புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் Poll_c10இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் Poll_m10இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் Poll_c10இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் Poll_m10இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் Poll_c10இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் Poll_m10இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் Poll_c10 
3 Posts - 6%
heezulia
இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் Poll_c10இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் Poll_m10இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் Poll_c10இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் Poll_m10இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் Poll_c10இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் Poll_m10இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் Poll_c10இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் Poll_m10இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் Poll_c10இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் Poll_m10இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் Poll_c10இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் Poll_m10இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் Poll_c10இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் Poll_m10இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் Poll_c10இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் Poll_m10இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும்


   
   
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Sat Jun 19, 2010 6:56 pm

இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும்
-மருத்துவர் ஜே. முகைதீன்-

இன்றைய உலகம் சந்திக்கும் முதன்மையான சிக்கல்கள் யாவை?
இக்கேள்வியை இன்று யாரிடம் கேட்டாலும் அவர் சமூக ஆர்வலராக இருந்தாலும் சரி, பாமரனாக இருந்தாலும் சரி, அறிவில் சிறந்த சான்றோர்களாய் இருந்தாலும் சரி பதில் ஒன்றுதான்
`வன்முறை, வறுமை, ஒழுக்கச் சீர்கேடுகள், போதை' இதுதான் அந்தப் பதில்.
இன்று எவ்வகை சிக்கல்களானாலும் அவை மூன்று பரிமாணங்களைக் கொண்டுள்ளன.
1. உளவியல் சார்ந்தது
2. சமூகம் சார்ந்தது.
3. உலகளாவியது.
அதாவது தனி மனிதனின் உள்ளம் சார்ந்த பல பண்புகள் தாம் இறுதியில் உலகளாவியச் சிக்கல்களாய் வெடிக்கின்றன.
அதனால்தான் திருக்குர்ஆன் `உள்ளம் தொடங்கி' உலகம் வரை நடைமுறைப்படுத்தும் வகையில் தீர்வுகளைத் தருகின்றது.
எடுத்துக் காட்டாக மனிதனின் உள்ளத்தில் தோன்றும் பழிவாங்கும் பண்பே இறுதியில் வன்முறையாக தீவிரவாதமாக உலகைப் பாதிக்கிறது. இது போன்று தான் இதரசிக்கல்களும்!
1. தீவிரவாதம்; தீர்வு என்ன?
திருக்குர்ஆன் இந்தச் சிக்கலுக்கான உளவியல் காரணங்களை முதலில் தடுக்கின்றது. அநீதி இழைத்தலும் பழிவாங்குதலும் தான் தீவிரவாதம் தோன்ற அடிப்படைக் காரணங்கள். ஆகவே திருக்குர்ஆன் நீதியை நிலைநாட்டும்படியும் அநீதி இழைக்காமல் வாழும்படியும் ஆணையிடுகிறது.
"இறை நம்பிக்கையாளர்களே, நீங்கள் அல்லாஹ்வுக்காக வாய்மையில் நிலைத்திருப்போராயும் நீதிக்குச் சான்று வழங்குவோராயும் திகழுங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீது நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்துவிடக் கூடாது. நீங்கள் நீதி செலுத்துங்கள், இதுவே இறையச்சத்திற்கு மிகப் பொருத்தமானது. "(குர்ஆன் 5:8)
"நீங்கள் எதைப் பேசும்போதும் நீதியுடன் பேசுங்கள்; உங்களின் நெருங்கிய உறவினர் பற்றிய விவகாரமாயினும் சரியே."(குர்ஆன் 6: 152)
"திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்தும்படியும் நன்மை செய்யும்படியும் உறவினர்களுக்கு ஈந்துதவும் படியும் கட்டளையிடுகின்றான். மேலும் மானக்கேடான வெறுக்கத்தக்க, அக்கிரமமான செயல்களை விலக்குகிறான்." (குர்ஆன் 16: 90)
நீதி செலுத்துவதைக் கடமையாகக் கூறும் குர்ஆன் அநீதியிழைக்கப்பட்டவனுடைய நியாயமான உணர்வுகளுக்கும் மருந்திடுகிறது.
பொதுவாக அநீதி இழைக்கப்பட்டவனுக்கு நீதி கிடைக்காத போது அவனுள் பழிவாங்கும் உணர்வு எழுவது இயற்கை. ஆனால் தண்டனை அளிக்கும் அதிகாரத்தை இஸ்லாம் அரசுக்குத்தான் அளித்துள்ளது. தனி மனிதன் பழிவாங்குவதை அதாவது சட்டத்தைக் கையில் எடுப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. தனி மனிதன் பழிவாங்குவதை இஸ்லாம் ஆதரிக்கவில்லை. மாறாக மன்னிக்கும் பண்பை ஏவுகிறது.
"...... அவர்கள் கோபத்தை விழுங்கி விடுவார்கள், மனிதர்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோரையே நேசிக்கின்றான்" (குர்ஆன் 3: 134)
"நன்மையும் தீமையும் சமமாக மாட்டா. நீர் நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்ளும், அவ்வாறாயினும் உம்முடைய கொடிய பகைவனும் உற்ற நண்பனாய் மாறிவிடுவான். (41: 34)
இன்று பயங்கரவாதம் உருவாவதற்கு முதன்மைக் காரணம் குற்றங்களுக்குத் தண்டனை கிடைக்காததே ஆகும். இஸ்லாமிய அரசு தண்டனைச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கண்டிப்பாக இருக்கும்.
"இறை நம்பிக்கையாளர்களே, கொலைக்குப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதியாக்கப்பட்டுள்ளது." (குர்ஆன் 2: 178) இது அரசுக்கு குர்ஆன் இடும் கட்டளை.
"எவர்கள் தம் மீது கொடுமை இழைக்கப்பட்ட பின் பழி வாங்குகிறார்களோ அவர்கள் மீது ஆட்சேபனை கூற இயலாது..." (குர்ஆன் 42: 41)
எனவே அநீதியிழைக்கப்பட்டவன் அரசை அணுகித் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஏற்ற அளவு பழி தீர்த்துக் கொள்ள அனுமதி அளிக்கிறது குர்ஆன். இதனால் அவன் உள்ளத்தில் பழிவாங்கும் எண்ணம் அழிந்துவிடுகிறது. அதே சமயம் தீங்கிழைத்தவனை மன்னிக்கும் அதிகாரத்தையும் அவனுக்குத் திருக்குர்ஆன் வழங்குகிறது.
"கொலை செய்தவனுக்கு அவனுடைய சகோதரனால் (அதாவது கொல்லப்பட்ட உறவினரால்) சலுகை அளிக்கப்பட்டால் பிறகு நியாயமான முறையில் நிர்ணயிக்கப்படும் உயிரீட்டுத் தொகையை நேர்மையான முறையில் அவன் வழங்கிட வேண்டும். இது உங்கள் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட சலுகையும் கருணையுமாகும்." (குர்ஆன் 2: 178)
"ஆயினும் யார் பொறுமையை மேற்கொண்டு மன்னித்து விடுகிறார்களோ அவர்களின் இந்தச் செயல் திண்ணமாக உறுதி மிக்க (வீரச்) செயலைச் சேர்ந்ததாகும்" (குர்ஆன் 42: 43)
மன்னிப்பது தான் வீரமிக்கது குர்ஆன் கூறுகிறது. இவ்வாறு அநீதிக்கு நீதமான முறையில் தீர்வு கண்டு விட்டால் வன்முறை எனும் எண்ணமே அடியோடு நீங்கிவிடும் அல்லவா?
2. வறுமை, தீர்வு என்ன?
நவநாகரிக உலகில் வறுமையா? தொலைக்காட்சிப் பெட்டியின் முன் வெட்டியாய்ப் பொழுதைக் கழிக்கும் நமக்கு வறுமை பற்றிய சிந்தனையா? ஆயினும் உலகில் பெரும்பகுதி இன்று வறுமையில் வாடுகிறது என்பது உண்மை. ஏன் வளர்ந்த நாடு என்று அழைக்கப்படும் அமெரிக்காவில் கூட வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வறுமைக்கான காரணங்களாக திருக்குர்ஆன் இரண்டு முக்கிய விஷயங்களைக் கூறுகிறது.
அ) தவறான பொருள் பங்கீடு
ஆ) வட்டியும் பதுக்கலும்.
அ. செல்வம்
உங்களிலுள்ள செல்வந்தர்களிடையே மட்டும் கற்றிக் கொண்டிருக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. (59: 7)
ஆனால் இன்று வளர்ந்த நாடுகள் செல்வந்தர்களை மேலும் செல்வர்களாக்கிக் கொண்டிருக்கிறது. ஏழைகளை மேலும் ஏழைகள் ஆக்கிக் கொண்டிருக்கிறது. அண்மைக் கால புள்ளி விபரங்கள் இதனை மெய்ப்பிக்கின்றன. உலகின் 0.13 விழுக்காடு மக்கள் 25 விழுக்காடு உலக வளங்களை அனுபவிக்கின்றனர்.
ஆ. வட்டி:
இன்று உலக நாடுகளின் கடன் சுமையை ஆண்டு தோறும் அதிகரிக்கச் செய்வதில் வட்டியின் பங்கு முதன்மையானதாகும். வட்டிக் கொடுமையைப் பற்றி நாம் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. அனைவரும் அறிந்ததே.
"இறைவன் வணிகத்தை ஆகுமானதாக்கி வட்டியைத் தடுத்து (ஹராமாக்கி) விட்டான்." (குர்ஆன் 2: 215)
"மக்களுடைய பொருட்களுடன் கலந்து பெருக வேண்டும் என்பதற்காக நீங்கள் வட்டிக்கு விடும் பணம் அல்லாஹ்விடத்தில் பெருகுவதில்லை" (குர்ஆன் 30:39)
"உங்களில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்." (குர்ஆன் 2: 188)
மேற்கூறிய வசனங்களைப் பொருளாதார விதிகளாக மனிதர்களுக்குக் குர்ஆன் வழங்குகிறது. மேலும் செல்வம் என்பது இறைவன் வழங்கிய அமானிதம் எனும் அடிப்படையை இஸ்லாம் வலியுறுத்துகிறது. எனவே இறைவன் கூறியவாறு செல்வத்தைச் செலவு செய்யப் பணிக்கிறது.
*உங்கள் செல்வத்திலிருந்து வறியவர்களுக்கும் ஏழைகளுக்கும் வழிப் போக்கர்களுக்கும் பங்கு உண்டு. (குர்ஆன் 9: 60)
*ஒவ்வோர் ஆண்டும் செல்வந்தர்கள் தங்களின் செல்வத்திலிருந்து 2.5 விழுக்காடு தொகையை ஸக்காத்தாக (கட்டாய அறமாக) ஏழை எளியோருக்கு வழங்க வேண்டும் என்று குர்ஆன் விதித்துள்ளது. இஸ்லாமிய நெறியின் ஐந்து அடிப்படைக் கடமைகளில் இதுவும் ஒன்று.
*கடன் கொடுக்கல்- வாங்கல் முறைகளையும் அவற்றின் ஒழுங்குகளையும் குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது.
இவ்வாறு குர்ஆன் படிப்படியாக சமுதாயத்திலிருந்து இல்லாமையைப் போக்கி விடுகிறது. இத்தகைய சமுதாயத்தில் வாழும் ஒரு மனிதனிடம் பிறர் பொருளை அபகரித்தல் எனும் எண்ணம் ஏற்பட வாய்ப்பே இல்லை. அதையும் மீறி ஒருவன் அடுத்தவனின் பொருளைத் திருடுவானேயானால் அததற்கான தண்டனையையும் குர்ஆன் கூறுகிறது.
"திருடுபவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, அவர்களுடைய கைகளைத் துண்டித்து விடுங்கள். இது அவர்களுடைய சம்பாதணைக்கான கூலியாகும். மேலும் அல்லாஹ் வழங்கும் படிப்பினை மிக்க தண்டனையாகும்" (குர்ஆன் 5: 38)
நல்லுரை, இறையச்சம், தண்டனை ஆகிய இம் மூன்றும் சமூகத்தில் பொருளியல் சிக்கல்களைத் தீர்த்துவிடும் என்பது திண்ணம்.
3. ஒழுக்கக் கேடுகளும் புதிய நோய்களும்
இன்று புதிது புதிதாக உருவாகும் நோய்களுக்கு ஒழுக்கச் சீர்கேடுகளும் விபசாரமும் தான் முதன்மைக் காரணங்கள், `விபசாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்' என்று குர்ஆன் கட்டளையிடுவதுடன் அது மானக் கேடான செயலாகவும் தீய வழியாகவும் இருக்கிறது' (17: 32) என்றும் எச்சரிக்கிறது.
ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பைக் காத்துக் கொள்ளுமாறு கூறுகிறது.
"(நபியே) இறை நம்பிக்கை கொண்ட ஆண்களிடம் அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும் படியும், தங்களுடைய வெட்கஸ்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும்"
(குர்ஆன் 24: 30)
"மேலும் (நபியே) இறை நம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்கள் வெட்கத்தலங்களைப் பாதுகாக்கட்டும்" (குர்ஆன் 24: 31)
இறுதியாக கற்பைப் பாதுகாத்துக் கொள்ள மிகச் சிறந்த வழியாகத் திருமணத்தை முன்னிறுத்துகிறது.
"உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவர்களுக்குத் திருமணம் செய்து வையுங்கள்" (குர்ஆன் 24: 32)
இன்று மேலை நாடுகளில் தவறே இல்லை இயற்கையானது என்று விவாதிக்கப்படும் ஓரினத் திருமணங்களையும் ஓரினச் சேர்க்கையையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. (குர்ஆன் 26: 165)
4. சுற்றுச் சூழல் பாதிப்பு
இந்தச் சிக்கல் இன்று உலகைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கிறது. நில நடுக்கங்கள், ஆழிப் பேரலை (சுனாமி) புயல், வெள்ளம், வறட்சி என அனைத்திற்கும் மனிதனின் செயல்கள்தான் காரணம். அறிவியல் முன்னேற்றங்களும் தொழில் மயமாக்கலும் கால நிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.
திருக்குர்ஆன் இது குறித்தும் கவலை தெரிவிக்கிறது. பூமியிலும் கடலிலும் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம். இதனால் முன்சென்ற சமூகங்கள் அழிந்தன என எச்சரிக்கிறது.
"மக்கள் தங்கள் கைகளால் எதைச் சம்பாதித்தார்களோ அதன் காரணமாகத் தரையிலும் கடலிலும் அராஜகமும் குழப்பமும் தோன்றிவிட்டிருக்கின்றன. அவர்கள் செய்த சில செயல்களின் விளைவை அவர்கள் சுவைப்பதற்காக." (குர்ஆன் 30: 41)
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாவீரன் நெப்போலியன் கூறுகிறார்.
"நான் உலகிலுள்ள அறிவாளிகளை அழைத்து குர்ஆனின் அடிப்படையிலான சமநீதிமிக்க அரசை அமைக்க எண்ணுகிறேன். அதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை. ஏனெனில் குர்ஆன் மட்டுமே உண்மை. குர்ஆனால் மட்டுமே மனிதர்களுக்கு மகிழ்ச்சியைத் தர முடியும். (பார்க்க Bonaparte et I Islam Paris, Franch PP 105 125)
சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த அறிவாளி எனக் கருதப்படும் ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறுகிறார்.
"முஹம்மத் அவர்களின் மார்க்கம் எதிர்காலத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும். ஏனெனில் ஐரோப்பியர் அதனை இப்பொழுதே ஏற்றுக் கொள்ள தொடங்கிவிட்டார்கள்.... முஹம்மத் அவர்களைப் போன்ற ஒரு மனிதர் இப்பூமியின் அதிகாரியாகப் பொறுப்பேற்பாரேயானால் புதிய உலகின் சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து அமைதியும் மகிழ்ச்சியும் மலரும். (A Collection of Writings of some of the eminent scholars - 1935 De P 77)
நன்றி: சமரசம்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 19, 2010 7:41 pm

மாஸா அல்லாஹ் நல்லதொரு தொகுப்பு அருமையான விளக்கம்
நன்றி தோழரே இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் 154550 இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் 154550 இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் 154550 இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் 154550





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Thajudeen
Thajudeen
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 14/06/2010

PostThajudeen Sat Jun 19, 2010 7:58 pm

நல்ல மிகவும் பயனுள்ள தொகுப்பு

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 19, 2010 8:31 pm

அருமையான பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் 47
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Jun 20, 2010 11:59 am

திருக்குரானில் இருப்பத்தை ,அழகாய் இன்றைய நிலைக்கும்,என்றும் இது நம்மை பாதுகாக்கும் என்ற அல்லாவின் வார்த்தைகளை,சொன்ன இந்த தொகுப்புக்கும்,இதை படித்து,நாங்களும் அறிய தந்த தோழருக்கும் நன்றி......



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sun Jun 20, 2010 12:10 pm

kalaimoon70 wrote:திருக்குரானில் இருப்பத்தை ,அழகாய் இன்றைய நிலைக்கும்,என்றும் இது நம்மை பாதுகாக்கும் என்ற அல்லாவின் வார்த்தைகளை,சொன்ன இந்த தொகுப்புக்கும்,இதை படித்து,நாங்களும் அறிய தந்த தோழருக்கும் நன்றி......

நன்றிகள் நண்பா.......... இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் 678642



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jun 20, 2010 12:12 pm

kalaimoon70 wrote:திருக்குரானில் இருப்பத்தை ,அழகாய் இன்றைய நிலைக்கும்,என்றும் இது நம்மை பாதுகாக்கும் என்ற அல்லாவின் வார்த்தைகளை,சொன்ன இந்த தொகுப்புக்கும்,இதை படித்து,நாங்களும் அறிய தந்த தோழருக்கும் நன்றி......

சியர்ஸ் சியர்ஸ் முத்தம் முத்தம்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இன்றைய சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும் Logo12
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக