புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_vote_lcapதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_voting_barதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_vote_lcapதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_voting_barதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_vote_lcapதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_voting_barதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_vote_lcapதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_voting_barதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_vote_lcapதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_voting_barதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_vote_lcapதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_voting_barதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_vote_lcapதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_voting_barதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_vote_lcapதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_voting_barதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_vote_lcapதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_voting_barதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_vote_lcapதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_voting_barதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_vote_lcapதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_voting_barதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_vote_lcapதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_voting_barதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_vote_lcapதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_voting_barதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_vote_lcapதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_voting_barதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_vote_lcapதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_voting_barதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_vote_lcapதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_voting_barதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து


   
   

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:16 am

First topic message reminder :

கடல்...
உலகின் முதல் அதிசயம்.
சத்தமிடும் ரகசியம்.
காலவெள்ளம்
தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.

வாசிக்கக் கிடைக்காத
வரலாறுகளைத் தின்றுசெரித்து
நின்றுசிரிக்கும் நிஜƒம்.

கடல்...
ஒருவகையில் நம்பிக்கை.
ஒருவகையில் எச்சரிக்கை.

கடல்குடித்துக் கொண்டிருந்த
கலைவண்ணன் மடியில்கிடந்த
தமிழ்ரோƒஜாவை மறந்துபோனான்.

அவள் அழகின் நவீனம்.
சிறகுகளைந்து சுடிதார்கொண்ட
சொப்பனதேவதை. ரத்தஓட்டம்
பாயும் தங்கம் அவள் தேகம்.
பொறுக்கி எடுத்த உலக
அழகுகளை நெருக்கித் தொடுத்த
நேர்த்தியான சித்திரம். குமரி
வயதுகொண்ட குமரி அவள்.

அவன் அழகன். இளைய அறிஞன்.
காதலிக்கும்போதும் கம்பீரம்
குறையாதவன்.

என்ன யோசனை?
என்றாள் தமிழ்.
கலைவண்ணன் மனது
கரையேறியது.

இந்தச் செவிட்டுக் கரைகளோடு
அந்த அலைகள் இத்தனை
யுகங்களாய் அப்படி என்னதான்
பேசும் என்று யோசிக்கிறேன்.

பூமியில் கிடந்துகொண்டே இந்தக்
கடல் தூரத்துவானத்துக்குத்
தூரிகையில்லாமல் எப்படி
வர்ணமடிக்கிறது என்று
யோசிக்கிறேன்.

மடியில் கிடந்தவள் நொடியில்
எழுந்தாள்.

நீங்கள் கடல்பைத்தியம்.

இல்லை. நான் கடற்காதலன்.

கடல் உங்களுக்குச் சலிக்கவே
சலிக்காதா?

காதலியும் கடலும் சலிப்பதில்லை தமிழ்ரோƒ.

அவள் மல்லிகைக்கரம் தொட்டு
மணிக்கட்டில் முத்தமிட்டான்.

நேசமின்சாரம் நெஞ்சுக்குள் பரவியது.

அவளை இழுத்து வளைத்து
இறுக்கி இறுக்கி உருக்கி உருக்கி
மடியில் ஊற்றிக் கொண்டான்.

ஓர் அலை அவர்கள் மீது அட்சதை தூவியது.

காதுமடல்களின் வெயில்மறைவுப்
பிரதேசங்களில் விளையாடி
அவன் விரல் நன்னம்பிக்கை முனைநோக்கி
நகர்ந்தபோது வெடுக்கென்று விலகிக்
கொண்டவள் பொய்க் கோபத்தில் பூத்தாள்.

அவன் அறிவான் - ஊடல் என்பது
பசிதூண்டும் பந்தி. பந்திக்கு முந்தியவளை
வம்புக்கிழுத்தான்.

வா. கொஞ்ச நேரம் கடலோடு கால்நனைப்போம்.

அய்யோ. கடலுக்குள்ளா? நான் மாட்டேன்.

கலாபமயில் கூட்டுப்புழுவானது குறுகிக் குறுகி.

ஏன்? என் மீது நம்பிக்கையில்லையா?
இல்லை, கடல்மீது நம்பிக்கையில்லை.

எதனால்?

ஆக்டோப… அலைகள் என்னை அள்ளிக்
கொண்டோடிவிட்டால்?

அப்படியாவது கடல்நீர் குடிநீராகட்டுமே.
சிரித்தது அவன் நுரைத்தது கடல்
தள்ளி நின்றாள் தமிழ்ரோƒஜா,

தான்மட்டும் அலைதாண்டிக் கடல்புகுந்தான்
கலைவண்ணன்.

வா

மாட்டேன். எனக்கு பயம் தண்ணீர் பயம்.

குடிநீர் குளிநீர் தவிர எல்லாம் பயம்.
வெள்ளித்திரையில் வெள்ளம் பார்த்தாலே
விழிமுடிக் கொள்வேன்.

ஆறோ ஏரியோ கடலோ என் கனவுகளில்
ததும்பும்போது என் படுக்கையில் நான்
வியர்த்து விழிக்கிறேன்.

மாட்டேன் கடலாட மாட்டேன். என்னை
ஆபத்துக்குள் அழைக்காதீர்கள்.

ஒரே ஒரு பயம்
எனக்கு தண்ணீர் பயம்

பேசப் பேச அவள்
படபடப்பைப் பறைசாற்றின
கண்களில் உடைந்துவிழுந்த
மின்மினி மின்னல்கள்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:33 am

மீண்டும் பிளா…டிக் கயிறு இறக்கி ஆழம்
அறியப்பட்டது. இப்போது இருபத்திரண்டு
பாகம் - நாற்பது மீட்டர் மீண்டும் இரும்புவடம்
இறங்க - பக்கப்பலகை குதிக்க - வலைகள்
மறைய - மிதவைகள் அமிழ நிகழ்த்தப்பட்டது
இரண்டாம் வலைவீச்சு.

இந்தமுறை மீன் விழும் என்றான் பாண்டி
எப்படி? என்றான் கலை.

ஆழமறியும் இரும்புக்குண்டு தரைதொடும்
போது தரை சகதியா பாறையா என்று
சொல்லும் தரை பாறையாயிருந்தால் மீன்
வீழாது. சகதியாயிருந்தால் மீன் வீழும்.

வலை முதலில் விரிந்தது பாறையில்.

இப்போது விரிந்திருப்பது சகதியில் மீன் விழும்
அவன் நினைத்ததும் நடந்தது, நினைக்காததும்
நடந்தது,
அவன் நினைத்தபடி - விரித்த வலையில்
மீன்கள் விழத் தொடங்கின.

அவன் நினைக்காத ஒன்றும் நிகழ்ந்தது.
எந்திரத்திற்கு டீசல் விநியோகத்தைச் சீர்செய்து
அனுப்பும் டைமிங் பிளேட் உடைந்து
விசைப்படகு நின்று விட்டது.
அது-

நீலக்கடலில் கறுப்பு இரவு கவியும் நேரம்.

அய்யய்யோ. படகு பழுதா..?
ஓடுமா..? ஓடாதா..?
கரையோடு சேருமா..? - இல்லை
கடலோடு முழ்குமா..?

அப்போதே சொன்னேன்.
உதவாது இந்த உயிர்
விளையாட்டு என்றேன்.

அனுபவம்.. அனுபவம்.. என்றீர்கள்.
கடைசியில் வாழ்வா, சாவா என்ற
அனுபவத்திற்கல்லவா வரவழைத்துவிட்டீர்கள்..?

தீக்குச்சி கொளுத்தி விளையாடும்
குழந்தைகள் முங்கில் காட்டுக்குள் சிக்கிக்
கொண்டது மாதிரி இந்த விளையாட்டுப்
பயணம் வினையாகவல்லவா முடிந்துவிட்டது.

சொல்லுங்கள், சொல்லுங்கள்... இது படகா -
இல்லை நாம் மிதந்து வந்த கல்லறையா..?
கோழிக்கூண்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டால் -
பக்கவாட்டில் இறக்கையடித்துப் படபடக்கும்
கோழி மாதிரி - அவள் பயந்து நடுங்கிப்
பதறி ஒடுங்கிப் பட்டாசுபா¨„ பேசினாள்.

அமைதி. அமைதி. அவசரப்படாதே.
குடியும் முழுகிவிடாது. படகும் முழ்கிவிடாது.
கொஞ்சம் பொறு...

அவளை அமைதிப்படுத்தியவன் நின்ற
படகின்மேல் நில்லாமல் ஓடிக்கொண்டிருந்த
பாண்டியை நிறுத்தி, படகில் என்ன பழுது..?
என்றான்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:33 am

எந்திரத்துக்கு எண்ணெய்வரத்து நின்று
விட்டது. எந்திரத்துக்கு வரும் எண்ணெய்க்கு
அழுத்தம் கொடுத்தனுப்பும் டைமிங் பிளேட்
உடைந்துவிட்டது. நல்லவேளை. மாற்றுத்தகடு
இருக்கிறது. மாற்றத் தெரிந்த பரதனும் இருக்கிறான்.

மாற்றிவிடலாம்...
எவ்வளவு நேரமாகும்..?
இரண்டு மணியாகலாம்...
இரண்டு மணி நேரமா -
அல்லது இரவு இரண்டு மணியா..?
- தமிழ்ரோƒஜா தடுத்துக் கேட்டாள்.

பயம் வேண்டாம் தாயே. இரண்டு மணி
நேரம்தான்...

அவன் போய்விட்டான்.

மீண்டும் தமிழ்ரோƒஜா விட்ட இடத்திலிருந்து
புலம்ப ஆரம்பித்தாள்.

முடியாது. இதைப் பழுதுபார்க்க முடியாது.
விடியாது. இதோ, வந்து கொண்டிருக்கும்
இரவு விடியாது. இந்தப் படகு கரைசேர்வது
இருக்கட்டும்... நம் உயிர்போன உடலாவது
கரைசேருமா..? சொல்லுங்கள் கலைவண்ணன்.
சொல்லுங்கள்...

இரு கைகளாலும் அவன் மார்பில் மாறி மாறிக்
குத்தி, அவன் உணர்ச்சி காட்டாததால்
தன் முகத்தையும் அவன் மார்பில் முட்டி முட்டி
அழுதாள்.

அவன் அவளைத் தீண்டாமல் பேசினான்.
இதோ பார். இது மிகை.

வாழ்வைக் கற்பனை செய்.
சாவைக் கற்பனை செய்யாதே...

பூக்கள் காற்றில் உதிர்ந்தால் பூகம்பம்
வந்துவிட்டதென்று புலம்பித் திரியாதே.

உச்சிவானத்தில் நிலா வந்தால் தலையில்
விழுந்துவிடுமோ என்று சந்தேகப்படாதே...

இன்பத்தைக் கற்பனை செய்து பார்.
துன்பத்தை எதார்த்தமாய்ப் பார்.
படகு பழுதானதொரு சின்னஞ்சிறு செய்தி...
உடனே இதுதான் வாழ்வின் கடைசி
இரவென்று கருகிப் போகாதே...

இன்பத்தை இரண்டாய்ப் பார்.
துன்பத்தைப் பாதியாய்ப் பார்...
அவளுக்கு உறுதி ஊட்டும் பாவனையில்
ஒலி குறைந்த தொனியில் அவன் சொல்லச்
சொல்ல, அவள் கண்கள் சொட்டுச் சொட்டாய்த்
தமிழ்ப் பேசின.

கண்ணீர்...

திட உணர்ச்சிகளின் திரவமொழி.
ஏய். என்ன இது..? ஓர் இடைவேளைக்குப்
பிறகு இது கண்ணீரின் இரண்டாம் பாகமா..?
நீ எப்படி இப்படித் தண்டுவடம் இல்லாத
புழுவாய்த் தயாரானாய்..?

நீ கர்ப்பத்தின் சுவர்களை உதைத்து உதைத்து
வெளிவந்த குழந்தையா..? இல்லை -
முட்டையின் ஓடுகளை முட்டாமல் வெளிவந்த
குஞ்சா..?



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:34 am

புராணங்கள் சொல்லும் பெண்களின்
பழைய கலவைகளை விட்டு வெளியே வா...
என்ன கலவை அது என்ற பாவனையில்,
அவள் தன் கண்ணீர்க் கண்களை
உயர்த்திக் கேட்டாள்.

இது கேள். இந்தியப் புராணம் சொல்கிறது.
எல்லாம் படைத்து முடித்த பிரம்மன்,
கடைசியாய்ப் பெண்ணைப் படைக்க
முயன்றபோது தேவையான முலகங்கள்
தீர்ந்திருக்கக் கண்டான்.

யோசித்தான். படைத்து வைத்த ஒவ்வொன்றிலும்
பங்கெடுத்தான்.
நிலாவின் வட்டமுகத்தை - வளர்ந்த கொடியின்

வளைவு நெளிவுகளை - புல்லின் மெல்லிய
அதிர்வுகளை - நாணலின் மென்மையை -
பூக்களின் மலர்ச்சியை - மானின் பார்வையை-
உதயசூரியனின் உற்சாகத்தை - மேகத்தின்
கண்ணீரை - காற்றின் அசைவை - முயலின்
அச்சத்தை - மயிலின் கர்வத்தை - தேனின்
இனிமையை - புலியின் கொடுரத்தை -
நெருப்பின் வெம்மையை - பனியின்
தன்மையை - குயிலின் கூவலை - கொக்கின்
வஞ்சகத்தை - கிளியின் இதயத்தை -
சக்கரவாகத்தின் கற்பை ஒட்டுமொத்தமாய்ச்
சேர்த்துப் பெண் படைத்தானாம் பிரம்மன்.

நான் பெண். சுதந்திரமான பெண். நான்
அச்சப்படுவதற்கும் அழுவதற்கும்கூட எனக்குச்
சுதந்திரமில்லையா..?

அவன் அவள் கண்ணீரைத் தொட்டுக்கொண்டு
சிரித்தான்.

அறியாப்பெண்ணே. அழுகையும் அச்சமும்
தீர்ந்தநிலைதான் சுதந்திரம்.

இதோ பார்... பூமி உருண்டை இன்னொரு
நூற்றாண்டுக்குள் சுற்றப்போகிறது.

பெண் மாறிக் கொண்டிருக்கிறாள்.

தலையணை உறைமாற்ற மட்டுமே
தயாரிக்கப்பட்ட பெண், துப்பாக்கிகளுக்குத்
தோட்டா மாற்றத் தயாராகிவிட்டாள்.

மாறிவிடு. நீயும் மாறிவிடு.

உடைந்த தகடு கழற்றிப் புதிய தகடு
பொருத்தும் முயற்சியில் பரதன்
முனைந்திருக்க - பாண்டியும் இசக்கியும்
சேர்த்து அவனுக்கு ஆறு கரங்களானார்கள்.

நீலவானத்தில் ஜெட்விமானம் விட்டுப்போன
புகை திட்டுத்திட்டாய்த் தெரிவது மாதிரி,
இருள் கவியும் கடல்மீது அங்கங்கே
வெள்ளலைகள்...

இருபத்துமுன்று ஆண்டுகளாய் அவள்
சந்திக்காத ஓர் இரவு அவளைச் சந்திக்க
வந்தபோது - அவள் மெய்யாகவே
மிரண்டு போனாள்.

படமெடுத்துச் சீறும் பாம்பாய் ஓசையோடு

வீசும் வாடைக்காற்று.
விசைப்படகில் வெளிச்சம்விழும்
கடற்பரப்பைத் தவிர சுற்றிக் கறுப்புச்சுவர்
எழுப்பி நிற்கும் இரவு.

வானத்தில் அணைந்து அணைந்து எச்சரிக்கும்
நட்சத்திரங்கள்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:34 am

நிலாவைப் பெற்றெடுப்பதற்குப் பிரசவ
வலியில் சிவந்து கொண்டிருக்கும் கிழக்கு.
அலைகளின் தளுக்.. தளுக்.. ஓசைகளில்
தளும்பி ஆடும் படகு.

இவையெல்லாம் அவள் அச்சத்தை மெள்ள
மெள்ள அதிகரித்தன.

அழுது அழுது கண்கள் சிவந்தும் கண்ணீர்
உறைந்தும் போனவள் - இன்னும் எவ்வளவு
நேரமாகும்..? என்றாள் குழந்தையாய்க்
குழைந்து குழைந்து.

இன்னும் ஒரு மணி நேரம் அல்லது
ஒன்றரை மணி நேரம்...
அதுவரை என்ன செய்யலாம்..?

கண்முடித் தியானம் செய்வோம். கவிதை
செய்வோம். நீ அனுமதித்தால் காதலிப்போம்.
விரல் விழுந்துவிட்டால் அழுதுகொண்டிருக்கக்
கூடாது. நகம் வெட்டும் நேரம் மிச்சம் என்று
நினைத்துக்கொள்வோம்.

படகு பழுதானதென்றால் பதறிக்
கொண்டிருக்கக் கூடாது.
கடலில் ஓர் இரவு என்ற கட்டுரைக்குக்
குறிப்பெடுப்போம்...

இப்படி ஒரு தைரியம் உங்களுக்கு எப்படிக்
கிடைத்தது..?

கல்வியோடு வாழ்க்கையைக் கல்யாணம்
செய்தபோது கிடைத்தது.

ஒரு ƒப்பானியக் கவிதை சொல்வேன் -
கேட்டுக் கொள்வாயா..?

சொல்லுங்கள்...
சோதனைகளை அனுபவிக்கப்
பழகிக் கொண்டிருக்கிறேன்.

எரிந்துவிட்டது வீடு
இனி
தெளிவாய்த் தெரியும் நிலா...
- இந்தக் கவிதையை வாழ்க்கைப்படுத்தக்
கற்றுக்கொண்டேன்.

தண்ணீரில் எடையிழக்கும் பாரம்போல்
துன்பம் எடையிழந்தது.

தங்கத்தின் துருவல்களைச் சேகரித்தே ஒரு
நகை செய்து விடுவதுபோல், க„டங்களைச்
சேகரித்தே நாம் கலைசெய்யக் கற்றுக்கொள்ள
வேண்டும்.

கலையின் முதல் எதிரி பசி...
முதல் நண்பனும் அதுதான்.
ஓ. உனக்குப் பசிக்கிறதா..?
அந்த நேரத்தில் அந்தப் படகில் ஒரே
ஓர் ஆறுதல் சலீமின் சமையல் வாசனைதான்.

வாந்தி கண்ட தமிழ்ரோƒஜா, பகல் முழுவதும்
தேநீர் தவிர எதையும் அருந்தவில்லை.

அவளோடு அவள் பட்டினியைப் பங்கிட்டுக்
கொண்டவனும் அதுவரை எதுவும்
அருந்தவில்லை.

சாப்பிடுங்கள்... எங்களுக்கே பசிக்கிறதே.
உங்களுக்குப் பசிக்காதா..?

சோற்றின் முக்கால்பாகத்தை மீன்குழம்பில்
முழ்கடித்து, தட்டேந்தி நின்றான் சலீம்.

ஆனால், அதில் மீன்துண்டு கிடக்கக் கண்டு,
உயிருள்ள பாம்பைக் கண்டதுபோல் தன்னைப்
பின்னிழுத்துக் கொண்டாள் தமிழ்ரோƒஜா.

மன்னித்துவிடுங்கள் சலீம். தமிழ் - சைவம்...
என்றான் கலைவண்ணன்.

அப்படியானால் மீன் அசைவமா..?
என்றான் சலீம்.

தயவுசெய்து போய்விடுங்கள். என்னால்

தாங்கமுடியவில்லை... - முகத்தையும் முக்கையும்
முடிக்கொண்டாள் தமிழ்ரோƒஜா.

வெறும் சோறு... வெறும் ரசம்... தரமுடியுமா
தமிழுக்கு..?



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:34 am

இப்போதே தருகிறேன்... என்ற சலீம்.
ஒரு தட்டைக் கலைவண்ணன் கையில்
தந்தான். மறுதட்டை ஏந்திக்கொண்டான்.
ததும்பும் படகில் தடுமாறாமல் ஓடினான்.

சோற்றில் ரசமுற்றிச் சுடச்சுடக் கொண்டு
வந்தான். தமிழுக்குப் பசித்தது. தட்டை
வாங்கிக் கொண்டாள். உடனே சாப்பிடாமல்
உற்று உற்றுப் பார்த்தாள். தட்டிலிருந்த பிசுக்கு
அவளைப் புசிக்க விடவில்லை.

தூக்கம் வந்தால் தலையணை தேவையில்லை.
பசி வந்தால் சுத்தம் தேவையில்லை.

அவள் பிசுக்கை மறந்தாள். பிசைந்தாள். ரசமே
சோறாய் - சோறே ரசமாய் மாறும் ரசவாதம்
நிகழ்ந்தது.

ஒருவாய் அள்ளி உண்டாள்.
மென்ற சோற்றை விழுங்கவிடாமல் உள்ளே
ஏதோ உறுத்தியது.

சமையலறையில் பாண்டி சலீமைத் திட்டிக்
கொண்டிருந்தான்.

மீன்கரண்டியை ரசத்தில் போடாமல் உனக்குப்
பரிமாறவே தெரியாதா..?
அவ்வளவுதான்.

தமிழ்ரோƒஜா தன் குடலைத் தவிர,
எல்லாவற்றையும் மொத்தமாய்த் துப்பிவிட்டாள்.
தட்டை வீசியெறிந்தாள்.

அது வங்காள விரிகுடாவில் விழுந்தது.
தயவுசெய்து என்னையும் இந்தக் கடலில்
எறிந்துவிடுங்கள்...

அவள் சத்தத்தில் - அப்போதுதான்
தூங்கப்போன கடல் துடித்து எழுந்தது.

வாழ்வின் மர்மம்தான்
வாழ்வின் ருசி.

நாளை நேர்வதறியாத சூட்சுமம்தான்
அதன் சுவை.
எதிர்பாராத வெற்றிதான்
மனித மகிழ்ச்சி.

தோல்வியும் எதிர்பாராமல் வருவதால்தான்
மனிதன் அதன் முன்நிமி„ம் வரைக்கும்
முயற்சியில் இருக்கிறான்.

மரணத் தேதி மட்டும் மனிதனுக்குத்
தெரிந்துவிட்டால் மரணம் வருமுன்பே அவன்
மரித்துப் போவான்.

வாழ்க்கையும் ஒருவகையில் கண்ணீரைப்
போலத்தான். இரண்டும் எதிர்பாராமல்
வருவதில்தான் பெருமை.

சரியாகிவிட்டது. டைமிங் பிளேட்
பழுதுபார்த்தாகிவிட்டது...
அவிழ்ந்த லுங்கி தெரியாமல் ஆடிக் குதித்துக்
கத்தினான் சலீம்.

படகுக்குள் அதுவரைக்கும் கோமாவில்
கிடந்த சந்தோ„ம் அங்குலம் அங்குலமாய்
அசையத் தொடங்கியது.

கறுத்த முகங்களில் மகிழ்ச்சி நுரைத்தது.
அந்தத் தடித்த இரவுக்கும் வாடைக்
காற்றுக்கும் அந்தச் செய்தி மட்டுமே ஆறுதல்.
மாலையின்றி மேளமின்றிப் பரதனுக்குப்
பாராட்டு விழா.

கலைவண்ணன் ஓடிப்போய் அவன்
கைகுலுக்கினான்.

அதில் -
எண்ணெய்ப் பிசுக்கில் ஊறிய அழுக்கு.
அதனாலென்ன.

உழைக்காதவன் கையில் தங்கமும் அழுக்கு.
உழைப்பவன் கையில் அழுக்கும் தங்கம்.

நாங்கள் படித்தவர்கள்தாம். ஆனால்.
பழுதுபார்க்கப் பயன்படவில்லை எங்கள்
படிப்பு. நீங்கள் படிக்காதவர்தான். ஆனால்
பழுதுபார்த்துக் கொடுத்தது உங்கள் பயிற்சி.
நன்றி பரதன். நன்றி...

தன் அழுக்குக் கையை இழுத்துக்கொண்டு
பரதன் சிரித்தான்.

பிரசவத்தில் முதலில் தலைநீட்டும்
குழந்தையைப் போல - துண்டுமுகம்
காட்டியது தூரத்துநிலா.

சரி. சரி. கரைக்குத் திருப்புங்கள் படகை.
வாடைக்காற்று வாட்டுகிறது. தங்கை தாங்காது.
மீன் விழாவிட்டால் பரவாயில்லை. இவர்களைக்
கரைசேர்த்துத் திரும்பி வருவோம்...

- பாண்டியின் கரகரப்பான ஆணைகேட்டுச்
சுறுசுறுப்பான படகு நங்கூரம் களையத்
தயாரானது.

கலைவண்ணன் முகத்தில் கவலை கப்பியது.
பாண்டி. மீன் விழுந்திருக்குமா..?
விழுந்திருக்காது...

ஏன்..?

படகுதான் நின்றுவிட்டதே... வலை பயணப்பட
வில்லையே.

கண்களைக் கடலுக்கும் காதுகளை அவர்கள்
பேச்சுக்கும் கடன் கொடுத்திருந்தாள்
தமிழ்ரோƒஜா.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:34 am

தலைதாழ்த்திப் பேசினான் கலை.
மன்னிக்க வேண்டும். எங்களால்
உங்களுக்கு இன்னல். உங்கள் படகில் துன்பம்
ஜோடியாய்க் குதித்துவிட்டது...

பரவாயில்லை பேனாக்காரரே. திரும்பி
வந்து மீன்பிடித்துக் கொள்கிறோம்...

இருவரும் மெளனமானார்கள். வாடைக்காற்று
மட்டும் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருந்தது.

மீன் விழவேண்டுமென்றால் இன்னும்
எவ்வளவு தூரம் போக வேண்டும்..?
எதிர்பாராத குரல்கேட்டு இருவரும்
திரும்பினார்கள்.

- கேட்டவள் தமிழ்ரோƒஜா.

இது உண்மைதானா என்று கண்களை
உருட்டி உருட்டிப் பார்த்த பாண்டி -
இன்னும் ஐந்தாறு கிலோமீட்டர் போக
வேண்டியிருக்கும்... என்றான்.

போகலாம்... இவ்வளவு தூரம் வந்துவிட்டோம்.
மீன்பிடித்துக்கொண்டே போகலாம். படகை
முன்னோக்கிச் செலுத்துங்கள்...

நிƒந்தானா இது..?
நிலைகுத்தி நின்றான் கலைவண்ணன்.
பேசுவது தமிழா..?. இல்லை,
பெருங்கனவின் குரலா..?.

பகலெல்லாம் உணவு கொள்ளாமல் வண்ணம்
உதிர்ந்து கிடக்கும் என் வசீகரச் சித்திரம்
தோழர்களின் வயிறு வாடக்கூடாதென்று
வாய்திறந்து பேசியதா..?

மற்றவர் நலனுக்காகத் தன் துயர் பொறுக்கும்
தன்னல மறுப்பு இருக்கும் வரைக்கும் காற்றும்
மழையும் பூமியிலிருக்கும். கடல்கள் தங்கள்
கரைதாண்டாதிருக்கும்.

தன் மெளனவிரதத்தைச் சத்தமிட்டு
முடித்துக்கொண்ட விசைப்படகு ஒரு
போர்க்கோபத்தோடு புறப்பட்டது.

கிழக்கே கிளம்பிய நிலாவைத் தொட்டுவிடத்
தன் நீண்ட முக்கை நீட்டியது.

உற்சாகம்தான். படகு முழுக்க ஒரு பரவசம்தான்.
மீன்குழம்பு சாப்பிடுவதே அவர்களுக்கொரு
கலைநிகழ்ச்சிதான்.

கொஞ்சநேரம் தட்டாராய்ச்சி செய்து
கொண்டிருந்த இசக்கி சலித்துக்கொண்டான்.
என்ன சலீம். மீனின் நடுத்துண்டம்
பாண்டிக்கு. வால் பரதனுக்கு. தலை மட்டும்

எனக்கா..?
சாப்பிடுங்கள். அதில்தான் முளை இருக்கிறது.
மீன் தலை சாப்பிட்டால் முளை வளரும்...
அப்படியா. நீ பிறந்ததிலிருந்து மீன் தலையே
சாப்பிட்டதில்லையா..?

பொசுக்கென்று எல்லோரும் சிரித்ததில்
புரையேறிவிட்டது. சத்தங்கேட்டு ஓடிவந்த
தமிழ்ரோƒஜா தண்ணீர் ஊற்றிக் கொடுத்தாள்.
கலைவண்ணன் அவர்கள் தலை தட்டித் தட்டி,
சிரித்துப் புரையேற்றிய சிரமம் குறைத்தான்.
ஏதோ ஒரு கூச்சம். ஏதோ ஒரு நெகிழ்ச்சி.

அவர்கள் பின்வாங்கினார்கள்.
படித்தவர்கள் தங்களை உபசரிக்கிறார்களே
என்ற பாமரப் பதுங்கல்.
நெளிந்துகொண்டே பரதன் கேட்டான்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:35 am

நீங்கள் சாப்பிடவில்லையா..?
சாப்பிடுவோம். இன்று எங்களுக்கு
நிலாச்சோறு... என்றவன், தமிழ்ரோƒஜாவை
அழைத்துக்கொண்டு படகின் பின்விளிம்பில்
இருள் கவிந்த பிரதேசம் ஏகினான்.

அவள், அவன் மடியில் விழுந்து குறுகிக்
குறுகி ஒரு குட்டியானாள்.
அவன் கங்காருவானான்.

வானத்தில் நிலா. வயிற்றில் பசி.
என்னவோ நிலாச்சோறு என்றீர்களே.
சைவப்பெண்ணே. இன்றுனக்கு நிலாவே
சோறு... நிலாவைத் தின்றுவிடு...
நிலா சைவமா..?
நிச்சயமாய்ச் சைவம்தான்...
எப்படி..?

அங்குதான் உயிர்கள் இல்லையே.
அவள் பசியில் சிரித்தாள். அலைகளோடு
சடுகுடு விளையாடும் நிலவின் கிரணங்களில்
நெஞ்சுகரைந்தவள் -

பெளர்ணமி பார்த்தால் கடல் பொங்குகிறதே.
அது ஏன்..? என்றாள்.
பிரிந்துபோன மகளைப் பார்த்தால் பெற்ற தாய்
பொங்கமாட்டாளா..?
யார் மகள்..? யார் தாய்..?

கடல் - தாய்... நிலா - மகள்...

எனக்கு இந்தக் காதுக்குப் பூ வைக்கும்
கவிதைகள் பிடிப்பதில்லை...

நான் சொல்வது கவிதையல்ல. விஞ்ஞானம்.
பூமியிலிருந்து தூக்கியெறியப்பட்ட துண்டுதான்
நிலா என்று ஒரு விஞ்ஞான முடிவு உண்டு...
எப்படி..?

பூமி தோன்றி அதன் எரிமலைக் குழம்புகள்
ஆறத்தொடங்கிய அந்த ஆதிநாளில் - சூரிய
ஏற்றவற்றத்தால் ஐந்நூறு ஆண்டுகள் வளர்ந்த
ஒரு பேரலை பூமியிலிருந்து பிய்ந்து
விண்வெளியில் வீசப்பட்டது. சில பெளதிக
விதிகளுக்குட்பட்டுத் தூக்கியெறியப்பட்ட
துண்டு ஒரு சொந்தப் பாதை போட்டுச் சுற்ற
ஆரம்பித்தது. அதுதான் நிலா...
ஆச்சரியம். ஆனால் - ஆதாரம்..?
இன்னும் பசிபிக் கடலில் அந்தப்
பள்ளமிருக்கிறது. அந்தப் பள்ளத்திலிருக்கும்
பசால்ட் என்னும் எரிமலைக் குழம்புப்
பாறையும், நிலாப் பாறையும் ஒரே ƒஜாதி
என்ற உண்மை உணர்த்தப்பட்டிருக்கிறது.

நிலாவை ஈன்று கொடுத்த பசிபிக்
சமுத்திரத்தின் கர்ப்பப்பை இப்போதும்
காலியாயிருக்கிறது...
அவ்வளவு பெரிய பள்ளமா..?
பள்ளம். பெரும்பள்ளம். எவரெ…ட்டை
வெட்டி உள்ளே போட்டாலும் இன்னும்
மிச்சமிருக்கும்...

கடலுக்குள் ஏன் மலையை வெட்டிப்
போட வேண்டும். கடலுக்குள் ஏற்கெனவே
மலைகள் இல்லையா..?

இருக்கின்றன...
அடையாளங்கள்..?
தீவுகள்...
தீவுகளுக்கும் மலைகளுக்கும் என்ன
சம்பந்தம்..?
கடலுக்குள் முழ்கிய மலைகளின் முழ்காத
உச்சிகளே தீவுகள்...

அப்படியா..?

அப்படித்தான்... மத்திய பசிபிக்கின்
குறுக்கே இரண்டாயிரம் மைல் நீளமுள்ள
மலைமுகட்டின் கடல் கொள்ள முடியாத
சிகரங்களே †வாய்த் தீவுகள். இந்துமகா
சமுத்திரத்தில் இந்தியாவிலிருந்து அண்டார்டிகா
வரை ஒரு மலைத்தொடர் போகிறது. அந்த
மலைத்தொடரில் முழ்காத உச்சிகளே மடகா…கர் -
இலங்கை - மாலத்தீவுகள் - லட்சத்தீவுகள்...

அவள் இரண்டு கண்களிலும் ஆச்சரிய நிலாக்கள்
அடித்தன. உள்ளிருந்து ஒரு பாட்டுச் சத்தம்.
என்னென்னமோ ஆகிப்போச்சு ஐலசா - ஓடம்
எந்திரத்தில் ஏறிப்போச்சு ஐலசா...
ஒங்களத்தான் கரைசேத்தோம் ஐலசா - அட
எங்க கரை எப்ப வரும் ஐலசா...
ஒவ்வொரு வரியையும் வெவ்வேறு சுதியில்
சமையலறையிலிருந்து சலீம் பாடினான்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:35 am

மீன்களுக்கு மட்டும் காது கேட்குமானால்
அவன் அறுப்பதற்கு முன்பே மரித்திருக்கும்.
சலீம்தானே பாடுவது..? என்றாள் தமிழ்.
கழுத்தளவு நீரில் நிற்பவனுக்கே சங்கீதம்
வருமென்றால், கடல்நீரில் நிற்பவனுக்குச்
சங்கீதம் வராதா..?

அவன் விதித்ததே சுதி. அவன் வகுத்ததே
மெட்டு. ஆனால், இப்போது அவனது
சந்தோ„த்தின் உயரத்தை எந்தச் சங்கீத
வித்வானும் தொட்டுவிட முடியாது...
சமையல்கட்டில் ஒரு சுண்டெலி வந்து மாட்டிக்
கொண்டது.

மிளகாய்த்தூள், கடுகுபுட்டிகளுக்குப் பின்னே
இடுக்குகளில் வளைந்து வளைந்தோடி அது
வால்காட்டியது.

சலீம் அந்தச் சுண்டெலியை விரட்டியும்
மிரட்டியும் பார்த்தான்.

ஆனால், அது எலிமொழி பேசிக்கொண்டு
அங்கேயே சுற்றிச்சுற்றி வந்தது.

ஏய். எங்களுக்குத் தெரியாமல் எங்கள்
படகில் ஏறிக்கொண்டு வக்கணை வேறு
காட்டுகிறாயா..? ஓடிப்போ. ஓடிப்போ. என்று
அவன் செல்லமாய் விரட்ட, அது அவன்
தலைமேல் ஒரு எட்டு வைத்துத் தாவி,
அவன் பார்வை தொடமுடியாத இடத்தில்
போய்ப் பதுங்கிக்கொண்டது.

நான் சுறாமீனுக்கே பயப்படாதவன்.
சுண்டெலிக்கா பயப்படப் போகிறேன்..?
என்று தன் வீரத்தைத் தனிமையில்
பிரகடனம் செய்துகொண்டான் சலீம்.

நிலா வெளிச்சத்தில் கடல்குளிக்கும் அந்த
வெள்ளை இரவில் - அலைகளின் மேலே
துள்ளித் துள்ளி விளையாடின ஜெல்லி மீன்கள்.
சில நேரங்களில் அலை எது, மீன் எது
என்ற வித்தியாசம் விளங்கிக்கொள்ள வெளிச்சம்
போதவில்லை.

கலைவண்ணன் மடியில் கிடந்துகொண்டே
அந்த மங்கலான காட்சிகளில் மனது கரைந்து
கொண்டிருந்தாள் தமிழ்ரோƒஜா.

கடல்நோய் கொண்ட கண்மணி. கடல்
உனக்கும் பிடித்துவிட்டதா..? இன்னும் கொஞ்சம்
கடல் விஞ்ஞானம் சொன்னால் காது கொடுப்பாயா..?
வேண்டாம்... எனக்கிந்த இரவுபோதும். கடல்
அலைகளைக் கிச்சுக்கிச்சு முட்டிச்
சிரிக்கவைக்கும் கிரணங்கள் போதும்.

தண்ணீரிடம் சுதந்திரம் கேட்கும்
ஜெல்லிமீன்களின் துள்ளல் போதும். இது
என் கண்ணுக்குத் தெரிந்த நிஜƒம்.
இதற்குமேல் இதில் விஞ்ஞானம் பார்த்து, என்
முளையில் நான் முள் குத்திக்கொள்ள மாட்டேன்...
நீ தமிழச்சி. தலைமுறை தலைமுறையாய்த்
தமிழன் செய்த தவறைத் தமிழச்சி நீயும்
செய்கிறாய்.

தெரிந்த பூமியைப் பார்க்க மறந்ததும் -
தெரியாத கடவுளைத் தேடி அலைந்ததும்
தான் தமிழன் செய்த தவறு. பசித்தவன்
காதில் வேதாந்தம் ஓதக்கூடாது
என்பார்கள். வேதாந்தம் மட்டுமல்ல.

விஞ்ஞானமும் ஓதக்கூடாது...
சலீம் வந்து தனிமை கலைத்தான்.

கையில் இரண்டு தட்டுகள் ஏந்தியிருந்தான்.
இதோ. சுத்தமான பாத்திரத்தில் வடித்த
சோறு. சாப்பிடுங்கள்... நீங்கள் பட்டினி
கிடந்தால் எங்களுக்குச் செரிக்காது...

அவன் நீட்டியது பள்ளமும் குழியும்
நிறைந்த அலுமினியத் தட்டுதான். ஆனால்
ஒவ்வொரு பள்ளத்தையும் அவன் தன்
பாசத்தால் நிரப்பியிருந்தான்.
தட்டாமல் வாங்கினர் தட்டை.
அவள் முதலில் பிசைந்தாள். பசி
இப்போது சுத்தம் பார்க்கவில்லை.

உருட்டி உருட்டி ஒரு வாய் உண்டாள்.
மென்றால் ருசி தெரிந்துவிடுமோ என்று
மெல்லாமல் விழுங்கினாள்.

அவள் உண்ணும் அழகுபார்த்து அவன்
உண்ணத் தொடங்கியபோது, விரைந்து சென்ற
விசைப்படகு நிலைகொள்ளாமல் ஆடி
நின்றுவிட்டது.

என்ன... ஏனிந்த நிறுத்தம்..? ஒருவேளை
கரைக்குத் திருப்பச் சொல்லிக் கட்டளையா..?



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:35 am

அங்கே நிலவிய ஒரு நீளமான
குழப்பத்துக்குப் பிறகு பதட்டத்தோடு வந்து
பாண்டி ஒரு சேதி சொன்னான்.

சேதியா அது..?
மேலே மேகம் இல்லை.
மின்னலும் மழையும் இல்லை.
ஆனால் -

இடிமட்டும் காதில் வந்து இறங்கியது.

படகின் எந்திரம் பழுது. இனி ஓடாது.
சிறு பழுதல்ல. பெரும் பழுது.
இறுகிவிட்டது எந்திரம். வெடித்துவிட்டன
எண்ணெய்க் குழாய்கள்.

0முதல் 7 வரை
எண்கொண்ட எண்ணெய்மானியில்
அந்த எண்ணெய் முள் 5 வரை ஆடும்.

அந்த முள் செத்து பூƒயத்தில் விழுந்து
விட்டது. இது படகுக்கு மாரடைப்பு. இனி
ஒன்றும் செய்ய முடியாது.

அதுவரையில் அந்த விசைப்படகில்
விரிந்திருந்த சந்தோ„த்தின் சிறகு
தொட்டாற்சிணுங்கி இலையைப் போல்
மொத்தமாய் முடிக்கொண்டது.
மென்ற உணவை விழுங்கியும்
விழுங்காமலும் கலைவண்ணன் கேட்டான்.

பழுதுபார்க்க முடியுமா? முடியாதா?
பாண்டி ஓடிக்கொண்டே சொன்னான்.

இல்லை. அது நம் கையைவிட்டுப் போய்
விட்டது. போன மாதமே இந்தப் படகை
எடுக்க வேண்டாமென்று எச்சரித்தார்கள்.

நாங்கள் கேட்கவில்லை. படகு பழையது.
ஓடாதா? படகு இனிமேல் ஓடாதா?
தவணை முறையில் தாக்கிய அதிர்ச்சியில் -
தட்டோடு தட்டுத் தடுமாறித் தமிழ்ரோƒஜா
முர்ச்சையானாள்.

தமிழ். தமிழ். என்று
கத்திய கலைவண்ணன் குரலில்
அந்த ராத்திரிக்கடல் உறக்கம்
கலைந்தது. ஆனால்
தமிழ்ரோƒஜாவின் முர்ச்சை
தெளியவில்லை.

அவளை அவன் தன் மடி
கிடத்தித் தாதியானான்.
தீப்பிடித்த வீட்டில்
திரைச்சீலையை யார்
கவனிப்பது?

அவர்களைக் காக்க
மீனவர்களுக்கு
அவகாசமில்லை.

இடு. இடு. நங்கூரமிடு.

இழு. இழு. வலையை இழு.

ஒரு வஞ்சகக் கஞ்சனின் கையில்
காசு நகர்ந்தாலும்
நகரலாம். ஆனால் நம் படகு
நகரும் என்று நம்பாதே.
உதவிப் படகு வராமல்
ஒன்றுமே நடக்காது. அபாய
அறிவிப்புக் கொடு.

விளக்குகளை அணைத்தணைத்து
வெளிச்சம் காட்டு.

இங்கே சில இதயங்கள்
விட்டுவிட்டுத் துடிக்கின்றன
என்பதை விட்டு விட்டு எரியும்
விளக்காவது விளக்கட்டும்.
படபடவென்று பாண்டி
தந்தித்தமிழ் பேசினான்.

உதட்டுக்கும் முத்தத்துக்கும்
இடைவெளியே இல்லாதது
மாதிரி கட்டளைக்கும்
காரியத்துக்கும் இடைவெளியே
இல்லாமல் அங்கே செயல்கள்
நடந்தன.

தண்ணீர் முடிச்சாய் நங்கூரம்
விழுந்தது.

கடலில் நீந்திவந்த வலை
படகேறியது.
ஆபத்தின் அறிகுறியாய்
விளக்குகள் அணைந்தணைந்து
எரிந்தன.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:36 am

ஆனால் அந்த சமிக்ஞைக்கு
நட்சத்திரங்களை
அணைத்தணைத்து வானம்தான்
பதில் சொன்னதே தவிர -
கடல் பேசவில்லை.
படபடத்த மீனவர்கள்
பரபரத்தார்கள்.
தமிழ். தமிழ். -
கலைவண்ணன் முர்ச்சை
தெளிவிக்கும் முயற்சி
தொடர்ந்தான்.

ஏ வெயிலில் சூம்பிய
வெள்ளரிப் பிஞ்சே. ஒரே ஓர்
அதிர்ச்சியிலேயே முச்சுவிடும்
கல்லாய் முர்ச்சையுற்றுப்
போனவளே.
கலங்காத கடல்
கலங்கிநிற்பதுபோல பதறாத
என் உள்ளம் பதறி நிற்கிறதே.
கண்திறந்து பார்.

என்ன இது? உன் சிவந்த
திருமேனி சில்லிட்டு வருகிறதே.
கூடாதே. சில்லிடக்கூடாதே.
அவள் கால்களை அள்ளி மடியில்
போட்டுப் பரபரவென்று
பாதம் தேய்த்தான்.

முயல்காதுகளைப் போல
மெல்லிய
அந்தப் பாதங்களை
முரட்டுத்தனமாய்த்
தேய்த்தான். பாதங்கள்
சூடுகண்டதும் உள்ளங்கைகளுக்கு
ஓடினான்.

அந்தக் குவிந்த தாமரைகளைக்
கொஞ்சம் மலர்த்தி
மெல்லென்று தேய்த்துத்
தேய்த்து மின்சாரம்
தயாரித்தான்.

முர்ச்சையுற்றுக் கிடந்த
மரங்களில் வசந்தகாலம்
வந்ததுமே கொழுந்து
எழுந்துவருமே - அப்படி அவள்
இமைகள் கொஞ்சம் எழுந்தன.
உடனே விழுந்தன.

தமிழ். தமிழ்.

காதலியின் காதுமடலில் குனிந்து
குனிந்து கூப்பிட்டான்.

ஓடிக்கொண்டேயிருந்த பாண்டி
ஒருகணம் நின்றான்.

கலையின் துயர் கண்டும் தமிழின்
நிலைகண்டும் பரபரப்பிலும்
பரிதாபித்தான்.
எங்களால்தானே உங்களுக்கு
இத்தனை துன்பம்? மன்னித்து
விடுங்கள்.

யார் மீதும் தவறில்லை.
இது சந்தர்ப்பத்தின் சதி.
நீங்கள் பதற்றப்படாதீர்கள்.

பதற்றத்தில் மனிதன் பாதிபலம்
இழக்கிறான். சிதறும்
உணர்ச்சியைச் சேகரித்து
யோசியுங்கள். நம் மீட்சிக்கு
வழியுண்டா இல்லையா?
உண்டு. முன்றே வழி...
என்னென்ன?
ஒன்று.

கடந்து செல்லும் கப்பல்
நம்மைக் கரை சேர்க்கலாம்.
இரண்டு.

படகு ஏதேனும் வந்து
நம்மைப் பாதுகாக்கலாம்.
மூன்று.

கட்டுமரம் வந்து
நம்மை இட்டுச் செல்லலாம்.
இந்த முன்றுமே
இல்லையென்றால்..?
காற்றடித்துக் காற்றடித்து
நாம் கரைசேர வேண்டும்.
இப்போது அது முடியாது.
ஏன் முடியாது?
இது கிழக்கிலிருந்து மேற்கே
காற்றுவீசும் காலமல்ல.

மேற்கிலிருந்து கிழக்கே
காற்றுவீசும் காலம்.

நல்லது நடக்கும்.
நம்பிக்கையோடிருப்போம்.
பாண்டி சிரித்தான். அதில்
ஈரப்பசை இல்லை.

பாவம். அது சிரிப்பின்
மீசையை ஒட்டவைத்துக்
கொண்ட சோகம்.
ஆனாலும் தைரியம் பேசினான்.

மீன் தப்பினாலென்ன? வலை
இருக்கிறது. எந்திரம்
போனாலென்ன? படகு
இருக்கிறது. நீங்கள்
தங்கையைக் கவனியுங்கள்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக