புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி ஒரு மாதிரி...! Poll_c10மனைவி ஒரு மாதிரி...! Poll_m10மனைவி ஒரு மாதிரி...! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
மனைவி ஒரு மாதிரி...! Poll_c10மனைவி ஒரு மாதிரி...! Poll_m10மனைவி ஒரு மாதிரி...! Poll_c10 
3 Posts - 7%
heezulia
மனைவி ஒரு மாதிரி...! Poll_c10மனைவி ஒரு மாதிரி...! Poll_m10மனைவி ஒரு மாதிரி...! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மனைவி ஒரு மாதிரி...! Poll_c10மனைவி ஒரு மாதிரி...! Poll_m10மனைவி ஒரு மாதிரி...! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
மனைவி ஒரு மாதிரி...! Poll_c10மனைவி ஒரு மாதிரி...! Poll_m10மனைவி ஒரு மாதிரி...! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி ஒரு மாதிரி...!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 27, 2010 9:26 am

ஏண்டா ராமு... உனக்கே நல்லாயிருக்கா...! அவ எங்கே போறா? என்ன பண்றா...! ஏன் லேட்டா வரா... ஏன்னு ஒரு வார்த்தை கேட்க மாட்டியா? அவ இந்த வீட்டு மருமகளா இல்லையா...? ஏதோ... உன்னைவிட பெரிய வேலையில் இருக்காளேன்னு பொறுத்து பொறுத்து பார்த்தாச்சு... இப்ப எல்லை மீறிப்போச்சு...! உலை வாயை மூடலாம்... ஊர் வாயை மூடமுடியுமா...? ஆரம்பத்திலேயே கிள்ளி எரியணும்... வனர விடக் கூடாது... இல்லைன்னா பின்னாலே பிரச்சினையாகி விடும்... மகனிடம் பொரிந்து தள்ளினாள் அம்மா... மருமகள் மாலா பற்றி.

"கவனிச்சிட்டு தான் வரேன்...! எல்லாம் சமயம் பார்த்து சரி பண்ணிடலாம்... கொஞ்சம் பொறு...!''

-ராமு பதில் சொன்னான்.

"அண்ணா...! பொறுமைக்கும் எல்லையுண்டு. நான் லேட்டா வந்தா... யார் கூடவாவது செல்போன்ல அதிகமா பேசினா... எப்படி சந்தேகப்படறே...! அண்ணி கிட்ட ஒரு வார்த்தை கேக்கறியா?'' தன் பங்குக்கு உசுப்பி விட்டாள் தங்கை நளினி.

``சமயம் வரட்டும்...! கேட்காமலா விட்டுடுவேன்... கொஞ்சம் பொறு...!

-அவளுக்கும் பொறுமையாக பதில் சொன்னான் ராமு.

இப்போது அப்பா எகிறினார்.

"மணி எட்டாகப் போகுது... ஆளைக்காணோம். இவ்வளவு நேரம் ஆபீஸிலே என்ன வேலை...? திடீர்னு கோயில்ல தாலிகட்டி, மாலையும், கழுத்துமா வந்து நின்னீங்க...! எல்லா எதிர்ப்பையும் மீறி உன்னை நம்பி வந்திருக்கிறதா சொல்லி கால்லே விழுந்தே! ஆனது ஆகட்டும்னு ஏத்துக்கிட்டோம். ஊரே ஒரு மாதிரி பேசிச்சு! பொறுத்துக்கிட்டோம். இப்ப என்னடான்னா... ஏதோ தப்பு நடக்குதோன்னு சந்தேகப்படறோம்...! நீ என்னடான்னா இடிச்ச புளி மாதிரி சமயம் வரட்டும்னு காலத்தை ஓட்டறே?''

அப்பாவுக்கு பதில் சொல்ல அவகாசமில்லாமல் செல்போன் ஒலித்தது. எடுத்து பேசிய ராமு, "அப்படியா? எல்லாரும் புறப்பட்டு வர்றோம்...!'' பேச்சில் பரபரப்பு காட்டிக் கொண்டே உள்ளே வந்தவனை கவலையாகப் பார்த்தார் அப்பா. ஆனால் ராமுவிடம் அந்தப் பரபரப்பு நேரத்திலும் ஒரு பக்குவம் காணப்பட்டது. "அப்பா! நாமெல் லாம் உடனே புறப்படறோம்... சமயம் வந்தாச்சு! போய் உண்டு இல்லைன்னு பண்ணிடலாம்... புறப்படுங்க!''

"நாங்க எதுக்குடா...! விபரீதமாயிடப் போகுது! நீயே போய் எல்லாத்தையும் ஒரு வழி பண்ணு!''

-மகனின் ஆவேசத்துக்குப் பின் இருந்த வேகம் அப்பாவை பயமுறுத்தியது.

"அதெல்லாம் முடியாது...! நீங்களெல்லாம் வந்து தான் ஆகணும்! ஆளுக்கொரு கம்பிளைண்ட் கொடுத்தீங்க...! இப்ப ஏன் பின் வாங்கறீங்க? வண்டி வந்துடுச்சி! புறப்படுங்க. வாங்கம்மா...! போய் என்னான்னு பார்த்துடலாம்...!

ராமுவின் குடும்பமே காரில் புறப்பட்டது. அரைமணி நேர பயணத்திற்கு பிறகு ஒரு பெரிய வீட்டின் முன் நின்றது கார். வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. உள்ளே வந்த இவர்களை முதியோர் திரண்டு நின்று வரவேற்றனர். `முதலாம் ஆண்டு முதியோர்-அனாதை இல்ல நிறைவு விழா' என்று போர்டு போட்டிருந்தது.

சற்று வயதில் முதியவர் நரசிம்மன் என்பவர் முன்னிலை வகித்து பேசினார். மாலாவைப் போன்ற மகத்தான பொதுநல சேவகியை எங்களுக்கு தந்துள்ள பெரிய மனசுள்ள, தயாள குணமுள்ள உங்கள் குடும்பத்தை வரவேற்க கடமைப்பட்டுள்ளோம். வயதான உங்களுக்கும், அன்புக்கணவருக்கும், ஆசை மைத்துனிக்கும் சேவை செய்யவேண்டிய உங்கள் மருமகளை, எங்கள் நலன் காக்க அனுமதித்துள்ள உங்களுக்குத்தான் எத்தனை பெரிய மனசு! நேரம் காலம் பார்க்காமல் எங்களுக்காக உழைத்து, நிறைய இடங்களுக்கு சென்று, பொருள், பணம் திரட்டி, எங்களை தங்கள் குடும்பமாக நினைத்து உடல் நலம் குன்றி விட்டால் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று, திரும்ப அழைத்து வந்து சேர்ப்பது... ஆபீஸ் விட்டதும் இங்கே ஓடி வந்து பெற்ற தாய், தந்தை போல் பாவித்து அக்கறையுடன் கவனிப்பது... நேரமாகி விட்டதே என்று நாங்கள் சொன்னால்... `அவர்கள் எல்லாம் தங்கம்... நான் கொடுத்து வைத்தவள்.அந்த வீட்டில் வாழ்க்கைப்பட...' என்று மன நிறைவுடன் கூறும் மாலா உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் சொந்தம் என்ற எண்ணமே வலுக்கிறது. நிறைந்த மனதுடன் மனதார சொல்கிறோம்... நீங்கள் மகத்தானவர்கள்... நிறைகுடம். சொந்த பந்தத்தை இழந்த எங்களுக்கு தயாள குணம் நிறைந்த உங்கள் வீட்டு பெண்தெய்வம் மாலா ஆற்றும் தொண்டிற்கு ஈடு இணையே இல்லை...! என்றார் நா தழுதழுக்க கண்ணீருடன்.

அவர் சொன்னதை ஆமோதித்து மொத்தஅரங்கிலும் மூன்று நிமிடங்களுக்கு குறையாமல் முதியவர்களிடம் இருந்து அரங்கு அதிர கரகோஷம்.

வெலவெலத்துப் போனது ராமுவின் குடும்பம். சந்தேகப்பட்ட தங்கள்வீட்டு மாலாவுக்கு இப்போது கிடைத்த பெருமை அவர்களை கொஞ்சம் வெட்கப்படுத்தி வைத்திருந்தது.

சந்தேகம் என்ற பெயரில் அவர்கள் மனதில் படிந்திருந்த பாசியை அந்த வெட்கம் அடித்துச் சென்று சுத்தப்படுத்தியது. ராமு மனதிற்குள் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தான். தன் மனைவியின் இதுமாதிரியான ஈடுபாடுகள் தெரிந்து அவளை ஊக்கப்படுத்தியவனே இவன் தான்.

நிகழ்ச்சி முடிந்து அவர்கள் காரில் வீடு திரும்பியபோது கணவனை அவன் குடும்பம் அறியாமல் நன்றிப்பார்வை பார்த்தாள் மாலா.

***
என்.வி.சுப்பிரமணியன்




மனைவி ஒரு மாதிரி...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 27, 2010 10:14 am

நல்ல கதை... நல்ல கணவன்... நல்ல மனைவி...

நல்ல சிவாவுக்கும் நன்றி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat May 08, 2010 8:39 pm

செய்யும் சேவையை வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் தெரிவித்துவிட்டு செய்திருக்கலாமே என்ற எண்ணம் எழாமலில்லை..

எனினும் சஸ்பென்சை சீராக கடைசிவரை கொண்டு சென்றமைக்குப் பாராட்டுகள்..!


தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sat May 08, 2010 9:10 pm

மனைவி ஒரு மாதிரி...! 677196 மனைவி ஒரு மாதிரி...! 677196 மனைவி ஒரு மாதிரி...! 678642



மனைவி ஒரு மாதிரி...! Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக