புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
51 Posts - 43%
heezulia
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
50 Posts - 42%
mohamed nizamudeen
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
3 Posts - 3%
prajai
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
417 Posts - 49%
heezulia
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
286 Posts - 33%
Dr.S.Soundarapandian
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
28 Posts - 3%
prajai
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 4:01 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]



முகவுரை


திருவாளர் செல்வன் சந்திரசூடனுக்குத் திருமணம் நடக்கப் போகிறது என்று அறிந்த போது, அவனுடைய நண்பர்கள் பலரும் அடைந்த வியப்புக்கு அளவில்லை. எனெனில், சந்திரசூடன் நெடுங்காலமாக, "கலியாணம் என்ற பேச்சை என் காதில் போட வேண்டாம்" என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவ்வளவு எளிதில் அவனுடைய நண்பர்கள் அவனை விட்டுவிடுகிறதாக இல்லை. அவன் கேட்க விரும்பவில்லை என்று சொன்ன வார்த்தையையே ஓயாமல் அவன் காது செவிடுபடும்படி டமாரம் அடித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். "இப்படி எத்தனையோ விசுவாமித்திரர்களைப் பார்த்து விட்டோ ம்!" என்று அவனைக் கேலி செய்து கொண்டிருந்தார்கள். இத்தகைய நண்பர் கூட்டத்தில் சந்திரசூடன் அகப்பட்டுக் கொள்ளும் போது, "ஒருவேளை நான் புத்தி தடுமாறிக் கலியாணம் செய்து கொண்டாலும் இந்திய தேசத்தின் ஜனத் தொகையை மட்டும் பெருக்க மாட்டேன்" என்று சில சமயம் சொல்வதுண்டு, சொல்வதுடன் நின்று விடாமல் அவன் கர்ப்பத்தடை முறைகளைப் பற்றிய விஞ்ஞான ரீதியான இலக்கியங்கள், அதே விஷயத்தைச் சுற்றி வளைக்காமல் அப்பட்டமாகச் சொல்லும் நூல்கள், இவற்றையெல்லாம் வாங்கிப் படித்தும் வந்தான்.

அத்தகைய சந்திரசூடன் இப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறான், அதிலும் ஏற்கெனவே குழந்தை உள்ள ஒரு பெண்மணியைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறான் என்றால் அவனை அறிந்தவர்கள் ஆச்சரியக் கடலில் மூழ்கித் தத்தளிப்பது இயல்பேயல்லவா?

அத்தகைய பரிகாசத்துக்கிடமான காரியத்தை அவன் செய்ய முன் வந்ததன் காரணத்தை அறிந்து கொள்ள அவனுடைய நண்பர்கள் ஆசைப்பட்டதிலும் அவ்வளவு வியப்பில்லை அல்லவா?

திருமணக் கடிதத்தைப் பார்த்ததிலிருந்து அவனைக் கண்டுபிடித்து நேருக்கு நேர் கேட்டுவிடுவதென்று பலரும் துடியாயிருந்தார்கள். அவர்களில் நானும் ஒருவன். கடைசியாக அவனை ஒரு நாள் கையும் மெய்யுமாகப் பிடித்து, "அப்பனே! இந்த விபத்தில் எப்படி அகப்பட்டுக் கொண்டாய்? உண்மையைச் சொல்லிவிடு!" என்றேன். "சொல்லாவிட்டால் நீர் விடப் போகிறீரா? ஏதாவது கதையும் கற்பனையுமாக சேர்த்து எழுதித் தள்ளிவிடுவீர், அதைக் காட்டிலும் நானே சொல்லிவிடுவது நல்லது" என்றான்.

"அப்படியானால், கதை எழுதுவதற்குத் தகுதியானது என்று ஒப்புக்கொள்கிறாயா?" என்று கேட்டேன்.

"எல்லாம் கதையினால் வந்த விபத்துதான்! முழுக் கதை கூட அல்ல; பாதிக் கதையினால் வந்த ஆபத்து. 'தீபம்' என்னும் மாதப் பத்திரிகையில் பாதிக் கதைப் போட்டி ஒன்று நடத்தினார்களே? ஞாபகம் இருக்கிறதா?" என்றான் சந்திரசூடன்.

ஆம்; அது என் ஞாபகத்தில் இருந்தது.

'தீபம்' பத்திரிகையில் அத்தகையப் போட்டி ஒன்று சில காலத்துக்கு முன்பு நடத்தினார்கள். ஓர் இதழில் 'விமான விபத்து' என்ற தலைப்புடன் ஒரு பாதிக் கதையை வெளியிட்டார்கள். அதைப் பூர்த்தி செய்யும்படி வாசக நேயர்களைக் கேட்டு கொண்டிருந்தார்கள். இந்தப் போட்டிக்கு வரும் பிற்பகுதிக் கதைகளில் சிறந்ததைப் பத்திரிகையில் வெளியிடுவதுடன் அதற்கு நூறு ரூபாய் சன்மானம் கொடுப்பதாகவும் அறிவித்திருந்தார்கள்.

இந்த அறிவிப்பு வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பரிசு பெற்ற பிற்பகுதிக் கதையும் மேற்படி பத்திரிகையில் வெளியாகியிருந்தது.

கதையை அச்சமயம் மேலெழுந்தவாரியாகப் படித்திருந்தேன். ஓர் ஆகாச விமானம் பிரயாணப்பட்டுச் சென்றது; ஆனால் குறித்த இடத்துக்குப் போய்ச் சேர வில்லை. பிரயாணிகளுடன் மாயமாய் மறைந்துவிட்டது. எங்கேயோ மேற்குமலைத் தொடரில் மனித சஞ்சாரத்துக்கு அப்பாற்பட்ட இடத்தில் விழுந்து எரிந்து போயிருக்க வேண்டும் என்று அனுமானிக்கப்பட்டது. இதுதான் கதையின் முக்கிய சம்பவம். இம்மாதிரி ஒரு துர்ச்சம்பவம் உண்மையாகவே சில காலத்துக்கு முன்பு நிகழ்ந்திருக்கிறது.

இதையெல்லாம் ஞாபகப்படுத்திக் கொண்டு, "ஆமாம்; அந்தப் பாதிக் கதைப் போட்டிக்கும் உன் கலியாணத்துக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டேன்.

சந்திரசூடன் அந்தச் சம்பவம் இன்னதென்பதை விவரமாகச் சொல்லித் தீர்த்தான். சொல்லாமற் போனால் யார் விடுகிறார்கள்?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 4:18 pm

சந்திரசூடன் குழந்தையை அப்படியே கீழே விட்டு விட்டு பக்கத்திலிருந்த மதில் வாசல் வழியாக வெளிவந்தான். புலி இன்னமும் தென்னை மரத்தின் மேல் தான் இருந்தது. சுவர் ஓரமாகக் கிடந்த தன் துப்பாக்கியை எடுத்துக் குறி பார்த்துச் சுட்டான். அவன் சுட்ட குண்டு புலியின் மீது பாய்ந்தது என்று தெரிந்து கொண்டான். உடனடியாக இன்னும் இரண்டு மூன்று துப்பாக்கி வேட்டுச் சத்தமும் கேட்டது. புலி கீழே தடால் என்று விழுந்தது. ஒரு துள்ளுத் துள்ளி எழுந்திருக்கப் பார்த்து மறுபடியும் தள்ளாடி விழுந்தது. பயங்கரமான ஓர் உறுமல் உருமி விட்டுப் பிராணனை விட்டது.

மறுநிமிடம் ஜனக் கூட்டம் புலியைச் சூழ்ந்து கொண்டது. சந்திரசூடனும் புலிக்கு அருகில் சென்றான். அதற்குள் அங்கே வந்திருந்த மனோகரன் இவனைக் கண் பார்வையினாலேயே சுட்டு விடுகிறவனைப் போல் பார்த்து, "செத்த பாம்பை அடிக்கிற சூரர் உம்மைப் போல் கண்டதில்லை. நான் மூன்று குண்டு போட்டுப் புலியைக் கொன்ற பிறகு, நீ எதற்காக அதைச் சுட்டீர்?" என்று கோபமாகக் கேட்டான்.

"அதனால் என்ன! மூன்றோடு, நாலு! செத்த புலியில் பங்கு கேட்க நான் வரவில்லை; புலியைக் கொன்ற பெருமை முழுவதும் தங்களுக்கே இருக்கட்டும்!" என்றான் சந்திரசூடன்.

"ஒருவர் குறி வைத்த வேட்டையின் பேரில் இன்னொருவர் சுடுவது சட்ட விரோதம் தெரியுமா?"

"வேட்டை சம்பந்தமான சட்டம் ஒன்றும் எனக்குத் தெரியாது, ஸார்! தயவு செய்து மன்னிக்கவும்."



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 4:18 pm

"மன்னிக்கவாவது மண்ணாங்கட்டியாவது? குறி பார்த்துச் சுடவாவது உமக்குத் தெரிகிறதா? மயிரிழை தவறியிருந்தால், குண்டு என் பேரில் அல்லவா பாய்ந்திருக்கும்?"

"அடடா! அப்படியா! ரொம்ப ரொம்ப வருந்துகிறேன். போனது போயிற்று. இனிமேல் நடக்க வேண்டியதைப் பாருங்கள்!" என்று சொல்லிவிட்டுச் சந்திரசூடன் அங்கிருந்து மெள்ள நகர்ந்தான்.

செத்த புலியை ஜனங்கள் ஊர்வலமாக எடுத்துக் கொண்டு போனார்கள். புலியைச் சுட்டுக் கொன்ற வீரன் மனோகரனுக்கு மாலை சூட்டி அவனையும் ஊர்வலத்தின் முன்னணியில் அழைத்துச் சென்றார்கள். தமுக்கு தம்பட்ட முழக்கங்களும், "மனோகரனுக்கு ஜே!" என்ற கோஷமும் வானை அளாவின.

புலி ஊர்வலம் அந்த இடத்தை விட்டு நகர்ந்த பிறகு சாயபு மட்டும் தனியாக நிற்பதைச் சந்திரசூடன் பார்த்தான். அவனை அணுகிச் சென்று, "நல்ல வேலை செய்தாய், சாயபு!" என்றான்.

"நல்ல சமயத்திலே வந்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றினீங்க!" என்றான் சாயபு.

"நானா காப்பாற்றினேன்? நீயல்லவா உன் எஜமானை நல்ல சமயத்தில் அசக்கிவிட்டு குறி தவறச் செய்து காப்பாற்றினாய்?"

அப்துல் ஹமீது அசட்டுச் சிரிப்புச் சிரித்தான்.

"அன்றைக்கு மலைமேல் 'புலி புலி' என்று கத்தினாயே? அது எனக்கு எச்சரிக்கை செய்வதறகாகத்தானே? உண்மையைச் சொல்?" என்று சந்திரசூடன் கேட்டான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 4:19 pm

"நம்ம சின்ன எஜமானும் ஒரு சிறு குழந்தைங்க. சில சமயம் விளையாட்டுப் புத்தி வந்திடுங்க! எஜமான் கிட்டச் சொல்லாதேங்க, ஸாமி! நம்ப பிளைப்புப் போயிடப் போவுது!"

"இதோ பார், சாயபு! வெறுமனே வேஷம் போடாதே! நீ பிழைப்புக்காக இவரிடம் வரவில்லை. வேறு காரியார்த்தமாக வந்திருக்கிறாய்? உள்ளதைச் சொல்லு" என்றான் சந்திரசூடன்.

அப்துல் ஹமீது திருதிருவென்று விழித்தான்.

சந்திரசூடன் அவன் காதோடு, "நீ ஸி.ஐ.டி.யைச் சேர்ந்தவன், இல்லையா?" என்றான்.

ஹமீது கண்களை ஒரு சிமிட்டுச் சிமிட்டி, "நீங்க என்னைவிடப் பெரிய ஸி.ஐ.டி.யாக இருக்கீங்களே!" என்றான்.

"உன் பேரில் இன்னொரு குற்றம் இருக்கிறது. 'தீபம்' பத்திரிகையில் கதை எழுதிப் பரிசு வாங்கியது நீதானே?"

சாயபு ஆச்சரியக் கடலில் முழுகியவனாய், "உங்களுக்கு எப்படி அதெல்லாம் தெரிந்தது?" என்று கேட்டான்.

"சென்ற வாரம் மதராசுக்குப் போயிருந்தபோது 'தீபம்' காரியாலயத்துக்குச் சென்று கொஞ்சம் ரகளை செய்தேன். பத்திரிகாசிரியரைப் பார்த்து, 'பரிசு பெற்றவரின் புனைப் பெயர் மட்டும் கொடுத்திருக்கிறீர்கள். விலாசம் கொடுக்கவில்லை. உங்கள் பரிசுத்திட்டமே வெறும் மோசடி!' என்றேன். மனுஷர் பயந்து போய்ப் பரிசு பெற்றவன் பெயர், விலாசத்தைக் கொடுத்ததுடன், உம்முடைய கடித்தத்தையும் காட்டினார்."

"அடே! நம் குட்டு வெளியாயிட்டே? யாரிடமும் சொல்லாதீங்க! நம்ம தமிழ் நடை எப்படி இருந்ததுங்க?"

"தமிழ் நடை நன்றாய்த்தானிருந்தது. ஆனால் கதை முடிவுதான் மோசம். கலியாணத்தில் கொண்டு போய் முடித்திருக்கக்கூடாதா?"

இச்சமயத்தில் சாயபு, "அதோ!" என்றான். அவன் சுட்டிக் காட்டிய இடத்தில் பண்ணையார் வந்து கொண்டிருந்தார். சந்திரசூடன், "சரி! இன்னொரு தடவை நாம் சந்திக்க வேண்டும், தெரிகிறதா?" என்றான்.

இருவரும் உடனே பிரிந்து போனார்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 4:19 pm

சந்திரசூடன் நேரே மனோன்மணியின் வீட்டுக்குப் போனான். அதற்குள் மனோமணியும் அங்கே வந்திருந்தாள். அவள் பள்ளிக் கூடத்தின் பலகணி வழியாகப் புலி தென்னை மரத்தில் ஏறியதையும் பிறகு நடந்தவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு ஏற்பட்ட திகிலின் படபடப்பு இன்னும் முழுவதும் போகவில்லை. குழந்தையைக் கட்டி அணைத்து ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தாள். குழந்தையும் மழலைச் சொல்லில் பதில் சொல்லிக் கொண்டிருந்தது.

சந்திரசூடனைப் பார்த்ததும் மனோன்மணியின் கண்ணில் கண்ணீர் ததும்பியது.

"எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். குழந்தையைக் காப்பாற்றினீர்கள். தங்களுக்கு எந்த விதத்தில் நன்றி செலுத்துவது என்று தெரியவில்லை" என்று தட்டுத் தடுமாறிக் கூறினாள்.

"நன்றி சொல்வதற்குக் காலம் வரும்; அப்போது சொல்லுகிறேன்" என்றான் சந்திரசூடன்.

"குழந்தை இப்போது என்ன சொல்லிக் கொண்டிருந்தான், தெரியுமா? நீங்கள் புலியை இவன் வீட்டுக்குக் கொண்டு வருகிறேன் என்றீர்களாம். அப்படியே செய்து விட்டீர்களாம். அந்த முரட்டு மாமா அநியாயமாய்ச் சுட்டுக் கொன்று விட்டாராம்!"

இதற்குள் ராஜ்மோகன், "மாமா! எனக்கு ஒரு புலியும் துப்பாக்கியும் வாங்கி தரேளா?" என்று கேட்டான்.

"ஆகட்டும் பாப்பா! உனக்குப் புலியைக் கண்டால் பயமாயில்லையா?" என்றான் சந்திரசூடன்.

"எனக்குப் புலிகிட்டப் பயமில்லை. பூனை கிட்டத்தான் பயம்!" என்றான் ராஜ்மோகன்.

"மலைமேல் உங்களைத் துப்பாக்கியால் சுடப் பார்த்தது என்கிறீர்களே? அதன் பொருள் இன்று தான் விளங்குற்று! என்னை ஜாக்கிரதையாயிருக்கும்படி சொன்னதன் காரணமும் இப்போதுதான் புரிகிறது!" என்றாள் மனோன்மணி.

"ஆமாம்; இன்னும் இரண்டு மூன்று நாள் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். உயில் தயாராகி விட்டது. ரிஜிஸ்டராவது தான் பாக்கி. உயில் ரிஜிஸ்ராகி இந்தப் பையனை அவனுடைய தாத்தாவிடம் சேர்ப்பித்து விட்டால்..."

"அது முடியும் என்று நினைக்கிறீர்களா?"

"தாங்களும் கொஞ்சம் ஒத்துழைத்தால் முடியும்?"

"ஐயோ! அப்புறம் நான் என்ன செய்வேன்?"



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 4:20 pm

"செய்வது என்ன? யாராவது மனசுக்குப் பிடித்தவனைக் கலியாணம் செய்து கொண்டு பிறகு எப்போதும் ஆனந்தமாக வாழ்ந்திருப்பது!"

மனோன்மணி தயங்கித் தயங்கி, "தாங்கள் இவ்வளவு ஒத்தாசை செய்திருக்கிறீர்கள். ஆனால் தங்களிடம் நான் முழு உண்மையையும் சொல்லவில்லை!" என்றாள்.

"ஓஹோ! உண்மையில் இன்னும் கொஞ்சம் பாக்கி வைத்திருக்கிறீர்களா?"

இச்சமயம் வாசலில் ஏதோ சத்தம் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். அதிசயத்திலெல்லாம் அதிசயம்! பண்ணையார் சங்கரசேதுராயர் வந்து கொண்டிருந்தார்.

மனோன்மணி பதறிக் கொண்டு எழுந்திருக்க முயன்றாள். குழந்தை ராஜ்மோகன் அவளைக் கட்டிக் கொண்டு எழுந்திருப்பதைத் தடை செய்ய முயன்றான்.

"உட்காரு, அம்மா, உட்காரு! இந்தக் குழந்தை இன்று பிழைத்தது புனர்ஜன்மம்!" என்றார் பண்ணையார்.

"பல விதத்தில் அதற்கு இன்றைக்குப் புனர்ஜன்மந்தான்! உட்காருங்கள்!" என்று சந்திரசூடன் நாற்காலியைக் காட்டி உபசரித்தான்.

பண்ணையார் உட்கார்ந்து, "வீதி முனையில் நின்று நானும் பார்த்துக் கொண்டிருந்தேன்! கரணம் தப்பினால் மரணம் என்று இருந்தது. புலி இந்த வீட்டுப் பக்கம் பாய்ந்திருந்தால்! அல்லது துப்பாக்கிக் குண்டு தவறிப் பட்டிருந்தால்...? ஓய்! உம்மை என்னவோ என்று நினைத்தேன். வெகு தைரியசாலி! நீர் அப்படிப் பாய்ந்து ஓடிக் குழந்தையை எடுத்திராவிட்டால்...?" என்றான்.

"எல்லாம் கடவுளுடைய செயல்! நம்மால் என்ன இருக்கிறது?" என்றான் சந்திரசூடன்.

"கடவுளும் மனித ரூபத்தில்தானே காரியம் செய்ய வேண்டியிருக்கிறது? நானும் என் மனையாளும் இந்தச் சாலையில் உலாவ வரும் போதெல்லாம் இந்தக் குழந்தையைப் பார்ப்போம். 'இம்மாதிரி ஒரு குழந்தை நம் வீட்டில் வளரக் கூடாதா?' என்று என் மனையாள் ஜபம் செய்வாள்."

சந்திரசூடன், "இந்தக் குழந்தையையே வளர்த்தால் போகிறது" என்று முணுமுணுத்தான்.

"என்ன சொன்னீர்?" என்று கேட்டார் பண்ணையார்.

"ஒன்றுமில்லை. உலகத்தில் வேறு எந்தப் பாக்கியம் இருந்தாலும் குழந்தைப் பாக்கியத்துக்கு இணையாகாது என்றேன்."

"நூற்றில் ஒரு வார்த்தை! பாப்பா! இங்கே வா! என்னிடம் வா! தாத்தாவைக் கண்டால் உனக்குப் பயமாயிருக்கிறதா" என்றார் பண்ணையார்.

"அவன் புலியைக் கண்டே பயப்படவில்லையே?" என்று சொன்னான் சந்திரசூடன்.

"எனக்குப் பூனைகிட்டத்தான் பயம். புலி கிட்டப் பயமில்லை" என்று சொன்னான் ராஜ்மோகன்.

"உனக்குப் புலி மொம்மை வாங்கித் தருகிறேன். என்னிடத்தில் வா" என்றார் பண்ணையார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 4:20 pm

ராஜ்மோகன் எழுந்து நடக்கப் பார்த்தான். மனோன்மணி அவனைத் தூக்கிக் கொண்டு வந்து பண்ணையார் அருகில் விட்டாள்.

"குழந்தை ஒரு கால் சற்றுக் குட்டை; நடப்பதற்குக் கொஞ்சம் கஷ்டப்படும்" என்றான் சந்திரசூடன்.

"அடடா! அப்படியா! நானும் என் மனையாளும் இந்தப் பக்கம் வரும்போதெல்லாம் இந்தக் குழந்தை எப்போதும் கை வண்டியிலேயே உட்கார்ந்திருக்கும். அதன் காரணம் இப்போதுதான் புரிகிறது" என்றார் பண்ணையார்.

"கைவண்டியில் உட்கார வைத்து பெல்ட்டினால் கட்டிப் போட்டு விட்டு இந்த அம்மாள் காரியத்தைப் பார்ப்பாள். இல்லாவிட்டால் ஒரு நிமிஷம் சும்மா இருக்க மாட்டான். பாருங்கள்! இன்றைக்குக் கொஞ்சம் கவனிக்காமற் போகவே, எப்படியோ மதில் மேல் ஏறி உட்கார்ந்து விட்டான்." பண்ணையார் குழந்தையைத் தட்டிக் கொடுத்து, "ஜாக்கிரதையாய்க் குழந்தையைப் பார்த்துக் கொள், அம்மா. திருஷ்டி கழித்துப் போடு" என்றார்.

மனோன்மணி பண்ணையாரிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டாள்.

பண்ணையார் சந்திரசூடனைப் பார்த்து, "நான் போய் விட்டு நாளைக்கு என் மனையாளையும் அழைத்துக் கொண்டு வருகிறேன். அவளும் குழந்தையைப் பார்க்க ஆசைப்படுவாள், நீங்கள் ஏதோ முக்கியமான காரியத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தீர்கள் போலிருக்கிறது!" என்று சொல்லி விட்டு எழுந்தார்.

"அப்படி முக்கியமான விஷயம் ஒன்றுமில்லை, கலியாண விஷயந்தான்!" என்றான் சந்திரசூடன்.

"கலியாணமா? யாருக்குக் கல்யாணம்?"

"இன்னும் நிச்சயமாகவில்லை. பேச்சுத்தான் நடந்து கொண்டிருக்கிறது. எனக்குக் கலியாணம் ஆகவில்லையா என்று நீங்கள் கேட்டீர்கள் அல்லவா? 'தகுந்த மணப்பெண் கிடைக்கவில்லை' என்று பதில் சொன்னேன். மிஸ் மனோன்மணியைப் பார்த்த பிறகு அந்த அபிப்பிராயம் மாறி விட்டது."



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 4:20 pm

"மிஸ் மனோன்மணியா?" என்று பண்ணையார் சிறிது வியப்புடனே கேட்டு விட்டுக் குழந்தையைப் பார்த்தார். நல்ல வேளையாக, குழந்தை அதற்குள் மனோன்மணியின் மடியில் படுத்துத் தூங்கிப் போய் விட்டது.

"அப்படித்தான் நானும் முதலில் நினைத்தேன். ஆனால் குழந்தை இந்த அம்மாளுடைய சொந்தக் குழந்தை அல்ல. அநாதைக் குழந்தை. அதாவது ஒரு சிநேகிதியின் குழந்தை..."

பண்ணையார் மேலும் ஆச்சரியப்பட்டு, "அப்படியா? இந்தக் குழந்தைக்குத் தாய் தகப்பன் இரண்டு பேரும் இல்லையா?" என்று கேட்டார்.

"இல்லையென்று சொல்ல முடியாது. இந்த அம்மாளே தாயாராகவும், தகப்பனாராகவும் இருந்து குழந்தையை வளர்த்து வருகிறாள்..." என்றான் சந்திரசூடன்.

பண்ணையார் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தவரைப் போல், "நான் சொல்கிறதைக் கேளுங்கள். இந்தக் குழந்தையை என்னிடம் ஒப்புவித்துவிடுங்கள்" என்றார்.

"அதற்கென்ன நாட்டில் எத்தனையோ அநாதைக் குழந்தைகள் இருக்கின்றன. தங்களுக்கு முன்னமே சொன்னேன், தங்கள் சொத்தில் ஒரு பாதியையாவது அநாதை ஆசிரமங்களுக்கு எழுதிவைக்கும்படி. நூறு குழந்தைகள் வேணுமானாலும்..."

"நூறு குழந்தைகள் இருக்கட்டுங்காணும்! இந்தக் குழந்தையைக் கொடுப்பதாயிருந்தால் சொல்லுங்கள். எனக்கும் என் மனையாளுக்கும் ரொம்பச் சந்தோஷமாயிருக்கும்! கால் ஊனத்துக்குச் சிகிச்சை செய்து, எத்தனை பணம் வேணுமானாலும் செலவழித்துச் சரிப்படுத்துகிறோம். உங்கள் கலியாணத்துக்கும் ஒரு தடை இல்லாமற் போகும்."

"எங்கள் கலியாணத்துக்கு இந்தக் குழந்தையினால் தடை ஒன்றுமில்லை. வேறு தடைகள் இருக்கின்றன. இந்த அம்மாள் ஒரு கிறிஸ்துவப் பெண்."



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 4:21 pm

"இருந்தால் என்ன? சாதியாவது மதமாவது? குணந்தான் பிரதானம். இந்த அனாதைக் குழந்தையை இவ்வளவு அருமையாக இந்தப் பெண் வளர்ந்து வருகிறாளே? வேறு யாருக்கு இப்பேர்ப்பட்ட தயாள குணம் இருக்கும்? இவள் மாதிரி ஒரு பெண்ணை மனைவியாகப் பெறுவதற்கு நீர் ஏழு ஜன்மத்தில் தவம் செய்திருக்க வேண்டும். தெரிகிறதா? எல்லாவற்றுக்கும் சாயங்காலம் நம் வீட்டுக்கு வாரும். அப்போது பேசிக் கொள்ளலாம்!" என்று கூறிவிட்டுப் பண்ணையார் நடையைக் கட்டினார்.

அவர் போன பிறகு சந்திரசூடன், "தெய்வ சங்கற்பம் எப்படி இருக்கிறது, பார்த்தீங்களா? பண்ணையாரை நேரே இங்கு கொண்டு வந்து சேர்த்து விட்டது!" என்றான்.

மனோன்மணியின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. "எனக்குச் சந்தோஷப்படுவதா, துக்கப்படுவதா என்று தெரியவில்லை" என்று விம்மினாள்.

"பெண்கள் சமாசாரமே இப்படித்தான்! எதற்காகத் துக்கப்பட வேண்டும்? துக்கப்படும்படி என்ன நேர்ந்து விட்டது? பேரனைப் பாட்டனிடம் சேர்க்க வேண்டும் என்கிறீர்கள். அதற்கு இதோ வழி பிறந்து விட்டது. தாங்கள் இஷ்டப்பட்டால், பண்ணையார் சொன்னது போல், 'மிஸ்' பட்டத்தை நீக்கிக் கொண்டு 'மிஸ்ஸஸ்' ஆகிவிடலாம். கையில் விண்ணப்பத்துடன் காத்திருக்கிறேன்..!" என்றான் சந்திரசூடன்.

"ஐயா! தயவு செய்து அந்தப் பேச்சுப் பேசாதீர்கள். தாங்கள் எவ்வளவோ எனக்கு உதவி செய்திருக்கிறீர்கள். இனியும் தங்களை ஏமாற்றினால், பெரும் பாவியாவேன். நான் இந்தக் குழந்தையின் வளர்ப்புத் தாயார் அல்ல; பத்துமாதம் வயிற்றில் சுமந்து பெற்ற சொந்தத் தாயார்தான்!"

"அட கடவுளே! அப்படியானால் குழந்தை பண்ணையாரின் பேரன் அல்லவா? அது பொய்யா..?"

"பண்ணையாரின் பேரன் தான் இவன்! பண்ணையார் மகனைக் கலியாணம் செய்து கொண்ட பாவி நானே தான். அரண்மனையில் வாழ வேண்டியவரை ஆண்டியாக்கி, கடைசியில் அவருக்கு யமனாக முடிந்தவளும் இந்த மகா பாவி தான்!" என்று கூறிவிட்டு மனோன்மணி விம்மி அழுதாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 4:21 pm

மனோன்மணியின் விம்மல் நிற்கும் வரையில் சந்திரசூடன் காத்துக் கொண்டிருந்தான்.

பிறகு, "தாங்கள் உண்மையை முழுவதும் இப்போதாவது சொன்னது பற்றிச் சந்தோஷம், மொத்தத்தில் பார்த்தால், வருத்தப்படுவதற்கு எதுவும் இல்லை. பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் ஆயிற்று. பண்ணையாருக்குத் தங்களை மருமகளாக ஏற்றுக் கொள்வதிலே கூட இப்போது ஆட்சேபம் அதிகமாயிராது..." என்றான்.

"கூடவே கூடாது! தங்கள் தலையின் மேல் ஆணை! அதை மட்டும் அவரிடம் சொல்ல வேண்டாம்; இந்தக் குழந்தையைச் சேர்ப்பித்தால் போதும்!" என்றாள்.

"சரி, சரி! தங்கள் இஷ்டம் எப்படியோ அப்படியே செய்வோம். முதலில் உயில் ரிஜிஸ்டர் ஆகட்டும். ஆனால் ஒன்று மட்டும் சொல்லி வைக்கிறேன். எனக்குச் சாதி விட்டுச் சாதி கலியாணம் செய்வதிலும் ஆட்சேபம் இல்லை, விதவா விவாகத்திலும் ஆட்சேபம் கிடையாது!" என்று சொல்லி விட்டுப் பதிலுக்குக் காத்திராமல் சந்திரசூடன் வெளியேறினான்.

பிறகு காரியங்கள் துரிதமாக நடைபெற்றன. சந்திரசூடன் மறுநாள் பண்ணையார் வீட்டுக்குப் போயிருந்த போது மனோகரன் அவனோடு வேண்டுமென்றே சண்டை பிடித்தான்.

"ஏதோ உயில் தயாராகிறதாமே! அது என்ன சமாசாரம்?" என்று கேட்டான்.

"என்னைக் கேட்கிறாயே! உன் தகப்பனாரைக் கேட்டுத் தெரிந்து கொள்" என்றான் சந்திரசூடன்.

அதன் பேரில் மனோகரன் சந்திரசூடனைக் கன்னாபின்னாவென்று திட்டி விட்டு, "ஜாக்கிரதை! நான் வலுச்சண்டைக்குப் போக மாட்டேன்; வந்த சண்டையையும் விடமாட்டேன். என் வழியில் குறுக்கே வருகிறவர்களை இலேசில் விடமாட்டேன். உண்டு இல்லை என்று பார்த்து விடுவேன்" என்று பயமுறுத்தினான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 4:22 pm

இவ்வளவையும் சந்திரசூடன் பொறுத்துக் கொண்டு காரியத்திலேயே கண்ணாயிருந்தான். பண்ணையாரின் சொத்துக்களை அவருடைய மகனின் சந்ததிகளுக்கு உயில் எழுதுவிக்கச் செய்வது, பேரனைப் பண்ணையாரிடம் சேர்ப்பித்து விடுவது ஆகிய இரு நோக்கங்களுடன் அவன் வேலை செய்தான்.

பண்ணையார் தமது பாரியாளையும் அழைத்துக் கொண்டு இன்னொரு தடவை மனோன்மணியின் வீட்டுக்கு வந்தார். அநாதைக் குழந்தையைத் தங்களிடம் ஒப்புவித்துவிடும்படி மனோன்மணியைக் கேட்டுக் கொண்டார். யோசித்துப் பதில் சொல்லும்படி கூறி விட்டுப் போய்விட்டார்.

மனோன்மணிக்கு அவளுடைய நோக்கம் நிறைவேறும் காலம் நெருங்க நெருங்கப் பீதியும் அதிகரித்து வந்தது; "குழந்தையைப் பிரிந்திருக்கவும் என்னால் முடியாது; என்னை அவர்களுடைய மருமகள் என்று தெரிவித்துக் கொள்ளவும் முடியாது" என்று பிடிவாதமாகச் சொன்னாள். சந்திரசூடனிடம், "உங்களுக்குக் கோடி புண்ணியம் உண்டு. உங்களுடைய முயற்சியை நிறுத்தி விடுங்கள். இல்லாவிடில் நான் இந்த ஊரை விட்டே போய் விடுவேன்!" என்று வற்புறுத்தினாள்.

"இன்னும் ஒரு நாள், இருபத்து நாலு மணி நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள். நாளைக்கு உயில் ரிஜிஸ்டர் ஆகிவிடும். அப்புறம் தீர யோசித்து உசிதப் படி முடிவு செய்து கொள்ளலாம்" என்றான் சந்திரசூடன்.

அந்த ஒரு நாள் - இருபத்து நாலு மணி நேரத்திற்குள் - மிகப் பயங்கர சம்பவங்கள் நிகழ்ந்து விட்டன.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக