புதிய பதிவுகள்
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 9:42

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகப்பேறு Poll_c10மகப்பேறு Poll_m10மகப்பேறு Poll_c10 
43 Posts - 45%
heezulia
மகப்பேறு Poll_c10மகப்பேறு Poll_m10மகப்பேறு Poll_c10 
43 Posts - 45%
mohamed nizamudeen
மகப்பேறு Poll_c10மகப்பேறு Poll_m10மகப்பேறு Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மகப்பேறு Poll_c10மகப்பேறு Poll_m10மகப்பேறு Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
மகப்பேறு Poll_c10மகப்பேறு Poll_m10மகப்பேறு Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
மகப்பேறு Poll_c10மகப்பேறு Poll_m10மகப்பேறு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகப்பேறு Poll_c10மகப்பேறு Poll_m10மகப்பேறு Poll_c10 
43 Posts - 45%
heezulia
மகப்பேறு Poll_c10மகப்பேறு Poll_m10மகப்பேறு Poll_c10 
43 Posts - 45%
mohamed nizamudeen
மகப்பேறு Poll_c10மகப்பேறு Poll_m10மகப்பேறு Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மகப்பேறு Poll_c10மகப்பேறு Poll_m10மகப்பேறு Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
மகப்பேறு Poll_c10மகப்பேறு Poll_m10மகப்பேறு Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
மகப்பேறு Poll_c10மகப்பேறு Poll_m10மகப்பேறு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகப்பேறு


   
   
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue 30 Jun 2009 - 16:33

சாதாரணமாக மகப்பேறு உண்டாகும் காலகட்டங்களை மூன்று பகுதிகளாக முதல் பகுதி, இரண்டாம் பகுதி, மூன்றாம் பகுதி என்று பிரித்து, குழந்தையின் வளர்ச்சி, இயக்கம், உடலமைப்புக்கள் என்று அனைத்தையும் அறியும் வண்ணம் மருத்துவர்கள் செயல்படுவர். குழந்தையின் மாறுபட்ட வளர்ச்சியை அளவறிந்து செயல்படுவது போலவே தாயின் உடல் மாற்றங்களையும், மருத்துவர்கள் கவனத்தில் கொள்வர்,. தாய்மைப் பேறு அடைந்த உடனேயே பெண்ணின் கருப்பையின் வாய் மென்மையாக (SOFT) மாறிவிடும். குழந்தையின் வளர்ச்சிக்கேற்ப கர்ப்பப்பையும் விரியும். எட்டாவது வாரத்தில், டென்னிஸ் பந்து அளவில் இருக்கும். இதை, வயிற்றுப் பகுதியை சோதித்தால் தெரியாது. பன்னிரண்டாம் வாரம் இடுப்பு முன் எலும்பிற்கு மேல் சற்றே பருமனாக கர்ப்பப்பை தெரியும். பதினாறாம் வாரம் இடுப்புமுன் எலும்புக்கும், தொப்புளுக்கும் இடைவரை விரியும். இருபதாவது வாரத்தில், தொப்புளுக்குக்கீழே இரண்டு விரற்கடை இடைவெளியில் கர்ப்பப்பை விரியும். குழந்தையின் துடிப்பு, இயக்கம் தெரியும் நிலையில் வயிற்றைப் பார்த்தாலே கருப்பையின் விரிந்த நிலையைத் தெரிந்து கொள்ளலாம். இருபத்தி நான்காம் வாரம் தொப்புள் வரை விரிந்திக்கும். கர்ப்பப்பை இருபத்தி எட்டாம் வாரம், அதையும் தாண்டி, கீழ் நெஞ்செலும்புக்கு சற்றே கீழ்வரை விரிந்து, பரந்திருக்கும். முப்பதாவது வாரம் கீழ் நெஞ்செலும்பு வரை விரிந்திருக்கும் கர்ப்பப்பை, முப்பதாவது வாரத்தில், குழந்தையின் கீழ்நோக்கி இறங்கும் நிலையால், அடிவயிறு பெருத்தும், மேல் வயிறு இறங்கியும் தோற்றம் அளிக்கும். நாற்பதாவது வாரத்திலோ அடிவயிற்றின் தசைகள், தசைநாண்கள் இயங்கத் துவங்கும். கர்ப்பப்பையின் வாய் மிகவும் மென்மையாகவும், குட்டையாகவும், எளிதில் விரியும் தன்மையுடனும் இருக்கும். மகப்பேறு உண்டாகும் நாள் நெருங்க, கர்ப்பப்ப சுருங்கி விரியும் தன்மையும், கர்ப்பப்பை வாயும் திறந்து, குழந்தை வெளியேறும்.

தாய்மை அடைந்தவுடன் மாதவிலக்கு நின்றுவிடும். 4வது வாரம் முதல் 14வது வாரம் வரை மசக்கை எனும் அறிகுறிகள் வெளிப்படும். தலைச்சுற்றல், வாந்தி, உணவில் விருப்பமின்மை, புளிப்புச் சுவையான உணவுப் பொருள்களின் மேல் விருப்பம் போன்றவை ஏற்படும். 12ஆவது வாரம் தொடங்கி அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றும். நாளாக, நாளாக கர்ப்பப்பையின் பெருக்கம் சிறுநீர்ப்பையை அழுத்துவதால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். கர்ப்பப்பையோடு சேர்த்து வயிறும் விரிவதால் , வயிற்றுத் தோலும் விரியும். அதனால், வயிற்றில் வடுக்கள் தோன்றும். அய்ந்தாம் மாதம் முதல் குழந்தை திரும்புதல், வயிற்றில் உதைத்தல் போன்ற உணர்வுகளை தாயால் அறிய முடியும். குழந்தையின் சீரான வளர்ச்சிக்கு, குழந்தையின் இயக்கம், நல்ல அறிகுறியாக, தாயால் அறிய முடியும். குழந்தையின் வளர்ச்சியும் சீராகஅமைந்து, குழந்தை தலைப்பகுதி கீழாக இருந்து, சரியான உடல்நிலை தாய்க்கு இருந்தால் மகப்பேறு இயல்பாக நிகழக்கூடிய ஒன்றுதான். மருத்து-வர்-கள் அதற்கு உதவுபவர்கள்தான். தமிழகத்-தில் சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஏ.லட்சுமணசுவாமி முதலியார் அவர்கள் தலைசிறந்த மகப்பேறு மருத்துவர். எலிஸபெத் மகாராணிக்கே பிரசவம் பார்த்த தலைசிறந்த மருத்துவர். அவர் எழுதிய மகப்பேறு பற்றிய நூல் இன்றளவும் மகப்பேறு பற்றிய புத்தகங்களிலேயே தலை-சிறந்த நூலாக உலகம் முழுதும் மதிக்கப்-படுகிறது. மரு. பழனியப்பன், மற்றொரு தலைசிறந்த மகப்பேறு அறிஞர். பகுத்தறிவு-வாதி, நம் இயக்க ஆர்வலர். நம் தமிழர் தலைவரின் அன்புக்குப் பாத்திரமான இவர், சென்னை பெரியார் மருத்துவமனையில் ஆலோசகராகவும் தொண்டாற்றுகிறார்.

மகப்பேறு என்பது உயிருள்ளவையின் அடிப்படை இயல்பான இனப்பெருக்கம் தான். ஆனால், ஆறறிவு உள்ள மனிதனிடம்-தான் இந்த இயல்பான நிகழ்ச்சிக்கு எத்தனை மூடநம்பிக்கை உறைகள். சோதிடம் என்ற ஒரு முட்டாள்தனம் நம் மக்களை எப்படி-யெல்லாம் ஆட்டிப்படைக்கிறது. குழந்தை பிறந்த நேரத்தைக் கணக்கிட்டு, சாதகம் கணிக்கப்படுகிறது. குழந்தை பிறந்த நேரப்படி கணிக்கப்பட்ட சாதகங்கள் எத்தனை பொய்யாகி விடுகின்றன? உடனே சோதிடக்-காரன் (மக்களை ஏமாற்றியே பிழைப்பை நடத்தும் சுயநலக்காரன்) மருத்துவர் தப்பான நேரம் சொல்லி விட்டார் என சரடு விடுவான். பிறப்பு நேரம் என்றால் எது? தந்தை பெரியார் கேட்டதுபோல், வலி எடுத்து, தலை வெளியே வரும் நேரமா? இல்லை உடல் முழுதும் வெளியே வரும் நேரமா? இல்லை குழந்தை முதன்முதல் அழும் நேரமா? நாம் ஏற்கனவே கூறியதுபோல் கால் வெளியில் முதலில் வந்தால் அதை பிறந்த நேரமாகக் கொள்ளலாமா? மகப்பேறு மருத்துவமனை தவறான நேரம் காட்டும் கடிகாரம் இருந்தால் என்ன செய்வது? இதை நம்பி, செவ்வாய் தோஷம் என்று கூறி எத்தனை இளம்பெண்-களுக்கு திருமணமே நடக்காத நிலையை, சோதிடக்காரர்கள் உண்டாக்கி விடுகிறார்கள். மூலநட்சத்திரம் என்கிறானே? அதிலும் ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம் என்கிறான். இதிலும் ஆணாதிக்கம். எத்தனை, எத்தனை இளம்பெண்கள், மூலநட்சத்திரம் என்று மூலையில் உட்கார வைக்கப்படு-கின்றனர். இது எல்லாவற்றையும்விட ஒரு நகைக்க வைக்கும் செய்தி! தாய்மைப் பேற்றை அடைந்த பெண்ணின் பெற்றோர், மருத்து-வரிடம் வந்து, டாக்டர், இன்று நாள் சரியில்லை, நாளை முகூர்த்த நாள், நாளை அறுவை மருத்துவம் செய்து குழந்தையை எடுத்து விடுங்கள் என கூறுவதை நாங்கள் பலமுறை கேட்டிருக்கின்றோம். அதைப் போன்ற நிலையில் குழந்தையின் பிறப்பு நேரத்தை நிர்ணயிப்பது யார்? கடவுளா? விதியா? மருத்துவரா? பெண்ணின் பெற்-றோரா? அப்படி பெற்றோரின் விருப்பப்படி அறுவை மூலம் பிறக்கும் குழந்தையின் சாதகம் உண்மையானதா? நன்கு சிந்தித்துப் பாருங்கள்.

குழந்தையே இல்லை என்றால் மலடிப்-பட்டம், பெண்களுக்கு! பிறக்கின்ற குழந்தை-கள் பெண் குழந்தைகளாகவே அமைந்து-விட்டால், பெற்றவள் பீடையாகி விடுகிறாள்! பிறக்கின்ற குழந்தையின் சாதகம் கணிப்-பதிலும் ஊழல். இவனின் முட்டாள் தனத்தால் தொழிலில் தொய்வடைந்தால், குழந்தை மூதேவியாகி விடும்! அதுவே தொழில் வளர்ந்தால் அந்த குழந்தை ஸ்ரீதேவி,லட்சுமி என்றெல்லாம் தூக்கித் தலையில் வைத்து ஆடப்படும் நிலை!

இந்தக் காரணங்களால் பெண் குழந்தை-களுக்கு பல சிக்கல்கள். திருமணம், சீர்செய்தல் போன்றவற்றால் பெண் குழந்தைகள் குடும்-பத்திற்குச் சுமையாகக் கருதப்படுகிறது. அதனால் பெண் சிசுக்கொலைகள். இந்த ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்கள் சிசுவாக வந்ததிலிருந்து வளர்ந்து, மரணம் வரை தொல்லைதான்! அதனால்தான் பெரியார் அய்யா சொன்னார்கள். கருப்பப்பையே பெண்ணின் அடிமைத்தனத்திற்குக் காரணம், அதனால் அதை தூக்கி எறிந்துவிடு என்று! உலகில் தோன்றிய எந்தப் புரட்சிக்காரனுக்கும் தோன்றாத பெண்ணியச் சிந்தனை, பெரியார் அய்யா அவர்களுக்குத் தோன்றியதால்தான், அவருக்குப் பெண்கள், பெரியார் என்று பட்டம் கொடுத்தார்கள்! அவரின் வழியே, செம்மாந்த நடைபோடும் ஆசிரியர் வீரமணி அய்யா அவர்களும், அண்மையில் அம்மா பெயரை முதல் எழுத்தாகப் போடவேண்டும் என்று தீர்மானம் போட்டார்! ஏனென்றால் அம்மா என்பது உண்மை; அப்பா என்பது நம்பிக்கை அல்லவா!

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Tue 30 Jun 2009 - 16:52

மிகவும் தேவையான கட்டுரை....நன்றி

avatar
aravind
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 16/12/2008

Postaravind Tue 30 Jun 2009 - 19:37

very good Index! please send me : sweetstar1980@yahoo.com

avatar
Guest
Guest

PostGuest Tue 30 Jun 2009 - 19:54

சூப்பர்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக