Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....
+12
சாந்தன்
Manik
jahubar
சிவா
dharshi
ராஜா
ரிபாஸ்
ஹாசிம்
அப்புகுட்டி
kalaimoon70
கலைவேந்தன்
Aathira
16 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....
இணையத்தில் பொறித்திடுவோம்!!!
கலைபயின்றேன் என்றாலும் கட்டுரைக்கும் வன்மையிலேன்!
அலைகளென ஆசைகளைத் தேக்கிவைத்து ஏங்குகிறேன்!
சரம்சரமாய் நினதுபுகழ் உலகுக்குப் பாய்ச்சிவிட
கரம்குவித்தேன் உனதுமகள் வரந்தருவாய் எந்தமிழே!
நிறையறிவுச் சிந்தையிலேன்; நீடுபுகழ் தமிழமுதைச்
சிறிதளவு பருகியதன் போதையினால் துடிக்கின்றேன்;
வரைகடந்து வான்கடந்து என்மொழிதான் உதிக்கின்ற
பிறைவடிவம் பெற்றதென்று கூத்தாடிக் குலவையிட!
எந்தமிழே! நாவசைத்து நீமொழிந்த முந்துமொழி
தாய்மொழியே! மற்றந்த பிந்தைமொழி எல்லாம்உன்
வழிவந்த தங்கைமொழி; தம்பிமொழி; எனஉலகச்
சந்தையிலே போற்றிவிடும் நிலையதுதான் பெறவேண்டும்!
வாழ்முறையை வகுத்தளித்த தொல்ப்பாட்டன் இலக்கணத்தை;
நூல்முறையாம் எம்தாத்தர் சங்கத்துப் பனுவல்களை;
என்னினத்து மூதாட்டி ஒளவையவள் ஆக்கங்களை;
எண்ணில்லா மொழிகண்ட வள்ளுவனின் தமிழ்மறையை;
கம்பநாடன் கனிரசத்தை; தமிழ்ப்புலவன் தனக்கென்றும்
தெம்புதரும் காப்பியமாம் சிலம்பதனை; இடும்! இடும்!
என்றதிரும் போர்ப்பரணி முழக்கத்தை; ஊன்கலந்து
தெவிட்டாது இனிக்கின்ற தேவார; வாசகத்தை;
வாடும்பயிர் வாட்டமதைப் போக்குகின்ற அருட்பாவை;
ஊடும்சாதி பேதங்களைத் தகர்த்தெறிந்த பாரதியை;
கூடிநின்ற தாசனவன் பகுத்தறிவுச் சிந்தனையை;
பாடிப்பாடி ஆவதென்ன? பழங்கதையா பசிதீர்க்கும்?
கூட்டின் இரைதேடும் குருவியதாய் பறக்கின்றான்!
அறிவுத்தேட் டில்எந்தமி ழன்எங்கோ சென்றுவிட்டான்!
சிறுநோட்டில் இவைஎழுதி நாட்டார் காண்பதுண்டா?
புதுப்பாட்டை இணையத்தில் பொறித்திடுவோம் அவன்பெருமை!
ஏர்பிடித்த ஊர்மகன்தான் எந்தமிழன்! தரணியிலே
நூல்பிடித்த கைகளெல்லாம் ஏங்குகின்ற சீர்பெற்றான்!
ஊர்ப்புறத்துச் செப்பேட்டில் எழுதுவதா அவன்பெருமை?
பார்படிக்க இணையத்தில் பொறிப்பதன்றோ பீடுதரும்!
இணையதளம் எத்தனையோ இருந்தாலும் தமிழ்த்தளமே
இனியதளம் எனஉலகோர் ஏற்றிடவே நம்முன்னோர்
ஆதித்தமிழ் வித்தைகளும் இன்றுள்ளோர் சேர்த்துள்ள
புத்தமுதம் அத்தனையும் இணைத்திடுவோம் ஈகரையில்!!
ஆதிரா
இது என் இரண்டாயிரமாவது பதிவு. இப்பதிவு,
இறைதேடும் பறவைகளாய் தாய்க்கூட்டை விடுத்து அயலகத்தில் பறந்தாலும், அன்னைத் தமிழுக்குத் தொண்டாற்றும் ஈகரையின் பாசப்பறவைகளுக்கு ஆதிராவின் அன்புப் படையல்!!!!
கலைபயின்றேன் என்றாலும் கட்டுரைக்கும் வன்மையிலேன்!
அலைகளென ஆசைகளைத் தேக்கிவைத்து ஏங்குகிறேன்!
சரம்சரமாய் நினதுபுகழ் உலகுக்குப் பாய்ச்சிவிட
கரம்குவித்தேன் உனதுமகள் வரந்தருவாய் எந்தமிழே!
நிறையறிவுச் சிந்தையிலேன்; நீடுபுகழ் தமிழமுதைச்
சிறிதளவு பருகியதன் போதையினால் துடிக்கின்றேன்;
வரைகடந்து வான்கடந்து என்மொழிதான் உதிக்கின்ற
பிறைவடிவம் பெற்றதென்று கூத்தாடிக் குலவையிட!
எந்தமிழே! நாவசைத்து நீமொழிந்த முந்துமொழி
தாய்மொழியே! மற்றந்த பிந்தைமொழி எல்லாம்உன்
வழிவந்த தங்கைமொழி; தம்பிமொழி; எனஉலகச்
சந்தையிலே போற்றிவிடும் நிலையதுதான் பெறவேண்டும்!
வாழ்முறையை வகுத்தளித்த தொல்ப்பாட்டன் இலக்கணத்தை;
நூல்முறையாம் எம்தாத்தர் சங்கத்துப் பனுவல்களை;
என்னினத்து மூதாட்டி ஒளவையவள் ஆக்கங்களை;
எண்ணில்லா மொழிகண்ட வள்ளுவனின் தமிழ்மறையை;
கம்பநாடன் கனிரசத்தை; தமிழ்ப்புலவன் தனக்கென்றும்
தெம்புதரும் காப்பியமாம் சிலம்பதனை; இடும்! இடும்!
என்றதிரும் போர்ப்பரணி முழக்கத்தை; ஊன்கலந்து
தெவிட்டாது இனிக்கின்ற தேவார; வாசகத்தை;
வாடும்பயிர் வாட்டமதைப் போக்குகின்ற அருட்பாவை;
ஊடும்சாதி பேதங்களைத் தகர்த்தெறிந்த பாரதியை;
கூடிநின்ற தாசனவன் பகுத்தறிவுச் சிந்தனையை;
பாடிப்பாடி ஆவதென்ன? பழங்கதையா பசிதீர்க்கும்?
கூட்டின் இரைதேடும் குருவியதாய் பறக்கின்றான்!
அறிவுத்தேட் டில்எந்தமி ழன்எங்கோ சென்றுவிட்டான்!
சிறுநோட்டில் இவைஎழுதி நாட்டார் காண்பதுண்டா?
புதுப்பாட்டை இணையத்தில் பொறித்திடுவோம் அவன்பெருமை!
ஏர்பிடித்த ஊர்மகன்தான் எந்தமிழன்! தரணியிலே
நூல்பிடித்த கைகளெல்லாம் ஏங்குகின்ற சீர்பெற்றான்!
ஊர்ப்புறத்துச் செப்பேட்டில் எழுதுவதா அவன்பெருமை?
பார்படிக்க இணையத்தில் பொறிப்பதன்றோ பீடுதரும்!
இணையதளம் எத்தனையோ இருந்தாலும் தமிழ்த்தளமே
இனியதளம் எனஉலகோர் ஏற்றிடவே நம்முன்னோர்
ஆதித்தமிழ் வித்தைகளும் இன்றுள்ளோர் சேர்த்துள்ள
புத்தமுதம் அத்தனையும் இணைத்திடுவோம் ஈகரையில்!!
ஆதிரா
இது என் இரண்டாயிரமாவது பதிவு. இப்பதிவு,
இறைதேடும் பறவைகளாய் தாய்க்கூட்டை விடுத்து அயலகத்தில் பறந்தாலும், அன்னைத் தமிழுக்குத் தொண்டாற்றும் ஈகரையின் பாசப்பறவைகளுக்கு ஆதிராவின் அன்புப் படையல்!!!!
Last edited by Aathira on Wed Mar 31, 2010 11:51 pm; edited 1 time in total
Re: ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....
உங்கள் தமிழுக்கு தலைவணங்கி சொல்வன்மையை வியந்து நோக்கி மலைக்கின்றேன் தமிழ்மகளே .... நீங்கள் நீடூழிவாழ்ந்து தமிழதனைச் சிறப்பிக்க அந்த இறையை வேண்டி நிற்கிறேன் தாயே....!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....
தமிழே!நீ தந்த தமிழை ,படித்தால் இனிக்கும்.
தரணிப் போற்றும் உன் கவிதைகள் மணக்கும்.
தமிழ்ப் புகழ் பாடி,ஈகரை இதயத்திருக்கு இந்த தமிழும்,
தமிழ்ப் பேச,எழுத ,என்றும் துணை நிறுக்கும்!
தமிழ் வந்த காலமும்,தமிழேடு நீ தந்த களமும்,
தமிழ் வாழந்த,வந்த வழி அறியும் வண்ணமும்,
தந்த நிலையும்,அதை ஈகரையில் நீ வடித்த விதமும்,
தமிழே, சொன்னதாய் நினைத்து , வாழ்த்தும் என் உள்ளம்.
இன்றும்,என்றும்,அகம் மகிழ,முகம் மலர பாராட்டும்!
நன்றி! நன்றி!தோழியே !
தரணிப் போற்றும் உன் கவிதைகள் மணக்கும்.
தமிழ்ப் புகழ் பாடி,ஈகரை இதயத்திருக்கு இந்த தமிழும்,
தமிழ்ப் பேச,எழுத ,என்றும் துணை நிறுக்கும்!
தமிழ் வந்த காலமும்,தமிழேடு நீ தந்த களமும்,
தமிழ் வாழந்த,வந்த வழி அறியும் வண்ணமும்,
தந்த நிலையும்,அதை ஈகரையில் நீ வடித்த விதமும்,
தமிழே, சொன்னதாய் நினைத்து , வாழ்த்தும் என் உள்ளம்.
இன்றும்,என்றும்,அகம் மகிழ,முகம் மலர பாராட்டும்!
நன்றி! நன்றி!தோழியே !
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....
இணையதளம் எத்தனையோ இருந்தாலும் தமிழ்த்தளமே
இனியதளம் எனஉலகோர் ஏற்றிடவே நம்முன்னோர்
ஆதித்தமிழ் வித்தைகளும் இன்றுள்ளோர் சேர்த்துள்ள
புத்தமுதம் அத்தனையும் இணைத்திடுவோம் ஈகரையில்!!
உங்கள் திறன் எங்களுக்கும் கிடைக்காதா மேடம்
என்ன திறமை என்ன திறமை உங்களை பாராட்டுவதில் நான்
பெருமைப்படுகிறேன் மேடம் என்னால பாரட்ட முடியல
எப்படி பாராட்ட தெரில மேடம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி
இனியதளம் எனஉலகோர் ஏற்றிடவே நம்முன்னோர்
ஆதித்தமிழ் வித்தைகளும் இன்றுள்ளோர் சேர்த்துள்ள
புத்தமுதம் அத்தனையும் இணைத்திடுவோம் ஈகரையில்!!
உங்கள் திறன் எங்களுக்கும் கிடைக்காதா மேடம்
என்ன திறமை என்ன திறமை உங்களை பாராட்டுவதில் நான்
பெருமைப்படுகிறேன் மேடம் என்னால பாரட்ட முடியல
எப்படி பாராட்ட தெரில மேடம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....
கலை wrote:உங்கள் தமிழுக்கு தலைவணங்கி சொல்வன்மையை வியந்து நோக்கி மலைக்கின்றேன் தமிழ்மகளே .... நீங்கள் நீடூழிவாழ்ந்து தமிழதனைச் சிறப்பிக்க அந்த இறையை வேண்டி நிற்கிறேன் தாயே....!
தாங்கள் வியப்பது தங்கள் அன்பின் அடையாளம் என்பது ஈகரை வந்தது முதல் நான் அறிந்ததே. நன்றி கலை தங்கள் வேண்டுதலுக்கு.
Re: ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....
அருமைத்தமிழ் கண்டேன்
உன் படைப்பில்
தமிழ்த்தாய் ஈன்ற மூதாட்டி நீ
உன்தமிழின் முதிர்ச்சி
முத்தமிழின் இன்பமயம்
உன்னால் ஈகரைக்கு
என்றும் மகிழ்ச்சி வாழ்க
என்றும் உலகம் சிறக்க
உன் படைப்பில்
தமிழ்த்தாய் ஈன்ற மூதாட்டி நீ
உன்தமிழின் முதிர்ச்சி
முத்தமிழின் இன்பமயம்
உன்னால் ஈகரைக்கு
என்றும் மகிழ்ச்சி வாழ்க
என்றும் உலகம் சிறக்க
நேசமுடன் ஹாசிம்
Re: ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....
ஹாசிம் wrote:அருமைத்தமிழ் கண்டேன்
உன் படைப்பில்
தமிழ்த்தாய் ஈன்ற மூதாட்டி நீ
உன்தமிழின் முதிர்ச்சி
முத்தமிழின் இன்பமயம்
உன்னால் ஈகரைக்கு
என்றும் மகிழ்ச்சி வாழ்க
என்றும் உலகம் சிறக்க
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....
Aathira wrote:
இறைதேடும் பறவைகளாய் தாய்க்கூட்டை விடுத்து அயலகத்தில் பறந்தாலும், அன்னைத் தமிழுக்குத் தொண்டாற்றும் ஈகரையின் பாசப்பறவைகளுக்கு ஆதிராவின் அன்புப் படையல்!!!!
அருமையான கவிதை அக்கா , நன்றிகள் பல ..........
Re: ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....
kalaimoon70 wrote:தமிழே!நீ தந்த தமிழை ,படித்தால் இனிக்கும்.
தரணிப் போற்றும் உன் கவிதைகள் மணக்கும்.
தமிழ்ப் புகழ் பாடி,ஈகரை இதயத்திருக்கு இந்த தமிழும்,
தமிழ்ப் பேச,எழுத ,என்றும் துணை நிறுக்கும்!
தமிழ் வந்த காலமும்,தமிழேடு நீ தந்த களமும்,
தமிழ் வாழந்த,வந்த வழி அறியும் வண்ணமும்,
தந்த நிலையும்,அதை ஈகரையில் நீ வடித்த விதமும்,
தமிழே, சொன்னதாய் நினைத்து , வாழ்த்தும் என் உள்ளம்.
இன்றும்,என்றும்,அகம் மகிழ,முகம் மலர பாராட்டும்!
நன்றி! நன்றி!தோழியே !
உன் அன்பில் ஊறித் ததும்பும் இன்பத்தில் இன்னும் படைப்பேன், இன் தமிழ்க்கவிதைகள் என் தமிழ் அன்னைக்கு. நன்றி நண்பா அன்பான தங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும்...
Re: ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....
Appukutty wrote:இணையதளம் எத்தனையோ இருந்தாலும் தமிழ்த்தளமே
இனியதளம் எனஉலகோர் ஏற்றிடவே நம்முன்னோர்
ஆதித்தமிழ் வித்தைகளும் இன்றுள்ளோர் சேர்த்துள்ள
புத்தமுதம் அத்தனையும் இணைத்திடுவோம் ஈகரையில்!!
உங்கள் திறன் எங்களுக்கும் கிடைக்காதா மேடம்
என்ன திறமை என்ன திறமை உங்களை பாராட்டுவதில் நான்
பெருமைப்படுகிறேன் மேடம் என்னால பாரட்ட முடியல
எப்படி பாராட்ட தெரில மேடம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்பு உங்கள் மனம் திறந்த பாராட்டு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. மிக்க நன்றி அப்பு தங்கள் அன்புக்கும் பாராட்டுகும். எதற்கு தோழா? மகிழ்வோம்.
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» ஈகரையின் முன்னேற்றம்
» ஈகரையின் நண்பர்களுக்கு..
» ஈகரையின் சாதனை.....
» ஈகரையின் இடைவேளை
» ஈகரையின் வெற்றி
» ஈகரையின் நண்பர்களுக்கு..
» ஈகரையின் சாதனை.....
» ஈகரையின் இடைவேளை
» ஈகரையின் வெற்றி
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|