ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும்

4 posters

Go down

ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் Empty ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும்

Post by சிவா Mon Mar 29, 2010 8:02 am

அறுகம்புல்லின் மகிமை புராணங்களிலே சிறப்பாக விநாயக புராணத்திலே விதந்து உரைக்கப் பட்டுள்ளமையை யாவரும் அறிவர். பார்க்கவ புராணத்திலே ஆனைமுகக் கடவுளுடைய பெருமை மிகவும் விரிவாக விளக்கப் பெற்றுள்ளது. பார்க்கவ புராணம் பிருகு முனிவரால் வழங்கப் பெற்றது. பிருகு முனிவர் இப்புராணம் யாவருக்கும் பயன்பட வேண்டும் என்னும் இலட்சியத்தோடு உபாசனா காண்டம் லீலா காண்டம் என்னும் இரண்டு காண்டங்களாக அமைந்து அவற்றை இருநூற்றைப்பது பிரிவுகளாக்கிப் பன்னிரண்டாயிரஞ் சுலோகங்களால் ஓரு புராணமாக்கினார். முதலாவது உபாசனா காண்டத்தில் அறுகம்புல்லின் பெருமை விதந்துரைக்கப்பட்டது நறுமணமுடைய பலவகையான மலர்கள் இருக்கவும் அறுகினால் நான்முகனை ஏன் வழிபடவேண்டும் என்பதை விளக்க அவந்தி பட்டணத்திலுள்ள கபலன் என்னும் பெயருடைய ஒர் அரசனுடைய கதை கூறப்படுகிறது.

கபலனுடைய மனைவின் பெயர் சுபத்திரை. அவர்களைத் தேடி வந்த அந்தணருடைய பெயர் மதுசூதன் அம்முவரையும் அடியொற்றி அவர்கள் இயற்றிய செயல்களால் அறுகின் பெருமை உரைக்கப்படுகின்றது. மேலும் அனலாசுரனை அழித்த ஆனைமுகக்கடவுளின் வெப்பம் தண்ணெனக் குளிரும் வண்ணம் எண்பதாயிரம் முனிவர்கள் அங்கு வந்து ஒவ்வொருவரும் இருபத்தோரறுகுகளை முடிமுதல் அடிவரை சொரிந்தார்கள் என்பதும் விநாயக புராணத்திலே எடுத்தரைக்கப் பெறுகின்றது.சுனக மன்னனுடைய பசு அறிவைப் போக்கிப் பதியறிவைக் கொடுத்து ஆட்கொண்ட நிகழ்ச்சியிலும் அறுகின் பெருமை விளக்கப்பட்டுள்ளது. ஒரு புல்லுக்கு நிகராகுமா குபேரனுடைய செல்வம் என்று கூறும் அளவிக்கு அறுகின் நிறைகோல் ஏறிய வரலாறு உண்டு.

ஆனைமுகக்கடவுனுடைய திருவடிகளிலே சேர்க்கும் ஆறுகுக்கு இந்திரன் முதலானவர்களுடைய செல்வமும் ஒப்பாகாது. என்பது விநாயக புராணம் விளக்கும் உண்மை. புராணங்கள் சாதாரண மக்களுக்கு நல்லறிவூட்டும் அறிவுக் கருவூலங்கள் என்று கொள்ளப்படும் பொழுது புராணங்களின் இலக்கியப் பணிபில் உட்பொதிந்து காணப்படும் படிமவாக்கங்களும் குறியீட்டுப் பண்புகளும் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. அறுகு என்பது சாதாரணமாக தரையிலே படரும் ஒரு புல்லு என்ற எளிமை ததும்பிய படிமவாக்கம் வாமனாவதாரம் போன்ற செயல் வீச்சுடன் இணையும் வண்ணம் அமைக்கப் பெற்றிருத்தல் குறிப்பிடத்தக்கது.சிறியன என்று கருதப்படுபவை விந்தை மிகு அணுவின் அடக்கமாய் ஆற்றலாய் ஒளிர்விடும் புனைவிலே சாமானியர்களின் பெருமை உணர்த்தப்படுதல் நினைவுக்குரியது.


ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் Empty Re: ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும்

Post by சிவா Mon Mar 29, 2010 8:03 am

குட்டிக் கொள்ளல்

முனிவர்களுள் முதல்வராகிய அகத்திய முனிவர் சிவபெருமானிடம் இருந்த காவரி நதியைக் கமண்டலத்தில் அடக்கிக் கொண்டு தென்திசை நோக்கி வருவாராய் குடகு மலையில் சிவபூசை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது இந்திரன் சீகாழியில் பூசை செய்துகொண்டிருந்தான் மழையின்றி நந்தவனம் வாடியது. நாரத முனிவர் இந்திரனைப் பார்த்து அகத்தியருடைய கமண்டலத்திலுள்ள காவிரி பெருகுமானால் உன் பூங்கா பொலிவு பெறும் என்று கூறினார். இந்திரன் விநாயகனை வழிபட்டு வேண்டிக்கொண்டான். விநாயக மூர்த்தி காக்கை வடிவுடன் சென்று காவிரியடங்கிய கமண்டலத்தின் மீது அமர்ந்தார். அகத்தியர் காகத்தை கரத்தால் ஒட்டினார். காகம் உந்திப் பறந்தது. கமண்டலம் கவிழ்ந்து காவரி பெருக்கெடுத்து ஒடியது.அகத்தியர் காகத்தின் மீது சீறிப்பாய்ந்தார்.

அது அந்தண சிறுவனாகி நின்றது. அச் சிறுவனை இருகரங்களாலும் குட்டும் பொருட்டு குறுமுனி ஒடினார். பிள்ளையார் அவருக்கு அகப்படாமல் அங்கும் இங்குமாக ஒடினார். அகத்தியர் அச் சிறவனை அணுகிக் குட்டுவதற்கு இரு கரங்களையும் ஒங்கினார். ஐங்கரங்களுடன் விநாயகர் காட்சி தந்தருளினார் அகத்தியர் திகைத்து நடு நடுங்கினார்.ஓங்காரப் பொருனே! வேத வித்தகனே ! உன்னைச் சிறியேன் அறியேனாகிக் குட்டுவதற்குக் கையை ஒங்கினேனே. என்னே என் சிறுமதி என்று தன் சென்னியிலேயே குட்டிக் கொண்டார். விநாயகர் அவருடைய கரங்களைப் பற்றி கருணை புரிந்தார்.இன்று முதல் நம் திருமுன் பயபத்தியுடன் சென்னியில் குட்டிக் கொண்டோர் கூரிய மகியும் சீரிய நிதியும் பெறுவார்கள் என்று வரமளித்தருளினார். இதனால் விநாயகரின் திருமுன் அடியார்கள் சிரத்தில் குட்டிக் கொள்ளும் மரபு உண்டாயிற்று.

தேங்காய் உடைப்பதன் காரணம்

தேங்காய் உடைப்பதன் காரணம் தேங்காய்க்கு மேலே உள்ள பச்சை மட்டை மாயா மலம் உரித்து எடுக்கின்ற நார்கள் கன்ம மலம் உடைத்து எடுக்கின்ற ஒடு ஆயவ மலம் இந்த மூன்றும் நீங்கினால் வெண்மையான பருப்பு வெளிப்படுகின்றது. இறைவனிடத்து மும்மலத்தை நீக்கி சுத்த சத்துவ சித்தத்தை அருளவேண்டுமென்று குறிப்பிடுவதே தேங்காய் உடைப்பதன் உட் பொருள் ஆகும் .

-திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்.


ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் Empty Re: ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும்

Post by சபீர் Mon Mar 29, 2010 10:14 am

விரிவாகவும் அருமையாகவும் விளக்கியுள்ளீர்கள் தல நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் Empty Re: ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும்

Post by ராஜா Mon Mar 29, 2010 10:50 am

ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் 677196 ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் 677196 அருமையான விளக்கதுடன் எடுத்து கூறியுள்ளீர்கள் , மிக்க நன்றி தல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் Empty Re: ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும்

Post by வேணு Mon Mar 29, 2010 11:52 am

அடுத்த பதிவில் மாயா மலம், கன்ம மலம்
மற்றும் ஆயவ மலம் பற்றி விளக்கத்தை
எதிர்பார்க்கிறேன்.............
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் Empty Re: ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum