள்
சிரிப்பு பால் கலந்தது.
கலைவண்ணன் கைதட்டினான்.
வா. வாழ்க்கைக்குள்
இப்படி வா. இடி-மழை
இரண்டுமே வாழ்க்கை..
மழைக்கு வாய்திறக்கும் பூமி,
இடியை ஏற்க மாட்டேன்
என்றால் எப்படி?
தமிழ். இதுதான் சரி.
இப்போதுதான் நீ
மனிதராசியில் சேருகிறாய்.
கொடு உன் தேநீரை. அது
விமாயிருந்தாலும்
குடித்துவிடுகிறேன்.
உடலை நாளை ஐம்பூதங்களும்
பிரித்தெடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், மரணம் என்ற
பெளதிகச் சம்பவத்தால் நாம்
மரிக்கப் போவதில்லை.
சூரியன் சுடரும்வரை அதன்
ஏதாவதொரு கிரணத்தில் நம்
கண்ணொளி கலந்திருக்கும்.
காற்றின் சுழற்சியில் நாம்
விட்டுவிட்டுப் போகும் சுவாசம்
இழைந்திருக்கும்.
அந்த நிலப்பரப்பில் நாம்
பதித்த சுவடுகளைக் காற்றின்
கரங்கள் அழித்துவிட்டாலும்,
நம் உள்ளங்கால்களின்
உணத்தை அது பத்திரமாகவே
பாதுகாத்து வைத்திருக்கும்.
காதல் என்ற அருவத்தின்
உருவங்கள் நாம். தடயங்கள்
அழியலாம். தத்துவங்கள்
அழிவதில்லை.
அவன் பேசிக்கொண்டேயிருக்க
- அந்தப் பேச்சுப் பாடகனை
அவள் கேட்டுக்கொண்டேயிருக்க
- வீசிக் கொண்டேயிருக்கும்
காற்றோசை மட்டும் அவனை
ஆம் ஆம் என்று
வழிமொழிந்தது.
இன்னொரு மோசமான இரவும்
முடிந்தது. லுங்கிக்குள் கூட்டுப்
புழுக்களாய் அங்கங்கே
சிதறிக் கிடந்தனர் மீனவர்கள்.
எழுந்திருங்கள். தயவுசெய்து
எல்லோரும் எழுந்திருங்கள்.
என்ன இது, வித்தியாச
விடியல். யார் குரல் இது?
புரண்டுபடுத்துச் சோம்பல்
முறித்தவர்கள் ஒரு கண் திறந்து
பார்த்தார்கள்.
இது என்ன, தேநீர்க்
கோப்பைகளோடு ஒரு
தேவதை. எல்லோரும்
சோர்வுதுடைத்துச்
சுறுசுறுப்பானார்கள்.
அம்மா. நீயாம்மா?
ஆச்சரியம் காட்டினார்கள்.
நானே தயாரித்தேன்.
எல்லோருக்கும் தேநீரை
அவளே நீட்டினாள்.
பாண்டியும் இசக்கியும்
கண்களைக் கசக்கிக் கசக்கிப்
பார்த்தார்கள்.
ம்.. வாங்கிக்
கொள்ளுங்கள். நானும் உங்கள்
வாழ்க்கைக்குத்
தயாராகிவிட்டேன்.
தேநீர் கறுத்திருந்தது. அவள்
சிரிப்பு பால் கலந்தது.
கலைவண்ணன் கைதட்டினான்.
வா. வாழ்க்கைக்குள்
இப்படி வா. இடி-மழை
இரண்டுமே வாழ்க்கை..
மழைக்கு வாய்திறக்கும் பூமி,
இடியை ஏற்க மாட்டேன்
என்றால் எப்படி?
தமிழ். இதுதான் சரி.
இப்போதுதான் நீ
மனிதராசியில் சேருகிறாய்.
கொடு உன் தேநீரை. அது
விமாயிருந்தாலும்
குடித்துவிடுகிறேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 6 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
நான் விழுந்தால் கடல்நீர்
குடிநீராகும் என்றீர்கள். நான்
தயாரித்தால் விம்கூட
அமுதமாகாதா?
அமுதத்தின் நிறம்
கறுப்பல்ல.
அவன் குடித்தான். அவள்
சிரித்தாள். சிரிப்பு மட்டுமே
ருசியாயிருந்தது.
அது நான்காம் பகல்.
ஒரு படகும் தெரியவில்லை.
கட்டுமரங்களும்
தட்டுப்படவில்லை.
கப்பலின் அடையாளமாய்
அவர்களின் தலைக்கு மேலே
இருந்த வானத்தில் ஒரு
புகைக்கோடுகூட விழவில்லை.
அவ்வப்போது சிறகடிக்கும் பறவைக்
கூட்டங்கள் மட்டுமே ஏதோ ஒரு
நம்பிக்கையை எழுதிப்போயின.
வானத்தில் திட்டுத்திட்டாய் மேகங்கள்
படகில் திட்டுத்திட்டாய் சோகங்கள்.
நாம் என்ன துரோகம் செய்தோம்? இந்தக்
கடலுக்கு நம்மேல் கருணை இல்லையா?
தமிழ்ரோஜா இளைத்த குரலில் பேசினாள்.
ஐந்து கண்டங்களுக்கே கருணைகாட்டும்
கடல் நம் ஆறு பேருக்குக் கருணைகாட்டாதா?
பொறு தோழி பொறு.
கண்டங்களுக்குக் கருணையா?
ஆமாம். கடலடியில் இரண்டு நீரோட்டங்கள்.
ஒன்று வெப்ப நீரோட்டம், இன்னொன்று
குளிர்நீரோட்டம். கடலின் வெப்ப நீரோட்டம்
தான் வீடன், நார்வே போன்ற நாடுகளைக்
கொஞ்சம் சூடுபடுத்தி வைத்திருக்கிறது.
இல்லையென்றால். கிரீன்லாந்தைப் போல
அந்த நாடுகளும் பனிப்பாலைகளாய்
இருந்திருக்கும்.
கடல் வெறும் கடலல்ல கருணைக்கடல்
அது இன்னொரு கருணையும் புரிகிறது.
பூமியின் தட்பவெப்பத்தை வாங்கிப்
பகிர்ந்தளிக்கும் வங்கி அது.
பூமத்திய ரேகைக்கு அருகில் கிடைக்கும்
வெப்பத்தைத் துருவப் பிரதேசங்களுக்கும் -
துருவப் பிரதேசங்களின் குளிரை பூமத்திய
ரேகைப் பிரதேசங்களுக்கும் எடுத்துச் செல்கிறது.
இத்தனை வேலை செய்யும் கடலுக்கு
நமக்கு ஒரு படகு மட்டும் அனுப்பத்
தெரியாதா? அவள் சுருதி குறைந்து பேசினாள்.
அதுவரை அமைதிகாத்த படகின் முன்விளிம்பில்,
உச்சக்குரல் ஒன்று ஓங்கி ஒலித்தது.
என் பங்கு மட்டும் ஏன் குறைகிறது?
இது என்ன மிச்சச் சோறா? எச்சில் சோறா?
நீ கொடுக்கும் குழம்பு பத்துப் பருக்கை
நனைக்கவே போதாது. இதைச் சாப்பிடுவதை
விடச் சாப்பிடாமலே இருக்கலாம்.
எட்டிப்பார்த்தார்கள்
இசக்கி.
இருவரும் முன்விளிம்பு நோக்கி
முன்னேறினார்கள்.
சற்றே மெளனம் சாதித்த சலீம் வாய்திறந்தான்.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
நாளை முதல் சாப்பிடமுடியாது. இன்னும்
இருப்பது அரைகிலோ அரிசிதான்.
இருபது லிட்டர் தண்ணீர்தான் என்ன
செய்யலாம்? நீங்களே சொல்லுங்கள்.
அது எல்லோரும் எதிர்பார்த்ததுதான்,
எதிர்பார்த்து வந்தாலென்ன -
எதிர்பாராமல் வந்தாலென்ன -
இடி இடிதான்.
என்ன செய்யலாம்?
ஒரு முடிவுக்கு வந்தபிறகு பாண்டி அந்த
மெளனத்தில் கல்லெறிந்தான்.
சொல்கிறேன், கேளுங்கள். அந்த அரைகிலோ
அரிசியைச் சோறாக்கிவிடலாம். ஆனால்,
அந்தச் சோற்றை யாரும் சாப்பிடாமல் நீருற்றி
வைக்கலாம். அந்தக் கஞ்சித் தண்ணீர்தான்
நம் உணவு, ஆளுக்கு அரை டம்ளர்.
சோற்றில் நீர் குறையக் குறைய நீர் மட்டும்
ஊற்றிக் கொண்டேயிருக்காலாம். என்ன
சொல்கிறீர்கள்?
மீண்டும் அங்கே மெளனம் நிலவியது.
அந்த மெளனம் என்பது சம்மதமில்லை,
ஆனால் சம்மதிக்காதிருப்பது அங்கே
சாத்தியமில்லை. கொஞ்சநேரத்தில் அவர்களின்
அரைகிலோ நம்பிக்கை உலையில் கொதிக்கத்
தொடங்கியது.
அன்று நள்ளிரவில் தேய்பிறை நிலவின்
அழும் வெளிச்சத்தில் .. தூக்கம் வராமல்
புரண்ட ஓர் உருவம் மட்டும் மெள்ள எழுந்தது.
உறங்கும் உருவங்களை உறுதி செய்து
கொண்டு பூனையின் பாதங்களால் நடந்தது.
சமையல் அறையில் நுழைந்து கஞ்சிப்பாளையில்
கைவிட்டது.
அவ்வளவுதான்.
குடிநீராகும் என்றீர்கள். நான்
தயாரித்தால் விம்கூட
அமுதமாகாதா?
அமுதத்தின் நிறம்
கறுப்பல்ல.
அவன் குடித்தான். அவள்
சிரித்தாள். சிரிப்பு மட்டுமே
ருசியாயிருந்தது.
அது நான்காம் பகல்.
ஒரு படகும் தெரியவில்லை.
கட்டுமரங்களும்
தட்டுப்படவில்லை.
கப்பலின் அடையாளமாய்
அவர்களின் தலைக்கு மேலே
இருந்த வானத்தில் ஒரு
புகைக்கோடுகூட விழவில்லை.
அவ்வப்போது சிறகடிக்கும் பறவைக்
கூட்டங்கள் மட்டுமே ஏதோ ஒரு
நம்பிக்கையை எழுதிப்போயின.
வானத்தில் திட்டுத்திட்டாய் மேகங்கள்
படகில் திட்டுத்திட்டாய் சோகங்கள்.
நாம் என்ன துரோகம் செய்தோம்? இந்தக்
கடலுக்கு நம்மேல் கருணை இல்லையா?
தமிழ்ரோஜா இளைத்த குரலில் பேசினாள்.
ஐந்து கண்டங்களுக்கே கருணைகாட்டும்
கடல் நம் ஆறு பேருக்குக் கருணைகாட்டாதா?
பொறு தோழி பொறு.
கண்டங்களுக்குக் கருணையா?
ஆமாம். கடலடியில் இரண்டு நீரோட்டங்கள்.
ஒன்று வெப்ப நீரோட்டம், இன்னொன்று
குளிர்நீரோட்டம். கடலின் வெப்ப நீரோட்டம்
தான் வீடன், நார்வே போன்ற நாடுகளைக்
கொஞ்சம் சூடுபடுத்தி வைத்திருக்கிறது.
இல்லையென்றால். கிரீன்லாந்தைப் போல
அந்த நாடுகளும் பனிப்பாலைகளாய்
இருந்திருக்கும்.
கடல் வெறும் கடலல்ல கருணைக்கடல்
அது இன்னொரு கருணையும் புரிகிறது.
பூமியின் தட்பவெப்பத்தை வாங்கிப்
பகிர்ந்தளிக்கும் வங்கி அது.
பூமத்திய ரேகைக்கு அருகில் கிடைக்கும்
வெப்பத்தைத் துருவப் பிரதேசங்களுக்கும் -
துருவப் பிரதேசங்களின் குளிரை பூமத்திய
ரேகைப் பிரதேசங்களுக்கும் எடுத்துச் செல்கிறது.
இத்தனை வேலை செய்யும் கடலுக்கு
நமக்கு ஒரு படகு மட்டும் அனுப்பத்
தெரியாதா? அவள் சுருதி குறைந்து பேசினாள்.
அதுவரை அமைதிகாத்த படகின் முன்விளிம்பில்,
உச்சக்குரல் ஒன்று ஓங்கி ஒலித்தது.
என் பங்கு மட்டும் ஏன் குறைகிறது?
இது என்ன மிச்சச் சோறா? எச்சில் சோறா?
நீ கொடுக்கும் குழம்பு பத்துப் பருக்கை
நனைக்கவே போதாது. இதைச் சாப்பிடுவதை
விடச் சாப்பிடாமலே இருக்கலாம்.
எட்டிப்பார்த்தார்கள்
இசக்கி.
இருவரும் முன்விளிம்பு நோக்கி
முன்னேறினார்கள்.
சற்றே மெளனம் சாதித்த சலீம் வாய்திறந்தான்.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
நாளை முதல் சாப்பிடமுடியாது. இன்னும்
இருப்பது அரைகிலோ அரிசிதான்.
இருபது லிட்டர் தண்ணீர்தான் என்ன
செய்யலாம்? நீங்களே சொல்லுங்கள்.
அது எல்லோரும் எதிர்பார்த்ததுதான்,
எதிர்பார்த்து வந்தாலென்ன -
எதிர்பாராமல் வந்தாலென்ன -
இடி இடிதான்.
என்ன செய்யலாம்?
ஒரு முடிவுக்கு வந்தபிறகு பாண்டி அந்த
மெளனத்தில் கல்லெறிந்தான்.
சொல்கிறேன், கேளுங்கள். அந்த அரைகிலோ
அரிசியைச் சோறாக்கிவிடலாம். ஆனால்,
அந்தச் சோற்றை யாரும் சாப்பிடாமல் நீருற்றி
வைக்கலாம். அந்தக் கஞ்சித் தண்ணீர்தான்
நம் உணவு, ஆளுக்கு அரை டம்ளர்.
சோற்றில் நீர் குறையக் குறைய நீர் மட்டும்
ஊற்றிக் கொண்டேயிருக்காலாம். என்ன
சொல்கிறீர்கள்?
மீண்டும் அங்கே மெளனம் நிலவியது.
அந்த மெளனம் என்பது சம்மதமில்லை,
ஆனால் சம்மதிக்காதிருப்பது அங்கே
சாத்தியமில்லை. கொஞ்சநேரத்தில் அவர்களின்
அரைகிலோ நம்பிக்கை உலையில் கொதிக்கத்
தொடங்கியது.
அன்று நள்ளிரவில் தேய்பிறை நிலவின்
அழும் வெளிச்சத்தில் .. தூக்கம் வராமல்
புரண்ட ஓர் உருவம் மட்டும் மெள்ள எழுந்தது.
உறங்கும் உருவங்களை உறுதி செய்து
கொண்டு பூனையின் பாதங்களால் நடந்தது.
சமையல் அறையில் நுழைந்து கஞ்சிப்பாளையில்
கைவிட்டது.
அவ்வளவுதான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 6 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
திருட்டுநாயே. இன்னோர் உருவம் அதைப்
பாய்ந்துபிடித்துக் கடல்கிழியக் கத்தியது.
இந்த மண் யாருக்குச்
சொந்தம் என்ற கேள்வி
எழும்வரைக்கும் பூகோளப்
படத்தில் அடித்தல்கள் இல்லை.
திருத்தல்கள் இல்லை.
வறுமை என்னும் ஒரு தத்துவம்
செயற்கையாகச்
சிருடிக்கப்படும்வரை
சரித்திரத்தின் முகத்தில்
தழும்புகள் இல்லை.
என்னுடையது என்னும்
வலிமையும்,
இல்லாமை என்னும் வெறுமையும்
வந்த பிறகுதான் மனிதகுலம்
யுத்தங்களைச் சந்தித்தது.
கனவுகள் உயிர்களின்
அனுபவங்கள். கிரகங்கள் கனாக்
காண்பதில்லை.
ஆனால், பூமி என்னும்
கிரகத்துக்கு மட்டும்
நிறைவேறாத
ஒரு நெடுங்கனவு உண்டு.
யுத்தங்களுக்கும் ரத்தங்களுக்கும்
சத்தங்களுக்கும் மத்தியில்
அந்த நெடுங்கனவு
நீண்டு கொண்டேயிருக்கிறது.
என்ன கனவு அது?
எப்பொருள் பற்றியது?
ஒரு திருடன் - ஒரு பிச்சைக்காரன் -
ஒரு விலைமகள் -ஒரு கொலைகாரன்
இந்த நால்வரும் அற்ற
சமுதாயம்தான் இந்த உலகம்
கடைவிழியில்
நீர்வடியக் கண்டுவரும் கனவு.
மனிதன் அந்தப் புதிய
பிரதேசத்துக்குத்தான் பூமி
என்னும் கிரகத்தைச் செலுத்த
விழைகிறான்.
அரசியல் - அரசுகள் -
மதங்கள் - அறிவியல்
கண்டுபிடிப்புகள் - எண்ணங்கள்
- இலக்கியங்கள் - கலைகள்
இவையெல்லாம் அந்தக் கனவுப்
பிரதேசத்துக்கு இந்தப்
பூமியை நகர்த்தும் உருளைகள்
என்றே அவன் இன்னும்
நம்புகிறான்.
ஆனால், பூமியென்னும்
கிரகத்தை முன்னெடுத்துச்
செல்ல வேண்டிய அந்த
உருளைகள் பல நேரங்களில்
நகராமலும் நகரவிடாமலும்
சுற்றிய இடத்திலேயே சுற்ற
வைக்கின்றன. சில நேரங்களில்
பின்னோக்கியும்
செலுத்திவிடுகின்றன.
எனவே களையப்பட வேண்டிய
திருடனும் பிச்சைக்காரனும்
விலைமகளும் கொலைகாரனும்
மாறுவேத்தில் வாழ்ந்து
கொண்டேயிருக்கிறார்கள்.
மனிதன் வெவ்வேறு வடிவங்களில்
திருடுகிறான். வெவ்வேறு
வடிவங்களில்
பிச்சையெடுக்கிறான்.
வெவ்வேறு வடிவங்களில்
விபசாரம் நடக்கிறது. வெவ்வேறு
வடிவங்களில் கொலையும்
விழுகிறது.
பூமி மட்டும்
சுற்றிக்கொண்டேயிருக்கிறது தன்
நிறைவேறாத கனவை
நெஞ்சில் சுமந்துகொண்டே.
அந்த நள்ளிரவில் கையும்
கஞ்சியுமாய்ப் பிடிபட்ட
சலீம், இசக்கியின் பிடியிலிருந்து
தன்னை இதமாய்
விடுவித்துக் கொண்டான்.
பாய்ந்துபிடித்துக் கடல்கிழியக் கத்தியது.
இந்த மண் யாருக்குச்
சொந்தம் என்ற கேள்வி
எழும்வரைக்கும் பூகோளப்
படத்தில் அடித்தல்கள் இல்லை.
திருத்தல்கள் இல்லை.
வறுமை என்னும் ஒரு தத்துவம்
செயற்கையாகச்
சிருடிக்கப்படும்வரை
சரித்திரத்தின் முகத்தில்
தழும்புகள் இல்லை.
என்னுடையது என்னும்
வலிமையும்,
இல்லாமை என்னும் வெறுமையும்
வந்த பிறகுதான் மனிதகுலம்
யுத்தங்களைச் சந்தித்தது.
கனவுகள் உயிர்களின்
அனுபவங்கள். கிரகங்கள் கனாக்
காண்பதில்லை.
ஆனால், பூமி என்னும்
கிரகத்துக்கு மட்டும்
நிறைவேறாத
ஒரு நெடுங்கனவு உண்டு.
யுத்தங்களுக்கும் ரத்தங்களுக்கும்
சத்தங்களுக்கும் மத்தியில்
அந்த நெடுங்கனவு
நீண்டு கொண்டேயிருக்கிறது.
என்ன கனவு அது?
எப்பொருள் பற்றியது?
ஒரு திருடன் - ஒரு பிச்சைக்காரன் -
ஒரு விலைமகள் -ஒரு கொலைகாரன்
இந்த நால்வரும் அற்ற
சமுதாயம்தான் இந்த உலகம்
கடைவிழியில்
நீர்வடியக் கண்டுவரும் கனவு.
மனிதன் அந்தப் புதிய
பிரதேசத்துக்குத்தான் பூமி
என்னும் கிரகத்தைச் செலுத்த
விழைகிறான்.
அரசியல் - அரசுகள் -
மதங்கள் - அறிவியல்
கண்டுபிடிப்புகள் - எண்ணங்கள்
- இலக்கியங்கள் - கலைகள்
இவையெல்லாம் அந்தக் கனவுப்
பிரதேசத்துக்கு இந்தப்
பூமியை நகர்த்தும் உருளைகள்
என்றே அவன் இன்னும்
நம்புகிறான்.
ஆனால், பூமியென்னும்
கிரகத்தை முன்னெடுத்துச்
செல்ல வேண்டிய அந்த
உருளைகள் பல நேரங்களில்
நகராமலும் நகரவிடாமலும்
சுற்றிய இடத்திலேயே சுற்ற
வைக்கின்றன. சில நேரங்களில்
பின்னோக்கியும்
செலுத்திவிடுகின்றன.
எனவே களையப்பட வேண்டிய
திருடனும் பிச்சைக்காரனும்
விலைமகளும் கொலைகாரனும்
மாறுவேத்தில் வாழ்ந்து
கொண்டேயிருக்கிறார்கள்.
மனிதன் வெவ்வேறு வடிவங்களில்
திருடுகிறான். வெவ்வேறு
வடிவங்களில்
பிச்சையெடுக்கிறான்.
வெவ்வேறு வடிவங்களில்
விபசாரம் நடக்கிறது. வெவ்வேறு
வடிவங்களில் கொலையும்
விழுகிறது.
பூமி மட்டும்
சுற்றிக்கொண்டேயிருக்கிறது தன்
நிறைவேறாத கனவை
நெஞ்சில் சுமந்துகொண்டே.
அந்த நள்ளிரவில் கையும்
கஞ்சியுமாய்ப் பிடிபட்ட
சலீம், இசக்கியின் பிடியிலிருந்து
தன்னை இதமாய்
விடுவித்துக் கொண்டான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 6 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
விழித்துக்கொண்டு சூழ்ந்தவர்கள்
அவனையே உற்று உற்றுப்
பார்த்தார்கள் உடைந்த
நிலாவெளிச்சத்தில்.
அவன் திருடன்போல் குனிந்து
நிற்கவில்லை.
தியாகிபோல் நிமிர்ந்து
நின்றான்.
உனக்கு மட்டுந்தான்
வயிறா? இல்லை உனக்கு
மட்டுந்தான் உயிரா? இத்தனை
பேரும் கும்பிகருகிக் குடல்
வெந்து கிடக்கையில் உனக்கு
மட்டும் எப்படித் திருடத்
தோன்றியது?
சொல் சலீம்.
சொல்....
திருடப் போனது
உண்மைதான். ஆனால், என்
பசிக்குத்
திருடவில்லை...
பிறகு யார் பசிக்கு..?
ஒருவேளை கடல்மீன்களின்
பசிபோக்கத்தான் கஞ்சிப்
பானைக்குள்
கைவிட்டாரோ?
இல்லை. ஓர் ஏழை
ஜீவனின் பசிக்கு.
இப்போது இந்தப்
படகிலுள்ள ஒவ்வொரு ஜீவனும்
ஏழை ஜீவன்தான்.
நம் பசியை நமக்குச்
சொல்லத் தெரிகிறது. நான்
திருடியது அதைச் சொல்லத்
தெரியாத
ஒரு ஜீவனுக்கு.
சொல்லத் தெரியாத
ஜீவனென்றால்..?
சுண்டெலிக்கு.
அவர்கள் ஒரே இடத்தில்
சிரிக்க ஆரம்பித்து வெவ்வேறு
இடத்தில் முடித்தார்கள்.
வெயிலடித்துக் கொண்டே மழை
பெய்தது மாதிரி இன்பம்,
துக்கம் இரண்டும் இழையோடிய
சிரிப்பு அது.
இங்கே மனிதனுக்கே
சோற்றைக் காணோம். நீ
சுண்டெலிக்குச்
சோறு வைக்கிறாயோ?
நம் தேவை பெரிது.
அதன் தேவை சிறிது.
அது இருக்கட்டும்.
நீ சுண்டெலிக்குத்தான் சோறு
திருடப் போனாய் என்பது
என்ன நிச்சயம்?
சரியான கேள்வி. சாட்சி
கிடைக்காத கேள்வி.
பட்டாசுத் திரியில்
முதன்முதலாய்த் தீ வைத்துவிட்டு
அது வெடிக்கும்வரை
பரபரக்கும் சிறுவனைப் போல
அவன் பதில் கேட்க
ஆவலானார்கள்
ஐந்து பேரும்.
சலீம் மோவாய் தடவி முகம்
கவிழ்ந்தான். யோசித்தான்.
பற்றிக் கொண்ட
தீக்குச்சிகளாய்ப் பளிச்சென்று
வெளிச்சம்
காட்டின கண்கள்.
நான் சுண்டெலியின் தினசரி
சிநேகிதன். நானும்
சுண்டெலிக்குச் சோறு
வைக்கிறேன். நீங்களும் சோறு
வையுங்கள். யார் வைத்த
கவளத்தைச் சுண்டெலி வந்து
உண்டு செல்கிறது
பார்ப்போம்.
அதையும் பார்ப்போம்.
சத்திய சோதனை
தொடங்கியது.
ஒரு கவளம்
சோறெடுத்து ஒவ்வொருவரும்
வெவ்வேறு இடத்தில்
வைத்தார்கள்.
சுண்டெலி தன் தலைமறைவு
வாழ்க்கையைவிட்டு
வெளியேறவில்லை.
எல்லா முகங்களிலும்
ஏமாற்றக் கோடுகள்.
சரி. சரி. இப்போது
நீ சோறு வை.
அவனையே உற்று உற்றுப்
பார்த்தார்கள் உடைந்த
நிலாவெளிச்சத்தில்.
அவன் திருடன்போல் குனிந்து
நிற்கவில்லை.
தியாகிபோல் நிமிர்ந்து
நின்றான்.
உனக்கு மட்டுந்தான்
வயிறா? இல்லை உனக்கு
மட்டுந்தான் உயிரா? இத்தனை
பேரும் கும்பிகருகிக் குடல்
வெந்து கிடக்கையில் உனக்கு
மட்டும் எப்படித் திருடத்
தோன்றியது?
சொல் சலீம்.
சொல்....
திருடப் போனது
உண்மைதான். ஆனால், என்
பசிக்குத்
திருடவில்லை...
பிறகு யார் பசிக்கு..?
ஒருவேளை கடல்மீன்களின்
பசிபோக்கத்தான் கஞ்சிப்
பானைக்குள்
கைவிட்டாரோ?
இல்லை. ஓர் ஏழை
ஜீவனின் பசிக்கு.
இப்போது இந்தப்
படகிலுள்ள ஒவ்வொரு ஜீவனும்
ஏழை ஜீவன்தான்.
நம் பசியை நமக்குச்
சொல்லத் தெரிகிறது. நான்
திருடியது அதைச் சொல்லத்
தெரியாத
ஒரு ஜீவனுக்கு.
சொல்லத் தெரியாத
ஜீவனென்றால்..?
சுண்டெலிக்கு.
அவர்கள் ஒரே இடத்தில்
சிரிக்க ஆரம்பித்து வெவ்வேறு
இடத்தில் முடித்தார்கள்.
வெயிலடித்துக் கொண்டே மழை
பெய்தது மாதிரி இன்பம்,
துக்கம் இரண்டும் இழையோடிய
சிரிப்பு அது.
இங்கே மனிதனுக்கே
சோற்றைக் காணோம். நீ
சுண்டெலிக்குச்
சோறு வைக்கிறாயோ?
நம் தேவை பெரிது.
அதன் தேவை சிறிது.
அது இருக்கட்டும்.
நீ சுண்டெலிக்குத்தான் சோறு
திருடப் போனாய் என்பது
என்ன நிச்சயம்?
சரியான கேள்வி. சாட்சி
கிடைக்காத கேள்வி.
பட்டாசுத் திரியில்
முதன்முதலாய்த் தீ வைத்துவிட்டு
அது வெடிக்கும்வரை
பரபரக்கும் சிறுவனைப் போல
அவன் பதில் கேட்க
ஆவலானார்கள்
ஐந்து பேரும்.
சலீம் மோவாய் தடவி முகம்
கவிழ்ந்தான். யோசித்தான்.
பற்றிக் கொண்ட
தீக்குச்சிகளாய்ப் பளிச்சென்று
வெளிச்சம்
காட்டின கண்கள்.
நான் சுண்டெலியின் தினசரி
சிநேகிதன். நானும்
சுண்டெலிக்குச் சோறு
வைக்கிறேன். நீங்களும் சோறு
வையுங்கள். யார் வைத்த
கவளத்தைச் சுண்டெலி வந்து
உண்டு செல்கிறது
பார்ப்போம்.
அதையும் பார்ப்போம்.
சத்திய சோதனை
தொடங்கியது.
ஒரு கவளம்
சோறெடுத்து ஒவ்வொருவரும்
வெவ்வேறு இடத்தில்
வைத்தார்கள்.
சுண்டெலி தன் தலைமறைவு
வாழ்க்கையைவிட்டு
வெளியேறவில்லை.
எல்லா முகங்களிலும்
ஏமாற்றக் கோடுகள்.
சரி. சரி. இப்போது
நீ சோறு வை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 6 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
வைரங்களை எண்ணும் ஒரு
வியாபாரியைப் போல்
கவளத்தில் ஒரு பருக்கையும்
சிதறிவிடாமல் சேர்த்தெடுத்து,
கடுகுபுட்டியின் முடிமேல்
கவனமாய்
வைத்தான் சலீம்.
அடுத்த நிமிடம் அந்த அதிசயம்
நிகழ்ந்தது.
கண்ணுக்குத் தெரியாத ஒரு
சந்துவழி வந்து ஒரு க்ரீச்
வணக்கம் சொல்லி கவளத்தில்
வாய் வைத்தது சுண்டெலி.
உயிர்த்தெழுந்த ஏசுநாதரைப்
பார்த்தவனைப்போல் வியந்து
நின்றான் இசக்கி.
அந்தத் துள்ளலென்ன.
அதன் மகிழ்ச்சியென்ன.
ஒரு சிற்றுயிரின்
ஜீவததும்பல் என்ன.
கலைவண்ணன் காதில்
தமிழ்ரோஜா முணுமுணுத்தாள்.
பசியாறும் ஒரு ஜீவனின்
சந்தோம் பார்த்தாலே
பசியாறிவிடும்
போலிருக்கிறதே.
பாரதீ. மகாகவி.
உன் செல்ல அனுமதியோடு
உன் கவிதையில் ஒரு
சின்னத் திருத்தம்.
அனுமதிப்பாயா?
வயிற்றுக்குச் சோறிட
வேண்டும் - இங்கு வாழும்
மனிதருக்கெல்லாம் என்றாய்.
அந்த ஆறாம் சீரில் மட்டும்
உனக்கு வருத்தம் வராமல் ஒரு
திருத்தம் செய்வோமா?
வயிற்றுக்குச் சோறிட
வேண்டும் - இங்கு வாழும்
உயிர்களுக்கெல்லாம்.
சம்மதமா?
ஓர விழி கசிந்தபடி ஓர்
ஓரமாய் நின்றான் சலீம்.
எங்களை மன்னித்துவிடு
சலீம்.
- ஐவர் மொழியை
ஒருவன் பேசினான்.
உறக்கம் துரத்தும் இரவுகள்.
உடம்பு எரிக்கும் பகல்கள்.
இரைப்பை சுருக்கும் பசி.
இதயம் அறுக்கும் வெறுமை.
முன்று டம்ளர் கஞ்சித் தண்ணீரில்
ஆறு ஜீவன்கள்.
படகைப் போலவே ஒரே
இடத்தில் நின்றுபோன
வாழ்க்கை.
நடக்கவும் சக்தியில்லாமல்
நலிந்து சாயத் தொடங்கிய
உடல்கள்.
ஒரே ஒரு படகுகூட இந்தக்
கடலில் வெள்ளைக்கோடு
கிழிக்காதா?
வங்காள விரிகுடாவில் கப்பல்
போகக் கூடாதென்று
கட்டளையா?
ஓர் ஆறு பேரைக் காணோம்
என்று தமிழ்நாட்டின்
னத்தொகை இன்னும்
கவலைப்படவில்லையா?
விடியாத இரவைப் பார்த்து
சூரியன் செத்துவிட்டானா?
என்று தனிப்பாட்டில் ஒரு
தமிழச்சி புலம்பினாளே.
அப்படி அங்கே பூகம்பம்
நேர்ந்து பூமி புரண்டு
புதைந்துவிட்டதா?
ஒருவேளை சவப்பெட்டிக்கு
வாங்கிய மரத்தில்
இந்தப் படகு
தயாரிக்கப்பட்டுவிட்டதா?
அழுத பிள்ளைக்குத்தான்
பாலா?
அபயக்குரல் கொடுத்தால்தான்
உதவியா?
சரி. கத்துவோம்என்று
முடிவெடுத்தார்கள். பரதன்
ஏறினான் பாய்மரத் தட்டில்.
அய்யா உதவிக்கு
வருவீர்களா? படகு பழுது.
அய்யா உதவிக்கு வருவீர்களா?
படகு பழுது.
வியாபாரியைப் போல்
கவளத்தில் ஒரு பருக்கையும்
சிதறிவிடாமல் சேர்த்தெடுத்து,
கடுகுபுட்டியின் முடிமேல்
கவனமாய்
வைத்தான் சலீம்.
அடுத்த நிமிடம் அந்த அதிசயம்
நிகழ்ந்தது.
கண்ணுக்குத் தெரியாத ஒரு
சந்துவழி வந்து ஒரு க்ரீச்
வணக்கம் சொல்லி கவளத்தில்
வாய் வைத்தது சுண்டெலி.
உயிர்த்தெழுந்த ஏசுநாதரைப்
பார்த்தவனைப்போல் வியந்து
நின்றான் இசக்கி.
அந்தத் துள்ளலென்ன.
அதன் மகிழ்ச்சியென்ன.
ஒரு சிற்றுயிரின்
ஜீவததும்பல் என்ன.
கலைவண்ணன் காதில்
தமிழ்ரோஜா முணுமுணுத்தாள்.
பசியாறும் ஒரு ஜீவனின்
சந்தோம் பார்த்தாலே
பசியாறிவிடும்
போலிருக்கிறதே.
பாரதீ. மகாகவி.
உன் செல்ல அனுமதியோடு
உன் கவிதையில் ஒரு
சின்னத் திருத்தம்.
அனுமதிப்பாயா?
வயிற்றுக்குச் சோறிட
வேண்டும் - இங்கு வாழும்
மனிதருக்கெல்லாம் என்றாய்.
அந்த ஆறாம் சீரில் மட்டும்
உனக்கு வருத்தம் வராமல் ஒரு
திருத்தம் செய்வோமா?
வயிற்றுக்குச் சோறிட
வேண்டும் - இங்கு வாழும்
உயிர்களுக்கெல்லாம்.
சம்மதமா?
ஓர விழி கசிந்தபடி ஓர்
ஓரமாய் நின்றான் சலீம்.
எங்களை மன்னித்துவிடு
சலீம்.
- ஐவர் மொழியை
ஒருவன் பேசினான்.
உறக்கம் துரத்தும் இரவுகள்.
உடம்பு எரிக்கும் பகல்கள்.
இரைப்பை சுருக்கும் பசி.
இதயம் அறுக்கும் வெறுமை.
முன்று டம்ளர் கஞ்சித் தண்ணீரில்
ஆறு ஜீவன்கள்.
படகைப் போலவே ஒரே
இடத்தில் நின்றுபோன
வாழ்க்கை.
நடக்கவும் சக்தியில்லாமல்
நலிந்து சாயத் தொடங்கிய
உடல்கள்.
ஒரே ஒரு படகுகூட இந்தக்
கடலில் வெள்ளைக்கோடு
கிழிக்காதா?
வங்காள விரிகுடாவில் கப்பல்
போகக் கூடாதென்று
கட்டளையா?
ஓர் ஆறு பேரைக் காணோம்
என்று தமிழ்நாட்டின்
னத்தொகை இன்னும்
கவலைப்படவில்லையா?
விடியாத இரவைப் பார்த்து
சூரியன் செத்துவிட்டானா?
என்று தனிப்பாட்டில் ஒரு
தமிழச்சி புலம்பினாளே.
அப்படி அங்கே பூகம்பம்
நேர்ந்து பூமி புரண்டு
புதைந்துவிட்டதா?
ஒருவேளை சவப்பெட்டிக்கு
வாங்கிய மரத்தில்
இந்தப் படகு
தயாரிக்கப்பட்டுவிட்டதா?
அழுத பிள்ளைக்குத்தான்
பாலா?
அபயக்குரல் கொடுத்தால்தான்
உதவியா?
சரி. கத்துவோம்என்று
முடிவெடுத்தார்கள். பரதன்
ஏறினான் பாய்மரத் தட்டில்.
அய்யா உதவிக்கு
வருவீர்களா? படகு பழுது.
அய்யா உதவிக்கு வருவீர்களா?
படகு பழுது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 6 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
முன்றாம் முறை குரலெடுக்க
முடியவில்லை. தொண்டையின்
கடைசி ஈரம் வற்றிவிட்டது.
அடுத்து இசக்கி ஏறினான். ஒரு
கரத்தால் காதுபொத்தி
ஓங்கிக் கத்தினான்.
அதற்குமேல் அவனுக்கும் சக்தி
இல்லை. வயிற்றைப் பிடித்துக்
கொண்டு இறங்கிவிட்டான்.
சலீம். நீ போ அவன்
கத்திக் கத்திப் பார்த்தான்.
சத்தமே வரவில்லை. அவன்
நாவிலிருந்த எச்சிலைக்
கடற்காற்று குடித்துவிட்டுப்
போய்விட்டது.
அடுத்து பலங்கொண்ட மட்டும்
பாண்டி கத்தினான். எந்தத்
திசையிலும் எதிரொலியில்லை.
போங்கள். உயிருக்கு குரல்
கொடுங்கள் - தமிழ்
கலைவண்ணனை அனுப்பினாள்.
கலைவண்ணனும் கத்திப்
பார்த்தான். அவன் குரல்
காற்றில் குதித்துத் தற்கொலை
செய்ததுதான் மிச்சம்.
தமிழ். நீ வா.
வேண்டாம். தங்கை கத்த
வேண்டாம் - பாண்டி
தடுத்தான்.
ஏன்?
சேவல் கூவி விடியாத
பொழுது குயில் கூவியா விடியப்
போகிறது?
தமிழ் சினந்தாள்.
இல்லை. இது எனக்கு
நீங்கள் காட்டும்
சலுகையில்லை.
அவமரியாதை. நானும்
கத்துவேன்.
தட்டுத் தடுமாறி ஏறினாள்.
பாய்மரத்தையும் வயிற்றையும்
பிடித்துக் கொண்டு கத்தினாள்.
அந்தக் குரல் படகைக்கூடத்
தாண்டவில்லை.
கலைவண்ணன் அவளைக்
கைத்தாங்கலாய் இறக்கினான்.
கத்திய களைப்பு. வறண்ட
தொண்டை. அன்றைய பங்கைப்
பிரித்துக் கொள்ள
அவசரமானார்கள். கஞ்சிப்
பானையில் கூடினார்கள்.
கஞ்சிப் பானை திறந்து
கிடந்தது.
ஏன்? எப்படி?
சுண்டெலிக்குச் சோறு வைத்த
பரபரப்பில் அதை முடிவைப்பது
மறந்துவிட்டது.
உள்ளே பார்த்தால் -
அவர்களின் அமுதத்தில் இரண்டு
கரப்பான் பூச்சிகள்
இறந்துகிடந்தன.
அது -
அவர்கள் வயிற்றில் விழுந்த
கடைசி இடி.
பீப்பாய் திறந்தார்கள்.
அவர்கள் தாகத்தின் கடைசித்
தவணை ஆளுக்கு அரை
டம்ளராய் ஆழத்தில் சிரித்தது.
இரவு.
எலிகடித்த ரொட்டியாய்
வடிவிழந்த
நிலா.
நாலா திசையிலும்
சிதறிக்கிடக்கும் நட்சத்திரப்
பருக்கைகள்.
மீனவர் நால்வரும் தூங்கிப்
போயினர். மீன்விழி மங்கை
தூங்கவில்லை.
உறங்கிவிட்டீர்களா?
இல்லை. கண்கள் இமைத்துக்
கொண்டிருக்கும்போது உறங்க
முடியுமா?
புரியவில்லை.
என் கண்ணே நீதானே. நீ
விழித்துக் கிடக்கையில் என்னால்
எப்படி உறங்க முடியும்?
நாளைக்கு மரணமென்றாலும்
இன்றுவரைக்கும் கவிதை
பேசுவீர்கள்
போலிருக்கிறதே.
ஆமாம் மரணத்தை வரவேற்கக் கவிதைகள்
வேண்டாமா?
போதும். போதும். நாளைப்பொழுதாவது நம்
பொழுதாக விடியுமா?
நாளைப் பொழுது நம் பொழுதோ இல்லையோ
ஆனால் உன்பொழுது.
என் பொழுதா?
முடியவில்லை. தொண்டையின்
கடைசி ஈரம் வற்றிவிட்டது.
அடுத்து இசக்கி ஏறினான். ஒரு
கரத்தால் காதுபொத்தி
ஓங்கிக் கத்தினான்.
அதற்குமேல் அவனுக்கும் சக்தி
இல்லை. வயிற்றைப் பிடித்துக்
கொண்டு இறங்கிவிட்டான்.
சலீம். நீ போ அவன்
கத்திக் கத்திப் பார்த்தான்.
சத்தமே வரவில்லை. அவன்
நாவிலிருந்த எச்சிலைக்
கடற்காற்று குடித்துவிட்டுப்
போய்விட்டது.
அடுத்து பலங்கொண்ட மட்டும்
பாண்டி கத்தினான். எந்தத்
திசையிலும் எதிரொலியில்லை.
போங்கள். உயிருக்கு குரல்
கொடுங்கள் - தமிழ்
கலைவண்ணனை அனுப்பினாள்.
கலைவண்ணனும் கத்திப்
பார்த்தான். அவன் குரல்
காற்றில் குதித்துத் தற்கொலை
செய்ததுதான் மிச்சம்.
தமிழ். நீ வா.
வேண்டாம். தங்கை கத்த
வேண்டாம் - பாண்டி
தடுத்தான்.
ஏன்?
சேவல் கூவி விடியாத
பொழுது குயில் கூவியா விடியப்
போகிறது?
தமிழ் சினந்தாள்.
இல்லை. இது எனக்கு
நீங்கள் காட்டும்
சலுகையில்லை.
அவமரியாதை. நானும்
கத்துவேன்.
தட்டுத் தடுமாறி ஏறினாள்.
பாய்மரத்தையும் வயிற்றையும்
பிடித்துக் கொண்டு கத்தினாள்.
அந்தக் குரல் படகைக்கூடத்
தாண்டவில்லை.
கலைவண்ணன் அவளைக்
கைத்தாங்கலாய் இறக்கினான்.
கத்திய களைப்பு. வறண்ட
தொண்டை. அன்றைய பங்கைப்
பிரித்துக் கொள்ள
அவசரமானார்கள். கஞ்சிப்
பானையில் கூடினார்கள்.
கஞ்சிப் பானை திறந்து
கிடந்தது.
ஏன்? எப்படி?
சுண்டெலிக்குச் சோறு வைத்த
பரபரப்பில் அதை முடிவைப்பது
மறந்துவிட்டது.
உள்ளே பார்த்தால் -
அவர்களின் அமுதத்தில் இரண்டு
கரப்பான் பூச்சிகள்
இறந்துகிடந்தன.
அது -
அவர்கள் வயிற்றில் விழுந்த
கடைசி இடி.
பீப்பாய் திறந்தார்கள்.
அவர்கள் தாகத்தின் கடைசித்
தவணை ஆளுக்கு அரை
டம்ளராய் ஆழத்தில் சிரித்தது.
இரவு.
எலிகடித்த ரொட்டியாய்
வடிவிழந்த
நிலா.
நாலா திசையிலும்
சிதறிக்கிடக்கும் நட்சத்திரப்
பருக்கைகள்.
மீனவர் நால்வரும் தூங்கிப்
போயினர். மீன்விழி மங்கை
தூங்கவில்லை.
உறங்கிவிட்டீர்களா?
இல்லை. கண்கள் இமைத்துக்
கொண்டிருக்கும்போது உறங்க
முடியுமா?
புரியவில்லை.
என் கண்ணே நீதானே. நீ
விழித்துக் கிடக்கையில் என்னால்
எப்படி உறங்க முடியும்?
நாளைக்கு மரணமென்றாலும்
இன்றுவரைக்கும் கவிதை
பேசுவீர்கள்
போலிருக்கிறதே.
ஆமாம் மரணத்தை வரவேற்கக் கவிதைகள்
வேண்டாமா?
போதும். போதும். நாளைப்பொழுதாவது நம்
பொழுதாக விடியுமா?
நாளைப் பொழுது நம் பொழுதோ இல்லையோ
ஆனால் உன்பொழுது.
என் பொழுதா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 6 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
» உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து
» ஊழி - கவிப்பேரரசு வைரமுத்து
» இசை - கவிப்பேரரசு வைரமுத்து
» அடங்காநல்லூர் - கவிப்பேரரசு வைரமுத்து
» உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து
» ஊழி - கவிப்பேரரசு வைரமுத்து
» இசை - கவிப்பேரரசு வைரமுத்து
» அடங்காநல்லூர் - கவிப்பேரரசு வைரமுத்து
Page 6 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|