புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_c10'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_m10'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_c10 
91 Posts - 61%
heezulia
'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_c10'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_m10'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_c10'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_m10'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_c10'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_m10'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_c10'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_m10'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_c10 
1 Post - 1%
viyasan
'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_c10'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_m10'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_c10'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_m10'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_c10'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_m10'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_c10 
283 Posts - 45%
heezulia
'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_c10'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_m10'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_c10'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_m10'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_c10'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_m10'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_c10'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_m10'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_c10 
19 Posts - 3%
prajai
'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_c10'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_m10'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_c10'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_m10'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_c10'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_m10'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_c10'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_m10'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_c10'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_m10'ஜோடி' - தமிழ் அறிவோம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ஜோடி' - தமிழ் அறிவோம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 11, 2010 4:50 pm

இரண்டு என்பதைக் குறிக்க இரட்டு, இரட்டை, இணை, துணை, பிணை முதலிய இனிய தமிழ்ச்சொற்கள், இலக்கிய வழக்கு, உலகியல் வழக்கு ஆகிய இருவகை வழக்குகளிலும் பயில வழங்குகின்றன. இவற்றொடு 'சோடி' என்னுமொரு சொல்லும் பெருக வழங்குகிறது. இதனை, 'ஜோடி' என்று சொல்வதும் எழுதுவதும் அழுத்தமாக உள்ளது. 'ஜோடி' என்று எழுதாமல் 'சோடி' என்று எழுதினால் 'வடமொழி வெறுப்பர்' என்று சொல்வாரும் உளர். அச் சொல்லின் உண்மைப் பிறப்பு, உறுதிப்பட்டால் அன்றித் தமிழரும் ஏற்றுக்கொள்ளார். ஏனெனில், அவர்களுள் பலரும் 'ஜோடி'யைத்தானே 'ஜோடி'த்து மகிழ்கிறார்கள்!

பழங்காலத்தில் எழுது பொருளாக ஓலை இருந்ததென்பது வெளிப்படை. ஓலையொடு 'ஏடு' என்பதும் அதற்கொரு பெயர். புல்வகை உறுப்புகளைச் சொல்ல வந்த ஆசிரியர் தொல்காப்பியனார்,

"கோடே மடலே ஓலை என்றா
ஏடே இதழே பாளை என்றா
ஈர்க்கே குலையென நேர்ந்தன பிறவும்
புல்லொடும் வருமெனச் சொல்லினர் புலவர்"


என்று அவர்க்கு முந்தைப் புலவர் வழங்கிய மரபினைக் குறிப்பிடுகிறார்.

ஏட்டில் எழுதுவார் தம் விருப்புக்கு ஏற்ற அளவில் நெடிய ஓலையில் ஓர் ஒழுங்குற முறித்தோ, நறுக்கியோ, கிள்ளியோ ஏடு எடுப்பர். ஆகலின் ஏடு, 'முறி' என்றும், 'நறுக்கு' என்றும், கிள்ளாக்கு' என்றும் பெயர் பெற்றது. ஓர் ஏட்டிலேயே ஒருவர் எடுத்துக்கொண்ட நூல் முற்றுப் பெறுவதில்லை. ஆதலால், பல ஏடுகளை ஓரளவில் எடுத்துத் தொகுக்க வேண்டியதாயிற்று. ஓர் ஏட்டுடன் ஒப்பிட்டு ஓரளவில் எடுப்பதைச் 'சுவடி சேர்த்தல்' என்பது வழக்கு. ஒன்றோடு ஒன்றை, ஒப்பான அளவாக்கி நறுக்கிச் சேர்ப்பதால், இரண்டைச் 'சுவடி' என்னும் வழக்கம் ஏற்பட்டது. சுவடி என்னும் சொல் தோன்றிய வரலாறு இது. சுவடி என்பதற்கு இணை, இரண்டு, இரட்டை என்பதே பொருளாம்.

உருவமும் பருவமும் ஒத்த இரண்டு பிள்ளைகளைச் 'சுவடிப் பிள்ளைகள்' என்பதும், ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு இணை சேர்க்கும் காளைகளைச் 'சுவடிக் காளைகள்' என்பதும் நாடறிந்த செய்தியே. இச் சுவடிகள் இணைப்பொருள் தருவனவேயாம்.

'நாட்டுக்கு நாட்டு மட்டம் -நாமிரண்டும் சோடி மட்டம்' என்பதொரு நாட்டுப் புறப் பாட்டு! இவ்வாறு இரண்டு என்னும் பொருள்தரும் சுவடியாம் சோடி 'ஒரு சோடி செருப்பு', 'ஒரு சோடி வேட்டி' எனப் பேச்சு வழக்கிலும் வழங்குகின்றது. சுவடியில் இருந்து பிறந்தது சுவடு என்னும் சொல். எப்படி?

இரண்டு கால்கள் நிலத்தில் படியும் - பதியும் - படிவை அல்லது பதிவைச், 'சுவடு' என்பது இலக்கிய வழக்கு. பிரிவு மேற்கொண்ட தலைவியைப், பரிவு மேற்கொண்ட செவிலித் தாய் தேடி வரும்போது, 'சுவடு கண்டு இரங்கல்' என்பதொரு துறையில் புலவர்கள் பாட்டியற்றல் அகப்பொருள் இலக்கணச் செய்தி. 'சுவடு கண்டு' என்பது, 'தலைவியின் கால் தடம் கண்டு' என்னும் பொருள் தருவதாம்.

"மாதர் பிறைக்கண்ணியானை மலையான் மகளோடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவார் அவர்பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது"


என்பது அப்பரடிகள் வாக்கு (4 : 3 : 1 ). இதில், 'சுவடு' கால் தடத்தைக் குறிக்கின்றது.

கால் தடத்தைக் குறிக்கும் 'சுவடு' குதிரையில் ஏறுதற்குக் கால் வைக்கும் 'அங்க வடி'யையும் குறிக்கலாயிற்று. மயிலேறி விளையாடும் மகிழ்முருகனுக்குக் குதிரை, மயில்தானே! அம்மயிலேறும் 'பக்கரை'யையும் சுவடாகக் கொண்டனர். அதனால் அகரவரிசையாளர், சுவட்டுக்கு அங்கவடி, பக்கரைகளையும் இணைத்தனர்.

இனிச், சுவடி 'சோடி' யானது போலச், சுவடு 'சோடு' ஆகியது. "காலுக்குச் சோடில்லை" என்பது புலவர் ஒருவரின் பெருங்கவலை. "சோட்டால் அடிப்பேன்" என்பது சினத்தான் செருக்குரை.

ஒப்பிணைப் பொருளாம் சுவடியில் இருந்து, சுவடித்தல், சுவடிப்பு, சுவடணை என்னும் தொழிற்பெயர்கள் பிறந்தன. தேர், பல்லக்கு, அரங்கம், ஆட்டக்களம், மன்றம், மாளிகை முதலியன அழகுறுத்தப்பெறும்போது, இப்பாலும் அப்பாலும் ஒப்பு நோக்கி, இணை இணையாய்ச் செய்தலுடைமையால் அவ் வழகுறுத்தும் கலைச் செயல் இப்பெயர்களைப் பெற்றது. இவையே பின்னர்ச் சோடித்தல், சோடிப்பு, சோடணை என்றாயிற்று. இவற்றையும் வடமொழித்தாக்கர் விடுவரா? ஜோடித்தல், ஜோடிப்பு, ஜோடணையாக்கி மகிழ்ந்தனர்.

ஒப்பிணைப் பொருளால் வளர்ந்த 'சுவடு' இரு பதிவாம் தடங்களைக் குறித்ததில் இருந்து வளர்ந்தது. நடந்தும் ஓடியும் அழுந்தித் தடம் பட்டுப்போன வழியையும், பெருவழியையும் குறிக்கலாயிற்று.

"தேரின் சுவடு நோக்குவர்"
என்று குறிக்கும் கம்பர் (அயோ. தை.82)


"மண்ணின் மேலவன் தேர்சென்ற சுவடெலாம் மாய்ந்து
விண்ணின் ஓங்கியது"என்று முடித்தார். (ஆரண்.சடா.165).


மண்ணின் தடத்தை விடுத்து விண்ணின் தடத்துக்கும் எழும்பினார் ஆளுடைய அரசர்.

"அண்டங் கடந்த சுவடும் உண்டோ
அனலங்கை ஏந்திய ஆடலுண்டோ?"

என்பது அவர் வாக்கு (தேவா. 6 : 97: 1). இவண் 'சுவடு' அடையாளப் பொருட்டது.

'சுவடு' தன் பொருளில் மேலும் வளர்ந்தது; நீர் ஒழுகும் தடம், புண், தழும்பு இவற்றையும் குறிப்பதாயிற்று. யானையின் மதம்பாய் தடம் 'மதம் பாய் சுவடு' என்றும் 'யானைச் சுவடு' என்றும் வழங்கலாயிற்று. குருதி கொட்டிய தடத்தைச் 'செம்புனற் சுவடு நோக்கி இது நெறி' என்று சுட்டுகிறார் கம்பர் (உயுத். மகரக்.29). ஏனைய புண்ணும் தழும்பும் வெளிப்படை.அழுந்திய தடத்தில் இருந்து சுவடு, 'அழுந்திய மரபு' சுட்டும் சொல்லாகவும் கொங்கு வேளிரால் கொண்டாடப் பெறுவதாயிற்று.

"சொல்லினன் வினவும் சுவடுதனைக் கின்மையின்"

என்றார் அவர் (பெருங்.உஞ்.34 : 79). இங்குச் சுவடு 'மரபு' அல்லது அடிப்பட்ட வழக்கினைக் குறிக்கிறது. வழித் தடத்தில் இருந்து வாழ்வுத் தடத்துக்கு வந்து வழி இது.சுவடி, சுவடு என்னும் தனித் தமிழ்ச் சொற்களின் வழிவந்த சோடி, சோடு, சோடித்தல், சோடிப்பு, சோடணை என்னுஞ் சொற்களை, இனியேனும் ஜோடி, ஜோடு, ஜோடித்தல், ஜோடிப்பு, ஜோடணை என வேற்றெழுத்தால் எழுதும் இழிவினைத் தமிழர் ஒழிப்பாராக! எழுத்து ஏமாற்றம் என்றும் நிலைக்காது என்றும், என்றேனும் உண்மை ஆய்வால் வெளிப்பட்டே தீரும் என்றும், அறிஞர்கள் ஆய்ந்து தெளிவுறுத்துவார்களாக!

-புலவர் இரா.இளங்குமரன்
நன்றி : செந்தமிழ்ச் செல்வி 56-வது சிலம்பு




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Apr 11, 2010 4:52 pm

அருமையான தகவல் தல நன்றி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 12, 2010 9:58 am

ஜோட் என்றால் வடமொழியில் இணைப்பது என்பது பொருளாகும்.

அதிலிருந்து வந்த சொல்லே ஜோடி என்பது.

புலவர் இரா இளங்குமரன் வடமொழி அறிவாரா என்று தெரியவில்லை. எல்லாமே தமிழ் என்று பொய்யாய் பெருமை கொள்வதும் தவறுதான்.

சுவடு என்பதற்கும் ஜோடி என்பதற்கும் பூமிக்கும் ஆகாயத்துக்கும் உள்ள வேறுபாடு என்பதை மறந்துவிட்ட புலவர் எதையோ கூறி எதையோ சேர்க்க எண்ணுகிறார் என்றே தோன்றுகிறது.

வடமொழியான சம்ஸ்கிருதம் மிகப்பழங்காலத்திலேயே தமிழுடன் இணைந்து கலந்து வழங்கி வருதலால் நிறைய சொற்கள் த்மிழைப்போலவே கலந்துவிட்டன்..

மொழி என்பது இளகிய ( FLEXIBLE ) தன்மை கொண்டதாக அமையும்போது தான் வளர்கிறது. தழைக்கிறது. தமிழும் அவ்வாறே...

அரிய தகவலுக்கு நன்றி தல.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக