Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உக்கிரமும் வசீகரமும் ஓரிடத்தில் தரிசனம் தரும் பள்ளக்கால் நரசிம்மர் ஆலயம்!
Page 1 of 1
உக்கிரமும் வசீகரமும் ஓரிடத்தில் தரிசனம் தரும் பள்ளக்கால் நரசிம்மர் ஆலயம்!
தசாவதாரங்களில் தேவர்களையும் அஞ்ச வைத்த உக்கிர அம்சம் நரசிங்கப் பெருமாள். கோபியர்கள் மட்டுமல்லாது, மான், பசு, மயில் முதலான சகல ஜீவராசிகளின் மனதையும் கொள்ளை கொண்ட வசீகரன்- அழகிய மழலை நவநீத கிருஷ்ணன். இவ்வாறு இரு துருவங்களாக விளங்கும் உக்கிரத்தையும் வசீகரத்தையும் ஒரே இடத்தில் கண்டுகளிக்க வேண்டுமா?
வாருங்கள் பள்ளக்கால் என்னும் தலத்திற்கு. ஒரே கருவறையில் இத்தகைய அரிய தரிசனத் தைக் காணலாம்.
பள்ளக்கால் நரசிம்மர் யோக வடிவினர். அருகேயுள்ள குழந்தை கண்ணனின் மந்திரப் புன்னகையில் லயித்ததாலோ என்னவோ- இங்கு சுவாமி உக்கிரம் தவிர்த்து மகாசாந்த ஸ்வரூபியாய் நதிக்கரையில் தவமிருக்கும் தவசி போல் யோக மூர்த்தியாய் அருள்பாலிக்கிறார்.
தவக்கோலத்தில் சுவாமி இருப்பதால் இந்த சிறு கோவில் மட்டும் தனியே கடனா நதிக் கரையில் உள்ளது.
தான் கடனா நதியில் இருப்பதாகவும்; தன்னை வெளியே எடுத்துக் கோவில் அமைத்து வழிபடுமாறும் அந்த கிராமத்தில் இருந்த பக்தர் ஒருவரின் கனவில் கூறினாராம் பெருமாள். நரசிம்மரின் ஆணையை ஏற்ற அப்பகுதி மக்கள் சிலையை நதியில் கண்டெடுத்து கோவில் அமைத்துப் பிரதிஷ்டை செய்தனர். அப்போது நரசிம்மர் தான் அந்த சிலையில் இல்லை என்றும்; கோவில் முகப்பில் உள்ள திருநாமப் பிரதிஷ்டையில் இருப்பதாகவும் கூற, பக்தர்களும் வெளியே வந்து பூஜை செய்தனர்.
அவர்கள் பூஜையில் மகிழ்ந்த நரசிம்மர் தான் கருவறையில் மூலவிக்ரகத்தின் பின்னே உள்ள நாமப் பிரதிஷ் டையில் இப்போது சஞ்சரிப்பதாகக் கூறினார். பக்தர்களும் அங்கே சென்று பூஜை செய்தனர். ""இன்றும்கூட அவர் மூலவிக்ரகத்தில் இல்லாமல் அதன் பின்னே அமைந்த நாமப் பிரதிஷ்டையில்தான் சஞ்சரிக்கிறார். மூலத்திருமேனிக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்து தீபாராதனை காட்டும் பொழுது மட்டும் அவர் விக்ரகத்துக்குள் வந்துவிடுகிறார்'' என்று அர்ச்சகர் கூறிய அந்தத் தருணத்தில், நம்மையும் அறியாமல் ஒரு சிலிர்ப்பு வந்து நம்மை ஆட்கொள்ளுகிறது.
நரசிம்மர் உள்ளே, வெளியே மற்றும் மூலத்திருமேனி யாகவும் இருக்கிறார் என்ற இந்தத் தலபுராணம், "அந்தர்யாமி' (எங்கும் நிறைந்தவர்) என்ற தாத்பரியத்தை கிருத யுகத்தில் மட்டுமல்லாது, இந்தக் கலியுகத்திலும் பக்தர்களுக்கு விளக்குவதாக அமைந்துள்ளது.
யோகசிம்மர் பேரழகராய்- சாந்த சொரூபி யாய் இன்முகம் காட்டி, நான்கு திருக்கரங்களோடு தெற்கு நோக்கித் திருமுகம் கொண்டு பக்தர் களுக்கு அருள்பாலிக்கிறார். கோவிலின் கருவறையில் யோக நரசிம்மருக்கு இடப் பக்கத்தில் குழந்தை கிருஷ்ணன் காட்சியளிக்கி றான். இவன் இங்கு சந்தான கோபாலனாக- பக்தர் களுக்கு மழலை வரம் அருளும் வரப்பிரசாதியாக உள்ளான். குழந்தை வரம் வேண்டி வரும் அன்பர்கள் கருவறை தீபத்தில் சிறிது நெய் சேர்த்தபின், மழலை வரம் வேண்டும் பெண் சிறிது நெய் எடுத்து கருவறை படியில் தேய்க்க, மிக விரைவில் சந்தானம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நரசிம்ம அவதாரத்திற்கு மூல காரணியாய், "எம்பெருமான் தூணிலும் துரும்பிலும் அணுவிலும் இருப்பான்' என உலகிற்கு உணர்த் திய பரம பக்தன் பிரகலாதன், தன் கருணா மூர்த்தியைப் பிரிய மனமின்றி இந்தச் சிறிய கோவிலில் ஒரு தூணில் இருந்தபடியே மூலவரை சேவித்த வண்ணம் காட்சியளிக்கிறான்.
பள்ளக்கால் அருகே உள்ள ரெங்க சமுத்திரத் திலும் மிகப் பழமை வாய்ந்த வேங்கடாசலபதி திருக்கோவில் உள்ளது. இன்றைய கோவில் சுமார் முந்நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும்; அதற்கு முன்பே இந்தப் பகுதி ஒரு சிறிய மலைக் குன்றாக இருந்தது என்றும்; முன்பு இருந்த கோவிலுக்குப் படிக்கட்டுகள் மூலம் ஏறிச் செல்ல வேண்டும் என்றும்; கால கிரமத்தில் இந்த நிலை மாறி இன்றைய கோவில் சமதளத்தில் உள்ளது என்றும் கூறுகின்றனர். இன்றைய பெருமாள் சந்நிதியின் முன் இருக்கும் கருடாழ்வாரின் அமைப்பிடமே முந்தைய கோவிலின் கொடிமர உச்சி என்று கூறி கோவில் அர்ச்சகர் நம்மை வியப்பில் ஆழ்த்து கிறார். இந்த அர்ச்சகர்களே கடந்த ஆறு தலை முறைக்கும் மேலாக நதிக்கரை யோக நரசிம் மருக்கும் பூஜை செய்து வருகின்றனர்.
சிறிய கோவிலானாலும் சிம்மரின் கீர்த்தி மிகப் பெரியது என்பதால் அனைவரும் வந்து தரிசிக்க வேண்டிய திருத்தலம் இது.
வாருங்கள் பள்ளக்கால் என்னும் தலத்திற்கு. ஒரே கருவறையில் இத்தகைய அரிய தரிசனத் தைக் காணலாம்.
பள்ளக்கால் நரசிம்மர் யோக வடிவினர். அருகேயுள்ள குழந்தை கண்ணனின் மந்திரப் புன்னகையில் லயித்ததாலோ என்னவோ- இங்கு சுவாமி உக்கிரம் தவிர்த்து மகாசாந்த ஸ்வரூபியாய் நதிக்கரையில் தவமிருக்கும் தவசி போல் யோக மூர்த்தியாய் அருள்பாலிக்கிறார்.
தவக்கோலத்தில் சுவாமி இருப்பதால் இந்த சிறு கோவில் மட்டும் தனியே கடனா நதிக் கரையில் உள்ளது.
தான் கடனா நதியில் இருப்பதாகவும்; தன்னை வெளியே எடுத்துக் கோவில் அமைத்து வழிபடுமாறும் அந்த கிராமத்தில் இருந்த பக்தர் ஒருவரின் கனவில் கூறினாராம் பெருமாள். நரசிம்மரின் ஆணையை ஏற்ற அப்பகுதி மக்கள் சிலையை நதியில் கண்டெடுத்து கோவில் அமைத்துப் பிரதிஷ்டை செய்தனர். அப்போது நரசிம்மர் தான் அந்த சிலையில் இல்லை என்றும்; கோவில் முகப்பில் உள்ள திருநாமப் பிரதிஷ்டையில் இருப்பதாகவும் கூற, பக்தர்களும் வெளியே வந்து பூஜை செய்தனர்.
அவர்கள் பூஜையில் மகிழ்ந்த நரசிம்மர் தான் கருவறையில் மூலவிக்ரகத்தின் பின்னே உள்ள நாமப் பிரதிஷ் டையில் இப்போது சஞ்சரிப்பதாகக் கூறினார். பக்தர்களும் அங்கே சென்று பூஜை செய்தனர். ""இன்றும்கூட அவர் மூலவிக்ரகத்தில் இல்லாமல் அதன் பின்னே அமைந்த நாமப் பிரதிஷ்டையில்தான் சஞ்சரிக்கிறார். மூலத்திருமேனிக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்து தீபாராதனை காட்டும் பொழுது மட்டும் அவர் விக்ரகத்துக்குள் வந்துவிடுகிறார்'' என்று அர்ச்சகர் கூறிய அந்தத் தருணத்தில், நம்மையும் அறியாமல் ஒரு சிலிர்ப்பு வந்து நம்மை ஆட்கொள்ளுகிறது.
நரசிம்மர் உள்ளே, வெளியே மற்றும் மூலத்திருமேனி யாகவும் இருக்கிறார் என்ற இந்தத் தலபுராணம், "அந்தர்யாமி' (எங்கும் நிறைந்தவர்) என்ற தாத்பரியத்தை கிருத யுகத்தில் மட்டுமல்லாது, இந்தக் கலியுகத்திலும் பக்தர்களுக்கு விளக்குவதாக அமைந்துள்ளது.
யோகசிம்மர் பேரழகராய்- சாந்த சொரூபி யாய் இன்முகம் காட்டி, நான்கு திருக்கரங்களோடு தெற்கு நோக்கித் திருமுகம் கொண்டு பக்தர் களுக்கு அருள்பாலிக்கிறார். கோவிலின் கருவறையில் யோக நரசிம்மருக்கு இடப் பக்கத்தில் குழந்தை கிருஷ்ணன் காட்சியளிக்கி றான். இவன் இங்கு சந்தான கோபாலனாக- பக்தர் களுக்கு மழலை வரம் அருளும் வரப்பிரசாதியாக உள்ளான். குழந்தை வரம் வேண்டி வரும் அன்பர்கள் கருவறை தீபத்தில் சிறிது நெய் சேர்த்தபின், மழலை வரம் வேண்டும் பெண் சிறிது நெய் எடுத்து கருவறை படியில் தேய்க்க, மிக விரைவில் சந்தானம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நரசிம்ம அவதாரத்திற்கு மூல காரணியாய், "எம்பெருமான் தூணிலும் துரும்பிலும் அணுவிலும் இருப்பான்' என உலகிற்கு உணர்த் திய பரம பக்தன் பிரகலாதன், தன் கருணா மூர்த்தியைப் பிரிய மனமின்றி இந்தச் சிறிய கோவிலில் ஒரு தூணில் இருந்தபடியே மூலவரை சேவித்த வண்ணம் காட்சியளிக்கிறான்.
பள்ளக்கால் அருகே உள்ள ரெங்க சமுத்திரத் திலும் மிகப் பழமை வாய்ந்த வேங்கடாசலபதி திருக்கோவில் உள்ளது. இன்றைய கோவில் சுமார் முந்நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும்; அதற்கு முன்பே இந்தப் பகுதி ஒரு சிறிய மலைக் குன்றாக இருந்தது என்றும்; முன்பு இருந்த கோவிலுக்குப் படிக்கட்டுகள் மூலம் ஏறிச் செல்ல வேண்டும் என்றும்; கால கிரமத்தில் இந்த நிலை மாறி இன்றைய கோவில் சமதளத்தில் உள்ளது என்றும் கூறுகின்றனர். இன்றைய பெருமாள் சந்நிதியின் முன் இருக்கும் கருடாழ்வாரின் அமைப்பிடமே முந்தைய கோவிலின் கொடிமர உச்சி என்று கூறி கோவில் அர்ச்சகர் நம்மை வியப்பில் ஆழ்த்து கிறார். இந்த அர்ச்சகர்களே கடந்த ஆறு தலை முறைக்கும் மேலாக நதிக்கரை யோக நரசிம் மருக்கும் பூஜை செய்து வருகின்றனர்.
சிறிய கோவிலானாலும் சிம்மரின் கீர்த்தி மிகப் பெரியது என்பதால் அனைவரும் வந்து தரிசிக்க வேண்டிய திருத்தலம் இது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உக்கிரமும் வசீகரமும் ஓரிடத்தில் தரிசனம் தரும் பள்ளக்கால் நரசிம்மர் ஆலயம்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பரிக்கல் நரசிம்மர் ஆலயம் - ஸ்ரீ லட்சுமிநரசிம்மர் !
» சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தரும் முருகன் ஆலயம்
» திருப்பம் தரும் திருமலை தரிசனம்!
» தரிசனம் தரும் சீனப் பெருஞ்சுவர்.
» நீண்ட ஆயுள் தரும் ஆருத்ரா தரிசனம்
» சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தரும் முருகன் ஆலயம்
» திருப்பம் தரும் திருமலை தரிசனம்!
» தரிசனம் தரும் சீனப் பெருஞ்சுவர்.
» நீண்ட ஆயுள் தரும் ஆருத்ரா தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|