ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காண்பதற்கரிய புகைப்படம்...

+15
அப்புகுட்டி
மனோஜ்
Aathira
mohan-தாஸ்
சிவா
ரமீஸ்
ஹனி
சாந்தன்
உதயசுதா
கலைவேந்தன்
சரவணன்
ரிபாஸ்
சபீர்
ஹாசிம்
dharshi
19 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 2 Empty காண்பதற்கரிய புகைப்படம்...

Post by dharshi Sat Apr 17, 2010 5:36 pm

First topic message reminder :

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 2 Dharsh10

சித்தர்கள் சொன்ன மூலிகை ரசவாத முறையில் பாதரசத்தை தங்கமாக்கியதன் மூலம் தயாரிக்கப் பட்ட தங்க நாணயம் இது. இதன் விட்டம் 1.4 cm ஆகும். இதன் ஒரு பக்கத்தில் ஸ்ரீ சக்கரமும். மறுபக்கத்தில் அகத்தியரால் அருளப்பட்ட அம்பலச் சக்கரமும் பொறிக்கப் பட்டுள்ளது. இது பதினெட்டு காரட் தங்கமாகும்.


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றென்றும் நட்புடன்,
dharshi.
http://www.siththarkal.com
dharshi
dharshi
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010

http://siththarkal.blogspot.com/

Back to top Go down


காண்பதற்கரிய புகைப்படம்... - Page 2 Empty Re: காண்பதற்கரிய புகைப்படம்...

Post by சாந்தன் Sat Apr 17, 2010 9:04 pm

கலை wrote:பகுத்தறிவுப்பாசறையில் வள்ர்ந்த எவரும் இது போன்ற கட்டுக்கதைகளை நம்பமாட்டார்கள் சுதா...

சித்தர்கள் வல்லவராய் இருந்தது உண்மைதான்... ஆனா அதுக்குன்னு இப்படியா.....?

உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவை எல்லாம் பொக்கிஷங்கள் தான் கலை அண்ணா ...
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 2 Empty Re: காண்பதற்கரிய புகைப்படம்...

Post by dharshi Sat Apr 17, 2010 10:43 pm

கலை wrote:பகுத்தறிவுப்பாசறையில் வள்ர்ந்த எவரும் இது போன்ற கட்டுக்கதைகளை நம்பமாட்டார்கள் சுதா...

சித்தர்கள் வல்லவராய் இருந்தது உண்மைதான்... ஆனா அதுக்குன்னு இப்படியா.....?

சிரி சிரி சிரி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றென்றும் நட்புடன்,
dharshi.
http://www.siththarkal.com
dharshi
dharshi
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010

http://siththarkal.blogspot.com/

Back to top Go down

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 2 Empty Re: காண்பதற்கரிய புகைப்படம்...

Post by ஹனி Sun Apr 18, 2010 9:23 am

நன்றாக சொன்னீர்கள் கலை அண்ணா உங்கள் கேள்வியும் சரி அதற்க்கான விளக்கமும் சரி.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காண்பதற்கரிய புகைப்படம்... - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 2 Empty Re: காண்பதற்கரிய புகைப்படம்...

Post by ரமீஸ் Sun Apr 18, 2010 10:51 am

யோசனை செய்து பார்த்தால் கலை அண்ணா சொல்வது மிகவும் சரி எனத் தோன்றுகிறது.


காண்பதற்கரிய புகைப்படம்... - Page 2 22204

ஆஹா ஆஹாஹா என்ன அருமையான விளக்கம்.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 2 Empty Re: காண்பதற்கரிய புகைப்படம்...

Post by சிவா Sun Apr 18, 2010 12:12 pm

நிர்மல் wrote:
கலை wrote:பகுத்தறிவுப்பாசறையில் வள்ர்ந்த எவரும் இது போன்ற கட்டுக்கதைகளை நம்பமாட்டார்கள் சுதா...

சித்தர்கள் வல்லவராய் இருந்தது உண்மைதான்... ஆனா அதுக்குன்னு இப்படியா.....?

உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவை எல்லாம் பொக்கிஷங்கள் தான் கலை அண்ணா ...

நிர்மலின் கருத்தை வழி மொழிகிறேன்! காண்பதற்கரிய புகைப்படம்... - Page 2 678642

இந்தப் படம் தங்களுக்கு எப்படிக் கிடைத்தது என்பதை விளக்குவீர்களா தர்ஷி!


காண்பதற்கரிய புகைப்படம்... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 2 Empty Re: காண்பதற்கரிய புகைப்படம்...

Post by mohan-தாஸ் Sun Apr 18, 2010 12:25 pm

சிவா wrote:
நிர்மல் wrote:
கலை wrote:பகுத்தறிவுப்பாசறையில் வள்ர்ந்த எவரும் இது போன்ற கட்டுக்கதைகளை நம்பமாட்டார்கள் சுதா...

சித்தர்கள் வல்லவராய் இருந்தது உண்மைதான்... ஆனா அதுக்குன்னு இப்படியா.....?

உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவை எல்லாம் பொக்கிஷங்கள் தான் கலை அண்ணா ...

நிர்மலின் கருத்தை வழி மொழிகிறேன்! காண்பதற்கரிய புகைப்படம்... - Page 2 678642

இந்தப் படம் தங்களுக்கு எப்படிக் கிடைத்தது என்பதை விளக்குவீர்களா தர்ஷி!


சில தகவல்களை யாரும் ஆராய்து பார்க்கமால் விளக்கம் கொடுக்கவும் கூடாது அதற்கு விவாதம் பண்ணவமும் கூடாது அதை பொய் என்று சொல்லவும் கூடாது முளு விவாதம் என்று வந்தால் முளு ஆதாரத்தையும் முன் வைக்க வேண்டும் உறுதி படுத்த வேண்டும் எதையும் லேசாக கருதி அப்படி இல்லை என்று தன் கருத்துகேற்ப மாற்றி விடாதீர்கள் நன்றி...


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 2 Empty Re: காண்பதற்கரிய புகைப்படம்...

Post by கலைவேந்தன் Sun Apr 18, 2010 12:32 pm

இங்கே ரசவாதம் பற்றி செய்திகள் உள்ளது...!

படித்து கருத்தினைக் கூறுங்கள்...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 2 Empty Re: காண்பதற்கரிய புகைப்படம்...

Post by கலைவேந்தன் Sun Apr 18, 2010 12:47 pm

mohan-தாஸ் wrote:

சில தகவல்களை யாரும் ஆராய்து பார்க்கமால் விளக்கம் கொடுக்கவும் கூடாது அதற்கு விவாதம் பண்ணவமும் கூடாது அதை பொய் என்று சொல்லவும் கூடாது முளு விவாதம் என்று வந்தால் முளு ஆதாரத்தையும் முன் வைக்க வேண்டும் உறுதி படுத்த வேண்டும் எதையும் லேசாக கருதி அப்படி இல்லை என்று தன் கருத்துகேற்ப மாற்றி விடாதீர்கள் நன்றி...

நான் குருட்டுத்தனமாக யோசிக்காமல் மறுக்கவில்லை தாஸ்...

1. ரசவாதம் என்பது காலம் காலமாக கட்டுக்கதையாகத்தான் உள்ளது.

2.பித்தலாட்டம் என்ற சொல் வருவதற்கு முழுக்காரணமே இந்த ரசவாத வித்தை தான். எப்படி என்றால் பித்தளையை பொன் ஆக்குகிறேன் என்று ஏமாற்றிப் பொருள் குவித்தனர் ஒருகாலத்தில். அதனை பித்தளை யாட்டம் எனக்கூறினர். பின் அது பித்தளாட்டமாக மாறியது.

3. இந்த ரசவாத வித்தையை செய்கிறேன் என்று தமது கோடிக்கணக்கான சொத்தை இழந்தவர் முன்காலத்தில் மிகுந்திருந்தனர்.

4. அணுத்திரள்களை மாற்றி அமைப்பதன் மூலம் தங்கத்தின் இயல்புகளைக் கொண்டு வரலாம் என்பது வேதியியல் விளக்கும் அறிவுச்சித்தாந்தம். ஆனால் ஒரு ஊசிமுனை அளவு தங்கம் உருவாக்க பல கோடி டாலர்கள் செலவு செய்யவேண்டுமென்பதால் அதை விட்டுவிட்டனர் தற்கால விஞ்ஞானிகள்.

5. சித்தர்கள் மிகச்சிறந்த மருத்துவர்களாக விளங்கியவர்கள், அவர்களது பெயரைப் பாழ்படுத்தவேண்டி இப்படி ரசவாத வித்தையை அவிழ்த்துவிட்டனர் முற்காலத்தினர்.

6. எதையும் ஆதாரத்துடன் நிரூபிக்கும் போழ்தே அதனை ஏற்கவேண்டும் என்பது அடிப்படை அறிவு, அதைத்தான் நான் இங்கே வினவினேன்.

7. படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள தங்க நாணயத்தை கவனித்துப்பாருங்கள். எவ்வளவு நேர்த்தியாக வட்டமாக அதில் உருவம் தெளிவுபட பதிந்துள்ளதை. ரசவாதம் மூலம் தயாரிக்கப்படும் தங்க நாணயம் இவ்வாறு காணப்படாது என்பது என் சிற்றறிவுக்கு எட்டிய ஒன்று.

8. எதனை யார் எழுதினார்கள் என்று பார்த்து நம்புவதும் மறுப்பதும் என் கொள்கை அல்ல. நமபகமான தகவல்கள் எனில்சிரமேற்கொண்டு பாராட்டுவதும் அல்லவெனில் அதனை விமரிசிப்பதும் என் வழக்கம்.

9. சகோதரி பிரியதர்சியின் வலைத்தளம் கண்டேன். அவரது உழைப்பு தகவல் சேமிப்பு எல்லாம் கண்டு வியந்தேன், இத்தனை சிந்தனைவளம் பெற்ற தங்கை எதோ ஒருதளத்தில் பதிந்து விட்ட படத்தை அபப்டியே பதிந்து அது ரசவாத தஙக்மென்று கூறும் போது வியந்தேன்..

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என வாதித்த தமிழ்ப்பரம்பரை அல்லவா நாம்...?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 2 Empty Re: காண்பதற்கரிய புகைப்படம்...

Post by mohan-தாஸ் Sun Apr 18, 2010 12:54 pm

கலை wrote:இங்கே ரசவாதம் பற்றி செய்திகள் உள்ளது...!

படித்து கருத்தினைக் கூறுங்கள்...

கலை சார் நீங்கள் அனுப்பியதையும் படித்தேன் இதில இந்த கால கட்டத்தில் யாரும் நம்புவதும் இல்லை ஆனால் சில பேர் இப்படியும் சொல்கிறார் கிழே படித்து பாருங்கள்.

பொதுவாக ரசவாதம் என்றாலே இரும்பை தங்கமாக மாற்ற ஏழு படிகள் சொல்லப்படுகின்றன. சுத்தப்படுத்துதல், வடிகட்டுதல், ஆவியாக்குதல், கரைத்தல், பிரித்தல், விடுவித்தல் மற்றும் கெட்டிபடுத்துதல். இதைத் தவிர உபரி படிகளும் உண்டு. கதிரியமும், காந்தபடுத்துதலும் அப்படியான உபரிப் படிகளில் வரும். உங்கள் கதையில் என்னைக் கவர்ந்தது அந்த செய்முறையின் உபரிப் படிகளை பிரித்துக் கண்டறிந்தது. நிறைய ஆராய்ச்சியாளர்கள் இந்த இடத்தில் தவறித்தான் போய் இருக்கின்றனர். இதை சொல்லும் முன் ஒரு முக்கிய விஷயம் சொல்லி விடுகிறேன். எங்கள் குடும்பத்திற்கும் இந்த ரசவாதத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.

பல தலைமுறையாக இந்த ரசவாதம் என்னும் பேய் எங்கள் பரம்பரையை பீடித்து வருகிறது. ஒவ்வொரு தலைமுறையிலும் யாராவது ஒருவருக்கு இந்த கிறுக்கு பிடித்துவிடும் போல. இறுதியாக எங்கள் முத்து தாத்தா. குடும்பம் குட்டி என்று எதுவுமில்லாத தனிக்கட்டை அவர். அவருடைய சொத்தெல்லாம் ரசவாத ஆராய்ச்சி பற்றிய அவரது தனியாத ஆர்வமும், புரியாத குறிப்புகளும், அவருடைய யானைக்கால் வியாதியும்தான். இறுதிக் காலத்தில் போக்கிடம் எதுவும் இல்லாத முத்து தாத்தா, கிறிஸ்டோபராக மாறி ஆஸ்டின்பட்டியில் ஒரு ஆசிரமத்திலேயே தங்கிவிட்டார். எல்லா ஜீவன்களுக்கு ஏதோ ஒரு வழி வைத்துதான் இருக்கிறான் அந்த ஆண்டவன்.

எங்கள்து பெற்றோருக்கு நாங்கள் (எனக்கு இரண்டு அண்ணன், ஒரு அக்கா) முத்து தாத்தாவோடு பழகுவது பிடிக்கவே பிடிக்காது. அவருடைய யானைக்கால் வியாதியினால்தான் இப்படி என்று நினைத்திருந்தோம். பிறகுதான் அம்மா சொன்னார்கள் 'ஏழு தலைமுறைக்கு சாபம் இருக்கு மகனே' என்று. அந்தக் கதை சுவாரசியமானது.

எங்கள் முப்பாட்டன்களில் ஒருவர் கடல்கடந்து கப்பலில் பிரயானம் எல்லாம் செய்திருக்கிறாராம். அப்பொழுது கடல்கடந்த சீமையில் ஒரு முனிவரோடு பழக்கம் ஏற்பட்டிருக்கிறதாம். அம்மா அப்படித்தான் சொன்னார்கள். பரசீல முனிவர் என்று பெயர்கூட சொன்ன மாதிரி ஞாபகம். அந்த முனிவர் நடத்திக் காட்டிய பல அற்புதங்களில் ஒன்றுதான் ரசவாதம். இரும்பை அப்படியே சொக்கத் தங்கமாக்கி காட்டும் அற்புதம். எங்கள் முப்பாட்டன் ஒரு நல்ல நேரமாகப் பார்த்து அந்த ரசவாத குறிப்புகளை திருடிக் கொண்டு பாரதம் ஓடி வந்துவிட்டார். கூடவே வந்தது ஏழு தலைமுறை சாபம். அந்த ரசவாத ஆராய்ச்சி ஒரு சைத்தான் போல எங்கள் குடும்பத்தை பீடித்தது. தலைமுறையில் யாராவது ஒருவரை அதற்கு தீனியாக கொடுக்க வேண்டும் போல. அந்த முப்பாட்டன் திருடிக் கொண்டு வந்த குறிப்புகள் ஏதோ புரியாத மொழியில்தான் இருக்கும். எங்கள் பரம்பரையில் ஒவ்வொருவரும் அந்த குறிப்புகளை தங்களுக்குத் தெரிந்த முறையில் ஆய்ந்து தோய்ந்து அரைப் பைத்தியமாகவே ஆகியிருந்தனர். நிறைய உபகுறிப்புகள் சேர்ந்து அது ஒரு பெரும் ஆராய்ச்சி புதினமாகவே மாறி விட்டிருந்தது. அம்மாவின் கணக்குப்படி முத்துத் தாத்தாவோடு தலைமுறை கணக்கு முடிந்து சாபம் விலகிவிட வேண்டும். தாத்தா எப்போதும் ஏதாவது ஆராய்ச்சி என்று ஒருவித பைத்தியமான நிலையில்தான் இருந்து வந்தார். எப்போதும் ஏதாவது மூலிகை, உலோகம், வடிகட்டுதல் என்று கிறுக்குப் பிடித்த மாதிரி. நாங்கள் (முக்கியமாக ஆண் வாரிசுகள்) அந்த ஆராய்ச்சியின் காற்றுப் படாமல் ஜாக்கிரதையாக வளர்க்கப் பட்டோம். இரண்டு மாதங்கள் முன்னர்தான் முத்து தாத்தாவை பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

ஆஸ்டின்பட்டி ஆசிரமத்தின் நிர்வாகியாக புதிதாக் ஜெர்மனியிலிருந்து கிளெமெண்ட் என்று ஒரு பாதிரியார் வந்திருந்தார். அவர் ஆசிரமத்திற்கு நிலம் வாங்க எங்கள் நிறுவனத்தை அணுகியிருந்தார். அவரைப் பார்த்துப் பேச போகும்போதுதான் அந்த ஆசிரமத்தில் முத்து தாத்தாவை மீண்டும் சந்தித்தேன். அதே சிரிப்பும் சிரத்தையுமாகவே அவர் ஆராய்ச்சிகள் செய்து கொண்டு இருந்தார். ஆனால் ஒரு வித்தியாசம். அவருடைய யானைக்கால் வியாதி பூரணமாக குணம் ஆகியிருந்தது.

கிளெமெண்ட் பாதிரியார் அடிப்படையில் ஒரு மருத்துவர். ஜெர்மனியில் இருந்து மத சேவைக்காக தென்னிந்தியா வந்திருந்தார். எதேச்சையாக முத்து தாத்தாவின் குறிப்புகளைப் பார்த்த பொழுதுதான் அது ஜெர்மன் மொழியில் இருந்ததை கவனித்திருக்கிறார். அதில்தான் யானைக்கால் வியாதிக்கான மருத்துவ முறைகளும் குறிக்கப் பட்டிருந்தது என்றும் அது உடனேயே பலனளித்ததையும் சொன்னார். அது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட குறிப்பாக இருக்க வேண்டும் என்றும் சொன்னார்.

அவருக்கு ரசவாதத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால் ரசவாத அதிசயங்கள் நிகழ்த்தியதாக சொல்லப்படும் ஃபிலிப் வோன் என்ற ஒரு ஜெர்மன் மருத்துவர் பதினைந்தாம் நூற்ற்றாண்டில் வாழ்ந்ததாகவும் இந்த குறிப்புகள் பெரும்பாலும் அவற்றை ஒத்திருந்ததாகவும் தனக்குப் தோன்றியதாகச் சொன்னார். முத்து தாத்தா அந்தக் குறிப்புகளை யாருக்கும் முழுவதுமாக கொடுக்கவில்லை. அதனால் கிளமெண்ட் பாதிரியாருக்கு ரசவாதத்தைப் பற்றி அதிகம் தெரியவில்லை.

இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், க்ளெமெண்ட் பாதிரியார் சொன்ன மருத்துவர் வாழ்ந்தது 1500-களில். உங்கள் கதையிலும் அதே காலகட்டத்தில் நடந்த ரசவாத அதிசயங்களைப் பற்றி சொல்கிறீர்கள். பாராசெல்ஸஸ் யானைக்கால் வைத்தியத்தில் தேர்ச்சிப் பெற்றவர் என்றும் சொல்கிறீர்கள். அம்மாவின் கதைகளில் வரும் 'பராசீல' முனிவரும் உங்களின் பாராசெல்லஸும் நிறைய இடங்களில் ஒத்துப் போகிறமாதிரி எனக்குத் தெரிகிறது. பாருங்கள் இந்த விஷயங்கள் எல்லாம் இந்த ரசவாதத்திற்கு எப்படி ஒரு நம்பகத்தன்மை கொடுக்கிறது என்று. நம்பிக்கையே இல்லாத என்னைப் போன்றவனையும் இப்படி ஒரு கடிதம் எழுத வைத்து விட்டது.

க்ளெமெண்ட் பாதிரியார் உதவியோடு முத்துத் தாத்தாவின் குறிப்புகள் ஓரளவு முழுமையடந்தது. இந்த வயதிலும் தாத்தா இந்த ஆராய்ச்சியின் மேல் வைத்திருக்கும் பாசம் மனிதன் தன் உயிர் மேல் வைத்திருக்கும் பாசத்திற்கு சமானம். ஆனால் தாத்தாவின் வயது அவருடைய வெற்றிக்காக காத்திருக்குமா என்று தெரியவில்லை. இது தொடராமல் போனால் இன்னொரு தலைமுறை பிழைக்கும்.

இப்படியும் சொல்லுராங்க


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 2 Empty Re: காண்பதற்கரிய புகைப்படம்...

Post by mohan-தாஸ் Sun Apr 18, 2010 1:00 pm

[quote="கலை"]
mohan-தாஸ் wrote:

சில தகவல்களை யாரும் ஆராய்து பார்க்கமால் விளக்கம் கொடுக்கவும் கூடாது அதற்கு விவாதம் பண்ணவமும் கூடாது அதை பொய் என்று சொல்லவும் கூடாது முளு விவாதம் என்று வந்தால் முளு ஆதாரத்தையும் முன் வைக்க வேண்டும் உறுதி படுத்த வேண்டும் எதையும் லேசாக கருதி அப்படி இல்லை என்று தன் கருத்துகேற்ப மாற்றி விடாதீர்கள் நன்றி...

நான் குருட்டுத்தனமாக யோசிக்காமல் மறுக்கவில்லை தாஸ்...

எனது பதில் பொதுவாக வந்தது ஆனால் நான் உங்களுக்கு என்றுதான் சொல்ல வில்லை நான் நிறைய வாக்கு வாதங்களை விவாதங்களையும் இங்க பார்த்து படித்து வருகிறேன் ஆனால் நீங்கள் வயசில மூத்த அண்ணன் நான் இதற்கு மாத்திரம் பேச வில்லை இதையும் நான் நம்பவும் போரதில்லை பொதுவாக எல்லா விடயங்களுக்கு நான் சொன்னேன் எந்த கருத்தை முன் மொழிந்தாலும் அதற்காக ஆதாரம் 100% யாராரும் காட்ட முடியும் என்று சொன்னால் நான் ஏற்று கொள்வேன் இது இப்படித்தான் உள்ளது என்று ஆனால் யாருக்கும் எதற்கும் எல்லாம் அப்படி பதில் ஆதாரம் கூற முடியாது அதை வைத்து வாதம் பண்ணுவதிலும் பிரயோசனம் இல்லை என்றுதான் நான் சொல்கீறேன்...நான் யாரிடமும் விவாதம் பண்ண போவதில்லை விவாதம் என்று ஒன்று வாந்தால் அதற்கு நான் முளு ஆதராங்களை முன் வைப்பேன் கலை சார் என்னை தப்பாக நினைக்க வேண்டாம் மன்னிக்கவும் நான் பொதுவான கருத்தைதான் சொன்னேன்


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 2 Empty Re: காண்பதற்கரிய புகைப்படம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum