Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள்
+2
ரூபன்
சிவா
6 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள்
First topic message reminder :
ஒர் ஊரில் அடுத்தடுத்து செல்வன் ஒருவனும் எழை ஒருவனும் குடியிருந்தார்கள். செல்வனின் வீடு பெரிதாக இருந்தது. எழையின் வீடோ குடிசை வீடு.
எழைக்கு சொந்தமாக நிலம் ஏதும் கிடையாது. யார் வயலிலாவது உழைத்து கிடைக்கின்ற சிறிதளவு கூலிவுடன் வீடு திரும்புவான் அவன், எந்தக் கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இருந்தான்.
அவன் வீட்டு கதவு எப்பொழுதும் திறந்தே இருக்கம் படுத்தவுடன் தூங்கி விடவான் அவன்.
ஆனால் செல்வனோ எப்பொழுதும் பரபரப்புடனம் கவலையுடனும் காட்சி அளித்தான். தன் வீட்டு ஜன்னர்களையும் கதவுகளையும் மூடியே வைத்திருந்தான் அவன் திருடர்கள் வீட்டினுள் நுழைந்து விலை உயர்ந்த பொருள்களை திருடிச் சென்று விடுவார்களோ என்று அஞ்சினான். ஆதனால் அவன் இரவில் தூங்குவதே இல்லை.
ஏழை எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்பதைக் கவனித்தான் அவன் இவ்வாறு செல்வம் இருந்தும் தன்னால் அவனைப் போல் மகிழ்ச்சியாக இருக்க முடியவில.;லையே என்று வருந்தினான்.
ஏழையிடம் செல்வம் இருந்தால் என்ன நடக்கும் என்பதை அறிய விரும்பினான் அவன்.
ஏழையை அழைத்த அவன் நண்பனே உன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன், நீ வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறாய் உனக்கு உதவி செய்ய நினைக்கிறேன் என்னிடம் செல்வம் உள்ளது அதிலிருந்து உனக்கு 100 பொற்காசுகள் தருகிறேன் நீ மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்து என்றான்.
அவனிடம் நூறு பொற்காசுகள் பெற்றுக் கொண்ட எழை மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்தான்.
இரவு வந்தது. திருடர்கள் பொற்காசுகளைத் திருடிச் சென்று விடுவார்களோ என்ற அச்சத்தால் கதவை மூடித் தாழ்ப்பாள் போட்டான்.
தூங்கும்போது திருடர்கள் வந்தால் என்ன செய்வது என்ற கவலையில் இரவு முழுவதும் அவன் தூங்கவில்லை. சிறு ஒசை கேட்டாலும் அஞ்சி நடுங்கினான் அவன்.
தன் மகிழ்ச்சி பறிபோனதற்கு காரணம் பொற்காசுகள் தான் என்ற உண்மையை உணர்ந்தான் அவன்.
பொழுது விடிந்தது பொற்காசுப் பையை எடுத்துக் கொண்டு செல்வனின் வீட்டிற்கு வந்தான். ஐயா நான் ஏழைதான். உங்கள் பொற்காசுகள் என் அமைதிளையும் மகிழ்ச்சியையும் குலைத்துவிட்டன எனக்கு வேண்டாம் இந்தப் பொற்காசுகள் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று அவனிடம் தந்துவிட்டு மகிழச்சியுடன் புறப்பட்டான் அவன்.
மகிழ்ச்சி பறிபோனது
ஒர் ஊரில் அடுத்தடுத்து செல்வன் ஒருவனும் எழை ஒருவனும் குடியிருந்தார்கள். செல்வனின் வீடு பெரிதாக இருந்தது. எழையின் வீடோ குடிசை வீடு.
எழைக்கு சொந்தமாக நிலம் ஏதும் கிடையாது. யார் வயலிலாவது உழைத்து கிடைக்கின்ற சிறிதளவு கூலிவுடன் வீடு திரும்புவான் அவன், எந்தக் கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இருந்தான்.
அவன் வீட்டு கதவு எப்பொழுதும் திறந்தே இருக்கம் படுத்தவுடன் தூங்கி விடவான் அவன்.
ஆனால் செல்வனோ எப்பொழுதும் பரபரப்புடனம் கவலையுடனும் காட்சி அளித்தான். தன் வீட்டு ஜன்னர்களையும் கதவுகளையும் மூடியே வைத்திருந்தான் அவன் திருடர்கள் வீட்டினுள் நுழைந்து விலை உயர்ந்த பொருள்களை திருடிச் சென்று விடுவார்களோ என்று அஞ்சினான். ஆதனால் அவன் இரவில் தூங்குவதே இல்லை.
ஏழை எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்பதைக் கவனித்தான் அவன் இவ்வாறு செல்வம் இருந்தும் தன்னால் அவனைப் போல் மகிழ்ச்சியாக இருக்க முடியவில.;லையே என்று வருந்தினான்.
ஏழையிடம் செல்வம் இருந்தால் என்ன நடக்கும் என்பதை அறிய விரும்பினான் அவன்.
ஏழையை அழைத்த அவன் நண்பனே உன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன், நீ வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறாய் உனக்கு உதவி செய்ய நினைக்கிறேன் என்னிடம் செல்வம் உள்ளது அதிலிருந்து உனக்கு 100 பொற்காசுகள் தருகிறேன் நீ மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்து என்றான்.
அவனிடம் நூறு பொற்காசுகள் பெற்றுக் கொண்ட எழை மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்தான்.
இரவு வந்தது. திருடர்கள் பொற்காசுகளைத் திருடிச் சென்று விடுவார்களோ என்ற அச்சத்தால் கதவை மூடித் தாழ்ப்பாள் போட்டான்.
தூங்கும்போது திருடர்கள் வந்தால் என்ன செய்வது என்ற கவலையில் இரவு முழுவதும் அவன் தூங்கவில்லை. சிறு ஒசை கேட்டாலும் அஞ்சி நடுங்கினான் அவன்.
தன் மகிழ்ச்சி பறிபோனதற்கு காரணம் பொற்காசுகள் தான் என்ற உண்மையை உணர்ந்தான் அவன்.
பொழுது விடிந்தது பொற்காசுப் பையை எடுத்துக் கொண்டு செல்வனின் வீட்டிற்கு வந்தான். ஐயா நான் ஏழைதான். உங்கள் பொற்காசுகள் என் அமைதிளையும் மகிழ்ச்சியையும் குலைத்துவிட்டன எனக்கு வேண்டாம் இந்தப் பொற்காசுகள் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று அவனிடம் தந்துவிட்டு மகிழச்சியுடன் புறப்பட்டான் அவன்.
Re: சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள்
kalaimoon70 wrote:சிவா wrote:கிழவனும் மரமும்
இலையுதிர் காலம், அந்த மரம் மொட்டையாய் நின்றது. கிழவன் ஒருவன் அதனருகே சென்றான். விறகுக்காக சில கிளைகளைத் தறித்து எடுத்தான். ‘எனது வீட்டிற்கு முன்னாலே இத்தகைய மரம் இன்கின்றபோது நான் ஏன் விறகுக்காக அலைய வேண்டும்? என்று தன்னுள் சொல்லிக் கொண்டான்.
மரங்கள் தளிர்த்துப் பழங்கள் சுமந்த வேளை. கிழவன் வீட்டு மரம் நிறைய இலை தெரியாமல் பழங்கள். பழங்களைப் பறித்தான் கிழவன். ‘இனிமேல் இந்தப் பழமரத்தில் பழங்கள் பறிக்கமாட்டேன்.
மீண்டும் இலையுதிர் காலம் அதே மரத்தில் மீண்டும் பழங்கள். இனி ஒரு போதும் கிளைகளை வெட்டக்கூடாது.
இலையுதிர் காலம், மீண்டும் கிளைகளை வெட்டினான் கிழவன்
வசந்தம் வந்தபோது கிழவன் மரத்தைப் பார்த்தான்.
மரம் நின்றது மொட்டையாக.
-சீனக் கதை
சிறப்பான கதை!இதுக்க எழுதிகிறேன் ஒரு கவிதை!
சபாஷ் கவிஞரே ம்ம்ம்ம் ஆகட்டும். தொட்ங்குங்கள்.
அததனையும் அருமையான் கவிதைகள். ந்ன்றி சிவா.
Re: சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள்
உயர்ந்த தகுதி!
புகழ் பெற்ற அந்த நிறுவனத்திற்க எழுத்தர் தேவை என்று விளம்பரம் வந்திருந்தது. ஏறத்தாழ ஐம்பது பேர் அந்த வேலைக்கு விண்ணப்பித்து இருந்தனர். எல்லோரும் நேர்முகத் தேர்விற்கு வந்து இருந்தார்கள்.
பலர் அமைச்சர்களின் பரிந்துரையுடன் வந்து இருந்தார்கள. மற்றும் சிலர் நிறுவனத்திற்கு வேண்டியவர்களின் பரிந்துரையுடன் வந்திருந்தார்கள். அங்கு வந்தவர்களில் எந்தப் பரிந்துரையும் இல்லாத ஒருவனுக்கே வேலை கிடைத்தது. நண்பர் ஒருவர் அந்த முதலாளியைப் பார்த்து என்ன காரணத்திற்காக அவனுக்கு வேலை கொடுத்தீர்? யாருடைய பரிந்துரையோ உயர்ந்த தகுதிகளோ அவனுக்கு இல்லையே என்று கேட்டார்.
அவனிடம் உயர்ந்த தகுதிகள் பல உள்ளன. என் அறைக்குள் நழையும் போது அங்கிருந்த தரை விரிப்பில் தன் கால்களை நன்கு துடைத்துக் கொண்டான். கதவை மெதுவாக் மூடினான். தரையில் கிடந்த புத்தகத்தை எடுத்து மேசை மேல் வைத்தான்.
வருகின்றவர் என்ன செய்கிறார்கள் என்பதை அறிவதற்காகவே இந்த புத்தகத்தைத் தரையில் போட்டிருந்தேன. எளிமையான உடையைத் தூய்மையான அணிந்திருந்தான். தலைமுடியை நன்கு வாரி இருந்தான. தன்முறை வரும்வரை பொறுமையாகக் காத்திருந்தான். இந்தப் பண்புகளை விடச் சிறந்த பரிந்துரை ஏது?
அதனால் தான் அவனைத் தேர்ந்தெடுத்தேன் என்றார் முதலாளி;.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள்
பொறுத்தருள வேண்டும்
வியாசர் இறைவனின் திருமுன்னர் நின்று கண்களில் கண்ணீர் மல்க அழுதார். ஆண்டவனே! நான் அறியாமல் செய்த மூன்று பிழைகளையும் நீர்தான் பொறுத்தருள வேண்டும் என்று வேண்டினார்.
இதைக் கேட்டு அங்குக் குடியிருந்தவர்கள் வியப்பு அடைந்தனர். வேதவியாசர் அப்படி என்ன பிழைகளைச் செய்திருப்பார். என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். விடை ஒன்றும் கிடைக்கவில்லை!
அவர்களில் ஒருவன் வியாசரைப் பார்த்து. துறவியாரே தாங்கள் செய்த பிழைகள் என்ன ? என்று பணிவாகக் கேட்டான்.
அதற்கு வியாசர் உருவம் இல்லாத இறைவனை உருவம் உள்ளவராக நினைத்து வழிபட்டது ஒரு பிழை. வாக்கிற்கு அகப்படாத இறைவனை நாவினால் புகழ்ந்து பாடியது இரண்டாவது பிழை. எங்கும் நிறைந்த பரம்பொருளாகிய இறைவனைக் காணவேண்டி ஊர் ஊராக புனிதப் பயணம் மேற்கொண்டது மூன்றாவது பிழை. இம் மூன்று பிழைகளையுமே பொறுத்தருள வேண்டினேன் என்று விளக்கம் தந்தார் வியாசர்.
வியாசர் இறைவனின் திருமுன்னர் நின்று கண்களில் கண்ணீர் மல்க அழுதார். ஆண்டவனே! நான் அறியாமல் செய்த மூன்று பிழைகளையும் நீர்தான் பொறுத்தருள வேண்டும் என்று வேண்டினார்.
இதைக் கேட்டு அங்குக் குடியிருந்தவர்கள் வியப்பு அடைந்தனர். வேதவியாசர் அப்படி என்ன பிழைகளைச் செய்திருப்பார். என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். விடை ஒன்றும் கிடைக்கவில்லை!
அவர்களில் ஒருவன் வியாசரைப் பார்த்து. துறவியாரே தாங்கள் செய்த பிழைகள் என்ன ? என்று பணிவாகக் கேட்டான்.
அதற்கு வியாசர் உருவம் இல்லாத இறைவனை உருவம் உள்ளவராக நினைத்து வழிபட்டது ஒரு பிழை. வாக்கிற்கு அகப்படாத இறைவனை நாவினால் புகழ்ந்து பாடியது இரண்டாவது பிழை. எங்கும் நிறைந்த பரம்பொருளாகிய இறைவனைக் காணவேண்டி ஊர் ஊராக புனிதப் பயணம் மேற்கொண்டது மூன்றாவது பிழை. இம் மூன்று பிழைகளையுமே பொறுத்தருள வேண்டினேன் என்று விளக்கம் தந்தார் வியாசர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள்
உண்மையான விருந்து!
பூபாலர், பாடி என்ற நகரத்தில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு கவிஞர். அவரை எல்லோரும் மதிப்புடன் நடத்தினார்கள். ஒரு நகரில் பெரிய செல்வர் ஒருவர் வீட்டில் விருந்து நடந்தது. பூபாலரும் அதற்கு அழைக்கப்பட்டு இருந்தார். பல வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. விருந்து முடிந்தது.
விருந்து கொடுத்தவர் எல்லோர் முன்னிலையிலும் பூபாலரைப் பார்த்து விருந்து எப்படி ? என்று கேட்டார்.
அதற்குப் பூபாலர் எங்கள் பாடி நகர விருந்துக்கு ஈடாகுமா ? என்று பதில் சொன்னார்.
அதே நகரத்தில் இதைவிடப் பெரிய விருந்து ஒன்று நடந்தது. பூபாலரும் அதில் கலந்து கொண்டார். அப்பொழுதும் அவர் இது எங்கள் பாடி நகர விருந்துக்கு ஈடாகாது என்றார்.
அங்கிருந்த எல்லோரும் எப்படித்தான் பாடி நகரத்தில் விருந்து தருகின்றனர் என்பதை அறிய விரும்பிய பூபாலருடன் நகர்த்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.
நண்பர்களுடன் தம் வீட்டை அடைந்த பூபாலர் தன் மனைவியைப் பார்த்து, விருந்துக்கு ஏற்பாடு செய் என்றார்.
சிறிது நேரத்தில் விருந்தாக ரொட்டியும் நீரும் தான் பரிமாறப்பட்டன. பூபாலரைப் பார்த்து இதையா சிறந்த விருந்து என்று சொன்னீர் ? என்று கேட்டார்கள் நண்பர்கள்.
ஆம் அதில் என்ன ஐயம் என்ற பூபாலர். எனக்குப் பிடித்த உணவை நான் உண்கிறேன். என் விருந்தினர்க்கும் அதையே கொடுத்து மகிழ்கிறேன். ஆனால் உங்கள் ஊரில் மகிழ்ச்சிக்காகவும் ஆடம்பரத்திற்காகவும் விருந்து படைக்கின்றனர் அது விருந்தே ஆகாது. நம் வீட்டிலுள்ள எளிய உணவை உள்ளன்போடு கொடுத்து விருந்தாளியை உபசரிப்பதுதான் உண்மையில் உயர்ந்த விருந்தாகும் என்றார்.
பூபாலர், பாடி என்ற நகரத்தில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு கவிஞர். அவரை எல்லோரும் மதிப்புடன் நடத்தினார்கள். ஒரு நகரில் பெரிய செல்வர் ஒருவர் வீட்டில் விருந்து நடந்தது. பூபாலரும் அதற்கு அழைக்கப்பட்டு இருந்தார். பல வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. விருந்து முடிந்தது.
விருந்து கொடுத்தவர் எல்லோர் முன்னிலையிலும் பூபாலரைப் பார்த்து விருந்து எப்படி ? என்று கேட்டார்.
அதற்குப் பூபாலர் எங்கள் பாடி நகர விருந்துக்கு ஈடாகுமா ? என்று பதில் சொன்னார்.
அதே நகரத்தில் இதைவிடப் பெரிய விருந்து ஒன்று நடந்தது. பூபாலரும் அதில் கலந்து கொண்டார். அப்பொழுதும் அவர் இது எங்கள் பாடி நகர விருந்துக்கு ஈடாகாது என்றார்.
அங்கிருந்த எல்லோரும் எப்படித்தான் பாடி நகரத்தில் விருந்து தருகின்றனர் என்பதை அறிய விரும்பிய பூபாலருடன் நகர்த்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.
நண்பர்களுடன் தம் வீட்டை அடைந்த பூபாலர் தன் மனைவியைப் பார்த்து, விருந்துக்கு ஏற்பாடு செய் என்றார்.
சிறிது நேரத்தில் விருந்தாக ரொட்டியும் நீரும் தான் பரிமாறப்பட்டன. பூபாலரைப் பார்த்து இதையா சிறந்த விருந்து என்று சொன்னீர் ? என்று கேட்டார்கள் நண்பர்கள்.
ஆம் அதில் என்ன ஐயம் என்ற பூபாலர். எனக்குப் பிடித்த உணவை நான் உண்கிறேன். என் விருந்தினர்க்கும் அதையே கொடுத்து மகிழ்கிறேன். ஆனால் உங்கள் ஊரில் மகிழ்ச்சிக்காகவும் ஆடம்பரத்திற்காகவும் விருந்து படைக்கின்றனர் அது விருந்தே ஆகாது. நம் வீட்டிலுள்ள எளிய உணவை உள்ளன்போடு கொடுத்து விருந்தாளியை உபசரிப்பதுதான் உண்மையில் உயர்ந்த விருந்தாகும் என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள்
முயற்சியுடையார் முன்னேறுவர்!
தயிர் தோய்க்கப்படட பாலில் இரண்டு தவளைகள் தவறி விழுந்து விட்டன. பாத்திரத்தை விட்டு வெளியே வருவதற்கு அவற்றுக்கு வழியே தெரியவில்லை.
முதல் தவளை இதிலிருந்து நான் எப்படி தப்பிக்கப் போகிறேன் செத்தேன் என்று புலம்பியது. அதன் கால்கள் சக்தி இழந்தன. சற்று நேரத்திற்கெல்லாம் அது பாலில் மூழ்கிச் செத்தது.
இரண்டாவது தவளையோ, இதிலிருந்து நான் எப்படியும் தப்புவேன், கடைசி வரை என் முயற்சியைக் கைவிட மாட்டேன் என்று நினைத்தது. அதனால் அத்தவளை சோர்வில்லாமல் கால்களால் உதைத்துக் கொண்டே இருந்தது.இப்படியே சிறிது நேரம் இருந்ததால். பால் நன்றாகப் கடையப்பட்ட நிலையை அடைந்தது. வெண்ணெய் திரண்டு மேலே மிதக்கத் தொடங்கிற்று சற்று நேரத்தில் அந்தத் தவளை மிதந்த வெண்ணெயின் மீதேறி நலமாக அமர்ந்து பிறகு ஒரே தாவலில் பாத்திரத்தை விட்டு வெளியே குதித்துத் தப்பித்தது.
தயிர் தோய்க்கப்படட பாலில் இரண்டு தவளைகள் தவறி விழுந்து விட்டன. பாத்திரத்தை விட்டு வெளியே வருவதற்கு அவற்றுக்கு வழியே தெரியவில்லை.
முதல் தவளை இதிலிருந்து நான் எப்படி தப்பிக்கப் போகிறேன் செத்தேன் என்று புலம்பியது. அதன் கால்கள் சக்தி இழந்தன. சற்று நேரத்திற்கெல்லாம் அது பாலில் மூழ்கிச் செத்தது.
இரண்டாவது தவளையோ, இதிலிருந்து நான் எப்படியும் தப்புவேன், கடைசி வரை என் முயற்சியைக் கைவிட மாட்டேன் என்று நினைத்தது. அதனால் அத்தவளை சோர்வில்லாமல் கால்களால் உதைத்துக் கொண்டே இருந்தது.இப்படியே சிறிது நேரம் இருந்ததால். பால் நன்றாகப் கடையப்பட்ட நிலையை அடைந்தது. வெண்ணெய் திரண்டு மேலே மிதக்கத் தொடங்கிற்று சற்று நேரத்தில் அந்தத் தவளை மிதந்த வெண்ணெயின் மீதேறி நலமாக அமர்ந்து பிறகு ஒரே தாவலில் பாத்திரத்தை விட்டு வெளியே குதித்துத் தப்பித்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள்
உண்மையான கல்வி!
ஒரு நகரத்தில் படிப்பில் ஆர்வமிக்க இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் பலதுறை கல்வியையும் கற்று முடித்தான். அவனுக்கு மேலும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் அவனக்குக் கல்வி கற்றுத் தரத் தகுதியுடைய ஆசிரியர் யாரும் அந்நகரில் இல்லை.
அந்த நகரத்திற்கு வந்த ஒருவர் அவனிடம.; எங்கள் ஊரில் அறிவு நிரம்பிய பெரியவர் ஒருவர் இருக்கிறார். தன் முன்னோர்கள் செய்து வந்த கொல்லன் தொழிலையே அவரும் செய்து வருகிறார். அவரிடம் நீ சென்றால் நன்கு கற்றுத் திரும்பலாம் என்றார்.
இதைக் கேட்ட அவன் அப்பெரியவரை நாடிப் புறப்பட்டான். நாற்பது நாட்கள் பயணத்திற்குப் பின் அவ்வூரை அடைந்தான். அப்பெரியவரின் கால்களில் விழுந்து வணங்கிய அவன் தனக்குக் கல்வி கற்றுத் தருமாறு வேண்டினான்.
கல்வி கற்பதற்காக வந்துள்ளாயா ? என்ற அவர் உலைத் துருத்தியை அவன் கையில் தந்து அதை இயக்குமாறு சொன்னார்.
அவனும் மறுமொழி பேசாமல் அதைச் செய்தான். அவரும் தம் கொல்லன் தொழிலைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் தம்மிடம் வருபவரிடம் உரையாடினாரே தவிர இளைஞனிடம் ஏதும் பேசவில்லை.
இப்படியே இரண்டு ஆண்டுகள் கழிந்தன. பொறுமை இழந்த அவன் ஐயா நான் கல்வி கற்பதற்காகத் தங்களிடம் வந்தேன் என்று தொடங்கினான்.
பெரியவரின் மற்ற மாணவர்கள் அவனை வியப்புடன் பார்த்தனர்.
ஆனார் அவரோ நான் சொன்னபடி துருத்தியை இயக்கிக் கொண்டிரு என்றார். அவனும் அமைதியானான்.
அவரிடம் நாள்தோறும் கேள்விகள் வரும். தகுதி அற்றவையாக இருப்பின் நெருப்பில் போட்டு விடுவார். தகுதி உள்ளவற்றைத் தலைப்பாகைக்குள் வைத்துக் கொள்வார். அவற்றிற்கு மாலையில் விடை தருவார்.
மேலும் இரண்டு ஆண்டுகள் கழந்தன. ஒரு நாள் அவனை அழைத்த அவர் உன் கல்வி முடிந்துவிட்டது. இனி நீ உன் ஊருக்குப் போகலாம் என்றார்.
வியப்படைந்த அவன் ஐயா! எனக்குக் தாங்கள் எதுவுமே சொல்லித் தரவில்லையே என்றான்.
அதற்க அவர் உலகத்தில் உள்ள அனைத்துக் கல்வியிலும் தலையானது பொறுமைதான். அது உனக்கு வந்துவிட்டது. இனி நீ கற்பதற்கு ஒன்றும் இல்லை என்று அவனை அனுப்பி வைத்தார்.
ஒரு நகரத்தில் படிப்பில் ஆர்வமிக்க இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் பலதுறை கல்வியையும் கற்று முடித்தான். அவனுக்கு மேலும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் அவனக்குக் கல்வி கற்றுத் தரத் தகுதியுடைய ஆசிரியர் யாரும் அந்நகரில் இல்லை.
அந்த நகரத்திற்கு வந்த ஒருவர் அவனிடம.; எங்கள் ஊரில் அறிவு நிரம்பிய பெரியவர் ஒருவர் இருக்கிறார். தன் முன்னோர்கள் செய்து வந்த கொல்லன் தொழிலையே அவரும் செய்து வருகிறார். அவரிடம் நீ சென்றால் நன்கு கற்றுத் திரும்பலாம் என்றார்.
இதைக் கேட்ட அவன் அப்பெரியவரை நாடிப் புறப்பட்டான். நாற்பது நாட்கள் பயணத்திற்குப் பின் அவ்வூரை அடைந்தான். அப்பெரியவரின் கால்களில் விழுந்து வணங்கிய அவன் தனக்குக் கல்வி கற்றுத் தருமாறு வேண்டினான்.
கல்வி கற்பதற்காக வந்துள்ளாயா ? என்ற அவர் உலைத் துருத்தியை அவன் கையில் தந்து அதை இயக்குமாறு சொன்னார்.
அவனும் மறுமொழி பேசாமல் அதைச் செய்தான். அவரும் தம் கொல்லன் தொழிலைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் தம்மிடம் வருபவரிடம் உரையாடினாரே தவிர இளைஞனிடம் ஏதும் பேசவில்லை.
இப்படியே இரண்டு ஆண்டுகள் கழிந்தன. பொறுமை இழந்த அவன் ஐயா நான் கல்வி கற்பதற்காகத் தங்களிடம் வந்தேன் என்று தொடங்கினான்.
பெரியவரின் மற்ற மாணவர்கள் அவனை வியப்புடன் பார்த்தனர்.
ஆனார் அவரோ நான் சொன்னபடி துருத்தியை இயக்கிக் கொண்டிரு என்றார். அவனும் அமைதியானான்.
அவரிடம் நாள்தோறும் கேள்விகள் வரும். தகுதி அற்றவையாக இருப்பின் நெருப்பில் போட்டு விடுவார். தகுதி உள்ளவற்றைத் தலைப்பாகைக்குள் வைத்துக் கொள்வார். அவற்றிற்கு மாலையில் விடை தருவார்.
மேலும் இரண்டு ஆண்டுகள் கழந்தன. ஒரு நாள் அவனை அழைத்த அவர் உன் கல்வி முடிந்துவிட்டது. இனி நீ உன் ஊருக்குப் போகலாம் என்றார்.
வியப்படைந்த அவன் ஐயா! எனக்குக் தாங்கள் எதுவுமே சொல்லித் தரவில்லையே என்றான்.
அதற்க அவர் உலகத்தில் உள்ள அனைத்துக் கல்வியிலும் தலையானது பொறுமைதான். அது உனக்கு வந்துவிட்டது. இனி நீ கற்பதற்கு ஒன்றும் இல்லை என்று அவனை அனுப்பி வைத்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள்
சிவா wrote:பொறுத்தருள வேண்டும்
வியாசர் இறைவனின் திருமுன்னர் நின்று கண்களில் கண்ணீர் மல்க அழுதார். ஆண்டவனே! நான் அறியாமல் செய்த மூன்று பிழைகளையும் நீர்தான் பொறுத்தருள வேண்டும் என்று வேண்டினார்.
இதைக் கேட்டு அங்குக் குடியிருந்தவர்கள் வியப்பு அடைந்தனர். வேதவியாசர் அப்படி என்ன பிழைகளைச் செய்திருப்பார். என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். விடை ஒன்றும் கிடைக்கவில்லை!
அவர்களில் ஒருவன் வியாசரைப் பார்த்து. துறவியாரே தாங்கள் செய்த பிழைகள் என்ன ? என்று பணிவாகக் கேட்டான்.
அதற்கு வியாசர் உருவம் இல்லாத இறைவனை உருவம் உள்ளவராக நினைத்து வழிபட்டது ஒரு பிழை. வாக்கிற்கு அகப்படாத இறைவனை நாவினால் புகழ்ந்து பாடியது இரண்டாவது பிழை. எங்கும் நிறைந்த பரம்பொருளாகிய இறைவனைக் காணவேண்டி ஊர் ஊராக புனிதப் பயணம் மேற்கொண்டது மூன்றாவது பிழை. இம் மூன்று பிழைகளையுமே பொறுத்தருள வேண்டினேன் என்று விளக்கம் தந்தார் வியாசர்.
மிகவும் அருமையான ஒன்று...
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» வெற்றி சிரிக்க வைக்கும்…தோல்வி சிந்திக்க வைக்கும்!
» சிந்திக்க வைக்கும் பொன்மொழிகள்
» கொரோனா குறுங்கதைகள்
» கொரோனா குறுங்கதைகள்
» கொரோனா குறுங்கதைகள்
» சிந்திக்க வைக்கும் பொன்மொழிகள்
» கொரோனா குறுங்கதைகள்
» கொரோனா குறுங்கதைகள்
» கொரோனா குறுங்கதைகள்
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|