ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவேக சிந்தாமணி....

+4
ஹாசிம்
ராஜா
சிவா
dharshi
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விவேக சிந்தாமணி.... Empty விவேக சிந்தாமணி....

Post by dharshi Sat Apr 10, 2010 10:26 am





நீதிக் கருத்துக்களை பாடல்களின் மூலமாக கூறும் அதே வேளை பல்வேறு சுவை ததும்பும் பாடல்களும் கலந்து அழகு படத் தொகுக்கபாட்ட நூலே விவேக சிந்தாமணியாகும்.

இலக்கியங்கள் பலவற்றிலிருந்தும், தனிப்பாடல்களாக உலவியவற்றிலிருந்தும் சிறந்த பாடல்களாக தாம் கருதியவற்றை தேர்ந்தெடுத்து கதம்பமாக்கி தருகிறார் தொகுப்பாசிரியர்.

தொகுத்தவர் யாரென்றும், அவர் காலம் என்னவென்றும் இன்னும் திட்டவட்டமாக தெரியவில்லை.

இந்த நூல் நாயக்க மன்னர்கள் காலத்தில் உருப்பெற்றிருக்கலாம் என்பது ஒரு சாரார் கருத்து.

தொகுத்தவர், பாடல்களை எந்தவித வகுப்பு பகுப்புக்கும் உட்படுத்தாமல் எந்த வித வரைமுறையும் பயன்படுத்தாமல் வெறும் கலவையாக தந்துள்ளார்.

அவ்வாறு தந்த பாடல்களில், ஏறத்தாள எல்லாப் பாடல்களும் சிந்தைக்கிநியவை, பொருள் புரிதற்கு எளியவை.

சில பாடல்கள் இந்தக் காலத்திற்கு ஒவ்வாதவையாகவும், ஏற்றுக்கொள்ள இயலாதவையாகவும் உள்ள போதிலும், அக்கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கும் விதத்திற்காக அப்பாடல்களை படித்துச் சுவைக்கலாம்.

அந்தப் பாடல்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னால முடிந்தவரை விளக்கவுரை எழுத முயல்கிறேன்...இந்த சிறியவளின் முயற்சியில் ஏதேனும் பிழையிருந்தால் பொறுத்தும், திருத்தியும் வழிநடத்த வேண்டுகிறேன்...

இங்கு விவேக சிந்தாமணியின் கடவுள் வாழ்த்துடன் என் சிறு முயற்ச்சியை ஆரம்பிக்கின்றேன்... நண்பர்கள் வழிநடத்துவார்கள் என்று..


கடவுள் வாழ்த்து



“அல்லல்போம் வல்வினைபோம்
அன்னைவயிற் றிற்பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்ல
குணம் அதிக மாம் அருணைக்
கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.”



பொருள் :-


திருவண்ணாமலைக் கொபுரத்துள்ளே குடிகொண்டிருக்கும் விநாயகப் பெருமானைக் கரம் கூப்பி வணங்கினால், துன்பங்கள் தொலையும், கொடிய வினைப் பயன்கள் போகும், ஒரு தாயின் வயிற்றில் பிறந்து வந்ததாகிய பிறவித்துயர் நீங்கும், இன்னும் நீங்காமல் எந்தத் துயரம் இருந்தாலும் போகும். இவ்வாறு துன்பங்கள் எல்லாம் விலகி நல்ல நிலை கிடைக்க பெறும்.

குறிப்புரை :-

போம் - போகும், தொழுதக்கால் - தொழுதால்( 'கால்' என்னும் எழனுருபு மூன்றாம் வேற்றுமையுருபின் பொருளில் வந்தது ).
dharshi
dharshi
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010

http://siththarkal.blogspot.com/

Back to top Go down

விவேக சிந்தாமணி.... Empty Re: விவேக சிந்தாமணி....

Post by சிவா Sat Apr 10, 2010 10:32 am

மிகவும் அருமையான முயற்சி தர்ஷி! தொடர்ந்து எழுத வாழ்த்துகிறேன்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவேக சிந்தாமணி.... Empty Re: விவேக சிந்தாமணி....

Post by ராஜா Sat Apr 10, 2010 10:43 am

வாழ்த்துக்கள் சகோதரி , இது போல இன்னும் பல பதிவுகள் இடவேண்டுமென வாழ்த்துகிறேன். [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விவேக சிந்தாமணி.... Empty Re: விவேக சிந்தாமணி....

Post by ஹாசிம் Sat Apr 10, 2010 10:48 am

ராஜா wrote:வாழ்த்துக்கள் சகோதரி , இது போல இன்னும் பல பதிவுகள் இடவேண்டுமென வாழ்த்துகிறேன். [You must be registered and logged in to see this image.]
தொடருங்கள்


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

விவேக சிந்தாமணி.... Empty Re: விவேக சிந்தாமணி....

Post by dharshi Sat Apr 10, 2010 2:01 pm

அனைவருக்கும் மிக்க நன்றிகள்...
dharshi
dharshi
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010

http://siththarkal.blogspot.com/

Back to top Go down

விவேக சிந்தாமணி.... Empty Re: விவேக சிந்தாமணி....

Post by dharshi Sat Apr 10, 2010 2:04 pm

காலம் வந்த பின்பும், காரியம் முடிந்த பின்னும் நடப்பவை.

“பிள்ளைதான் வயதில் முத்தால்
பிதாவின்சொற் புத்தி கேளான்
கள்ளின்நல் குழலாள் முத்தால்
கணவனைக் கருதிப் பாராள்
தெள்ளற வித்தை கற்றால்
சீடனும் குருவைத் தேடான்
உள்ளநோய் பிணிகள் தீர்ந்தால்
உலகோர்பண் டிதரைத் தேடார்”



பொருள் :-
புதல்வன் பிராயம் முதிர்ந்தவன் ஆகிவிட்டால் தந்தை சொல்லுகின்ற புத்தி மதிகளைக் கேட்க மாட்டான். அழகிய கூந்தலை உடையவளான மனைவி வயாதானபின் தன மணாளனை பொருட்டாக மதிக்க மாட்டாள். தெளிவாக ஐய்யந்திரிபறக் கல்வியைக் கற்றுக் கொண்டபின் மாணாக்கனும் ஆசிரியனை நாடமாட்டான். சரீரத்திலுள்ள வியாதிகள் குணமடைந்து விட்டால் இவ்வுலகத்தினர் அதன் பின் வைத்தியரை நாட மாட்டார்கள்.
dharshi
dharshi
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010

http://siththarkal.blogspot.com/

Back to top Go down

விவேக சிந்தாமணி.... Empty Re: விவேக சிந்தாமணி....

Post by அன்பு தளபதி Sat Apr 10, 2010 2:43 pm

இன்னும் பல நூற்றண்டுகளுக்கு பின்னரும் பொருந்தும் கருத்துக்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

விவேக சிந்தாமணி.... Empty Re: விவேக சிந்தாமணி....

Post by ப்ரியா Sat Apr 10, 2010 2:57 pm

maniajith007 wrote:இன்னும் பல நூற்றண்டுகளுக்கு பின்னரும் பொருந்தும் கருத்துக்கள்

நிச்சயமாக மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

விவேக சிந்தாமணி.... Empty Re: விவேக சிந்தாமணி....

Post by dharshi Sat Apr 10, 2010 3:40 pm

"கதிர்பெறு செந்நெல்வாடக்
கார்க்குலம் கண்டு சென்று
கொதிநிரைக் கடலில் பெய்யும்
கொள்கைபோல் குவலயத்தே
மதிதனம் படைத்த பேர்கள்
வாடினோர் முகத்தைப் பாரார்
நிதிமிகப் படைத்தோர்க் கீவார்
நிலை இலார்க்கு ஈயமாட்டார்."



பொருள் :-


கதிர்களை யுடைய செந்நெற் பயிர்கள் நீரில்லாமல் வடாடிக்கொண்டிருக்க மேகக் கூட்டமானது அதைக் கண்ட போதும் அந்த இடத்தில் மழையைப் பெய்யாமல் ஆர்ப்பரிக்கும் அலைகளைக் கொண்ட கடலிலே பெய்தாற் போல, உலகத்தார்கள் மதிக்கும் அளவு அதிக செல்வம் பெற்ற செல்வந்தர்கள், வறுமையால் வாடுபர்களுக்கு உதவிடாமல், செல்வம் உள்ளவருக்கே கொடுக்கிறார்களாம்.

குறிப்புரை :-
மதிதனம் - வினைத்தொகை.


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றென்றும் நட்புடன்,
dharshi.
[You must be registered and logged in to see this link.]
dharshi
dharshi
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010

http://siththarkal.blogspot.com/

Back to top Go down

விவேக சிந்தாமணி.... Empty Re: விவேக சிந்தாமணி....

Post by கலைவேந்தன் Sat Apr 10, 2010 3:47 pm

அருமையான முயற்சி தர்ஷி...தொடர்ந்து தாருஙகள்... [You must be registered and logged in to see this image.]



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

விவேக சிந்தாமணி.... Empty Re: விவேக சிந்தாமணி....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum