புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 16 Poll_c10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 16 Poll_m10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 16 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 16 Poll_c10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 16 Poll_m10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 16 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 16 Poll_c10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 16 Poll_m10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 16 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 16 Poll_c10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 16 Poll_m10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 16 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 16 Poll_c10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 16 Poll_m10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 16 Poll_c10 
21 Posts - 4%
prajai
ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 16 Poll_c10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 16 Poll_m10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 16 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 16 Poll_c10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 16 Poll_m10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 16 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 16 Poll_c10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 16 Poll_m10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 16 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 16 Poll_c10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 16 Poll_m10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 16 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 16 Poll_c10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 16 Poll_m10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 16 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 16 Poll_c10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 16 Poll_m10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 16 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள்


   
   

Page 16 of 27 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 21 ... 27  Next

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Jun 17, 2009 2:15 am

First topic message reminder :

ஈழநூல்
71
நூல்
ஆவியுலகத்தாரோடு என் அனுபவம்
ஆசிரியர்
நவரத்தினம்
மின்னூலாக்கம்
இ. பத்மநாப ஐயர்
மின்பதிப்பு ஈழநூல்
ஆவியுலகத்தாரோடு என்
அனுபவம்

நவரத்தினம்

------------------------------------

ஆவியுலகத்தாரோடு
என் அனுபவம்

நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய் நிராமமாய்
நிறைவாய்
நீங்காச்
சுத்தமுமாய்த் துரமுமாய்த் சமீபமுமாய்த் துரிய
நிறை சுடராய்
எல்லாம்
வைத்திருந்த தாரகமாய் ஆனந்த மயமாகி
மனவாக்கெட்டாச்
சித்துருவாய்
நின்ற ஒன்றைச் சுகாரம்பப்பெரு
வெளியைச் சிந்தை செய்வாம்
-தாயுமான
சுவாமிகள்


முகவுரை

இந்தியாவின் பழமையான பண்பாட்டின்மீது உள்ள
விருப்பம், இது காறும் எனது குடும்ப வி~யமாகக் கருதியிருந்த சில சொந்த அனுபவங்களை
வெளியிடும்படி என்னைத் தூண்டியுள்ளது. அறியப்படாத பிரிந்த ஆவிகளின் உலகங்களைப்பற்றி
ஆராய்ச்சி நடத்தும் பலருக்கும், மரணத்தின் பின் வாழ்வைப்பற்றி அவர்கள் கொண்டுள்ள
சொந்த அபிப்பிராயத்தை உறுதிப்படுத்த எனது அனுபவங்கள் உதவி புரியும்.

நான்
இறந்தவர்களுடன் பேசியதைப்பற்றிய முழு விபரங்களையும் குறித்துவைக்கவில்லை. அவைகளில்
அநேகம் என் குடும்பத்தோடு சம்பந்தப்பட்டவை. ஆவியுலக ஆராய்ச்சி நடத்துபவர்களுக்கு
உதவி புரியக்கூடிய பொது வி~யங்களை மட்டும் பின்வரும் பக்கங்களில் விபரிப்பதற்கு
நான் முயற்சித்துள்ளேன்.

ஆவியுலகத்தில் என் பிரிந்த உறவினர்களுடன்
தொடர்புகொள்ள 1943-ம் ஆண்டு தொடக்கம் அவ்விடத்திலிருந்து எனக்கு உதவி புரிந்த
பேராவி, 1948-ம் வருடம் ஆனி மாதத்தில் உதவி செய்யாது விட்டது. ஏறக்குறைய ஒன்றரை
வருடங்களாக ஆவியுலகிலுள்ள என் உறவினர்களுடன் பேச முடியவில்லை. பின்னர்,
இறைவருளினால் 1950-ல் வேறோர் பேராவியின் உதவியைப் பெறக்கூடியதாய் இருந்தது.
“பிரிந்த ஆவிகளைப்பற்றிய எனது பரிசோதணைகள்” (ஆல நஒpநசiஅநவெள றiவா னுநியசவநன ளுழரடள)
என்ற எனது ஆங்கிலப் பிரசுரத்தில் வெளியிடப்பட்ட சில ஆவியுலகத் தொடர்புகளை
இப்புத்தகத்தில் சேர்த்துள்ளேன்.

தேசீய உளநூற் கூட்டுறவை ஸ்தாபித்தவரான
திரு. ~hடெஸ் மன்ட் (ஆச. ளூயற னுநளஅழனெஇ குழரனெஉச ழக வாந ஐவெநசயெவழைழெயெட ஐளெவவைரவந
கழச Pளலஉhiஉயட சுநளநயசஉh) என்பவராலும், பல்கலைக் களகங்களின் வௌ;வேறு
விரிவுரையாளர்களாலும், இப்புத்தக வாசகர்களாலும் அனுப்பப்பட்ட நல்ல குறிப்புக்கள்
ஆவி சம்பந்தமாக எனக்குள்ள ஆர்வத்தை ஸ்திரப்படுத்தியுள்ளன.

இதைப் புத்தக
ரூபமாக வெளியிடுவதற்கு உதவிபுரிந்ததற்காக கொழும்பு வீரகேசரி
அச்சியந்திரசாலையாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

வைகாசி,
1951. ஊ. ளு.
நவரத்தினம்.
மானிப்பாய்,
யாழ்ப்பாணம்.


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Jun 19, 2009 10:48 pm

itho varukuthu parunka

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Jun 20, 2009 5:42 am

ஆவியுலக அனுபவங்கள்


எனக்கு
ஆவிகளுடனான பழக்கம் மிகவும் குறைச்சல். ஆனால், நிறைவானது. முதன் முதலாக
எனக்குப் பேய்களை அறிமுகம் செய்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
தினமும் காலை, மாலை, இரவு என்று மூன்று வேளையும் விவிதபாரதி கேட்கும் நல்ல
வழக்கம் இருந்தது. ‘வேப்பமர உச்சியில் நின்னு… பேயண்ணு ஆடுதுன்னு
சொல்லிவைப்பாங்க! உன் வீரத்தைக் கொழும்பிலேயே கிள்ளி வைப்பாங்க!’ என்று
அவ்வப்போது பாடுவார். அவரின் மற்ற பாட்டுக்களான ‘தூங்காதே… தம்பி
தூங்காதே…’ மாதிரி இந்தப் பாடலிலும் மெட்டை ரசித்துவிட்டு எதிர்ப்பதத்தை
எடுத்துக் கொண்டோம்.

எப்பொழுது ஒன்று இல்லை என்று நிரூபிக்கவில்லையோ, அப்பொழுதே அது
இருக்கிறது என்று கொள்ளப்படும் என நண்பர்கள் வேதம் ஓதப் பாடலை
ஓரங்கட்டிவிட்டு பிரம்மராக்கதரையும், ஜெகன்மோகினியையும் தேட ஆரம்பித்தோம்.
அழகான ராட்சசிகளாகப் பாரகனில் ஜெயமாலினி ஆடினார். விட்டலாசார்யா மட்டும்
ஆங்கிலப் படம் எடுத்திருந்தால் பில்லியனார் ஆகி இருப்பார். கற்பனை
வளத்தில் ‘லார்ட் ஆ·ப் திரிங்ஸை’யும், கதை வளத்தில் ‘ஹாரி பாட்டரை’யும்,
கவர்ச்சி வளத்தில் ‘பேசிக் இன்ஸ்டிங்க்ட்’டையும் மிஞ்சும் படங்கள் மூலம்
நட்புகரமான பேய்களின் அறிமுகம்.
அப்படியே ‘பட்டணத்தில் பூதம்’, ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ என்று
பெரிய எழுத்தாளரை சந்திக்கும் சராசரி வாசகன் போன்ற ஆவலுடன் என்றாவது ஒரு
நாள் அவர்களுடன் கைகுலுக்க வேண்டும் என்று அவா கொண்டிருந்தேன். பேந்தப்
பேந்த விழிக்கும் மோகனின் ‘பிள்ளை நிலா’ அப்பொழுது வெளிவந்தது.
கல்யாணமானால் வீட்டில் ‘பேய்’ இருக்கும் என்று சிலர் சொல்லித்
தெரியுமானதால், அந்தப் படம் ரொம்ப பயமுறுத்தவில்லை.
நான் வசித்த மந்தவெளி-மயிலாப்பூர் மார்க்கத்தில் புகழ்பெற்ற வதந்தி
உலாவி வந்தது. ‘அட்மிரால்டி ஹோட்டல்’ என்னும் விடுதியின் வாயிலில் உள்ள
மரத்தில் குட்டிப் பிசாசு இருப்பதாகவும், மரத்தை உற்றுப் பார்த்தால்
விநோதமாக சிரிக்கும் என்று சக நான்காம் வகுப்பு மாணவர்கள் கிலியுடன்
விவரித்தார்கள். டி. ராஜேந்தரின் கவர்ச்சிக் கன்னிகள் நடித்த
திரைப்படங்கள் பார்க்கும் கபாலி தியேட்டர், பி.டி.சாமி முதல் ஜாவர்
சீதாராமன் வரை உள்ள லெண்டிங் லைப்ரரி என பல அன்றாடத் தேவைகளுக்கு ட்ரஸ்ட்
தெருக்களை நம்பியும், குறுக்குத் தெருவில் போதி மர வானத்தை அளந்து
கொண்டும் கவலையற்றுத் திரிந்த எனக்கும் பயம் தொற்றிக் கொண்டது.
மிகவும் ஜாக்கிரதையாக அட்மிரால்டி ஹோட்டலை தவிர்த்து வேறு வழிகளில்
சென்று வந்தேன். விதி வலிது என்பதால் நண்பர்கள் சவால் விடுத்தார்கள்.
மூவரும் அட்மிரால்டி ஹோட்டலுக்கு செல்வது; எதிர்ப்புறம் நின்று கொண்டு
மரத்தை உற்று நோக்குவது; எவர் ஜெயிக்கிறாரோ, அவர் கோடி வீட்டு உமாவுக்கு
போட்டியின்றி ஹிந்தி கற்றுக் கொடுக்கலாம் என்று முடிவாயிற்று.
அட்மிரால்டிக்கு அரை கிலோமீட்டர் இருக்கும்போதே ஒருவன் ஓடிப்போனான்.
நானும் ராஜுவும் மட்டும் சைட்டடிக்க சென்றோம். என் கண்களுகு வாட்ச்மேன்
எங்களை உற்று பார்ப்பதும் ‘என்ன வேணும்டா’ என்று குச்சியைத் தூக்கிக்
கொண்டு வருவதும் தெரிய, ராஜுவைத் தேடினால் தூரத்தில் புள்ளியாக ஓடிக்
கொண்டிருந்தான்.
ராஜுவுக்கும் எனக்கும் ஒரு வாரம் காய்ச்சல். அவன் எனக்கு பேய் பார்த்த
வைபவத்தையும் அது கண்ணை மலங்க மலங்க விழித்ததையும், பின் அவனைப் பார்த்து
அழ ஆரம்பித்ததையும் விவரித்தே எனக்குக் காய்ச்சல்; கொஞ்சம் வாட்ச்மேனின்
கைங்கர்யமும் இருக்கலாம். அந்தப் பேய் சின்னக் குழந்தையாம்; ராஜுவிடம்
சாக்லேட்டும் வீடுவீடாக வந்து விற்கப்படும் பிஸ்கட்டுகளும் கேட்டதாம்.
இடுப்புக்குக் கீழ் ஒன்றும் தெரியவில்லையாம். He is either a great
story-teller or a master decptionist.
வீட்டில் ஒரு நாள் இறந்த பாட்டியைக் கூப்பிட்டுப் பேசலாம் என்றார்கள்.
முதலிரவுக்குத் தயாராகும் போன-தலைமுறை தமிழ் கணவன் போல் ஒரு வித ஆர்வம்
நிறைந்த தேடல் தோன்றியது. ஆசையாக தரையில் சாக்பீஸால் சதுரம் போட்டோம்.
சதுரத்துக்குள் A டு Z எழுதி எண்களும் எழுதி, கற்பூரம் ஏற்றி, தம்ளர்
கவிழ்த்து, ·பேன் அணைத்து, மூவர் சத்தமாகக் கூப்பிட, ஒரு விரல் மட்டுமே
தொட்ட லோட்டா அதுவாக விடுவிடுவென நகர்ந்தது. இதுதான் ஹிப்னோடிசமா, கடவுள்
சக்தியா, சூட்சும உணர்வா, மனோபலமா என்று குழப்பமும் மிகுந்தது. பத்தாவது
வகுப்பின் அறிவு கொண்ட அறிவியலின் கூறுகளைக் கொண்டு விதிகளையும்
விடைகளையும் நிர்ணயிக்க முயன்றேன்.
என் மனதின் உட்கூறுகளில் ஒளிந்திருப்பதை எழுதிக் காட்டியது.
உட்கார்ந்திருந்த அனைவரின் மனத்திரைகளையும், அவர்கள் உள்ளத்தில் உதித்தக்
கேள்விகளுக்கு விடையும் தந்தது. ஆனால், சொர்க்கம், நரகம், மறுபிறவி,
பாவம், புண்ணியம், அவர்கள் உலகத்தின் விவரிப்புகள், நெறிமுறைகள், வாழ்க்கை
வகைகள் ஒன்றை குறித்தும் பதிலளிக்கவில்லை. மகாத்மாவும் ம.கோ.ரா.வும்
அடுத்த லோகத்துக்கான கட்டத்தில் இருக்கிறார்களாம். தூரத்தில் இருந்துதான்
பார்க்க முடியும். தினமும் பிரதோஷ காலத்தில் அனைவருக்கும் அட்டெண்டன்ஸ்
என்று வாய் தவறியோ தவறாமலோ தொடர்ந்த பேச்சுவார்த்தைகளில் மூலம் கொஞ்சம்
கறக்க முடிந்தது. கிட்டத்தட்ட இதே கருத்துகளைத் தாங்கி வந்த ‘Defending
Your Life’ படத்தைப் பார்த்த பிறகு இயக்குநர் ஆல் ப்ரூக்ஸ் ஆவிகளைக்
கலந்தாலோசித்து இருப்பார் என்றேத் தோன்றியது.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Jun 20, 2009 5:44 am

அன்று கற்றுக் கொண்ட வித்தை கல்லூரியிலும் இன்று அன்றாட நிஜ வாழ்விலும்
விதவிதமான பலன்களைக் கொடுத்திருக்கிறது. கல்லூரியில் நடிகர்
முத்துராமனையும், கவிஞர் கண்ணதாசனையும், கூப்பிட்டு வித்தைகாரனாய
பணிபுரிந்தேன். தோழிகளின் மறைந்த உறவினர்களை வரவழைத்து உரையாட வாய்ப்பு
கொடுத்து புது ஸ்னேஹிதம் பிடித்துக் கொண்டேன். திருத்தப்பட்ட தாள்களின்
மதிப்பெண்களை உடனுக்குடன் அறிவிப்பு கொடுத்து ஹாஸ்டல்வாசிகளின் நிம்மதியை
இரண்டொரு நாள் முன்பே குறைத்து வயிற்றெரிச்சலை வாங்கிக் கொண்டேன்.
(சோகத்தைத் தீர்க்க ‘ஜான்’ டேனியலும், ஜானி வாக்கரும் அப்ஸொல்யூட்டாகக் கை
கொடுக்க வந்தது தனி கதை).
சமீபத்தில் விபத்தில் காலமான கணவரை, மனைவியுடன் பேச வைத்தது, கல்லூரி
கால லூட்டிகளுக்கு நல்ல பிராயசித்தம். மகனும் மகளும் மனைவியும் தன்
தந்தையுடன் கிட்டத்தட்ட இருப்பதை போலவே உணர்ந்தார்கள். அவருக்கு மட்டுமே
தெரிந்த எ·ப்.டி., பங்குச் சந்தை போன்ற நிதி விவகாரங்களின் விவரங்களைத்
தெரிந்து கொள்ள முடிந்தது. கணினியிலும், நோட்டுப் புத்தகங்களுமாக
சிதறியிருந்த தகவல்களைத் எளிதில் திரட்ட முடிந்தது.
ஒவ்வொரு முறையும் எண்ணையும் எழுத்தையும் சாக்பீஸால் எழுதுவது, அவை பாதி
பேச்சில் பாதி காணாமல் போவது என்று சில தொல்லைகள் உண்டு. இன்னும் கொஞ்சம்
அவர்களுடன் நெருங்கி விட்டால் இரவு தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டு
கதைப்பார்கள் என்று சிலர் சொல்லியும் கேட்டிருக்கிறேன். இணையத்தில் நான்
மேய்வது போல் இதற்கு அடிமையாகும் அபாயமும் உண்டு. போர்டுக்கு அடுத்தபடியான
தனக்குள்ளே அழைத்துக் கொள்ளல், பேப்பரில் எழுத வைத்தல் போன்றவற்றின்
தாக்கம் இன்னும் அதிகம் என்றும் பயமுறுத்துகிறார்கள்.
நல்ல பொழுதுபோக்காக இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டே போர்டு
வாங்கிக் கொள்ளலாம் என்று கூகிளில் தேடியபோது, ‘ஆவிகளுடன் பேசுவதற்கான
போர்டு’ என்று டாய்ஸ் ஆர் அஸ் விற்றது கண்ணில் பட்டது. ஆறு வயதுக்குக்
கீழ் உள்ளவர்களுக்கு உகந்ததல்ல என்னும் எச்சரிக்கையுடன் இது
குழந்தைகளுக்காக விற்கப்படுகிறது. ‘Please grow up’ என்று மனைவி சொல்ல
தற்போது ஆவியுலகத் தொடர்புகள் அறுந்து போயின.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Jun 20, 2009 6:01 am

விகள் உண்டா? இல்லையா?
Sadhguru Jaggi Vasudev’s

எல்லோருக்கும்அமானுஷ்யமான தொடர்புகள் வைத்திருக்க ஆசை. கல்லூரி விடுதிகளில் ஆவியுடன்
பேச முற்படும் முயற்சி அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
இளைஞர்களுக்கு இது சுவாரஸ்யமான பொழுதுபோக்கு போலிருக்கிறது.ஆவிகளைச்
சந்திக்க வேண்டும் என்று எனக்குச் சிறு வயதில் தோன்றிய ஆசை,
கேளிக்கைக்காகத் தோன்றிய ஆசை அல்ல. மரணத்துக்குப் பின் என்ன என்பதை
அறிந்துகொள்ள என்னுள் எழுந்த விழைவே அது. சுடுகாடுகளோடு அந்தத் தேடல்
முடிந்துவிடவில்லை.அமானுஷ்யமான நிகழ்வுகள் எங்கே நடப்பதாகக்
கேள்விப்பட்டாலும், அங்கே தவறாமல் போய் விடுவேன். ஆவிகளின் நடமாட்டம்
இருக்கிறது என்று சொல்லப்படும் கட்டடத்தில் நள்ளிரவுகளைக் கழிக்க நான்
தயங்கியதில்லை. தன் ரத்தத்தை அருந்தக் கொடுத்து, ஆவிகளை வரவழைப்பதாகச்
சொன்ன ஒருவருடன் பல அமாவாசை இரவுகளில் காத்திருந்து ஏமாந்திருக்கிறேன்.
அவருடைய ரத்தம் வீணாகியிருக்கிறதே தவிர, எந்த ஆவியும் வந்ததில்லை.எனக்குத்
தெரிந்த இளைஞனின் தந்தை, மனிதர்களைப் பீடித்த ஆவிகளைப் பிடித்து
பாட்டில்களில் அடைத்துவிடுவார் என்று சொல்லக் கேட்டு, அவர் பின்னால்
சிறிது நாட்கள் அலைந்தேன்.ஒரு முறை அவருடைய தொழில் முறையை நேரில்
காண வாய்ப்புக் கொடுத்தார். ஆவித் தொந்தரவு இருப்பதாகச் சொல்லப்பட்ட
வீட்டில், தரையில் அரிசியால் பெரிது பெரிதாகக் கோலமிட்டார். அதன் ஐந்து
முனைகளில் முட்டைகளை வைத்தார். ஏதேதோ மந்திரங்கள் சொல்லி, இரு கைகளையும்
தட்டினார். பட்பட்டென்று ஐந்து முட்டைகளும் ஒரு சேர உடைந்தன. உடனே,
விரல்களால் ஏதோ செய்து, அவர் கொண்டுவந்த பாட்டிலை பரபரப்பாக அழுத்தி
மூடினார். அதற்குள் ஆவி சிறைப்பட்டுவிட்டதாகச் சொன்னார்.அந்த
வீட்டார் மகிழ்ந்து, அவருக்குச் சகல மரியாதைகள் செய்து, அமர்க்களமான
விருந்தும் கொடுத்தனர். ஆவியைப் பிடித்து அடைத்த அந்த பாட்டிலைத் திருடி
வரக்கூட முயன்றேன். முடியவில்லை.அன்றிரவு எனக்குத் தூக்கம் பறிபோயிற்று. அவரால் சிறைப்படுத்த முடிந்த ஆவியை ஏன் என்னால் பார்க்கக்கூட முடியவில்லை?
மறு நாள் கொய்யா மரத்தடிக்குச்
சென்றேன். ஒரு கொய்யாவை உற்றுப் பார்த்து கைகளைத் தட்டினேன். என்ன
ஆச்சர்யம்! அந்தக் கொய்யா அறுந்து விழுந்தது. அட, இவ்வளவு எளிதா? இனி
கல்லடித்துப் பழங்களைப் பறிக்க வேண்டியதில்லையா? என் நண்பர்களைக் கூட்டி
வந்து அவர்கள் கண்ணெதிரில் சில கொய்யாக்களைக் கைதட்டியே விழவைத்தேன்.
ஆனால், என்னுள் ஏதோ ஒன்று அந்தச் செயலைத் தவிர்க்கச் சொல்லி
வற்புறுத்தியது. அதற்கப்புறம் அந்த வேலையில் ஈடுபடவில்லை.பிற்பாடு, சில உன்னத அனுபவங்கள் எனக்கு சாத்தியமான பிறகு, ஆவிகள் உண்டா என்ற கேள்விக்குத் தானாகவே விடை கிடைத்தது.ஆவிகள்
பற்றி என்னிடம் கேட்கப்படும் போதெல்லாம் ‘உங்கள் அனுபவத்தில் இல்லாத
ஒன்றைப் பற்றிச் சொல்வதில் அர்த்தமில்லை’ என்றே சொல்லி வந்திருக்கிறேன்.
இப்போதும், என் அனுபவங்களை வைத்து நீங்கள் எந்த முடிவுக்கும் வரத்
தேவையில்லை.தியானலிங்கம் நிர்மாணிக்கப்பட்டபோது மிக சக்தி வாய்ந்த சூழல் அமைந்திருந்தது. அங்கே பல ஆவிகள் தாமாகவே இழுக்கப்பட்டன.உடலோடு
இருக்கையில், உங்கள் விருப்பப்படி நடந்துகொள்ள வாய்ப்புகள் அதிகம். உடலற்ற
நிலையில், உள்பதிந்த குணங்களை ஒட்டி, ஆவிகள் பல்வேறு சூழல்களுக்கு
இழுக்கப்படுகின்றன.அப்போது மட்டுமல்ல… பல சந்தர்ப்பங்களில் ஆவிகள்
என்னுடன் தொடர்பு வைத்திருக்கின்றன. ஆனால், அது பற்றியெல்லாம் விரிவாகப்
பேசினால், அது உங்களுள் பல கற்பனைகளைக் கிளப்பும் என்பதால் தவிர்க்கவே
விரும்புகிறேன்.ஆவிகள் இருப்பது நிஜம். ஆனால், அவை தலைகீழாகத்
தொங்கும், இரண்டு கொம்பு முளைத்திருக்கும், உங்கள் ரத்தத்தை உறிஞ்சிக்
குடித்துவிடும் என்றெல்லாம் உலவும் கதைகளை நம்பி இருட்டு மூலைகளில் அச்சம்
கொள்ளாதீர்கள்.ஞாயிற்றுக்கிழமை. தேவாலயத்தில் எல்லோரும் பாதிரியார் வரக் காத்திருந்தனர்.திடீரென்று அங்கே சாத்தான் தோன்றியது.சாத்தானைப்
பார்த்ததும், அத்தனைக் குடும்பங்களும் பதறியடித்து எழுந்தனர். பயத்தில்
கூச்சலிட்டபடி சிதறி ஓடினர். தேவாலயமே காலியாகிவிட்டது. ஒரே ஒரு மனிதன்
மட்டும் சற்றும் கவலையின்றி அமர்ந்திருந்தான்.சாத்தான் குழம்பியது. ”ஏய், நான் யார் என்று உனக்குத் தெரியுமா?”- அவனை அதட்டியது.”நன்றாகவே…””அப்படியும் உனக்குப் பயமில்லையா?””பயமா…
எதற்கு? இருபத்தேழு வருடங்களாக என் மனைவியோடு வாழ்ந்து பழகிவிட்டேன்.
உன்னைப் போன்ற சாதாரண சாத்தானைப் பார்த்து பயப்படுவேனா?” என்று பதில்
வந்தது.யிரோடு
இருப்பவர்களைப் போல் கொடுமையானவை அல்ல ஆவிகள். அதற்காக நட்புகொண்டு,
உங்கள் கேள்விகளுக்கு ஆங்கில எழுத்துக்களைக் கூட்டி வார்த்தைகளை அமைத்துத்
தர அவை வருவதும் இல்லை.கடவுளிடம் உங்கள் பிரார்த்தனைகளைக் கொண்டு
சேர்ப்பதாகச் சொல்லி சில இடைத்தரகர்கள் பிழைப்பது போல, ஆவிகளுடன்
பேசுவதாகச் சொல்லியும் சில இடைத்தரகர்கள் பிழைப்பு நடத்துகின்றனர்.அப்பாவின்
ஆவி வந்தது, பாட்டியின் ஆவி வந்தது என்பதெல்லாம் கற்பனை. மரணத்தில் உடலைத்
துறந்த பின், உடல்ரீதியான எல்லா உறவு முறைகளும் அறுந்துவிடுகின்றன.நம்
பாரம்பரியத்தில் குரு-சிஷ்ய உறவு மிக மேன்மையானது என்று சொன்னதற்குக்
காரணம், அந்த உறவு மட்டும்தான் மரணத்தைத் தாண்டியும் தொடர வல்லது.கடவுளானாலும்
ஆவியானாலும், யாரோ சொல்வதற்காக அதை நம்புவது முட்டாள்தனம். அனுபவத்தில்
இல்லாத காரணத்தினாலேயே அது கிடையாது என்பது மறுப்பதும் முட்டாள்தனம்!


avatar
Guest
Guest

PostGuest Sat Jun 20, 2009 7:56 am

thesa wrote:அப்பாடி ஒரு வழியா முடிஞ்சது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ....

ஒ௫ கும்பிடு போடுங்க அநியாயம்

நல்லவங்களுக்கு தான் சோதனை வ௫து! என்ன பண்ண சோகம்

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Sat Jun 20, 2009 7:57 am

சரி சரி விடுங்க...

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 20, 2009 8:02 am

ஆவிகளுடன் பேச முயற்சித்தால் மனித மூளையில் ஒ௫ சக்தி (Cell CHARGE)

குறையுமோ?

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jun 22, 2009 3:30 pm

உலவும் ஆவிகள் பற்றி அர்த்தமுள்ள இந்துமதம் முதல் பாகத்தில், நான் ஏற்கனவே கூறியுள்ளேன். அந்த வகை ஆவிகளே ‘குட்டிச் சாத்தான்’ போன்றவை.

ஆசை நிறைவேறாமல் இறந்க உயிர்களும், தற்கொலை செய்துகொண்ட அல்லது கொல்லப்பட்ட உயிர்களும் குட்டிச் சாத்தான்களாகின்றன என்பது என் கருத்து.

ஒரு சில சாத்தான்கள் நல்லது செய்கின்றன.

பலவந்தமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆவிகள் பழி வாங்குகின்றன.

சத்திய சாயிபாபா என்பவசைப் பற்றிக் கூறப்படும் தகவல்கள், அவர் பல குட்டிச் சாத்தான்களை ஏவலுக்கு அமர்த்திக் கொண்டவர் என்றே எண்ணத் தோன்றுகிறது.

அவரது தலைமயிர் திடீரென்று இரும்புபோல் இருக்குமாம்;;; யாராவது அதைத் தொட்டால் கையெல்லாம் ரத்தமாகிவிடுமாம்.

திடீரெண்டுஅவர் விபூதி கொடுப்பாராம்;;;;;;;;, வெறும் கையிலேயே விபூதி வருமாம்

குட்டிச் சாத்தான்கள் மூலமாகவே அப்படி ஊடுருவ முடிகிறது என்று நான் நம்புகிறேன்.

என்னுடைய கனவிலும் அவர் இரண்டு முறை ஊடுருவினார்.

முதல் முறை வந்த கனவில், சத்திய சாயிபாபா அமர்ந்திருக்கிறார், நான் கைகளால் ஊர்ந்து அவர் அருகே செல்கிறேன்.

இரண்டாவது கனவில், சத்திய சாயிபாபா அமர்ந்கிருக்கும் கட்டத்துக்குள் ஒரு கரண்ட் என்னை இழுக்கிறது, நான் அதை எதிர்த்துப் போராடுகிறேன். ‘கிருஷ்ணா !; ‘கிருஷ்ணா !; என்று சத்தமிடுகிறேன். அந்தக் கரண்ட் என்னை விட்டுவிடுகிறது.

சத்திய சாயிபாபா செய்வதாகச் சொல்லப்படும் காரியங்கள் அனைத்துமே, சித்து வேலையாகவே எனக்குத் தோன்றுகின்றன.

இதே போல் பன்றிமலை சவாமிகளைப் பற்றியும் ஏராளமான கதைகள் கூறப்படுகின்றன.

அவசை ஒரு நாள் பார்க்கப் போனேன்.

அங்கிருந்த ஒரு மலர் மாலையிலிருந்து ஏழு எட்டு மலர்களை உருவிக் கைக்குள் தேய்த்தார். உடனே அனைத்தும் திருப்பதி அட்சதைகளாக மாறின.

அவர் பாம்பு என்று ஒரு காகிதத்தில் எழுதி வைக்கிறார். அதை நீங்கள் விரலால் தொட்டால் விஷம் ஏறுகின்றது.

நெருப்பு என்று எழுதி வைக்கின்றார், தொட்டால் சுடுகிறது.

சந்தனம் என்று எழுதி வைக்கின்றார், தொட்டால் மணக்கின்றது.

ஆங்கிலத்தில் கட்டுரை எழுதும் அளவு அவர் வல்லுநர் அல்ல.

நீங்கள் ஏதாவது விஷயம் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரை எழுதித் தரும்படி அவரிடம் கேட்டால் அவர் ‘முருகா’ என்பார். எங்பிருந்தோ டைப் அடிக்கப்பட்ட காகிதங்கள் வந்துவிடுகின்றன.

திட்டவட்டமாகக் குட்டிச் சாத்தான் ஏவல் கொண்டவர் என்றே நான் கருதுகிறேன்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jun 22, 2009 3:31 pm

கோவை ஜெயில் ரேடில் 1950 ம் ஆண்டில் நான் கங்கியிருந்தபோது, என்னிடம் ஒரு சாமியார் வந்தர். அவர் இரண்டு ரூபாய்கள்தாம் என்னிடம் கேட்டார், கொடுத்தேன். அவர் ஒரு தாயத்துக் கொடுத்தார். அவர் காகிதத்தில் ‘கெட்டது நடக்கும்’ என்றும், ஒரு காகிதத்தில் ‘நல்லது நடக்கும்’ என்றும் எழுதித் தூரத்தில் வைத்தார். நாலடி தூரத்தில் தாயத்தை வைத்தார். தாயத்து ஊர்ந்து சென்று ‘நல்லது நடக்கும’ என்ற காகிதத்தில் ஏறிற்று.

ஏதோ ஒரு ஆவியை அடக்கி வைத்திருப்பவர் போலிருந்தது அவர் செய்கை.

வீதியிலே வித்தை காட்டுகிறவன். உரு துணிப் பொம்மையின் தலையில் அடித்தால், பார்த்துக் கொண்டிருப்பவர்கள் எல்லோருடைய தலையிலும் அடி விழுகிறது. மேலும் அவன் செய்யும் குட்டிச் சாக்கான் வித்தைகளை எல்லாம் நீங்கள் அறிவீர்கள்.

மாஜிக் நிபுணர்களும் குட்டிச் சாத்தான்களை அடக்கியாள்பவர்களே.

இந்தச் சாத்தான்களை எதிரியின் மேல் ஏவ முடியும் என்கிறார்கள் சிலர்.

எனக்கு அதில் நம்பிக்கை இல்லை.

‘சோற்றிலே மலம் வந்து விழுந்தது, வீட்டிலே கல் வீழுந்தது., எல்லாம் குட்டிச் சாத்தான் வேலை’ என்று சொல்வோர் உண்டு. இவை எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்குத் தெரியாது.

ஆனால், ஆவிகள் உலவுவதும், அவையே குட்டிச் சாத்தான்கள் என்று அழைக்கப்படுவதும், அசைக்க முடியாத உண்மை.

இந்த ஆவிகளை எப்படிச் சிலர் அடக்கியாளுகின்றனர் என்ற வித்தைதான் எனக்குத் தெரியவில்லை.

குட்டிச் சாத்தான்கள் நல்லவர்களுக்கு வழித் துணையாக விளங்குகின்றன.

கீயவர்களுக்குத் தீங்கு செய்கின்றன.

இந்தச் சாத்தான்கள் வயல்களைக் காவல் செய்கின்றன.

இறைவனிடமும் மனிதனிடமும் பேசுகின்றன.

இரு குறிப்பிட்ட காலத்தில், இவை மீண்டும் பிறக்கின்றன.

மனிதர்களாகவோ, மிருகங்கடாகவோ தோன்றுகின்றன.

ஏழைகளுக்கு உணவு வழங்குகிறவாகள் வீட்டையும், பிறர் கஷ்டத்தில் உதவுகின்றவர்கள் வீட்டையும், இவை காவல் காக்கின்றன.

உண்மையில், இவை மொபைல் கோட் நீதிபதிகளாகவே விளங்குகின்றன.

மூலம் : கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்

இதில் என்னுடைய எந்த தனிப்பட்ட கருத்தும் இல்லை. அனைத்தும் கண்ணதாசன் கூறியவை.

தம்மை கடவுளாக மக்கள் முன் அடையாளப்படுத்துபவர்கள் பற்றி எனக்கும் அவ்வளவு நம்பிக்கை இல்லை ஆனால் பலர் இப்படியானவர்களை நம்பியே தீருவோம் என்று அலைகின்றனர். இலங்கையில் இருந்து கூட பெட்டி கட்டிக்கொண்டு வருவார்கள். இதில் பிரபல சிங்கள அரசியல் வாதிகள் கூட அடக்கம் என்பதுதான் நகைப்பான விடையம்.

நான் இப்படி என் நண்பனிடம் அலுத்துக்கொண்டபோது அவன் கூறினான். இந்துக்களை வேற்று மதக்காரர் மதமாற்றம் செய்வதைவிட இது எவ்வளவோ பரவாயில்லை. சுத்தி சுத்தி சுப்பற்ற கொட்டிலுக்குத்தான் வரவேணும் என்றது போல அவயள் எப்பிடியும் இந்துவாத்தானே இருக்கப்போகினம். என்னிடம் அப்போது அவனுக்கு கொடுக்க பதில் இருக்கவில்லை உங்களுக்கு இருக்கின்றதா? அப்போ என்ன தயக்கம் பகிர்ந்து கொள்ளுங்கள்………..

avatar
Guest
Guest

PostGuest Thu Jun 25, 2009 12:09 pm

ruban1 wrote:கோவை ஜெயில் ரேடில் 1950 ம் ஆண்டில் நான் கங்கியிருந்தபோது, என்னிடம் ஒரு சாமியார் வந்தர். அவர் இரண்டு ரூபாய்கள்தாம் என்னிடம் கேட்டார், கொடுத்தேன். அவர் ஒரு தாயத்துக் கொடுத்தார். அவர் காகிதத்தில் ‘கெட்டது நடக்கும்’ என்றும், ஒரு காகிதத்தில் ‘நல்லது நடக்கும்’ என்றும் எழுதித் தூரத்தில் வைத்தார். நாலடி தூரத்தில் தாயத்தை வைத்தார். தாயத்து ஊர்ந்து சென்று ‘நல்லது நடக்கும’ என்ற காகிதத்தில் ஏறிற்று………..

சூப்பர்... மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 16 of 27 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 21 ... 27  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக