புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_m10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10 
81 Posts - 67%
heezulia
சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_m10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_m10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_m10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_m10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10 
1 Post - 1%
viyasan
சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_m10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_m10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10 
273 Posts - 45%
heezulia
சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_m10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_m10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_m10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_m10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10 
18 Posts - 3%
prajai
சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_m10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_m10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_m10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_m10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10 
7 Posts - 1%
mruthun
சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_m10சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோழ வரலாறு தினம் ஒரு சோழன்.....


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon Mar 15, 2010 9:26 pm

இன்று கரிகால் சோழன்

கரிகால் சோழன் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். இவன் தந்தையின் பெயர் இளஞ்செட்சென்னி. கரிகால் சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு.
கரிகாலன் பண்டைய சோழர்களில் மிக முக்கியமானதொரு மன்னன் ஆவான். சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன.

சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெயர் உண்டு. இவன் அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான், கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று.


ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப்பெற்ற போது, (எதிரிகளின்) யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதைக் கற்பனை வளம்மிக்க கவிஞர்கள் உயர்வு நவிற்சியாக வருணித்துள்ளனர்.

புலிக்குட்டி, கூண்டுக்குள்ளே இருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு சிறைக்காவலரரைக் கொன்று தப்பி, பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான்.

நன்றி விக்கிபீடியா

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 15, 2010 9:33 pm

சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... 678642



தீதும் நன்றும் பிறர் தர வாரா சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... 154550
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Mar 15, 2010 10:08 pm

வணக்கம்
என் கருத்தைப் பதிப்பிக்க அனுமதி வேண்டி பதிப்பிக்கிறேன்
கரிகாலன் ஒர் தீ விபத்தின் காரணமாகத் தான் கரிகாலன் எனப் பெயர் பெற்றான்.
ஆதாரம்
சுடப்பட் டுயிருய்ந்த சோழன் மகனும்
பிடர்த் தலைப்பேரானைப் பெற்று-கடைக்கால்
செயிரறு செங்கோல் செலீஇனான் இல்லை
உயிருடையார் எய்தா வினை.
யானைகளுக்கு எமன் என்ற பொருள் கொள்வது பொருந்தாக் கூற்று, திருவையாறு பக்கத்தில் ஓர் சிற்றூர். அதன் பெயர் திருப்பழனம். பழனம் என்றால் வயல், அவ்வூரில் உள்ள நிலமெல்லாம் இறையிலியாக இறைவனுக்குக் கொடுக்கப் பட்டதன் காரணமாக அப்பெயர் பெற்றது, வழக்குத்தமிழில் திருப் பயணம் என்று வழங்கப் பட்டு வந்தது, அதனை வட மொழி ஆக்கம் செய்தவர்கள் அதன் உண்மையை அறியாது மஹா பிரஸ்தானம் என்று ஆக்கம் செய்து விட்டன, திருப்பயணம் என்பதை வட மொழியாளர்கள் மனிதன் செய்யும் கடைசிப் பிரயாணம் என்ற பொருள் கொண்டு அவ்வாறு மொழி மாற்றம் செய்து விட்டனர்,
தீயினால் சுடப்பட்டால் அந்த இடம் தோலில் நிறமி மாற்றம் அடைந்து வெண்மையாக மாறி விடும், கருப்பாக மாறாது, இதனைப் பற்றி முன்பே ஈகரையில் ஒரு பதிவு செய்து இருக்கிறேன், அவனது கால் கருப்பாக மாறி இருந்தாலும் அதனைச் சுட்டுதல் வழக்கன்று, கண்ணில்லாத அரசனைக் குருட்டு மஹாராஜா என்றால் என்ன ஆகும் என்பதைச் சற்று சிந்திக்க வேண்டும் இலக்கியங்கள் கரிகால் பெருவளத்தான் என்றே குறிப்பிடுகின்றன. இது பற்றித் தக்கார் ஆய்ந்தால் நலமாக இருக்கும்
அன்புடன்
நந்திதா

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Mar 15, 2010 10:13 pm

nandhtiha wrote:கரிகாலன் ஒர் தீ விபத்தின் காரணமாகத் தான் கரிகாலன் எனப் பெயர் பெற்றான்.
ஆதாரம்
சுடப்பட் டுயிருய்ந்த சோழன் மகனும்
பிடர்த் தலைப்பேரானைப் பெற்று-கடைக்கால்
செயிரறு செங்கோல் செலீஇனான் இல்லை
உயிருடையார் எய்தா வினை.

அன்புடன்
நந்திதா

நானும் அப்படி தான் படித்ததாய் ஜாபகம்... கால்கள் எரிந்து போய் இருக்குமென சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... 154550 சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Ila
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Mar 15, 2010 10:21 pm

வணக்கம்
அப்படிக் கால் எரிந்திருந்தால் கருப்பாக மாறாது, வெண்மையாகி விடும், தீப்புண் அடைந்தவர்களைக் கவனித்தால் புரியும், ஆனால் அதனை அடைமொழியாக்கிச் சிறப்பாக அழைத்தனர் என்றால் வேறு ஏதோ ஒரு காரணம் இருக்கும் என நினைக்கிறேன்
அன்புடன்
நந்திதா

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon Mar 15, 2010 10:53 pm

சோழ வரலாறு பற்றி அறியும் ஆவல் கூடுகின்றது, பகிர்விற்கு நன்றி.
நந்திதா அவர்களின் மேலதிக தரவுகளிற்கும் நன்றி.



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Avatar15523pf0
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Mar 15, 2010 11:16 pm

nandhtiha wrote:வணக்கம்
அப்படிக் கால் எரிந்திருந்தால் கருப்பாக மாறாது, வெண்மையாகி விடும், தீப்புண் அடைந்தவர்களைக் கவனித்தால் புரியும், ஆனால் அதனை அடைமொழியாக்கிச் சிறப்பாக அழைத்தனர் என்றால் வேறு ஏதோ ஒரு காரணம் இருக்கும் என நினைக்கிறேன்
அன்புடன்
நந்திதா

அவர் சிறையில் இருந்து தப்பிக்கும் போது தீயில் விழுந்து தப்பித்தார் என்று படித்ததாய் ஜாபகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Ila
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Mar 16, 2010 12:11 am

வணக்கம்
அவர் தீயில் விழுந்ததனாலா அல்லது குடிசையில் வாழ்ந்த போது விபத்தில் சிக்கினாரா என்பதல்ல கேள்வி?
1.தீயினால் சுடப் பட்டால் தோல் கருமை நிறம் அடையாது, மெலனின் என்பது அழிந்து தோல் வெண்மையாகி விடும். காருகிக காலை உடையவன் என்று உடற்குறையைச் சுட்டிக் காட்டுதல் தகுமா?
2.கரிகால் பெருவளத்தான் என்று அவன் இயற்பெயரை மறைத்து உடற்குறைக்கு ஒரு பெரும் காரணமின்றி அவ்வாறு கூறி இருப்பார்களா? என்பது தான் என் கேள்விகள்
அன்புடன்
நந்திதா

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 16, 2010 12:15 am

nandhtiha wrote:வணக்கம்
அவர் தீயில் விழுந்ததனாலா அல்லது குடிசையில் வாழ்ந்த போது விபத்தில் சிக்கினாரா என்பதல்ல கேள்வி?
1.தீயினால் சுடப் பட்டால் தோல் கருமை நிறம் அடையாது, மெலனின் என்பது அழிந்து தோல் வெண்மையாகி விடும். காருகிக காலை உடையவன் என்று உடற்குறையைச் சுட்டிக் காட்டுதல் தகுமா?
2.கரிகால் பெருவளத்தான் என்று அவன் இயற்பெயரை மறைத்து உடற்குறைக்கு ஒரு பெரும் காரணமின்றி அவ்வாறு கூறி இருப்பார்களா? என்பது தான் என் கேள்விகள்
அன்புடன்
நந்திதா

சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெயர்
உண்டு. இவன் அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின்
மகன் ஆவான், கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம்
வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு
வழங்கலாயிற்று.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சோழ வரலாறு தினம் ஒரு சோழன்..... Ila
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 16, 2010 12:29 am

கரிகாலன்

சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை. இவன் அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான், கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று. ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப்பெற்ற போது, (எதிரிகளின்) யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதைக் கற்பனை வளம்மிக்க கவிஞர்கள் உயர்வு நவிற்சியாக வருணித்துள்ளனர்.

"வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர்க் கொடுவரிக்
குருளைகூட்டுள் வளர்த்தாங்குப் பிறர், பிணியகத்திருந்து
பீடுகாழ், முற்றி யருங்கரை கவியக்குத்திக் குழி
கொன்று யானை பிடிபுக்காங்கு"
(பட்டினப்பாலை 220 – 228)

"நுண்ணுதி னுணர நாடி நண்ணார்
செறிவடைத் திண்காப் பேறிவாழ் கழித்
துருகெழ தாப மூழி னெய்திப்
பெற்றவை மகிழ்தல் செய்வான்"
(பட்டினப்பாலை 220 – 228)

புலிக்குட்டி, கூண்டுக்குள்ளஇருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு சிறைக்காவலரரைக் கொன்று தப்பி, பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான்.

இவனது ஆட்சியில் நடைபெற்ற முதல் பெரும் போர் வெண்ணிப்போர். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இப்போரே. ஏனெனில் இவ்வெற்றியின் மூலம் தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை அவன் முறியடித்துவிட்டான். இப்போரில் முதுகில் புண்பட்ட சேரமன்னன், தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதி, கோழைத்தனமாக தற்கொலை செய்து கொண்டான். இதை கரிகாலனின் நண்பரும் வெண்ணியில் வாழ்ந்து போரை நேரில் கண்டவருமான வெண்ணிக்குயத்தியார் என்னும் புறநானுற்றுப்புலவர் விளக்குகிறார்.

இவனது படை பலத்தைப் பயன்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேறு வாய்ப்புகள் வாய்ககாமல் போகவில்லை. வாகைப் பெருந்தலை என்னுமிடத்தில் ஒன்பது குறுநில மன்னர்களின் கூட்டணியை இவன் முறியடித்தான். கரிகாலனின் படைகள் அவனது பகைவர்களின் இராச்சியங்களை அழித்த விவரங்களையும் அவர்கள் காட்டிய வீரத்தையும் பட்டினப்பாலையின் ஆசிரியர் மிக விளக்கமாக வர்ணிக்கிறார்.

கரிகாலனின் சொந்த வாழ்க்கையைப்பற்றி நமக்குப் பேரளவிற்கு ஒரு விவரமும் கிடைக்கவில்லை. இவன் பெண்டிருடனும் பிள்ளைகளுடனும் மகிழந்திருந்தான் என்று பட்டினப்பாலை ஆசிரியர் உத்திரங்கண்ணனார் பொதுப்படையாக கூறுகிறார். நாங்கூரைச்சேர்ந்த வேளிர் குலப்பெண் ஒருத்தயை கரிகாலன் மணந்தான் என்று உரையாசிரியர் நச்சினார்கினியார் அவரது காலத்தின் நிலவிய மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் கூறுகிறார்.

புராணக்கதைகள்

பழங்காலந்தொட்டே கரிகாலனைப்பற்றிய பல புராணக் கதைகள் உருவாகி, தற்போது, இக்கதையே வரலாறாகப் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் முடியுடை வேந்தர், வடநாட்டு ஆரிய மன்னர்களை எதிர்த்து வெற்றி பெற்றனர் என்று கூறும் சிலப்பதிகாரம், கரிகாலனின் வடநாட்டுப் படையெடுப்பை பலபடப் பாராட்டுகிறது. இப்படையெடுப்பில், கரிகாலன் இமயம் வரை சென்றதோடு, வச்சிரம், மகதம், அவந்தி போன்ற சில நாடுகளை வென்றோ, அல்லது உடன்பட்டோ செய்து கொண்டான். காவேரியாற்றின் கரைகளை உயர்த்திக்கட்டினான் என்பதை ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழந்த தெலுங்கு சோ(ட)ழ மன்னன் புண்ணிய குமரனின் மலேபாடு பட்டயங்களில் முதன் முதலாகக் காண்கிறோம்.

சமயம் இறப்பு

வைதீக மதத்தில் கரிகாலனுக்கு இருந்த நம்பிக்கை பற்றியும் அவன் இறந்ததால் ஏற்பட்ட ஆறாத்துயரத்தைப் பற்றியும் கருங்குழல் ஆதனார் என்னும் புலவர் பாடியுள்ளார்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக