ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டாள் திருப்பாவை

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஆண்டாள் திருப்பாவை - Page 2 Empty ஆண்டாள் திருப்பாவை

Post by Admin Fri Oct 03, 2008 1:39 am

First topic message reminder :

அன்னவயற்புதுவையாண்டாளர ங்கற்குப்
பன்னுதிருப்பாவைப்பல் பதியம்- இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக்கொடுத்தாளைச் சொல்லு


சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே தொல்பாவை
பாடியருளவல்ல பல்வளையாய்- நாடி நீ
வேங்கடவற்கென்னவிதியென்ற விம்மாற்றம்
நாம்கடவா வண்ணமே நல்கு
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down


ஆண்டாள் திருப்பாவை - Page 2 Empty Re: ஆண்டாள் திருப்பாவை

Post by Admin Fri Oct 03, 2008 1:42 am

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத்துழாய் முடி நாராயணன், நம்மால்
போற்றப்பறைதரும் புண்ணியனால் ப்ண்டொருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே!
தேற்றமாய்வந்து திறவேலோரெம்பாவாய்


"நோன்பு நோற்றுச் சுவர்க்கம் அடைய விரும்பிய பெண்ணே! வாசல் கதவைத்திறக்காவிட்டாலும் ஒரு வார்த்தையும் பேசலாகாதோ? மணம் பொருந்திய துளசி மாலையை அணிந்த முடியை உடையவனும், அனைத்து உயிர்களை காப்பவனும், நம்மால் வணங்கப்பட்டு நமக்கு வேண்டிய பலன்களைத் தரும் தர்ம பரிபாலகனுமான நாராயணனால் ராமவதாரத்தில் வதம் செய்யப்பட்ட கும்பகர்ணன், தனக்கே உடமையாகிய பெருந்தூக்கத்தை உன்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டானோ? மிகுந்த சோம்பலும் உறக்கமும் உடையவளே! எங்களுக்கு அணி போன்றவளே! தூக்கம் தெளிந்து, கதவைத் திறப்பாயாக
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆண்டாள் திருப்பாவை - Page 2 Empty Re: ஆண்டாள் திருப்பாவை

Post by Admin Fri Oct 03, 2008 1:42 am

கற்றுக்கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார்திறல் அழியச்சென்று செருச்செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றரவு அல்குல் புனமயிலே! போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோரெம்பாவாய்.

"கன்றுகளை ஈன்ற பசுக்களை கறப்பவர்களும், பகைவர்களை அவர்கள் இருக்கும் இடத்தில் சென்று போர் புறிபவர்களும் ஆன குற்றமற்ற இடையர் குலத்தில் பிறந்த கொடி போன்ற அழகிய வடிவையுடயவளே! பாம்பைப் போன்ற மெல்லிடை உடையவளும், மயில் போன்ற சாயலையும் உடையவளே! மேகம் போன்ற வண்ணக்கண்ணனின் புகழை பாடிக்கொண்டு ஊரிலுள்ள அனைத்து தோழியரையும், உறவினர்களையும் அழைத்துவந்து, உன் வீட்டின் முன்னர் வந்து குழுமியிருந்தும், செல்வ சீமாட்டி நீ, சிறிதும் அசையாமலும் பேசாமலும் உறங்குவதன் பொருள் என்ன
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆண்டாள் திருப்பாவை - Page 2 Empty Re: ஆண்டாள் திருப்பாவை

Post by Admin Fri Oct 03, 2008 1:49 am

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்
பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச்
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்

கனைக்கும் கன்றின் ஒலிகேட்டு அதற்காய் இரக்கப்படும் தாய்ப்பசுவின் மடியிலிருந்து பால் சுரக்க, அந்தப்பால் அவ்வீட்டினை நனைத்து சேறாக்கும். அப்படிப்பட்ட நல்ல செல்வந்தனின் தங்கையே! பனி தலைமீதி விழ, உன் வாசற்கதவை பிடித்த படி, கோவத்தினால் இராவணனை அழித்த, மனதிற்கு இனியவனாகிய இராமனைப் பாடுகின்றோம். நீ வாய் திறவாமல் இருக்கின்றாய். இனியாவது எழுத்திரு. இது என்ன பேருறக்கம்? நாங்கள் உன்னை எழுப்புவது எல்லா வீட்டாருக்கும் தெரிந்துவிட்டது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆண்டாள் திருப்பாவை - Page 2 Empty Re: ஆண்டாள் திருப்பாவை

Post by Admin Fri Oct 03, 2008 1:50 am

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

பறவை வடிவில் வந்த அரக்கனை கொன்றவனின், பொல்லாத அரக்கன் ஒருவனைக் கிழித்துக் கொன்றவனின் புகழைப் பாட பெண்கள் எல்லோரும் பாவை நோன்பு நோற்கும் இடத்திற்கு சென்றுவிட்டனர். வெள்ளி எனும் கோள் எழுந்து வியாழன் எனும் கோள் உறங்கி விட்டது. பறவைகள் ஒலியெழுப்பத் தொடங்கிவிட்டன. பூப்போன்ற கண்களையுடையவளே! உள்ளமும் குளிரும்படி நீராடாமல் உறங்கிக்கொண்டிருக்கின்றாயா? பெண்ணே! உனது கள்ளத்தனத்தை தவிர்த்து எங்களுடன் கலந்துக்கொள்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆண்டாள் திருப்பாவை - Page 2 Empty Re: ஆண்டாள் திருப்பாவை

Post by Admin Fri Oct 03, 2008 1:50 am

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

உன் வீட்டு தோட்டத்துக் கிணற்றில் செங்கழுனீர் மலர் மலர்ந்து, ஆம்பல் (அல்லி) மலர் கூம்பிவிட்டது பார். காவியுடையனிந்த வெள்ளைப் பற்களையுடைய முனிவர்கள், சங்கினை முழக்க கோயிலுக்கு செல்கின்றனர். நான் வந்து உங்களை எழுப்புவேன் என்று கூறிய நீ இன்னமும் உறங்குகிறாய். வெட்கமில்லா நாவினையுடையவளே ! எழுந்திரு. சங்கையும் சக்கரத்தையும் ஏந்தும் கைகளையுடைய தாமரைக்கண்ணனை பாடுவோம்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆண்டாள் திருப்பாவை - Page 2 Empty Re: ஆண்டாள் திருப்பாவை

Post by Admin Fri Oct 03, 2008 1:50 am

எல்லே இளம் கிளியே இன்னம் உறங்குதியோசில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுகஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை

எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்

வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்கவல்லானை

மாயனைப் பாடேலோர் எம்பாவாய்

இவர்கள்: ஏய் இளம் கிளியைப் போன்றவளே! இன்னுமா உறங்குகின்றாய்?

அவள் : சில்லன்று கத்தாதீர்கள் பெண்களே. இதோ வருகின்றேன்.

இவர்கள் : வாய்ப்பேச்சில் வல்லவளே ! உன் பேச்சை நாங்கள் அறிவோம்.

அவள் : நீங்கள் தான் வல்லவர்கள். நானென்றால் அப்படியே இருந்துவிட்டு போகின்றேன்.

அவள் : எல்லோரும் வந்துவிட்டார்களா?

இவர்கள் : வந்துவிட்டனர். வேண்டுமானால் நீயே வந்து எண்ணிப்பார்த்துக்கொள். வலிய யானையை கொன்றவனை, பகைவரை அழிக்கும் வல்லமைக் கொண்டவனை, அந்த மாயனை பாடலாம் வா.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆண்டாள் திருப்பாவை - Page 2 Empty Re: ஆண்டாள் திருப்பாவை

Post by Admin Fri Oct 03, 2008 1:50 am

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே. மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா. நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்

குலத் தலைவனாக நந்தகோபனின் கோயிலைக் காப்பவனே! கொடியுடன் கூடிய தோரணமுடைய வாயிலைக் காப்பவனே ! மணிக் கதவை திற. ஆயர் குலச் சிறுமியருக்கு அருள் தருவதாக நேற்றே அந்த மாயன் மணிவண்ணன் கூறினான். அவனை பாடி எழுப்ப தூயவர்களாய் வந்துள்ளோம். காலையில் முதன் முதலில் முடியாது என கூறாதே. நீ இந்த கதவைத் திறப்பாயாக.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆண்டாள் திருப்பாவை - Page 2 Empty Re: ஆண்டாள் திருப்பாவை

Post by Admin Fri Oct 03, 2008 1:51 am

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்


மழை. மலைக் குகையில் உறங்கும் சிங்கம் விழித்து சோம்பல் முறித்து பிடறி மயிர் பொங்க சோம்பல் முறித்து கர்ஜித்து புறப்படுவதைப் போல நீ விழி (பூவை ) பூ வண்ணனே. உன் கோயிலுக்கு வந்து அழகிய சிம்மாசனத்தில் அமர்ந்து நாங்கள் வந்த காரியம் ஆராய்ந்து அருள் புரிக.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆண்டாள் திருப்பாவை - Page 2 Empty Re: ஆண்டாள் திருப்பாவை

Post by Admin Fri Oct 03, 2008 1:51 am

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம் பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.

உடையும் நீரும் உணவும் அளிக்கும் எங்கள் கடவுளே! நந்தகோபாலா! எழுந்திரு.

இளந்தளிர் போன்ற பெண்களுக்கெல்லாம் கொழுந்தானவளே! குலவிளக்கே! யசோதா! நீயாவது எழுப்பேன்.

வாமன அவதாரமெடுத்து ஓங்கி வளர்ந்து வானை அறுத்து உலகினை அளந்த கடவுளே! உறங்காதே, எழுந்திரு.

செம்பொன் கழலினை அனிந்த கால்களையுடைய செல்வா! பலதேவா (பலராமன்)! நீயும் உன் தம்பியும் உறங்காதீர். விழித்திடுங்கள்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆண்டாள் திருப்பாவை - Page 2 Empty Re: ஆண்டாள் திருப்பாவை

Post by Admin Fri Oct 03, 2008 1:52 am

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

நிற்காது ஓடும் மதம் பிடித்த யானையை உடையவனும் எதிரிகளைக் கண்டு அஞ்சி ஓடாத தோள் வலிமைக் கொண்டவனுமாகிய நந்தகோபனின் மருமகளே, நப்பின்னாய் ! நறுமனம் கமழும் கூந்தலை உடையவளே, கண் திறவாய். கோழிகள் கூவத்தொடங்கிவிட்டன பார். பந்தலின் மேல் குயில்களும் விடாது பலமுறை கூவுகின்றன.

பந்தாடுகிற விரல்களையுடையவளே! உன் கணவனின் பேர் சொல்லிப்
பாடுகின்றோம். செந்தாமரைப் போன்ற கைகளில் சீரான வளையல் ஒலிக்க வந்து கதவை திற. நாங்கள் மகிழ்வோம்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆண்டாள் திருப்பாவை - Page 2 Empty Re: ஆண்டாள் திருப்பாவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum