புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலச்சுழலும் சோழன் மகளும் Poll_c10காலச்சுழலும் சோழன் மகளும் Poll_m10காலச்சுழலும் சோழன் மகளும் Poll_c10 
65 Posts - 63%
heezulia
காலச்சுழலும் சோழன் மகளும் Poll_c10காலச்சுழலும் சோழன் மகளும் Poll_m10காலச்சுழலும் சோழன் மகளும் Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
காலச்சுழலும் சோழன் மகளும் Poll_c10காலச்சுழலும் சோழன் மகளும் Poll_m10காலச்சுழலும் சோழன் மகளும் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
காலச்சுழலும் சோழன் மகளும் Poll_c10காலச்சுழலும் சோழன் மகளும் Poll_m10காலச்சுழலும் சோழன் மகளும் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
காலச்சுழலும் சோழன் மகளும் Poll_c10காலச்சுழலும் சோழன் மகளும் Poll_m10காலச்சுழலும் சோழன் மகளும் Poll_c10 
1 Post - 1%
viyasan
காலச்சுழலும் சோழன் மகளும் Poll_c10காலச்சுழலும் சோழன் மகளும் Poll_m10காலச்சுழலும் சோழன் மகளும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலச்சுழலும் சோழன் மகளும் Poll_c10காலச்சுழலும் சோழன் மகளும் Poll_m10காலச்சுழலும் சோழன் மகளும் Poll_c10 
257 Posts - 44%
heezulia
காலச்சுழலும் சோழன் மகளும் Poll_c10காலச்சுழலும் சோழன் மகளும் Poll_m10காலச்சுழலும் சோழன் மகளும் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
காலச்சுழலும் சோழன் மகளும் Poll_c10காலச்சுழலும் சோழன் மகளும் Poll_m10காலச்சுழலும் சோழன் மகளும் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
காலச்சுழலும் சோழன் மகளும் Poll_c10காலச்சுழலும் சோழன் மகளும் Poll_m10காலச்சுழலும் சோழன் மகளும் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
காலச்சுழலும் சோழன் மகளும் Poll_c10காலச்சுழலும் சோழன் மகளும் Poll_m10காலச்சுழலும் சோழன் மகளும் Poll_c10 
17 Posts - 3%
prajai
காலச்சுழலும் சோழன் மகளும் Poll_c10காலச்சுழலும் சோழன் மகளும் Poll_m10காலச்சுழலும் சோழன் மகளும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காலச்சுழலும் சோழன் மகளும் Poll_c10காலச்சுழலும் சோழன் மகளும் Poll_m10காலச்சுழலும் சோழன் மகளும் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
காலச்சுழலும் சோழன் மகளும் Poll_c10காலச்சுழலும் சோழன் மகளும் Poll_m10காலச்சுழலும் சோழன் மகளும் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
காலச்சுழலும் சோழன் மகளும் Poll_c10காலச்சுழலும் சோழன் மகளும் Poll_m10காலச்சுழலும் சோழன் மகளும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
காலச்சுழலும் சோழன் மகளும் Poll_c10காலச்சுழலும் சோழன் மகளும் Poll_m10காலச்சுழலும் சோழன் மகளும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலச்சுழலும் சோழன் மகளும்


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 15, 2010 6:53 pm

என் மனைவியும் பிள்ளைகளும் அவளது சொந்தத்தில் ஒரு வளைகாப்பு நிகழ்ச்சிக்குக் போயிருந்தார்கள். எனக்கு இது போன்ற சடங்கு சம்பிரதாயங்களில் விருப்பமில்லையாதலால் நான் போகவில்லை.
"வளைகாப்பு முடிந்து அம்மா வீட்டில் இரு நாளை நான் வந்து கூட்டி வருவேன் "என்று சொல்லியிருந்தேன்.

இரவு தனிமையில் வீட்டில் இருக்க என்னவோ போலத்தான் இருந்தது. பயம் ஒன்றும் இல்லை என்று சொல்லிக்கொண்டாலு்ம் பிள்ளைகளின் கலகலப்பும் சத்தமும் இல்லாததால் நிசப்தமாக இருந்த வீடு முதன் முதலாக எனக்கு லேசாக கிலி ஏற்படுத்தியது உண்மை தான். சீலிங் ஃபேனிலிருந்து கிடுகிடு சத்தம் இதற்கு முன் கேட்டதில்லை. பேசாமல் படத்துக்கு போகலாம் என்றால் பக்கத்து தியேட்டரில் "யாவரும் நலம் "ஓடிக்கொண்டிருக்கிறது. பதிவெழுதலாம் என்று உட்கார்ந்தால், நிஜமாகவே பேய் இருக்கிறதா? என்ற எனது பதிவுக்கு கோப்பெருஞ்சோழன், கென்னடி, லிங்கன் எல்லாம் பின்னூட்டம் எழுதியிருந்ததால் அப்பீட் ஆகி விட்டேன். டீவியை போட்டால் ஜக்கம்ம்மா..தாயம்மா என்று அருந்ததி விளம்பரம். எல்லாம் சேர்ந்து என் உள்ளுணர்வில் ஏதோ ஒன்று உறுத்தவே டீவியை ஆஃப் செய்து விட்டு மேஜை மேல் கிடந்த ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத்தொடங்கினேன்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 15, 2010 6:54 pm

வெளியே லேசாக மழைச்சாரல் இட தொடங்கியது. ஆனால் காற்று பலமாக வீசியது. ஜன்னல் திரைச்சிலையும், கதவும் படபட வென அடித்ததால் ஜன்னலை இழுத்து அடைக்கப் போனேன். பளிச்சென ஒரு மின்னல், தொடர்ந்து மின்சாரம் போய்விட்டது. பயங்கர இடியோசையத்தொடர்ந்து சோ...வென பேய் மழை தொடங்கியது. கும்மிருட்டு.

"டார்ச் லைட் எங்கே வைத்தேன் என்று தெரியவில்லையே,அலமாரியின் மேல் தட்டில் வைத்தேனோ?" என்று இருட்டில் துழாவிய போது ...

"ஹே..இங்கிருந்த அலமாரி எங்கே? "
ஆச்சரியத்தை பயம் முந்திக்கொண்டது. பயத்தில் இரண்டடி எடுத்து வைத்ததும் எதிலோ போய் முட்டிக்கொண்டேன் .அது ஒரு ஸ்டூல் போல இருந்தது.
"என் வீட்டில் ஏது ஸ்டூல்? "
யோசிக்கும் முன் நான் போய் இடித்ததில் ஸ்டூல் தடக்கென சரிந்து விழவும் அதன் மேல் நின்று கொண்டிருந்த யாரோ என் மேல் சாய்ந்தது போல தோன்றியது. பயத்தில் எனக்கு இதயம் வாய்வெளியே வெளியே வந்து விடும் போல் இருந்தது.இதயம் துடிக்கும் ஓசை செல்போன் ஒலிப்பது போல் கேட்டது.

"ஆ.. செல் போன்! "
பாக்கட்டில் இருந்த செல்போன் ஞாபகம் வந்ததும், அதை எடுத்து வெளிச்சம் உண்டாக்கி பார்த்தேன். அதிர்ச்சியின் உச்சகட்டம் என்பார்களே அது இது தான். என் மேல் சரிந்து தொங்கிகொண்டிருந்தது ஒரு பெண். ஆம் "தொங்கிக் கொண்டிருந்தது."





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 15, 2010 6:54 pm

கழுத்தில் முறுக்கப்பட்ட சேலையின் ஒரு நுனி. மறு புறம் உத்தரத்தில்.

"ஐயோ தூக்கு மாட்டிக்கொண்டிருக்கிறாள்! யாரிந்த பெண் ?"

யோசிக்கும் முன் தாங்கிப் பிடித்து விட்டு ஸ்டூலை நிமிர்த்தி மெல்ல கழுத்து சுருக்கை விடுவித்தேன்.நல்ல வேளை உயிர் போகவில்லை. "கக் ,கக் "கென்று இருமிவிட்டு மலங்க மலங்க விழித்தபடி திகிலாய் பார்த்துக்கொண்டிருந்த மிக அழகான அந்த பெண்ணை இதற்கு முன் நான் எந்த விளம்பரப் படத்திலும் பார்த்ததே இல்லை. அதுவும் "எப்படி பூட்டியிருந்த என் வீட்டுக்குள்?"

"என் வீடு.!...." மங்கிய மொபைல் வெளிச்சத்தில் பார்த்த போது என் வீட்டின் தோற்றம் வெகுவாக மாறித்தோன்றியது. கல் சுவரும் மர வேலைப்பாடுகளும் மிகுந்த அரண்மனை மாளிகை போல் இருந்த்தது. ஏதோ புராதன கலைப்பொருள் கண்காட்சி போன்ற அறை. அங்கே இருந்த எந்த பொருளும் எனக்கு பரிச்சயமில்லை. அந்த அழகு மங்கை உட்பட. எதோ சரித்திர நாடக மேடை போல் இருந்தது.அவளும் இளவரசி வேடத்தில்.

எனக்கு தலை சுற்றியது போல் அவளுக்கும் சுற்றியிருக்க வேண்டும்.

"என்ன எழில் நம்பி எப்படி உயிர் பிழைத்தீர்கள்? இது என்ன உடை? உடை வாளுக்குப் பதில் இதென்ன ஒளிப் பேழை?" முதன் முதலாய் பவள வாய் திறந்தாள்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 15, 2010 6:55 pm

எவ்வளவு தடவை தான் அதிர்சி அடைவது ஒரு விவஸ்தை இல்லையா? மெல்லமாக அவளிடம் பேச்சுக்கொடுத்து நான் தெரிந்து கொண்ட விஷயங்களின் சாராம்சம் இது தான்.

இப்போது நான் இருப்பது பதினொராம் நூற்றாண்டாம். அந்த பெண், நலங்கிள்ளி என்ற சோழ மன்னனின் மகளாம் பெயர் கலையரசியாம். டான்ஸ் மாஸ்டர் எழில் நம்பியோடு காதல் . விஷயம் நலங்கிள்ளிக்கு தெரிந்தால் தலை கிள்ளி விடுவான். ஒரு நாள் இரவு ஊரை விட்டு ஓடிப் போய் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்ய திட்டம். கலையரசி மேக் அப் போட்டு வருவதற்கு தாமதமாகி விட்டது. அந்தப்புரத்துக்கு அருகே குதிரையுடன் பதுங்கியிருந்த எழில் நம்பியை ராசாவின் போலீஸ் சந்தேகத்தின் பேரில் அரெஸ்ட் செய்து விசாரித்ததில் குட்டு உடைந்து எழில் நம்பியை, நம்பிக்கை துரோகத்திற்காக அரசர் மேலே டிக்கெட் கொடுத்து அனுப்பி விட்டார். மகளுக்கு வீட்டுச்சிறை. அழுது புலம்பிய அவள் கடைசியில் காதலனைச்சேர சேலையில் கழுத்தை மாட்டிய போது தான் எனது என்ட்ரி. இதில் நான் வேறு அழகாக இருந்ததால் நான் தான் எழில் நம்பி என்றும் அவளை அழைத்துப் போகவே வந்திருப்பதாகவும் நம்பிக் கொண்டு இருக்கிறது இந்த பேதை

சரி நான் எப்படி பத்து நூற்றாண்டுகள் ஸ்லிப் ஆகி பேக் அடித்து இங்கு நிற்கிறேன்? கழிந்த வாரம் யூ ட்யூபில் பார்த்த காலத்தைப் பற்றிய ஒரு டாகுமென்ட்ரியிலிருந்து நான் அனுமானித்தது இது .

காலம் என்பது மூளையால் உணரப்படும் ஒரு தோற்றம் தானாம். ஊட்டி மலையின் வளைந்த ரோடு போல காலம் போய்கிட்டே இருந்தாலும், சில வொர்ம் ஹோல் வழி ஒரு வளைவில் இருந்து சுற்றாமல் சறுக்கி ஷார்ட் கட்டில் முந்திய வளைவுக்கு போவது போல போகக் முடியுமாம். அப்படி ஒரு காலத்துளைக்குள் விழுந்து பத்து நூற்றாண்டுகள் முன்பு அதே இடத்தில் இருந்த ஒரு அரண்மனை அந்த புரத்திற்குள் வந்து விட்டேன் போலிருக்கிறது.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 15, 2010 6:57 pm

அது சரி! வெளியே காவலாளிகளின் காலடி சத்தம் கேக்குது.
"அரண்மனை அந்த புரத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் நீ உன் வூட்டுக்கு எப்படி போவாய்? சங்கு தான் மவனே! "என உள்ளுக்குள் உடுக்கை ஒலி கேட்டது

நினைத்தாலே முதுகுத்தண்டு ஜில்லாகி விட்டது.
"ஃபோன் செய்து போலீஸ் உதவி கேட்டால் ?...வேண்டாம் ரெய்டு செய்து வேறு கேசில் உள்ளே தள்ளி விடுவார்கள்".
"மனைவிக்கு ஃபோன் செய்தால், அதுக்கு ராஜாவே பெட்டர்."
பக்கத்து வீட்டு முருகேசுக்கு போன் செய்து நிலைமையை சொல்லலாம் என்றால் ஃபோனில் டயல் டோனே கேட்க வில்லை.ஆனால் கதவை யாரோ தட்டும் ஓசை தெளிவாக கேட்டது. காவலாளிகள் குரலும் "ஹலோ"என்று அழைப்பது போல் கேட்டது.

என்ன செய்ய? இப்படி வந்து வசமாக மாட்டிக் கொண்டேனே! உயிர் அப்போதே பெட்டி படுக்கை யெல்லாம் தயாராக கையில் எடுத்துக்கொண்டது.
"வேறு வழியில்லை அன்பே அந்த சேலையை மீண்டும் உத்தரத்தில் கட்டுங்கள்.நாம் இருவரும் ஒன்றாக போய் விடலாம்"என்று அவள்.

"ஏய் பைத்தியம் . என் பெண்டாட்டி புள்ளைக்கு என்ன பதில் சொல்வேன். செத்தாலும் அப்படி ஒரு காரியம் செய்ய மாட்டேன்"

கதவு இப்போது முன்னை விட பலமாக தட்டப்பட்டது. தலைக்கு மேல் வெள்ளம் போனால் சாண் என்ன? முழம் என்ன? கண்ணை மூடிக்கொண்டு பீதியில் உறைந்து நின்றேன். அதில் அவளும் பயத்தில் என்னை கட்டிக்கொண்டு நின்றதை ரசிக்கும் மனநிலையில்லை.

திடீரென ஒரு மின்னல் .தொடர்ந்து இடிசத்தம். கண் திறந்து பார்த்தால் காலம் நிகழ் காலமாகியிருந்தது .இடம் என் வீடு. அட கலையரசி கூட என்னுடன் இங்கே வந்து விட்டாள். CFL பல்பு ஒளியில் அவள் அழகு ஜொலித்தது. முக்கியமாக அவள் ஒரு நகை கடை போலிருந்தாள். ஒரு பெரிய ஜூவல்லரி திறப்பது பற்றிய யோசனையில் நான் இருந்த போது

கதவு தட்டப் பட்டது. வெளியே எந்த நூற்றாண்டு என்று கன்ஃபுயூசன் தான். எதுவானாலும் மின்னலும் இடியும் உறுதி. எனக்கு மயக்கமே வரும் போலாகி விட்டது.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 15, 2010 7:03 pm

இப்படி நான் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தின் கதை மிக சுவாரசியமாக போய்க் கொண்டிருந்த நேரம் காலிங் பெல் அடித்தது. புத்தகத்தை மனமில்லமல் கீழே வைத்து விட்டு கதவைத்திறந்தால் மனைவியும் பிள்ளைகளும்.

"ஏன்! நாளை வந்தால் போதுமென்று தானே சொல்லியிருந்தேன்"

"உங்களை இங்கு தனியே விட்டு விட்டு நான் நிம்மதியாக இருக்க முடியுமா? அதான் வந்துவிட்டேன். இதென்ன கண்றாவி புக் சரித்திர கதையா சயின்ஸ் பிக்ஸனா? இதெல்லாம் படிச்சுட்டு நடு ஜாமத்திலே அலறியடிச்சுகிட்டு எழுந்து உட்காரணும், அந்த குப்பையை தூக்கிப் போட்டுவிட்டு தூங்குங்கள் ".





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக