ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:07 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:05 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:02 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 4:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 3:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 1:04 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Sep 16, 2024 1:17 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 11:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:33 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:31 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:30 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:28 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:26 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:24 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:22 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:19 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:16 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:15 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:13 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு

5 posters

Go down

சூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு Empty சூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு

Post by azeezm Sun Apr 18, 2010 1:58 pm

சூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு
சூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு P-ab3gTb8xb3dLg

சூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு Fathi

திருக்குர்ஆனில்மிக முக்கியஅத்தியாயம்
சூரத்துல் ஃபாத்திஹா
எனப்படும் அல்ஹம்து அத்தியாயமாகும்.

ஏராளமான சிறப்புகளைக் கொண்ட அந்த
அத்தியாயத்தை
அறியாத – மனனம் செய்யாத
முஸ்லிம்கள் யாரும் உலகில் இருக்க முடியாது.


ஆனாலும்அதன் மகத்துவத்தை அவர்கள் அறிவதில்லை.

இதன் சிறப்பு
குறித்து
வந்துள்ள நபிமொழிகளை தமிழறியும்
முஸ்லிம்கள் அறிந்துக்கொள்ள வேண்டும்
,
பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காக தொகுத்து
வழங்குகிறோம்.

தேள் கடிக்கு
மருந்து!




நபித்தோழர்களில்சிலர் அரபுப் பிரதேசத்தின் ஒரு கூட்டத்தினரிடம் வந்து
தங்கினார்கள். ஆனால்
அந்தக் கூட்டத்தினர்
அவர்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை.
இந்நிலையில் அந்தக் கூட்டத்தின் தலைவனை (தேள்) கொட்டிவிட்டது.
உங்களிடம்மருந்தோ அல்லது மந்திரிப்பவரோ உள்ளனரா?”
என்று அவர்கள் கேட்டனர்.

அதற்குநபித்தோழர்கள், ”நீங்கள்
எங்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. எனவே
எங்களுக்கு ஒரு கூலியை நீங்கள் நிர்ணயித்தால் நாங்கள்
உங்களுக்கு
உதவுவோம்
என்று கூறினார்கள். அந்தக் கூட்டத்தினர் சில ஆடுகள்
தருவதாகக்
கூறினார்கள்.

அதன் பின்னர்
ஒருவர்
, ‘அல்ஹம்து
சூராவை ஓதிஉமிழ்ந்தார்.
இதனால் அவர் குணமடைந்து விட்டார். அவர்கள் ஆடுகளைக்
கொடுத்தனர். நாங்கள் நபி
(ஸல்) அவர்களிடம் இது பற்றி விசாரிக்காது இதைப்
பெற மாட்டோம்என்று
கூறி
, நபி (ஸல்) அவர்களிடம் வந்து இது
பற்றிக்
கேட்டார்கள். இதைக் கேட்டு நபி (ஸல்)
அவர்கள் சிரித்தார்கள்.
அல்ஹம்துசூரா ஓதிப் பார்க்கத் தக்கது என்று உனக்கு எப்படித்
தெரியும்
?’ என்றுகேட்டு விட்டு எனக்கும் அந்த
ஆடுகளில் ஒரு பங்கைத் தாருங்கள்

என்றுகூறினார்கள்.அறிவிப்பவர்:
அபூஸயீத் அல்குத்ரீ
(ரலி), நூல்:
புகாரி
2276

இதே ஹதீஸ் புகாரி
(
5007. 5736. 5749) ஆகியஎண்களிலும், முஸ்லிம்
(
4428, 4429), திர்மிதி
(
1989), அபூதாவூத் (3401,
2965),
இப்னுமாஜா (2147),
அஹ்மத் (11046, 10972, 10648, 10562)
ஆகியநூற்களிலும் இடம்
பெற்றுள்ளது.


திர்மிதியின் மற்றொரு
(
1989) அறிவிப்பில் முப்பது ஆடுகள்
கொடுத்தார்கள் என்றும் பாத்திஹாவை ஏழு தடவை
ஓதினார் என்றும் இடம் பெற்றுள்ளது.

அஹ்மத்
(
10972) என்ற நூலில்,
தேள் கொட்டிய இடத்தில் ஓதி துப்பினார் என்று இடம்
பெற்றுள்ளது.


இந்தஹதீஸிலிருந்து தேள் மற்றும் விஷ ஜந்துக்கள் தீண்டினால் பாத்திஹாவை
வைத்து
ஓதிப் பார்க்கலாம் என்று நமக்கு
தெரிகிறது. என்றாலும் நிவாரணம் கிடைப்பது
அவர்களின் இறையச்சத்தைப் பொறுத்தது. மேலும் நபி (ஸல்) அவர்கள்
நோய்க்கு
மருத்துவம் செய்யுங்கள் என்று
கூறியுள்ளார்கள். எனவே மருத்துவம் செய்வதுடன்
இறைவனிடமும் நோய் நிவாரணத்திற்கு துஆச் செய்ய
வேண்டும்.
மகத்தான அத்தியாயம்!

நான் ஒரு முறை தொழுது
கொண்டிருக்கும்
போது நபி (ஸல்) அவர்கள் என்னை
அழைத்தார்கள். நான் தொழுது முடிக்கும் வரை
அவர்களுடைய அழைப்புக்குப் பதில் கொடுக்கவில்லை. தொழுது முடித்த
பின்
அவர்களிடம் சென்றேன்.
நான் அழைத்தவுடன் வருவதற்கு என்ன
தடை
?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டனர்.
அல்லாஹ்வின் தூதரே! தொழுது
கொண்டிருந்தேன்
என்று நான்
கூறினேன்.


நம்பிக்கையாளர்களே!
உங்களுக்கு உயிர்
அளிக்கக் கூடிய ஒரு
காரியத்திற்காக இத்தூதர் அழைக்கும் போது இத்தூதருக்கும்
அல்லாஹ்வுக்கும் பதிலளியுங்கள்
(
அல் குர்ஆன் 8:24) என்று
கூறவில்லையா
?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டு
விட்டு
, ”இந்தப் பள்ளியிருந்து
நீ
புறப்படுவதற்கு முன் குர்ஆனில் உள்ள மகத்தான
ஒரு அத்தியாயத்தை உனக்கு நான்
கற்றுத்
தருகிறேன்
என்று கூறி எனது இரு கையையும்
பிடித்துக் கொண்டனர்.


அவர்கள்பள்ளியிலிருந்து புறப்படுவதற்குத் தயாரான போது,
அல்லாஹ்வின் தூதரே!குர்ஆனில்
உள்ள மகத்தான ஓர் அத்தியாயத்தைக் கற்றுத் தருவதாகக்
கூறினீர்களே!என்று நினைவு
படுத்தினேன். அவர்கள்
ஆம்
அல்ஹம்து லில்லாஹிரப்பில்
ஆலமீன் என்பது தான் அந்த அத்தியாயம் என்று கூறினார்கள்.நூல்:
புகாரி 4474.

இதே ஹதீஸ் புகாரி
(
4647, 4703, 5006), நஸயீ
(
904), அபூதாவூத் (1246),
இப்னு மாஜா (3775),
அஹ்மத்(15171, 17117),
தாரமி (1454, 3237), ஆகிய
நூற்களில் இடம் பெற்றுள்ளது.


இந்தஹதீஸ் திர்மிதீ (2800வது)
அறிவிப்பில்
தவ்ராத்,
இன்ஜீல் மற்றும் ஸபூர்ஆகிய
வேதங்களில் இல்லாத மகத்தான சூராவை கற்றுத் தரட்டுமா
?”
என்று கேட்டதாகஇடம்
பெற்றுள்ளது.

குர்ஆனின்
அன்னை!


திரும்பத்
திரும்ப
(தொழுகையில்)
ஓதப்படும் ஏழு வசனங்கள் (அல்ஃபாத்திஹா அத்தியாயம்) குர்ஆனின்
அன்னையும், மகத்தான குர்ஆனும்
ஆகும்
என்று நபி (ஸல்)
அவர்கள்
கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா
(ரலி)
, நூல்: புகாரி
4704

இறைவனிடம் உரையாடும்
அத்தியாயம்!
தொழுகையில்ஓதுவதை எனக்கும் எனது அடியானுக்கும் மத்தியில் பங்கிட்டுள்ளேன்.
என்
அடியான் கேட்டவை அவனுக்கு உண்டு.
அல்ஹம்து லில்லாஹி ரப்பில்
ஆலமீன்
என்றுஒருவன் கூறும் போது என்னை என்
அடியான் புகழ்ந்து விட்டான்
என்று
அல்லாஹ்
கூறுகிறான். அவன்
அர்ரஹ்ôனிர்
ரஹீம்
என்று கூறும் போது
என் அடியான்என்னைப் பாராட்ட வேண்டிய விதத்தில் பாராட்டி
விட்டான்
என்று அல்லாஹ்கூறுகிறான். மாலிக்கி
யவ்மித்தீன்
என்று கூறும் போது
என்னைக்கவுரவப்படுத்த வேண்டிய விதத்தில் கவுரவப்படுத்தி
விட்டான்
என்று அல்லாஹ்கூறுகிறான். இய்யாக நஃபுது வ
இய்யாக நஸ்தயீன்
என்று கூறும் போது
இதுதான்எனக்கும் எனது அடியானுக்கும் இடையே உள்ள
உறவாகும்
என்று அல்லாஹ்கூறுகிறான். இஹ்தினஸ்ஸிராதல்
முஸ்தகீம்
என்று கூறும் போது
என் அடியானின்இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும்
என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.நூல்: முஸ்லிம்
655
ஒளிச்சுடர்!இப்னுஅப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு முறை நபி (ஸல்)
அவர்களிடம்
ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அமர்திருந்த
போது தமக்கு மேலிருந்து ஒரு சப்தம்
வருவதைக்
கண்டார். அப்போது வானத்தை அன்னாந்து பார்த்த ஜிப்ரயீல் (அலை)
அவர்கள், ”இதோ! வானில் இதுவரை
திறக்கப்பட்டிராத ஒரு கதவு இப்போது
திறக்கப்பட்டிருக்கிறதுஎன்று
கூறினார். அந்தக் கதவு வழியாக ஒரு வானவர்
இறங்கி
வந்தார். அப்போது ஜிப்ரயீல்
, ”இதோ! இப்போது தான்
இந்த வானவர்
பூமிக்கு வந்திருக்கிறார். இதற்கு
முன் அவர் பூமிக்கு இறங்கியதில்லை
என்று
கூறினார். அவ்வானவர் ஸலாம் கூறிவிட்டு
,
உங்களுக்கு முன் எந்தஇறைத்தூதருக்கும் வழங்கப்பட்டிராத இரு ஒளிச்சுடர்கள்
உங்களுக்கு
வழங்கப்பட்டுள்ள நற்செய்தியைப்
பெறுங்கள். அல் ஃபாத்திஹா அத்தியாயமும்
அல்பகரா
அத்தியாயத்தின் இறுதி வசனங்களுமே அவை! அவற்றிலுள்ள எதை நீங்கள்
ஓதினாலும் அது உங்களுக்கு வழங்கப் பெறாமல்
இருப்பதில்லை
என்றுகூறினார்.நூல்: முஸ்லிம் 1472,
நஸயீ 903.
பைத்தியத்திற்கும்
மருந்து!

அலாகா பின் சுகார்
(ரலி) அவர்கள் ஒரு
கூட்டத்தாரைக் கடந்து
சென்றார்கள். அம்மக்கள்
, ”நீர்
இந்த
மனித(தூத)ரிடமிருந்து நல்ல செய்தியைக்
கொண்டு வந்திருக்கிறீர். எங்களுக்காக
இந்த
மனிதருக்கு ஓதிப் பார்ப்பீராக!
என்று கூறி
விட்டு
, சங்கலியால்பிணைக்கப்பட்ட ஒரு பைத்தியக்காரரை அவரிடத்தில் கொண்டு
வந்தார்கள்.
காலையிலும் மாலையிலும் சூரத்துல்
பாத்திஹாவின் மூலம் ஓதிப் பார்த்தர்கள்.
பின்பு
அவர் முடிச்சியிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவரைப் போன்று
மகிழ்ச்சியில் திளைத்தார். இதற்காக அம்மக்கள் அவருக்கு (ஆடுகளை
அன்பளிப்பு)
வழங்கினார்கள். இதை அவர் நபி (ஸல்)
அவர்களிடத்தில் சொன்ன போது
, ”நீ
அதில்
சாப்பிடு! என்னுடைய வாழ்நாள் மீது
சத்தியமாக! மக்களில் சிலர் தவறானதன்
மூலம்
மந்திரித்துச் சாப்பிடுகிறார்கள். ஆனால் நீர் உண்மையைக் கொண்டு
சாப்பிடுகிறீர்என்று நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: அபூதாவூத்
2966, அஹ்மத் 20833,
20834


மற வேதங்களில் இல்லாத
அத்தியாயம்!


அல்ஃபாத்திஹாஅத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள கருத்துக்களைப் போன்று வேறு
எந்த
வேதத்திலும்
குறிப்பிடப்படவில்லை.


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒரு
முறை
நபி (ஸல்) அவர்களிடத்தில் உபை (ரலி)
அவர்கள் உம்முல் குர்ஆன் (ஃபாத்திஹா)
அத்தியாயத்தை ஓதிக் காட்டினார்கள். அப்போது நபி (ஸல்)
அவர்கள்
, ”என்னுடையஉயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாகச் சொல்கிறேன்.
தவ்ராத்
, இன்ஜீல்,
ஸபூர், புர்கான் ஆகிய
வேதங்களில் இது போன்று அருளப்படவில்லை.
இதுதான்
திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களைக் கொண்டதும்
,
மகத்துவம்மிக்க குர்ஆனும்
ஆகும்
என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.நூல்:அஹ்மத்
8328.

இதே ஹதீஸ் திர்மிதி
(
2800, 3049, 3050) நஸயீ
(
905), அபூதாவூத் (1245),
தாரமி (3238) ஆகிய நூல்களிலும்
பதிவு
செய்யப்பட்டுள்ளது.



மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாக
வைத்திருக்கும் அஜரத்துமார்கள் இந்த ஆதாரங்களைத்தான்
காட்டுகின்றனர்.எனவே
ஓதிப்பார்ப்பது பற்றிய முழு விபரங்களையும்
விரிவாக எழுதினால் பாமர மக்கள்
தெளிவு பெறுவார்கள்.மந்திரித்தல்
என்பது மார்க்கத்தின் அடிப்படையில்
எவ்வகையில் கூடும் எவ்வகையில்
கூடாது என்பதை தெளிலாக விளக்கவும்.உதாரணமாக
தேள்கடி போன்ற
வற்றுக்கு இவ்விதம் மந்திரித்தால் சரியாகுமா?
இது போன்ற
பிரச்சினைகளில் ‘நோய்க்கு மருத்துவம்
செய்யுங்கள்’
என்னும் கருத்துப்பட வந்துள்ள நபி
மொழிக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் சற்று குறைவது போல்
தோன்றுகின்றதே இவை பற்றியெல்லாம் சற்று விரிவாக ஒரு கட்டுரை
வெளியிட்டால்
அனைவருக்கும் பயனாக இருக்கும்.





உங்கள் ஆதங்கம்நியாயமானதுதான். ஓதிப் பார்த்தலை இஸ்லாம் முற்றிலும்
தடுக்கவில்லை
என்றாலும் இன்றைக்கு நடைமுறையில்
உள்ள ஓதிபார்த்தல் என்ற ஏமாற்று
வேலைக்கும்
இஸ்லாம் சொல்லும் ஓதி பார்த்தலுக்கும் தொடர்பில்லை. இது
குறித்து விரைவில் விளக்கமான கட்டுரை வரும் இன்ஷா
அல்லாஹ்.


மருத்துவம்செய்யுங்கள் என்று வந்துள்ள நபிமொழிகள் ஓதிபார்த்தலுக்கு
எதிரானதல்ல.



يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءتْكُم
مَّوْعِظَةٌ مِّن رَّبِّكُمْ وَشِفَاء لِّمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ
لِّلْمُؤْمِنِين









மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து
உங்களுக்கு நிச்சயமாக
ஒரு நல்லுபதேசமும்
வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு
அருமருந்தும் (வந்திருக்கிறது சூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு Icon_wink
மேலும் (அது) முஃமின்களுக்குநேர்வழிகாட்டியாகவும்,
நல்லருளாகவும் உள்ளது.(10:57)

குர்ஆனில்நோய்க்கு மருத்துவம் இருக்கின்றது என்பதை இந்த வசனம்
சுட்டிக்
காட்டுகின்றது.



நன்றி:- அத்திகடையான்



بسم الله الرحمن
الرحيم



In the name of Allah , the Entirely Merciful,
the Especially Merciful.



அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.








الحَمدُ لِلَّهِ رَبِّ العٰلَمينَ


Praise be to Allah, Lord of
the Worlds,



(அவன்) அளவற்ற அருளாளன்,
நிகரற்ற அன்புடையோன்.







الرَّحمٰنِ الرَّحيمِ


The Beneficent, the Merciful:



(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின்
அதிபதி(யும் ஆவான்).





مٰلِكِ يَومِ الدّينِ


Owner of the Day of
Judgment,



(இறைவா!) உன்னையே நாங்கள்
வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.







إِيّاكَ نَعبُدُ وَإِيّاكَ نَستَعينُ



Thee (alone) we worship; Thee
alone we ask for help.



நீ எங்களை நேர் வழியில்
நடத்துவாயாக!








اهدِنَا الصِّرٰطَ المُستَقيمَ


Show us the straight
path,



(அது) நீ எவர்களுக்கு அருள்
புரிந்தாயோ அவ்வழி.







صِرٰطَ الَّذينَ أَنعَمتَ عَلَيهِم غَيرِ
المَغضوبِ عَلَيهِم وَلَا الضّالّينَ



The path of those whom Thou
hast favored; Not (the path) of those who earn Thine anger nor of those who go
astray.



(அது) உன் கோபத்துக்கு ஆளானோர்
வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.





*********************************




http://azeezahmed.wordpress.com/2010/03/24/fat/
avatar
azeezm
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010

http://azeezahmed.wordpress.com/

Back to top Go down

சூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு Empty Re: சூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு

Post by சபீர் Sun Apr 18, 2010 3:12 pm

ரொரொரொரொரொரொரொரொரொம்ப நீளமான விளக்கம் நன்றாக உள்ளது இதுந்தாலும் கொஞ்சம் சுருக்கமாக இட்டால் இன்னும் கொஞ்சம் சகோதர்கள் படித்து பயன் பெறுவதுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறன் சகோதரா

நன்றி பகிர்ந்து கொண்டமைக்கு தொடருங்கள்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு Empty Re: சூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு

Post by azeezm Sun Apr 18, 2010 3:16 pm

இன்ஷாஅல்லாஹ்
avatar
azeezm
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010

http://azeezahmed.wordpress.com/

Back to top Go down

சூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு Empty Re: சூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு

Post by ரிபாஸ் Sun Apr 18, 2010 6:05 pm

சூப்பர் அசீம் வாழ்த்துக்கள் மேலும் உங்கள் பதிவு தொடரட்டும்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு Empty Re: சூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு

Post by அப்புகுட்டி Sun Apr 18, 2010 6:07 pm

azeezm wrote:இன்ஷாஅல்லாஹ்

நன்றி பாய் அருமை அன்பு மலர் அன்பு மலர்


சூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு Empty Re: சூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு

Post by ரமீஸ் Sun Apr 18, 2010 7:01 pm

ரிபாஸ் wrote:சூப்பர் அசீம் வாழ்த்துக்கள் மேலும் உங்கள் பதிவு தொடரட்டும்


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

சூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு Empty Re: சூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum