புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_vote_lcapஇருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_voting_barஇருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_vote_rcap 
81 Posts - 65%
heezulia
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_vote_lcapஇருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_voting_barஇருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_vote_rcap 
27 Posts - 22%
வேல்முருகன் காசி
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_vote_lcapஇருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_voting_barஇருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_vote_lcapஇருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_voting_barஇருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_vote_rcap 
5 Posts - 4%
eraeravi
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_vote_lcapஇருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_voting_barஇருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_vote_lcapஇருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_voting_barஇருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_vote_lcapஇருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_voting_barஇருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_vote_lcapஇருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_voting_barஇருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_vote_lcapஇருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_voting_barஇருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_vote_rcap 
224 Posts - 37%
mohamed nizamudeen
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_vote_lcapஇருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_voting_barஇருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_vote_lcapஇருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_voting_barஇருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_vote_lcapஇருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_voting_barஇருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_vote_lcapஇருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_voting_barஇருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_vote_lcapஇருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_voting_barஇருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_vote_lcapஇருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_voting_barஇருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_vote_lcapஇருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_voting_barஇருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_vote_lcapஇருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_voting_barஇருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருண்ட வீடு - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 2:10 pm

First topic message reminder :


1. தலைவியின் தூக்கம், பால் கறப்பவன் தவறு, தலைவனின் சோம்பல்.


கடலின் மீது கதிரவன் தோன்றிப்
படரும் கதிர்க்கை பாய்ச்சிச் சன்னலின்
வழியே, கட்டிலில் மங்கையை எழுப்பினான்.
விழிதிறந்து மங்கை, மீண்டும் துயின்றாள்.

*****

அப்போது மணியும் ஆறரை ஆனதால்
எப்பொழு தும்போல் இரிசன் என்ற
மாடு கறப்பவன் வந்து கறந்து
பாலொடு செம்பை, மூலையில் கட்டிய
உறியில் வைக்காது-உரலின் அண்டையில்
வைத்துப் போனான். மங்கையின் கணவனோ,
சொத்தைப் பல்லைச் சுரண்டிய படியே
சாய்வுநாற் காலியில் சாய்ந்தி ருந்தான்.

2. குழந்தையின் அழுகை, பையனின் பொய்; தந்தையின் போக்கு.

தாயோ துயில்வதால் தனிமை பொறாமல்
நோயுடன் குழந்தை நூறு தடவை
அம்மா என்றும் அப்பா என்றும்
கம்மிய தொண்டையால் கத்திக் கிடந்தது!

*****

பெரிய பையன் பிட்டையும் வடையையும்
கருதி, முதலில் கையால் சாம்பலைத்
தொட்டுப் பல்லையும் தொட்டே, உரலின்
அருகில் இருந்தபால் செம்பை, விரைவில்
தூக்கி, முகத்தைச் சுருக்காய்க் கழுவினான்;
பாக்கி இருப்பது பால்என் றறிந்து
கடிது சென்றே "இடையன் இப்படிச்
செம்பின் பாலைச் சிந்தினான்" என்று,
நம்பும் படியே நவின்றான் தந்தைபால்!
தந்தையார் "நாளைக் கந்த இடையன்
வந்தால் உதைப்பதாய் வாய்மலர்ந்" தருளினார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 2:24 pm


24. இரவு பத்து மணி; தலைவர் திரும்பி வருகிறார்.


எண்ணெய் இன்றி இருண்டன விளக்குகள்.
இருண்ட வீட்டில் இருளும் குழந்தையும்
அன்றி, மற்றை யனைவரும் துயின்றனர்.
குற்றியி ராகக் குழந்தை கிடந்தது.
தூற்றும் பழியை ஏற்க அஞ்சி
நள்ளிரு ளானது பிள்ளை சாகாமல்
தன்மடி தனிலே தாங்கிக் கிடந்தது.
சரியாய் அப்போது - இரவு பத்துமணி;
தலைவர் திரும்பித் தம்வீடு நோக்கினார்.
தலைவா சலில்நாய் தான் வரவேற்றது.
வீடு மூடியும் விளக்கவிந் தும்இருட்
காடுபோல் இருப்பது கருதிக் கனைத்தார்.
கனைப்பது கேட்டு மனையாள் வந்து, தாழ்
திறப்பாள் அல்லவா? திறக்கவே யில்லை.
நாயை நோக்கி நவின்றார் தலைவர்
'நீயேன் தெருவில் நிற்கிறாய்' என்று.
நாய் அது கேட்டு 'ஞய்ஞய்' என்றதாம்.
அதற்கும் வழியில்லை அழகிய வீட்டில்.

*****

கதவைத் தட்டினார் கையின் விரலால்!
பதியத் தட்டியும் பார்த்தார் பிறகு!
அழுந்தத் தட்டினார் அங்கை யாலே!
அடித்தார் இடித்தார் படபட வென்றே!
எட்டி உதைத்தார் இருநூறு தடவை!
முதுகைத் திருப்பி முட்டியும் பார்த்தார்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 2:25 pm

25. அண்டை அயலார்க்கு இடையூறு!
சினத்தோடு வந்தவர் சிரிப்போடு திரும்பினர்!


எதுவும் பயன்பட வில்லை ஆயினும்
அண்டை அயலில் அருகில் இருந்தவர்
தக்கத் தரிகிடத் தாளம் கேட்டுத்
தூக்கங் கலைந்ததால் சூழ்ந்தோடி வந்து
மூக்கில் எரிச்சலை முன்னே நிறுத்தி
என்னாங் காணும் இந்நேரத்தில்
தச்சுப் பட்டறை வைச்சது போலவும்
அச்சுப் பீப்பாய் அடிப்பது போலவும்
இப்படித் தட்டி இன்னல் விளைக்கிறீர்?
உள்ளே இருப்பவர் உயிரோ டிருந்தால்
கொள்ளுக் கட்டிய குதிரை போல
வாய்திறக் காமலா வம்பு செய்வார்கள்?
என்று கூறி இரைச்சலிட் டார்கள்.
கதவு மிகவும் கனத்த தென்றார்.
"எழுந்து திறப்பாள் என்பதை நீவிர்
எதிர்பார்த் திடவே யில்லை போலும்,
கதவை உடைப்பதே கருத்துப் போலும்!"
என்று சிரித்தே ஏகினார் வந்தவர்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 2:25 pm


26. கதவு திறக்கப்பட்டது. தலைவர்க்குப் பசி. கூச்சலிட்டுப் பார்த்தார்.


மேலும் கதவிடிப்பு வேலை தொடங்கிற்று.
பனிரண்டு மணிக்குத் தனிப்பெருந் தலைவியின்
சிறுவிரல் தன்னைத் தின்ற திருட்டெலி
பெருவிரல் தன்னைப் பிடுங்கும் போதுதான்
விழித்தாள். காதில் வீதியில் தொலைவில்
புழுவொன்று சருகுமேல் புரள்வது போன்ற
ஓசை தன்னை உற்றுக் கேட்டாள்.
ஆசை ஆம்படை யானா என்றே
மெதுவாய் எழுந்து மெதுவாய் நின்று
மெதுவாய்ப் பெயர்ந்து மெதுவாய் நடந்தே
கோட்டை நடுவின் வேட்டுப் போலத்
தலைவர் இடிக்கும் தடித்த கதவைத்
திறந்து விட்டுத் திரும்பி வந்து
நிறைமுக் காட்டோ டு நீட்டிப் படுத்தாள்.
தலைவி விழிப்புடன் தலையசைப் பதையும்
முதல்மகன் கொண்ட முழுத்தூக் கத்தையும்
இருட்டில் விளக்கை ஏற்றிப் பார்த்த
தலைவர் "ஏனடா தம்பி சாப்பாடு-
உண்டா இல்லையா உரையடா" என்றார்.
"சாப்பாட்டுக் கடை சாத்தியாய் விட்டது.
போய்ப் பார்த்துத்தான் புறப்பட்டு வந்தேன்"
என்று கூறினார்! ஏதும் பதிலில்லை.
அத்தனை பேரும் அழிந்தா போனீர்?
ஒருவரும் இல்லா தொழிந்தா போனீர்?
என்று கூறி இரைச்ச லிட்டார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 2:26 pm

27. சாப்பாடு இல்லை என்று தெரிந்தபின்,
சாப்பிட மாட்டேன் என்று சத்தியம் செய்கிறார் தலைவர்.


அமைவாய் விளக்கை அங்கையில் தூக்கிச்
சமையல் அறைக்குத் தாமே சென்றார்.
ஏன மெல்லாம் இறக்கி இறக்கிப்
பூனை போலப் புரட்டித் தள்ளிப்
பொரியற் சட்டியைப் போட் டுடைத்துச்
சரியல் சட்டியைத் தட்டென்று போட்டே
எண்ணெய்ச் சட்டியை எடுத்துச் சாய்த்து
வெண்ணெய்த் தாழியை விரியத் தள்ளிச்
சோற்றுப் பானை துடைக்கப் பட்டதைக்
குழம்புச் சட்டி கழுவப் பட்டதைத்
தெரிந்து, பசியோ திருதிரு என்று
எரிவு கொள்ள, இழவோ என்று
திறந்த வற்றைத் திறந்தே போட்டுப்
பெருச்சா ளிக்குப் பிழைப்புண் டாக்கிக்
கூடத் தினிலே குந்திப் பார்த்தும்
பாடிப் பார்த்தும் படிந்து பார்த்தும்
எதுவும் நடவா தென்று தெரிந்தபின்
தலைவர் ஓர் உறுதி சாற்ற லானார்:
சாப்பிட மாட்டேன் சத்தியம் என்று!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 2:26 pm

28. திருடன் வந்து, அலமாரி திறந்து, தன்செயலை அமைதியோடு செய்கிறான்.

சரியாய் ஒருமணி இரவில் தலைவர்
தூக்கமும் பசியின் துடிப்பும் விழிப்பும்
இரங்கத் தக்கவாய் இருந்தன. தலைவியோ
கனவால் விழிப்பதும் கண்ணயர் வதுமாய்
இருந்தாள். பையன் சொறிவான், தூங்குவான்!
இந்த நிலைமையில் இவர்கள் இருக்கையில்
திருடன் ஒருவன் தெருப்பக்கத்து
மாடிமேல் ஏறி ஆடா தசையாது
முற்றத்து வழியைப் பற்றி இறங்கினான்.
அவனோ கறுப்புடை அறையிற் கட்டிப்
பிறைபோற் கத்தியும் பிடித் திருந்தான்!
ஓசை யின்றி உள்ளறை புகுந்தான்!
படர்ந்தெரி விளக்கைப் பளிச்சென் றவித்தான்!
அலமாரி தன்னை அங்கையால் தடவினான்!
சாவி யில்லை; தாவி நகர்ந்து
தலைவியின் தலைமாடு தடவினான்; இல்லை!
சாய்வு நாற் காலியில் சரிந்திருந் தவரின்
அண்டையில் இருந்த குண்டுப் பெட்டிமேல்
இருந்தது சாவி; எடுத்துச் சென்றே
அலமாரி தன்னைக் கிலுக்கென்று திறந்தான்!
வீட்டுநாய் அதனைக் கேட்டுக் குலைத்தது!
தலைவர் விழித்தார். தலைவி விழித்தாள்.
பெரியவன் விழித்தான். தெருவில் தொலைவில்
எதையோ கண்டு பதைத்தது நாய் என்று
மதமத வென்று மல்லாந் திருந்தனர்!
சிறிது நேரம் சென்ற பின்னர்
நிறையப் பணத்தாள் நிறையப் பணங்கள்
போட்டுக் கட்டிய பொத்தற் பைகளைக்
கையில் தூக்கினான் கரிய திருடன்.
பொத்தல் வழியே பொத்தென்று சிற்சில
வெள்ளிக் காசுகள் வீழ்ந்த ஓசை
அனைவர் காதையும் அசைத்த தேனும்
"தலைவர் எதையோ தடவு கின்றார்"
என்று தலைவி எண்ணி யிருந்தாள்.
"தலைவி பாக்குத் தடவினாள்" என்று
தலைவர் நினைத்துச் "சரி" என்றிருந்தார்.
பெருச்சாளி என்று பெரியவன் நினைத்தான்.
திருடன் துணியொன்று தேடி, அதிலே
பெரும்பணப் பையைப் பெயர்த்து வைத்துக்
கட்டி இடது கையிற் பிடித்து
வலது கையில் வைத்தான் கத்தியை!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 2:26 pm


29. திருடனைத் தேள் கொட்டிற்று. திருடன் இருப்பதைத் தலைவர்
அறிந்து அங்கிருந்த விளையாட்டுத் துப்பாக்கியை எடுத்தார்.


அவன்தன் காலை அயலில் பெயர்த்தான்;
கெளவிற்றுக் காலைக் கடுந்தேள் ஒன்று.
கடுந்தேள் அகற்றக் காலை உதறினான்.
தகரப் பெட்டியில் தன்கால் பட்டதால்
தடாரென் றெழுந்த சந்தடிக் கிடையில்
கள்ளன் உட்புறக் கதவில் நுழைந்தான்.
தலைவர் சடுதியில் விளக்கை ஏற்றினார்.
கதவில் தீருடன் பதுங்கி யிருப்பது
வெளியில் இடுக்கால் வெளிப்பட் டதனால்
தலைவர் தமது தலையைச் சாய்த்துக்
கத்தியைக் கள்ளனைக் கண்ணால் பார்த்துப்
பின்வாங்கும் போது பெட்டி யின்மேல்
கைத்துப் பாக்கி வைத் திருப்பதைக்
கண்டார்; அதனைக் கையில் எடுத்தார்.
விளையாட் டுக்கு வெடிப்ப தாயினும்
அந்தத் திருடனை அஞ்ச வைக்கலாம்
என்று தலைவர் எண்ணிக் கொண்டார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 2:27 pm


30. விளையாட்டுத் துப்பாக்கியை மெய்யானதென்று திருடன் நடுங்கினான்.
ஆனால் பையன், திருடனை உண்மையுணரச் செய்துவிட்டான்.


அந்த வேளையில் அருமைத் தலைவி
"கள்ளனா?" என்று வெள்ளையாய்க் கேட்டாள்.
கள்ளன் அதுகேட்டுக் கதவிற் பதுங்கினான்;
கைத்துப் பாக்கியைக் கண்டு நடுங்கினான்.
"என்னைச் சுடாதீர்!" என்று கூறிப்
பணத்தைக் கொடுத்துப் பயணப் படவும்
பண்ணினான் முடிவு! பையன் அப்போது
நிலைமை யாவும் நேரில் அறிந்தும்,
பொய்த் துப்பாக்கியை மெய்த்துப் பாக்கி
என்று நினைக்கும் தன்னருந் தந்தையை
மடையன் என்றெண்ணி வாளா யிருந்தான்.
"எடுத்ததை வைத்துப் பிடியடா ஓட்டம்
சுடுவேன் பாரடா சுடுவேன்" என்று
கைத்துப் பாக்கியைக் காட்டினார் தலைவர்.
அதுகேட்டுப் பெரியவன் "அப்பா! அப்பா!
அத்துப் பாக்கி பொய்த் துப்பாக்கி;
தக்கை வெடிப்பது தானே? என்றான்.
திருடனுக்கு அச்சம் தீர்ந்து போயிற்று.
மெதுவாய் நடந்து வெளியிற் செல்கையில்
இதுவா தெருவுக்கு ஏற்ற வழியென்று
திருடன் கேட்டுச் சென்று மறைந்தான்.
திருடன் கையோடு செல்வமும் மறைந்தது.
தலைவியும் பையனும் தலைவர் தாமும்
குலைநடுக் கத்தால் கூவா திருந்தனர்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 2:28 pm

31. திருடன் போனது தெரிந்தபின், தலைவருக்கு எரிச்சல் வந்தது.
அந்த எரிச்சல் தலைவியைக் கொன்றது.

திருடன் அந்தத் தெருவைவிட் டகன்றதை
ஐய மின்றி அறிந்த பின்னர்,
தலைவர் அலறத் தலைப்பட்டார்; "அடே
கொலைஞனே எனக்குக் குழந்தையாய் வந்தாய்
கைத்துப் பாக்கியால் கள்ளன் நடுங்கினான்
பொய்த்துப் பாக்கி பொய்த்துப் பாக்கி
என்றாய், சென்றான் பொருளையும் தூக்கி"
என்று கூறி, எதிரில் இருந்த
சந்தனக் கல்லைச் சரேலென எடுத்துப்
படுத் திருந்த பையனை நோக்கி
எறிந்தார். பசியும், எரிபோல் சினமும்,
மடமையும் ஒன்றாய் மண்டிக் கிடந்த
தலைவன் எறிந்த சந்தனக் கல்லோ
குறிதவறிப் போய்க் கொண்ட பெண்டாட்டி
மார்பினில் வீழ்ந்தது; மங்கை "ஆ" என்று
கதறினாள்; அஃதவள் கடைசிக் கூச்சல்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 2:28 pm


32. பெரிய பையன் இல்லை. அயலார் நலம் விசாரிக்கிறார்கள்.


குறிதவ றாமல் எறிந்த முக்காலி
பெரியவன் தலைமேல் சரியாய் வீழ்ந்தது.
தலைவர் பின்னும் தாம்விட் டெறிந்த
விறகின் கட்டை வீணே; ஏனெனில்
முன்பே பெரியவன் முடிவை அடைந்தான்!
அறிவிலார் நெஞ்சுபோல் அங்குள விளக்கும்
எண்ணெய் சிறிதும் இல்லா தவிந்தது.
வீட்டின் தலைவர் விளக்கேற்று தற்கு
நெருப்புப் பெட்டியின் இருப்பிடம் அறியாது
அன்பு மனைவியை அழைப்பதா இல்லையா
என்ற நினைப்பில் இருக்கையில், அண்டை
அயலார் தனித்தனி அங்கு வந்தார்கள்.
எதிர்த்த வீட்டான் என்ன வென்றான்.
திருடனா என்றான் சீனன். விளக்கை
ஏற்றச் சொன்னான் எட்டி யப்பன்.
எதிர்த்த வீட்டின் எல்லிக் கிழவி,
குழந்தை உடல்நலம் குன்றி இருந்ததே
இப்போ தெப்படி என்று கேட்டாள்.
விளக்கேற் றும்படி வீட்டுக் காரியை
விளித்தார் தலைவர்; விடையே இல்லை!
என்மேல் வருத்தம் என்று கூறிப்
பின்னர் மகனைப் பேரிட் டழைத்தார்;
ஏதும் பதிலே இல்லை. அவனும்
வருத்தமாய் இருப்பதாய் நினைத்தார்.
அயல்வீட் டார்கள் அகல்விளக் கேற்றினார்.
கிழவி முதலில் குழந்தையைப் பார்த்து
மாண்டது குழந்தை மாண்டது என்றாள்!
மனைவியும் பையனும் மாண்ட சேதி
அதன்பின் அனைவரும் அறிய லாயினர்.
தெருவோர் வந்து சேர்ந்தார் உள்ளே.
ஊரினர் வீட்டின் உள்ளே நுழைந்தார்.
அரச காவலர் ஐந்துபேர் வந்தார்.
ஐவரும் நடந்ததை ஆராய்ந் தார்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 2:29 pm


33. கல்வியில்லா வீடு இருண்ட வீடு.


எல்லா நலமும் ஈந்திடும் கல்வி
இல்லா வீட்டை இருண்டவீ டென்க!
படிப்பிலார் நிறைந்த குடித்தனம், நரம்பின்
துடிப்பிலார் நிறைந்த சுடுகா டென்க!
அறிவே கல்வியாம்; அறிவிலாக் குடும்பம்
நெறி காணாது நின்ற படிவிழும்!
சொத்தெலாம் விற்றும் கற்ற கல்வியாம்
வித்தால் விளைவன மேன்மை, இன்பம்!
செல்வம் கடல்போல் சேரினும் என்பயன்?
கல்வி இல்லான் கண் இலான் என்க.
இடிக்குரற் சிங்கநேர் இறையே எனினும்
படிப்பிலாக் காலை நொடிப்பிலே வீழ்வான்!
கல்லான் வலியிலான்; கண்ணிலான்; அவன்பால்
எல்லா நோயும் எப்போது முண்டு.
கற்க எவரும்; எக்குறை நேரினும்
நிற்காது கற்க; நிறைவாழ் வென்பது
கற்கும் விழுக்காடு காணும்; பெண்கள்
கற்க! ஆடவர் கற்க! கல்லார்
முதிய ராயினும் முயல்க கல்வியில்!
எதுபொருள் என்னும் இருவிழி யிலாரும்
படித்தால் அவர்க்குப் பல்விழி கள்வரும்.
ஊமையுங் கற்க; ஊமை நிலைபோம்!
ஆமைபோல் அடங்கும் அவனும் கற்க,
அறத்தைக் காக்கும் மறத்தனம் தோன்றும்!
கையும் காலும் இல்லான் கற்க
உய்யும் நெறியை உணர்ந்துமேம் படுவான்.
இல்லார்க் கெல்லாம் ஈண்டுக்
கல்விவந் ததுவெனில் கடைத்தேறிற் றுலகே!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக