Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்!
2 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்!
First topic message reminder :
![இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 225px-Dr.Rajendra.Prasad](https://2img.net/h/upload.wikimedia.org/wikipedia/en/thumb/8/82/Dr.Rajendra.Prasad.jpg/225px-Dr.Rajendra.Prasad.jpg)
டாக்டர் ராஜேந்திர பிரசாத் (26 ஜனவரி 1950 - 13 மே 1962)
வடக்கு பீகாரில் ஓர் குக்கிராமத்தில் 1884-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி பிறந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் காந்தியக் கொள்கைகளின் முழுவடிவமாகத் திகழ்ந்தவர். பிரதமர் ஜவஹர்லால் நேரு அவரைப் பற்றி கூறுகையில் பாரதத்தின் அடையாளம் என்றே வர்ணித்தார்.
தமது பள்ளிக் கல்வியை பீகாரில் நிறைவு செய்த டாக்டர் பிரசாத் கொல்கத்தா பிரசிடன்சி கல்லூரியில் சேர்ந்தார். கல்வியில் சிறந்து விளங்கிய அவர் எம்.ஏ முதுகலை பட்டப்படிப்பில் முதலிடமும் முதுகலை சட்டப்படிப்பில் முதலிடமும் பெற்றார்.
1911-ல் தமது வழக்கறிஞர் பணியை கொல்கத்தாவில் துவக்கிய அவர் அகில இந்திய காங்கிரசில் உறுப்பினராக சேர்ந்தார். 1916-ல் பாட்னாவிற்கு இடம்பெயர்ந்த டாக்டர் பிரசாத் அங்கு அமைக்கப்பட்ட பீகார் மற்றும் ஒரிசா மாநிலங்களுக்கான உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
1915-ல் கொல்கத்தாவில் முதன்முதலாக காந்தியடிகளை சந்தித்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1920-ல் விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டிற்கு தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1937-ல் காங்கிரஸ் அமைச்சரவைகள் பொறுப்பேற்ற போது சர்தார் வல்லபாய் படேல், ராஜேந்திர பிரசாத், மௌலான ஆசாத் ஆகியோரைக் கொண்ட நாடாளுமன்றக் குழு இந்த அமைச்சரவைகளுக்கு தேவையான வழிகாட்டுதலையும் அறிவுரைகளையும் வழங்கிவந்தது. 1939-ல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைமைப் பொறுப்பில் இருந்து விலக நேரிட்டபோது ராஜேந்திர பிரசாத் அந்த நெருக்கடியை வெற்றிகரமாக சமாளித்தார்.
அரசியல் சாசன நிர்ணய சபையின் தலைவராகவும், உணவு மற்றும் வேளாண் அமைச்சராகவும் பணியாற்றி பெருமை சேர்த்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்தியா குடியரசாக தம்மை அறிவித்துக் கொண்ட நாளில் நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார்.
சுதந்திர இந்தியாவின் இளம் பருவ நாட்களில் அதனை வழிநடத்திய பெருமை டாக்டர் பிரசாத்தையே சேரும். 1962-ம் ஆண்டு தமது குடியரசுத் தலைவர் பணியை நிறைவு செய்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1963-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி மறைந்தார்.
![இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 225px-Dr.Rajendra.Prasad](https://2img.net/h/upload.wikimedia.org/wikipedia/en/thumb/8/82/Dr.Rajendra.Prasad.jpg/225px-Dr.Rajendra.Prasad.jpg)
வடக்கு பீகாரில் ஓர் குக்கிராமத்தில் 1884-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி பிறந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் காந்தியக் கொள்கைகளின் முழுவடிவமாகத் திகழ்ந்தவர். பிரதமர் ஜவஹர்லால் நேரு அவரைப் பற்றி கூறுகையில் பாரதத்தின் அடையாளம் என்றே வர்ணித்தார்.
தமது பள்ளிக் கல்வியை பீகாரில் நிறைவு செய்த டாக்டர் பிரசாத் கொல்கத்தா பிரசிடன்சி கல்லூரியில் சேர்ந்தார். கல்வியில் சிறந்து விளங்கிய அவர் எம்.ஏ முதுகலை பட்டப்படிப்பில் முதலிடமும் முதுகலை சட்டப்படிப்பில் முதலிடமும் பெற்றார்.
1911-ல் தமது வழக்கறிஞர் பணியை கொல்கத்தாவில் துவக்கிய அவர் அகில இந்திய காங்கிரசில் உறுப்பினராக சேர்ந்தார். 1916-ல் பாட்னாவிற்கு இடம்பெயர்ந்த டாக்டர் பிரசாத் அங்கு அமைக்கப்பட்ட பீகார் மற்றும் ஒரிசா மாநிலங்களுக்கான உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
1915-ல் கொல்கத்தாவில் முதன்முதலாக காந்தியடிகளை சந்தித்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1920-ல் விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டிற்கு தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1937-ல் காங்கிரஸ் அமைச்சரவைகள் பொறுப்பேற்ற போது சர்தார் வல்லபாய் படேல், ராஜேந்திர பிரசாத், மௌலான ஆசாத் ஆகியோரைக் கொண்ட நாடாளுமன்றக் குழு இந்த அமைச்சரவைகளுக்கு தேவையான வழிகாட்டுதலையும் அறிவுரைகளையும் வழங்கிவந்தது. 1939-ல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைமைப் பொறுப்பில் இருந்து விலக நேரிட்டபோது ராஜேந்திர பிரசாத் அந்த நெருக்கடியை வெற்றிகரமாக சமாளித்தார்.
அரசியல் சாசன நிர்ணய சபையின் தலைவராகவும், உணவு மற்றும் வேளாண் அமைச்சராகவும் பணியாற்றி பெருமை சேர்த்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்தியா குடியரசாக தம்மை அறிவித்துக் கொண்ட நாளில் நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார்.
சுதந்திர இந்தியாவின் இளம் பருவ நாட்களில் அதனை வழிநடத்திய பெருமை டாக்டர் பிரசாத்தையே சேரும். 1962-ம் ஆண்டு தமது குடியரசுத் தலைவர் பணியை நிறைவு செய்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1963-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி மறைந்தார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்தியக் குடியரசுத் தலைவர்கள்!
![இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Apj-abdul-kalam-300x271](https://2img.net/h/www.latestnewsonline.net/wp-content/uploads/2009/06/apj-abdul-kalam-300x271.jpg)
டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் (25 ஜூலை 2002 - 24 ஜூலை 2007)
தமிழ்நாட்டின் தொன்மைப் புகழ் பெற்ற ராமேஸ்வரத்தில் 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் தேதி பிறந்த டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் சென்னை தொழில்நுட்ப கழகத்தில் விமானவியல் பொறியியலில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர் ஆவார்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் 20 ஆண்டுகள் பணியாற்றிய டாக்டர் அப்துல் கலாம் ராக்கெட் தொழில்நுட்பங்களில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர் ஆவார். நாட்டின் முதலாவது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட செயற்கைகோள் செலுத்து வாகனமான எஸ்எல்வி-3ன் திட்ட இயக்குனராக இவர் ஆற்றிய பணி ரோகிணி செயற்கைகோளை 1980-ல் விண்வெளியில் செலுத்த உதவியதன் மூலம் உலகப் புகழை இந்தியாவிற்கு ஈட்டித்தந்தது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனப் பணியைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தில் பொறுப்பேற்ற டாக்டர் அப்துல் கலாம் உள்நாட்டிலேயே ஏவுகணைகளை உருவாக்கும் பணியை மேற்கொண்டார். அக்னி மற்றும் பிருதிவி ரக ஏவுகணைகளை உள்நாட்டிலேயே வடிவமைத்து வெற்றிகரமாக செயல்படுத்திய பெருமை அவரையே சேரும்.
பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசராகவும், பாதுகாப்பு ஆய்வு மற்றும் அபிவிருத்தி துறையின் செயலாளராகவும் பணியாற்றிய டாக்டர் அப்துல் கலாம் நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஏவுகணைகளுக்கு உகந்த ஆயுத கட்டமைப்பை உருவாக்கினார். பொக்ரானில் நடைபெற்ற இரண்டாவது அணுஆயுத பரிசோதனையிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார். நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பை தற்சார்புடையதாக மாற்றியமைத்த பெருமை டாக்டா அப்துல் கலாமையே சேரும்.
இலகுரக விமானத்திலிருந்து பல்வேறுபட்ட அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த ஏவுகணைகள் வரை டாக்டர் அப்துல் கலாமின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியாவின் 2020-ம் ஆண்டுக்கான தொழில்நுட்ப இயக்கத்தை வடிவமைத்த அறிவியல் அறிஞர் குழுவிற்கு டாக்டர் அப்துல் கலாம் தலைமை வகித்தார். 1999 முதல் 2001 வரை காபினெட் அமைச்சர் தகுதியில் இந்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசராகவும் அவர் பணியாற்றினார்.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் தொழில்நுட்பம் மற்றும் சமுதாய மறுமலர்ச்சி துறையில் பேராசிரியர் பணியையும் ஆர்வத்துடன் டாக்டர் அப்துல் கலாம் மேற்கொண்டிருந்தார். நாட்டின் இளைய தலைமுறையினரின் உள்ளங்களில் உத்வேகத்தை உருவாக்கி தேச வளர்ச்சியில் அவர்களை ஒருமுகப் படுத்தும் தமது கனவை தொடர்ந்து செயல்படுத்தி வரும் பணியை அவர் மேற்கொண்டுள்ளார்.
பத்மபூஷன், பத்மவிபூஷன் மற்றும் நாட்டின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா ஆகிய விருதுகள் டாக்டர் அப்துல் கலாமிற்கு வழங்கப்பட்டு பெருமை பெற்றன. இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக 2002-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி பொறுப்பேற்றுள்ள டாக்டர் அப்துல் கலாம் 2020-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றியமைக்க உறுதிபூண்டுள்ளார்.
டாக்டர் அப்துல் கலாம் எழுதியுள்ள பல்வேறு புத்தகங்கள் இளைஞர்களையும் மாணவர்களையும் பெரிதும் கவர்ந்து பல்வேறு மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு அவரது கனவை நனவாக்க பயன்பட்டு வருகின்றன.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்தியக் குடியரசுத் தலைவர்கள்!
அருமையான தொகுப்பு.இந்தியக் குடியரசு தலைவர்கள் பற்றிய
தகவல்.நன்றி தல....பிறப்பு, இறப்பு ,நடப்பு என காலச்சுவடுகளாய்
இருப்பது அருமை...
தகவல்.நன்றி தல....பிறப்பு, இறப்பு ,நடப்பு என காலச்சுவடுகளாய்
இருப்பது அருமை...
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்தனர்.
» சராசரி இந்தியக் குடிமகன்..
» இந்தியக் கார்களின் தரம்....!
» கருட பகவான் - இந்தியக் கலை
» இந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு!
» சராசரி இந்தியக் குடிமகன்..
» இந்தியக் கார்களின் தரம்....!
» கருட பகவான் - இந்தியக் கலை
» இந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|