Latest topics
» நாவல்கள் வேண்டும்by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈபிஃள் கோபுரம்
Page 1 of 1
ஈபிஃள் கோபுரம்
தமிழ் மண்ணின் பாரம்பரியப்படி...., வழிபாடு நடத்தப்படும் இடங்களில்,
அண்ணாந்து பார்க்கும் அளவு உயர்ந்து நிற்கும் கட்டிடங்களைக் 'கோபுரங்கள்'
எனக் குறிப்பிடுகிறோம். ஆனால் வழிபாட்டுத் தலமாய் இல்லாவிட்டாலும்கூட,
'கோபுரம்' எனக் குறிப்பிடத்தக்க அளவு உயரத்தால் மிக உயர்ந்து நிற்பதுடன்,
இன்னும் பல உன்னதங்களையும் தன்னகத்தே அடக்கிக் கொண்டுள்ளதுதான் பாரீஸ்
நகரத்தில் அமைந்துள்ள இந்த ' தொழில் நுட்பச் சாதனை'க் கோபுரம்.
''ஒரு....
20 ஆண்டுகள், எந்தவித பாதிப்புமில்லாமல் நிலைத்திருக்குமாறு உயர்ந்த
கோபுரம் ஒன்றைக் கட்டி, நிர்வகித்துத் தர முடியுமா ?'' என்ற
கேள்வியுடன்தான் இக்கோபுரம் கட்டும் வேலை - ஒப்பந்தம் - ஒரு பொறியாளரிடம்
ஒப்படைக்கப்பட்டது. இது நடந்தது, 1880களில். அப்போது இதைத்
திட்டமிட்டு, உருவாக்கி, குறிப்பிட்ட காலத்துக்கு பராமரித்தும் தந்தார் '
குஸ்டவ் ஈஃபிள் ' என்ற பொறியாளர். இத்துடன் அடுத்த பல 20 ஆண்டுகளையும்
தாண்டி நிற்குமாறு வலிமை, உறுதியுடன் அதை இவர் உருவாக்கியதை நினைவு கூரும்
விதமாகவோ என்னவோ..., இந்த கோபுரத்தை வடிவமைப்பதற்காகவே அவர் ஏற்படுத்திய
கம்பெனியின் பெயரில் 'ஈபிஃள்' என்றே இது குறிப்பிடப்பட்டு வருகிறது. உலகம்
வியக்கும் இந்தக் கோபுரத்திற்கு பெயர்க்காரண வரலாறு இதுதான்.
ஈபிஃள்
கோபுரம் கட்டி முடிக்கப்பட்டு இதன் மீது கொடியேற்றிக் கொண்டாடி121
ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. மிகச் சரியாகச் சொல்வதனால், இந்த மார்ச் மாதம்
நிறைவடையும் போது ஈபிஃள் கோபுரத்துக்கு 120 ஆண்டுகள் நிறைவடையும்.
என்றாலும், இதன் வலிமை சற்றும் குறைந்து விடாதபடி, தேவையான
சீர்திருத்தங்கள் அவ்வப்போது செய்யப்பட்டு வருவதால்... கடும் சூறாவளிக்
காற்றுகளையும் தாங்கி நிற்கும் சூரப்புலியாய் இது நிலைத்து நிற்கிறது.
அண்மையில் அதாவது, கடந்த ஆண்டு டிசம்பரில் பாரீஸ் நகரத்தைப் புரட்டிப்
போட்ட சூறாவளிக் காற்று - மணிக்கு 214 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய
போதும், ஈபிஃள் கோபுரம் 9 செ.மீ அளவுக்கு மட்டுமே காற்றில் மெல்ல
அசைந்தாடியதாம். கிட்டத்தட்ட 1000 அடி உயரத்திற்கு, துல்லியமாகச் சொல்லப்
போனால் 318.7 மீட்டர் உயரமுள்ள இந்த கோபுரத்தின் உறுதியை எடுத்துச் சொல்ல
இதைவிட வேறென்ன சாட்சி தேவை !.
இரும்புத் துண்டுகள் பல இணைக்கப்பட்டு உருவாகியுள்ள ஈபிஃள் டவரின்
மொத்த உயரத்தில் உள்ள எல்லா துண்டுகளுமே கிட்டத்தட்ட ஒரே அளவு நீளமுள்ளவை
எனத் தெரிகிறது. இதன் ஒரு துண்டு 5 மீட்டர் நீளமுள்ளது எனக்
கூறப்படுகிறது. இது போன்ற 18 ஆயிரத்துக்கும் அதிகமான இரும்புதுண்டுகளை
இணைக்க, கோபுரம் முழுவதிலும் மொத்தமாக 25 லட்சம் ரிவட் (Rivet) கள்
உள்ளனவாம். இந்த கோபுரத்தின் இரும்பு துருப்பிடிப்பதிலிருந்து காக்கப்பட,
கோபுரம் முழுவதற்கும் பெயிண்ட் பூச்சு ஒன்றும் தரப்பட்டுள்ளது. 7
ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த பூச்சு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இன்றுவரை இக்கோபுரம் 17 முறை பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது என இதன்
பராமரிப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கோபுரத்திற்கு ஒரு முழுப்
பூச்சு செய்ய கிட்டத்தட்ட 50 டன் பெயிண்ட் தேவைப்படுகிறது என்றால் இதன்
பிரம்மாண்டம் உங்களுக்குப் புரியும்.
அண்மைக்காலமாக
இக்கோபுரத்துக்கு கவர்ச்சியான தோற்றம் தர வேண்டி..., அதிலும் கோபுரத்தின்
அடிப்பகுதி முதல் உச்சி வரையான முழு உயரமும் ஒரே வண்ணத்தில் தெரிய
வேண்டும் என்று எண்ணியதில் புதிய திட்டம் பிறந்தது. இதன்படி கோபுரத்தின்
உச்சியிலிருந்து ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு ஒரு வண்ணமும், பிறகு வானில்
உள்ள இயற்கையான பின்னணியில் தெரியும் பகுதிக்கு ஒரு வண்ணமும், அதற்கும்
கீழ் உள்ள பூமி வரையான உயரத்திற்கு வேறு வண்ணமும் பூசி இதைச்
சாதித்துள்ளனர். ஆரம்பத்தில் கருஞ்சிவப்பு, பின்னர் குரோம்-மஞ்சள்
என்றிருந்த கோபுர வண்ணம் இப்போது பொன்னிற முந்திரி நிறத்தையும் தாண்டி
செம்பு நிறத்தை எட்டியுள்ளது. 25 பெயிண்டர்கள் சேர்ந்து 1 வருடம்
தொடர்ந்து பணியாற்றினால்தான் இதன் பூச்சு வேலை தற்போதைக்கு முழுசாய்
முடிகிறதாம்.
Re: ஈபிஃள் கோபுரம்
இப்படி எண்ணிலடங்கா ஆச்சரியங்களை உள்ளடக்கியதால் ஈபிஃள் கோபுரம் மிகச்
சிறந்த சுற்றுலா தளமாகவும் மாறியுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இக்கோபுரத்தைக்
காணவரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயுள்ளது. சென்ற ஆண்டில்
மட்டும் 63 லட்சத்து 68 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இந்த கோபுரத்தின்
அதிசயத்தைக்கண்டு வியந்துள்ளனர். 1889ல் இது உருவானது முதல் சென்ற
டிசம்பர் இறுதிவரை 18 கோடியே 58 லட்சத்து 4,799 பேர் இதைப் பார்த்து
வியந்ததாக அதிகாரப்பூர்வச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாரீஸ்
நகரத்தின் பொதுச் சொத்தான இதை உருவாக்க சொன்னது, அந்நாளைய நகர
நிர்வாகம்தான். ஆரம்பத்தில் வானிலை ஆராய்ச்சி, மின்காந்த அலை வீச்சு,
ரேடியோ ஒலிபரப்பு போன்றவற்றுக்கு பயன்படுத்தும் நோக்கத்தில் இது
உருவாக்கப்பட்டாலும், பின்னாளில் பிரான்ஸ் நாட்டு அறிவியல், தொழில்நுட்ப
ஆராய்ச்சிகள் பலவற்றுக்கும் இக்கோபுரம் பயன்பட்டது. பிரான்ஸ் நாட்டின்
முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பு கோபுரமாகவும் இது பயன்படுத்தப்பட்டுள்ளது.
இத்துடன் அந்நாட்டு ராணுவ திட்டங்கள் சிலவற்றுக்கும் இந்த கோபுரம்
பங்களித்திருக்கிறது. இதை உருவாக்கிய பொறியாளர் ஈஃபிளே கூட இந்த
கோபுரத்தில் சொந்த சோதனை முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டுள்ளார்.
முழுவதுமே இரும்பால் உருவாக்கப்பட்டுள்ள இந்த கோபுரத்தில் 7300 டன்
எடையுள்ள இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் பிற இணைப்புகள்,
சேர்ப்புகள், அஸ்திவாரம் என மற்றவையும் சேர்ந்து கிட்டத்தட்ட 10,100 டன்
எடை கொண்டது இக்கோபுரம். இதன் கால்கள் போன்றமைந்த அடிப்புற பகுதி நான்கின்
மூலம்தான் ஒட்டுமொத்த கோபுரமும் பூமியில் இழுத்து கட்டி
வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த 4 கால்களுக்கு இடையில் பிரம்மாண்ட
வாகனங்களும் செல்லும் விதமாக 'ஆர்ச்' வடிவ வழித்தடம் இக்கோபுரத்தில்
உள்ளது. ஈஃபிள் தனது ஆராய்ச்சிக்கு அமைத்துக் கொண்ட காற்றுப்புனல் Wind
Tunnel -லும் கூட இதற்கு அருகில்தான் உள்ளது.
குஸ்டவ் ஈஃபிள்
ஈஃபிள்
கோபுரம் கட்டும் பொறுப்பு குஸ்ட்வ் ஈஃபிளிடம் வழங்கப்பட்டபோது அவருக்கு
வயது 52. ஆனால் இதற்கு முன்பே வேறு சில இரும்பு கட்டுமானங்களை அவர் செய்து
முடித்திருக்கிறார். மிக நீண்ட, அதிக எடை தாங்க வேண்டிய
கட்டுமானப்பணிகளுக்கு இரும்புதான் ஏற்ற பொருள் என அடையாளம் காணப்பட்டு,
அது சோதனை அடிப்படையில் முயற்சி செய்யப்பட்டு, இது சாத்தியமானதுதான் என
நிரூபிக்கப்பட்டு வந்த காலம் அது. பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரத்தில் -
மைய பொது அங்காடி என்ற பெயரில் முதல் இரும்புக் கட்டுமானமாக வணிக வளாகம்
ஒன்று உருவானது 1853ல். அந்த நேரத்தில் தனது கல்லூரி படிப்பில் இருந்த
குஸ்டவ் ஈஃபிளுக்கு இது ஆர்வமூட்டியிருக்கும் போல !.
மீண்டும் 1855ல் பாரிஸ் நகரத்தில் முதல் உலக பொருட்காட்சி நடந்த போது,
அந்த வணிக வளாகம் பற்றி அதிகம் பேசப்பட்டதாம். இதனால் தனது கல்லூரி
படிப்பை அந்த ஆண்டில்தான் முடித்த ஈஃபிள், இரும்பு கட்டுமானப் பணிகளில்
ஆர்வம் கொண்டு அதில் அதிக கவனம் செலுத்தினார். அப்போது போர்டக்ஸ் என்ற
இடத்தில் உருவான மிகப் பெரிய ரயில்வே பாலம் ஒன்றின் கட்டுமானப் பணியில்
மேற்பார்வையாளராக சேர்ந்து, அடுத்தடுத்து இதே துறையில் பணியாற்றினார்.
போதுமான அனுபவம் பெற்றபின் 1864-ல் சொந்தமாக தனது நிறுவனத்தைத்
தொடங்கினார். 1876-ல் இவருக்கு மிகப் பெரிய கான்ட்ராக்ட் ஒன்று கிடைத்தது.
அப்போது டவ்ரோ என்ற ஆற்றின் குறுக்கே இவரால் கட்டப்பட்ட பாலம், 1884-ல்
இவர் உருவாக்கிய கிராபிட் பாலம், ஹங்கேரியில் கட்டப்பட்ட பெஸ்ட் ரயில்வே
நிலையம் போன்ற பலவும் இவருக்கு தனி பெயரைபெற்றுத் தந்தன. இவற்றின்
அடிப்படையிலேயே பாரிஸ் நகரத்தின் மிகப் பெரிய கோபுரத்தை உருவாக்கும்
ஒப்பந்தம் ஈஃபிளுக்கு கிடைத்தது.
Re: ஈபிஃள் கோபுரம்
இருபதாண்டுகள் வரை இதை நிர்வகித்து அதை பாதுகாக்கும் பணியும் இவரது
பொறுப்பிலேயே இருந்ததால் இதன் மூலம் கணிசமான வருவாயைக் கண்டார் ஈஃபிள்.
திட்டமிடப்பட்ட இருபதாண்டுகளுக்கு பின்னரும் இக்கோபுரம் பல பணிகளுக்கு
பயன்படுத்தப்பட்டதால் அவற்றின் மூலமெல்லாம் வருவாய் கிடைத்து ஈஃபிள்
பெரும் பணக்காரரானார். என்றாலும் அதன்பின்பு ஈஃபிளின் வாழ்நாள் முழுவதும்
இனிதான பயணமாக இருந்தது எனக் கூற முடியாது. பனாமா கால்வாய் தொடர்பான பணி
ஒன்றில் ஏற்பட்ட கோளாறுக்கு இவர்தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டு
நீதிமன்றம் வரை செல்ல வேண்டிய சூழ்நிலை ஈஃபிளுக்கு உருவானது. இதற்காக
1889-ல் இரண்டாண்டு சிறை தண்டனையும் பிரான்சு நாட்டு நாணயம் 2000மும்
இவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் எற்பட்ட மன வருத்தம் ஒருபுறம்
என்றால் மறுபுறம் இவருக்கு ஏற்பட்டிருந்த நற்பெயர் உட்பட அனைத்தும்
நாசமானது. தான் செய்யாத ஒரு தவறுக்கு தனது மானமே கப்பல் ஏறியதை சகித்து
கொள்ள இயலாமல், ஈஃபிள் தொடர்ந்து மேல் முறையீடு செய்து நீதிக்காக
போராடினார். ஏகத்துக்கு செலவிட்டப்பின் இறுதியில் அந்நாட்டு உச்ச
நீதிமன்றத்தில் ஈஃபிள் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
பாரிஸ் நகரத்தில் இவர் உருவாக்கிய கோபுரம் குறித்து ஆரம்ப ஆராய்ச்சி
1884-லேயே தொடங்கி விட்டிருந்தது. ஸ்டீஃபன் சவுஸ்டர் என்ற கட்டிட
வடிவமைப்பாளர்தான் இந்தக் கோபுரத்துக்கான மாடலை இறுதி செய்தார். ஆயிரம்
அடி உயரம் வரை உயர்ந்து நின்ற அக்கோபுரத்தின் மீது வீசும் காற்றின் முழு
அழுத்தமும் கோபுரத்திலிருந்த அனைத்து இரும்பு சட்டங்களுக்கும் சமமான
அளவில் பகிர்ந்து அளிக்கப்படும் வகையில் இக்கோபுர வடிவம்
அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் இக்கோபுரம் முழுவதற்கும்
ஒரே மாதிரியான, நீள அகலமுள்ள இரும்பு சட்டங்கள் பயன்படுத்தப்பட்டது
சாத்தியமானது என்கிறது தொழில் நுட்ப அறிவியல்.
ஸ்டீஃபன் சவுஸ்டர் உருவாக்கிய கோபுர வடிவத்துக்கு ஏற்ப இரும்பு
சட்டங்களைத் தேர்ந்தெடுத்து வழங்கிய தொழில்நுட்ப பொறியாளர்கள் மௌரிஸ்,
கோச்சிலின் மற்றும் எமைல் நவுகையர் என்ற இரு பொறியாளர்கள்தான். இவர்கள்
இருவரும் ஈஃபிள் நிறுவனத்தில் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றிய போதுதான்
இந்த வேலையைச் செய்துள்ளனர்.
கோபுரத்தின் கட்டுமானப் பணி 1887 ஜனவரி மாதம் தொடங்கியது. இப்பணி
தொடங்கிய ஐந்து மாதங்களுக்குள் கோபுரத்தின் அஸ்திவாரம் முழுமையாகவே
எழுப்பப்பட்டுவிட்டது. ஆனால் அதற்குமேல் கோபுரம் அமைக்கும் இரும்பு
கட்டுமானப் பணி கிட்டத்தட்ட 21 மாதங்கள் நீண்டுள்ளது. இதனால் இறுதியாக
1989-ல் மார்ச் 31-ம் தேதிதான் கோபுரப்பணி நிறைவு பெற்றது. கிட்டத்தட்ட
150 முதல் 200 பணியாளர்கள் வரை இப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாகவும்
கூறப்படுகிறது.
இன்றைக்கு உலக அதிசயமாக புகழ் பெற்று திகழும் இக்கோபுரம், பல ஹாலிவுட்
திரைப்படங்கள் உள்பட பலநாட்டு சினிமாக்களில் முக்கிய பாத்திரங்களை
ஏற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தொழில் நுட்ப ரீதியில் ஆர்வம்
மூட்டுவதாகவும், கலைஞர்கள் பார்வையில் கற்பனையைத் தூண்டுவதாகவும்,
சமானியர்களின் சிந்தனையில் ஆச்சரியத்துக்குரியதாகவும் விளங்கும் ஈஃபிள்
டவருக்கு உயிர் கொடுத்து, நீண்ட ஆயுளையும் உருவாக்கித் தந்த மாமனிதர்
ஈஃபிளுக்கு இக்கோபுரம் போன்றே நீண்ட ஆயுள் அமையவில்லை. 1923, டிசம்பர் 27
அன்று மனிதர் அகாலமாய் காலமானார்.
Similar topics
» சியேர்ஸ் கோபுரம் விலிஸ் கோபுரம் எனப் பெயர் மாற்றப்பட்டது
» Eiffel கோபுரம்
» மனோரா கோபுரம் :
» Eiffel கோபுரம்
» சாய்ந்த கோபுரம்
» Eiffel கோபுரம்
» மனோரா கோபுரம் :
» Eiffel கோபுரம்
» சாய்ந்த கோபுரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|