ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Poll_c10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Poll_m10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Poll_c10 
ayyasamy ram
ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Poll_c10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Poll_m10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Poll_c10 
mohamed nizamudeen
ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Poll_c10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Poll_m10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Poll_c10 
VENKUSADAS
ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Poll_c10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Poll_m10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Poll_c10 

Top posting users this month
heezulia
ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Poll_c10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Poll_m10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Poll_c10 
ayyasamy ram
ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Poll_c10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Poll_m10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Poll_c10 
mohamed nizamudeen
ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Poll_c10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Poll_m10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Poll_c10 
VENKUSADAS
ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Poll_c10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Poll_m10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ கிருஷ்ண லீலா!

4 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Empty ஸ்ரீ கிருஷ்ண லீலா!

Post by சிவா Tue Sep 30, 2008 4:29 pm

First topic message reminder :

சகடா சூரவதம்

குழந்தை கிருஷ்ணர் சற்று வளர்ந்த பின், குப்பிறப்படுக்கத் துவங்கினார். மற்றொரு விழாவை யசோதாவும் நந்தமகாராஜாவும் கொண்டாடினார்கள், அது கிருஷ்ணரின் முதலாவது பிறந்தநாள் விழாவாகும். அவர்கள் கொண்டாடிய கிருஷ்ண ஜெயந்தி விழா, இன்றும் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. அவ்விழாவுக்கு பெருந்திரளானவர்கள் வந்து விழாவில் குதூகலமாக கலந்துகொண்டனர். நேர்த்தியான வாத்தியக்குழு ஒன்று இசை பொழிய, கூடியிருந்த மக்கள் அதை ரசித்தனர். கற்றறிந்த பண்டிதர்கள் எல்லோரும் விழாவுக்கு அழைக்கப் பட்டிருந்தனர். பிராமணர்களான அவர்கள், கிருஷ்ணரின் நன்மை கருதி வேத பாராயணம் செய்தார்கள். யசோதை, நீராட்டப்பட்டு, அழகிய ஆடைகளால் அலங்கரிக்கப் பட்டிருந்த குழந்தை கிருஷ்ணரை மடியில் வைத்துக் கொண்டிருக்கும்போது, குழந்தை தூங்குவதுபோல் தோன்றியதால், அன்னை யசோதை அவரைப் படுக்கையில் கிடத்தினாள்.

உறவினர்களையும் நண்பர்களையும் அந்த சுபவேளையில் வரவேற்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால் யசோதை, குழந்தைக்கு பாலூட்ட மறந்து போனாள். எனவே, அவர் பசித்திருந்ததால் அழத் தொடங்கினார். அங்கே ஏற்பட்டிருந்த பற்பல ஓசைகளின் காரணமாக குழந்தை அழுதது, யசோதையின் காதில் விழவில்லை. பசியால் வருந்திய குழந்தை கோபமுற்று, எந்த சாதாரண குழந்தையும் செய்வதுபோல் கால்களைத் தூக்கி உதைக்கத் தொடங்கினார். குழந்தை கிருஷ்ணர் ஒரு சகட வண்டியின் கீழ் படுக்க வைக்கப்பட்டிருந்ததால், அவர் கால்களை உதைத்தபோது வண்டியின் சக்கரத்தில் பட்டு அது பல துண்டுகளாக நொறுங்கியது. அந்த சகடமானது ஒரு அரக்கன். கம்சனால் ஸ்ரீ கிருஷ்ணரைக் கொல்வதற்காக அனுப்பப்பட்டவன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சிறு கால்களால் உதைக்கப்பட்டதும் அரக்கன் மாண்டு விழுந்தான். ஓசை கேட்டு வந்த யசோதை, குழந்தை கிருஷ்ணரை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு பிராமணர்களை அழைத்து, கொடிய தேவதைகளால் குழந்தைக்கு தீங்கு ஏற்படாமலிருக்க, வேத மந்திரங்களை ஓதும்படி கேட்டுக்கொண்டாள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Empty Re: ஸ்ரீ கிருஷ்ண லீலா!

Post by சிவா Tue Sep 30, 2008 4:42 pm

வியோமாசுர வதம்

ஒரு நாள் காலையில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் அவரது நண்பர்களும் கோவர்த்தன கிரியின் உச்சியில் விளையாடுவதற்காகச் சென்றார்கள். கள்வர்களும் காவலர்களுமாக அவர்கள் நடித்து விளையாடினார்கள். சிலர் கள்வர்களாகவும் சிலர் ஆட்டுக் குட்டிகளாகவும் பங்கேற்றார்கள். இவ்வாறு அவர்கள் குழந்தைகளாக விளையாடி மகிழ்கையில் வியோமாசுரன் என்ற பெயருடைய ஒரு அரக்கன் அங்கு தோன்றினான். வியோமாசுரன் என்றால் ஆகாயத்தில் பறக்கும் அசுரன் என்று பொருள். அவன் மற்றொரு மாபெரும் அசுரனான மாயா என்பவனின் மகன். இவ்வரக்கர்கள் பல மாயச் செயல்களைப் புரியக் கூடியவர்கள்.

வியோமாசுரன் இடைச் சிறுவனாக உருவம் தாங்கி விளையாட்டில் காவலர்களாக நடித்த சிறுவர்களோடு கலந்து கொண்டு, ஆட்டுக் குட்டிகளாக நடித்த பல சிறுவர்களைக் கவர்ந்து சென்றான். ஒருவர் பின் ஒருவராகப் பல சிறுவர்களை அசுரன் கடத்திச் சென்று, அவர்களை மலைக் குகைகளினுள் பதுக்கி வைத்து, கற்களால் குகைகளின் வாய்களை மூடிவிட்டான். அசுரனின் தந்திரத்தைக் கிருஷ்ணர் அறிந்து கொண்டார்.

உடனே அவர், சிங்கம் ஆட்டுக் குட்டியைப் பிடிப்பது போல் அசுரனைப் பிடித்து விட்டார். அவரின் பிடியிலிருந்து தப்புவதற்காக அசுரன் ஒரு பெரிய மலையின் அளவிற்குத் தன் உருவத்தைப் பெரிதாக்கினான். ஆனாலும் கிருஷ்ணர் தன் பிடியைத் தளர்த்தவில்லை. மிகுந்த பலத்துடன் அசுரனைத் தரையில் வீழ்த்திக் கொன்றார். வியோமாசுரனைக் கொன்ற பின் கிருஷ்ணர், தம் நண்பர்களையெல்லாம் குகைகளில் இருந்து விடுவித்தார். அவரது வியத்தகு செயல்களுக்காக அவரின் நண்பர்களும் தேவர்களும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பாராட்டினார்கள். அதன் பின் கிருஷ்ணர், தன் நண்பர்களுடனும் பசுக்களுடனும் விருந்தாவனத்துக்குத் திரும்பிச் சென்றார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Empty Re: ஸ்ரீ கிருஷ்ண லீலா!

Post by சிவா Tue Sep 30, 2008 4:43 pm

கம்சனின் வேலையாளை சிரச்சேதம் செய்தல்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் மதுரா நகரின் வீதிகளில் சென்று கொண்டிருந்தபோது ஒரு சலவைத் தொழிலாளியைக் கண்டார்கள். அவன் உடுப்புகளுக்குச் சாயம் போடுபவன். கிருஷ்ணர் அவனிடம் சில நேர்த்தியாகச் சாயம் போடப்பட்ட உடுப்புகளைக் கொடுத்தால் அவனுக்கு எல்லா நலன்களும் பெருகுமென்று அவனிடம் கூறினார். கிருஷ்ணரிடம் உடுப்புக்கள் இல்லையென்று இல்லை. அவருக்கு உடுப்புக்கள் தேவைப்படவுமில்லை. ஆனால் அவர் வேண்டுவதைக் தர எல்லோரும் தயாராக இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்துவதற்காகவே அவ்வாறு கேட்டார். கிருஷ்ணர் வேண்டுவதைத் தர எல்லோரும் முன் வர வேண்டும். அதுவே கிருஷ்ண உணர்வு.

துரதிஷ்ட வசமாக அவன் கம்சனின் வேலையாளாக இருந்ததால் முழுமுதற் கடவுளான கிருஷ்ணரின் வேண்டுகோளை அவன் புரிந்து கொள்ளவில்லை. இது சகவாச தோஷத்தால் ஏற்படுவது. அவனுக்கு எல்லா நலன்களையும் தருவதாக வாக்களித்த முழுமுதற் கடவுளுக்கு அவன் உடனே உடுப்பைக் கொடுத்திருக்கலாம். பாவாத்மாவான அந்த அரக்கன் மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாக அவன் கோபம் கொண்டு அரசனுக்குரிய ஆடையை நீ எப்படிக் கேட்கலாம்? என்று கேட்டான். பின் அவன் கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் ஆலோசனை கூறினான்: சிறுவர்களே, இனி இவ்வாறு அரசனுக்குரிய ஆடையைக் கேட்கும் அகம்பாவச் செயலைச் செய்யாதீர்கள். அப்படிச் செய்தால் அரசனின் ஆட்கள் உங்களைக் கைது செய்து தண்டனை வழங்குவார்கள். நீங்கள் மிகவும் துன்பப்பட நேரிடும். எனக்கு இந்த அனுபவம் உண்டு என்று கூறினான்.

இதைக் கேட்டதும் தேவகி நந்தனான கிருஷ்ணர், சலவையாளிடம் மிகுந்த கோபம் கொண்டு அவனைத் தம் கையால் ஓங்கி அடித்து, அவனைச் சிரச் சேதம் செய்தார். அவன் பூமியில் இறந்து விழுந்தான். கிருஷ்ணரின் ஒவ்வொரு அங்கமும் அவர் விரும்புவது போல் செயல் படக்கூடியதென்பதை இது நிரூபிக்கின்றது. வாளின் உதவியின்றி கையாலேயே அவனின் தலையை அவர் கொய்தார். அவர் எது செய்ய நினைத்தாலும் வெளிப் பொருட்களின் உதவியின்றிச் செய்யக் கூடியவர். இந்தக் கோர நிகழ்சி;சிக்குப் பின் அவனது நண்பர்கள் துணிகளைக் கீழே போட்டுவிட்டுக் கலைந்து சென்றார்கள். கிருஷ்ணரும் பலராமரும் அவற்றை எடுத்துத் தம் விருப்பம்போல் அணிந்து கொண்டு, மற்றவற்றைத் தம் கோபால நண்பர்களுக்கு வழங்கினார்கள். வேண்டாத உடுப்புக்களை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றார்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Empty Re: ஸ்ரீ கிருஷ்ண லீலா!

Post by சிவா Tue Sep 30, 2008 4:43 pm

தையல்காரனுக்கு முக்தி வழங்குதல்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், கம்சனின் வேலையாளைச் சிரச்சேதம் செய்தபின் பலராமருடனும் அவர்களது கோபால நண்பர்களுடனும் மதுராவின் வீதிகளில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தபோது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தனான தையல்காரன் ஒருவன் சில அழகிய ஆடைகளைத் தைத்துக் கொண்டு வந்தான். இவ்வாறு அழகாக உடுத்துக் கொண்ட கிருஷ்ணரும் பலராமரும் அழகிய வண்ண ஆடைகளைத் தரித்த யானைகளைப் போல் காட்சியளித்தார்கள்.

தையல்காரனின் செயல் கிருஷ்ணருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவனுக்கு ஸாருப்ய முக்தி அளித்தார். அதாவது, அவன் உடலை நீத்தபின் வைகுண்டத்தில் நான்கு கைகளுடைய நாராயணரின் ரூபத்தைப் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பான். அவன் வாழ்நாள் முழுவதும் புலனின்பங்களை நன்கு அனுபவிப்பதற்குத் தேவையான செல்வத்தைப் பெறுவானென்றும் கிருஷ்ணர் வரம் அருளினார்.

இந் நிகழ்ச்சியின் மூலம், கிருஷ்ண உணர்வுள்ள பக்தர்கள் இகவுலக இன்பங்களிலோ, புலன் திருப்தியிலோ குறைந்தவர்களாக மாட்டார்களென்பதைக் கிருஷ்ணர் நிரூபித்துக் காட்டினார். இவ்வுலகில் அவர்கள், இகவுலக வாழ்வை நீத்தபின் வைகுண்ட லோகம் அல்லது கிருஷ்ணலோகம், அல்லது கோலோக விருந்தாவனத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Empty Re: ஸ்ரீ கிருஷ்ண லீலா!

Post by சிவா Tue Sep 30, 2008 4:43 pm

பூ வியாபாரிக்கு அனுக்கிரகம் அளித்தல்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் மதுராவின் வீதிகளில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தபோது சுதாமா என்ற பெயருடைய பூக்கடைக் காரரிடம் சென்றார்கள். அவர்கள் கடையை அணுகியதும் பூ வியாபாரி வெளியே வந்து மிகுந்த பக்தியுடன் அவர்களின் காலில் விழுந்து வணங்கினார். பின், கிருஷ்ணரையும் பலராமரையும் தகுந்த ஆசனங்களில் இருக்கச் செய்து, உதவியாளர்களைப் பூவும் தாம்பூலமும் கொண்டு வரும்படி பணித்தார். வியாபாரியின் வரவேற்பால் கிருஷ்ணர் மிகவும் திருப்தி அடைந்தார்.

மிகுந்த பணிவுடன் பூ வியாபாரி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பிரார்த்தித்தார்: அன்பான பிரபுவே, நீர் என் இருப்பிடத்துக்கு வந்திருப்பதால் என் மூதாதையர்களும், வணக்கத்துக்குரிய பெரியவர்களும் முக்தி அடைந்தவர்களாக வேண்டும். இப் பிரபஞ்சத்தில் காரணங்களுக் கெல்லாம் காரணமானவர் நீரே. ஆனால் உமது பக்தர்களைப் பாதுகாத்து, அசுரர்களை அழித்து, இவ்வுலக வாசிகளுக்கு நன்மையளிப்பதற்காக உமது சக்திகளுடன் நீர் வந்திருக்கிறீர்.

நண்பரென்ற முறையில் எல்லா உயிர் வாழிகளையும் சமமாக நோக்குகிறீர். நீர் பரமாத்மா. நண்பன் - பகைவன் என்ற வேறுபாடு உமக்கில்லை. என்றாலும் உமது பக்தர்களுக்குப் பக்தியில் சிறப்புப் பலன்களை நீர் வழங்குகிறீர். பிரபுவே, நான் என்ன செய்ய வேண்டும், கட்டளையிடும். நான் உமது நிரந்தர சேவகன். ஏதாவது செய்ய நீர் அனுமதித்தால் நான் தன்யனாவேன். இவ்வாறு சுதாமா பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பிரார்த்தித்தார்.

கிருஷ்ணரும் பலராமரும் தன் இருப்பிடத்தில் வரப்பெற்ற சுதாமா மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதனால் தனக்கு மிகவும் பிடித்தமான மலர்களைக் கொண்டு மிக அழகாக இரண்டு மாலைகளைத் தொடுத்து அவர்களுக்கு அர்ப்பித்தார். அவருடைய உண்மையான பக்தித் தொண்டை கிருஷ்ணரும் பலராமரும் மெச்சினார்கள்.

சரணடையும் ஆத்மாக்களுக்குத் தாம் எப்போதும் வழங்கும் ஆசிகளைக் கிருஷ்ணர் சுதாமாவுக்கு வழங்கினார். சுதாமா, தாம் எப்போதும் கிருஷ்ணரின் நிரந்தர சேவகராக இருக்க வேண்டுமென்றும், அப்படிப்பட்ட பக்தித் தொண்டின் மூலம் பிற உயிர்களுக்கும் சேவை செய்ய வேண்டுமென்றும் பிரார்த்தித்தார். பூ வியாபாரியிடம் திருப்தியடைந்த கிருஷ்ணர், அவர் வேண்டிய வரங்களுக்கான ஆசிகளை நல்கியது மட்டுமன்றி அதற்கும் மேலாக எல்லா சுக போகங்களையும், நீண்ட ஆயுளையும் வழங்கினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Empty Re: ஸ்ரீ கிருஷ்ண லீலா!

Post by சிவா Tue Sep 30, 2008 4:44 pm

கூனியாக இருந்த பெண்ணை அழகிய இளம் பெண்ணாக மாற்றுதல்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் பூ வியாபாரியின் இடத்தை விட்டுச் சென்றபின், கூனுடைய ஒரு இளம் பெண் சந்தனக் குழம்பு நிரம்பிய ஒரு கோப்பையைத் தெருவில் எடுத்துச் செல்வதைக் கண்டார்கள். ஆனந்தத்தின் இருப்பிடமான கிருஷ்ணர் அந்தக் கூனியிடம் ஹாஸ்யமாகப் பேசித் தம் நண்பர்களை மகிழ்விக்க விரும்பினார். கிருஷ்ணர் அவளிடம் கூறினார்: உயர்ந்த இளம் பெண்ணே நீ யார்? யாருக்காக இச் சந்தனத்தை எடுத்துச் செல்கிறாய்? இதை நீ எனக்குத் தருவது பொருந்துமென நான் எண்ணுகிறேன். அவ்வாறு செய்தால் நிச்சயமாக உனக்கு நண்மை உண்டாகும். எனக் கூறினார்.

முழுமுதற் கடவுளான கிருஷ்ணர் அக் கூனியைப் பற்றிய எல்லா விபரங்களையும் அறிந்திருந்தார். அவளை அவ்வாறு கேட்டபோது, ஒரு அசுரனுக்குச் சேவை செய்வதில் பயனில்லை என்பதைக் குறிப்பால் உணர்த்தினார். அதைவிட கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் சேவை செய்தால் பாவங்களெல்லாம் களையப் பெறலாம்.

அந்தப் பெண் கிருஷ்ணரிடம் கூறியதாவது: அன்புள்ள சியாம சுந்தரா, நான் கம்சனின் வேலைக்காரி. அவருக்கு நான் தினமும் சந்தனம் தயாரித்து அளித்து வருகிறேன். இவ்வளவு நேர்த்தியான சந்தனத்தை நான் கொடுப்பதால் கம்சன் என்னிடம் திருப்தி கொண்டிருக்கிறார். ஆனால் அந்தச் சந்தனத்தைப் பெறுவதற்கான தகுதியை உடையவர் சகோதரர்களான உங்களிருவரையும் தவிர வேறு யாரும் இருக்க முடியாதென்பதை நான் இப்போது உணர்கிறேன். என்று கூறினாள்.

கிருஷ்ணர் மற்றும் பலராமரின் அங்க லட்சணங்களாலும், புன்னகையாலும், கண் பார்வையாலும், மற்ற அம்சங்களாலும் கவரப்பட்ட அக்கூனிப் பெண் சந்தனக் குழம்பை எடுத்து அவர்களின் உடல்களின் மீது மிகுந்த பக்தியுடனும் திருப்தியுடனும் பூசத் தொடங்கினாள். கிருஷ்ணரும் பலராமரும் சந்தனம் பூசப்பட்டதும் மேலும் அழகாகக் காட்சியளித்தார்கள். இந்தத் தொண்டு கிருஷ்ணரை மிகவும் மகிழ்வித்தது. அவளுக்கு என்ன வெகுமதி அளிக்கலாமென்று கிருஷ்ணர் சிந்திக்கலானார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன் கால் விரல்களால் கூனியின் பாதங்களை அழுத்தியபடி, கைவிரல்களால் அவளின் முகவாயைத் தாங்கிக் கொண்டு, ஒரே அசைவில் அவளின் கூனை நிமிர்த்தினார். அவள் கூன் நீங்கப் பெற்று நிமிர்ந்து நின்றபோது ஓர் அழகிய இளம் பெண்ணாகக் காட்சியளித்தாள். கூனியான அப்பெண்ணின் சேவையில் திருப்தியடைந்த கிருஷ்ணரின் கைகள் பட்ட உடனே அவள் பெண்களில் சிறந்த அழகியாக உருமாறினாள். அவளின் பக்தி கிருஷ்ணரைக் கவர்ந்தது. கிருஷ்ணருக்குச் சேவை செய்யும் பக்தன் உடனடியாக மிகவுயர்ந்த நிலையை அடைகிறானென்பதை இந்நிகழ்ச்சி நிரூபிக்கின்றது
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Empty Re: ஸ்ரீ கிருஷ்ண லீலா!

Post by சிவா Tue Sep 30, 2008 4:44 pm

யாகமேடையில் வில்லை முறித்தல்

கம்சன் தனுர் யாகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான். இந்த யாகத்தின் நோக்கத்தைக் குறிப்பால் உணர்த்துவதற்காக கம்சன் யாக பீடத்தினருகில் மாபெரும் வில் ஒன்றை வைத்திருந்தான். அந்த வில் மிகப் பெரிதாகவும், அதிசயமாகவும், வானவில்லைப் போன்றதாகவும் இருந்தது. யாகப் பிரதேசத்தினுள் அந்த வில் கம்சனால் நியமிக்கப்பட்ட காவலர்களின் பாதுகாப்பில் இருந்தது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் வில்லின் அருகில் சென்றபோது, காவலர்கள் அவர்களை எச்சரித்தார்கள். ஆனால் கிருஷ்ணர் அதைச் சட்டை செய்யவில்லை. அவர் பலவந்தமாக உள்ளே சென்று வில்லைத் தனது இடது கையில் எடுத்தார். அங்கு குழுமியிருந்த மக்களின் முன்பு கிருஷ்ணர் வில்லில் நாணை ஏற்றி, வில்லை வழைத்து இரு பகுதிகளாக, யானை கரும்பை ஒடிப்பது போல் ஒடித்தார். கிருஷ்ணரின் சக்தியை மக்கள் வியந்து பாராட்டினார்கள்.

வில் ஒடிந்த போது எழுந்த ஒலி பூமியிலும் ஆகாயத்திலும் எங்கும் எதிரொலித்தது. அந்த ஒலியைக் கம்சனும் கேட்டான். நடந்ததை அறிந்தபோது அவன் தன் உயிருக்காக அஞ்சினான். வில்லைக் காவல் காத்தவன் மிகுந்த கோபமடைந்து, கிருஷ்ணரைப் பிடிக்குமாறு ஏவலர்களுக்குக் கட்டளையிட்டபடி தானும் அவரை நோக்கிப் பாய்ந்தான். பிடியுங்கள், கொல்லுங்கள் என்று கத்தினான்.

கிருஷ்ணரையும் பலராமரையும் அவர்கள் சூழ்ந்து கொண்டார்கள். காவலர்களின் அபாயகரமான எண்ணங்களை உணர்ந்ததும் கிருஷ்ணரும் பலராமரும் மிகுந்த கோபம் கொண்டு, ஒடிந்த வில்லின் இரு பகுதிகளையும் கையில் ஏந்தியபடி காவலர்களின் தாக்குதலைச் சமாளித்தார்கள்.

இந்தக் குழப்பம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது காவலர்களுக்கு உதவியாக கம்சன் மேலும் சில படைவீரர்களை அனுப்பி வைத்;தான். கிருஷ்ணரும் பலராமரும் அவர்கள் எல்லோரையும் போரில் கொன்றார்கள். இதன் பின் கிருஷ்ணரும் பலராமரும் யாகப் பகுதிக்குள் மேலும் பிரவேசிக்காமல் வாயிலின் வழியாகத் தம் இருப்பிடத்துக்குத் திரும்பினார்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Empty Re: ஸ்ரீ கிருஷ்ண லீலா!

Post by சிவா Tue Sep 30, 2008 4:44 pm

குவாலயபீட யானையைக் கொல்லல்

கம்சன் தனுர் யாகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தாலும் அதற்கு முன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும் பலராமரையும் கொல்வதுதான் கம்சனின் திட்டம். எனவே அவன் அடுத்தகட்ட நடவடிக்கையாக மல்யுத்தப் போட்டி ஒன்றிற்கான ஏற்பாட்டைச் செய்தான். மல்யுத்தக் களம் நேர்த்தியாகத் துப்பரவு செய்யப்பட்டு கொடிகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது. போட்டி நடக்கவிருந்ததைப் பறையடித்து அறிவித்தார்கள். அரசர்கள், பிராமணர்கள், சத்திரியர்கள் என்று பல் வேறான உயர் பிரிவினருக்குத் தனியான ஆசனங்கள் அமைக்கப் பட்டிருந்தன.

இறுதியில் கம்சன் வந்து சேர்ந்தான். அவனுடன் பல மந்திரிகளும், பிரதானிகளும், காரியஸ்தர்களும் வந்து அமர்ந்தார்கள். கம்சன் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்தான். எல்லா ஏற்பாடுகளும் நிறைவேறியபின் சபையின் முன் தம் திறமைகளைக் காட்ட வந்திருந்த மல்லர்கள் கோதாவுக்குள் இறங்கினார்கள். அவர்கள் பிரகாசமான ஆபரணங்களையும், ஆடைகளையும் அணிந்திருந்தார்கள். அவர்களுள் பிரசித்தி பெற்ற மல்லர்களான சாணூரன், முஷ்டிகன், சாலன், கூடன், தோசாலன் ஆகியவர்களும் இருந்தனர்.

நந்தரின் தலைமையில் வந்திருந்த ஆயர் குல மக்களையெல்லாம் கம்சன் வரவேற்றான். அவர்களும் தாங்கள் கொண்டு வந்திருந்த பால் பண்டங்களைக் கம்சனுக்குப் பரிசாக அளித்துத் தத்தம் ஆசனங்களில் அமர்ந்தார்கள். காலையில் நீராடி, மற்றக் காலைக் கடன்களை முடித்துவிட்டுக் கிருஷ்ணரும் பலராமரும் தயாராக இருந்தபோது மல்யுத்தக் களத்தில் ஒலித்த பறைகளின் ஓசை அவர்களின் காதில் விழுந்தது. உடனே வேடிக்கை பார்க்க அவ்விடத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.

மல்யுத்தக் களத்தை அவர்கள் அடைந்தபோது அங்குள்ள வாயிலில் குவாலயபீட என்ற மாபெரும் யானையொன்று நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டார்கள். பணியாட்கள் யானையைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். வழியை மறைக்கும்படியாக வேண்டுமென்றே காவலர்கள் யானையை நிறுத்தியிருந்ததைக் கிருஷ்ணர் கண்டார். காவலர்களின் நோக்கத்தை உணர்ந்த கிருஷ்ணர் யானையைத் தாக்குவதற்கு முன்பாகத் தம் உடைகளை இறுக்கிக் கொண்டார். பின், மேகம் போல் கர்ஜிக்கும் குரலில் யானையின் காவலனிடம் கிருஷ்ணர் பேசினார்: கயவனே, வழியை மறித்தால் உன்னையும் உன் யானையையும் யமலோகம் அனுப்புவேன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Empty Re: ஸ்ரீ கிருஷ்ண லீலா!

Post by சிவா Tue Sep 30, 2008 4:45 pm

கிருஷ்ணரால் அவமதிக்கப்பட்ட காவலன் கோபமடைந்து ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அவரைத் தாக்கும்படி யானையை ஏவினர். யானை கிருஷ்ணரை நோக்கி முன்னேறியது. அவரை நோக்கி விரைந்து வந்து துதிக்கையால் அவரைப் பிடிக்க முயற்சித்தது. ஆனால் கிருஷ்ணர் வெகு சாமர்த்தியமாக யானையின் பின்பக்கம் சென்று தப்பித்துக் கொண்டார். தன் துதிக்கைக்கு அப்பால் பார்க்க முடியாத யானையால் பின்பக்கம் ஒளிந்திருந்த கிருஷ்ணரைக் காணமுடியவில்லை. என்றாலும் அவரைப் பிடிக்கும் நோக்கத்துடன் துதிக்கையால் துளாவியது. மீண்டும் கிருஷ்ணர் விரைவாக இடம்மாறி யானையின் பிடியிலிருந்து தப்பினார். இம்முறை அவர் யானையின் வாலைப் பிடித்து இழுத்தார்.

மிகுந்த பலத்துடன் இழுத்ததால் கருடன் பாம்பை இழுத்துச் செல்வதுபோல் கிருஷ்ணர் யானையைச் சிறிது தூரம் இழுத்துச் சென்றார். கிருஷ்ணர் சிறு வயதில் கன்றுகளை வாலைப் பிடித்து இழுத்தது போல் யானையையும் வாலைப் பிடித்து அப்படியும் இப்படியுமாக இழுத்தார். அதன்பின் அவர் யானையின் முன்புறம் சென்று அதன் தாடையில் பலமாக அடித்தார். அடித்தபின் அவர் மீண்டும் யானையின் பார்வையிலிருந்து மறைந்து அதன் பின்புறமாகச் சென்று, கீழே குனிந்து, அதன் கால்களிடையே புகுந்து அதைத் தடுமாறி விழச் செய்தார்.

அவ்வாறு செய்துவிட்டுக் கிருஷ்ணர் உடனே விலகிக் கொண்டார். அவர் கீழேயே இருப்பதாக எண்ணிய யானை அவரைக் கொல்லும் நோக்கத்துடன் கொம்பை அவர்மீது பாய்ச்சியதாக எண்ணிக்கொண்டு தரையில் ஆழமாகச் செலுத்தியது. யானை மிகவும் அலைக்களிந்து கோபமுற்றிருந்தாலும் அதன் பாகன் அதை மேலும் விரட்டினான். யானை மதம் கொண்டு கிருஷ்ணரை நோக்கி ஆவேசத்துடன் பாய்ந்தது.

கிருஷ்ணர் யானையின் துதிக்கையைப் பிடித்து இழுத்தார். யானையும் பாகனும் கீழே விழுந்தபோது கிருஷ்ணர் யானையின் மீது தாவிக் குதித்து ஏறி, யானையையும் பாகனையும் கொன்றார். யானையைக் கொன்ற பின் கிருஷ்ணர் அதன் தந்தத்தை எடுத்துத் தன் தோளின் மேல் வைத்துக் கொண்டார். வியர்வைத் துளிகளும் யானையின் இரத்தத் துளிகளும் அவரின் மேனியை அழகு செய்ய, கிருஷ்ணர் ஆனந்த மயமாகக் காட்சியளித்தார். அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் கிருஷ்ணரைப் புகழ்ந்து பாராட்டினார்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Empty Re: ஸ்ரீ கிருஷ்ண லீலா!

Post by சிவா Tue Sep 30, 2008 4:45 pm

மல்யுத்தப் போட்டியில் பல மல்லர்களைக் கொல்லுதல்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் குவாலயபீட யானையைக் கொன்றபின் பலராமருடனும் நண்பர்களுடனும் மல்யுத்தக் களத்தினுள் பிரவேசித்தபோது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் செய்த செயல்கள் பற்றி மக்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது மல்யுத்தப் போட்டி தொடங்க இருப்பதை அறிவிக்கும் வாத்ய முழக்கங்கள் அவர்களின் செவிகளில் விழுந்தன. பிரசித்தி பெற்ற மல்யுத்த வீரனான சாணூரன் கிருஷ்ணரிடமும் பலராமரிடமும் பேசினான்:

அன்பான கிருஷ்ணா, பலராமா, உங்கள் முந்திய செயல்கள் பற்றி நாங்கள் கேள்விப் பட்டிருக்கிறோம். நீங்கள் பெரும் வீரர்கள். எனவே அரசர் உங்களை அழைத்துள்ளார். அரசரும் இங்கு கூடியுள்ளவர்களும் உங்களின் மல்யுத்த திறமைகளைக் கான ஆவலாயிருக்கிறார்கள். ஒரு குடிமகன் எப்போதும் அரசனின் மனதையறிந்து பணிவுடன் நடக்க வேண்டும்.

அவ்வாறு நடக்கும் குடிமகன் எல்லா நலன்களையும் பெறுவான். பணியாமல் நடப்பவன் அரசனின் கோபத்திற்கு ஆளாகித் துன்பம் அனுபவிக்கிறான். நீங்கள் ஆயர் குலச் சிறுவர்கள். பசுக்கள் மேய்க்கும்போது ஒருவரோடு ஒருவர் மல்யுத்தம் செய்து மகிழ்வதாகக் கேள்விப் பட்டிருக்கிறோம். எனவே எங்களுடன் நீங்கள் மல்யுத்தப் போட்டியயில் கலந்து கொண்டால் இங்குள்ள மக்களும் அரசனும் மகிழ்ச்சியடைவார்கள். என்று சாணூரன் கூறினான்.

சாணூரன் கூறியதன் நோக்கத்தைக் கிருஷ்ணர் புரிந்து கொண்டார். ஆனால் காலத்தையும் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு கிருஷ்ணர் பேசினார்: நீ போஜராஜனின் பிரஜை, காட்டில் வாழும் நாங்களும் அவர்களின் பிரஜைகளே. இயன்றவரை அரசனைத் திருப்திப் படுத்த முயல்கிறோம். மல்யுத்தத்திற்கு அவர் எங்களுக்கு வாய்ப்பளித்தது அவர் எங்களிடம் காட்டும் கருணையாகும். ஆனால் நாங்கள் சிறுவர்கள். சில வேளைகளில் விருந்தாவனத்தில் எங்கள் வயதினரான நண்பர்களுடன் நாங்கள் விளையாடியதுண்டு. ஒரே வயதும் பலமும் கொண்டவர்களோடு போட்டியிடுவதில் நன்மையுண்டு. ஆனால் உங்களைப் போன்ற மாமல்லர்களோடு நாங்கள் போட்டியிடுவது பார்ப்பவர்களுக்கு நன்றாயிருக்காது. அவர்களின் தர்மத்துக்கும் அது முரண்படுவதாகும். என்று கூறினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Empty Re: ஸ்ரீ கிருஷ்ண லீலா!

Post by சிவா Tue Sep 30, 2008 4:46 pm

பிரசித்தி பெற்றவர்களும் பலவான்களுமான அந்த மல்லர்கள் சிறுவர்களான பலராமரையும் கிருஷ்ணரையும் போட்டிக்கு அழைப்பது முறையல்லவென்பதைக் கிருஷ்ணர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலாக சாணூரன் கூறினான்: அன்பான கிருஷ்ணா, நீர் குழந்தையோ இளைஞனே அல்லவென்பதை நாங்கள் அறிவோம். நீரும் உமது மூத்த சகோதரனான பலராமரும் எல்லோரையும் விட உயர்ந்தவர்கள். குவாலயபீட என்ற யானையைக் கொன்றிருக்கிறீர்கள். மற்ற யானைகளிடம் சண்டையிட்டு அவற்றைத் தோற்கடிக்கக் கூடிய யானையை அதிசயிக்கத் தக்க வகையில் நீர் கொன்றீர். இதிலிருந்து நீர் பலம் மிக்கவரென்பது தெரியவருகிறது.

எனவே எங்களில் பலம் மிகுந்தவர்களுடன் யுத்தம் செய்யும் தகுதி உமக்கும் உமது மூத்த சகோதரனான பலராமருக்கும் உண்டு. நான் உம்முடனும் பலராமர் முஷ்டிகனுடனும் சண்டையிடலாம். என்று சாணூரன் கூறினான். கம்சனின் மல்லர்கள் தம் விருப்பத்தைத் தெரிவித்ததும், மது என்ற அரக்கனைக் கொன்றவராகிய முழுமுதற் கடவுள் சாணூரனை எதிர்த்தும், ரோகிணியின் மகனான பலராமர் முஷ்டிகனை எதிர்த்தும் மல்யுத்தம் செய்தார்கள். கிருஷ்ணரும் சாணூரனும், அதேபோல் பலராமரும் முஷ்டிகனும், கையோடு கை, காலோடு கால் பின்னிக் கொண்டு, வெற்றி பெறும் நோக்கத்தோடு ஒருவரை மற்றவர் அழுத்த முயற்சித்தார்கள்.

உள்ளங் கைகளையும் கால்களையும், தலைகளையும், மர்ர்புகளையும் பிணைத்துக் கொண்டு, ஒருவரையொருவர் அடித்துத் தள்ளியபோது சண்டையின் வேகம் அதிகரித்தது. ஒருவர் மற்றவரைப் பிடித்துத் தரையின் மீது வீழ்த்தினால், மற்றவர் பின்னிருந்து பிடித்து அழுத்த முயற்சித்தனர். படிப்படியாக யுத்தத்தின் வேகம் அதிகரித்தது. பிடிப்பதும், இழுப்பதும், தள்ளுவதுமாக கைகளையும் கால்களையும் பிணைத்துக் கொண்டு சண்டையிட்டார்கள். ஒருவரையொருவர் தோற்கடிக்க முயன்றபோது மல்யுத்தக் கலையின் நுணுக்கங்கள் அத்தனையும் அங்கு வெளிப்படுத்தப்பட்டன.

ஆனால் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குத் திருப்தியில்லை. ஏனெனில் கிருஷ்ணரையும் பலராமரையும் எதிர்த்து மலைபோன்ற உருவமும் பலமும் கொண்ட முஷ்டிகனும் சாணூரனும் போரிடுவது நியாயமல்லவென்று பலர் கருதினார்கள். கிருஷ்ணரிடமும் பலராமரிடமும் அனுதாபம் கொண்ட சிலர், இது அபாயகரமானது. அரசனின் முன்னிலையில் சமமில்லாதவர்களிடையே இப்படி ஒரு போட்டி நடக்கலாகாது, என்று பேசிக் கொண்டார்கள். பார்வையாளர்கள் உற்சாகமின்றி இருந்தார்கள். சபையிலிருந்தவர்கள் தமக்காக கவலைப் படுகிறார்கள் என்பதை அறிந்த பரமாத்மாவாகிய ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் யுத்தத்தைத் தொடராமல் உடனே மல்லர்களை கொல்வதென்று முடிவு செய்தார். கிருஷ்ணர் மற்றும் பலராமரின் பெற்றோர்களான நந்த மகாராஜா, யசோதை, வசுதேவர், தேவகி ஆகியோரும் தம் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படக் கூடாதென்று கவலையடைந்திருந்தார்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 4 Empty Re: ஸ்ரீ கிருஷ்ண லீலா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum