புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை - சம்மதமா? Poll_c10சிறுகதை - சம்மதமா? Poll_m10சிறுகதை - சம்மதமா? Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
சிறுகதை - சம்மதமா? Poll_c10சிறுகதை - சம்மதமா? Poll_m10சிறுகதை - சம்மதமா? Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை - சம்மதமா? Poll_c10சிறுகதை - சம்மதமா? Poll_m10சிறுகதை - சம்மதமா? Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
சிறுகதை - சம்மதமா? Poll_c10சிறுகதை - சம்மதமா? Poll_m10சிறுகதை - சம்மதமா? Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை - சம்மதமா?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 29, 2013 6:21 pm

சுந்தரம் அவசரமாக ஆபீஸுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். வைதேகி அவரது டிபன் பாக்ஸை துடைத்து அவசரமாக பையில் வைத்தாள்!

“சீக்கிரம் கொண்டா! ஏற்கெனவே அரை மணி நேரம் லேட்! செல்போன், ஐடிகார்ட் எல்லாத்தையும் எடுத்து வச்சியா? பர்ஸ்ல பணம் இருக்கா?’
“இருக்குங்க! நேரமாச்சுனு பைக்கை ரொம்ப வேகமா ஓட்டாதீங்க! அரை நாள் லீவு போட்டுட்டு நிதானமா போங்க!’
“லீவு இல்லை, வைதேகி! மீரா சீக்கிரமா போயிட்டாளா?’ கேட்டபடி வெளியே வந்து பைக்கை உதைத்தார்.
அது இடக்கு பண்ணியது!

“இது வேற! இந்த மாசமே மூணாவது ரிப்பேரா? வாங்கற சம்பளம் இதுக்கே போகுது!’
“சரிங்க! பத்து வருஷமா இதே வண்டி, தாங்குமா? புதுசு வாங்கணும்!’
“எழுபதாயிரம் ரூபாய்க்கு எங்கே போறது? இருக்கற கடனை அடைக்கவே வழி தெரியலை. ஒரு வருமானத்துல பொண்ணை இன்ஜினீயரிங் படிக்க வைக்கவே முழி பிதுங்குது! அவ வேலைக்கு வந்தாத்தான் மூச்சு விட்டுக்க முடியும்!’
“வேலை கிடைச்சதும், அவளை கட்டிக் குடுக்கணும்! அவ பணம் நமக்கு சொந்தமில்லை’

“கல்யாணமா? பணத்துக்கு நான் எங்கே போவேன்?’
“ஒரு அப்பா கேக்கிற கேள்வியா இது? உங்களுக்கு வெக்கமாயில்லை? பொண்ணைப் பெத்துட்டா போதுமா? அதைப் படிக்க வச்சு ஒருத்தன் கைல ஒப்படைக்கற வரைக்கும் நாமதான் பொறுப்பேத்துக்கணும்!’
“சரி விடு, நம்ம புலம்பலை ராத்திரி வச்சுக்கலாம்! நேரமாச்சு! கடவுள் கண் திறக்கட்டும்!’
மறுபடியும் பைக்கை ஆவேசமாக உதைக்க, அது உயிர் பெற்று சீறியது!
எதிரே ஒரு வெளிநாட்டு படகு கார் மெதுவாக ஊர்ந்து வந்தது!
ஷட்டர் இறக்கி டிரைவர் பார்த்தான்!

“இங்கே சுந்தரம்னு...?’
“நான்தான் நீங்க யாரு? என்ன வேணும்?’
“நீங்கதான் வேணும்!’ கார் நின்றது.
கதவு திறந்து கோட் சூட் சகிதம் ஒரு மனிதரும், பட்டுப் புடவை சரசரக்க, நகை மூட்டையாக ஒரு பெண்மணியும் இறங்கினார்கள்.
“மிஸ்டர் சுந்தரம்! மீராவோட அப்பா நீங்கதானா?’
“ஆமாம்!’

“உங்ககிட்ட பேசணும்! உள்ளே வரலாமா?’
வைதேகி பதறி விட்டாள்!
“எதுக்கு எங்க பொண்ணு பேரைக் கேக்கறீங்க?’
“சம்பந்தம் பேச வந்திருக்கோம்?’
“சம்பந்தமா?’

“ஆமாம்! எங்க பையன் அர்விந்த் பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரன். எங்களுக்கு ஒரே வாரிசு! நிறைய படிச்சிருக்கான்! அழகா இருப்பான்! அவன் பஸ் ஸ்டாப்புல உங்க மகள் மீராவை தொடர்ச்சியா மூணு நாளைக்கு பார்த்திருக்கான்! ரொம்ப பிடிச்சுப் போச்சு!’

“மீரா எங்க கிட்ட சொல்லவே இல்லையே?’
“என் பிள்ளை அவளைப் பாக்கறது அவளுக்கே தெரியாது! இவனும் அவகிட்ட போய்ப் பேசறது அநாகரிகம்னு பேசலை. எங்கிட்ட வந்து சொன்னான்! இந்த நாலு நாள்ல உங்க மீராவை, உங்க குடும்பத்தைப் பற்றின எல்லா தகவல்களையும் சேகரிச்சுட்டேன்! ரொம்ப சந்தோஷம்! எங்களுக்கு திருப்தி! என் பையனும் பிடிவாதமா இருக்கான்! அதான் சம்பந்தம் பேச வந்திருக்கோம்!’
“சார்... நாங்க...?’

“மிடில் கிளாஸ்னு சொல்லுவீங்க. எங்களுக்கே அது தெரியும். உங்க மகள், எங்க வீட்டு மருமகள் ஆயிட்டா, பல கோடிகளுக்கு அவ சொந்தக்காரி! அப்புறமா உங்களுக்கு கஷ்டம்னா என்னான்னே தெரியாது!’
“சார்! அவ இப்பதான் கடைசி வருஷ இன்ஜினீயரிங் படிக்கறா!’
“படிக்கட்டும்! நாங்க யாரும் தடுக்கலை! கல்யாணத்தை முடிச்சிடலாம்! தொடர்ந்து படிப்பை முடிக்கட்டும்! டிகிரி வந்திடுமே!’
“என்ன சுந்தரம்? சொல்லுங்க!’

“ஸாரி! உங்க பையனை நாங்க பாக்கணும்! எங்க மீரா இதுக்கு சம்மதிக்கணும்!’
“எல்லாமே நடக்கும்! என்ன சந்தேகம்? முதல்ல உங்களை சந்திச்சு நாங்க பேசி விவரத்தைச் சொல்லிட்டா, அப்புறமா எல்லாமே முறைப்படி நடக்கும்!’

மிஸ்டர் சுந்தரம் மீராவை படிக்க வைக்க, நீங்க நாலஞ்சு லட்சம் செலவு பண்ணியிருக்கீங்க அதுக்கு லோன் போட்டு கடன் கட்டறீங்க, தவிர குடும்ப செலவு பற்றாக்குறை எல்லாமே இருக்கும். எங்க சம்பந்தம் அமைஞ்சா, கல்யாணச் செலவுகள் முழுமையா எங்களோடது தவிர உங்க கடன் மொத்தத்தையும் நான் அடைக்கிறேன். எங்க சம்பந்தி யாருக்கும் கடனாளியா இருக்கக் கூடாது. எங்களுக்கு அது அவமனம். தவிர, உங்க குடும்பத்தையும் சேர்த்து நாங்க பராமரிக்கிறோம். உங்க கஷ்டங்கள் எல்லாம் இன்னியோட ஒரு முடிவுக்கு வருது. சுந்தரம் ஆடிப்போனார். நாங்க புறப்படறோம். இன்னிக்கு மீரா காலேஜ் விட்டு வீட்டுக்கு வந்ததும் சொல்லுங்க.

சரி சார்.
நாளைக்கு நீங்க எனக்கு போன் பண்ணுங்க நாளை மறு நாள் எங்கே எப்படி என் பிள்ளை உங்க மகளை முறையா பார்க்க போறோன்னு நாங்க தீர்மானிக்கிறோம் சரியா?
இருவரும் எழுந்து விட்டார்கள்.
இருங்க காபி தர்றேன்.

மன்னிச்சிடுங்கம்மா நாங்க எங்க வீட்டை தவிர வெளியே எதுவுமே சாப்பிடறதில்லை. இந்திய அளவுல பிரமாதமான சைவ, அசைவ சமையல் நிபுணர்கள் எங்க வீட்டோட இருக்காங்க எங்க வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டவங்க வெளிய கை நனைக்க மாட்டாங்க வர்றோம்.

கார் அந்த தெருவில் திரும்புவதற்கு திணறியது.
அன்று மாலை கல்லூரி முடிந்து மீரா வந்தாள். அரைமணிநேரம் கழித்து வைதேகி மெதுவாக பேச்சை ஆரம்பித்து ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள்.

சுந்தரம் மகளை பெருமிதத்துடன் பார்த்தார். நீ எங்களை உச்சில கொண்டு போய் நிறுத்துவேனு நாங்க நினைக்கவேயில்லை.
அப்பா, நான் படிப்பை முடிக்கலியே
அதுக்கு அவங்க தடை சொல்லலமா நான் வேலைக்கு போக முடியாதா?
ஒரு கம்பெனிக்கு ஜாயிண்ட் மேனேஜிங் டைரக்டரா ஆக போறே உனக்கு கீழே பல ஆயிரம் ஊழியர்கள்,யாருக்கும்மா கிடைக்கும் இது மாதிரி.

அரவிந்தை எனக்கு புடிக்கணுமே
பார்த்து பேசின பிறகுதானேமா அதை நீ முடிவு செய்ய முடியும்?
சரிம்மா அவங்க கிட்ட அப்பா பேசட்டும்.
சுந்தரம் உற்சாகமாக டயல் செய்தார்
ராஜேந்தரன் எடுத்தார்.

நான் சுந்தரம் பேசறேன். எங்க மீரா கிட்ட பேசிட்டோம் நீங்க வரலாம்.
நாங்க வர்றது கஷ்டம்
அந்த தெருவுல காரை திருப்பவே முடியலை நான் வண்டி அனுப்பறேன் நீங்க ரெண்டு பேரம் உங்க மீராவை கூட்டிட்டுவந்துடுங்க.
எங்கே சார்.

எங்க பங்களாவுக்கு தான் காலைல ஒன்பதுக்கு இங்கே இருங்க. எட்டுக்கெல்லாம் சின்ன வண்டி உங்க வீட்டு வாசல்ல நிக்கும்.
சரி சார்.
மறு நாள் காலை எட்ட மணிக்கு சொன்னபடி வீட்டுவாசலில் சின்ன கார் தயாராக இருந்தது.
மூன்று பேரும் புறப்பட்டார்கள்.
அப்பா கோயிலுக்கு போயிட்டு அந்த பிரசாதத்தை எடுத்துட்டு போகலாம்.
சரிம்மா

கோயிலை முடித்துக் கொண்டு இவரகள் பங்களா வாசலை அடையும் போது ஒன்பதே கால்
ராஜேந்திரன் வெளிப்பட்டார்.
என்ன சுந்தரம்? பதினைஞ்சு நிமிஷ லேட். என் பிள்ளைக்கு தாமதமானா பிடிக்காது இனிமே நேரத்தை பராமரியுங்க
சரி சார்
மீரா முகம் மாறியது.

சில நொடிகளில் அம்மாவும், பிள்ளையும் வந்தார்கள்.
அரவிந்த் அத்தனை அம்சங்களும் நிறைந்தவனாக இருந்தான் ஒரு குறை சொல்ல முடியாது.
முகம் முழுக்க சிரிப்பு.

சரி வாங்க முதல்ல டிபனை சாப்டுட்டு பேசலாம். சுந்தரம் எழுந்து நிற்க.
அப்பா முதல்ல பேசிடலாம். மற்றதெல்லாம் அப்புறமா. மீரா சொல்ல
பேசும்மா உன் மேல என் பிள்ளை உயிரையே வச்சிருக்கான். அவளை உள்ளே கூட்டிட்டு போய் பேசுடா
வா மீரா

இல்லை மிஸ்டர் அரவிந்த் தனியா பேச எதுவும் இல்லை. இங்கேயே பேசிடலாம்.
ராஜேந்திரன், மனைவியை பார்த்தார்.
சார், வந்ததுமே இது மாதிரி லேட்டானா என் பிள்ளைக்கு பிடிக்காதுனு சொன்னீங்க அங்கே ஒரு மாமாவை நான் பார்க்கலை கம்பெனி முதலாளியைதான் பார்த்தேன்.
மீரா....

இருங்கப்பா அவங்க நம்ம வீட்டுக்கு வரிசை தட்டுகளோட வந்தாங்க. ஆனா கை நனைக்கலை காரணம் அவங்க வெளியே சாப்பிடமாட்டாங்க.
அவங்ககிட்ட எல்லாமே இருக்கு. என் சம்பந்தி கடனாளியா இருக்கறதை நான் விரும்பலைனு சொன்னப்ப, அதுல பாசம் தெரியல பணத்திமிர்தான் தெரிஞ்சது. இங்கே வந்ததும் சாப்பிட்டு பேசுங்கனு சொன்னதுல பரிவு தெரியலை. படாடோபம் தான் நிக்குது.
திரும்பினாள்.

நான் பாதி படிக்கும்போது கல்யாணம் செஞ்சுகிட்டா, படிப்புல கவனம் சிதறும். அப்புறம் வேலைக்கு போகவிடமாட்டீங்க. காரணம் அந்தஸ்து. எங்க குடும்ப நிர்வாகத்தை நீங்க நடத்த முன் வந்தா, எங்கப்பா, அம்மாவும் உங்களுக்கு வேலைக்காரங்க தான்.
மீரா....

இருங்கப்பா, நான் முடிக்கலை. வேண்டாம் சார். தங்க கூண்டுல அடைப்பட்ட பட்டுக்கிளியா இருக்கறதுல எனக்கு உடன்பாடு இல்லை. எங்கப்பா கடனாளியா இருந்தாலும் இன்னிக்கு யாருக்கும் அடிமை இல்லை. எங்க வீட்டுக்கு வந்தவங்க ஒரு மோராவது குடிச்சாத்தான் எங்களுக்கு அது கௌரவம். மேலும் நான் என் கால்ல நிக்க விரும்பறேன். நீட்டின இடத்துல கையெழுத்து போடற ரப்பர் ஸ்டாம்ப் முதலாளியா இருக்க விரும்பல. மிடில் க்ளாஸோட யதார்த்த காற்றை சுவாசிச்சு பழகின எனக்கு கோடீஸ்வர வாழ்க்கை ஒட்டாது. எங்க தெருவுல படகு கார் வர முடியாது.

சாதாரண பைக் ஓட்டிட்டு வர்ற ஒரு ஆள் என் புருஷன் ஆனாப்போதும். தரைல ஒக்காந்து சாப்பிட்டு, பாய்ல படுக்கற மனுஷங்கதான் எங்க குடும்பத்துக்கு சரிப்படும். மாச கடைசில கஷ்டப்படற, வலிகள் தெரிஞ்ச ஒரு குடும்பம் தான். எனக்கு புகுந்த வீடாக முடியும்.
மீரா கம்பீரமாக வாசலை நோக்கி நடந்தாள். எல்லா இடத்திலும் கரன்சிகள் எப்போதும் ஜெயிப்பதில்லை.

நன்றி - தேவிபாலா





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 29, 2013 6:44 pm

எனக்கு பிடிச்சிருக்கு இந்த கதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Tue Jul 30, 2013 8:27 am

அருமையான கதை....
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jul 30, 2013 8:33 am

கதை சூப்பருங்க 




சிறுகதை - சம்மதமா? Mசிறுகதை - சம்மதமா? Uசிறுகதை - சம்மதமா? Tசிறுகதை - சம்மதமா? Hசிறுகதை - சம்மதமா? Uசிறுகதை - சம்மதமா? Mசிறுகதை - சம்மதமா? Oசிறுகதை - சம்மதமா? Hசிறுகதை - சம்மதமா? Aசிறுகதை - சம்மதமா? Mசிறுகதை - சம்மதமா? Eசிறுகதை - சம்மதமா? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 30, 2013 12:29 pm

ரொம்ப அருமையான கதை பகிர்வுக்கு நன்றிமா

எனக்கு இவர் நாவல்கள் ரொம்ப ரொம்ப பிடிக்கும் .



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 30, 2013 12:33 pm

நல்ல கதை ....வார பத்திரிகையை பார்த்து டைப் பண்ணுவது எவ்வளவு சிரமம் ....உங்களின் அந்த பொறுமைக்கே நன்றி சூப்பருங்க 
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Jul 30, 2013 12:33 pm

கரன்சியா கெளரவமா என்றாள் கெளரவமே வெல்லும்.நல்ல கதை.,

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக