புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 I_vote_lcapமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 I_voting_barமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 I_vote_lcapமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 I_voting_barமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 I_vote_lcapமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 I_voting_barமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 I_vote_lcapமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 I_voting_barமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 I_vote_lcapமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 I_voting_barமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 I_vote_lcapமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 I_voting_barமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 I_vote_lcapமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 I_voting_barமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 I_vote_lcapமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 I_voting_barமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 I_vote_lcapமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 I_voting_barமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 I_vote_lcapமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 I_voting_barமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 18, 2010 11:25 pm

First topic message reminder :

மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது

(நேரிசைக் கலிவெண்பா)

சீர்கொண்ட கூடற் சிவராச தானிபுரந்து
ஏர்கொண்ட சங்கத்து இருந்தோரும் - போர்கொண்டு

இசையும் தமிழரசென்று ஏத்தெடுப்பத் திக்கு
விசையம் செலுத்திய மின்னும் - நசையுறவே

செய்யசிவ ஞானத் திரளேட்டில் ஓரேடு
கையில் எடுத்த கணபதியும் - மெய்யருளால்

கூடல் புரந்தொருகால் கூடற் புலவரெதிர்
பாடலறி வித்த படைவேளும் - வீடகலா

மன்னுமூ வாண்டில் வடகலையும் தென்கலையும்
அன்னைமுலைப் பாலின் அறிந்தோரும் - முன்னரே

மூன்றுவிழி யார்முன் முதலையுண்ட பிள்ளையைப்பின்
ஈன்றுதரச் சொல்லின் இசைத்தோரும் - தோன்றயன்மால்

தேடிமுடி யாவடியைத் தேடாதே நல்லூரில்
பாடி முடியாப் படைத்தோரும் - நாடிமுடி

மட்டோலைப் பூவனையார் வார்ந்தோலை சேர்த்தெழுதிப்
பட்டோலை கொள்ளப் பகர்ந்தோரும் - முட்டாதே

ஒல்காப் பெருந்தமிழ்மூன்று ஓதியருள் மாமுனியும்
தொல்காப் பியமொழிந்த தொன்முனியும் - மல்காச்சொல்

பாத்திரம்கொண் டேபதிபால் பாய்பசுவைப் பன்னிரண்டு
சூத்திரம்கொண் டேபிணித்த தூயோரும் - நேத்திரமாம்

தீதில் கவிதைத் திருமா ளிகைத்தேவர்
ஆதி முனிவர் அனைவோரும் - சாதியுறும்

தந்திரத்தி னாலொழியாச் சார்வினையைச் சாற்றுதிரு
மந்திரத்தி னாலொழித்த வல்லோரும் - செந்தமிழில்

பொய்யடிமை இல்லாப் புலவரென்று நாவலர்சொல்
மெய்யடிமைச் சங்கத்து மேலோரும் - ஐயடிகள்

காடவருஞ் செஞ்சொல் கழறிற் றறிவாரும்
பாடவருந் தெய்வமொழிப் பாவலரும் - நாடவரும்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 18, 2010 11:28 pm

அளந்தருள்செம் பொன்னைமணி யாற்றிலிட்டு ஆரூர்க்
குளந்தனிலே தேடியருள் கோவும் - வளந்திகழும்

காளத்தி யில்வந்த காட்சிகயி லாயத்து
நீளத்தான் சொற்றவனும் நீயன்றோ - கேளப்பால்

அம்மைதமக்கு இல்லாதார் அம்மைதா மாவிருந்தார்
அம்மையென்று முன்னுரைத்த அம்மையாய்த் - தம்மெதிரே

வெள்ளானை மேற்கொண்ட வேந்தர் வரவிடுத்த
வெள்ளானை மேற்கொண்ட வித்தகராய்த் - தள்ளாது

விஞ்சுவரால் வண்ணானை வெண்ணீற்றர் என்றுபணிந்து
அஞ்சலிசெய் தாட்செய்த அன்பராய்ச் - சஞ்சரியாத்

தென்கையி லாயவரைச் செல்வர்பாற் சென்றாயே
உன்கையில் ஆகாத தொன்றுண்டோ - என்கையால்

ஆயும் அவள்பாகத்து அன்பரும் உக்கிரராம்
சேயும் புரந்திருக்குந் தென்மதுரை - வாயினிய

செவ்வழியே செல்வாய்நீ செல்வழியின் நல்வழிதான்
எவ்வழி என்றால் இயம்பக்கேள் - எவ்வழியும்

வெல்வாய் உனைநினைந்து வேயுறு தோளியென்று
செல்வார்தம் காரியம்சித் திக்குமே - செல்வாய்

தடையுண்டோ ஐயாறு தன்னிலே பொன்னி
இடைவிலங்கச் சென்றதறி யேனோ - இடையிலே

பாலைநிலம் நெய்தலாப் பண்ணினாய் இன்னுமதைச்
சோலைநிலம் ஆக்குவைநான் சொல்லுவதென் - மேலானார்

கூறும் பொதிசோறு கொண்டு வரினுனக்கு
வேறும் பொதிசோறு வேண்டுமோ - வீறாகக்

கற்பார் பொருள்காணார் காசுபணம் காணிலுனை
விற்பார் அவர்பால்நீ மேவாதே - கற்றாரை

எள்ளிடுவார் சொல்பொருள்கேட்டு இன்புறார் நாய்போலச்
சள்ளிடுவார் தம்மருகே சாராதே - தெள்ளுதமிழ்ப்

பாயிரமுன் சொன்ன படிபடியா மற்குழறி
ஆயிரமும் சொல்வார்பால் அண்டாதே - ஆய்தருநூல்

ஓதி அறியாத ஒண்பே தையருடனே
நீதி முறையா நிகழ்த்துநூல் - பேதைமையாம்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 18, 2010 11:29 pm

காணாதாற் காட்டுவான் தான்காணான் கண்ணெதிரே
நாணா திராதே நவிலாதே - வீணாக

ஆற்றின் அளவறிந்து கல்லாது அவையஞ்சும்
கூற்றினர்பால் ஏகாதே கூடாதே - போற்றாரை

வேண்டாதே கேடில் விழுச்செல்வங் கல்வியென்று
பூண்டாய்நீ தானே பொருளன்றோ - ஆண்ட

வலவா நலவா வடுதுறையில் உன்போல்
உலவாக் கிழிபெற்றார் உண்டோ - நலவிருப்பது

ஆக்கவரு செங்கலைப்பொன் ஆக்கினாய் மண்முழுதும்
மாக்கனகம் ஆக்கிவிட வல்லையே - நோக்குபுகார்

பாடியதோர் வஞ்சிநெடும் பாட்டால் பதினாறு
கோடிபொன் கொண்டது நின்கொற்றமே - தேடியருள்

நல்லார்கட் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கட் பட்டதிருக் கண்டாயே - கல்லார்பால்

ஏகாதே அன்பிலார் இந்திரன்போல் வாழ்ந்தாலும்
போகாதே அங்கே புசியாதே - மாகவிஞர்

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந்தார் என்னும் - மாமகிமை

சேர்ந்ததுன்பால் அன்றோ திருப்பாற் கடலமுதம்
ஆர்ந்தவர்க்கல் லாதுபசி ஆறுமோ - சேர்ந்துன்னை

நம்பாதார் வீதி நணுகாதே நல்லார்கள்
தம்பால் இருந்து தரித்தேகி - வம்பாகப்

பின்போய் யமனோடப் பேர்ந்தோடும் வையையிலே
முன்போய் எதிர்போய் முழுகியே - அன்போடே

தாழ்ந்துநீள் சத்தம் தனைக்கற்றார் உள்ளம்போல்
ஆழ்ந்த அகழி அகன்றுபோய்ச் - சூழ்ந்துலகில்

மேன்மேல் உயர்ந்தோங்கு வேதம்போல் மேலாக
வான்மேல் உயர்ந்த மதில்கடந்து - போனால்

மிருதிபுரா ணம்கலைபோல் வேறுவே றாக
வருதிரு வீதிசூழ் வந்தே - இருவினையை

மோதுஞ் சிவாகமம்போல் முத்திக்கு வித்தாக
ஓதுந் திருக்கோயி லுட்புகுந்து - நீதென்பால்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 18, 2010 11:29 pm

முன்னே வணங்கி முறையினபி டேகமுனி
தன்னேயம் போலாம் தளவிசையும் - தன்னடைந்து

தேறும் படிவர் சிவலோகம் சேர்ந்திருக்க
ஏறும் படிநிறுத்தும் ஏணிபோல் - வீறுயர்ந்த

கோமேவு கோபுரமும் கூடலின்மேல் முன்னொருநான்
மாமேகம் சேர்ந்ததுபோல் மண்டபமும் - பூமேவும்

மட்டளையும் வண்டெனப்போய் மாளிகைப் பத்தியறைக்
கட்டளையும் கண்டு களிகூர்ந்தே - இட்டமணிச்

சிங்கா தனத்தில் சிறந்ததிரு வோலக்கம்
எங்கா கிலுமொருவர்க்கு எய்துமோ - பைங்கழல்சூழ்

தேங்கமலத் தேசு தெரிசனம் செய்தவர்க்கே
பூங்கமலக் கண்கொடுத்த புத்தேளும் - ஓங்கமல

மையில் அடியில் வணங்காத் தலையொன்றைக்
கையில் அளித்த கடவுளும் - மொய்யிழந்த

மானம் தனக்கு வகுத்தகடம் பாடவிக்கு
மானம் தனைவகுத்த வானவனும்- தேனங்கு

அணிமலர்த்தாள் நெஞ்சூடு அழுத்தியழுத் தாதே
மணிமுடிகள் நீக்கி வணங்கக் - கணநாதர்

ஓதுதுனி யோடுசினம் உற்றபகை செற்றமுரண்
போத முனிவர் புடைசூழத் - தீதில்

அரிய திசைப்பாலர் அத்தமுதல் தாங்கித்
தெரிசனக்கண் பார்த்தேவல் செய்யப் - பரவியே

முன்னிருவர் எண்மரொடு மொய்த்த பதினொருவர்
பன்னிருவர் நின்று பணிசெய்ய - முன்னே

நதிகள் எனக்கண்டு நந்திபிரம் போங்க
உதகவிரு பாலின் ஒதுங்கிப் - பதினெண்

குலத்தேவர் தம்மகுட கோடிபதி னெட்டு
நிலத்தோர் முடியால் நெரிய - நிலத்தே

செருக்கும் சினேகமுற்ற தேவி யுடனே
இருக்கும் சினகரத்துள் எய்திப் - பொருக்கெனப்போய்

எந்தாயென் றேத்தும் இடைக்காடன் பின்போன
செந்தா மரைபோல் திருத்தாளும் - வந்துமனம்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 18, 2010 11:29 pm

தேறிக் கழுத்தரியத் தென்பாண்டி நாடனுக்கு
மாறித் திரும்பு மணிக்குறங்கும் - சீறிப்

பணிக்கற்கு மாறாப் படையுடைவாள் சேர்த்து
மணிக்கச் சுடுத்த மருங்கும் - துணிக்கமையத்

தொண்டுபடு வந்தி சொரிந்திடும்பிட்டு அள்ளியள்ளி
உண்டுபசி தீர்த்த உதரமும் - அண்டுமொரு

தாய்முலைப்பால் உண்டறியாத் தாம்பன்றிக் குட்டிகளின்
வாய்முலைப்பால் ஊட்டியபூண் மார்பமும் - தூயமுடி

ஆணிக் கனகத்து அழுத்த வழுதிக்கு
மாணிக்கம் விற்ற மலர்க்கையும் - காணிக்காப்

பூம்படலை ஆத்திப் புனைமலரைப் பூணாமல்
வேம்பலரைப் பூண்ட வியன்புயமும் - ஓம்புகொடி

வாதில் கரிக்குருவி வாழ்தற்கு உபதேசம்
காதில் புகன்ற கனிவாயும் - தீதில்சொல்

வாயிலா நீயிருந்து வாழும் படியுனக்குக்
கோயிலாத் தந்த குழைக்காதும் - போய்வணிகப்

பெண்ணீராள் கண்ணீர் பெருகத் தழுவித்தம்
கண்ணீரால் ஆற்றியருள் கண்களும் - தெண்ணீரார்

பண்சுமந்த பாட்டினுக்கும் பாவைதந்த பிட்டினுக்கும்
மண்சுமந்த சோதி மணிமுடியும் - கண்சுமந்து

கண்டுகளி கூர்ந்து கசிந்துகசிந் துள்ளுருகித்
தொண்டுசெய்து தாள்முடிமேல் சூடியே - மண்டும்

உடுக்குலம்தங் கோக்குலமென்று உற்றறிந்தால் என்ன
அடுக்கிலங்கு தீபமெதி ராகக் - கடுத்திடேல்

வெங்கதிருண்டு உன்குலத்து வெண்மதியுண்டு என்னல்போல்
தங்கவாரத் தீபம் தாமசையத் - துங்கவிடை

ஏங்குமொரு மீனுயர்த்தின் எங்கிருப்பேன் என்பதுபோல்
ஆங்கிடப தீபம் அழன்றாட - நீங்காது

அருடா ம்ருகத்துரு ஆனார்க்கு உவந்தே
புருடா ம்ருகத்தீபம் போற்ற - மருவார்

வருகுலத்தார் பானு வரல்நடுக்குற் றென்ன
அருகுலவும் தட்ட தசைய - இருசுடர்க்கும்

சொக்கருனைத் தானே சுடரென்று காட்டுதல்போற்
அக்கரா லத்தியொளி யாய்விளங்கத் - தக்கவளோடு

எற்கும் பயந்தொளித்தார் என்றுகங்கை தேடுதல்போல்
பொற்கும்ப தீபமெதிர் போய்வளையச் - சொற்குருகும்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 18, 2010 11:29 pm

அற்பூரத் தொண்டர்க்கு அருள்முத்தி ஈதெனல்போற்
கற்பூரத் தட்டிற் கனல்வாய்ப்பப் - பொற்பாக

நங்குலத்தும் வந்துதித்தார் நாதரென்று பானுமகிழ்ந்து
அங்குறல்போல் கண்ணாடி அங்கணுற - இங்கரசர்

எங்குலத்தார் ஆயினார் என்றுபிறை தோற்றுதல்போல்
துங்கமுடி மேற்குடைவெண் சோதிவிடப் - பொங்கியெழும்

முந்துகடல் வெண்திரைகள் முன்னேமா மிக்காக
வந்தனபோல் வெண்சா மரையிரட்ட - விந்தைசெயும்

ஆடரவச் சித்தரிவர் ஆதலினால் ஆலவட்டம்
நீடரவம் போலவெதிர் நின்றாட - நாடகலா

வாலநறுந் தென்றல்நம் மன்னரென்று காண்பதுபோல்
கோல விசிறி குளிர்ந்தணுகக் - காலைத்

திருவனந்தல் முன்னாகச் சேவிக்கும் காலத்து
உருவனந்த தேவ ருடனே - மருவியெதிர்

போற்றுவாய் நீயும் புரோகிதரை முன்னனுப்பித்
தோற்றரவு செய்து துதித்ததற்பின் - ஆற்றல்

அரிய சிவாகமத்தோர் ஆதிசைவர் தம்பால்
உரிய படையா ஒதுங்கி - அருமையுடன்

மூவர் கவியே முதலாம் கவியைந்தும்
மூவராய் நின்றார்தம் முன்னோதி - ஓவாதே

சீபாதம் எண்ணாத தீயவினைப் பாவிசெய்த
மாபாத கந்தீர்த்த மாமருந்தைத் - தீபமணிப்

பைந்நாகம் சூழ்மதுரைப் பாண்டியனே பாரமணிக்
கைந்நாகம் சூழ்கோயில் கண்மணியே - மன்னாக

மைக்கட் கரும்பை மருவிப் பிரியாத
முக்கட் கனியே முழுமுதலே - மிக்கபுனற்

கங்கா நதிக்கிறையே கன்னித் துறைக்கரசே
சிங்கா தனத்துரையே செல்வமே - எங்கோவே

நாடவிளை யாடிவந்த நற்பாவை போலடியார்
கூடவிளை யாடிவந்த கோமானே - தேடரிய

சிந்தைமகிழ்ந்து அன்புடையார் தேடியநாள் ஓடியெதிர்
வந்தவிளை யாட்டினிமேல் வாராதோ - வந்தருளால்

பாவும் புகழ்சேர் பழிக்கஞ்சி என்றுலகில்
மேவும் பெயரினிமேல் வேண்டாவோ - ஆவலினால்

புக்குவந்தார் தம்மேற் பொடிபோட்டு உளமயக்கில்
சொக்கலிங்கம் என்றெவரும் சொல்லாரோ - இக்கணைத்த

அங்கைவேள் தானே அரசாள வுஞ்சிறிய
மங்கைதனைக் கோட்டிகொளல் வல்லமையோ - கங்கையெலாம்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 18, 2010 11:30 pm

நல்லமைக்கண் ஊடுவர நல்குதியேல் நங்கையெல்லாம்
வல்லசித்தர் என்றழைக்க மாட்டாளே - நல்லவர்போல்

மைக்குவளைக் கண்ணி வளைகவர்ந்து மங்கையர்தம்
கைக்குவளை விற்கக் கணக்குண்டோ - திக்குவளை

தோட்டாரும் வேம்பாய்த் தொடர்ந்துதொடர்ந் தேயொருதார்
கேட்டாரும் வேம்பாகக் கேட்டோமே - நாட்டமுற

வேளையெரித் தாய்க்கியல்போ மின்னார் கலைகவர்தல்
காளை யிடையிருந்து கற்றதோ - மீளாது

சென்றிலகு நாரையன்று சென்றசிவ லோகத்தே
இன்றெனையங்கு எய்தவிடல் ஆகாதோ - அன்றியழற்

குன்றே விருத்த குமாரர் இளம்பாலர்
என்றேயோர் பெண்வீட்டு இருக்கலாம் - சென்றொருநாள்

பொன்னனையாள் வீடும் புகுந்திருக்க லாமெனினென்
பொன்னனையாள் வீடும் பொருந்தாதோ - என்னுமொழி

எல்லாம் திருச்செவியில் ஏறும் படியுரைக்க
வல்லாயுன் போலெவர்க்கு வாய்க்குமே - நல்லாள்

கருணைவிழி யாளங் கயற்கண்ணி தன்னோடு
அருள்புரிய வாழ்ந்திருக்கும் ஐயர் - திருமதுரை

தானே சிவராச தானியென்று வீற்றிருந்தால்
தேனேநம் பாக்கியத்தின் செய்தியே - ஆனமையால்

அந்தரலோ கத்தின்மே லானதிரு ஆலவாய்ச்
சுந்தர மீனவனின் சொற்படியே - வந்து

துறவாதே சேர்ந்து சுகானந்தம் நல்க
மறவாதே தூதுசொல்லி வா.

தமிழ்விடு தூது முற்றிற்று.




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Mon Apr 19, 2010 12:26 am

சூப்பர் அண்ணா,
ஒழுங்காக வாசிக்கக் கிடைக்க வில்லை,
சற்று நேரம் எடுத்து வாசிக்க வேண்டிய விடயம்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this link.]
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக