Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா?
+4
சரவணன்
jahubar
ராஜா
சிவா
8 posters
Page 1 of 1
மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா?
வேலையின்போதும் ஓய்வாக இருக்கும்போதும் மாமாக் கடைக்குச் சென்று ஒரு‘தே தாரிக்’ அடிப்பது மலேசியரின் வாழ்க்கைமுறையாகி விட்டது.
இந்த வழக்கம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு? அரசாங்கம் அந்நிய தொழிலாளர் விசயத்தில் விடாப்பிடியாக இர்க்குமானால், மாமாக் கடைகளும் அவற்றுடன் ‘தே தாரிக்’கும் மறைந்து போகலாம்.
கடந்த ஆண்டு ஜனவரியில், சேவைத்துறையிலும் தியாரிப்புத் துறையிலும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலை செய்வதற்கு அரசு தடை விதித்தது. அத்தடைவிதிப்பு இன்னமும் நடைமுறையில் உள்ளது.
ஐந்தாண்டுகளுக்குமேல் வேலை செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வேலை அனுமதியை மேலும் நீட்டிப்பதில்லை என்ற கொள்கையும் கடைப்பிடிக்கப்படுகிறது..
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை முதலில் வரவேற்ற மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கம் (பிரிஸ்மா) இதனால் நாடு முழுவதுமுள்ள அதன் 6,000 உணவகங்களில் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க உள்நாட்டவர் 25,000 பேரை வேலைக்கு அமர்த்தவும் முன்வந்தது.
ஆனால். ஓராண்டாகியும் மாமாக் கடைகளில் வேலை செய்ய முன்வருவோர் எண்ணிக்கை 250-ஐத் தாண்டவில்லை என்று சங்கத்தின் துணைத் தலைவர் காதர் ஷா அப்துல் ரசாக் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“நாங்கள் எங்களால் முடிந்தவரை முயன்றோம். ஆனால், உள்நாட்டவர் எங்கள் கடைகளில் வேலை செய்ய விரும்பவில்லை”, என்று காதர் ஷா கூறினார்.
இப்போது தங்கள் தொழிலே ஆட்டம் கண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“அரசாங்கம் மறுபரிசீலனை செய்யாவிட்டால், எங்கள் முதலீடு எல்லாம் விரயமாகிவிடும்”.
உள்ளூர்க்காரர்கள் மாமாக் கடைகளில் அல்லது நாசி காண்டார் கடைகளில் வேலை செய்வதைவிட விரைவு உணவகங்களில் வேலை செய்வதைத்தான் விரும்புகிறார்கள்.
இந்நிலை தொடருமானால் இன்னும் ஓராண்டுக்காலத்தில் அதன் உணவகங்களில் பல, மூடப்படும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார்.
இப்படிப்பட்ட இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் உணவகங்களில் ஒன்று பங்சாரில் உள்ளது. ஐந்தாண்டுகளுக்குமேல் வேலை செய்யும் அதன் ஏழு பணியாளர்களின் வேலை அனுமதி அடுத்த மூன்றிலிருந்து ஆறு மாதங்களில் முடிவுக்கு வரும்.
அவர்களின் இடத்தில் உள்ளூர் ஆட்களை வேலைக்கு அமர்த்த அதன் உரிமையாளர் கடுமையாக முயன்றும் பலன் இல்லை.
“வேலைக்கு ஆள் தேவை என்று அறிவிப்புப் போட்டு இரண்டு வாரமாகிறது. ஒருவரும் வரவில்லை”, என்று வருத்தம் கொண்டிருக்கிறார் அவர்.
பணியாளர்களுக்கு ரிம800 சம்பளமும் உணவும் தங்கும் இடமும் ஏற்பாடு செய்துகொடுக்கிறார் அவர். இருந்தும் எவரும் அதில் ஆர்வம் காண்பிக்கவில்லை.
பிரிக்பீல்ட்ஸில் உள்ள ஒரு மாமாக் கடையும் இதே பிரச்னையை எதிர்நோக்குகிறது.
அதன் கண்காணிப்பாளரான சுலைமான், கடையின் 20 பணியாளர்களில் பாதிப்பேர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்றும் அவர்களில் ஐவர் வேலை அனுமதி காலாவதியானதால் திரும்பிச் சென்றுவிட்டனர் என்றும் கூறினார்.
“எஞ்சியுள்ள இன்னும் ஐந்து பேர் ஒன்றிலிருந்து மூன்றாண்டுகள் வரை இருப்பார்கள் என்பதால் இப்போதைக்கு பெரிய பிரச்னை இல்லை.ஆனால், வேலைத்தான் கடுமையாக உள்ளது”, என்றாரவர்.
உள்ளூர் ஆட்களின் வேலையும் திருப்திகரமாக இல்லை, அத்துடன் வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் காட்டிலும் இவர்களுக்கு ரிம300-இலிருந்து ரிம500 வரை கூடுதலாகவும் கொடுக்க வேண்டியுள்ளது என்று அவர் சொன்னார்.
பங்சாரில் உள்ள ஒரு ‘நாசி சம்போர்’கடையின் உரிமையாளர் காக் வதி. அவரின் 16 பணியாளர்களில் 14 பேர் வங்காள தேசம், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
உள்நாட்டவரை வேலைக்கு வைத்துக்கொள்வதுதான் நல்லது என்றாலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தடைப்போடும் கொள்கையைத் தாம் எதிர்ப்பதாகக் கூறினார்.
“எங்களின் இந்தோனேசிய ஊழியர்கள் கடும் உழைப்பாளிகள்.உள்ளுர் ஆட்கள் கடுமையாக உழைக்கத் தயாராக இல்லை. அவர்களை வேலைக்கு வைத்தால், சில நாள் இருந்துவிட்டு மறைந்து விடுகிறார்கள்”, என்றாரவர்.
இந்நிலை தொடருமானால், எதிர்காலத்தில் தமக்கும் பிர்சனை உண்டாகலாம் என்றவர் குறிப்பிட்டார்.
கடந்த மாதம், மலேசிய இந்திய வர்த்தக, தொழிலியல் சங்கச் சம்மேளன (மைக்கி)த் தலைவர் கே.கே.ஈஸ்வரன், சங்க உறுப்பினர்களிடம் வேலை செய்யும் 90,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வேலை அனுமதி நீட்டிக்கப்பட வேண்டுமென்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்..
அந்த வேண்டுகோளைப் பரிசீலிப்பதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் கூறினார். ஆனால், அதிகாரிகளுடன் நடைபெறும் பேச்சுக்கள் அதிகம் நம்பிக்கை தரவில்லை என்கிறார் காதர் ஷா.
இந்தப் பிரச்னை, மாமாக் கடைகளுக்கும் மட்டும் உரியது என்று சொல்ல முடியாது. பர்மியர்களையும் தாய்லாந்துக்காரர்களையும் வேலை வைத்துள்ள சீனர் உணவகங்களும் மற்றவர்களின் உணவகங்களும்கூட இப்பிரச்னையை எதிர்நோக்குகின்றன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா?
தகவல்க்கு நன்றி
jahubar- இளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010
Re: மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா?
பிச்ச wrote:
ஏன் பிச்ச சோகம் அந்த ஏரியாவில் எதுவும் கிடைக்க வில்லையா இல்லை அந்த கடையில் எதுவும் போட வில்லையா
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா?
" தே தாரிக் " இது என்ன தல ??
ராஜா.....
இது டி தான் ஆனால் ரொம்ப னல்லா இருக்கும்
ராஜா.....
இது டி தான் ஆனால் ரொம்ப னல்லா இருக்கும்
jani- புதியவர்
- பதிவுகள் : 34
இணைந்தது : 20/10/2009
Re: மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா?
ராஜா wrote:" தே தாரிக் " இது என்ன தல ??
தமிழ்ல Tea -ன்னு சொல்லுவாங்க தல!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா?
சிவா wrote:தமிழ்ல Tea -ன்னு சொல்லுவாங்க தல!ராஜா wrote:" தே தாரிக் " இது என்ன தல ??
இப்படி புரியுற மாதிரி டமில்ல சொல்ல வேண்டியது தானே.
Re: மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா?
ஆனால். ஓராண்டாகியும் மாமாக் கடைகளில் வேலை செய்ய முன்வருவோர் எண்ணிக்கை
250-ஐத் தாண்டவில்லை என்று சங்கத்தின் துணைத் தலைவர் காதர் ஷா அப்துல்
ரசாக் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
நம்ம நாட்டு ஆளுங்க அங்க போயி.....
250-ஐத் தாண்டவில்லை என்று சங்கத்தின் துணைத் தலைவர் காதர் ஷா அப்துல்
ரசாக் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
நம்ம நாட்டு ஆளுங்க அங்க போயி.....
Re: மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா?
வேலை இருந்தும் வேலைக்கு போக மாட்டேங்குறாங்க அவ்வளவு கஷ்டமான வேலை 800 ரிம க்கு யரு போவாஙக
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Similar topics
» ஆறுல ஆறு போகுமா? – கடி ஜோக்ஸ்
» இப்படி கூட உயிர் போகுமா
» இல்லாமல் போகுமா இலங்கை?--ரசாயன ஆபத்து..
» நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ?
» வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா?
» இப்படி கூட உயிர் போகுமா
» இல்லாமல் போகுமா இலங்கை?--ரசாயன ஆபத்து..
» நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ?
» வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|