புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_m10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10 
69 Posts - 40%
heezulia
கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_m10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_m10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_m10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_m10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_m10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10 
3 Posts - 2%
manikavi
கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_m10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_m10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_m10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_m10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_m10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10 
320 Posts - 50%
heezulia
கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_m10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_m10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_m10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_m10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10 
22 Posts - 3%
prajai
கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_m10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_m10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10 
3 Posts - 0%
Barushree
கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_m10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10 
2 Posts - 0%
Guna.D
கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_m10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_m10கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள் - Page 12 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள்


   
   

Page 12 of 14 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 11, 2010 6:16 pm

First topic message reminder :

கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள்


1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருணாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழகு



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Apr 12, 2010 11:57 am

அண்ணா புன்னை மரத்துக்கும் குயிலுக்கும் என்ன சம்பந்தம் ??
ஏனெனில் முத்துகாளை திரைப் படத்திலும் " புன்னை வனத்துக் குயிலே நீ என்னை நினைத்து இசை பாடு "இவ்வாறு அமைகின்றது, ஏற்கனவே செவந்தி திரைப்படத்திலும் புன்னை மரத்தையும் குயிலையும் சம்பந்தப் படுத்தி பாடல்கள் இயற்றப்பட்டு இருந்தன.
அதிர்ச்சி அதிர்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 12, 2010 12:07 pm

புன்னை மரத்தைப் பற்றி உலோச்சனார் பாடியுள்ளது!

‘இரும்பு போன்ற கிளைகள்; நீலமணி ஒத்த இலைகள்; வெள்ளி என ஒளிரும் மலர்கள்; பொன் போல் விளங்கும் மகரந்தம்’ என்று புன்னை மரத்தைப் புனைந்துரைக்கின்றார். இந்நிலையில், அவர் காட்டும் புன்னை வருணனை நின்று விடவில்லை. தலைவன் தேரிலே திரும்பி வருகின்றான். நெய்தல் நிலத்தை நெருங்குகின்றது தேர். தொலைவிலிருந்து புன்னை மரத்தைக் காணும்போது குதிரை மருள்கிறது. புன்னையின் கருநிறப்பச்சை இலைப்பரப்பு; அதன்மீது பொன்னிறத் தாது உதிர்ந்து வண்ணங்கள் ஒன்றிணைந்த தோற்றம்; அதன் அருகில் தேன் உண்ணும் வண்டுகள் ரீங்கரிக்கும் ஒலியால் ஏற்பட்ட மயக்கம் இவை அனைத்தும் சேர்ந்து, அதன் கண்களுக்கு முன் புலியை நிறுத்தி விட்டது. புலியின் உறுமலை வண்டின் ஒலியில் கேட்ட அக் குதிரை பந்துபோல் குதித்துத் தாவி ஓடத் தொடங்குகிறது.


இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை
நீலத்து அன்ன பாசிலை அகந்தொறும்
வெள்ளி அன்ன விளங்கிணர் நாப்பண்
பொன்னின் அன்ன நறுந்தாது உதிரப்
புலிப்பொறிக் கொண்ட பூநாறு குரூஉச்சுவல்
வரிவண்டு ஊதலின் புலிசெத்து வெரீஇப்
பரியுடை வயங்குதாள் பந்தின் தாவத்
தாங்கவும் தகைவரை நில்லா

(நற். 249)

மற்றொரு பாடலில், புன்னை மரத்தில் வண்டுகள் முரல்கின்ற ஓசை தலைவிக்குத் தொல்லை தருவதாக உள்ளது எனப்பாடுகிறார் உலோச்சனார். தலைவி தன் தலைவன் வரவைத் தேரொலியால் அறிவாள். ஆனால் அந்தத் தேர் ஒலியைக் கேட்பதற்கு இடையூறாகப் புன்னை மரங்களில் மொய்த்திருக்கும் வண்டுகள் முரல்கின்றனவாம்:

கருங்கோட்டுப் புன்னை மலர்த்தாது அருந்தி
இருங்களிப் பிரசம் ஊத அவர்
நெடுந்தேர் இன்னொலி கேட்டலோ அரிதே

(நற். 311)



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 12, 2010 12:13 pm


“அன்னை கூறிய புன்னையின் சிறப்பு’


இன்றைய உலகை ஆட்டுவிக்கும் அல்லது இயக்கும் ஆற்றலான பெட்ரோலியப் பொருள்கள் இன்னும் கொஞ்ச நாளில் படிப்படியாக மறைந்து போகும் என்பதை அனைவரும் அறிவர்.

இதற்கு மாற்று எரிபொருள்களைத் தேடுவதில் உலக நாடுகள் அனைத்தும் போட்டி போடுகின்றன. நீடித்த, சுற்றுச்சூழலைக் கெடுக்காத ஆற்றல் வளங்கள் பற்றிய ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதில் ஒன்றான செடியின எரிபொருள்களைத் தேடுவதில் அறிவியல் ஆய்வாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் செடியின எரிபொருள்கள்தாம் உண்மையில் பண்டைய எரிபொருள்கள் ஆகும்.

வீட்டு விளக்குகளிலும், விளக்குத் தூண்களிலும் ஏன் கலங்கரை விளக்கங்களிலும் இவை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இந்தப் பயிரின எண்ணெய்கள் அந்தந்தப் பண்பாட்டு, சூழல் வாய்ப்புகளுக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

2000 ஆண்டுகளுக்கு முன்பே காவிரிப்பூம்பட்டினம், மதுரை, கொற்கை போன்ற பெருநகரங்களின் தெருவிளக்குத் தூண்களிலும், கோயிலின் தூண்டாமணி விளக்குகளிலும் இந்த எண்ணெய் வகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கென்று பல்வேறு எண்ணெய் தரும் பயிரினங்கள் கண்டறியப்பட்டன.

குறிப்பாக புன்னை, இலுப்பை, ஆமணக்கு போன்றவை எரிபொருளுக்காகவே பயன்படுத்தப்பட்டன. இவை “உண்ணா எண்ணெய்’ என்ற பிரிவைச் சாரும். உண்ணும் எண்ணெய் வகைகளான எள், தென்னை போன்றவை தனி.

ஆழிப்பேரலையின் ஊழிக் கூத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி நாகைக் கடற்கரை. அங்கு எந்தவிதப் பாதிப்பும் இன்றி செழித்து நின்றது புன்னை மரம்.

புன்னை இலக்கியவாணர்களின் ஓர் இனிய பயிர். சங்க இலக்கியங்களில் பெரிதும் பேசப்படும் மரமும் இதுவே. குறிப்பாக நெய்தல் பற்றிப் பாட முனையும் புலவன் புன்னையைத் தொடாமல் போவதில்லை. இந்தப் புன்னை மரத்தில் காய்த்துக் கொட்டுபவைதான் புன்னங் கொட்டைகள்.

பண்டைத் தமிழ்ச் சமூகம், மரங்களையும் உடன் பிறந்தவர்களாகப் பாவித்து வந்தனர். அவ்வகையில் புன்னை மரமும் அவர்களது வாழக்கையின் அங்கமாக இருந்து வந்தது.

ஒப்பீட்டளவில் மற்ற எரிபொருள் மரங்களைவிட அதிகப் பயன் தருவதாக புன்னை மரம் உள்ளது. இதன் பொருளியல் மதிப்பைப் பார்ப்போம்.

புன்னை விதையில் இருந்து கிடைக்கும் எண்ணெயை நேரடியாக மோட்டார்களில் பயன்படுத்த முடியும். வெளியாகும் புகையின் அளவும் குறைவாக இருக்கும். எண்ணெயின் தேவையும் டீசலை ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. அதாவது ஒரு மணி நேரம் இயங்குவதற்கு 900 முதல் 1000 மிலி டீசல் தேவை எனில் அதுவே புன்னை எண்ணெய் 600 மிலி என்ற அளவே போதுமானதாக இருக்கிறது. அத்துடன் கரும்புகையின் அளவு டீசலில் அதிகமாக இருப்பதுடன் மிக எரிச்சலூட்டும் நெடியும் இருக்கும். ஆனால் புன்னை எண்ணெயைப் பயன்படுத்தும்போது புகை குறைவாக வரும். அத்துடன் விரும்பத்தக்க மணமும் இருக்கும்.

அதாவது ஒரு கோயிலினுள் இருக்கின்ற உணர்வு ஏற்படும். எந்திரத்தில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை என்பது அதைவிட கூடுதல் பயன்.

எடுத்துக்காட்டாக டீசல் விலை லிட்டருக்கு 33 ரூபாய். அதேசமயம் சந்தையில் புன்னை எண்ணெயின் விலை லிட்டருக்கு 40 ரூபாய். ஆனால் ஒரு மணி நேரம் இயக்குவதற்கு 600 மிலி புன்னை எண்ணெய் போதுமானது. எனவே இதன் உண்மையான விலை 24 ரூபாய் மட்டுமே!

ஒரு பண்ணையாளர் தமக்குத் தேவையான அனைத்து ஆற்றல் தேவைகளுக்கும் தனது பண்ணையில் வளரும் புன்னை மரத்தைக் கொண்டே நிறைவு செய்து கொள்ள முடியும். அவர் பிற மின்சாரத் தேவைகளுக்குக்கூட அரசு நிறுவனங்களையோ தனியார் நிறுவனங்களையோ அண்டியிருக்க வேண்டியதில்லாத சுயசார்பு உள்ளவராக மாற முடியும்.

முந்தைய காலங்களில் வண்டிகள் செய்வதற்கு இந்த புன்னை மரத்தையே பயன்படுத்தி உள்ளனர். இது கனமற்ற ஒரு மரம். அத்துடன் இதில் உள்ள எண்ணெய்ச் சாரம் பூச்சிகள், கரையான்கள் இவற்றின் தாக்குதலுக்கு இலக்காகாமல் இருக்கும் தன்மை கொண்டது.

இப்போது மண்வெட்டி போன்ற வேளாண்மைக் கருவிகளுக்கு கைப்பிடிகளாக புன்னை மரம் பயன்படுகிறது.

இம்மரம் வளரும் இடங்களில் நிலத்தடி நீர் வளம் அருகில் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்குமெனில் இதற்கு நீர் எடுத்து ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. நிலத்தடி நீர் வளம் குறைவான இடங்களில் நீர் எடுத்து ஊற்றி வளர்க்க வேண்டும்.

இம்மரம் பசுமைமாறா மரவகையைச் சேர்ந்தது. எனவே எப்போதும் இது பச்சை இலைகளோடு காணப்படும். இலைகள், காம்புகளில் பால் வடியும் தன்மை உள்ளது. அதனாலேயே வளப்பான பச்சையம் பெற்றிருக்கிறது. அதிக அளவிற்கு ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுகிறது.

இந்த மரத்தில் எப்போதும் பூக்கள் இருக்கின்றன, காய்களும் இருக்கின்றன. காட்டாமணக்கு, புங்கை போன்று அல்லாமல் எல்லாக் காலத்திலும் காய்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இதன் அறிவியல் பெயர் “கோலோபில்லம் ஐனோபில்லம்’.

தமிழ்நாட்டின் சிறப்புப் பயிரான இம் மரத்தை அதிக அளவில் பெருக்கினால் நாட்டின் மாற்று எரிபொருள் தேவையை நிறைவு செய்து விடலாம். கோடிக்கணக்கில் பெட்ரோலியப் பொருள்களை இறக்குமதி செய்யும் செலவும் மிச்சமாகும்.

புன்னை மரங்களை அதிக அளவில் வளர்ப்பதன் முலம் நல்ல வளமான காடுகளையும் உருவாக்கிவிடலாம். இது சுனாமி போன்ற கடலோரப் பேரழிவைத் தடுக்கும் அரணாகவும் விளங்கும். தமிழகத்தின் 700 கி.மீ. தொலைவு நல்ல கடலரண் ஒன்று கிடைக்கும்.

அன்றைய சங்கத் தமிழ்த்தாய் சொன்ன புன்னையின் சிறப்பை இன்று நாம் உணர்ந்து பயன்படுத்துவோம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Apr 12, 2010 12:13 pm

அருமையான தகவல் நன்றி அண்ணா,தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் தரப்படும் அதுதான் ஈகரை, நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Apr 12, 2010 12:15 pm

சிவா wrote:
“அன்னை கூறிய புன்னையின் சிறப்பு’


இன்றைய உலகை ஆட்டுவிக்கும் அல்லது இயக்கும் ஆற்றலான பெட்ரோலியப் பொருள்கள் இன்னும் கொஞ்ச நாளில் படிப்படியாக மறைந்து போகும் என்பதை அனைவரும் அறிவர்.

இதற்கு மாற்று எரிபொருள்களைத் தேடுவதில் உலக நாடுகள் அனைத்தும் போட்டி போடுகின்றன. நீடித்த, சுற்றுச்சூழலைக் கெடுக்காத ஆற்றல் வளங்கள் பற்றிய ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதில் ஒன்றான செடியின எரிபொருள்களைத் தேடுவதில் அறிவியல் ஆய்வாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் செடியின எரிபொருள்கள்தாம் உண்மையில் பண்டைய எரிபொருள்கள் ஆகும்.

வீட்டு விளக்குகளிலும், விளக்குத் தூண்களிலும் ஏன் கலங்கரை விளக்கங்களிலும் இவை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இந்தப் பயிரின எண்ணெய்கள் அந்தந்தப் பண்பாட்டு, சூழல் வாய்ப்புகளுக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

2000 ஆண்டுகளுக்கு முன்பே காவிரிப்பூம்பட்டினம், மதுரை, கொற்கை போன்ற பெருநகரங்களின் தெருவிளக்குத் தூண்களிலும், கோயிலின் தூண்டாமணி விளக்குகளிலும் இந்த எண்ணெய் வகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கென்று பல்வேறு எண்ணெய் தரும் பயிரினங்கள் கண்டறியப்பட்டன.

குறிப்பாக புன்னை, இலுப்பை, ஆமணக்கு போன்றவை எரிபொருளுக்காகவே பயன்படுத்தப்பட்டன. இவை “உண்ணா எண்ணெய்’ என்ற பிரிவைச் சாரும். உண்ணும் எண்ணெய் வகைகளான எள், தென்னை போன்றவை தனி.

ஆழிப்பேரலையின் ஊழிக் கூத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி நாகைக் கடற்கரை. அங்கு எந்தவிதப் பாதிப்பும் இன்றி செழித்து நின்றது புன்னை மரம்.

புன்னை இலக்கியவாணர்களின் ஓர் இனிய பயிர். சங்க இலக்கியங்களில் பெரிதும் பேசப்படும் மரமும் இதுவே. குறிப்பாக நெய்தல் பற்றிப் பாட முனையும் புலவன் புன்னையைத் தொடாமல் போவதில்லை. இந்தப் புன்னை மரத்தில் காய்த்துக் கொட்டுபவைதான் புன்னங் கொட்டைகள்.

பண்டைத் தமிழ்ச் சமூகம், மரங்களையும் உடன் பிறந்தவர்களாகப் பாவித்து வந்தனர். அவ்வகையில் புன்னை மரமும் அவர்களது வாழக்கையின் அங்கமாக இருந்து வந்தது.

ஒப்பீட்டளவில் மற்ற எரிபொருள் மரங்களைவிட அதிகப் பயன் தருவதாக புன்னை மரம் உள்ளது. இதன் பொருளியல் மதிப்பைப் பார்ப்போம்.

புன்னை விதையில் இருந்து கிடைக்கும் எண்ணெயை நேரடியாக மோட்டார்களில் பயன்படுத்த முடியும். வெளியாகும் புகையின் அளவும் குறைவாக இருக்கும். எண்ணெயின் தேவையும் டீசலை ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. அதாவது ஒரு மணி நேரம் இயங்குவதற்கு 900 முதல் 1000 மிலி டீசல் தேவை எனில் அதுவே புன்னை எண்ணெய் 600 மிலி என்ற அளவே போதுமானதாக இருக்கிறது. அத்துடன் கரும்புகையின் அளவு டீசலில் அதிகமாக இருப்பதுடன் மிக எரிச்சலூட்டும் நெடியும் இருக்கும். ஆனால் புன்னை எண்ணெயைப் பயன்படுத்தும்போது புகை குறைவாக வரும். அத்துடன் விரும்பத்தக்க மணமும் இருக்கும்.

அதாவது ஒரு கோயிலினுள் இருக்கின்ற உணர்வு ஏற்படும். எந்திரத்தில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை என்பது அதைவிட கூடுதல் பயன்.

எடுத்துக்காட்டாக டீசல் விலை லிட்டருக்கு 33 ரூபாய். அதேசமயம் சந்தையில் புன்னை எண்ணெயின் விலை லிட்டருக்கு 40 ரூபாய். ஆனால் ஒரு மணி நேரம் இயக்குவதற்கு 600 மிலி புன்னை எண்ணெய் போதுமானது. எனவே இதன் உண்மையான விலை 24 ரூபாய் மட்டுமே!

ஒரு பண்ணையாளர் தமக்குத் தேவையான அனைத்து ஆற்றல் தேவைகளுக்கும் தனது பண்ணையில் வளரும் புன்னை மரத்தைக் கொண்டே நிறைவு செய்து கொள்ள முடியும். அவர் பிற மின்சாரத் தேவைகளுக்குக்கூட அரசு நிறுவனங்களையோ தனியார் நிறுவனங்களையோ அண்டியிருக்க வேண்டியதில்லாத சுயசார்பு உள்ளவராக மாற முடியும்.

முந்தைய காலங்களில் வண்டிகள் செய்வதற்கு இந்த புன்னை மரத்தையே பயன்படுத்தி உள்ளனர். இது கனமற்ற ஒரு மரம். அத்துடன் இதில் உள்ள எண்ணெய்ச் சாரம் பூச்சிகள், கரையான்கள் இவற்றின் தாக்குதலுக்கு இலக்காகாமல் இருக்கும் தன்மை கொண்டது.

இப்போது மண்வெட்டி போன்ற வேளாண்மைக் கருவிகளுக்கு கைப்பிடிகளாக புன்னை மரம் பயன்படுகிறது.

இம்மரம் வளரும் இடங்களில் நிலத்தடி நீர் வளம் அருகில் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்குமெனில் இதற்கு நீர் எடுத்து ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. நிலத்தடி நீர் வளம் குறைவான இடங்களில் நீர் எடுத்து ஊற்றி வளர்க்க வேண்டும்.

இம்மரம் பசுமைமாறா மரவகையைச் சேர்ந்தது. எனவே எப்போதும் இது பச்சை இலைகளோடு காணப்படும். இலைகள், காம்புகளில் பால் வடியும் தன்மை உள்ளது. அதனாலேயே வளப்பான பச்சையம் பெற்றிருக்கிறது. அதிக அளவிற்கு ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுகிறது.

இந்த மரத்தில் எப்போதும் பூக்கள் இருக்கின்றன, காய்களும் இருக்கின்றன. காட்டாமணக்கு, புங்கை போன்று அல்லாமல் எல்லாக் காலத்திலும் காய்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இதன் அறிவியல் பெயர் “கோலோபில்லம் ஐனோபில்லம்’.

தமிழ்நாட்டின் சிறப்புப் பயிரான இம் மரத்தை அதிக அளவில் பெருக்கினால் நாட்டின் மாற்று எரிபொருள் தேவையை நிறைவு செய்து விடலாம். கோடிக்கணக்கில் பெட்ரோலியப் பொருள்களை இறக்குமதி செய்யும் செலவும் மிச்சமாகும்.

புன்னை மரங்களை அதிக அளவில் வளர்ப்பதன் முலம் நல்ல வளமான காடுகளையும் உருவாக்கிவிடலாம். இது சுனாமி போன்ற கடலோரப் பேரழிவைத் தடுக்கும் அரணாகவும் விளங்கும். தமிழகத்தின் 700 கி.மீ. தொலைவு நல்ல கடலரண் ஒன்று கிடைக்கும்.

அன்றைய சங்கத் தமிழ்த்தாய் சொன்ன புன்னையின் சிறப்பை இன்று நாம் உணர்ந்து பயன்படுத்துவோம்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 12, 2010 12:15 pm

பொன்னியின் செல்வனில் ஓரிடத்தில் இயற்கை பற்றிய வர்ணனை இவ்வாறு உள்ளது!

"நதிகளும் ஓடைகளும் தடாகங்களும் கழனிகளும் புதுநீர் நிறைந்து ததும்புகின்றன. அவற்றில் பல வர்ண மலர்கள் பூத்துத் திகழ்கின்றன. தென்னை மரங்களும் புன்னை மரங்களும் குளிர்ச்சியான பசுமையைப் பரப்புகின்றன. இவ்வளவுக்கும் இடையிடையே விண்முட்டும் மணி மாடமாளிகைகளின் பொற்கலசங்களும், கோயில் கோபுரங்களின் உச்சியில் உள்ள தங்க ஸ்தூபிகளும் ஒளிவீசுகின்றன."

இவ்வாறு இயற்கையின் அம்சமாகத் திகழும் புன்னை மரத்தை குயிகள் நாடிச் செல்வதில் வியப்பொன்றும் இல்லையே ப்ரியா!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Apr 12, 2010 12:26 pm

சிவா wrote:பொன்னியின் செல்வனில் ஓரிடத்தில் இயற்கை பற்றிய வர்ணனை இவ்வாறு உள்ளது!

"நதிகளும் ஓடைகளும் தடாகங்களும் கழனிகளும் புதுநீர் நிறைந்து ததும்புகின்றன. அவற்றில் பல வர்ண மலர்கள் பூத்துத் திகழ்கின்றன. தென்னை மரங்களும் புன்னை மரங்களும் குளிர்ச்சியான பசுமையைப் பரப்புகின்றன. இவ்வளவுக்கும் இடையிடையே விண்முட்டும் மணி மாடமாளிகைகளின் பொற்கலசங்களும், கோயில் கோபுரங்களின் உச்சியில் உள்ள தங்க ஸ்தூபிகளும் ஒளிவீசுகின்றன."

இவ்வாறு இயற்கையின் அம்சமாகத் திகழும் புன்னை மரத்தை குயிகள் நாடிச் செல்வதில் வியப்பொன்றும் இல்லையே ப்ரியா!
அருமை அண்ணா, நன்றிகள் சிறப்பாக புன்னை மரத்தைப் பற்றி விளக்கியுள்ளீர்கள் அண்ணா.
[You must be registered and logged in to see this image.]

உங்களுடைய இந்த "கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் தமிழ் பூக்கள் " என்ற படைப்பு, ஈகரையின் மகுடத்தில் சேர்க்கபட்ட இன்னொரு வைரக்கல் .. வாழ்த்துக்கள்
நாம் தமிழர், தமிழ் என்பதில் எமக்கு பெருமை


நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Apr 12, 2010 12:29 pm

நல்லதொரு பதிவு அண்ணா அனைவருக்கும் இது உதவும் என்று நினைக்கிறேன்



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
karpahapriyan
karpahapriyan
பண்பாளர்

பதிவுகள் : 151
இணைந்தது : 15/09/2010
http://http;//manikpriya.blogspot.com

Postkarpahapriyan Sat Oct 02, 2010 10:15 am

நன்றி இது தமிழ் பெயர் அறிமுகத்திற்கு



கற்பகப்ரியன்

[You must be registered and logged in to see this link.]
vivekkalaivani
vivekkalaivani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 27/11/2011

Postvivekkalaivani Tue Dec 27, 2011 1:10 pm

அருமையான விளக்கம் நண்பா. இத்தனை பூக்கள் உள்ளனாவா? என்று நினைத்த வேலையில் படத்துடன் விளக்கியதற்கு நன்றி



விவேக்குமார்
Sponsored content

PostSponsored content



Page 12 of 14 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக