புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்புங்கள் நடக்கும் I_vote_lcapநம்புங்கள் நடக்கும் I_voting_barநம்புங்கள் நடக்கும் I_vote_rcap 
46 Posts - 77%
dhilipdsp
நம்புங்கள் நடக்கும் I_vote_lcapநம்புங்கள் நடக்கும் I_voting_barநம்புங்கள் நடக்கும் I_vote_rcap 
4 Posts - 7%
வேல்முருகன் காசி
நம்புங்கள் நடக்கும் I_vote_lcapநம்புங்கள் நடக்கும் I_voting_barநம்புங்கள் நடக்கும் I_vote_rcap 
3 Posts - 5%
mohamed nizamudeen
நம்புங்கள் நடக்கும் I_vote_lcapநம்புங்கள் நடக்கும் I_voting_barநம்புங்கள் நடக்கும் I_vote_rcap 
3 Posts - 5%
heezulia
நம்புங்கள் நடக்கும் I_vote_lcapநம்புங்கள் நடக்கும் I_voting_barநம்புங்கள் நடக்கும் I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
நம்புங்கள் நடக்கும் I_vote_lcapநம்புங்கள் நடக்கும் I_voting_barநம்புங்கள் நடக்கும் I_vote_rcap 
1 Post - 2%
Guna.D
நம்புங்கள் நடக்கும் I_vote_lcapநம்புங்கள் நடக்கும் I_voting_barநம்புங்கள் நடக்கும் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்புங்கள் நடக்கும் I_vote_lcapநம்புங்கள் நடக்கும் I_voting_barநம்புங்கள் நடக்கும் I_vote_rcap 
41 Posts - 79%
dhilipdsp
நம்புங்கள் நடக்கும் I_vote_lcapநம்புங்கள் நடக்கும் I_voting_barநம்புங்கள் நடக்கும் I_vote_rcap 
4 Posts - 8%
mohamed nizamudeen
நம்புங்கள் நடக்கும் I_vote_lcapநம்புங்கள் நடக்கும் I_voting_barநம்புங்கள் நடக்கும் I_vote_rcap 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
நம்புங்கள் நடக்கும் I_vote_lcapநம்புங்கள் நடக்கும் I_voting_barநம்புங்கள் நடக்கும் I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
நம்புங்கள் நடக்கும் I_vote_lcapநம்புங்கள் நடக்கும் I_voting_barநம்புங்கள் நடக்கும் I_vote_rcap 
1 Post - 2%
Guna.D
நம்புங்கள் நடக்கும் I_vote_lcapநம்புங்கள் நடக்கும் I_voting_barநம்புங்கள் நடக்கும் I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்புங்கள் நடக்கும்


   
   
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Thu Apr 08, 2010 9:56 pm

நம்பிக்கை. நிச்சயமாக இது ஒரு மந்திரச்சொல். இந்த மந்திரச்சொல்லை மனதில் பதித்து அடிக்கடி உச்சரித்து உழைத்த பலர் வெற்றி உச்சத்திற்கு சென்றிருக்கிறார்கள். இந்த பூமிக்கு வந்துவிட்ட ஒவ்வொரு மனிதனும் முதலில் தன் தாயின் கைபிடித்து நடக்கிறான். ஒரு கட்டத்திற்கு பின்னர் நம்பிக்கையின் கையைப் பிடித்து நடக்கத் தொடங்குகிறான். கைகளை இழந்தவர்கள் கூட நம்பிக்கைகளை தங்கள் கைகளாகக் கொண்டு பலவிதமான சாதனைகளை செய்து கொண்டு தான் இருக்கின்றனர். இரண்டு கைகள் உள்ள பலரும் நம்பிக்கை மீது நம்பிக்கையில்லாமல் தங்கள் வாழ்க்கையை தொலைத்த வண்ணம் இருக்கின்றனர்.

என்றாவது ஒருநாள் நம் வாழ்க்கையில் வெளிச்சம் பிறக்கும் என்று ஏங்கித் தவிப்பவர்கள் ஏராளம். இப்படி ஏங்கித் தவித்தால் போதுமா? நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் முழு நம்பிக்கையோடு செய்யப் பழக வேண்டும். ஒரு ஊரில் வருடக்கணக்கில் மழை பெய்யவில்லை. ஊர் மக்கள் மழைக்காக ஒரு யாகம் நடத்தினார்கள். நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட அந்த யாகத்தில் ஒரே ஒரு இளைஞன் மட்டும் குடையோடு வந்திருந்தான். பலர் அவனை விநோதமாய் பார்த்தார்கள். சிலர் கேலி யும் செய்தார்கள். வீடு திரும்பும்போது நிச்சயம் மழை வரும் என்று அவன் நம்பிக்கையுடன் பதிலளித்தான். இளைஞனின் நம்பிக்கை ஜெயித் தது. அவனைத் தவிர அனைவரும் மழையில் நனைந்து கொண்டே வீடு திரும்பினார்கள்.

மறுநாள் காலை நிச்சயம் எழுந்து விடுவோம் என்று நமக்கிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படையில்தான் நாம் ஒவ்வொரு இரவும் நிம்மதியாய் தூங்கச் செல்லுகிறோம். வீட்டிற்கு நிச்சயமாய் திரும்பி விடுவோம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் நாம் தினம் தினம் வீட்டைவிட்டு புறப்படு கிறோம். ஆக நம் வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயமும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே நிகழ்கிறது என்றால் அது மிகையாகாது.

வில்பர் ரைட், ஆர்வில் ரைட் என்ற ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தவர் கள். விமானத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருவருக்குமே சின்னஞ்சிறு வயது முதலே இருந்து வந்தது. ஏன் ஒரு வைராக்கியம் என்றே சொல்லலாம்.

சிறுவயதில் ரைட் சகோதரர்கள் தங்கள் தாயாருடன் ஒரு ஆற்றங்கரையில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். ஆற்றங்கரையில் ஒரு பறவை பறந்து செல்வதைக் கண்டார்கள். அப்போது வில்பர் ரைட் தன் தாயாரிடம் கேட்டான்.

“அம்மா நமக்கும் சிறகுகள் இருந்தால் நாமும் அந்த பறவையைப் போல பறக்கலாம் அல்லவா?”

அம்மா முடியாது என்று சொல்ல வில்லை. அப்பொழுதே அவன் மனதில் நம்பிக் கையை விதைத்தாள்.

“நிச்சயம் பறக்கலாம் ரைட்”

உடனே வில்பர் சொன்னான்.

“அம்மா, என்றாவது ஒருநாள் பறந்தே தீருவேன்”

சின்னஞ்சிறு வயதில் என்ன ஒரு ஆழ்ந்த நம்பிக்கை ஆச்சரியம்தான்.

ஒருசமயம் தடிமனான அட்டைக் கொண்டு காற்றாடி ஒன்றைச் செய்து பறக்க விட்டார்கள். காற்றாடி தடினமாக இருந்ததால் அது அவர்களை மேலே இழுக்க முயற்சித்தது. அப்போது ஆர்வில் சொன்னான்.

“விரைவில் நம்மைச் சுமந்து செல்லும் ஒரு காற்றாடியை நாம் செய்தே தீர வேண்டும்”

வில்பரும் “நிச்சயம் செய்யலாம்” என்றான்.

ஒருநாள் வில்பர் தன் தந்தையிடம் நம்மைச் சுமந்து செல்லும் ஒரு காற்றாடியை நான் செய்யப் போகிறேன் என்றான்.

ஆனால் அவனுடைய தந்தையோ “அது முடியாது” என்றார்.

வில்பர் விடவில்லை.

“நிச்சயம் செய்வேன்” என்றான்.

சகோதரர்கள் கண்ட கனவு ஒருநாள் பலித்தது.

வடகரோலினா மாகாணத்தில் கிட்டிஹா என்ற இடத்தில் 1903ஆம் ஆண்டு ரைட் சகோதரர்கள் தாங்கள் வடிவமைத்த சிறிய கிளைடர் விமானத்தில் பறந்து காட்டினார்கள். நம்பிக்கை ஜெயித்தது. முடியாது என்ற சொல் வெட்கித் தலைகுனிந்தது.

நம்மில் பலருக்கு தம்மீதே நம்பிக்கை இருப்பதில்லை. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல தோல்விகளுக்கு இந்த எண்ணமே காரணமாகி விடுகிறது. நாம் முதலில் நம் மீது திடமான நம்பிக்கை வைக்க வேண்டும்., அப்போதுதான் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் நம் மனதில் தோன்றும். இந்த எண்ணம் தோன்றிவிட்டால் தொட்டதெல்லாம் வெற்றி தான். நம்மை நம்பாத போது தாழ்வு மனப் பான்மை நம் மனதில் வந்து சிம்மாசனமிட்டு உட்கார்ந்து கொண்டு நம்முடைய செயல்களை முடக்கி விடுகிறது.

அமெரிக்காகவை கண்டுபிடித்தவர் கொலம்பஸ். ஆனால், இவர் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு கடல்வழியைக் கண்டுபிடிக்கவே திட்டமிட்டார். எதிர்பாராதவிதமாக அமெரிக் காவைக் கண்டுபிடித்தார். அட்லாண்டிக் பெருங் கடலில் நெடும்பயணம் மேற்கொண்டால் இந்தியாவை அடைந்து விடலாம் என்று நம்பிக்கை இவருக்கு ஏற்பட்டது. ஸ்பெயின் மன்னரின் உதவியோடு சிலரை துணைக்கு அழைத்துக் கொண்டு கப்பலில் பயணத்தைத் தொடங்கினார்.

பயணம் பலமாதங்கள் நீடித்தன. கொலம்பஸ் உடன் வந்தவர்கள் அனைவரும் நம்பிக்கை இழந்து விட்டார்கள். அவர்களுக்கு தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றிவிட்டது. அவர்கள் கொலம்பஸிடம் வந்த வழியாகத் திரும்பிச் சென்று விடலாம் என்று வற்புறுத்தத் தொடங்கினார்கள். ஆனால் கொலம்பஸ் அவர்களின் சொற்களை காதில் வாங்கவே மறுத்துவிட்டார். திரும்பிச் செல்லும் பேச்சுக்கே இடமில்லை என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.

உடன் வந்தவர்கள் ஒன்று கூடி சதித்திட்டம் ஒன்றைத் தீட்டினார்கள். அதன்படி கொலம்பஸை கடலில் தள்ளிக் கொன்றுவிட்டு தாங்கள் அனைவரும் நாட்டிற்குத் திரும்ப முடிவு செய்தார்கள்.

ஒருநாள் கொலம்பஸ் கப்பலின் மேற்பரப் பில் நம்பிக்கையுடன் ஏதாவது நிலப்பகுதி தெரி கிறதா என்று பார்த்தவாறே நின்று கொண்டிருந் தார். உடன் வந்தவர்களில் சிலர் அவருக்குப் பின்புறமாக மெல்ல வந்தார்கள். இன்னும் சற்று நேரத்தில் அவரைப் பிடித்துத் தள்ளப் போகிறார் கள். அச்சமயத்தில் கொலம்பஸ் சந்தோஷத்தில் கத்த ஆரம்பித்தார். காரணம் கடலின் மேற் பரப்பில் இலைகளும் சிறுசிறு கிளைகளும் மிதந்து கொண்டிருந்தன. அருகில் நிலப்பகுதி இருக்கிறது என்பது இதன் மூலம் புரிந்தது.

தொடர்ந்து பயணித்து சில தினங்களில் ஒரு நிலப்பரப்பினை அடைந்தார்கள். கொலம்பஸ் எதிர்பார்த்தது போல அது இந்தியா அல்ல. அமெரிக்கா.

கொலம்பஸின் மனதில் இருந்த ஆழ்ந்த நம்பிக்கையே அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தது. கொலம்பஸின் அசைக்க முடியாத நம்பிக்கையே அவருடைய பெயரை சரித்திரத்தில் பதிவாகக் காரணமானது.

நம்பிக்கை என்பது சாதனை தொடர் பான விஷயம் மட்டுமல்ல. அது வாழ்க்கை தொடர்பானதும் கூட. நம் வாழ்க்கையில் அன்றாடம் தோன்றும் பிரச்சனைகளுக்கு மூல காரணம் நாம் பிறரை முழுமையாக நம்பாததாகும். நம்முடைய பெற்றோர் நமக்கு நல்லதே செய்வார்கள் என்ற நம்பிக்கை குழந்தைகளுக்கு வேண்டும். நாம் நம்முடைய குழந்தைகளை நூறு சதவிகிதம் நம்ப வேண்டும். நம்முடைய மனைவி உன்னதமானவன் என்ற நம்பிக்கை ஒவ்வொரு ஆண் மகனுக்கும் இருக்க வேண்டும். நம் கணவன் சத்தியவான் என்று மனைவி நூறு சதவிகிதம் நம்ப வேண்டும். இந்த நம்பிக்கை எப்போது பொய்த்துப் போகத் தொடங்குகிறதோ அக்கணமே குடும்பத்தில் ஆயிரமாயிரம் பிரச்சனைகள் தோன்றத் தொடங்கிவிடுகிறது.

நம்பிக்கையை வளர்த்துக் கொள்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் நல்ல எண்ணங்களைக் கொண்ட மனிதர்களுடன் மட்டுமே பழக வேண்டும். அப்போதுதான் நமக்கும் அவர்களைப் போல வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். சிலர் எதற்கெடுத் தாலும் புலம்பிக் கொண்டே இருப்பார்கள். அவர்களை நீங்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டும். புலம்பல்கள் அடுத்தவர்களைப் பற்றி குறை கூறுதல், பொறாமையோடு பேசுதல் போன்ற வற்றைத் தவிர்த்து எப்போதும் பாஸிட்டிவ் விஷயங்களை மட்டுமே பேசிப் பழக வேண்டும். தோல்விகளைக் கண்டு பயப்படவே கூடாது. தொடர்ந்து தோற்பவர்கள் ஒருநாள் ஜெயித்துத் தான் ஆக வேண்டும். இந்த நியதியை யாராலும் மாற்ற முடியாது.

தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார பல்பைக் கண்டுபிடிக்க சுமார் ஆயிரம் முறை பல விதமாக சோதனைகளைச் செய்ததாகச் சொல்லு கிறார்கள். அவர் செய்த ஆயிரம் சோதனைகளும் தோல்வியிலேயே முடிந்தன. பின்னர்தான் வெற்றிகரமான மின்சார பல்பை கண்டுபிடித்தார். ஒருவர் இதைப்பற்றி தாமஸ் ஆல்வா எடிசனிடம் கேட்டாராம்.

“ஆயிரம் முறை தோல்விகளைச் சந்தித்தீர் கள். ஆயினும் நீங்கள் சோர்ந்து போய்விட வில்லையே? இது எப்படி உங்களுக்கு சாத்திய மாயிற்று?”

இதற்கு தாமஸ் ஆல்வா எடிசன் “ஒவ்வொரு முறையும் என் சோதனை தோற்கும் போதும் ஒரு சோதனையை எப்படி செய்யக் கூடாது என்று கற்றுக் கொண்டேன். நான் ஒருபோதும் தோற்றதாகக் கருதவேயில்லை” என்றாராம். இது ஒரு பாசிட்டிவ் அணுகுமுறை. இதுபோன்ற அணுகுமுறையை நீங்கள் கடைபிடிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

நம் மனம் ஆற்றல் மிக்கது. என்னால் எதையும் செய்ய முடியும் என்று நீங்கள் உங்களுக்குள் அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள். எந்த ஒரு விஷயத்தையும் நம்பிக்கையோடு எதிர் கொள்ளுங்கள். உறுதியாய் நம்புங்கள். நிச்சயம் நினைத்தது நடக்கும். உங்கள் கனவெல்லாம் பலிக்கும். வாழ்க்கை தேனாய் இனிக்கும்.



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Wed May 19, 2010 6:18 pm

தன்னம்பிக்கையளிக்கும் கட்டுரையைத் தந்தமைக்கு
மிக்க நன்றி
நம்புங்கள் நடக்கும் 677196 நம்புங்கள் நடக்கும் 677196

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed May 19, 2010 8:42 pm

பயனுள்ள தகவல் நன்றி நன்றி நன்றி



நம்புங்கள் நடக்கும் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed May 19, 2010 9:45 pm

நம்புங்கள் நடக்கும் 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
subbu.v1987
subbu.v1987
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 19/04/2010

Postsubbu.v1987 Sat Jun 05, 2010 10:16 am

இதை போல தன்னம்பிக்கையை நான் மிகவும் விரும்புகிறேன் அன்பு நண்பரே. அருமை மிகவும் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி



முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக்கொள். பிறகு கட்டளையிடும் பதவி உனக்குத் தானாக வந்து சேரும். வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள். அதன் பின்பு எஜமானனாகும் தகுதி உனக்கு வந்து சேரும்
மூச்சு விடுபவன் எல்லாம் மனிதனல்ல "
முயசிப்பவானே மனிதன்..//
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Jun 05, 2010 10:17 am

srisivaerd wrote:தன்னம்பிக்கையளிக்கும் கட்டுரையைத் தந்தமைக்கு
மிக்க நன்றி
நம்புங்கள் நடக்கும் 677196 நம்புங்கள் நடக்கும் 677196

நன்றி ரமீஸ் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jun 05, 2010 10:25 am

நல்ல தகவல் ரமீஸ்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நம்புங்கள் நடக்கும் Logo12
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 08, 2010 11:11 pm

        




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக