ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

+39
எஸ்.எம். மபாஸ்
முபிஸ்
தமிழ் தினா
மஞ்சுபாஷிணி
சரண்யா
அன்பு தளபதி
ரமீஸ்
பவதாரிணி
சரவணன்
sathyan
ஹனி
kalaimoon70
mdkhan
சம்சுதீன்
anandkce
REMO
ஸ்ரீ கிருஷ்ணன்
Manik
rafi
அப்புகுட்டி
நிலாசகி
VIJAY
சபீர்
எஸ்.அஸ்லி
srinihasan
சாந்தன்
ராஜா
Aathira
ரிபாஸ்
உதயசுதா
இளமாறன்
கலைவேந்தன்
ஹாசிம்
Tamilzhan
mohan-தாஸ்
selvibabu
செந்தில்
சிவா
வழிப்போக்கன்
43 posters

Page 24 of 47 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 35 ... 47  Next

Go down

திரியை தொடரலாமா...?

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 24 Poll_c1090%பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 24 Poll_c10 90% 
[ 46 ]
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 24 Poll_c100%பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 24 Poll_c10 0% 
[ 0 ]
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 24 Poll_c1010%பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 24 Poll_c10 10% 
[ 5 ]
 
Total Votes : 51
 
 

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 24 Empty பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by வழிப்போக்கன் Tue Mar 23, 2010 3:06 am

First topic message reminder :

அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]


Last edited by சிவா on Sun Nov 28, 2010 2:26 pm; edited 32 times in total (Reason for editing : தலையங்கம் மாற்றப் பட்டது)


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down


பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 24 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by கலைவேந்தன் Mon Apr 26, 2010 7:55 pm

கேள்வி

௧) தங்களைப் பற்றிய அறிமுகம் ஒன்றினை தங்களை அறியாதோரும் தெரிந்து கொள்ளும் வகையில் சொல்வீர்களா..?

எனது தந்தை என்ககு இட்ட பெயர் : இராமஸ்வாமி.

தாய் என்னை ஈன்ற அன்றைக்கே மறைந்துவிட்டதால் அத்தையின் ( அப்பாவின் அக்கா ) வளர்ப்பிலும் பின் சிற்றன்னை ( அப்பாவின் இரண்டாம் தாரம் ) வளர்ப்பிலும் வளர்ந்தேன்.

ஏழை நெசவாளரின் வயிற்றில் பிறந்து பிறந்ததுமுதல் எனது 26 வயதுவரை ஏழ்மை பசி பட்டினி பஞ்சம் இவற்றை மட்டுமே பார்த்து வளர்ந்தவன்.

அதனாலோ என்னவோ என் குழந்தைகள் இந்திரா ( 17 ) அர்விந்த் ( 13 ) வறுமை பசி என்பதனைத் துளியும் நுகரவிடாமல் வளர்த்து வருகிறேன்.

அத்தனை ஏழ்மைக்கிடையிலும் கலைமகள் சரஸ்வதி என்னைக் கைவிடாமல் கைகொடுத்தாள்..

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை எங்கள் ஊர் குறிச்சிமலை பஞ்சாயத்து பள்ளியிலும் ( கும்பகோணத்திலிருந்து 14 கிமீ தொலைவிலுள்ள கிராமம் )

ஆறாம் வகுப்புமுதல் 12 ஆம் வகுப்பு வரை ஆடுதுறை குமரகுருபரர் மேல்நிலைப்பள்ளியிலும் ( + 2 கணிதம் இயற்பியல் வேதியியல் உயிரியல் பிரிவு )

இளங்கலைத் தமிழ் மூன்றாண்டும் முதுகலைத்தமிழ் இரண்டாண்டும் கும்பகோணம் அரசினர் கல்லூரியிலும் பயின்றேன்.

பிஎட் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்திலும் பின்னர் எம் ஏ ஆங்கிலம் அதே பல்கலைக்கழகத்திலும் பயின்றேன்.

பி எட் முடித்தும் ஆசிரியர் பணிக்கு பணம் இலஞ்சமாகக்கொடுக்க வசதி இன்மையால் இரண்டாண்டுகள் அலைந்தேன். இடையில் உயிருக்குயிரான காதலும் தோல்வியும் உருக்குலைக்க பத்திரிகை நிருபராகவும் பணியாற்றி ஒரு ரவுடிக்கும்பலால் வெட்டப்படுவதைத் தவிர்க்க தன் ஒரே மகனான என்னை ( சிற்றன்னைக்கு இரண்டு மகள்கள் ) டெல்லி அனுப்பிவைக்க கனத்த மனத்துடன் சம்மதித்தார் என் தந்தை.

டெல்லி வா வா என்று வரவேற்று செலவில்லாமல் எனக்கு ஆசிரியர் பணியும் தந்தது.

கடந்த 22 வருடங்களாக டெல்லியில் வசித்து வருகிறேன்.

இன்னும் நிறைய சொல்லலாம்... வறுமையைக்கூறி அறுவை என்று அனைவரையும் அழவைப்பதைவிட அருமை என்று சொல்லக்கூடிய அளவில் இத்துடன் முடிக்கிறேன்..

இந்தப்பதிலில் கிளைக்கேள்விகள் இருந்தால் பதிலளிக்கவும் தயார்...

எப்படி பாலன்... முதல் பதில் திருப்தியாக அமைந்ததா...?

அடுத்த கேள்விக்குப்பதில் - சிறிய இடைவேளைக்குப் பிறகு தொடரும்....



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 24 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by கலைவேந்தன் Mon Apr 26, 2010 7:58 pm

maniajith007 wrote:நாங்க எல்லாம் கேட்க்கபடதா

ஏன் கூடாது அஜித்... கேளுங்கள் பதில் தருகிறேன்...

Spoiler:



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 24 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by ஹாசிம் Mon Apr 26, 2010 8:15 pm

கலைசாரின் அறிமுகமே அசத்தலாகவும் உருகவும் வைத்தது
(பலாப்பழம் பின்னராக்கம் ..... [You must be registered and logged in to see this image.] )


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 24 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by அன்பு தளபதி Mon Apr 26, 2010 8:21 pm

ஒரு மனிதனின் தனிப்பட்ட தோல்வி அல்லது தொழில் ரீதியான தோல்வி அல்லது ஆன்மிக ரீதியிலான தோல்வி என வாழ்வில் நேரிடும்போது பொதுவாக எந்த மந்திர சொல் சொல்வீர்கள் அதாவது எது தைரியமும் வலிமையும் கொடுக்கும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 24 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by கலைவேந்தன் Mon Apr 26, 2010 8:22 pm

௨) நட்புப் பற்றிய உங்கள் பார்வையையும், உங்கள் தோழர்/தோழி மூலம் ஏற்பட்ட ஒரு மறக்க முடியாத அனுபவத்தினைப் பகிரமுடியுமா...?

நட்பு என்ற ஒரே ஒரு உறவுதான் எதையும் பகிரக்கூடியது.. மீதி எந்த உறவிலும் கூட எல்லாவற்றையும் பகிர இயலாத சங்கடங்கள் உண்டு... ஆனால் நட்பில் பேதமும் இல்லை வேதனையும் இல்லை...

எனக்கு சிறுவயதிலும் சரி இப்போதும் சரி நட்பு என்பது எட்டாக்கனியாகத்தான் இருக்கிறது. சிறுவயதில் ஏழ்மை எனக்கு நட்பைத் தரவில்லை..

இப்போது...? ஒரு வேளை என் துர்குணங்கள் நலல் நட்பைத்தரவில்லையோ என்னவோ...?

என் முன்கோபம் . மனதில் எதையும் வைக்காமல் உடைத்துப்பேசிவிடுவது . பிறர் நடுநிலை தவறும்போது பொறுமை இழப்பது போன்ற குணங்கள என்னை நட்பிலிருந்து தூரமாக வைத்தாலும்...

கடந்த மூன்று வருடங்களாக சிறிதும் பட்டுவிடாமல் செழித்து வளர்ந்து வருவது என் உயிர்த்தோழி மஞ்சுபாஷினியுடனான என் தூய உயரிய நட்பு மட்டுமே...

ஆயினும் என் நட்பைத் தக்கவைத்துக் கொள்ள என் உயிர்த்தோழி இழந்த நட்புகள் ( சும்மா காற்றோட்ட நட்புகள் தாம் அவை என்பதை உணர்ந்தபின் ) பல...

இங்கே ஈகரையில் வந்தபின் எனக்கு உற்ற நட்பாக ஆதிரா அவர்களும் என் மதிப்புக்குரிய சிவாவும் திகழ்ந்து வருகின்றனர்..

ம்ம்ம்ம்....

மகிழ்ச்சி தரும் மறக்கமுடியாத அனுபவம் என்னவென்றால் எனக்கு மாரடைப்பு வந்து உயிர் பிழைத்தபோது எனக்காக ஊனுருகப் பிரார்த்தித்த என் இணைய இனிய நண்பர்களின் பிரார்த்தனைகள் என்னைக்காத்த விஷயம் தான்..

அது தவிர என் உயிர்த்தோழி என்னைச்சந்திக்க வரும்போதெல்லாம் நாங்கள் அனைவரும் குடும்பத்துடன் கோயில்கள் சென்று சுற்றிவந்து குதூகலமாய்க் கழித்த நினைவுகள் எல்லாமே மறக்கவியலாதவை,,,

நன்றி பாலன்.. .எனது நினைவைப் பின்னோக்கிச் செல்லவைத்தமைக்கு...


அடுத்த கேள்விக்கு பதில்... சிறிய இடைவேளைக்குப்பிறகு...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 24 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by கலைவேந்தன் Mon Apr 26, 2010 8:26 pm

நான் வரிசைக்கிரமமாக பதில் அளித்து வருவதால் அனைவரின் கேள்விகளுக்கும் கட்டாயம் வரிசைப்படி பதில் தருவேன்...

பொறுமை காக்கப் போவதற்கு நன்றி..



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 24 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by அன்பு தளபதி Mon Apr 26, 2010 8:32 pm

சிவா அண்ணன் சரியான நபரிடம் தளத்தை வழிநடத்தும் பொறுப்பை கொடுத்துள்ளார் இப்பொழுது யாரை பாராட்டுவது கலை சாரைய சிவா அண்ணன் அவர்களைய எப்படியோ உங்களுடன் இணைந்து இருப்பது மகிழ்ச்சியே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 24 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by கலைவேந்தன் Mon Apr 26, 2010 8:41 pm

௩)
எனக்கு (மட்டும்) இப்படி நேர்கின்றதே எனச் சலித்துக் கொண்ட சம்பவம் ஏதும் உண்டா...? அப்படியாயின் அச்சம்பவம் பற்றிச் சொல்வீர்களா...?

சிறுவயதில் வறுமை என்னைப்படுத்திய பாட்டை உணர்ந்து அனுபவிக்கும் போது என்னுடன் பயிலும் மாணவ்ர்கள் குதூகலத்துடன் மூன்றுவேளை உணவை வயிறார உண்டு நன்கு உடுத்து எல்லாம் கிடைத்து சந்தோஷமாக வாழ்வ்தைப்பார்க்கும் போது எனக்கு மட்டும் இப்படி நேர்ந்ததே என்று சலித்துக் கொள்வது மட்டும் இல்லை:தனியே காவிரிக்கரையில் அமர்ந்து ( என் தனிமைகள் சோகங்கள் எல்லாமே ஏந்திக்கொண்டது காவிரிக்கரை தான் ... ) அழுதிருக்கிறேன் நிறைய்ய...

நான் சிறுவயது முதல் பார்த்து வந்த பலரின் காதல்வெற்றிகளுக்குப் பிறகு என் காதல் மட்டும் இப்படி ஆனதே என்று எனக்கு மட்டும் ஏன் இப்படி ? என்று அழுதது உண்டு...

பணி கிடைத்து வறுமையில் இருந்து தப்பி சராசரி மனிதனாக வழ்ந்துவரும் இந்த காலக்கட்டத்தில் கூட அவ்வப்போது சிலரின் புற்க்கணிப்பும் அலட்சியப்போக்கும் எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று சலிக்க வைப்பதுண்டு தான்...

ஆனால் ...

நான் பனங்காட்டு நரியாக எந்த சலசலப்புக்கும் அஞ்சாமல் எனக்குக் கிடைத்திருக்கும் கொஞ்ச கால போனஸ் நாட்களை மகிழ்வுடன் கழிப்பதும் இயன்ற சேவையைச் செய்துவ்ருவதுமாக போய்க்கொண்டு இருக்கிறது...

நன்றி பாலன்,,,

அடுத்த பதில்.... ஹிஹி... வேண்டாம் அடிக்க வருவீங்க,,,,



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 24 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by கலைவேந்தன் Mon Apr 26, 2010 9:02 pm

௪)
உங்களிற்கு தமிழின் மீதும் கவிதைகள் மீதும் எவ்வாறு ஆர்வம் எழுந்தது..? அதற்குக் காரணமாகவும் உதவியாகவும் இருந்தோரைப் பற்றியும் நினைவு கூருவீர்களா?

இதற்கு பதில் அளிக்கும்போது சற்றே தற்பெருமை போல உங்களுக்குத் தோன்றினால் பொறுத்திட வேண்டுகிறேன்... [You must be registered and logged in to see this image.]

என் 13 ஆவது வயதில் நான் எட்டாம் வகுப்பில் படித்தபோது சாந்தி என்னும் என் வகுப்புத்தோழிக்கு அழகான கவிதை எழுதி ( இப்போது வரிகள் நினைவில்லை... வயசாயிடுச்சுப்பா ... சோகம் ) அதை காதல் மடலாக தந்து அவள் புன்னகையுடன் வாங்கிப்படித்துக் கிழித்துப்போட்ட அந்த கவிதை தான் என் முதல் கவிதை...

பின்னர் அவ்வப்போது கிறுக்கினாலும் + 2 படிக்கும் போது பள்ளி ஆண்டு மலரில் எழுதிய கவிதையும் அதற்கு கிடைத்த பாராட்டுகக்ளும் தைரியத்தைக் கொடுத்தது...

தமிழ்மீது ஆர்வத்தினால் இளங்கலைத் தமிழ்ப்பிரிவில் படிக்கும் போது ...( பொய் பொய் ... கலை பொய்சொல்றான்... கம்மி மார்க்குனால மேத்ஸ் சைன்ஸ் பிஎஸ்சி சீட் கிடைக்காம போய் தமிழில் சேர்ந்தான் ... - மனசாட்சி ) அப்படின்னு சொல்ல முடியாது... வேறு வழியின்றி இளங்கலைத்தமிழ் படிக்கும் போது என் தமிழ் ஆர்வம் வளர்ந்தது,,,

கல்லூரி ஆண்டு மலர்களிலும் கவியரங்குகளிலும் கலந்து கொண்டு பாராட்டைப்பெற்றபோது எமக்குத்தொழில் கவிதை என்று இறுமாந்து வளர்ந்தேன்...

எனது பேராசியர்கள் மு மாணிக்கம்.. இளந்திரையன்...ஞான சேகரன் எழில்முதல்வன் இன்னும் நிறைய பேராசிரியர்களும் என் தமிழ் ஆர்வத்தை வளர்த்தனர்..

என் உடன் பயின்ற என் காதலி கலையும் என் தமிழ் ஆர்வத்தை வளர்த்தாள் என்றே கூற வேண்டும்... எப்படின்னு கேக்காதீங்க மக்கா... காதலிச்சு பாருங்க... இலலைன்னா வாசன் மாறன் அப்புத்தம்பி இவங்களைக் கேளுங்க... [You must be registered and logged in to see this image.]

இப்படியாக முழுமனதுடன் தமிழில் ஆர்வம் செலுத்திவந்ததால் கலைமகள் என்னைக் கைவிடவில்லை என்றே நினைக்கிறேன்...


நன்றி பாலன்...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 24 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by சிவா Mon Apr 26, 2010 9:55 pm

கலை சாரின் மனம் திறந்த பதில்கள் அருமை.

இளமையில் வறுமை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நீங்கள் இந்த அளவிற்கு ஒரு பக்குவப்பட்ட, பலராலும் போற்றக் கூடிய மனிதனாக வந்திருக்க மாட்டீர்கள். இளமையில் வறுமையென்றாலும் அதைப் போராடி வெற்றிகொண்ட உங்களை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்.

உன் நண்பன் யாரென்று சொல், நான் உன்னைப் பற்றிக் கூறுகிறேன் என்று வரும்பொழுது யோசிக்காமல் என் நண்பன் நீங்களென கை நீட்டுவேன்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 24 Empty Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 24 of 47 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 35 ... 47  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum