Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது!
3 posters
Page 1 of 1
கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது!
யானைகளையே அடக்கியாளும் மனிதன் மிகச்சிறிய கொசுக்களால் திணறித்தான் போகிறான். மலேரியா முதல் மனிதனை முடக்கிப்போட முயலும் யானைக்கால் நோய்வரை பல்வேறு பாதிப்புகளை மனிதனிடத்தில் கொசுக்கள் ஏற்படுத்துகின்றன. இந்நோய்க்கிருமிகளை ஒருநபரிடமிருந்து மற்றொரு நபரின் உடலுக்கு கொண்டு சேர்க்கும் போக்குவரத்து வாகனங்களாக கொசுக்கள் செயல்படுகின்றன. அவற்றுள் நூற்றுக்கணக்கான ரகங்கள் உள்ளன. எல்லா இரக கொசுக்களும் எல்லாவிதமான நோய்க்கிருமிகளையும் பரப்புவதில்லை என்பது விந்தையான செய்தி. சில இரக கொசுக்கள் சில குறிப்பிட்ட நோய்க்கிருமிகளை மட்டுமே பரப்புகிறது. உதாரணமாக அனோஃபீலஸ், கியூலக்ஸ், ஏடிஸ், மன்சோனியா ஆகிய சில இரக கொசுக்கள் மட்டும்தான் யானைக்கால் வியாதியை பரப்புகின்றன. இதர கொசுக்கள் அந்நோய்க்கிருமிகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
கொசுக்களின் வாழ்க்கை முறை சுவாரசியமானது. பெண் கொசுக்கள் மட்டும்தான் மனித ரத்தத்தை உறிஞ்சுகின்றன. ஆண் கொசுக்கள் சுத்த சைவம். அவை தாவர தண்டுகள் அல்லது இலைகளில் அமர்ந்து அவற்றின் சாற்றை உறிஞ்சி உயிர் வாழ்கின்றன. பெண் கொசு தன்வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கருவுறுகிறது. ஆனால் அனைத்து முட்டைகளையும் ஒரே நேரத்தில் வெளியிடாமல் தன் வாழ்நாள் முழுவதும் குறிப்பிட்ட இடைவெளிகளில் முட்டைகளை இட்டுக்கொண்டே வருகிறது. ஒவ்வொரு முறையும் 300 முட்டைகள் வரை வெளியேற்றுகிறது. பெண் கொசுக்கள் முட்டைகளை சுமப்பதுடன் நில்லாமல் அவை வீரியமிக்க குஞ்சுகளாக பொரித்து வரச்செய்ய வேண்டும் என்ற பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளன. அதற்கு மனித அல்லது மிருகங்களின் ரத்தம் தேவைப்படுகிறது. எனவேதான் அவை மனிதனை நாடுகின்றன. மற்றொரு விந்தை என்னவெனில் எல்லா ரக கொசுக்களும் எல்லா நேரத்திலும் தனது தாக்குதலை தொடுப்பதில்லை. உதாரணத்திற்கு அனோஃபீலஸ் கொசுக்கள் மாலை முதல் காலை வரை மட்டுமே செயல்படுகின்றன. போதிய உதிரத்தை உறிஞ்சிய பின்பு அது ஜீரணமாகும் வரை வீடுகளுக்குள்ளேயே அமர்ந்து விடுகின்றன. மாறாக ஏடிஸ் ரக கொசுக்கள் அதிகாலை அல்லது அந்திசாயும் நேரத்தில் மட்டுமே கடிக்கின்றன. மன்சோனியா ரக கொசுக்கள் பொதுவாக வீடுகளுக்குள் நுழைவதில்லை. பெரும்பாலும் அவை வெளிப்புறங்களில் வைத்தே மனிதனை தமது இலக்குகளாக்குகின்றன.
மேலே குறிப்பிட்டவாறு கொசுக்கள் சிறிதளவு ரத்தத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பிரச்சனையின்றி செல்லுமானால் ஆட்சேபம் எதுவும் இருக்கப்போவதில்லை. அவற்றிற்கு ரத்ததானம் செய்வதில் யாரும் எதிர்ப்பு காட்டப்போவதில்லை. ஆனால் அவை ரத்தத்தை எடுத்துக்கொண்டு பதிலுக்கு சில நச்சுக்கிருமிகளை நன்கொடையாக அளித்துவிட்டு செல்கின்றன. அதன் விளைவு மலேரியா, யானைக்கால் போன்ற கடுமையான நோய்கள். யானைக்கால் மிகப்பழமையான நோய்களில் ஒன்று. இந்தியா, எகிப்து, ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஏடுகளில் இந்நோய் பற்றிய குறிப்புகள் உள்ளன. கெய்ரோ நகரில் உள்ள எகிப்திய அருங்காட்சியகத்தில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு மன்னரின் சிலை யானைக்காலுடன் காணப்படுகிறது. இந்நோயைப் பரப்பும் கொசுவை பேட்ரிக் மேன்சன் என்பவர் 1877ம் ஆண்டு அடையாளம் கண்டார்.
மலேரியா கிருமிகள் தொற்றினால் அவற்றின் வெளிப்பாடுகள் உடனடியாக தெரிந்துவிடும். தகுந்த சிகிச்சை அளித்து குணமாக்கிவிடலாம். ஆனால் யானைக்கால் நோயைப்பொறுத்த மட்டில் அந்நோய்க் கிருமிகளான உக்கேரேரியா பாங்க்ரொஃப்டி, புருகியா மலாயி ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்று கொசுக்கள் உதவியுடன் மனித உடலை சென்றடைந்ததும் அவை பல்லாண்டு காலம் மனித நிணநீர் முடிச்சுகளில் சொகுசாக வாழ்கின்றன. துவக்கத்தில் காய்ச்சல் போன்ற சிறுசிறு அறிகுறிகள் தவிர வேறு முக்கிய அறிகுறிகள் வெளியே தெரிவதில்லை. மாறாக அவை நன்றாக இனப்பெருக்கம் செய்து நான்கு முதல் 8 ஆண்டுகள் வரை தாண்டிய பின்புதான் கால், கை, பாலியல் உறுப்புகள் போன்றவற்றில் வீக்கம் தென்படுகிறது.
கொசுக்கள் கடிப்பதற்கு நேரம் காலம் பார்ப்பதைப் போலவே யானைக்கால் வியாதிக்கான ரத்தப்பரிசோதனை செய்வதற்கு சாம்பிள் ரத்தம் எடுக்கவும் நேரம் காலம் உள்ளது. நோயாளியிடமிருந்து இரவு நேரத்தில் எடுக்கப்படும் ரத்தத்தில் மட்டுமே அதிக அளவு நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப் படுகின்றன. பகல் நேரத்தில் அவை மிகக்குறைவான அளவுக்கு மட்டுமே சோதனையில் சிக்குகின்றன.
யானைக்கால் நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மற்றொரு பகுதியினர் ஆப்பிரிக்காவிலும், எஞ்சியோர் ஆசியா, பசிபிக், அமெரிக்க கண்டங்களிலும் உள்ளதாக அவ்வறிக்கை மேலும் கூறுகிறது. வெப்ப மண்டலப் பகுதிகளில்தான் இந்நோயின் தாக்கம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் 12 கோடி பேர் இந்நோய்க்கிருமிகளை சுமந்த வண்ணம் உள்ளனர். அவர்களில் பாதிப்பேருக்குத்தான் அந்நோய் அறிகுறிகள் வெளிப்படையாக தெரிகின்றன. அதற்காக அந்நோய் தொற்றிக்கொண்ட எஞ்சியோருக்கு பாதிப்பில்லை என்று சொல்ல இயலாது. அவர்களது நிணநீர் முடிச்சுகளும் இந்நோய்க்கிருமிகளால் தாக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கும்.
புதிதாக இந்நோயின் தாக்குதலுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை குறைந்து வருவது ஆறுதலான விஷயம். ஆனால் உலக யானைக்கால் நோயாளிகளில் பெரும்பாலானோர் இந்தியாவில் உள்ளனர் என்ற களங்கத்தை மாற்றுவதும் அந்நோயால் பாதிக்கப்பட்டோரின் இன்னல்களை குறைப்பதும் சமூகக்கடமைகளில் ஒன்றாகும். எனவே மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் சிகிச்சை வசதிகளையும் ஏற்படுத்தி வருகின்றன. இந்நோயைத் தடுப்பதற்கு கொசுக்களின் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருப்பது, கொசுக்களை ஒழிப்பது, இந்நோய்க்கிருமிகளை அகற்றுவது ஆகிய மூன்று வழிகள் உள்ளன. ஆண்டுக்கு ஒருமுறை இந்நோய்த் தாக்குதல் அதிகம் காணப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் டைஎத்தில் கார்பமசைன் என்னும் மாத்திரை உட்கொண்டால் இந்நோய்க்கிருமிகளை ஒழிக்கலாம்.
அவ்வாறு ஏழு ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்ள வேண்டும். இம்மாத்திரைகளை இரண்டு வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை எடுத்துக் கொண்டால் போதும். கருவுற்ற பெண்கள், கடுமையான நோய்களுக்கு சிகிச்சை எடுத்து வருவோர் தவிர சாதாரண நோயாளிகள் உட்பட அனைவரும் இம்மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். தமிழ்நாட்டில் 20 மாவட்டங்கள் உட்பட நாடுமுழுவதும் 200 மாவட்டங்களில் இம்மாத்திரைகள் தேசிய யானைக்கால் நோய் ஒழிப்பு தினத்தன்று இலவசமாக அளிக்கப்படுகிறது. இவ்வாண்டு இந்நாள் ஜூன் 5ம் தேதி அனுசரிக்கப்பட்டது. 1947ம் ஆண்டு டைஎத்தில் கார்பமசைன் மருந்து கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்நோயின் தாக்கம் குறைந்தது. நம்நாட்டிலிருந்தும் இந்நோய்க்கு விடைகொடுத்து மக்களின் இன்னல் துடைக்க வேண்டிய தருணம் வந்துள்ளது.
கொசுக்களின் வாழ்க்கை முறை சுவாரசியமானது. பெண் கொசுக்கள் மட்டும்தான் மனித ரத்தத்தை உறிஞ்சுகின்றன. ஆண் கொசுக்கள் சுத்த சைவம். அவை தாவர தண்டுகள் அல்லது இலைகளில் அமர்ந்து அவற்றின் சாற்றை உறிஞ்சி உயிர் வாழ்கின்றன. பெண் கொசு தன்வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கருவுறுகிறது. ஆனால் அனைத்து முட்டைகளையும் ஒரே நேரத்தில் வெளியிடாமல் தன் வாழ்நாள் முழுவதும் குறிப்பிட்ட இடைவெளிகளில் முட்டைகளை இட்டுக்கொண்டே வருகிறது. ஒவ்வொரு முறையும் 300 முட்டைகள் வரை வெளியேற்றுகிறது. பெண் கொசுக்கள் முட்டைகளை சுமப்பதுடன் நில்லாமல் அவை வீரியமிக்க குஞ்சுகளாக பொரித்து வரச்செய்ய வேண்டும் என்ற பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளன. அதற்கு மனித அல்லது மிருகங்களின் ரத்தம் தேவைப்படுகிறது. எனவேதான் அவை மனிதனை நாடுகின்றன. மற்றொரு விந்தை என்னவெனில் எல்லா ரக கொசுக்களும் எல்லா நேரத்திலும் தனது தாக்குதலை தொடுப்பதில்லை. உதாரணத்திற்கு அனோஃபீலஸ் கொசுக்கள் மாலை முதல் காலை வரை மட்டுமே செயல்படுகின்றன. போதிய உதிரத்தை உறிஞ்சிய பின்பு அது ஜீரணமாகும் வரை வீடுகளுக்குள்ளேயே அமர்ந்து விடுகின்றன. மாறாக ஏடிஸ் ரக கொசுக்கள் அதிகாலை அல்லது அந்திசாயும் நேரத்தில் மட்டுமே கடிக்கின்றன. மன்சோனியா ரக கொசுக்கள் பொதுவாக வீடுகளுக்குள் நுழைவதில்லை. பெரும்பாலும் அவை வெளிப்புறங்களில் வைத்தே மனிதனை தமது இலக்குகளாக்குகின்றன.
மேலே குறிப்பிட்டவாறு கொசுக்கள் சிறிதளவு ரத்தத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பிரச்சனையின்றி செல்லுமானால் ஆட்சேபம் எதுவும் இருக்கப்போவதில்லை. அவற்றிற்கு ரத்ததானம் செய்வதில் யாரும் எதிர்ப்பு காட்டப்போவதில்லை. ஆனால் அவை ரத்தத்தை எடுத்துக்கொண்டு பதிலுக்கு சில நச்சுக்கிருமிகளை நன்கொடையாக அளித்துவிட்டு செல்கின்றன. அதன் விளைவு மலேரியா, யானைக்கால் போன்ற கடுமையான நோய்கள். யானைக்கால் மிகப்பழமையான நோய்களில் ஒன்று. இந்தியா, எகிப்து, ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஏடுகளில் இந்நோய் பற்றிய குறிப்புகள் உள்ளன. கெய்ரோ நகரில் உள்ள எகிப்திய அருங்காட்சியகத்தில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு மன்னரின் சிலை யானைக்காலுடன் காணப்படுகிறது. இந்நோயைப் பரப்பும் கொசுவை பேட்ரிக் மேன்சன் என்பவர் 1877ம் ஆண்டு அடையாளம் கண்டார்.
மலேரியா கிருமிகள் தொற்றினால் அவற்றின் வெளிப்பாடுகள் உடனடியாக தெரிந்துவிடும். தகுந்த சிகிச்சை அளித்து குணமாக்கிவிடலாம். ஆனால் யானைக்கால் நோயைப்பொறுத்த மட்டில் அந்நோய்க் கிருமிகளான உக்கேரேரியா பாங்க்ரொஃப்டி, புருகியா மலாயி ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்று கொசுக்கள் உதவியுடன் மனித உடலை சென்றடைந்ததும் அவை பல்லாண்டு காலம் மனித நிணநீர் முடிச்சுகளில் சொகுசாக வாழ்கின்றன. துவக்கத்தில் காய்ச்சல் போன்ற சிறுசிறு அறிகுறிகள் தவிர வேறு முக்கிய அறிகுறிகள் வெளியே தெரிவதில்லை. மாறாக அவை நன்றாக இனப்பெருக்கம் செய்து நான்கு முதல் 8 ஆண்டுகள் வரை தாண்டிய பின்புதான் கால், கை, பாலியல் உறுப்புகள் போன்றவற்றில் வீக்கம் தென்படுகிறது.
கொசுக்கள் கடிப்பதற்கு நேரம் காலம் பார்ப்பதைப் போலவே யானைக்கால் வியாதிக்கான ரத்தப்பரிசோதனை செய்வதற்கு சாம்பிள் ரத்தம் எடுக்கவும் நேரம் காலம் உள்ளது. நோயாளியிடமிருந்து இரவு நேரத்தில் எடுக்கப்படும் ரத்தத்தில் மட்டுமே அதிக அளவு நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப் படுகின்றன. பகல் நேரத்தில் அவை மிகக்குறைவான அளவுக்கு மட்டுமே சோதனையில் சிக்குகின்றன.
யானைக்கால் நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மற்றொரு பகுதியினர் ஆப்பிரிக்காவிலும், எஞ்சியோர் ஆசியா, பசிபிக், அமெரிக்க கண்டங்களிலும் உள்ளதாக அவ்வறிக்கை மேலும் கூறுகிறது. வெப்ப மண்டலப் பகுதிகளில்தான் இந்நோயின் தாக்கம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் 12 கோடி பேர் இந்நோய்க்கிருமிகளை சுமந்த வண்ணம் உள்ளனர். அவர்களில் பாதிப்பேருக்குத்தான் அந்நோய் அறிகுறிகள் வெளிப்படையாக தெரிகின்றன. அதற்காக அந்நோய் தொற்றிக்கொண்ட எஞ்சியோருக்கு பாதிப்பில்லை என்று சொல்ல இயலாது. அவர்களது நிணநீர் முடிச்சுகளும் இந்நோய்க்கிருமிகளால் தாக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கும்.
புதிதாக இந்நோயின் தாக்குதலுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை குறைந்து வருவது ஆறுதலான விஷயம். ஆனால் உலக யானைக்கால் நோயாளிகளில் பெரும்பாலானோர் இந்தியாவில் உள்ளனர் என்ற களங்கத்தை மாற்றுவதும் அந்நோயால் பாதிக்கப்பட்டோரின் இன்னல்களை குறைப்பதும் சமூகக்கடமைகளில் ஒன்றாகும். எனவே மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் சிகிச்சை வசதிகளையும் ஏற்படுத்தி வருகின்றன. இந்நோயைத் தடுப்பதற்கு கொசுக்களின் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருப்பது, கொசுக்களை ஒழிப்பது, இந்நோய்க்கிருமிகளை அகற்றுவது ஆகிய மூன்று வழிகள் உள்ளன. ஆண்டுக்கு ஒருமுறை இந்நோய்த் தாக்குதல் அதிகம் காணப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் டைஎத்தில் கார்பமசைன் என்னும் மாத்திரை உட்கொண்டால் இந்நோய்க்கிருமிகளை ஒழிக்கலாம்.
அவ்வாறு ஏழு ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்ள வேண்டும். இம்மாத்திரைகளை இரண்டு வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை எடுத்துக் கொண்டால் போதும். கருவுற்ற பெண்கள், கடுமையான நோய்களுக்கு சிகிச்சை எடுத்து வருவோர் தவிர சாதாரண நோயாளிகள் உட்பட அனைவரும் இம்மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். தமிழ்நாட்டில் 20 மாவட்டங்கள் உட்பட நாடுமுழுவதும் 200 மாவட்டங்களில் இம்மாத்திரைகள் தேசிய யானைக்கால் நோய் ஒழிப்பு தினத்தன்று இலவசமாக அளிக்கப்படுகிறது. இவ்வாண்டு இந்நாள் ஜூன் 5ம் தேதி அனுசரிக்கப்பட்டது. 1947ம் ஆண்டு டைஎத்தில் கார்பமசைன் மருந்து கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்நோயின் தாக்கம் குறைந்தது. நம்நாட்டிலிருந்தும் இந்நோய்க்கு விடைகொடுத்து மக்களின் இன்னல் துடைக்க வேண்டிய தருணம் வந்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது!
கொசுக்கள் சிறிதளவு ரத்தத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பிரச்சனையின்றி செல்லுமானால் ஆட்சேபம் எதுவும் இருக்கப்போவதில்லை. அவற்றிற்கு ரத்ததானம் செய்வதில் யாரும் எதிர்ப்பு காட்டப்போவதில்லை. ஆனால் அவை ரத்தத்தை எடுத்துக்கொண்டு பதிலுக்கு சில நச்சுக்கிருமிகளை நன்கொடையாக அளித்துவிட்டு செல்கின்றன. அதன் விளைவு மலேரியா, யானைக்கால் போன்ற கடுமையான நோய்கள்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது!
இளமாறன் wrote:கொசுக்கள் சிறிதளவு ரத்தத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பிரச்சனையின்றி செல்லுமானால் ஆட்சேபம் எதுவும் இருக்கப்போவதில்லை. அவற்றிற்கு ரத்ததானம் செய்வதில் யாரும் எதிர்ப்பு காட்டப்போவதில்லை. ஆனால் அவை ரத்தத்தை எடுத்துக்கொண்டு பதிலுக்கு சில நச்சுக்கிருமிகளை நன்கொடையாக அளித்துவிட்டு செல்கின்றன. அதன் விளைவு மலேரியா, யானைக்கால் போன்ற கடுமையான நோய்கள்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Similar topics
» சிறியது தான் பெரியது ! - பாகம் -1
» சிறியது தான் பெரியது ! - பாகம் -2
» உலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான்
» தமிழனின் எல்லைகள் பெரியது - நம்மவரின் மனமோ சிறியது
» பாற்கடல் சிறியது!
» சிறியது தான் பெரியது ! - பாகம் -2
» உலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான்
» தமிழனின் எல்லைகள் பெரியது - நம்மவரின் மனமோ சிறியது
» பாற்கடல் சிறியது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|