Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....
5 posters
Page 1 of 1
பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....
பழனி - தமிழ் கடவுள் குடி கொண்டிருக்கும் புண்ணிய ஸ்தலம். தமிழ்நாட்டின் முக்கிய அடையாளம். வருடத்திற்கு 70 லட்சம் மக்கள் வந்து வழிபடும் இடத்தில் பக்தர்களிடம் வழிப்பறி கொள்ளை போல நூதன முறைகளில் பணம் பிடுங்கும் செயல்கள் இங்கு அதிகம். நமக்கு ஒரு கஷ்டம்னா, மன நிம்மதிக்காக கோயிலுக்கு போறோம். ஆனா அங்க போனா... ஊர்ல இருக்கிற அத்தனை கஷ்டமும் சுத்தி நின்னு டான்ஸ் ஆடினா எப்பிடி இருக்கும். அந்த நிலைமைதான்.. இங்கு வர்றவங்களுக்கு... முடிந்த வரை எச்சரிக்கையாக இருக்க சில குறிப்புகள்.
வழிப்பறி # 1
எதாவது ஒரு கடையில போய் பூஜை சமான் எல்லாம் வாங்கறீங்க, எல்லா பொருட்களையும் PACK பண்ணி கொடுத்துட்டு, 150 ரூபாய் சார் என்று சொல்லியபடியே அனுமார் வால் போல நீளமான ஒரு லிஸ்டை கொடுப்பார். லிஸ்டை CHECK பண்ணாமல் பணம் கொடுத்தால்.. பணம் போயே போச்.. ஒருவேளை நீங்கள் லிஸ்டை CHECK செய்தால்.. உங்களுக்கு உங்கள் தமிழ் மொழியே மறந்து போக கூடும். சாம்பிளுக்கு ஒரு லிஸ்ட்.
பூ - XXXXX
பழம் - XXXXX
சூடம் - XXXXX
விபூதி - XXXXX
கனி - XXXXX
வாழை - XXXXX
தேங்காய் - XXXX
ஊது பத்தி - XXXX
எலுமிச்சை -XXXX
வில்லை -XXXX
மலர் - XXXX
சந்தனம் - XXXX
கற்பூரம் - XXXX
ஜவ்வாது - XXXX
திருநீறு - XXXX
மாலை - XXXX
நன்றாக கவனித்தால் மட்டுமே விளங்கும், ஒரே பொருளை இருமுறையோ , மூன்று முறையோ லிஸ்டில் இணைத்திருப்பது. எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா...
வழிப்பறி # 2
தேமேயன கோவில் நோக்கி சென்று கொண்டு இருப்போம், பின்னால் இருந்து மிக அதட்டலாய் ஒரு குரல் நம்மை அழைக்கும். திரும்பி பார்த்தால் அவ்வளவே.. அழைத்த நபர் " என்ன சார், செருப்பு காலோடு கோயிலுக்கு போறீங்க.. இங்க வந்து விட்டுட்டு போங்க சார்" என கட்டளை இடுவார். நம்ம்ம்பி போய் செருப்பை விட்டவுடன் , ஒரு டோக்கனை கொடுத்து "சார் பத்து ரூபா " என்பார். சரி தொலையட்டும் என கொடுத்துவிட்டு 1 KM சுடும் வெய்யிலில் நடந்து வந்து பார்த்தால், கோவில் முன்பு, காலணிகள் இலவசமாய் பாதுகாக்கும் இடம் என்கின்ற பெயர் பலகை உங்களை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிக்கும்.
வழிப்பறி - 3
படியேறி கொண்டுஇருக்கும் போதே, பக்தி பழமாக கையில் தட்டோடு ஒரு நபர் எதிர்ப்பட்டு " சார் ஒரு நிமிஷம்" என்பார், என்ன, ஏது என்று கேட்பதற்குள், எதோ மந்திரம் சொல்லிக்கொண்டே தட்டில் இருந்த விபூதி, சந்தனம், குங்குமும் போன்றவற்றை உங்கள் நெற்றியில் வைப்பார். ஆஹா.. என்ன ஒரு பக்தி என நீங்கள் வியப்பதற்குள்.. சார் பத்து ரூபா கொடுங்க என்பார், எதற்கு என்று கேட்டால் " பிரசாதம் வச்சு விட்டதற்கு " என்பார், உடனே கொடுத்து விட்டால்..பிரச்சனையில்லை. வாதம் செய்தால், அவ்வளவே, மந்திரம் சொன்ன வாய், அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை பிரயோகம் செய்யும். .
இது போலவே, மொட்டை போட்டு வருபவர்களை குறி வைத்து ஒரு கூட்டம் காத்திருக்கும். எங்கிருந்தோ பாய்ந்து வந்து மொட்டையில் சந்தனமோ அல்லது அதை போல வேறேதோ.. தடவிவிட்டு , "சார் பத்து" என்பார்கள்... மொட்டையில் சந்தனம் தடவினா.. ஜில்லுன்னு இருக்கும் சார்" என்கின்ற உபதேசத்துடன்.
வழிப்பறி - 4
எல்லோருக்கும் படியளந்து விட்டு மேலேறினால், நமக்காகவே ஒரு பூசாரி காத்திருப்பார்.. "வாங்கோ வாங்கோ " லைன்ல போனா தரிசனம் ஆக 3 மணி நேரம் ஆயிடும். 50 கொடுத்துடுங்கோ.. எல்லோர் பேர்லயும் அர்ச்சனை பண்ணி எல்லோரையும், SHORT CUT-ல முருகன் கிட்டே கொண்டு போய் சேர்த்துடறேன் என்பார். கொஞ்சம் சலனப்பட்டு, பணம் கொடுத்தவுடன், அர்ச்சனை தட்டை கையில் வாங்கி வைத்துகொண்டு எல்லோரும் பேஷா ஒரு முறை பிரகாரத்தை சுத்தி வந்துடுங்கோ" என்பார். ஒரு முறை அல்ல அதற்க்கு பிறகு நூறு முறை சுற்றி வந்தாலும் அந்த பூசாரி நம் கண்ணில் படமாட்டார். GREAT ESCAPE.
இன்னும், மொட்டை அடிக்கும் இடங்களில், பஞ்சாமிர்த கடைகளில், மலை ரயிலில் என ஏகப்பட்ட இடங்களில் இவர்களின் திருவிளையாடல்கள் தொடர்கின்றன. கூட்ட நெரிசல்களில் பிக் பாக்கெட்டுகளும் மிக சுதந்திரமாக உலாவுகின்றனர். என்னடா இவன் பத்து, இருபது பணம் போறதுக்கெல்லாம் பதிவு போடறனே என நினைக்க வேண்டாம். பணம் மட்டுமல்ல, வரையறையற்ற அத்து மீறல்களால் நாம் இழப்பது நம்முடைய நிம்மதியையும் தான்.
வரலற்று பிரசித்தி பெற்ற கோயில்களில் , பராமரிப்பும், பாதுகாப்பும் இன்றியமையாதது. அரசும், கோவில் நிர்வாகமும் வசூலை மட்டும் கவனிக்காமல்.. வரும் பக்தர்களையும் அவர்களின் சிரமங்களையும் கருத்திற் கொண்டால் நலம்.
SO , பழனி செல்பவர்கள்.. கவனம் ப்ளீஸ்.....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....
பயனுள்ள பதிவு தாஸ்... நன்றி..! ![பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை..... 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை..... 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....
பயனுள்ள பதிவுக்கு நன்றி தாஸ் அவர்களே ![பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை..... 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை..... 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....
மிக்க நன்றி அண்ணா
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....
நான் அடுத்த மாதம் பழனி போகலாம் இருகிறன் தகவலுக்கு நன்றி ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ramesh.vait- தளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....
» ஹலோ ஜாக்கிரதை.... போலி சாமியார் ஜாக்கிரதை...
» எஸ்கலேட்டர்ல நடந்து செல்பவர்கள்...1!
» திருச்செந்தூருக்கு செல்பவர்கள் கட்டாயம் இதைக் கவனிக்கவும்!
» இந்தியாவிலிருந்து துபாய்க்கு செல்பவர்கள் கொண்டு செல்லக்கூடாத மாத்திரைகள்!
» ஹலோ ஜாக்கிரதை.... போலி சாமியார் ஜாக்கிரதை...
» எஸ்கலேட்டர்ல நடந்து செல்பவர்கள்...1!
» திருச்செந்தூருக்கு செல்பவர்கள் கட்டாயம் இதைக் கவனிக்கவும்!
» இந்தியாவிலிருந்து துபாய்க்கு செல்பவர்கள் கொண்டு செல்லக்கூடாத மாத்திரைகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|