புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹதீஸ்கள் Poll_c10ஹதீஸ்கள் Poll_m10ஹதீஸ்கள் Poll_c10 
81 Posts - 67%
heezulia
ஹதீஸ்கள் Poll_c10ஹதீஸ்கள் Poll_m10ஹதீஸ்கள் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஹதீஸ்கள் Poll_c10ஹதீஸ்கள் Poll_m10ஹதீஸ்கள் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
ஹதீஸ்கள் Poll_c10ஹதீஸ்கள் Poll_m10ஹதீஸ்கள் Poll_c10 
5 Posts - 4%
viyasan
ஹதீஸ்கள் Poll_c10ஹதீஸ்கள் Poll_m10ஹதீஸ்கள் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஹதீஸ்கள் Poll_c10ஹதீஸ்கள் Poll_m10ஹதீஸ்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹதீஸ்கள் Poll_c10ஹதீஸ்கள் Poll_m10ஹதீஸ்கள் Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஹதீஸ்கள் Poll_c10ஹதீஸ்கள் Poll_m10ஹதீஸ்கள் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஹதீஸ்கள் Poll_c10ஹதீஸ்கள் Poll_m10ஹதீஸ்கள் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஹதீஸ்கள் Poll_c10ஹதீஸ்கள் Poll_m10ஹதீஸ்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஹதீஸ்கள் Poll_c10ஹதீஸ்கள் Poll_m10ஹதீஸ்கள் Poll_c10 
18 Posts - 3%
prajai
ஹதீஸ்கள் Poll_c10ஹதீஸ்கள் Poll_m10ஹதீஸ்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஹதீஸ்கள் Poll_c10ஹதீஸ்கள் Poll_m10ஹதீஸ்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஹதீஸ்கள் Poll_c10ஹதீஸ்கள் Poll_m10ஹதீஸ்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஹதீஸ்கள் Poll_c10ஹதீஸ்கள் Poll_m10ஹதீஸ்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஹதீஸ்கள் Poll_c10ஹதீஸ்கள் Poll_m10ஹதீஸ்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹதீஸ்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 14, 2010 7:00 pm

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

ஹாரிஸா பின் சுராகா (ரலி) அவர்களின் தாயரான உம்மு ருபய்யிஉ பின் பராஉ (ரலி) அவர்ள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! ஹாரிஸாவைப் பற்றி எனக்கு நீங்கள் கூற மாட்டீர்களா? அவர் பத்ருப் போரன்று கொல்லப்பட்டிருந்தார். எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று அவர் மீது தாக்கியிருந்தது. அவர் சுவர்க்கத்தில் இருந்தால் நான் பொறுமையைக் கைக் கொள்வேன். அவர் வேறெந்த (துன்ப) நிலையிலாவது இருந்தால் அவருக்காக நான் கடுமையாக அழுவேன்"" என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், ஹாரிஸாவின் தாயே! சுவர்க்கத்தில் பல்வேறு (படித்தரங்களைக் கொண்ட) சுவனச் சோலைகள் உள்ளன. உங்கள் மகன் (அவற்றில்) மிக உயர்ந்த 'பிர்தவ்ஸ்" எனும் சுவனச் சோலையைப் பெற்றுக் கொண்டார்கள்"" என்று பதிலளித்தார். (புகாரீ)






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 14, 2010 7:00 pm

ஓர் இலட்சியத் தாயின் ஆவல் இந்த ஹதீஸில் பிரதிபலிக்கிறது. புவிமேற்பரப்பில் கால்பதித்து நின்றாலும் சுவனத் தேடலும், இறைதிருப்தியை பெற்றுக் கொள்ளும் அவாவும் அக்கால தாய்மார்களின் நெஞ்சங்களில் ஆழமாகப் பதிந்திருந்தன.

பத்ரு யுத்தம் சத்தியத்தை வாழ வைத்த யுத்தம். இஸ்லாமிய ஆட்சியின் அடித்தளங்களை ஆட்டங் காணச் n சய்து அதனை முழுமையாக வேரறுத்து விடுவதற்கான முழுமையான யுத்த முஸ்தீபுகளுடன் இறைநிராகரிப்பாளர்கள் பத்ருக் களம் நோக்கி வந்திருந்தனர். எதிர்பாராத விதமாக போராட்டத்தில் குதிக்க வேண்டிய நிலையில் இருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மனித வளத்தையும், பௌதீக வளத்தையும் அங்கசம்பூரணமாகப் பிரயோகித்தார்கள். நபித்தோழர் பெருமக்களில் ஹாரிஸா பின் சுராகா (ரலி) அவர்களும் ஒருவர்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 14, 2010 7:01 pm

ஹாரிஸா பின் சுராகா (ரலி) அவர்கள், தான் வீர மரணம் அடைய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டிக் கொண்டவர். ஹிஜ்ரி 2 ம் ஆண்டு நடந்த பத்ருப் போரில் கலந்து கொண்டார். போரின் போது தண்ணீர் அருந்துவதற்காக நீர்த் தொட்டிக்கு அவர் வந்த சமயத்தில் ஹிப்பான் இப்னு அரிகா என்பவர் தொலைவிலிருந்து எய்த அம்பொன்று ஹாரிஸாவின் குரல் வளையைத் தாக்கியதில் அவர் வீரமரணம் அடைந்தார்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 14, 2010 7:02 pm

பத்ரு யுத்தம் இஸ்லாத்தினதும், முஸ்லிம்களினதும் இலக்கையும், இருப்பையும் உறுதி செய்தது. இஸ்லாத்திற்கான ராட்சத பங்களிப்பில் தன்னை உட்படுத்திக் கொண்ட ஹாரிஸாவின் நிலை குறித்து அவர்களது அருமைத் தாய் அண்ணலாரிடம் வினவுகிறார்கள். ஒரு முஸ்லிமின் வாழ்வில் அவன் இறுதி மூச்சை விட்ட நிலை அவனது மறுவுலக வாழ்வைத் தீர்மானிக்கிறது. எனவே தான் அந்தத் தாய், ''ஹாரிஸா குறித்துக் கூற மாட்டீர்களா? என்று கவலை குரல் வளையை அடைக்க ஏக்கப் பெருமூச்சுடன் வினாத் தொடுக்கிறார்கள். ''எனது மகன் சுவனத்தில் இருப்பாரென்றால் நான் பொறுமையைக் கைக் கொள்வேன்"" என்ற அந்தத் தாயின் கூற்று அவர்களது இலட்சியவாத வாழ்வை அழகாகச் சித்தரிக்கிறது. தனது மகன் மரணித்து விட்டதை அவள் ஏற்கனவே அறிந்து கொண்டாள். அதற்காக அவள் கவலைப்படவில்லை. அண்ணலாரை சந்திப்பதற்கு முன்னர் ஒரு நபித்தோழரை சந்தித்து மகனின் மரணச் செய்தியை அறிந்து கொண்டு 'அல்லாஹ{ அக்பர்" என்று உரக்கக் கூறினார்கள். அவர்களது கவலை எல்லாம் மகனின் மறுவுலக வாழ்வு குறித்ததாகவே இருந்தது.

ஏனெனில், மகன் சுவனத்தில் இருந்தால் அவன் சுவனச் சோலையின் சுகந்தத்தைச் சுவாசிப்பேன். பேரின்பகரமான உணவை உட்கொள்வான், பாலாறு, தேனாறு போன்றவற்றிலிருந்து அருந்தி மகிழ்வான். வசந்தம் கொழிக்கும் வாலிபப் பருவத்தை அனுபவிக்கு முன்னரே உயிர்த்தியாகம் செய்தவன் சுவன வசந்தத்தை என்றும் இளமை மாறாத நிலையில் வாழ்ந்து அனுபவிப்பான். 'ஹ{ருல் ஈன்" எனும் கண்ணழகிகளுடன் கொஞ்சி விளையாடுவான். நோய், மரணம், களைப்பு, சோர்வு, வறுமை, முதுமை எதுவுமே அவனை அணுகப் போவதில்லை. மேலும் இன்னோரன்ன சுகபோகங்கள் அவனை சுற்றி வளைத்திருக்கும். அத்தோடு இறைதிருப்தி அவனது நெஞ்சத்தை நிறைத்திருக்கும்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 14, 2010 7:02 pm

இந்தக் கனவு கலைந்து கவலைப் பாறைகள் தொண்டைக்குழியை அடைத்து விடக் கூடாது என்பதற்காகவே அண்ணலாரிடம் அந்தத் தாய் மகனின் இறுதி நிலை தொடர்பாக தனது உளக் குமுறலைக் கொட்டினார்கள். எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் செவியேற்றிராத, எந்தவொரு மனித உள்ளமும் உணர்ந்திராத சுவனத்தை எனது அடியார்களுக்காக நான் சித்தப்படுத்தியுள்ளேன் என்று அல்லாஹ் கூறுவதாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ{ல் குத்ஸீ வர்ணிக்கும் சுவனத்தை எனது மகன் வெகுமதியாகப் பெற்று விட்டால் நான் பொறுமை சாதிப்பேன். என்னை எனது மகனின் பிரிவுத்துயர் வாட்டி வதைக்கப் போவதில்லை என்பதே அந்தத் தாயின் நிலைப்பாடு.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 14, 2010 7:03 pm

'அதுவல்லாத (துன்ப) நிலையில் அவர் இருப்பாரென்றால் நான் கடுமையான அழுவேன்" என்ற அந்தத் தாயின் கூற்று பிள்ளைப் பாசத்தை அப்படியே கொப்பளிக்கிறது. அதுவல்லாத நிலை என்றால் நரகம் தானே! ஜஹன்னம், ஜஹீம் என்ற வார்த்தைகளைக் கூற நா எழவில்லை. அந்தத் தாய் நரகத்திற்குரிய பெயர்களைத் தானும் கூற விரும்பவில்லையென்றால் அவள் எப்படி தனது மகன் நரகத்தின் புகை மண்டலத்தில் இருந்து வரும் நச்சுக் காற்றைச் சுவாசிப்பதை விரும்புவாள்? இதுவே இஸ்லாமியத் தாயின் ஆவல்! தனது மகனின் இறுதி இலக்கை அவனுக்கு சரியாக வரித்துக் கொடுத்த தாயின் இலட்சியவாத வாழ்வு! மகனின் பிரிவால் வாழ்வு கசந்து போக விரக்தியின் விளிம்புக்குச் சென்று விடாத அஞ்சா நெஞ்சம் கொண்ட வீரத்தாயின் தணியாத தாகம்! அவள் உருவாக்கியது சரிசாரி மனிதப் பிண்டத்தை அல்ல. மாறாக, தீனுல் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக செந்நீர் வார்க்கத் துணிந்து விட்ட வீரப் புருஷனை! ஹாரிஸா (ரலி) அவர்களது தாய் தனது மகனின் மரணத்தை பேரிழப்பாகக் கருதவில்லை.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 14, 2010 7:03 pm

பத்ரு யுத்த சத்தம் ஓய்ந்தாலும் அந்தத் தாயின் சத்தம் இன்னும் தணியவில்லை! அது ஒரு நொந்து போன உள்ளம். தனது மகனின் இறுதிப் பெறுபேற்றை எதிர்பார்த்து நிற்கும் முதல் பாடசாலை! அப்போது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அதரங்கள் உதிர்த்த வார்த்தைகள் :

''ஹாரிஸாவின் தாயே! சுவனத்தில் பல்வேறு (படித்தரங்கள் கொண்ட) சோலைகள் உண்டு. உங்கள் மகன் உயரிய பிர்தவ்ஸ் என்ற சுவனச் சோலையை தனதாக்கிக் கொண்டார்"" தூதர் மொழிகள் அவளுக்கு ஒத்தடமாய் அமைந்தன. அந்த முதல் தர சித்தி கண்டு அந்த முதல் பாடசாலை அகமகிழ்ந்தது. அவளை சமாளித்து அனுப்புவதற்காக அவ்விடத்தில் புனையப்பட்ட ஆறுதல் வார்த்தைகளல்ல அவை, நஊதுபில்லாஹி மின்ஹா, அவை வஹியின் ஊடாக நபி (ஸல்) அவர்கள் பெற்றுக் கொண்ட பேருண்மை. அவற்றில் நபித்தோழர்களுக்கு அசைக்க முடியாத விசுவாசம் இருந்தது. எனவே தான், இளைஞர் பட்டாளம் களம் காணத் துடித்துக் கொண்டிருந்தது. களம் காணும் ஆசையை, ஆவலை இளம் உள்ளங்களில் அன்னையர் விதைத்தனர்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 14, 2010 7:03 pm

இஸ்லாத்தை வாழ வைக்க இளம் உள்ளங்களை அன்று தூண்டியவை மாவீரர் தினங்களோ, மாவீரர் துயில் கொள்ளும் இல்லங்களோ அல்லது இனவெறியை வரிக்குவரி கொப்பளிக்கும் கீதங்களோ அல்ல. மாறாக வேதவரிகளும், தூதர் மொழிகளும், தாய்மார்களது அகன்று விரிந்து கிடந்த உள்ளங்களுமே களம் நோக்கி அவ்விளைஞர்களை உந்தித் தள்ளி நகர்த்தின.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 14, 2010 7:05 pm

இலட்சியங்களை இலட்சியமாய் வரித்துக் கொள்ளாத, பெரிய இடத்து சம்பந்தத்திற்காக மாப்பிள்ளையைச் சந்தைப் பொருளாக்கும் சராசரி சடவாதச் சிந்தனைப் போக்குள்ள தாய்மார்கள் அல்ல அக்கால தாய்மார். உழைப்பு, உத்தியோகம், சமூக அங்கீகாரம், அந்தஸ்து, பதவிநிலை போன்றவற்றை முதன்மைப்படுத்தி பிள்ளைகளை சடவாதச் சகதியில் மூழ்கடிக்கின்ற பெற்றோரை இன்று பரவலாக நாம் அவதானிக்கின்றோம். அன்று சுவனமும், இறைதிருப்தியும் பெற்றோர்களினால் பிள்ளைகளுக்கு முதன்மைப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டன. எதிர்காலத்தில் தமது பிள்ளைகள் பெரிய சுகபோகத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக பெற்றோரினால் வழிகாட்டல் வழங்கப்பட்டதாக நாம் அறிய முடியாது. அப்படியான நிலைப்பாடு ஜனரஞ்சகமாக இருந்திருக்குமென்றால் ஹாரிஸாவையும், இஸ்லாமிய வரலாறு சந்தித்திருக்க முடியாது. இஸ்லாமிய புவியில் மேலோங்கியிருக்கவும் முடியாது.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 14, 2010 7:05 pm

ரபீஅத்துர் ரஃயீ என்ற இமாமின் தாயிடம் ஊரவர்கள், 'உங்கள் மகன் கற்பிக்கும் தகையையைப் பெற்றுள்ளார். அவருக்கு ஒரு தொழிலை நீங்கள் செய்து கொடுத்தால் என்ன?" என்று கேட்டனர். அதற்கு அந்தத் தாய், '' எனது மகனின் ஈருலக வாழ்வுக்கு இயைந்து வரக் கூடிய ஒன்றைத் தெரிவு செய்து கொடுக்குமாறு நான் அல்லாஹ்வை வேண்டுகிறேன்" என்றார்கள்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக